ம.ம.க. வேட்பாளர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ம.ம.க. வேட்பாளர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 4 மே, 2009

த.மு.மு.க., தலைவர் ஜவாஹிருல்லாஹ் இராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம்.

இராமநாதபுரத்தில் தமுமுக தலைவர் பிரச்சாரம்

ராமநாதபுரம் தொகுதி மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் சலிமுல்லாகானை ஆதரித்து த.மு.மு.க தலைவர் ஜவாஹிருல்லா கீழக் கரை முஸ்லிம் பஜாரில் நடந்த கூட்டத்தில் பேசுகையில்," குஜராத் கலவரத்துக்கு எதிர்ப்பு கூட தெரிவிக்காதவர் கருணாநிதி. தி.மு.க., தருவதாக இருந்த ஒரு சீட்டுக்கு ஆசை பட்டிருந்தால் தி.மு.க., வுக்கு நாங்கள் அடிமையாகிருப்போம். சென்னையில் தி.மு.க., வேட்பாளர்கள் ஜெயிப்பதே முஸ்லிம்கள் ஓட்டுகளால் தான்.அ.தி.மு.க., மக்களை ஏமாற்றும் கட்சி'என்றார்.

மேலும் அவர் ராமநாதபுரம் தொகுதியில் திருச்சுழி, காரியாபட்டி, பூலாங்கல், பெருநாழி, சாயல்குடி, ஒப்பிலான், மாரியூர், வாலிநோக்கம், சிக்கல், ஏர்வாடி பகுதியில் பிரசாரம் செய்தார். மாவட்ட பொறுப்பாளர் சல்மான், ஒன்றிய செயலாளர் வாவா ராவுத்தர், சம்சுதீன் சேட், மாவட்ட துணை தலைவர் ஹிமாயுன் கபீர், மாவட்ட தலைவர் சாதிக், தேர்தல் பொறுப்பாளர் சிராஜ் பங்கேற்றனர்.

புதன், 29 ஏப்ரல், 2009

பொள்ளாச்சி: உமருக்கு வாய்ப்பு


பொள்ளாச்சி தொகுதியை ம.ம.க அறிவித்த போது பல பேருடைய புருவங்கள் உயர்ந்தன. கவுண்டர்கள் அதிகமாக உள்ள தொகுதி என்று பரவலாக அறியப்பட்ட பொள்ளாச்சி தொகுதி மறுசீரமைப்புக்கு பின்னால் சுமார் 28 சதவீதம் முஸ்லிம் வாக்கு களை கொண்ட தொகுதியாக உள்ளது. கோவையில் முஸ்லிம்கள் பெரும் பான்மையாக வசிக்கும் உக்கடம், குனியமுத்தூர், செல்வபுரம் போன்ற பகுதிகள் பொள்ளாச்சியில் சேர்க்கப் பட்டுள்ளதால் பொள்ளாச்சியில் முஸ்லிம்களின் வாக்கு வங்கி பெருகியுள்ளது.


மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர் அறிவிக்கப்பட்டவுடன் பொள்ளாச்சி தொகுதிக்குட்பட்ட மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். பொள்ளாச்சி ம.ம.க வேட்பாளர் உமர் அவர்கள் வணிகர், வியாபார ரீதியில் பல்வேறு மக்களுடன் தொடர்பு உள்ளவர். தமுமுக மாநில செயலாளராக தற்போது இருப்பதால் சமுதாய மக்களுக்கும், ஜமாஅத்துகளுக்கும் நன்கு அறிமுகமானவர். இதனால் தொகுதியின் பல்வேறு ஜமாஅத்துக் களின் ஆதரவு பெருவாரியாக ம.ம.க வேட்பாளருக்கு கிடைத்துள்ளது.


மேலும், கோவையில் வசிக்கும் மலையாளிகள் மற்றும் கிறித்தவர்கள் உமருக்கு ஆதரவு அளித்துள்ளனர். மேலும் கோவை மாவட்ட தமுமுக வினர் சிறப்பான மனிதநேய சேவை களை தொடர்ந்து செய்து வருகின்ற னர். இதனால் தமுமுகவின் சேவைகளினால் நன்மதிப்பு கொண்ட மக்களின் வாக்குகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு கூடுதல் பலம்.


எதிர் அணிகளை பொறுத்தவரை திமுக வேட்பாளர் சண்முக சுந்தரம், அதிமுக வேட்பாளர் சுகுமாரன், தேமுதிகவின் பாண்டியன் என அனை வருமே கவுண்டர் இனத்தை சேர்ந்தவர்கள். தொகுதியில் உள்ள 40 சதவி கித கவுண்டர் இனமக்களின் வாக்குகளை நம்பியே முக்கிய கட்சிகள் இவர்களை களத்தில் இறக்கி உள்ளன. இதில் கொங்கு நாடு முன்னேற்ற பேரவை என்ற பெயரில் ஒரு புதிய கட்சியை கொங்கு வேளாள கவுண்டர் இன மக்கள் ஆரம்பித்துள்ளனர். அந்த கட்சியின் தலைவர் பெஸ்ட் ராம சாமி பொள்ளாச்சியில் வேட்பாளராக போட்டியிடுகின்றார். இதனால் கவுண் டர் இன மக்களின் வாக்குகள் சிதறிப் போகும் சூழ்நிலை உள்ளது. மேலும் திமுகவின் வேட்பாளர் சண்முக சுந்தரம் தொகுதிக்கு அறிமுகம் இல்லாத வர். இதனால் அதிமுகவுக்கும், கொங்கு நாடு கட்சிக்கும் கவுண்டர் இன ஓட்டுக் களை பெறுவதில் போட்டி நிலவுகிறது.


ம.ம.கவை பொறுத்தவரை தொகுதியின் தலித் இன மக்களின் ஆதரவும் கிடைத்திருப்பது மற்றறொரு பலம். வால்பாறை, பொள்ளாச்சி போன்ற பகுதிகளில் புதிய தமிழகம் கட்சிக்கு ஒரளவு செல்வாக்கு உள்ளது. 10 சதவீதம் உள்ள த­த் மக்களின் ஆதரவும் PUCL, DYF மற்றும் மனித உரிமை மற்றும் NGO அமைப்பு களின் ஆதரவும் மமகவுக்கு கூடுதல் பலத்தை கொடுத்திருப்பதால் உமர் அவர்கள் வெற்றி பெறுவதில் சிரமம் இருக்காது. இப்போதைக்கு அதிமுக., ம.ம.க., கொங்குநாடு பேரவை என பொள்ளாச்சி தொகுதியில் கடும் போட்டி நிலவி வரும் சூழ்நிலையில் ம.ம.க வேட்பாளர் உமர் தொடர்ந்து எதிர் நீச்சல் போட்டு பொள்ளாச்சியை கைப்பற்றுவார் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

சாதிப்பார் சலிமுல்லாஹ் கான்



இராமநாதபுரம் பாரளுமன்ற தொகுதி முஸ்லிகள் அதிகமாக வாழக் கூடிய தொகுதிகளில் ஒன்று. மொத்த வாக்காளர் களில் 20 சதவிகிதம் முஸ்லிம்கள் வாழக்கூடிய இத்தொகுதிகயில் இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியிலும் ஹஸன் அலி எனும் முஸ்லிம் ஒருவரே சட்ட மன்ற உறுப்பினராக உள்ளார். தற்போது மனிதநேய மக்கள் கட்சி சார்பில் இராமநாதபுரம் மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி செயலாளர் சலிமுல்லாஹ் கான் வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ளார்.


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாவட்டத் தலைவராக 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய சலிமுல்லாஹ் கான் தொகுதியில் மக்களுக்கு நன்கு அறிமுகமானவர். கல்வி உதவிகள், ஆம்புலன்ஸ் சேவை, இரத்ததானம் என தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சேவைகளுக்கு பின்புலமாக இருந்து முஸ்லிம்கள் மட்டுமின்றி அனைத்து சமுதாய மக்களிடமும் நன்கு அறிமுகமானவர். சலிமுல்லாஹ்கான் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடனேயே இராமநாதபுரம் மாவட்ட த.மு.மு.க, ம.ம.க தொண்டர்கள் உற்சாகத்துடன் பிரச்சார களத்தில் இறங்கி விட்டனர். ராமநாதபுரம் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. எதிர் அணிகளைப் பொறுத்தவரை தொகுதியில் 30 சதவிகிதம் இருக்கும் முக்குலத்தோர் களின் வாக்குகளை நம்பி திமுக சார்பில் நடிகர் ரித்திஷ், அதிமுக சார்பில் சத்திய மூர்த்தியும், பாஜக சார்பில் திருநாவுக்கர சரும் களமிறங்கி உள்ளனர். இதனால் முக்குலதோர்களின் வாக்கு சிதற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தே.தி.மு.க சார்பில் சிங்கை ஜின்னா என்பவர் நிறுத்தப்பட்டுள்ளார். இவர் கடந்த முறை கடலாடியில் தே.மு.தி.க சார்பில் போட்டியிட்டு தோல்வி யடைந்தவர். மற்றபடி சமுதாய மக்களிடமோ தொகுதியிலோ பெரிய அளவு அறிமுகம் இல்லாதவர்.


திமுக வேட்பாளர் ரித்திஷ் பணபலம் உடையவராக இருந்தாலும் சீட்டு கிடைக்காத விரக்தியிலும், ரித்திஷின் வளர்ச்சியிலும் பொறாமை கொண்ட திமுகவினரே ''உள்குத்து'' வேலைகளில் இறங்கிவிட்டதால் ரித்திஷ் கடும் மன வெறுப்பில் உள்ளதாக கூறப்படுகிறது. பசும்பொன்னில் நடைபெற்ற கோஷ்டி மோதல் வழக்கில் தினமும் நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு வருவதாலும் அவரது இமேஜும் சரிந்துள்ளது. பிரச்சாரமும் தொய்ந்துள்ளது.


அதிமுக சார்பில் சத்திய மூர்த்தி ஒரு பக்கம் பிரச்சார வேகத்தை கூட்டினாலும் ஊழல் கறை படிந்தவர் என்பதால் முக்குலத்து மக்களிடம் கூட அதிருப்தி நிலவுகிறது. மேலும், பா.ஜ.க சார்பில் களமிறங்கியுள்ள திருநாவுக்கரசரும் முக்குலத்தோரையே நம்பி இறங்கியுள்ள தால் முக்குலத்தோர் வாக்கு வங்கி பங்கு போடப்படுவது தவிர்க்க முடியாது என்றே கருதப் படுகிறது.


மேலும் பாஜகவின் திருநாவுக்கரசருக்கு அறந்தாங்கி தொகுதியில் மட்டுமே சிறிதளவு செல்வாக்கு இருப்பதாக நம்பப்படுகிறது. கடந்த 2006 சட்டமன்ற தேர்த­ல் அறந்தாங்கியில் பாஜக பெற்ற வாக்கு 14,713. மொத்தமாக அதே சமயம் ஒட்டு மொத்தமாக இராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதி களில் பாஜக பெற்ற மொத்த ஓட்டுகளே 27,659 தான். இந்த திருநாவுக்கரசர்தான் வெற்றி பெற்று விடுவார் என்று சில முஸ்லிம் லட்டர் பேடுகள் பூச்சாண்டி காட்டி முஸ்லிம்களை திமுகவுக்கு ஆதரவாகவும், மமகவுக்கு எதிராகவும் தூண்டி வருகின்றன. பிஜேபியுடன் கூட்டணி சேர்ந்துள்ள சமத்துவ மக்கள் கட்சியின் சரத்குமாருக்கு இராமநாதபுரம் நாடார் மக்களிடையே பெரிய செல்வாக்கு ஏதும் இல்லை. அதனால் துரோகிகளின் பிரச்சாரத்தை நம்பாமல் முஸ்லிம் சமுதாயம் ஒட்டு மொத்த வாக்கையும் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளருக்கே நிச்சயம் அளிக்கும்.


மேலும் முக்குலத்தோர், த­த், முஸ்லிம் என்ற வரிசையில் தொகுதியில் இரண்டாம் இடத்தில் இருக்கும் த­த் மக்கள் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளருக்கே ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பல தலித் அமைப்புகள், புதிய தமிழகம் ஆகியவை மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் சலிமுல்லாஹ் கானுக்கு ஆதரவு கேட்டு களத்தில் இறங்கியுள்ளனர். கூடவே மீனவ அமைப்புகளும், கிறித்தவ அமைப்புகளும், மனித உரிமை அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளதால் மனிதநேய மக்கள் கட்சி இராமநாதபுரம் தேர்தல் களத்தில் முன்னணியில் நிற்கிறது.


தற்போது அதிமுகவின் சத்திய மூர்த்திக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் சலிமுல்லாஹ்கானுக்கும் இடையே தான் பலத்த போட்டி நடந்து வருகிறது. எனினும் தன்மானத்தை மீட்டெடுக்க வேண்டும். துரோகிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்ற அடிப்படையில் மனிதநேய மக்கள் கட்சியினர் சலிப்பில்லா மல் ஆற்றும் களப்பணியால் வெகுமக்கள் ஆதரவோடு சலிமுல்லாஹ் கான் வெற்றிக் கொடி ஏற்றுவது நிச்சயம்.
தொகுப்பு: இப்பி பக்கீர்

செவ்வாய், 21 ஏப்ரல், 2009

மத்திய சென்னை மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

வேட்பு மனு தாக்கல் செய்ய ஊர்வளமாக தமுமுக வினர்

வேட்பாளர் செ. ஹைதர் அலி தனது ஆதரவாளர்களுடன்

சென்னை ரிப்பன் மாளிகையில் ஆயிரக்கணக்கான தமுமுக தொண்டர்கள் பின்தொடர வேட்புமனு தாக்கல் செய்தார்
.

திங்கள், 20 ஏப்ரல், 2009

மனிதநேய மக்கள் கட்சியின் மத்திய சென்னை வேட்பாளர் பிரச்சாரப் படங்கள்


மனிதநேய மக்கள் கட்சியின் மத்திய சென்னை வேட்பாளர் செ. ஹைதர் அலி அவர்களை, புதிய தமிழகம் கட்சியின் சென்னை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் துறைமுகம் புதிய தமிழகம் தொழிலாளர் சங்கத்தின் தோழர்கள் சந்தித்து தங்களது ஆதரவையும், வாழ்த்தையும் தெரிவித்தனர். பின்பு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபடுவது குறித்தும் கலந்துரையாடல் நடத்தினர். அப்போது தமுமுக துணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ்.ரிஃபாயி, ம.ம.க. பொதுச் செயலாளர் பி. அப்துல் சமது ஆகியோர் உடனிருந்தனர்.


மனிதநேய மக்கள் கட்சியின் மத்திய சென்னை வேட்பாளர் திரு. செ. ஹைதர் அலி அவர்கள் கோடம்பாக்கம் பிராமணர்கள் நலச்சங்க தலைவர் ராமமூர்த்தி அவர்களையும், ரப்பானி வைத்தியசாலை நிறுவனர் டாக்டர் சையத் சத்தார் அவர்களையும், ஆசாத் நகர், சூளைமேடு, எம்.எம்.டி.ஏ. பகுதி ஜமாத் தலைவர்கள், வில்லிவாக்கம் இயேசு கிறிஸ்து தேவாலயங்கள், அருட்தந்தைகள் ஆகியோரையும், மேலும் பல்வேறு அமைப்புகள், சங்கங்கள், நிறுவனங்களின் தலைவர்களையும் சந்தித்து வாக்குகளை சேகரித்தார். அப்போது அவர், தான் சாமானிய சமூகத்தில் இருந்து வந்த களப் போராளி என்றும், மக்களின் உரிமைகளுக்காக களத்தில் இருந்து போராடுவேன் என்றும், தனக்கு வாக்களித்தால் உங்களில் ஒருவனாக இருந்து சேவை செய்வேன் என்றும் கூறி வாக்குகள் சேகரித்தார். அவருடன் ம.ம.க.வின் பொதுச் செயலாளர் பி. அப்துல் சமது அவர்களும், வடசென்னை, தென்சென்னை மாவட்ட நிர்வாகிகளும் தொண்டர்களும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். மேலும், வில்லிவாக்கம் வியாபாரிகள் நலச்சங்கம் தலைவர் திரு. செல்வராஜ், மனித உரிமைக்கான மக்கள் இயக்க தலைவர் திரு. செ. ரமேஷ்பாபு, திருநகர் குடியிருப்போர் நலச்சங்கம் தலைவர் திரு. மோகன் சுந்தரம், அம்மன்கோட்டை நலச்சங்கம் தலைவர் திரு. பிரபாகரன் ஆகியோரையும் ம.ம.க. வேட்பாளர் செ. ஹைதர் அலி அவர்கள் சந்தித்து ஆதரவு கோரினார்.