சனி, 29 ஜனவரி, 2011

ஜஹான் என்கவுண்டர் ஒரு திட்டமிட்ட நாடகம்-குஜராத் போலீஸ் அதிகாரி


அகமதாபாத்: அகமதாபாத் அருகே இளம் பெண் இஷ்ரத் ஜஹான் உள்ளிட்டோர் என்கவுண்டரில் கொல்லப்பட்டது ஒரு திட்டமிட்ட நாடகம் என்று பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார் அகமதாபாத் காவல்துறை இணை ஆணையர் சதீஷ் வர்மா.

கடந்த 2004ம் ஆண்டு ஜூன் மாதம் 15ம் தேதி அகமதாபாத் அருகே இஷ்ரத் ஜஹானும், 3 இளைஞர்களும் போலீஸரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களை சுட்டுக் கொன்றது அப்போதைய அகமதாபாத் குற்றப் பிரிவு டிஐஜி வன்சாரா தலைமையிலான குழு. இவர்கள் அனைவரும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் என்றும், முதல்வர் நரேந்திர மோடியைக் கொல்லும் திட்டத்துடன் ஊடுறுவினர் என்றும். அவர்களை வழிமறித்தபோது தாக்குதலில் ஈடுபட முயன்றதால் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்றும் குஜராத் காவல்துறை அப்போது தெரிவித்தது.

ஆனால் இது அப்பட்டமான போலி என்கவுண்டர் என்பது பின்னர் தெரிய வந்தது. இதையடுத்து இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் இஷ்ரத்தின் தாயார் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து சிபிஐயிடம் இந்த வழக்கை ஒப்படைத்தது உச்சநீதிமன்றம்.

இந்த நிலையில், இஷ்ரத் ஜஹான் திட்டமிட்டு கொல்லப்பட்டார் என்று அகமதாபாத் காவல்துறை இணை ஆணையர் சதீஷ் வர்மா கூறியுள்ளார்.

இதுகுறித்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் வர்மா ஒரு அபிடவிட்டைத் தாக்கல் செய்துள்ளார். அதில், இஷ்ரத் ஜெஹான் என்கவண்டர் ஒரு திட்டமிட்ட சம்பவம். இயற்கையாக நடந்ததில்லை. இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு சிறப்பு புலனாய்வுப் படை ஒத்துழைப்பு தராமல் இழுத்தடித்தது.

இந்த வழக்கை திசை திருப்பும் முயற்சியில் டெல்லியைச் சேர்ந்த ஒரு முக்கிய காவல்துறை அதிகாரி தீவிரமாக செயல்பட்டு வருகிறார் என்று வர்மா தெரிவித்துள்ளார்.

வர்மாவின் இந்த விளக்கம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் - உளவுத்துறை, பாதுகாப்புத்துறை ஏஜன்சிகள் - தொடர்புகள் குறித்து விசாரணை தேவை - கருத்தரங்கில் கோரிக்கை

புதுடெல்லி,ஜன.29:பல்வேறு மனித உரிமைகள் அமைப்புகள் ஒருங்கிணைந்து டெல்லியில் கருத்தரங்கம் ஒன்றை நடத்தின. இக்கருத்தரங்கில் குண்டுவெடிப்பு வழக்குகளில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளின் தொடர்புகள் வெளியான சூழலில் இந்தியாவில் பாதுகாப்பு ஏஜன்சிகள், உளவுத்துறை ஏஜன்சிகள் ஆகியவற்றில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளின் ஆதிக்கத்திற்கான காரணம் என்ன என்பதுக் குறித்து விசாரணை நடத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.

குண்டுவெடிப்புகளில் இதுவரை பாதுகாப்பு ஏஜன்சிகள் விசாரணையை திசைதிருப்பிக் கொண்டிருந்தன என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது. இச்சூழலில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங், சி.பி.எம்.பொலிட் பீரோ உறுப்பினர் சீதாராம் யெச்சூரி, லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் ஆகிய அரசியல் பிரமுகர்களும், பிரபல மனித உரிமை ஆர்வலர்களும் பங்கேற்ற இக்கருத்தரங்கில் இத்தகையதொரு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இக்கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளில் கைதுச் செய்யப்பட்ட முஸ்லிம்களைக் குறித்த வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும்.

சிறையிலடைக்கப்பட்ட நிரபராதிகளான முஸ்லிம் இளைஞர்களை உடனடியாக விடுதலைச்செய்ய வேண்டும்.

கடந்த 20 ஆண்டுகளில் நடைபெற்ற அனைத்து குண்டுவெடிப்புகளைக் குறித்தும் மீண்டும் விசாரணை நடத்தவேண்டும்.

ஆர்.எஸ்.எஸ், அபினவ்பாரத், வி.ஹெச்.பி, பா.ஜ.க, பஜ்ரங்தள் ஆகிய அமைப்புகளுடன் உளவுத்துறை, பாதுகாப்பு ஏஜன்சிகள், போலீஸ் அதிகாரிகள், அதிகாரவர்க்கத்தினர், ராணுவத்தினர் ஆகியோருக்கான தொடர்புகளைக் குறித்து விசாரணை நடத்தவேண்டும்.

குண்டுவெடிப்பு வழக்குகளில் கைதுச் செய்யப்பட்டு சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்ட அப்பாவிகள் அனைவருக்கும் நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும்.

மேலும் அவர்களின் புனர்வாழ்வுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஹிந்துத்துவா அமைப்புகளுக்கு நிதியுதவி அளிப்பவர்களைக் குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும். மேலும் இவர்களுக்கு அரசியல் ரீதியாக, தார்மீக ரீதியாக ஆதரவளிப்பவர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

ஹிந்துத்துவா அமைப்புகளுக்கு வெளிநாட்டிலிருந்து வரும் பணம் குறித்து விசாரணை நடத்தப்படவேண்டும்.

பயங்கரவாத வழக்குகளில் நிரபராதிகளை சிக்கவைத்து சித்திரவதைச் செய்து அவர்களை நிர்பந்தப்படுத்தி பொய் வாக்குமூலங்களை வாங்கிய அனைத்து போலீஸ் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் இவர்களுக்கு வழங்கிய பதவிகளையும், பதக்கங்களையும் பறிக்கவேண்டும்.

மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு பின்னர் விடுதலைச் செய்யப்பட்ட அப்பாவி முஸ்லிம் இளைஞர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டுமென்ற நீதிமன்ற தீர்ப்பைக் குறித்து கேள்வி எழுப்பும் ஆந்திர அரசின் நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.

பொய்வழக்குகள் சுமத்தப்பட்டதால் மனோரீதியாக பாதிக்கப்பட்ட இளைஞர்களிடம் மாநில அரசுகள் மன்னிப்புக் கோரவேண்டும்.

பயங்கரவாத வழக்குகளில் ஆஜராகமாட்டோம் என தீர்மானம் நிறைவேற்றிய பார் கவுன்சில் நடவடிக்கையை இக்கருத்தரங்கு கண்டிக்கிறது.

முஸ்லிம்களுக்கெதிராக பொய்ச் செய்திகளை பரப்பும் ஊடகங்களின் பங்கினையும் இக்கருத்தரங்கம் கண்டிக்கிறது.

புலனாய்வு ஏஜன்சிகள் ஆதாரங்கள் என போலியாக முன்வைக்கும் காரியங்களை கண்ணை மூடிக்கொண்டு நம்பிவிடக் கூடாது என ஊடகங்களை இக்கருத்தரங்கம் வேண்டிக் கொள்கிறது.

இக்கருத்தரங்கில் அமீத் சென் குப்தா, ஆஷிஷ் கேதான், சித்தரஞ்சன் சிங், ஃபராஹ் நக்வி, இஃப்திகார் கிலானி, பிரசாந்த் பூஷன், சத்ய சிவராம், சீமா முஸ்தஃபா, சுபாஷ் கட்டாடே, சுரேஷ் கைர்னார், தருண் தேஜ்பால், பிருந்தா க்ரோவர் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

காரியம் சாதிக்கும் சமூக அமைப்புகளும் சோரம் போகும் சமுதாய இயக்கங்களும்!

டாக்டர் ஏ.பீ. முஹம்மது அலீ, பிஎச்.டி, ஐ.பீ.எஸ் (ஓ)

2011 ஏப்ரல், மே மாத வாக்கில் தமிழ் நாடு சட்ட மன்ற தேர்தலில் முக்கிய இரண்டு அணிகள் உருவாகுவது தெளிவாக தெரிகிறது. ஓன்று ஆளும் கட்சி கூட்டணி மற்றொன்று எதிர்க்கட்சி கூட்டணி. அதனைத் தொடர்ந்து மற்ற சமூக அமைப்புகளும் ஒரளவிற்கு தங்கள் நிலைப்பாட்டினை எடுத்து விட்டன.

குறிப்பாக ஆதி திராவிட சமூகத்தினைச் சார்ந்த தொல். திருமாவளவன், ஜெகன் மூர்த்தி ஆகியோர் ஆளுங்கட்சி கூட்டணிக்கும், டாக்டர். கிருஷ்ணசாமி, ஜான்பாண்டியன், செ.கு. தமிழரசன் போன்றோர் எதிர்க்கட்சி கூட்டணிக்கும் தங்கள் ஆதரவினைத் தெரிவித்து போட்டி போட எத்தனை தொகுதிகள் என்றும், ஒதுக்கப்படும் தேர்தல் நிதி நிர்ணயிக்கப் பட்டு விட்டதாக பல ஊடகங்கள் தெரிவிக்கின்றன..

ஆகவே அந்த சமுதாய இயக்கங்களால் எந்தக் கூட்டணி ஆட்சிக்கு வந்தாலும் ஏற்கனவே அரசியல் அமைப்புப் பிரிவ 15(4)ல் வழங்கப்பட்ட பல்வேறு சலுகைகளுக்கும், அதற்கு மேலும் பெற உத்திரவாதம் வழங்கப்பட்டு விட்டது என்றே கூறலாம்.

ஆனால் இஸ்லாமிய சமுதாய அமைப்பில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் ஆளுங்கட்சிக்கும், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்-மனிதநேயக் கட்சி எதிர்க் கட்சி கூட்டணிக்கும் ஆதரவு தெரிவித்து அதன் தலைவர்கள் படம் இரண்டு அணி தலைவர்களுடன் பத்திரிக்கைகளிலும் பிரசுரிக்கப் பட்டன. ஆனால் மற்ற சமுதாய அமைப்புகளின் நிலைப்பாடும் உதிரி சமுதாய அரசியல் கட்சிகளின் ஆதரவும் மதில் மேல் பூனiபொல் இருப்பதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

ஏற்கனவே ஆதரவு தெரிவித்த சமுதாய அரசியல் கட்சிகளுக்கு இரண்டு அணியிலும் முக்கியம் கொடுத்து தலித் சமுதாய மக்களுக்கு ஒருக்கீடு செய்யப்படும் அளவிற்கு தேர்தலில் ஒதுக்கீடு செய்யப்படுமா என்பது சந்தேமாகவே உள்ளது. இன்னும் ஒரு படிமேலே போய் ஒரு சீட்டுக் கிடைத்தாலும் போதும் தாங்கள் ஆதரவு தெரிவித்த கூட்டணியிலேயே தொடர்வோம் என்ற நிலை எடுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏன் இந்த பரிதாபமான நிலை என்பதினை மூன்று உதாரணங்களைச் சொல்லி விளக்கலாம் என நினைக்கின்றேன்:

கல்லூரி மாணவப்பருவத்தில் கேள்விப் பட்டது

1) நமது சமுதாய இயக்கம் ஒன்று சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெரிய மாநாடு நடத்தியது. அந்த மாநாட்டிற்காக நமது நாட்டிலும், வளைகுடா நாடுகளிலும் ஏராளமான பணம் வசூல் செய்யப்பட்டது. மாநாடு செலவு போக மீதியள்ள பணத்தினைக் கொண்டு சமுதாயம் செயல்படுவதிற்கு ஒரு சொந்தக் கட்டிடம் இல்லாமல் வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வருகிறது, அதற்குப் பதிலாக ஒரு சொந்தக்கட்டிடம் வாங்கலாம் என சிலர் முயற்சி செய்தனர்.

அதற்கு அன்றைய சமுதாயத் தலைவர்களில் ஒருவர் தன்னால் தான் அவ்வளவு பெரிய தொகை வசூல் செய்யப்பட்டது என்றும், தான் நடத்தும் ஒரு மாதப்பத்திரிக்கை நலிவடைந்து இருப்பதாகவும் அதனை தொடர்ந்து நடத்த அந்த மீதிப்பணத்தினை தர வேண்டும் என வாதிட்டாராம். ஆனால் அப்போதிருந்த தலைவரும், பொருளாதாரரும் தங்களுடைய அமைப்பிற்க ஒரு சொந்தக் கட்டிடம் வேண்டும் என உறுதியாக இருந்து மன்னடி பகுதியில் கட்டிடம் வாங்கப்பட்டதாம். இது எதனைக் காட்டுகிறது என்றால் எப்படி தன் செல்வாக்கால் கட்சிப் பணத்தினை தன் சொந்த பத்திரிக்கைக்கு சுயநலமே பெரிது என அபகரிக்கப் பார்த்தார் அந்த சமுதாய முன்னோடி என்பது பரிந்து இருக்கும் என நம்புகிறேன்.

நேரில் கண்டது:

2) 1991 ஆம் ஆண்டு நான் சென்னை சட்டம், ஒழுங்கு டி.சியாக பணியாற்றிய போது கண்ட ஒரு சம்பவம். மறைந்த தேசிய தலைவர் ஒருவருக்கு தென் சென்னையில் ஒரு விருந்து கொடுக்கப் பட்டது. அவருடைய பாதுகாப்பு பணியினை மேற்பார்வையிட நான் நியமனம் செய்யப்பட்டேன். நமது சமுதாய இயக்கத்தலைவர் ஒருவரும் அதில் கலந்து கொண்டிருந்தார்.

சமுதாய தலைவர் தேசிய தலைவர் அருகில் சென்று தனக்கு வேலூரில் போட்டியிட வாய்ப்புத் தர வேண்டும் என்ற கோரிக்கையினை வைத்தார். அப்போது தேசிய தலைவர் அருகில் இருந்த தஞ்சாவூர் எம்.பியின் பக்கம் காட்டி அவரை சந்திக்கவும் எனக் கூறினார். உடனே நமது சமதாய தலைவரை அந்த எம்.பி பார்த்து சமுதாய மக்கள் உங்கஎ; மீது வெறுப்பாக உள்ளனர். ஆகவே வேறு ஒருவர் பெயரைச் சொல்லுங்கள் அவருக்கு வாய்ப்புக் கொடுப்பதினை பரிசீலிக்கலாம் என்றார்.

ஆனால் சமுதாயத்தலைவர் தனக்குத்தான் அந்த வாய்ப்புத்தர வேண்டும் என வாதிட்டார். அந்தப் பேச்சு தேசிய தலைவர் எழுந்து விட்டதால் பாதியிலேயே முடிந்து விட்டது. ஆகவே அந்த சமுதாயத் தலைவரின் செயல் தனக்கு கிடைக்காத பலன் வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது என்ற செயலாகத் தெரியவில்லையா?

சமுதாயத் தலைவர்களிடமிருந்து கசிந்தது:

3) வருகிற சட்டசபைத் தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணிக்கு ஏற்கனவே ஒரு சமுதாய இயக்கம் ஆதரவு தெரிவித்திருந்தது. அதனை விரும்பாத மற்றொரு சமுதாய இயக்கம் அந்தக் கூட்டணித் தலைவர்களிடம் ஏற்கனவே ஆதரவு தெரிவித்த சமுhய இயக்கத்தினை வெளியேற்றினால் தங்கள் ஆதரவு அந்தக் கூட்டணிக்கே என்ற வாதிடுவதாகவும் செய்தி வெளியாகி உள்ளது. இது சமுhயத்திற்குள்ளேயே காலை வாரி விடும் உன்னத செயலாக உங்களுக்குத் தோனவில்லையா?

நான் மேலே குறிப்பிட்ட சம்பவங்களிலிருந்து சமுதாய இளைஞர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் என்ன என்று பார்ப்போமேயானால்:

1) நமது சமுதாய அரசியல் கட்சிகள் தாங்கள் சார்ந்திருக்கும் கூட்டணியில் தூக்கி எறியும் ஒரு இடம் கொடுத்தாலும் அதனை ஏற்றுக் கொள்ளும் தாராள மனப்பக்குவம்.

2) தேர்தல் செலவிற்காக கூட்டணியில் ஒதுக்கப்படும் செலவு தொகையினை கனிசமான அளவிற்கு பங்கு போட ஆயத்த நிலை. தேர்தல் வேட்டையினை மாநாடுகளுக்கு செய்தது போல நம் நாட்டிலும், வளைகுளா நாட்டிலும் ஈடுபட்டு ஒரு முடிந்த அளவு வலைவீசி, அழியும் கண்மாயில் மீன் பிடிப்பது போன்று வசூல் வேட்டையில் இறங்குவது.

3) சமுதாய இயக்கங்களிடையே ஒருவொருக்கொருவர் காலை வாரிவிடும்; ஐந்தாம் படை வேலை.

4) சமுதாய பொதுக் கோரிக்கைகளான சமுதாய இட ஒதுக்கீடு அதிகப்படுத்துதல், வேலை மற்றும் கல்வியில் குறைந்தளவு ஒதுக்கப்பட்ட 3.5 சதவீதம் உத்திரவாதம், நலிந்த ஊர்களான திருநெல்வேலி மேலப்பாளையம், ஸ்ரீவைகுண்டம், முதுகுளத்தூர், இளையான்குடி, இடையக்கோட்டை, பழனி, தாராபுரம், பாபநாசம், இராஜகிரி, நாகை பரங்கிப்பேட்டை, புவனகிரி, சதுரங்கப்பட்டினம் போன்ற சமுதாய ஊர்களில் தனி தொழில் மையங்கள் அமைத்தல், மைனாரிட்டி கமிஷன் சேர்மன் பதவிக்கு சுழற்சி முறையில் சமுதாய தலைவர் ஒருவருக்கு கிறித்துவ சமுதாயத்தினவருக்கு ஒதுக்கப்படுவது போல ஒதுக்குவது போன்ற குறைந்த பட்ட உத்திரவாதங்களை முன் வைத்து அதன் பின்பு கூட்டணிக்கு ஆதரவு என்ற நிலைப்பாடு எடுக்காது கூப்பிட்ட குரலுக்கு ஓடி ஆதரவு அளிக்கும் தலைவர்கள் நம்மிடையே உலவுவது.

5) சமுதாய மக்களை ஏமாற்ற மறக்காது பாபர் மஸ்ஜித் கோரிக்கையினை அப்பப்ப தங்கள் ஆர்ப்பாட்டங்களால் ஞாபகப்படுத்தி வசூலில் இறங்குவது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீட்டில் தமிழ்நாடு சமுதாய இயக்கங்கள் எதுவம் தன்னை இணைத்துக் கொள்ளாது வசூல் வேட்டையினை மட்டும் மறக்காமல் ஈடுபடுவது என்ன நியாயம்?

மேற்கு வங்கத்தினைச்சார்ந்த மத்திய அமைச்சர் மம்தா பானர்ஜி மத்திய அரசில் தான் பங்கு பெற்றிருக்கிறோம் என்றும் பாராமல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகப்படுத்திய உடன் வாளாதிருக்காது தனது எதிர்ப்பினைக் காட்டியதோடு நில்லாமல் யு.பியே சேர்மனிடமும் நேரில் முறையிட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஏன் மத்தியில் பார்க்க வேண்டும்?

அருந்ததையர் 3 சதவீத ஒதுக்கீடில் சரியான பலன் கிடைக்கவில்லை என அருந்ததையர் தலைவர் வலசை ராஜேந்திரi; வைத்த வேண்டுகோளை ஏற்று அதனை ஆராய ஒரு உயர் மட்ட குழு அமைக்க வில்லையா? தேவேந்திர குல வேளாளர் ஏழு பிரிவினையும் இணைத்து ஒரு பிரிவாக அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையினை ஏற்று இன்று கூட(27.1..2011)பத்திரிக்கையில் வந்த செய்தி படி நீதிபதி ஜனார்த்தனம் தலைமையில் ஒரு நபர் கமிஷன் அமைக்கவில்லையா? அது போன்று நமது சமுதாய நலனுக்கான கோரிக்கையினை முன் வைத்து கூட்டணியில் சேருவதிற்க ஏன் கூச்சப்பட வேண்டும்?

இந்தக் காலத்தில் ‘வாயுள்ள பிள்ளைதான் பிழைத்துக் கொள்ளும்’ என்ற பழமொழியினை சமுதாய தலைவர்கள் மறக்கக் கூடாது. இதனைச் சொல்ல இவர் யார் என என்னை சிலர் கேட்கலாம்? அதற்கு ஒரு உதாரணத்தினைச் சொல்லி பதில் கூறலாம் என நினைக்கின்றேன். ஒரு தடவை தத்துவ ஞானி எமர்ஷனும் அவருடைய மகனும் தாயை இழந்து நின்ற கன்றுக் குட்டியினை வயலுக்கு இழுத்துச் செல்ல எவ்வளவோ முயன்றும் தோல்வியுற்றனர். அதனை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த வேலைக்காரப் பெண் அவர்கள் முன் வந்து அந்த கன்றுக் குட்டி வாயினுள் தன் விரலை வைத்த மறு நிமிடமே அந்த கன்று தன் தாய் பசுவின் மடுதான் அந்த விரல் என நினைத்து அந்த வேலைக்கார பெண்ணுடன் சென்றதாம். அது போன்று சமுதாய சேவை செய்ய ஆர்வ முள்ள வேலைக் காரனாக என்னை கருத வேண்டும்.

பிகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ் குமாரும் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத்தும் ஒரு காலத்தில் ஒரே பிற்பட்ட சமுதாய இயக்கமான மண்டல் இயக்கத்தில் இணைந்து பணியாற்றியவர்கள் தான். அரசியல் இயக்கத்தில் இருவரும் இரு துருவங்களாக உள்ளனர். ஆனால் பிகார் மக்கள் நலன் பாதிக்கும் போது இணைந்து குரல் எழுப்பியும், பொது நிகழ்ச்சிகளிலும் இணைந்து இன் முகத்துடனும் ஒருவருக்கொருவர் அன்புடன் அரவணைத்துக் கொள்ளும் காட்சிகள் பத்திரிக்கைகளிலும், டி.வி.யிலும் பார்க்கலாம்.

ஆனால் நமது சமுதாய இயக்கங்களைச் சார்ந்த தலைவர்கள் சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் பற்றி தங்கள் பத்திரிக்கையிலும், மேடை பேச்சுகளிலும,; கேசட்டுகளிலும் புனித குர் ஆனையும், ஹதீஸ_களையும் மேற்கோள் காட்டி வீர முழக்கமிடுவர். ஆனால் உண்மையில் ஒருவர் மற்ற சமுதாய இயக்கத்தினை குழிதோண்டி புதைப்பதிலும், அதன் தவைர்களை கீழ்த்தரமாக தங்கள் பத்திரிக்கைகளிலும் எழுதுவதிலேயே குறியாக இருப்பதின் மூலம் சமுதாய பொது நன்மைகளை மறந்து விடுகின்றனர்.

ஆகவே வருங் காலத்திலாவது சமுதாய தலைவர்கள் வேற்றுமையினை மறந்து பரஸ்பரம் அன்பினைப் பொழிந்து தங்கள் சமுதாய இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக இருந்து நல்ல வழி காட்ட வேண்டும். ஜனநாயக நாட்டில் மைனாரிட்டியாக வாழும் நாம் ஒருவருக்கொருவர் வேற்றமைகளை களைந்து கலந்துரையாடி சமுதாத்திற்கு அதிகமான பலன்களை தேர்தல் நேரத்தில் இனியாவது பெறுவார்களா என பொறுத்திருந்து பார்ப்போமா சொந்தங்களே.

source: http://mudukulathur.com/?p=4360


வியாழன், 27 ஜனவரி, 2011

போராளி பழனி பாபா ஒரு பார்வை!





ஒடுக்கப்பட்ட மற்றும் முஸ்லிம் மக்களின் உரிமைக்காக தம் வாழ்நாள் முழுவதும் போராடிய பழனி பாபா ஜனவரி 28(28.1.1997) சங்கபரிவார வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட நாள்.

-காஞ்சி ஜைனுல் ஆபிதீன்

மாநில மாணவரணி செயலாளர்.தமுமுக

பழனி அருகே புது ஆயக்குடி எனும் கிராமத்தில் வசதி மிக்க குடும்பத்தில் பிறந்து தம் சிறந்த ஆங்கில அறிவாலும் நாவன்மையாலும் பல அரசியல் கட்சி தலைவர்களின்,முக்கிய பிரமுககர்களின் நட்பை பெற்றவர் பாபா.முதலில் எம்ஜிஆருக்கு ஆதரவாகவும் பின்னர் கருணாநிதிக்கு ஆதரவாகவும் அரசியல் பணியாற்றினார். பின்னர் பாமகவின் ராமதாசுக்கு ஆதரவாகவும் பிரச்சாரம் செய்து பாமகவை பட்டிதொட்டி எங்கும் கொண்டு சென்றார்.வன்னியர் கட்சியான பாமகவை அணைத்து மக்களுக்குமான கட்சியாக ஜனரஞ்சகமாக்கிய பெருமை பாபாவுக்கே உரியது.ஜிஹாத் கமிட்டி என்ற பெயரில் ஒரு அமைப்பையும் உருவாக்கினர்.

முஸ்லிம் சமுக இளைஞர்களிடத்தில் அவருக்கு இருந்த செல்வாக்கு வேறு எந்த தலைவருக்கும் இருந்ததில்லை.பார்பன அதிகார வர்க்கத்துக்கும் முஸ்லிம்களை ஏமாற்றி வந்த அரசியல் கட்சிகளுக்கும் தனது சட்ட அறிவின் மூலமும் பேச்சாற்றல் மூலமும் தகுந்த பதிலடி கொடுத்து வந்த பாபா சங்க பரிவார பாசிஸ்டுகளுக்கு சிம்ம சொப்பனமாகவே விளங்கினார்.

தமிழகத்தில் பட்டி தொட்டி முதல் மாநகர் வரை அவர் பேசாத இடம் இல்லை.கேரளா,மும்பை உட்பட இந்தியாவின் பிற பகுதிகளிலும் இலங்கை,சிங்கபூர்,மலேசியா என பல நாடுகளிலும் சுற்றுபயணம் மேற்கொண்டு சமூகத்தின் பிரச்சனைகளை பேசினார். இன்றைக்கு பெரும்(?) செல்வாக்குள்ள முஸ்லிம் சமுதாய அமைப்புகளின் தலைவர்கள் பேச பயந்த விசயங்களை அன்றைக்கு பொது மேடைகளிலேயே போட்டு உடைத்தவர் பாபா.முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்படும்போது இழைத்தவன் சாதாரண கான்ஸ்டபிளாக இருந்தாலும் எஸ்.பியாக இருந்தாலும் எவ்வளவு பெரிய அரசியல் தலைவராக இருந்தாலும் துணிந்து அவர்களின் முகமூடியை கிழிக்க அவர் என்றும் தயங்கியதே இல்லை.

இன்றைக்கு முஸ்லிம் சமூக தலைவர்கள் தங்கள் அறைகளில் பேச தயங்கும் பல விசயங்களை பொது மேடைகளில் நார் நாராய் கிழித்தவர் அவர்.அதனால் அதிகார வர்க்கத்தின் ஆளும் கட்சிகளின் எதிர்ப்பை சம்பாதித்தார்.கருணாநிதி,எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா என அனைவருமே பாபாவின் துணிச்சலான கருத்துகளுக்காகவும் முஸ்லிம் விரோத போக்கினாலும் அவரை பலமுறை சிறையில் அடைத்தனர்.

ஆர் எஸ் எஸ் ,இந்து முன்னணி போன்ற அமைப்புகளின் முஸ்லிம் விரோத போக்கை ஆசிர்வதித்தும் கண்டும் காணாமலும் இருந்த அன்றைய காவல்துறையையும் அரசியல்வாதிகளையும் தனது நெருப்பு பேச்சால் சுட்டெரித்தார்.இதனால் முஸ்லிம் சமூகம் சிந்தனை பெற்றதோ இல்லையோ முஸ்லிம் இளைஞர்கள் கொதித்து எழுந்தனர்.

சங்பரிவாரின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முஸ்லிம் இளைஞர்களால் உடனடி பதில் அளிக்கப்பட்டது.இதனால் அடங்கி,பயந்து போன பாசிச கும்பல் அதிகார வர்க்கத்தின் துணையை நாடியது.இதனால் பல முஸ்லிம் இளைஞர்கள் மீது பொய் வழக்குகள் பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட கொடுமை நிகழ்ந்தது.சிறையில் அடைக்கப்பட்ட பலருக்கு சட்ட உதவிகள் செய்தார் பழனி பாபா.ஒரு கட்டத்தில் பொய் வழக்குகள் பாபா மீதே பாய ஆரம்பித்தன.அனைத்தையும் எதிர் கொண்டார்.

முஸ்லிம் தலைவர்கள் இன்றும் கூட சிறைக்கஞ்சி பதுங்கும் நேரத்தில் சிறைக்கு போவதை பெருமையாகவே நினைத்தார் பாபா.சமுதாய இளைஞர்களுக்கு சிறையின் மேல் இருந்த பயத்தை போக்கினார்.போராளிகளின் புகலிடம் சிறைசாலை என்று போதித்தார்.ஆனால் பாபா முஸ்லிம் இளைஞர்களை வழி கெடுக்கிறார் என்று தூற்றினர் சில சிறைக்கஞ்சா(?) தலைவர்கள். அதையும் மீறி இளைஞர்களின் பேராதரவோடு களப்பணி ஆற்றினார்.

சங்பரிவார் அமைப்புகளின் எதிர்ப்புக்கிடையில் பல தாழ்த்தப்பட்ட மக்களின் இஸ்லாமிய தழுவலுக்கு வழி வகுத்தார் பாபா.இஸ்லாம் ஒன்றே சாதிய ஒடுக்குமுறைக்கு தீர்வு என்று தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழி காட்டினர்.அதனால் பல தாழ்த்தப்பட்ட சகோதரர்கள் இஸ்லாமிய நெறி ஏற்றிட உதவி செய்தார்.இஸ்லாமிய தாவா மட்டுமல்ல முஸ்லிம் சமூகத்தில் புரயோடிபோயிருந்த வரதட்சணை,வட்டி போன்ற சமூக கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுத்தார்.சந்தன கூடு,சமாதி வழிபாடு என்று தறிகெட்ட முஸ்லிம்களுக்கும் சவுக்கடி கொடுத்தார் பாபா.

இதனால் முஸ்லிம்களின் ஒரு பிரிவினரின் கோபத்தை சம்பாதித்தார்.அதற்கெல்லாம் அஞ்சாமல் தனது கருத்துகளை ஜமாத்தார்கள் முன்னிலையிலேயே எடுத்து வைத்தார்.பல்வேறு சமுதாய அமைப்புகளின் தலைவர்களுடன் நட்புறவு பேணி முஸ்லிம் மற்றும் இந்து சமுதாய ஒருங்கிணைப்புக்கு வழி வகுத்தார்.பல மனித உரிமை போராளிகளோடு இணைந்து போராட்ட களங்கள் கண்டார்.பேரா.கல்யாணி,டாக்டர் சேப்பன் போன்றவர்களோடும் PUCL போன்ற மனித உரிமை அமைப்புகளோடும் இணைந்து உரிமைகள் மறுக்கபட்டோருக்கு உதவி செய்தார்.

அரசியல்,சமூக பணிகளோடு இஸ்லாமிய மார்க்க விளக்கத்திலும் சிறந்த அறிவு பெற்றிருந்தார் பாபா.பல இஸ்லாமிய கொள்கை விளக்க கூட்டங்களில் பேசினார்.சுன்னத் வல் ஜமாஅத் கொள்கை அடிப்படையில் தனது இஸ்லாமிய கருத்துகளை எடுத்து வைத்தார்.கிறிஸ்துவம் தொடர்பாக பல ஆய்வுகளை மேற்கொண்டார்.பைபிள் மற்றும் கிறிஸ்தவம் தொடர்பாக அவர் கேட்ட அறிவு ரீதியான கேள்விகளுக்கு கிருஸ்தவ பாதிரிமார்களால் பதில் அளிக்கவே முடியவில்லை .அவரின் பைபிள் ஒரு ஆய்வு கிருஸ்தவத்திலும் பைபிளிலும் பாபாவுக்கு இருந்த ஆழ்ந்த புலமையை வெளிப்படுத்திய நூல்.ராமகோபலய்யருக்கு மறுப்பு நூலும் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த புத்தகம் எழுதிய பாபா கைது செய்யப்பட்டது அன்றைக்கு அரசுகள் முஸ்லிம்கள் மீது நடத்திய அடக்கு முறைக்கு ஒரு சான்று.தான் நூல்கள் எழுதியது மட்டுமல்லாமல் இஸ்லாம் குறித்து மற்ற அறிஞர்கள் எழுதிய நூல்களுக்கும் உதவி செய்தார் பாபா.பேரா.மார்க்ஸ் எழுதிய முஸ்லிம்களுக்கு எதிரான கட்டுகதைகள் என்ற புத்தகம் வெளியிட நிதியுதவி அளித்தார்.பாபரி மஸ்ஜித் தொடர்பாக WHO IS LAW ABIDING ON THE ISSUE OF BABRI MASJID?என்ற புத்தகம் தவிர ஆங்கிலத்திலும் பல நூல்கள் எழுதியுள்ளார் பாபா.

நூல்கள் எழுதியதோடு மட்டுமல்லாமல் பத்திரிக்கைகளையும் துவக்கினர் பாபா. புனிதபோராளி பத்திரிக்கை மூலம் அனல் பறக்கும் கட்டுரைகளை எழுதினார்.முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளை புனித போராளி மூலம் அம்பலபடுத்தினார்.பத்திரிக்கை,நூல்கள்,மேடைபேச்சு,அரசியல் மற்றும் சமூக விழிப்புணர்வு,இஸ்லாமிய பிரச்சாரம் என பல துறைகளிலும் சளைக்காமல் பணியாற்றிய பாபா சங்பரிவார்களின் கழுகு பார்வைக்கு உறுத்தலாகவே இருந்தார்.

முஸ்லிம் சமுதாய அமைப்புகள் சில பாபாவுக்கு எதிராக கழுத்தறுப்பு வேலைகள் பார்த்தாலும் அவதூறுகள் பேசினாலும் தனது பணிகளில் தொடர்ந்து கவனம் செலுத்தினார் பாபா.

ஆரவாரமான மேடை பேச்சுக்களை விட்டு அமைதியான முறையில் ஆக்கபூர்வமான வேலைகளை கவனிக்க திட்டமிட்ட பாபா முஸ்லிம் ஜமாத்துகளை ஒருங்கிணைப்பதற்கான வேலைகளை ஆரம்பித்தார்.தமிழகம் முழுவதும் ஜமாத்துகளை சந்திக்க திட்டமிட்டு அதற்கான பணிகளை முடுக்கி விட்டார்.இந்நிலையில் பொள்ளாச்சியில் தனது குடும்ப நண்பர் பசவராஜ் தனபால் என்பவர் வீட்டுக்கு வந்த பாபா அவரிடம் பேசி முடித்து விட்டு வெளியில் நின்ற தனது ஜீப்பில் ஏற முற்படும்போது R.S.S பாசிச பயங்கரவாதிகளால் கொடூரமாக கொல்லப்பட்டார்.பல மேடைகளில் தான் இஸ்லாமிய எதிரிகளால் கொல்லப்பட்டு ஷஹித் ஆக்கபடுவேன் என்றும் அதைதான் தான் விரும்புவதாகவும் கூறி வந்த பாபா ஷஹித் அந்தஸ்தை அடைந்தார்.

பாபா கொல்லப்பட்ட செய்தி அறிந்து தமிழகமே அதிர்ந்தது.பல ஊர்களில் கடையடைப்பு,கல்லெறி சம்பவங்கள் நடந்தன.ஆயிரக்கணக்கான ஜிஹாத் கமிட்டி தொண்டர்கள்,முஸ்லிம் பொது மக்கள் புடை சூழ கொண்டு வரப்பட்ட பாபா உடல் புது ஆயக்குடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

பாபா வின் உடலை கூறு போட்ட பாசிஸ்டுகளால் அவரின் கொள்கை முழக்கத்தை தடுக்க முடியவில்லை.இன்னும் ஒலி மற்றும் ஒளி பேழை வழியாக முஸ்லிம்கள் இருக்கும் இடமெல்லாம் ஒலித்து கொண்டே இருக்கிறது பாபாவின் குரல்.பாபாவின் முகத்தை கூட பார்க்காமல் அவரின் பேச்சுகளை கேட்டே சமுதாய சேவைக்கு வந்த இளைஞர்கள் பலர்.அவர்களில் ஒருவனாக பாபாவின் நினைவு நாளில் இந்த கட்டுரையை அவருக்கு சமர்பிக்கிறேன்.எல்லாம் வல்ல இறைவன் அவரின் செயல்களுக்கு நற்கூலி வழங்கி மறுமையில் ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயரிய சுவர்க்கத்தை அவருக்கு வழங்குவானாக.ஆமின்.

நன்றி:தமிழ் முஸ்லிம் தளம்.

மோடி ஆதரவு கருத்து: தேவ்பந்த் துணைவேந்தர் ராஜினாமா!

தேவ்பந்த்,ஜன.27:மோடிக்கு ஆதரவாகக் கருத்து கூறியதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து தேவ்பந்த தாருல் உலூம் மதரஸாவின் துணை வேந்தராகப் புதிததாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மெளலானா குலாம் முஹம்மது தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

உத்திரப் பிரதேச மாநிலம் தேவ்பந்தில் உள்ள தாருல் உலூம் என்ற மத்ரஸாவின் துணை வேந்தராக குஜராத்தைச் சேர்ந்த மெளலானா குலாம் முஹம்மது வஸ்தன்வி என்பவர் அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மோடியின் ஆட்சிக்காலத்தில் முஸ்லிம்கள் துன்புறுத்தப்படுவதில்லை; மாறாக மோடியின் வளர்ச்சித் திட்டங்களால் குஜராத் முஸ்லிம்கள் பலனடைகின்றனர் என மெளலானா குலாம் கூறியதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

இதனைத் தொடர்ந்து துணைவேந்தர் பதவியில் இருந்து மெளலானா குலாமை நீக்க வேண்டும் என்று தாருல் உலூம் மாணவர்கள் மற்றும் ஆசியரிகள் வலியுறுத்தியதைத் தொடர்ந்து, மெளலானா குலாம் தன்னுடைய பதவி விலகல் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தாருல் உலூமின் ஆலோசனைக் குழுதான் என்னைத் தேர்ந்தெடுத்தது. ஆலோசனைக் குழுவின் கூட்டம் பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து நான் பதவி விலகுவேன் என மெளலானா குலாம் செவ்வாய்க் கிழமையன்று கூறியதாக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

20 உறுப்பினர்களைக் கொண்ட தாருல் உலூமின் ஆலோசனைக் குழு கடந்த ஜனவரி மாதம் 10ஆம் தேதி கூடியபோது மெளலானா குலாமை துணை வேந்தராகத் தேர்ந்தெடுத்தது. இந்த ஆலோசனைக் குழுவில் தற்போது 17 பேர் மட்டுமே இருப்பதாகவும் அவர்களில் 14 பேர் மட்டுமே ஜனவரி 10ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டனர் என்றும் கூறப்படுகிறது.

மோடி குறித்து மெளலானா குலாம் கூறிய கருத்துகள் பிரச்சனை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, கோத்ரா கலவரத்திற்குப் பின் மோடிக்கு தான் நற்சான்றிதழ் வழங்கவில்லை என்று மெளலானா குலாம் மறுத்துள்ளார்.
twocircles,inneram

52 முஸ்லிம்களுக்கு குடியரசுத் தலைவர் போலீஸ் பதக்கம் - ராணுவத்தில் 12 பேருக்கு பதக்கம்

புதுடெல்லி,ஜன.27:சிறப்பான சேவைபுரிந்த காவல்துறை அதிகாரிகளுக்கு குடியரசு தினத்தையொட்டி ஆண்டுதோறும் குடியரசு தலைவர் பதக்கம் வழங்கப்படும்.

இந்த ஆண்டு குடியரசு தலைவர் பதக்கம் வழங்கப்பட்ட 755 போலீஸ் அதிகாரிகளில் முஸ்லிம்கள் 52 பேராவர்.

குடியரசு தலைவர் பதக்கம் 4 பிரிவுகளில் வழங்கப்படும்.
1.வீரத்தீரச் செயலுக்கான குடியரசுத் தலைவர் போலீஸ் பதக்கம்
2.வீரத்தீரச் செயலுக்கான போலீஸ் பதக்கம்
3.மேன்மையான சேவைக்கான குடியரசு தலைவர் போலீஸ் பதக்கம் 4.சிறப்புமிக்க சேவைக்கான போலீஸ் பதக்கம் ஆகியனவாகும்.

முதல் பிரிவில் முஸ்லிம் அதிகாரிகள் எவருக்கும் பதக்கம் இல்லை. இரண்டாவது பிரிவில் 18 பேரும், மூன்றாவது பிரிவில் 2 பேரும், நான்காவது பிரிவில் 32 பேரும் பதக்கத்தை பெறுகின்றனர்.

தமிழகத்தில் குடியரசு தலைவர் பதக்கம் பெற்றோர் பெயர் விபரம்:

எஸ்.எம்.முகமது இக்பால்(காவல்துறை துணைக் கண்காணிப்பாளர், லஞ்ச ஒழிப்பு பிரிவு, சென்னை).

எஸ்.நிஜாமுதீன் (காவல்துறைக் கண்காணிப்பாளர்-திருச்சி மாவட்டம்).

ப்.எம்.ஹுசேன் (காவல்துறைக் கண்காணிப்பாளர் - தமிழ்நாடு கமாண்டோ பள்ளி, சென்னை).

எஸ்.அப்துல்கனி (கமாண்டண்ட், தமிழ்நாடு சிறப்பு போலீஸ் 10-வது பட்டாலியன், உளுந்தூர்பேட்டை).

கே.காதர்கான் (தலைமைக் காவல் அதிகாரி, சிறப்பு அதிரடிப்படை- ஈரோடு).

ராணுவத்தில் வீரதீரச் செயல் மற்றும் சிறப்பான சேவை புரிந்தோர் 440 பேருக்கு வழங்கப்பட்ட குடியரசு தலைவர் பதக்கத்தில் 12 முஸ்லிம்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராணுவ சேவைக்காக வழங்கப்படும் 3-வது பெரிய பதக்கமான ஸவ்ரிய சக்ரா பதக்கம் பெற்றவர்களில் முஹம்மது ஷஃபியும் ஒருவராவார்.

செய்தி:twocircles.net

இந்திய முஸ்லிம்களின் அவல நிலையும் - அதற்கான தீர்வும்!!!

நன்றி : சகோ. Naseerudeen Mohammed


இந்தியநாடு சுதந்திரம் பெற்ற பின்பு இன்றுவரையுள்ள எந்த ஒரு அரசும் இந்திய முஸ்லிம்களுக்கு அவர்களுக்குரிய உரிமைகளை வழங்க எந்த ஒரு முயற்சியும் மேற்கொண்டதில்லை என்பதே உண்மை. இந்திய பாகிஸ்தான் பரிவினையின்போது முஹம்மது அலி ஜின்னா மாத்திரம் பிரிவினைக்கு ஆதரவு அளித்தபோது, மௌலானா அபுல்கலாம் ஆஸாத், ஜாஹிர் ஹுஸைன், பக்ருதீன் அலி அஹமது போன்ற முஸ்லிம் பெரும் புள்ளிகள் இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மக்களுடன் கைகோர்த்து கொண்டார்கள். தனிமனிதராக நின்ற முஹம்மது அலி ஜின்னா, தான் நினைத்ததைச் சாதித்துக் கொண்டார். ஆனால் இந்திய மக்களுடன் கைகோர்த்த மௌலானா அபுல்கலாம் ஆஸாத், ஜாஹிர் ஹுஸைன், பக்ருதீன் அலி அஹமது போன்ற முஸ்லிம் பெரும் புள்ளிகள் உள்ளடங்கிய இந்திய முஸ்லிம் சமுதாயம் சாதித்தது என்ன என்பதை இன்றைக்கும் நாம் கண்கூடாக கண்டு கொண்டிருக்கிறோம்.

இந்திய பாகிஸ்தான் பிரிவினையின்போது இந்தியாவில் உள்ள முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை 10 கோடியாக இருந்தது. முஹம்மது அலி ஜின்னாவின் பின்னால் சென்ற மூன்றுகோடி முஸ்லிம்கள் தங்களது அடிப்படை உரிமைகளை(குறிப்பாக தங்களது வணக்க வழிபாட்டு உரிமைகளைப்) பெற்றவர்களாக வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் பிரிவினையை எதிர்த்து அல்லது பரிவினைக்கு ஆதரவு அளிக்காமல் இந்தியாவிலேயே வாழ்ந்து வரும் எஞ்சியுள்ள முஸ்லிம்கள் மிரட்டப்படுவதோடு மட்டுமில்லாமல், மூன்றாம்தர குடிமக்களாகவும் நடத்தப்படுகிறார்கள். மதச்சார்பின்மை காற்றோடு பறக்கவிடப்பட்டது. சுதந்திரத்திற்கு பின் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் 9 கோடிபேரை மக்கள் தொகையாக கொண்டிருந்த தலித் இயக்கம் டாக்டர் அம்பேத்கார் என்ற தனி மனிதரின் தலைமையில் 150 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால் 7 கோடிபேரை மக்கள் தொகையாக் கொண்டிருந்த முஸ்லிம் இயக்கங்கள் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறாமல் தலைகுனிவைச் சந்தித்தது. முஸ்லிம்கள் மாத்திரம் ஒரே தலைமையின்கீழ் ஒரு தனிக்கட்சியில் நின்று தேர்தலைச் சந்தித்து இருந்தால் அநேகமான தொகுதிகளில் நாம் நிச்சயமாக வெற்றி பெற்றிருப்போம். ஆனால் மதச்சார்பற்ற மற்ற கட்சிகளுக்கு கொடி தூக்கியதன் விளைவு கட்சிகள் வெற்றிபெற்றதேத் தவிர, அத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்களிலும் ஒருவர் கூட முஸ்லிம் இல்லை என்பதே உண்மை நிலையாக இருந்தது.

இந்தியர்களுடன் தோளோடு தோள் நின்ற காஷ்மீரத்து சிங்கம் ஷேக்அப்துல்லா தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வடகோடியாம் காஷ்மீரில் கைது செய்யப்பட்டு தென்கோடியாம் தமிழகத்தில் உள்ள கோடைக்கானல் சிறையில் அடைக்கப்பட்டார். ஹைதராபாத் நிஜாம், ஆற்காடு நவாப் போன்றவர்கள் ராஜ பரம்பரையைத் துறந்து, இந்திய ராணுவத்திற்காக தங்களை அர்பணித்துக் கொண்டார்கள். முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டு, சீக்கியர்கள் மற்றும் கூர்க்கா போன்றவர்களுக்கு மாத்திரம் ராணுவத்தில் தனி மரியாதைச் செலுத்தப்பட்டது. அவர்களுக்கென்று ராணுவத்தில் தனி பிரிவுகளே உருவாக்கப்பட்டன. கேரள முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என்று முத்திரைக் குத்தப்பட்டு ஓரங்கட்டப்பட்டனர். மராத்திய மாநில முஸ்லிம்கள் குடிசைகளில் தஞ்சம் புகுந்தனர். உத்திரபிரதேசம், பீகார் மற்றும் குஜராத் மாநில முஸ்லிம்கள் அனைவரும் மதக்கலவரங்களால் மிரட்டப்பட்டு, முடமாக்கப்பட்டனர். இன்னும் இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் தலைதூக்க முடியாத அளவுக்கு மிரட்டப்பட்ட நிலையிலேயே தங்களது வாழ்வைத் தொடர்கின்றனர். ஆனால் இதற்கெல்லாம் மாற்றமாக கேரள மாநில முஸ்லிம்களின் நிலை இருக்கின்றது. இதற்கு காரணம் கேரள மாநிலத்தில் முஸ்லிம்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவதால், தேர்தல் நேரங்களில் மற்ற அரசியல் கட்சிகள் முஸ்லிம்களைத் தேடி ஓடிவருகின்றன.

1984 ஆம் ஆண்டு பாரதப்பிரதமர் இந்திராகாந்தி படுகொலைக்குப் பிறகு டெல்லியில் நடந்த கலவரத்தில் ஏரத்தாள 3000 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். வெறும் 2கோடி மட்டுமே மக்கள் தொகையினைக் கொண்ட சீக்கியர்களின் அரசியில் பிரிவான அகாலிதளம் நீதிமன்றத்தில் போராடி கலவரத்தில் கொல்லப்பட்ட அனைவருக்கும் அரசு வழங்கிய நிவாரணத் தொகையைப் பெற்றுக் கொடுத்ததோடு மட்டுமின்றி முன்னாள் மத்திய அமைச்சரான பி. சி. சுக்லா மற்றும் அவரது ஆதரவாளர்களையும் சிறையில் கம்பி எண்ண வைத்தது. பீவண்டி, மீரட், பகல்பூர், மும்பை, லக்னோ, டெல்லி, குஜராத், கோயம்புத்தூர் உட்பட இந்தியாவின் பல பகுதிகளில் திட்டமிட்டு நடத்தப்பட்ட கலவரங்களில் ஆயிரக்கணக்காக முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். முஸ்லிம்களின் சொத்துக்கள் சூரையாடப்பட்டன. அரசு பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்காதது மட்டுமில்லாமல், மேற்கூறப்பட்ட இடங்களில் நடைபெற்ற கலவரங்களுக்கு காரணமானவர்களில் ஒருவர் கூட இதுவரை தண்டிக்கப்படவேயில்லை என்பதே உண்மை நிலை.

மகாத்மா காந்தி பிராமணர்களால் கொல்லப்பட்டார்.

இந்திரா காந்தி சீக்கியர்களால் கொல்லப்பட்டார்.

ராஜீவ் காந்தி இலங்கையைச் சார்ந்த தமிழ்பேசும் இந்துக்களால் கொல்லப்பட்டார்.

அவர்களெல்லாம் இன்றைக்கு தேசாபிமானிகளாக கருதப்படுகிறார்கள். ஆனால் எந்த பாவமும் அறியாத எந்த குற்றமும் செய்யாத, இந்திய அரசியல் பிரிவுச் சட்டம் நமக்கு வழங்கியிருக்கும் அடிப்படை உரிமை கூட மறுக்கப்பட்டவர்களாகிய நாம் தேசிய எதிரிகளாக முத்திரைக் குத்தப்பட்டுள்ளோம். இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள் நிலைமைகளை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு, பாகிஸ்தானோடு எந்;த சம்பந்தமும் இல்லாத ஒன்றுமறியாத அப்பாவி முஸ்லிம்களை தண்டிக்கின்றன. இஸ்லாத்தின் பெயரால் பாகிஸ்தான் செய்யும் செயல்பாட்டுக்கு இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் எப்படி பொறுப்பாவார்கள்?

இந்திய முஸ்லிம்களின் இன்றைய நிலை

இன்றைய இந்திய முஸ்லிம்கள் பிரித்தாளும் சூழ்ச்சியின் காரணமாக முற்றிலும் வலுவிழந்தவர்களாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். முஸ்லிம்களுக்கென இருந்த அடிப்படை உரிமைகளைக் கூட கேட்டுப் பெறத் தகுதியில்லாத அளவுக்கு வலுவிழந்து போவதற்கு முன்னால், முஸ்லிம்கள் அனைவரும் ஒரு அணியில் கீழ் ஒன்றுபடுவது இன்றைய சூழ்நிலையில் மிக மிக அவசியம். மிகவும் குறைந்த அளவிலேயே இருக்கும் மதவாத கட்சிகளின் வளர்ச்சியை முறியடிக்க வேண்டுமெனில், இந்திய முஸ்லிம்கள் அனைவரும் ஒரு அணியின் கீழ் ஒன்றுபடுவது அவசியம். ஆனால் நாம் ஒன்றுபடுவதற்கு பதிலாக, சிறு சிறு கூட்டங்களாக பிரிந்துபோய், சிதறுண்டு கிடக்கும் மதவாத கட்சிகள் ஒன்றுபட்டு செயல்பட உதவிக்கொண்டிருக்கிறோம். இன்னும் காலம் கடந்து செல்லும் முன்பு இந்தியாவின் இன்றைய சூழ்நிலையிலாவது முஸ்லிம்கள் அனைவரும் ஓரணியின் கீழ் ஒன்று படுவோம்.

சிறுபான்மையினமான முஸ்லிம்களின் வாக்குகளை பெறவேண்டும் என்பதற்காக இந்தியாவில் உள்ள அனைத்து அரசியில் கட்சிகளும் முஸ்லிம்களுக்கான நலன் தரும் திட்டங்களை தேர்தல் கால வாக்குறுதிகளாக வழங்குகின்றன. ஆனால் தேர்தலில் முஸ்லிம்கள் அளித்த வாக்குகள் மூலம் வெற்றி பெற்ற பின்பு, முஸ்லிம்களின் முதுகில் குத்தும் வேலையே தொடர்ந்து செய்து வருகின்றன இந்திய அரசியில் கட்சிகள். தேர்தலுக்கு முன்பு முஸ்லிம்களின் நலன் காக்கும் ஏராளமான வாக்குறுதிகளை வழங்கியதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், சட்டமன்றமோ அல்லது நாடாளுமன்றமோ சென்ற பிறகு தங்களது சொந்த நலனுக்கு பயன்தரும் திட்டங்களுக்கு மாத்திரமே தலைசாய்க்கிறார்கள். இவைகளையெல்லாம் சிந்தித்து கொண்டிருப்பதைவிட நமக்கென்று ஒரு தனி அமைப்பை உருவாக்கி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதே சாலச் சிறந்தது.

இன்றைக்கு இந்தியாவில் இருக்கும் இஸ்லாமிய பெயர் தாங்கிய அரசியல் அமைப்புகள் பிற அரசியில் கட்சிகளிடம் கெஞ்சிக் கூத்தாடி முஸ்லிம் வாக்கு வங்கிகள் அதிகமாக இருக்கின்ற ஒன்றிரண்டு தொகுதிகளை பெற்றுக்கொள்கின்றன. தொகுதிகளை ஒதுக்கும் அரசியல் கட்சிகளும் முஸ்லிம்களுக்கு ஏதோ ஒரு நல்ல காரியம் செய்துவிட்டதைப் போன்றதொரு தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. உண்மையில் முஸ்லிம்களுக்கு தொகுதிகளை வழங்கும் இக்கட்சிகள் செய்யும் இச்செயல் முஸ்லிம்களுக்கு செய்யும் நன்மையான காரியமா என்றால் இல்லை. முஸ்லிம்கள் நிறுத்தப்பட்டால் மாத்திரமே இத்தொகுதிகளில் வெற்றிபெற முடியும் என்கிற காரணத்தால் வழங்கப்பட்டதேத் தவிர, முஸ்லிம்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கம் எதுவும் இல்லை.

எந்த அரசியில் கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும் பரவாயில்லை அவர் முஸ்லிம் என்கிற காரணத்தால் மாத்திரம் ஒரு முஸ்லிம் வேட்பாளருக்கு நம் வாக்குகளை அளித்து வெற்றிபெறச் செய்வோம் எனில், சட்டமன்றமோ, நாடாளுமன்றமோ செல்லும் இதுபோன்ற முஸ்லிம் உறுப்பினர்கள் முஸ்லிம்களுக்கு ஒரு கஷ்டமான சூழ்நிலை என்றால் தாம் சார்ந்திருக்கும் கட்சியிலிருந்து அல்லது பதவியிலிருந்து வெளியேற்றப்படுவோமோ என்கிற பயத்தின் காரணத்தால் முஸ்லிம்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பமுடியாத சூழ்நிலை. இதுபோன்ற மக்கள் பிரதிநிதிகளை சட்டசபைக்கோ அல்லது நாடாளுமன்றத்திற்கோ தேர்ந்தெடுத்து அனுப்புவதால் உள்ள பயன்தான் என்ன? இதுபோன்ற முஸ்லிம் அரசியில்வாதிகள் அவைகளில் பேச அனுமதிக்காத, தம்மை மதிக்காத அரசியல் கட்சிகளில் ஏன் இருக்கிறார்கள்? இதுபோன்ற பிரதிநிதிகள் இருப்பதும் இல்லாமலிருப்பதும் ஒன்றே. அதில் எந்த வித்தியாசமும் இல்லை.

முஸ்லிம்களின் வாக்கு வங்கிகள் அதிகமாக இருக்கின்ற தொகுதிகளில், எல்லா அரசியில் கட்சிகளும் முஸ்லிம் பெயர்தாங்கிகளை வேட்பாளர்களாக நிறுத்தும். இவ்வாறு முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்துவதால் முஸ்லிம்களுக்கு ஏதேனும் பயன் உண்டா என்றால் இல்லை. முஸ்லிம் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டால் மாத்திரமே இத்தொகுதிகளில் வெற்றிபெற முடியும் என்பதை அறிந்திருக்கும் அவர்கள் தங்களது சுயநலம் கருதி இச்செயலை செய்கிறார்களேத் தவிர, வேறில்லை. முஸ்லிம்கள் வேட்பாளராக நிறுத்தப்பட்டால் நிச்சயம் வெற்றிபெற முடியும் என கண்கூடாகத்தெரியும் இது போன்ற தொகுதிகளில் முஸ்லிம்கள் அனவைரும் ஒன்றுகூடி ஒரு பொது வேட்பாளரை ஏன் நிறுத்தக்கூடாது?

எனதருமை முஸ்லிம்களே! மத்திய மற்றும் மாநில அரசுகள் இந்திய முஸ்லிம்களை அடக்கி ஒடுக்கி ஓரங்கட்டியதேத் தவிர, வேறு சாதித்தது என்ன? முஸ்லிம்கள் அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, ஓரங்கட்டப்பட்டாலும், சில முஸ்லிம் அரசியல்வாதிகள் இந்திய அரசியல் கட்சிகளுக்கு ஆதரவளித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஆதரவு யாருக்காக? எதற்காக? என்பது இவ்வாறு ஆதரவு அளிப்பவர்களுக்கே வெளிச்சம். திறந்த மனதுடன், சார்பற்ற நிலையில் உங்கள் அறிவாற்றலைப் பயன்படுத்தி இந்திய முஸ்லிம்களின் இன்றைய நிலை குறித்து சற்றே சிந்தனை செய்து பாருங்கள். இந்திய முஸ்லிம்களின் பிரச்னைகளுக்கு உண்டான தீர்வு தெளிவாகக் தெரியவரும்.

1. இதற்கான தீர்வுதான் என்ன?

2. இந்த தவறான அச்சுறுத்தலுக்கான தீர்வுதான் என்ன?

3. நாம் இழந்த உரிமைகளை மீண்டும் திரும்பப் பெறுவது எப்படி?

இந்திய மக்கள் தொகையில் 30கோடி பேர் முஸ்லிம்களாக இருந்தாலும், நாடாளுமன்றத்தில் முஸ்லிம் பிரதிநிதிகளின் எண்ணிக்கை வெறும் 10க்கு மேல் ஒருபோதும் இருந்ததில்லையே. ஏன்?

இந்திய முஸ்லிம்கள் அனைவரும் ஒரு கட்சிக்கு மாத்திரம் வாக்களிப்போம் எனில், நிச்சயமாக இது ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். ஆனால் நாம் நமக்குள்ளேயே பல பிரிவுகளாக பிரிந்து, இந்திய அரசியல் கட்சிகளில் பல கட்சிகளுக்கும் வாக்களிப்பதால் நம்முடைய வாக்கு வங்கி சிதறடிக்கப்பட்டு, நமக்குள்ளேயே வலுவிழந்து போகிறோம். இதற்கு உதாரணமாக சீக்கியர்களை (ஒருசில தனி நபர்களைத் தவிர) எடுத்துக் கொள்வோம். இந்திய மக்கள் தொகையில் வெறும் 2 சதவீதம் மாத்திரம் இருக்கும் சீக்கியர்கள், இந்திய அரசியலில் கோலோச்ச முடியும் என்றால் இந்திய மக்கள் தொகையில் 25 சதவீதம் இருக்கும் நாம் ஏன் மற்றவர்களிடம் மண்டியிட வேண்டும்? இது ஏனென்றால் நாம் நமக்குள்ளேயே ஒற்றமையின்றி பல பிரிவுகளாக பிரிந்து, தலா 1 சதவீதம் வீதம் இந்திய அரசியல் கட்சிகள் 25க்கும் வாக்களிப்பதால் இந்திய மக்கள் தொகையில் 25 சதவிகிதம் உள்ள நம்முடைய பலம் 1 சதவிகிதமாக வலுவிழந்து விடுகிறது. ஏதேனும் ஒரு கட்சி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வரும்போது, நாடாளுமன்றத்தில் நம்முடைய பலம் வெறும் 1 சதவிகிதமாகவே பிரதிபலிக்கிறது. இந்திய மக்கள்தொகையில் 25 சதவீதம் இருக்கும் நம்முடைய பலம் ஆட்சி மன்றம் என்று வரும்போது வெறும் 1 சதவிகிதம் மட்டும்தான் பிரதிபலிக்கப்படுகிறது என்பதை எண்ணி நாமெல்லாம் வெட்கித் தலைகுனிய வேண்டும். இந்நிலையைக் காணும் முழு உலகமும் நம்மைப் பார்த்து நகைப்பது நம் காதுகளில் ரீங்காரமிடுகிறது. மதச்சார்பற்ற இந்திய அரசியல் கட்சிகளின் பிரித்தாளும் சூட்சிக்கு முஸ்லிம்களாகிய நாம் பலிகிடாவாக மாறிக் கொண்டிருக்கிறோம் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்.

