சனி, 7 ஜூலை, 2012

ருவாண்டா குடியரசில் 482 பேர் இஸ்லாத்தில் இணைந்தனர்.

மத்திய ஆப்பிரிக்காவில் ருவாண்டா குடியரசில் 482 பேர் புதிதாக இஸ்லாத்தில் இணைந்துள்ளனர். சர்வதேச இஸ்லாமிய இளைஞர் மன்றத்தைச் சேர்ந்த (WORLD ASSEMBLY OF MUSLIM YOUTH (WAMY) மருத்துவக் குழுவொன்று அண்மையில் ருவாண்டாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டது. மருத்துவ முகாம்களை நடத்திய இக்குழு பல்வேறு உதவிகளை அந்நாட்டு மக்களுக்கு வழங்கியது. தலைநகர் கைகாலியிலிருந்து 120 கி.மீ. தொலைவில் உள்ள கீபோஸ்கோ மாவட்டத்தில் மருத்துவக்குழு மேற்கொண்ட மனித நேய தொண்டு அவ்வட்டார மக்களை மிகவும் ஈர்த்தது.

‘அர்ரிஸ்வான்’ என்ற அக்குழுவினர், இஸ்லாத்தைப் பற்றியும் விளக்கம் அளித்தனர். ‘கினியா ருவாண்டா’ மொழியில் அச்சடிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பிரசுரங்களை விநியோகித்தனர். இஸ்லாத்தின் மீது கொண்டிருந்த தவறான கருத்துகளைக் களைந்து, இஸ்லாம்தான் உண்மையான இறைமார்க்கம் என்பதை விவரித்தனர். இதையடுத்து கூட்டம் கூட்டமாக மக்கள் வெளிப்படையாகவே இஸ்லாத்தில் இணைந்தவண்ணம் உள்ளனர். (அல்முஜ்தமா)

ஜசகல்லாஹ் கைர்  : கான் பாகவி

கருத்துகள் இல்லை: