பா.ஜ.க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பா.ஜ.க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 28 ஏப்ரல், 2012

பாஜக முன்னாள் தலைவர் பங்காரு லஷ்மணுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை

  Bangaru convicted of accepting Rs1 lakh bribe
புதுடெல்லி:போலி ஆயுத ஒப்பந்தக்காரர்களிடம் இருந்து ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில் பா.ஜ.கவின் முன்னாள் தேசிய தலைவர் பங்காரு லட்சுமணன் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இவ்வழக்கில் சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தண்டனையை அறிவிக்கும். குற்றவாளியான பங்காரு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். ஐந்து வருடங்கள் வரை தண்டனை கிடைக்கும் வகையிலான பிரிவுகளை நீதிபதி கன்வல்ஜித்சிங் அரோரா பங்காருவின் மீது சுமத்தியுள்ளார்.
ராணுவத்திற்கு தெர்மல் இமேஜர் வாங்குவதற்கான ஒப்பந்தத்தை பெறுவது என கூறி வெஸ்ட் எண்ட் இண்டர்நேசனல் என்ற போலி நிறுவனத்தின் பெயரில் இடைத்தரகர்கள் வேடமிட்டு வந்த டெஹல்கா புலனாய்வு பத்திரிகை நிருபர்களிடமிருந்து பங்காரு லட்சுமணன் ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில்தான் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஒப்பந்தம் தங்களுக்கு கிடைப்பதற்காக பாதுகாப்பு அமைச்சகத்திடம் சிபாரிசு செய்யவேண்டும் என கோரும் ரகசிய கேமரா காட்சிகளை 2001 மார்ச் மாதம் 13-ஆம் தேதி டெஹல்கா வெளியிட்டது.
2001 ஜனவரி மாதம் 1-ஆம் தேதி பங்காரு லட்சுமணன் தனது அலுவலகத்தில் வைத்து ஒரு லட்சம் ரூபாய் லஞ்சப்பணத்தை வாங்கினார். இத்தொகை மேசையின் மீது வைக்கும் காட்சியும் ரகசிய கேமராவில் பதிவானது. இச்சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியதைத் தொடர்ந்து, கட்சி நிதிக்கு அளிக்கப்பட்ட பணம் என்று பங்காரு விளக்கம் அளித்தார்.
2000 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பா.ஜ.கவின் தேசிய தலைவராக பொறுப்பேற்ற பங்காருலட்சுமணன் இச்சம்பவம் ஏற்படுத்திய பரபரப்பால் எட்டு மாதத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
பங்காரு லட்சுமணனுக்கு ஒரு லட்சம் ரூபாயும், அவரை காண்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்திய அவரது உதவியாளர்களான உமா மகேஷ்வரி மற்றும் சத்தியமூர்த்தி ஆகியோருக்கு பத்தாயிரம் ரூபாயும், தங்க செயினும் லஞ்சம் வழங்கப்பட்டதாக சி.பி.ஐ வழக்கு தொடர்ந்தது. பின்னர் அப்ரூவர் ஆன சத்தியமூர்த்தியின் வாக்குமூலம் பங்காரு வழக்கில் முக்கிய திருப்பம் ஆனது.
ஊழல் ஒழிப்பு சட்டத்தின்படி பதிவுச்செய்யப்பட்ட வழக்கில் 11 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
2000 டிசம்பர் 23-ஆம் தேதிக்கும் 2001 ஜனவரி ஏழாம் தேதிக்கும் இடையில் எட்டு தடவை டெஹல்கா குழு பங்காருவை சந்தித்ததாக சி.பி.ஐ கண்டுபிடித்தது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து பங்காரு லட்சுமணன் தேசிய அரசியலில் இருந்தே காணாமல் போனார். அன்று பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்த ஜார்ஜ் ஃபெர்னாண்டஸின் உதவியாளர் ஜெயா ஜெட்லியை சந்தித்தும் டெஹல்கா குழு லஞ்சம் அளிப்பதாக வாக்குறுதியளித்தது. இதுத்தொடர்பான வீடியா காட்சிகள் வெளியானதை தொடர்ந்து ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் தனது அமைச்சர் பதவியை ராஜினாமாச் செய்தார்

திங்கள், 13 டிசம்பர், 2010

கர்நாடகா - சங்க்பரிவாரின் ராம ராஜ்யமா?

