செவ்வாய், 18 அக்டோபர், 2011

தமிழ்மணமே மன்னிப்புக்கேள் ....

ஏக இறைவனின் திருப்பெயரால்
தமிழ் மணத்தைப் பற்றி வலைப் பதிவர்களுக்கும் சரி தமிழ் இனைய உலகில் தொடர்புள்ளவர்களுக்கும் சரி சொல்லித் தெரியவேண்டியதில்லை அந்த அளவிற்க்கு தமிழ் மணத்திற்க்கு தமிழ் திரட்டிகளில் முக்கியமான இடம் உண்டு அப்படிப் பட்ட தமிழ்மணம் அல்லது அதில் உள்ள நிர்வாகிகளில் சிலர்சமீபகாலமாக இஸ்லாமிய எதிர்ப்புச் சிந்தனையை தங்களின் சில செயல்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர் அதில் ஒன்று எதிர்க்குரல் என்ற தளத்தை நடத்தி வரும் சகோ ஆஷிக் அஹ்மத் அவர்கள் தமிழ் மணத்திடம் ஒரு கலந்துரையாடலை நடத்தியபோது முஸ்லிம்கள் சாதரணமாகச் சொல்லக்கூடிய முகமனான உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக என்று சொல்லியிருக்கின்றார் அதைப் பிடிக்கவில்லையென்றால் அதற்க்கு தமிழ் மணம் என்ன பதில் சொல்லவேண்டும்
இது போன்ற வார்த்தைகளில் எங்களுக்கு நம்பிக்கையில்லை அல்லது பிடிக்கவில்லை அதனால் இதுபோன்ற வார்த்தைகளைக் கூறவேண்டாம் என்று நாகரீகத்துடன் கூறியிருக்கலாம் தமிழ்மணம் அதைச் செய்யாமல் தமிழ்மணம் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிகழவேண்டாம் என்று அநாகரிகமாகப் பதில் சொல்லியுள்ளது இது ஒரு அநாகரிகமான செயல்தான் என்றாலும் தனிப்பட்ட விஷயம் என்பதால் பெரிதுபடுத்தத் தேவையில்லை என்று வைத்துக் கொள்வோம் ஆனால் சில நாட்களுக்கு முன் terrorkummi என்னும் தளத்தில் தமிழ்மண நிர்வாகி இரமணிதரன் என்பவர் கூறிய கருத்து (அந்த கமெண்ட்டுக்களை காண இங்கே சுட்டவும்) மிகுந்த அதிர்ச்சியையும், முஸ்லிம்களின் உணர்வுகளை தூண்டுவதாகவும் இருந்தது.

"சாந்தியும் அவ அக்கா சமாதானியும் உங்களுடன்கூடியே..சே! பதிவுத்தோஷம்.. கூடவேயிருப்பார்கள்"
இது போன்ற மத்துவேசத்தைத் தூண்டக்கூடிய வகையில் ஒரு வலைத்திரட்டியின் நிர்வாகி ஒருவர் கூறியிருப்பது மிகவும் கண்டனத்திற்க்குரியதும் மிகவும் கீழ்த்தரமானதுமாகும் அது மட்டுமில்லாமல் இது சம்பந்தமாக விளக்கம் கேட்ட முஸ்லீம் பதிவர்களிடம் தமிழ்மண நிர்வாகிகள் பொடுபோக்காக பதில் சொன்ன விதம் மிகவும் வருந்தத்தக்கதுமாகும் எனவே பதிவர்கள் என்ற முறையிலும் அதைத் தாண்டி முஸ்லீம்கள் என்ற முறையிலும் கேட்கிறோம் முஸ்லீம்களினி முகமனை இழிவுபடுத்தியதற்க்காக தமிழ்மணம் உடனடியாக மன்னிப்புக் கோரி அந்த நிர்வாகியை அந்தப் பதவியிலிருந்து தூக்கியெறிய வேண்டும் இதுவே தமிழ்மணம் முஸ்லீம்களின் மனதைப் புன்படுத்திய செயலுக்கு பரிகாரமாக அமையும் மீறினால் முஸ்லீம் பதிவர்கள் தமிழ்மணத்திலிருந்து விலகிக்கொள்வதோடு சமுதாய அக்கறை கொண்ட மத ஒற்றுமையை மதிக்கக்கூடிய நடுநிலையான எல்லாப் பதிவர்களும் தமிழ்மணத்தைப் புறக்கனிக்கவேண்டும் என்று என்சார்பாக கேட்டுக் கொள்கிறேன்
அப்துல் ஹக்கீம்
இது தொடர்பாக சகோதர சகோதரிகளால் எனக்கு முன்பு வெளியான பதிவுகள்
1 சகோதரி அஸ்மா: http://payanikkumpaathai.blogspot.com/2011/10/blog-post_17.html 2சகோதரர் குலாம்: http://iraiadimai.blogspot.com/2011/10/blog-post_16.html
4. சகோதரர் முஹம்மது ஆஷிக்: http://pinnoottavaathi.blogspot.com/2011/10/blog-post_17.html
5. சகோதரர் அப்துல் பாசித்: http://bloggernanban.blogspot.com/2011/10/remove-tamilmanam-vote-button.html
6. சகோதரர் ஹைதர் அலி: http://valaiyukam.blogspot.com/2011/10/blog-post_16.html
8. சகோதரர் ஜமால்: http://www.itsjamaal.com/2011/10/my-dear-blog-friends.html
9. சகோதரர் ரஜின்: http://sunmarkam.blogspot.com/2011/10/blog-post.html
10. சகோதரர் இளம் தூயவன்: http://ilamthooyavan.blogspot.com/2011/10/blog-post.html
11. சகோதரர் அந்நியன்

12. சகோதரர் கார்பன் கூட்டாளி: http://carbonfriend.blogspot.com/2011/10/blog-post.html
13. சகோதரி ஜலீலா கமால்: http://samaiyalattakaasam.blogspot.com/2011/10/blog-post_17.html
14. சகோதரர் சிநேகிதன் அக்பர் : http://sinekithan.blogspot.com/2011/10/blog-post.html
15 சகோதரர் ஹாஜா மைதீன்:
http://hajaashraf.blogspot.com/2011/10/blog-post.html
16. சகோதரர் HajasreeN: http://hajasreen.blogspot.com/2011/10/blog-post_17.html
17ம் ஆளாக இவர்களுடன் நானும் http://neermarkkam.blogspot.com
இனைப்புகள் உதவி http://www.ethirkkural.com/

நன்றி : http://neermarkkam.blogspot.com

கருத்துகள் இல்லை: