திங்கள், 12 ஜனவரி, 2009

திருக்-குர்ஆன் -அத்தியாயம்-1

அத்தியாயம்-1
அல்ஃபாத்திஹா - தோற்றுவாய்
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
1:1. அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.
1:2. (அவன்) அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.
1:3. (அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்).
1:4. (இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
1;:5. நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக!
1:6. (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி.
1:7. (அது) உன் கோபத்துக்கு ஆளானோர் வழியுமல்ல, நெறி தவறியோர் வழியுமல்ல.

கருத்துகள் இல்லை: