வியாழன், 3 ஜனவரி, 2013

கூத்தாநல்லூர் நகர்மன்ற கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் 10வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் K.நாச்சியா அவர்கள் நகராட்சிக்கு அளித்த கோரிக்கைகள்

28-12-2012 அன்று நடைபெற்ற கூத்தாநல்லூர் நகர்மன்ற கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் 10வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் K.நாச்சியா அவர்கள் நகராட்சிக்கு அளித்த கோரிக்கைகள் :

1.கூத்தாநல்லூர் நகராட்சியில் துப்புரவு பணியாளர்களின் எண்ணிக்கை  குறைவாக  உள்ளது அவற்றை முழுமையாக         நிரப்பு வேண்டும்.

2.10வது வார்டில் தெரு விளக்குகள் (சோடியம் பல்புகள்) சரி வர இயங்குவதில்லை அவற்றை முழுமையாக சரி செய்ய வேண்டும்.

3.10வது வார்டில் சாக்கடை கழிவுகள் முறையாக அகற்றபடுவதில்லை அவற்றை முழுமையாக சரி செய்ய வேண்டும்.

4. தமிழக முதல்வர் அவர்களின் வேண்டுகோள்களுக்கு இணங்க கூத்தாநல்லூர் நகராட்சியில்  பெண் நகர்மன்ற உறுப்பினர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும்
மேற்கண்ட கோரிக்கைகளை கூத்தநல்லூர் நகர்மன்றம் உடனே நிறைவேற்ற வேண்டும்

கருத்துகள் இல்லை: