திங்கள், 31 டிசம்பர், 2012

மதுபானக் கடைகள், ஆலைகள் முற்றுகைப் போராட்டம்: மனிதநேய மக்கள் கட்சியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கைது!

மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் டிசம்பர் 20 முதல் 30 வரை மது ஒழிப்பு பரப்புரை பெரும் மக்கள் எழுச்சியுடன் நடைபெற்றது. மதுவின் தீமையை விளக்கி நகரங்கள் தொடங்கி கிராமங்கள் வரை துண்டுப் பிரசுரம் வினியோகம், சுவரொட்டி மற்றும் சுவர் எழுத்து பரப்புரை, வாகனப் பரப்புரை, வீதிமுனைக் கூட்டங்கள், குறுந்தகடு வினியோகம் என பல்வேறு வடிவங்களில் நடைபெற்ற பரப்புரைகளில் சுமார் 1 கோடி மக்களிடம் மதுவின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு செய்யப்பட்டது.
7 ஆயிரம் கிராமங்கள் உட்பட 8 ஆயிரம் இடங்களில் இவ்விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
இறுதியாக இன்று (டிசம்பர் 30) தமிழகம் முழுவதும் 48 இடங்களில் நடைபெற்ற மதுபான ஆலைகள் மற்றும் மதுக்கடைகள் முன்பு மனிதநேய மக்கள் கட்சியினர் அணிதிரண்டனர்.
காவல்துறை தடையை மீறி மதுபான ஆலைகள் மற்றும் மதுக்கடைகளை முற்றுகையிட முயன்ற ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். இந்த முற்றுகைப் போராட்டத்தில் ஏராளமான பெண்களும் கலந்துகொண்டனர்.
இம்மாபெரும் அறப்போராட்டம் வெற்றிபெற ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து மக்களுக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

நெல்லை கிழக்கு

கோவை

திருச்சி



திருவள்ளூர் மேற்கு
திண்டுக்கல்

சேலம்

ஊட்டி

கருத்துகள் இல்லை: