ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

இமாம்களுக்கு அரசு ஊதியம் மத்திய அரசு பரிசீலனை

புதுடெல்லி, ஆக.22-


அரசு உதவி பெறும் மசூதிகளின் இமாம்களுக்கு அரசு ஊதியம் வழங்குமாறு கடந்த 1993-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு ஒரு வழக்கில் தீர்ப்பு அளித்தது. ஆனால் இந்த உத்தரவு இதுவரை அமல்படுத்தப்படவில்லை. இந்நிலையில், பாராளுமன்றத்தில் நேற்று லாலுபிரசாத் இப்பிரச்சினையை எழுப்பினார். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அமல்படுத்துவதில் தாமதம் ஏன்? என்று அவர் கேட்டார். அவருக்கு சமாஜ்வாடி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரும் ஆதரவு தெரிவித்தனர்.

இதையடுத்து, மத்திய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி கூறுகையில், `கோர்ட்டு தீர்ப்பை அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ளும். உரிய நடவடிக்கை எடுக்கும்' என்று உறுதி அளித்தார்.
நன்றி :தினத் தந்தி

சனி, 21 ஆகஸ்ட், 2010

மக்களவையில் பாப்புலர் பிரான்ட்க்கு எதிராக அவதூறு விமர்சனம்: ஹிந்து தீவிரவாத குழுவை ஆதரிக்கும் பாலக்காடு "எம்.பி." ராஜேஷ்


புதுடெல்லி,ஆக20: பாப்புலர் ஃப்ரண்ட்டிற் கெதிராக விமர்சனம் செய்ததைத் தொடர்ந்து மக்களவையில் அமளி ஏற்பட்டது. இதனால் அவை ஒத்திவைக்கப்பட்டது. கேள்விநேர வேளையில் கேரள மாநிலம் பாலக்காடு கம்னிஸ்ட் எம்.பி.ராஜேஷ் என்பவன் பாப்புலர் ஃப்ரண்டிற்ட் கெதிரான விமர்சனங்களை முன்வைத்தான். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவைத் தொடர்புபடுத்தி கேரள மாநிலத்தில் பரப்புரைச் செய்யப்பட்டு வரும் பேராசிரியரின் கைவெட்டு சம்பவத்தை மேற்கோள்காட்டி ராஜேஷ் தனது உரையை ஆரம்பித்தான்.

மேலும் அவன், பாப்புலர்ஃப்ரண்டின் அலுவலகத்திலிருந்து கைப்பற்றிய சி.டிக்கள் மற்றும் புத்தகங்களில் தேசவிரோத கருத்துகள் அடங்கியிருந்ததாகவும், சி.டியில் ஆப்கானிஸ்தானில் தாலிபான் போராளிகள் தலைவெட்டும் காட்சிகள் அடங்கியிருந்ததாகவும், இவ்விசயங்கள் எல்லாம் பத்திரிகைகளில் செய்திகளாக வெளிவந்துள்ளதாகவும், பாப்புலர் ஃப்ரண்ட் தாலிபான் மாடல் நீதிமன்றங்களை நடத்தி நீதித்துறைக்கு சவால் விடுவதாகவும், சர்வதேச தீவிரவாதத்துடன் தொடர்புடைய பாப்புலர் ஃப்ரண்டிற்கு பெருமளவில் வெளிநாடுகளிலிருந்து பணம் வருவதாகவும், என்.ஐ.ஏ, சி.பி.ஐ போன்ற தேசிய புலனாய்வு அமைப்புகளால்தான் இதனை விசாரிக்க இயலும் எனவும், துரதிர்ஷ்டவசத்தால் மத்தியில் ஆளும் கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிக்கும் சில அரசியல் கட்சிகள் இவ்வியக்கத்திற்கு பாதுகாவலர்களாக உள்ளதால் அரசிற்கு அதில் விருப்பமில்லை எனவும் குற்றஞ் சாட்டினார்.