எண்பதுகளின் இறுதியில் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட மறைந்த முன்னாள் பிரதமரும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவருமான ராஜீவ் காந்தி சந்தித்த கடுமையான சோதனைகளில் ஒன்று கர்நாடகா மாநிலத்தில் வருடந்தோறும் புதிய முதல்வர்களை நியமித்ததுதான்.

ராஜீவ் காந்தியின் அகால மரணத்திற்கு பின்னர் தலைவனில்லாத இயக்கமாக மாறிய காங்கிரஸ் கட்சிக்கு பெரும் தலைவலியாக கர்நாடகா காங்கிரஸ் கட்சியினர் விளங்கினர். காங்கிரஸின் உருக்கு கோட்டையாக இருந்த கர்நாடக மாநிலத்தில் 1991-ல் அமோக வெற்றியைப் பெற்று ஆட்சியை கைப்பற்றிய பொழுது முதல்வராக பதவியேற்ற வீரெந்திர பாட்டீலின் பதவிக்கு ஒரு ஆண்டு ஆயுள் கூட முழுமையாக இல்லை.

உள்கட்சிப் போர் ஒருபுறம் ஜாதீய சக்திகளின் ஆதிக்கம் மறுபுறம் இந்நிலையில் எஸ்.பங்காரப்பா கர்நாடகா மாநில முதல்வராக பொறுப்பேற்றார். ஆனாலும், காங்கிரஸ் தனது வழக்கமான குணத்தை கைவிடவில்லை. பங்காரப்பாவின் ஆட்சி ஒரு ஆண்டை நிறைவுச்செய்யும் முன்பே உள்கட்சிப் பூசலினால் மீண்டும் அதிகாரப்போட்டி தலைதூக்கியது.

எம்.எல்.ஏக்களை டெல்லியில் காங்கிரஸ் உயர்மட்டக் குழுவின் முன்னால் ஆஜர்படுத்தி, முதல்வர் மீதான நம்பிக்கையின்மையை பகிரங்கமாக வெளிப்படுத்துதல் என காங்கிரஸ் கட்சியின் உள்கட்சிப் போர் கலாச்சாரத்தின் காரணமாக டெல்லிக்கும் கர்நாடகாவுக்குமிடையே அடிக்கடி பயணம் மேற்கொண்ட பங்காரப்பா 1992 நவம்பரில் தனது முதல்வர் பதவியையும் இழக்க நேர்ந்தது. அடுத்து வீரப்ப மொய்லி ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தார். தமக்கு முன்னால் பதவியிலிருந்தவர்களின் வழிமுறையைத்தான் வீரப்பமொய்லியும் பின்பற்றினார்.

ஊழல்கள் மலிந்த சூழலில் மீண்டும் ஒருமுறை காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் அமர்த்த கர்நாடகா மக்கள் விரும்பவில்லை. மாநில ஆட்சிக்கு எதிரான உணர்வு, பாப்ரி மஸ்ஜிதை இடிப்பதை வேடிக்கை பார்த்த மத்தியில் ஆண்ட நரசிம்மராவ் ஆட்சி என காங்கிரஸ் எதிர்ப்பு அலை வீசியதன் விளைவு அடுத்த சட்டமன்றத் தேர்தலில் தேவகவுடா தலைமையிலான ஜனதாதளம் ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸிற்கு அத்தேர்தலில் பலத்த அடி கிடைத்தது.
1994 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் மதசார்பற்ற கட்சிகளுக்கு மக்கள் ஆதரவளித்ததன் விளைவு தெலுங்குதேசம் மற்றும் இடதுசாரிகளின் மதசார்பற்ற கூட்டணி ஆட்சியில் அமர்வதற்கான வாய்ப்பு உருவானபொழுது பிரதமர் பதவிக்கு இறுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தேவகவுடா ஆவார். இவ்வாறு தேவகவுடா டெல்லிக்கு சென்றார். ஆனால் சீதாராம் யெச்சூரியினால் தேவகவுடா 10 மாதங்கள் கூட முழுமையாக பிரதமர் பதவியில் ஒட்டிக்கொண்டிருக்க இயலவில்லை.

தேவகவுடாவுக்கு பதிலாக கர்நாடகாவின் முதல்வர் பதவியை ஏற்ற ஜெ.ஹெச்.பாட்டீலோ நல்ல முதல்வர் என்ற பெயரை எடுக்க தவறிவிட்டார். விளைவு, அடுத்த சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் அரியணை ஏறியது. எஸ்.எம்.கிருஷ்ணா முதல்வரானார்.