ஆந்திராவில் உள்ள தெலுங்கு தேசம், தமிழகத்தில் உள்ள திமுக, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் அகாலிதளம் உள்ளிட்ட பல மாநில கட்சிகள் தங்களது ஆதரவு இன்றி மத்தியில் எந்த ஒரு ஆட்சியும் அமைய முடியாது என்பதை தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கின்றன. காங்கிரஸும், பிஜேபியும், மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டுமெனில் மேற்கூறப்பட்ட மாநில கட்சிகளின் காலடியில் வந்து விழுந்து கிடக்கின்றன. தெலுங்கு தேசம், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் அகாலிதளம் உள்ளிட்ட பல மாநில கட்சிகள் ஆட்சி அமைக்க ஆதரவு கொடுக்கும் முன்னால் தங்களுக்குத் தேவையானவைகள் கொடுக்கப்பட வேண்டும், இல்லையெனில் ஆதரவு திரும்பப் பெறப்படும் என்பதை நிபந்தனையாக வைத்து தாங்கள் நினைப்பதைச் சாதித்துக் கொள்கின்றன. இதற்கு காரணம் நாடாளுமன்றத்தில் அவர்களுக்கு இருக்கும் பிரதிநிதிகளின் எண்ணிக்கை. இதே நிலையை நாம் மேற்கொள்ள முடியுமா? நிச்சயமாக முடியும். நமக்கென்று ஒரு தனி அமைப்பு கண்டு, அந்த அமைப்பின் மூலமாக மக்கள் பிரதிநிதிகளை நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுத்து அனுப்பினால் நாமும் நம்முடைய முக்கிய பிரச்னைகளுக்கான தீர்;வுகளை பெற்றுக் கொள்ள முடியும். குறிப்பாக பாதுகாப்பு, சமநீதி, சட்ட உரிமை, இடஒதுக்கீடு, கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கான நிவாரண உதவி போன்ற பல பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும்.

தமிழகத்தில் கோவை குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பிறகு நடத்தப்பட்ட வகுப்பு கலவரத்தில் எண்ணற்ற முஸ்லிம்கள் இந்து தீவரவாதிகளால் கொல்லப்பட்டனர். அக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் எவருக்கும் இதுவரை அரசுத் தரப்பிலிருந்து எந்த ஒரு உதவித் தொகையும் வழங்கப்படவில்லை. ஆனால் அதற்கு முன்னால் அதே கோவை மாநகரில் நடைபெற்ற வகுப்புக் கலவரத்தில் பாதிக்கப்பட்ட இந்துக்கள் ஒவ்வொருவருக்கும் தலா 1 இலட்சம் வீதம் அரசுத் தரப்பிலிருந்து உதவித் தொகை வழங்கப்பட்டது. ஏன் இந்த பாரபட்சம்? நம்முடைய உரிமையை சட்டசபையில் எடுத்துரைக்க சரியான பிரதிநிதித்துவம் நம்மிடையே இல்லாததே காரணம். ஆனால் அதேசமயம் இந்து மக்களின் பிரதிநிதிகள் தங்களது கோரிக்கையை சட்டசபையில் எடுத்துரைத்தனர். தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லையென்றால், அரசுக்கு அளித்து வரும் ஆதரவு விலக்கிக் கொள்ளப்படும் என்ற எச்சரிக்கை வேறு. ஆட்சி கவிந்துவிடும் என்று அச்சம் கொண்ட அரசு, இந்துக்கள் ஒவ்வொருவருக்கும் தலா 1 இலட்சம் என உதவித் தொகை வழங்கியது.

இந்திய முஸ்லிம்களுக்கென தனியாக ஒரு அரசியல் அமைப்பு காண்பது இவ்வேளையில் மிகவும் அவசியமாகிறது. நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் ஆதரவு இல்லையென்றால், மத்தியிலும், மாநிலங்களிலும் ஆட்சி அமைக்க முடியாது என்கிற சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும். இந்நிலை உருவாக்கப்பட முற்றிலும் அவசியம் முஸ்லிம்களிடையே ஒற்றுமை. சமுதாய நலனை கருத்தில் கொண்டு நாம் விடுக்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதியளிக்கும் கட்சிக்கு மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி அமைக்க நம்முடைய ஆதரவை வழங்கலாம். நமக்கென்று ஒரு தனி அரசியல் அமைப்பு இருந்திருந்தால், இன்றைக்கு முஸ்லிம்களாகிய நாம் அனுபவிக்கும்; இந்த சித்திவதைகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது. நாட்டை ஆள வேண்டுமெனில் முஸ்லிம்களின் ஆதரவு வேண்டும் என்ற நோக்கத்திற்காவது, ஆளும் கட்சிகள் நம்மை சிறப்பாக நடத்தியிருக்கும்.

இழைக்கப்படும் கொடுமைகளையும், நடத்தப்படும் சித்திரவதைகளையும் தாங்கிக் கொள்ள வேண்டிய அவசியம் என்ன? இதற்கான சரியான தீர்வு இல்லையா? அல்லது நேரான வழிகாட்ட சரியான தலைமை இல்லையா? மத்திய மற்றும் மாநில அரசை எதிர்த்து நடத்தப்படும் கண்டன ஊர்வலங்களும், நாம் நடத்தும் கோரிக்கைப் பேரணிகளும் - கண்டன ஊர்வலங்களும் செவிடன் காதில் ஊதிய சங்காக மாறும். எப்போதும்போல் முஸ்லிம்கள் அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, ஓரங்கட்டப்படுவர் என்பது நிச்சயம்.

பிரச்னைகளுக்கான தீர்வும் அடுத்த கட்ட நடவடிக்கையும்

நாம், நம்முடைய உரிமைகளைப் பெற வேண்டும். அதற்குரிய சரியான வழிமுறை என்ன? இக்கேள்விக்கான விடையை கண்டறிய பல நாட்களாக சிந்தித்து, ஆய்வு செய்து, அறிந்த விதத்தில் கிடைத்த தீர்வுகள் இரண்டுதான்.

1. அறிவு

2. ஆயுதம்

ஆயுதம் ஏந்தி போராடி வெற்றி பெற்ற வரலாறு உலகில் ஒரு சில நாடுகளில் சாத்தியப்பட்டிருக்கலாம். ஆனால் ஆயுதம் ஏந்தியவர்கள் ஆயுதத்தாலேயே அழிவார்கள் என்பது நிச்சயம். இன்றைய சூழ்நிலையில் ஆயுதம் ஏந்தி போராடி கிடைக்க வேண்டிய உரிமையைப் பெற்றுக் கொள்வது என்பது சாத்தியக்கூறானது அல்ல. ஆசியாவிலேயே அதிநவீன ஆயுதங்களைக் கொண்டிருந்த சீக்கியர்கள், ஆயுதப் போராட்டத்தில் தோல்வியடைந்ததை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். இன்றைக்கு அவர்கள் புத்திசாலித்தனமாக அறிவு என்னும் ஆயுதம் ஏந்தியுள்ளார்கள். பிளவுபட்டிருந்த சீக்கியர்கள் அனைவரும் ஒன்றிணைந்தார்கள். தமக்கென ஒரு அரசியல் இயக்கம் கண்டார்கள். தமக்காக சட்டசபையிலும், நாடாளு மன்றத்திலும் வாதாடக்கூடிய பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்தார்கள். எல்லா பிரதான அரசியல் கட்சிகளையும் தங்கள் பின்னால் ஓடிவரச் செய்தார்கள். ஆயுதங்களால் வெல்ல முடியாத காரியங்களை உயர் மதிநுட்பத்தால் வெற்றி கொள்கிறார்கள்.

மஹாராஷ்டிர மாநிலத்தில் மதவாதம் பேசித் திரிந்த பால் தாக்கரே போன்றவர்கள் பல பேர் கொல்லப்பட காரணமாக இருந்தாலும், மத்திய மாநில அரசுகள் பால் தாக்கரே மீது கைவைக்க தயங்குகின்றன. காரணம் பால் தாக்கரே போன்றோர் அறிவு என்றும் ஆயுதம் ஏந்தி மராத்திய மண்ணின் மைந்தர்களை ஒன்றிணைத்து, பல சட்டசபை மற்றும் நாடாளுமன்ற பிரதிநிதிகளைப் பெற்றுக் கொண்டு, கோரிக்கைகள் மூலம் இவ்வுலகில் அவர்களுக்குத் தேவையானதை நிறைவேற்றிக் கொள்கின்றனர்.

இந்திய முஸ்லிம்கள் அனவைரும் ஒரே தலைமையின் கீழ் ஒன்றிணைவது. நமக்கென ஒரு தனி அரசியல் அமைப்பு காண்பது. கண்ட அரசியல் அமைப்பின் மூலம் தேர்தலில் போட்டியிட்டு நமக்கென நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றங்களுக்கும் என பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்து அனுப்பி வைப்பது. இறைவனின் நாட்டத்தில் இந்திய முஸ்லிம்களின் முயற்சியில் மேற்குறிப்பிட்ட செயல்பாடுகள் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டால் இந்திய முஸ்லிம்களுக்கு விடிவுகாலம் நிச்சயம்.

இந்தியாவில் முஸ்லிம்களின் பலம்

மாநிலத்திற்கு 3 நாடாளுமன்ற உறுப்பினர் என்று கணக்கிட்டால் கூட இந்தியாவில் உள்ள 30 மாநிலங்களில் 90 நாடாளுமன்ற உறுப்பினர்களை முஸ்லிம்களின் பிரதிநிதிகளாக அனுப்பி வைக்க முடியும். இது பற்றி ஆழ்ந்து சிந்தித்து தலைமையேற்று நடைமுறைப்படுத்தி நடத்திச் செல்ல யார் தயாராக இருக்கிறார்கள்?

இந்திய முஸ்லிம்களுக்கு தமிழக முஸ்லிம்கள் வழிகாட்டட்டும்

இந்திய முஸ்லிம்களை ஒன்றிணைத்து வழிநடத்திச் செல்ல முன்னுதாரணமாக தமிழகம் வழிகாட்டட்டும். இந்தியாவிலேயே, ஏன் உலகத்திலேயே இல்லாத வகையில் தமிழகத்தில் மட்டும்தான் முஸ்லிம்களிடையே எண்ணற்ற பிரிவுகளும், தேவையில்லா அமைப்புகளும் உள்ளன. இதன் காரணத்தால் முஸ்லிம்களின் ஓட்டு வங்கி உடைந்து, வலுவிழந்து நிற்கிறது. இன்ஷா அல்லாஹ் இந்த இஸ்லாமிய சமுதாயத்தின் நலன் நாடும் அனைவரும் ஒன்றிணைந்து தமிழகத்தின் இஸ்லாமியர்கள் அனைவரையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வருவது காலத்தின் கட்டாயமும் அவசியமுமாகும்.

தமிழக முஸ்லிம்களின் பலம்

தமிழகத்தின் 1லட்சத்து 20 ஆயிரம் முஸ்லிம் வாக்குகளை கொண்ட நன்னிலம் சட்டமன்றத் தொகுதி தவிர, ஏரத்தாள 60க்கும் மேற்பட்டத் தொகுதிகள் 80ஆயிரம் முஸ்லிம் வாக்காளர்களை கொண்டவை. நன்னிலம் சட்டமன்றத் தொகுதியில் 1லட்சத்து 20 ஆயிரம் முஸ்லிம் வாக்காளர்கள் இருந்தாலும் இன்றுவரை அந்த தொகுதியில் எந்த ஒரு முஸ்லிம் வேட்பாளரோ அல்லது முஸ்லிம் அரசியல் கட்சியோ தமிழகத்திற்காக இதுவரை நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடவேயில்லை என்பது ஆச்சரியகரமான, அதே சமயம் வருத்தத்திற்குரிய செய்தியாகும். தமிழகத்தில் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்ட தொகுதிகள் முப்பதுக்கும் அதிகமாக இருக்கின்றது. அவைகளில் சிலவற்றை இங்கே காணலாம்:

1. நன்னிலம்

2. கடலாடி

3. கேயம்புத்தூர் மேற்கு

4. மதுரை மத்தி

5. திருச்சி

6. சேலம்

7. அரவக்குறிச்சி

8. குடியாத்தம்

9. ராணிப்பேட்டை

10. ஆற்காடு

11. சென்னை துரைமுகம்

12. சேப்பாக்கம்

13. ஆயிரம் விளக்கு

14. திருவல்லிக்கேணி

15. எக்மோர்

16. சென்னை பூங்காநகர்

17. ராயபுரம்

18. திண்டுக்கல்

19. நத்தம்

20. பெரியகுளம்

21. பாளையங்கோட்டை

22. திருச்செந்தூர்.

இதுதவிர, தமிழகத்தில் 30 சட்டமன்றத் தொகுதிகள் என்பதாயிரத்திற்கும் அதிகமான முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்டவை. 23 சட்டமன்றத் தொகுதிகள் அறுபதாயிரத்திற்கும் அதிகமான முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்டவை. தமிழக முஸ்லிம்கள் அனவைரும் ஒரே குடையின் கீழ் ஒன்றினைந்து நமக்கு நாமே உருவாக்கும் அரசியல் அமைப்புக்கு வாக்களிப்போம் எனில் தமிழகத்தில் மாத்திரம் 45-55 சட்டமன்றத் தொகுதிகளிலும், 4-6 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் நமக்கு வெற்றி நிச்சயம் என்பதை உறுதியாகக் கூறமுடியும். அனைத்து அரசியல் கட்சிகளையும் நம் காலடியில் விழ வைப்பதுடன், தமிழக அரசியலைப் பொறுத்தவரை நாம் வகுத்ததுதான் சட்டம் என்கிற நிலையையும் உருவாக்க முடியும்.

தமிழகத்தின் 6 மாநகராட்சிகளில் முஸ்லிம்களே மேயர்கள் என்பதையும் உறுதியாகக் கொள்ளலாம். சென்னையைத் தவிர தமிழத்தில் மற்றுமுள்ள மாநகராட்சிகளில் ஒன்றரை இலட்சம் வாக்குகள் பெறுபவரே மேயர். மதுரை, திருச்சி மற்றும் கோவை மாநகராட்சிகள் 3 இலட்சம் முஸ்லிம் வாக்களர்களைக் கொண்டவை. சேலம் மற்றும் நெல்லை மாநகாராட்சிகள் இரண்டரை லட்சம் முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்டவை.

சட்டசபை தொகுதிகளில் உள்ள முஸ்லிம் வாக்காளர்கள் ஒருங்கிணைந்து தமது வாக்குகளையும் முஸ்லிம் வேட்பாளர்களுக்கே அளிப்பார்கள் எனில், தமிழக சட்சடசபையில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் முஸ்லிம்களே என்கிற நிலை ஏற்படும். முஸ்லிம்களின் சம்மதம் இல்லாமல் எந்த ஒரு சட்டமும் நிறைவேற்றப்பட முடியாது என்கிற நிலையை தமிழக சட்டசபையிலும் உருவாக்கமுடியும். தமிழகத்தில் மட்டுமில்லாது, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மஹாராஷ்டிரா என இந்தியாவின் பெரும்பான்மையான மாநிலங்களில் உள்ள சட்டசபைகளிலும் இந்நிலையே உருவாகும். இதே நிலை தொடருமெனில் நாடாளுமன்றத்திலும் முஸ்லிம் உறுப்பினர்களின் எண்ணிக்கை பெரும்பான்மை நிலைக்கு உயரும்.

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் 400 முதல் 800 பள்ளிவாயில்களை ஒன்றிணைப்பது மிகவும் எளிதான காரியம். தமிழகத்தில் உள்ள 8000 பள்ளிவாயில்களைச் சார்ந்த 1ஒன்றரை கோடி முஸ்லிம்களும் ஒரு பொது நலனுக்காக ஒன்றிணைவார்கள் எனில், நாம் நினைக்கும் எதையும் சாதிப்பது எளிது என்பதை முஸ்லிம்கள் அனைவரும் உணர வேண்டும். இது நேர்த்தியான, அதேசமயம் யாருக்கும் எந்தவித ஆபத்தும் இல்லாத அமைதியான முடிவு என்பதையும் முஸ்லிம்கள் அனைவரும் உணர வேண்டும். தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் இஸ்லாமியர்கள் அரசியல் செல்வாக்கு மற்றும் ஆட்சி அதிகாரம் பெற வேண்டும் என்பதற்கு இதைத்தவிர ஒரு சரியான தீர்வு இல்லையென்றே சொல்ல வேண்டும். அரசியல் செல்வாக்கு மற்றும் ஆட்சி அதிகாரம் இன்றி இந்த பூமியில் நாம் எதையுமே சாதிக்க முடியாது என்பது உறுதி.

இதுபோன்ற பிற அரசியல் கட்சிகளுக்காக கொடி தூக்கி அவர்களை வெற்றிபெற செய்ய வேண்டுமா? அவர்கள் வெற்றி பெற்று ஆட்சிபீடம் ஏறிய பின்பு நம்முடைய அடிப்படை உரிமைகளுக்காக அவர்களிடம் கையேந்தி நிற்க வேண்டிய நிலை தேவைதானா? தேர்தல் காலங்களில் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு முஸ்லிம்கள் வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறோமே. ஏன்? முஸ்லிம்கள் முஸ்லிம் வேட்பாளருக்கே வாக்களிக்கட்டும். முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றிபெற்று வந்த பின்புள்ள நிலைமையை ஆய்ந்தறிந்து, முஸ்லிம்களுக்கு நல்லது செய்யக்கூடியவர்களுக்கு நம்முடைய ஆதரவை வழங்கலாம். மானம் மற்றும் சுயமரியாதை ஈமானின் ஒரு பகுதி என்பதை முஸ்லிம்கள் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.

இக்கட்டுரையை மீண்டும் மீண்டும் படியுங்கள். முஸ்லிம்களுக்கு நன்மை செய்யாத எந்த ஒரு அரசியல் கட்சியையும் நம்பாதீர்கள். முஸ்லிம்களே! அனைவரும் ஒரே குடையின் கீழ் ஒன்றிணைவோம். நமது ஒற்றுமையின் மூலம் நாம் விரும்பியவைகளை உடனடியாகப் பெற முடியும். இந்த முடிவை சிந்தித்து செயல்படுத்துவது முஸ்லிம்களாகிய நம்மீது கடமையாக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களாகிய நாம் அனைவரும் ஒன்றிணைவோம். நம் அன்றாட வாழ்க்கை எளிதாக அமையும். நாம் நமது அடிப்படை உரிமையான இறைவழிபாட்டு உரிமைகளை தங்கு தடையின்றி தொடரலாம். நம் வருங்கால தலைமுறையும் பாதுகாப்பான வாழ்வைத் தொடரும்.

தேர்தலில் நாம் வாக்களிக்காமல் புறக்கணிப்போம் எனில் நஷ்டம் நமக்குத்தான். ஒவ்வொரு வாக்கும் விலைமதிப்பற்றது. நாம் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் ஏராளமான மாற்றங்களை கொண்டுவரும். அரசை எதிர்க்கிறோம் என்ற பெயரில் நம்மில் சிலர் வாக்களிக்காமல் தேர்தலைப் புறக்கணிக்கிறார்கள். அதனால் ஏற்படும் நஷ்டம் நமக்கே! மற்ற அரசியல் கட்சிகள் நம்மை எள்ளி நகையாடுவதுடன், அதிக பயனடைவது அவர்களே என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனதருமை முஸ்லிம் சொந்தங்களே! நமக்கென ஒரு தனி அரசியல் அமைப்பு காண்பதும், அந்த அமைப்பின் மூலம் நமக்காக பாடுபடக்கூடிய முஸ்லிம் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்து அனுப்புவதுமே இனி நம்முடைய தலையாய பணியாக இருக்க வேண்டும்.

நாளைய உலகம் நம் கையில் என்பதை தெளிவாக தெரிந்த நாம், மரணித்த பிணம் போல் நடமாட வேண்டுமா?

நாம் நம்முடைய குறிக்கோளில் தெளிவாக இருப்போம். அனைத்து அரசியல் கட்சிகளையும் நம் பின்னால் கைகட்டி நிற்க வைப்போம். அமைதியாக நாம் நம்முடைய குறிக்கோளை எட்டுவோம். நமது உறுதிமொழி நம் வருங்கால தலைமுறையின் வாழ்வுரிமைக்கு அடிப்படையாக அமையட்டும். எந்த காரணம் கொண்டும் முஸ்லிம்களின் ஒற்றுமை என்னும் அடிப்படை குறிக்கோளை விட்டு நம் கவனம் சிதறாமல் இருக்கட்டும். எல்லாம் வல்ல அல்லாஹ் இதற்கு அருள் புரியட்டும்!