இதனைத் தொடர்ந்து இ.டி.முஹம்மது பஷீர் எம்.பி, பி.டி.தாமஸ், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி கல்யாண் பானர்ஜி ஆகியோர் எழுந்து நின்று கடும் கண்டனம் தெரிவித்தனர். எந்த கட்சி பாதுகாவலராக செயல்படுகிறது என்பதை வெளிப்படுத்த வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸின் கல்யாண் பானர்ஜி கோரினார். திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்கள் அவை நடுவேச் சென்று அமளியில் ஈடுபட்டனர். இதனால் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்திருந்த தம்பித்துரை மதியம் 2 மணிவரை அவையை ஒத்திவைத்தார்.

சிந்திக்கவும்: இந்திய முஸ்லிம்கள் இனி ஜனநாயக வழியில் ஒரு போராட்டத்தை நடத்தி அதன் மூலம் முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்கும் என்பதையும், அரசியல் கட்சிகள் நடத்தி அதன் மூலம் முஸ்லிம்களுக்கு நல்லது செய்யலாம் என்று கனவு காணாதீர்கள். இந்தியாவில் இயங்கும் காங்கிரஸ், பாரதிய ஜனதா, கம்னிஸ்ட் எல்லாருக்கும் ஒரே சிந்தனைதான் அது முஸ்லிம்களை அழித்து ஹிந்து நாடு உருவாக்குவது. போலி ஜனநாயகத்தை விட்டு ஒழித்துவிட்டு உருப்புடுற வேலையபாருங்க. இன்னும் நீங்கள் முழிக்கவில்லை என்றால் ஸ்பெயின் வரலாறுதான் உங்களுக்கு இந்தியாவில் ஏற்படும்.ஒரு நூறு வருடங்களுக்குள் ஸ்பெயின் போல உங்களுக்கும் ஒரு வரலாறு இருக்கும் நீங்கள் எப்படி அழிக்கப்பட்டு ஹிந்து ராஜ்ஜியம் உருவாகியது என்று.

அமெரிக்கர்களில் ஐந்தில் ஒருவர் ஒபாமாவை முஸ்லிம் என நம்புகின்றனர்

வாஷிங்டன்,ஆக20:அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவை முஸ்லிம் எனக்கருதும் அமெரிக்கர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு மார்ச்சில் 11 சதவீதம் பேர் ஒபாமாவை முஸ்லிம் என நம்பினர்.ஆனால், இந்த எண்ணிக்கை தற்பொழுது 18 சதவீதமாக அதிகரித்துள்ளது என இவ்வாய்வை மேற்கொண்ட ஃப்யூ ரிசர்ச் சர்வே கூறுகிறது.

குடியரசுக் கட்சிக்காரர்களில் மூன்றில் ஒருவருக்கே ஒபாமா கிறிஸ்தவர் என்பது தெரியும். ஆய்வில் பங்கேற்ற 43 சதவீதம் பேர் ஒபாமா எந்த மதத்தைச் சார்ந்தவர் என்பது தெரியாது.

ஒபாமாவின் தந்தை முஸ்லிமாக இருந்தார் என்பதன் மறைவில் அவருடைய எதிரிகள் நடத்தும் பிரச்சாரம்தான் இந்த தவறான புரிதலுக்கு காரணம் எனக் கருதப்படுகிறது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

புதுவையில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு

புதுவையில் முஸ்லிம்கள் இடஒதுக்கிட்டிற்காக தமுமுக நடத்திய இடஒதுக்கீடு பேரணியில் எடுத்த படம்.

புதுவையில் முஸ்லிம்கள் இடஒதுக்கிட்டிற்காக தமுமுக நடத்திய இடஒதுக்கீடு பேரணியில் எடுத்த படம்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் அறிக்கை:

புதுச்சேரி மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு 2 சதவிகித தனி இடஒதுக்கீடு அளிக்கப்படுமென இன்று அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். நீண்ட காலமாக புதுவை மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு அளிக்க கோரி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் போராடி வந்துள்ளது. இறுதியாக முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு அளிக்காவிட்டால் தமிழகம் வரும் போது புதுவை முதல்வரை முற்றுகையிடுவோம் என்றும் தமுமுக அறிவித்திருந்தது.

பல்வேறு காரணங்களை சொல்லி தனி இடஒதுக்கீடு அளிப்பதை தள்ளிப் போட்டு வந்துள்ள அம்மாநில அரசு தற்போது பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு 2 சதவிகிதம் அளிக்கப்படுமென அறிவித்துள்ளது. இது வரவேற்க்கதக்க அறிவிப்பாக இருந்த போதினும் புதுவையில் வாழும் முஸ்லிம்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது 2 சதவிகிதம் என்பது மிகவும் குறைவான அளவாகும். சில மாதங்களுக்கு முன்பு 2.5 சதவிகிதம் முஸ்லிம்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க புதுவை அமைச்சரவை முடிவு செய்திருந்தது. 0.5 விழுக்காட்டை குறைத்து இப்போது அறிவித்திருப்பது வருந்தத்தக்கது.

இன்று புதுவை முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பு திருத்தப்பட்டு முஸ்லிம்களுக்கான உள்ஒதுக்கீடு 3 சதவிகிதமாக உயர்த்தப்பட்டு அது உடனடியாக சட்டமாக்கப்பட்டு இந்த கல்வி ஆண்டு முதல் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட வேண்டுமென தமுமுக கோருகின்றது. சாதிவாரி கணக்கெடுப்பிற்கு பின் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டுமென தமுமுக கோருகின்றது.

புதுவையில் வாழும் மீனவ மக்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீ;ட்டில் 2 சதவிகித உள்ஒதுக்கீடு அளிக்க புதுவை அரசு முடிவைச் செய்திருப்பதையும் தமுமுக வரவேற்கிறது.

புதுவையில் முஸ்லிம்கள் இடஒதுக்கிட்டிற்காக தமுமுக நடத்திய இடஒதுக்கீடு பேரணியில் எடுத்த படம்.

வியாழன், 19 ஆகஸ்ட், 2010

பாரதிய ஜனதாவும், காங்கிரஸூம் ஓரினப் பறவைகள்

ஆக19:பாரதிய ஜனதா கட்சி, இடதுசாரிகள், பல்வேறு மாநிலக் கட்சிகள் என்று விலைவாசிப் பிரச்னையில் ஆளும் கூட்டணிக்கு எதிராக எல்லா எதிர்க்கட்சிகளும் ஓரணியில் நின்று வெற்றிகரமாக 'பாரத் பந்த்' நடத்தியபோது, ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு ஒரு மாற்று ஏற்படும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால், அந்த நம்பிக்கை வெறும் கானல்நீர்தான் என்பதை சமீபத்திய நாடாளுமன்ற நிகழ்வுகள் தெளிவாக்குகின்றன.

பாரதிய ஜனதா கட்சியின் தயவில் அணுசக்தி இழப்பீட்டுச் சட்டம், நடைபெறும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றப்பட்டுவிடும் என்று தெரிகிறது. இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

அன்னிய முதலீடு, பொருளாதாரக் கொள்கை, அமெரிக்காவை மையப்படுத்தியுள்ள பிரச்னைகள், உலகமயமாக்கல் என்று வரும்போது காங்கிரஸ் கட்சியும், பாரதிய ஜனதா கட்சியும் கைகோத்துச் செயல்படுவதைக் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக நாம் பார்த்து வருகிறோம்.

அணுசக்தி இழப்பீட்டுச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் முழுமையாக்கப்படும் என்பதுதான் நிலைமை.

நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் இந்திய விஜயத்துக்குமுன் இந்தச் சட்டத்தை நிறைவேற்றி அமெரிக்க முதலீட்டாளர்களையும், அரசையும் மனம் குளிர்விக்க வேண்டும் என்பதில் பிரதமர் மன்மோகன் சிங் குறியாக இருக்கிறார் என்கிறார்கள்.

மன்மோகன் சிங்கின் இந்த விருப்பத்தை நிறைவேற்றிக் கொடுப்பதில் காங்கிரஸூம், அதன் கூட்டணிக் கட்சிகளும் மட்டுமல்ல, பாரதிய ஜனதா கட்சியேகூட முனைப்புடன் செயல்படுகிறது என்பதுதான் குறிப்பிடவேண்டிய ஒன்று.

அணுசக்தி இழப்பீட்டுச் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தமும், அணுஉலை எரிபொருள் வழங்கும் நாடுகளின் கூட்டமைப்பும் வலியுறுத்துகின்றன. அதற்கு அடிப்படைக் காரணம், அணுமின் நிலையங்களில் அணுக்கசிவோ, விபத்தோ ஏற்பட்டால் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு அணுமின் நிலைய உரிமையாளர்கள் இழப்பீடு வழங்க வேண்டும் என்பதால்தான் இந்த நிபந்தனை.

இழப்பீட்டுக்கு ஓர் உச்சவரம்பு விதிப்பதன் மூலம் அணுவிபத்தால் ஏற்படும் தலைமுறைகளைக் கடந்த பாதிப்புகளுக்கு அணுமின் நிலைய உரிமையாளர்கள் பொறுப்பேற்க வேண்டிய அவசியம் இருக்காது. அணுமின் நிலையங்களை அன்னிய முதலீட்டாளர்கள் மட்டுமே நிறுவ முடியும் என்பதால் தங்களது நாட்டு முதலீட்டாளர்களின் இழப்பைக் குறிப்பிட்ட வரம்புக்குள் நிறுத்த அணுஉலை எரிபொருள் வழங்கும் நாடுகளின் கூட்டமைப்பு விரும்புகிறது.

போபாலில் நடந்த விஷவாயுக் கசிவில் யூனியன் கார்பைடு நிறுவனம் முழுமையான இழப்பீடு கொடுக்காத நிலையில், இன்னமும் பலர் பாதிக்கப்பட்டிருப்பதும், நீதிமன்றப்படிகளில் ஏறி, இறங்கி சலித்துவிட்டிருப்பதும் இதுபோன்ற விபத்துகளில் இழப்பீட்டை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.

ஆனால், அப்படிப்பட்ட இழப்பீட்டுக்கு உச்சவரம்பு விதிக்கப்படுவதுதான் வேடிக்கையாக இருக்கிறது.
அணுசக்தி என்பது ஆபத்தானது என்பதை ஏற்றுக்கொள்ளும் போது, அதனால் பாதிக்கப்படும் அப்பாவிகளுக்கு முழுமையான இழப்பீடு மட்டுமல்ல, பாதிக்கப்பட்டவர்களின் வாரிசுகளுக்கும் எதிர்காலம் உறுதிப்படுத்தப்படுவதும்கூட ஒரு நல்லரசின் கடமை.

கடந்த மக்களவையில் இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தைக் கடுமையாக எதிர்த்து வாக்களித்த பாரதிய ஜனதா கட்சி இப்போது இந்த இழப்பீட்டு மசோதாவில் அரசுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவது ஏன்?

தங்களது நிபந்தனைகளை அரசு ஏற்றுக்கொண்டிருப்பதாக பாஜக தலைவர்கள் கூறுகிறார்கள். அது என்ன நிபந்தனைகள்?

முதலாவதாக, அணுசக்திக் கூடங்கள் தனியார் தரப்பில் விடப்படக் கூடாது என்பதும் அரசுதான் நடத்த வேண்டும் என்பதும். இரண்டாவதாக, அணுசக்தி நிறுவனங்களின் அதிகபட்ச இழப்பீட்டுத் தொகை ரூ 500 கோடியாக இருந்ததை ரூ 1,500 கோடியாக உயர்த்த வேண்டும் என்பதும் தேவைப்பட்டால் மேலும் உயர்த்திக் கொள்ளும் அதிகாரமும் அரசுக்கு இருக்க வேண்டும் என்பதும். முன்பு தயாரிக்கப்பட்ட மசோதாவின்படி, அணுசக்தி உற்பத்தியாளர்களின் இழப்பீடு ரூ 500 கோடி என்றும், அதற்குமேல் இழப்பீடு தரப்பட வேண்டுமானால் அதை அரசே ஏற்றுக்கொள்ளும் என்றும் இருந்தது.