இதற்கிடையே உள்கட்சிப் பூசல்கள் மற்றும் ஊழல் ஆட்சிகளுக்கிடையே பாஜக வேகமாக வளர்ந்துக் கொண்டிருந்தது. வலுவான சிறுபான்மை மக்களின் ஆதிக்கம் இல்லாத கர்நாடகாவில் சங்க்பரிவாரத்தின் மதவெறி அஜண்டாக்களுக்கு மக்களின் ஆதரவு கிடைக்கத் துவங்கியது.

தென்னிந்தியாவில் காவியின் ஆட்சி என்ற சங்க்பரிவாரத்தின் கனவை நினைவாக்கும் விதமாக அவர்களுக்கு ஆதரவான களத்தை உருவாகும் சூழலை காங்கிரஸ் கட்சியும், மதசார்பற்ற ஜனதாதளமும் ஏற்படுத்திக் கொடுத்தன.

கிராம மக்களை மறந்துவிட்டு நகரங்களுக்கு முக்கியத்துவம் அளித்து முதலாளித்துவ சக்திகளின் விருப்பங்களுக்கு துணை நின்று, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் வழியில் பயணித்தார் எஸ்.எம்.கிருஷ்ணா.

கிராம மக்களின் பிரச்சனைகளை கண்டும் காணாததுபோல் நடித்த எஸ்.எம்.கிருஷ்ணா, உலக ஐ.டி வரைப்படத்தில் பெங்களூரின் இடத்தை உறுதிச் செய்வதிலேயே குறியாக இருந்தார்.
ஐந்துவருடம் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் அடுத்த தேர்தலில் தோல்வியைத் தழுவியது. மதசார்பற்ற ஜனதாதளத்தின் குமாரசாமி பாரதீய ஜனதா ஆதரவுடன் கர்நாடகாவின் 18-வது முதல்வராக பதவியேற்றார். இது பா.ஜ.கவின் அதிகாரத்தை நோக்கி எடுத்துவைத்த காலடிகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஒரு ஆண்டிற்கு பிறகு குமாரசாமி முதல்வர் பதவியை இழக்க கர்நாடகாவில் ஜனாதிபதி ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டது. 2008 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பெரும்பான்மைக் கிடைக்க 4 சீட்டுகள் குறைவான நிலையில் ஆட்சியில் அமர்ந்தது பா.ஜ.க.பின்னர் கர்நாடகத்தில் பா.ஜ.கவின் ஆட்சி ஊழலிலும், குதிரை வியாபாரத்திலும் காங்கிரஸை பின்னுக்குத் தள்ளியது.
ஹிந்துத்துவத்தின் உயிர்தெழலுக்காக கடுமையாக உழைக்கும் சங்க்பரிவாரின் உண்மையான விருப்பம்தான் கர்நாடகாவில் தற்பொழுது நடந்துவரும் பகல் கொள்ளையாகும். பெல்லாரியின் ராஜாக்களாக வலம்வரும் ரெட்டி சகோதரர்கள்தான் ஊழலின் சூத்திரதாரிகள்.

ஐந்தாயிரம் ரூபாய்க்கு ஒரு மெட்ரிக் டன் இரும்பை விற்று அதில் 25 ரூபாயை வரியாக செலுத்துகிறார்களாம். பெல்லாரியின் மலைகளையெல்லாம் ரெட்டி சகோதரர்கள் தரைமட்டமாக்கி வருகின்றனர். கிடைப்பதில் ஒரு பங்கு டெல்லியில் பா.ஜ.க தலைவர்களின் சட்டைப் பையில் முறைதவறாமல் விழுந்துக்கொண்டுதான் இருக்கிறது. இந்த பட்டப்பகல் கொள்ளையை ஆசிர்வதித்தவாறு கர்நாடகா ஆர்.எஸ்.எஸ் தலைவர் எம்.சி.ஜெயதேவும் எடியூரப்பாவுக்கு உறுதுணையாக உள்ளார்.
அதிகாரத்தை காப்பாற்றுவதற்காக குறிப்பிட்ட இடைவெளிகளில் ஆட்சி ரிஸார்ட்டுகளுக்கும், ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்குமிடையே சீரழிந்துக் கொண்டிருந்தது.
அதிகாரம்-அது மட்டுமே எடியூரப்பாவிற்கும், அவரது கூட்டாளிகளுக்கும் ஒரே லட்சியம். மூன்று வருடங்களுக்கு முன்பு எடியூரப்பா காங்கிரஸில் சேர்வதற்கு முயற்சி மேற்கொண்ட பொழுது ஜெயதேவ் தலையிட்டு தடுத்து நிறுத்தினார். அதேவேளையில் ஹிந்துத்துவாவின் மதவாத கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் ஊழல் அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல.

ஆட்சியில் தனது செல்வாக்கை துஷ்பிரயோகம் செய்துக்கொண்டு பிரமோத் முத்தலிக்கின் ஸ்ரீராம சேனா ஒரு கலவரத்திற்கு பத்துலட்சம், இரண்டு கலவரத்திற்கு பணம் கட்டினால் ஒரு கலவரம் இலவசம் என்ற மூலதன சந்தையின் ஆஃபருடன் செயல்படத் துவங்கியது.

பாதிக்கப்பட்டவர்கள் தங்களது எதிர்ப்பை அமைதியான முறையில் வெளிப்படுத்தியதைக் கூட எடியூரப்பாவின் பாஜக அரசால் பொறுத்துக் கொள்ளவியலவில்லை. இதற்காக அவர்கள் நிழலுக தாதாக்களுடன் கூட்டணி வைக்கக்கூட தயங்கவில்லை. நவ்ஷாத் ஹாஸிம்ஜி ஒரு அரசு-நிழலுக தாதாக்கள் கூட்டணியின் கொடூரத்திற்கு தனது இன்னுயிரை பறிக்கொடுத்தார்.

மைசூரில் ஹலீமா ஸாதிய்யா மஸ்ஜிதில் சங்க்பரிவாரக் கும்பல் பன்றியின் இறைச்சியை எறிந்து முஸ்லிம் சமுதாயத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்த முனைந்தது. ஆனால், இதனைப் புரிந்துக் கொண்ட முஸ்லிம் அமைப்புகள் ஒரு கலவரத்தை திட்டமிட்ட சங்க்பரிவார ஆட்சியாளர்களின் முயற்சிகளை எதிர்த்தனர்.

ஆனால், கலவரத்தை கொளுந்துவிட்டு எரியச் செய்யலாம் எனக் கருதிய ஆர்.எஸ்.எஸ்ஸைச் சார்ந்த கர்நாடகா மாநில உள்துறை அமைச்சர் ஆச்சார்யாவின் முயற்சி தோல்வியடைந்ததால், அவரது கவனம் முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்களை சிறையில் அடைப்பதை நோக்கி திரும்பியது.

பாப்புலர் ஃப்ரண்டின் தலைவர்களை கலவரத்தை தூண்ட முயன்றதாகக் கூறி கைதுச் செய்த ஆச்சார்யா, இதற்கெதிராக ஜனநாயகரீதியில் போராடிய பெண்கள் உள்ளிட்டவர்களை காவல்துறையின் மூலம் வீதியில் போட்டு கண்மூடித்தனமாக அடித்து உதைக்கச் செய்தார். இறுதியில் சட்டத்திற்கு புறம்பாக பாப்புலர் ஃப்ரண்டின் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்ட விவகாரத்தில் கர்நாடகா உயர்நீதிமன்றமே தலையிட நேர்ந்தது.

தொடர்ந்து எழுந்த ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து மக்களின் கவனத்தை திசைத் திருப்பவும், மக்களின் உணர்வுகளை கட்டுப்படுத்தவும் ஒரு தீவிரவாதியை உருவாக்கும் நிலைமைக்கு கர்நாடக பா.ஜ.க அரசு தள்ளப்பட்டது.

பலிகடாவை கண்டுபிடிக்கும் முயற்சி கடைசியாக கர்நாடகா எல்லையும் தாண்டி கேரள மாநிலத்தின் கொல்லம் மாவட்டத்தில் சென்று முடிந்தது. ஊனமுற்றவராக ஒன்பது ஆண்டுகளை கோவைக் குண்டுவெடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்ட அநியாயமாக சிறையிலடைக்கப்பட்டு பின்பு விடுதலையான அப்துல் நாஸர் மஃதனியை பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கிலும் கேரள அரசின் உதவியுடன் கைதுச்செய்து சிறையிலடைத்தது கர்நாடகா பா.ஜ.க அரசு.

