மத்திய மேற்குகரையின் பில்இன் கிராமத்தில் கட்டப்பட்டிருக்கும் தடுப்புச் சுவற்றை எதிர்த்து நடத்தப்பட்ட அமைதியான ஆர்ப்பாட்டத்தில் இஸ்ரேலிய வீரர்கள் சுட்டதில் ஒரு பாலஸ்தீனர் படுகாயமடைந்தார்.கிழக்கு குத்ஸிலுள்ள அல் புஸ்தான் பகுதியில் தொல்பொருள் பூங்காவிற்கு வழியமைக்கும் பணியில் 22 பாலஸ்தீனர்களின் வீடுகள் இடிக்கப்படும் திட்டத்தை எதிர்த்து வெள்ளியன்று தொழுகைக்குப் பின் ஃபலஸ்தீன போராளிகளும் இஸ்ரேலிய இடது சாரி போராளிகளும் அல்குத்ஸ்(ஜெருசலம்) நகராட்சியை எதிர்த்து போராட்டம் நடத்தினர்.