இப்போது பாஜகவின் கோரிக்கையின்படி அரசு நிறுவனமாக மட்டுமே அணுசக்திக் கூடங்கள் அமைக்கப்படும் என்கிற நிலையில் இழப்பீடு எவ்வளவு இருந்தாலும் அதை அரசு ஏற்றுக்கொள்வது என்பதுதானே நியாயம். அரசே நடத்தும்போது உச்சவரம்பின் அவசியம் தேவையில்லையே!

இப்படி ஒரு மசோதாவை நிறைவேற்றி, அரசு நிறுவனமாக அணுசக்திக் கூடங்களை அமைத்து, பிறகு அவற்றைத் தனியாருக்குத் தாரை வார்க்கத் திட்டமிட்டிருப்பது இந்த மசோதாவிலிருந்தே பளிச்செனத் தெரிகிறதே. அப்படியானால் இது மக்களை முட்டாளாக்கும் மசோதாதானே?

சரி,மின் உலைகளில் தயாரிப்புக் குறைபாடுகள் இருந்தால் அதற்கு உலைகளை வழங்கிய பன்னாட்டு நிறுவனங்கள் பொறுப்பேற்குமா?

அவர்களிடமிருந்து விபத்து ஏற்பட்டால் இழப்பீடு முழுமையாகப் பெறப்படுமா?

இதுபோன்ற கேள்விகளுக்கு மசோதா பதில் சொல்லவில்லையே, ஏன்?

பாரதிய ஜனதாவும், காங்கிரஸூம் ஓரினப் பறவைகள். பொருளாதாரக் கொள்கையிலும், பன்னாட்டு நிறுவன ஆதரவிலும் இவர்களில் யார் ஆட்சிக்கு வந்தாலும் மாற்றம் இருக்காது என்பது உலகறிந்த ரகசியம். ஏனைய மாநிலக் கட்சிகள் இந்தப் பிரச்னையில் மௌனம் சாதிக்கின்றனவே, ஏன்?

அவர்களைப் பொறுத்தவரை அணுவாவது.. உலையாவது.. விபத்தாவது.. இழப்பாவது..! உறுப்பினர்களின் சம்பள உயர்வுதான் இப்போதைய கவலை!

மக்களைப் பற்றியும் வருங்காலச் சந்ததியினரைப் பற்றியும் இவர்கள் எங்கே கவலைப்படுகிறார்கள்...?

கஷ்மீர் இஸ்லாமிய மயமாகி வருவதாக ஆர்.எஸ்.எஸ். குற்றச்சாட்டு

புதுடெல்லி,ஆக19:சங்க பரிவார்களின் தலைமையகமான ஆர்.எஸ்.எஸ்., கஷ்மீரில் பிரிவினை வாத குழுக்கள் மற்றும் அதன் அமைப்புகள் மத மாற்றத்தின் மூலம் எல்லையோரப் பகுதிகளை இஸ்லாமிய மயமாக மாற்றி வருவதாக குற்றம் சாட்டியுள்ளது .

"காஷ்மீரை இஸ்லாமிய மயமாக மாற்றி வருவது மிகவும் ஆபத்தான ஒரு விளையாட்டு, இது இருவகையான திட்டங்கள் மூலம் நடைமுறை படுத்தப்பட்டு வருகிறது, அவர்கள் முதலில் இடங்களை குறிப்பிட முஸ்லிம் பெயர் பலகைகளை வைத்து வருகின்றனர். பின்னர் சினிமா திரை அரங்குகள், அழகு நிலையங்கள் மற்றும் உணவு விடுதிகள் மற்றும் நவீன அழகு சாதன கடைகள் மீது தடைகளை விதித்து வருகின்றனர்.

பள்ளிக்கூடங்கள் மற்றும் அலுவலகங்களில் முஸ்லிம் பெண்களை முகத்திரை அணிய பணிக்கின்றனர்." என ஆர்.எஸ்.எஸ் ன் ஆர்கனைசர் இதழில் கட்டுரை வெளியிட்டுள்ளது.