வழக்கத்திற்கு மாறாக அப்துல் நாஸர் மஃதனிக்கு எதிரான முயற்சிகளைக் குறித்து ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வந்தன. மஃதனிக்கெதிரான சாட்சிகளும், வாக்குமூலங்களும் போலி என பல பக்கங்களிலிருந்தும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

கர்நாடகா மாநிலம் குடகு என்ற இடத்தில் நடந்த ரகசிய முகாமில் மஃதனி கலந்துக் கொண்டார் என்பதுதான் கர்நாடகா அரசு மஃதனிக்கு எதிராக முன்வைத்த முக்கிய சாட்சி .

கேரள போலீசாரின் கண்காணிப்பிலிருந்த அப்துல் நாஸர் மஃதனி அவர்களின் அனுமதியில்லாமல் எங்கும் செல்வதற்கான சுதந்திரத்தையும் இழந்திருந்தார். கேரள போலீசாரின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு அப்துல் நாஸர் மஃதனி தனது ஒற்றைக் காலுடன் கர்நாடகா மாநிலம் குடகு ரகசிய முகாமில் பங்கேற்றார் என கர்நாடகா அரசு கூறியது.

பிரபலமானவர் என்ற நிலையில் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் அப்துல் நாஸர் மஃதனியின் உருவம் அடிக்கடி தென்படுவதால் அவரை குடகில் வைத்து அடையாளம் கண்டதாக கூறி சாட்சி வாக்குமூலம் அளித்ததாக கர்நாடகா போலீஸ் தெரிவித்தது.

இதன் உண்மை நிலையை அறிவதற்காக ஏசியாநெட்டின் முன்னாள் செய்தியாளரான ஷாஹினா டெஹல்காவிற்காக கர்நாடகா அரசு மஃதனிக்கு எதிராக வாக்குமூலம் அளித்ததாக கூறும் சாட்சிகளை சந்தித்துள்ளார். சாட்சிகளில் ஒருவர் பா.ஜ.கவைச் சார்ந்த யோகானாந்த் என்பவராவார். பா.ஜ.க அரசு அப்துல் நாஸர் மஃதனிக்கு எதிராக சாட்சிகளாக முன்னிறுத்தியவர்களின் பட்டியலில் தனது பெயர் இடம்பெற்றதுக்கூட தனக்கு தெரியாது என யோகானந்த் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்ல, குடகில் நடந்ததாக கூறப்படும் சம்பவங்கள் குறித்த வாக்குமூலங்களுக்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என யோகானந்த் கூறியுள்ளார்.

உண்மை விபரங்கள் வெளிவந்தால் தங்களின் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுவிடும் என அஞ்சிய பா.ஜ.க அரசு ஷாஹினாவுக்கெதிராக நடவடிக்கையை மேற்கொண்டது.

சமீபத்தில் கேரளாவிலிருந்து தாய்லாந்திற்கு வர்த்தகம் தொடர்பாக பயணித்துவிட்டு திரும்பி வருகையில் பெங்களூர் வழியாக பயணித்த கேரளாவைச் சார்ந்த 9 நபர்களை அவர்கள் முஸ்லிம்கள் என்ற காரணத்தினால் தனியாக கடுமையான சோதனைகளை மேற்கொண்டது பா.ஜ.க அரசு.

இவ்வாறு நாடு எக்கேடுக் கெட்டு குட்டிச்சுவாரானால் எங்களுக்கு என்ன? எங்கள் நோக்கம் நிறைவேறினால் போதும் என்ற மனோநிலையிலிருக்கும் கர்நாடகாவின் சங்க்பரிவார அரசுக்கு இனி குஜராத் மாதிரி இனப்படுகொலைதான் மீதமுள்ளதோ?

விமர்சகன்

சனி, 7 ஆகஸ்ட், 2010

மாணவர்களிடையே மதவெறியைத் தூண்டும் பா.ஜ.கவைக் கண்டித்து எஸ்.டி.பி.ஐ. ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில்,ஆக7:தனது சதவிகிதத்திற்கும் அதிகமாக இந்திய சுதந்திரபோரில் இரத்தம் சிந்திய முஸ்லிம் சமுதாயம் தியாகம் செய்தது உயிரையும், பொருளையும் மட்டுமல்ல, தமது எதிர்கால சந்ததியினரின் கல்வியையும்தான்.
கல்வியிலும், பொருளாதாரத்திலும் முஸ்லிம்கள் மிகவும் பின் தங்கியுள்ளனர் என்பதையும், அவர்களுக்கு உடனடியாக இடஒதுக்கீடு மற்றும் சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்பதையும் சச்சார், மிஷ்ரா உள்ளிட்ட கமிஷன்கள் வலியுறுத்தியுள்ளன.

இந்நிலையில் மத்திய அரசு ஏற்கனவே சிறுபான்மையினர் கல்வியில் மேம்படுவதற்காக உதவித்தொகையை அனைத்து மாநிலங்களுக்கும் ஒதுக்கியுள்ளது. இந்த நிதியிலிருந்து பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் உள்பட அனைத்து மாநிலங்களூம் சிறுபான்மையினருக்கு கல்வி உதவித்தொகை வழங்கிவருகின்றன. இந்த நிதியுதவி அவர்களுடைய தேவையை முழுமையாக பூர்த்திச் செய்யாது என்பது வேறு விஷயம்.

இந்நிலையில்,தமிழகத்தில் நடந்த தேர்தல்களில் மக்களால் மறக்கடிக்கப்பட்டு செல்வாக்கை இழந்து புறம்போக்கு கட்சியாக மாறியுள்ள பா.ஜ.க குறுகிய வழியில் மக்கள் செல்வாக்கை பெறுவதற்கு தனது வழக்கமான ஆயுதமான மதவெறியைத் தூண்டிவிட்டு ஆதாயம் பெறவிரும்புகிறது.

வருகிற 2011 தமிழக சட்டசபைத் தேர்தலில் எப்படியாவது ஒரு சில இடங்களை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் தற்பொழுது சிறுபான்மையினருக்கு மத்திய அரசு வழங்கிவரும் கல்வி உதவித்தொகையை ஏதோ தமிழக அரசு வழங்குவதுபோல் ஒரு மாயை ஏற்படுத்தி,கல்வியில் இந்து என்பதால் உதவித்தொகை வழங்கப்படவில்லை என்ற பொய்ப்பிரச்சாரத்தை ஜூலைப் போராட்டம் என்றபெயரில் நடத்தி வருகின்றனர்.

உதவித்தொகையைப் பொறுத்தவரை அதில் ஆதாயம் பெறுவோர் ஏராளமாக உள்ளனர்.தாழ்த்தப்பட்டவர்களுக்கான கல்வி உதவித்தொகை, பிற்படுத்தப்பட்டவர்களுக்கான உதவித்தொகை, ஊனமுற்றோர், முன்னாள் இராணுவத்தினர்,தியாகிகள் என பல உதவித்தொகைகளில் ஹிந்துக்களே ஆதாயம் பெற்று வருகின்றனர்.ஆனால் உதவித்தொகையில் பார்ப்பணர்களுக்குத்தான் பங்கில்லை.ஆகவே பார்ப்பணர்களுக்கு உதவும் நோக்கிலேயே பார்ப்பணர்களால் உருவாக்கப்பட்ட பா.ஜ.க ஒட்டுமொத்த ஹிந்துக்களுக்கும் கல்வி உதவித்தொகை இல்லை என்ற கோஷத்தை எழுப்பி சிறுபான்மையினருக்கு கிடைக்கும் உதவித்தொகையை தடுக்க விரும்புகிறது. மேலும் மாணவர்களிடையே ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்தவன் என்ற பாகுபாட்டை ஏற்படுத்தி கல்வி வளாகங்களை கலவர பூமியாக மாற்ற தமிழகத்தில் கல்வி உதவித்தொகை என்ற பெயரில் செயலாற்றி வருகிறது.

பா.ஜ.கவின் மதவெறியைத் தூண்டும் போக்கை கண்டித்து மக்கள் நல்வாழ்வில் நாட்டங்கொண்ட சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா கட்சி நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று(06/08/2010) மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐயின் மாவட்டத்தலைவர் எ.செய்யது அலி தலைமைத் தாங்கினார். கத்தோலிக்க மறைமாவட்டத்தைச் சார்ந்த வழக்கறிஞர் லீனஸ் ராஜ் கருத்துரை வழங்கினார். எஸ்.டி.பி.ஐயின் மாநிலப்பேச்சாளர் செய்யத் இப்ராஹிம் கலந்துக் கொண்டு பா.ஜ.கவின் உண்மை முகத்தை தோலுரிக்கும் வகையில் சிறப்புரை ஆற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான சிறுபான்மை மக்கள் கலந்துக் கொண்டனர்.