பெண்கள் ஜீன்ஸ் அணிவதற்கும் நவீன அழகு ஆடைகளை அணிவதற்கும் மேலும் அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவதற்கும் எல்லையோர பகுதிகளில் அனுமதிப்பதில்லை என்றும் அக்கட்டுரையில் வெளிவந்துள்ளன.

சில முல்லாக்கள் பெண்களை பள்ளிகூடங்களுக்கு அனுப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளதாகவும் மதரசா கல்வித் திட்டத்தை பெரிய அளவில் முன்னிலை படுத்துவதாகவும், அரபிமொழி முன்னேற்றத்தினை ஊக்குவிப்பதாகவும் கட்டுரை வெளியிட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிப்பபதற்கு பதிலாக வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை விட வேண்டும் எனவும் கேட்டுள்ளனர் என்றும் நிர்வாகமும் கூட இஸ்லாமிய மயமாகி விட்டதாக அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

எல்லைப் பிரிவினையின் போது அங்கு வந்து வாழும் ஹிந்து குடியேற்ற வாசிகளுக்கு இன்னும் குடியுரிமை வழங்கப்படவில்லை என்றும் மேலும் பல குற்றச்சாட்டுகளை கூறுகிறது.

கஷ்மீரின் இந்த தொடர்ந்த இஸ்லாமிய மயமானது எல்லையோரம் உள்ள நூற்றுக்கும் மேலான ஹிந்துக் கோவில்களை இடிப்பது, ஹிந்துக்களை குறிவைத்துக் கொல்வது மற்றும் அவர்களை குடியேற்றப் பகுதிகளில் இருந்து அவர்களின் வேலைகளையும் சொத்துக்களையும் மற்றும் எல்லாவற்றையும் விட்டு வெளியேற்றுவது போன்ற அவர்களின் திட்டத்தை நிறைவேற்றும் முகமாக சவால் விடுவதாக உள்ளது

இத்தகைய நடவடிக்கைகள் அனைத்தும் இந்தியாவை விட்டு வெளியேற்றப்பட வேண்டும், 'பாகிஸ்தானுக்கு போங்க இல்லையேல் பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்திருக்கும் கஷ்மீருக்குப் போங்க அல்லது எங்கு இஸ்லாமிய சட்ட திட்டங்களை சுதந்திரமாக செயல் படுத்த முடியுமோ அங்கு போங்க' என அந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது .

அரசியல்வாதிகளிடம் இஸ்லாமிய வாதம் ஊடுருவி உள்ளதாக ஆர்கனைசர் குற்றம் சாட்டுகிறது. கஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டத்தின் 370 பிரிவையும் ஆர்கனைசர் கடுமையாக விமர்சித்துள்ளது.

பிரிவினை வாதிகள் ஹிந்துக்களை பள்ளிகூடங்களிலும் அலுவலகங்களிலும் திட்டமிட்டு குறி வைத்து வருவதாகக் கூறுகிறது.

ஹிந்துக்கள், சீக்கியர்கள் கடைகள் குறி வைத்து தாக்கப்பட்டு கொள்ளையடிக்கப்படுகின்றன. குடியேற்ற வேலைக்காரர்கள் தாக்குதலுக்கு இலக்காகப் படுகின்றனர். கஷ்மீரிகள் அல்லாத மற்றவர்கள் நடத்தும் நிறுவனங்கள் எல்லைப் பகுதியை விட்டு வெளியேறுமாறு மிரட்டப் படுகின்றன என்றும் ஆர்கனைசர் குற்றம் சாட்டுகிறது.

நானாவதி கமிசன் அறிக்கையை சமர்பிக்கும் முன்பு உயர் காவல்துறை அதிகாரிகளையும் குறுக்கு விசாரணை செய்ய வேண்டும்: CJP

அகமதாபாத்,ஆக19:2002-ம் ஆண்டில் குஜராத்தில் நடந்த இனப்படுகொலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வழக்குகளை குடிமக்களுக்கான நீதி அமைப்பு நடத்தி வருகிறது. இவ்வமைப்பு காவல்துறை கண்ட்ரோல் ரூமின் பதிவுகளில் இருந்து தற்போது கிடைத்துள்ள ஆதாரங்களைப் பற்றி சில உயர் அதிகாரிகளை குஜராத் கலவரத்தின் நீதி விசாரணைக்கான நானாவதி ஷா கமிசன் விசாரணைச் செய்ய வேண்டும் என கேட்டுள்ளது.

(Citizens for Justice and Peace) CJP இவ்வமைப்பின் பொதுச் செயலாளர் டீஸ்ட்டா செடல் வாட் கூறுகையில் "காவல்துறை கண்காணிப்பு அறையில் இருந்து தற்போது கிடைத்துள்ள ரிப்போர்ட்டின்படி பிப்ரவரி 2002 இல் காலை 11 மணியில் இருந்து மாலை 3 மணிவரை முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து அகமதாபாத் காவல் துறை கண்காணிப்பாளர் பி.சி.பாண்டேவிற்கு 15 தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளது. இதே நேரத்தில் தான் நரோடா பாட்டியா, குல்பர்க் சொசிட்டி மற்றும் அகமதாபாத்தின் பல இடங்களிலும் கொடூரமான படுகொலைகள் நடத்தப்பட்டுள்ளது." என்றார்.

டீஸ்ட்டா செடல் வாட்டின் கருத்துப்படி தொடர்ச்சியான தொலைபேசி அழைப்புகள் வருவதற்கு இரண்டு காரணங்கள் தான் இருக்கும். "ஒன்று முதலமைச்சர் அகமதபாத்தில் காவல்துறையை அவசராமக செயல்பட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர கேட்டு இருக்க வேண்டும் இல்லையெனில் இனப்படுகொலை தொடர்ந்து நடப்பதை அனுமதிக்கும் வகையில் கலவரக் குமபல்களை சுதந்திரமாக செயல்படவிட்டு அவர்களை கலைக்கும் நடவடிக்கையில் மெதுவாக செயல்படக் கூறி இருக்க வேண்டும். ஆகவே நானாவதி ஷா கமிசன் உண்மையை வெளிக்கொண்டு வரும் முன் காவல்துறை கண்கானிப்பாளர் மற்றும் மற்றும் பிற காவல்துறை அதிகாரிகளை விசாணை செய்ய வேண்டும்" எனக் கேட்டுள்ளார்.

CJP குழு "மாநில காவல்துறை ஆணையர் கே.சக்ரவர்த்தி, பாண்டே முன்னால் துணை காவல்துறை ஆணையர் M.K.தண்டன், உதவி காவல்துறை ஆணையர் P.B கோண்டியா மற்றும் ஓய்வுப் பெற்ற காவல்துறை ஆணையர் R.B.ஸ்ரீகுமார் ஆகியோரின் மீது மீண்டும் புதிய விசாரணை மேற்க்கொள்ள வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் அவர், காவல் துறை அதிகாரிகளுடனான விசாரணை விவாதங்களை விசாரணை கமிஷ்னர் கேட்க வேண்டும் என எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.

பிப்ரவரி 27ம் நாள் மாலை நரேந்திர மோடி கோத்ராவில் ரயில் எரிந்த இடத்தில் பார்வையிட்டுக் கொண்டு இருக்கையில்,அதே நேரத்தில் முதலமைச்சர் அலுவலகத்தில் பணி செய்யும் 6 மூத்த அதிகாரிகள் நரோடா-பாட்டியா மற்றும் மேகனி நகர் பகுதியில் இருந்ததாக மொபைல் போன் பதிவுகள் காட்டுகின்றன. என்றும் டீஸ்ட்ட செடல்வாட் கூறினார்.

முதலமைச்சர் அலுவலக அதிகாரிகள் நரோடாவில் என்ன செய்து கொண்டிருந்தனர். அடுத்த நாள் கலவரத்திற்கு திட்டம் தீட்டுக் கொண்டிருந்தனரா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்