புதன், 13 ஜூன், 2012

திருச்சியில் த.மு.மு.க சார்பாக 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் அப்பாவி முஸ்லிம்களை விடுதலை செய்யக்கோரி....ஒற்றை கோரிக்கை பொதுக்கூட்டம் மற்றும் கல்வி உதவி கல்வி விருது 2012

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழம் திருச்சி மாவட்டம் 49வது வார்டு ஆழ்வார்தோப்பு கிளை சார்பாக 10.06.2012 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.45 மணியளவில் த.மு.மு.க ஆழ்வார் தோப்பு கிளை அலுவலகம் அருகில் மாவட்ட தலைவர் அப்துல் ஹக்கிம் அவர்களின் தலைமையில் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் அப்பாவி முஸ்லிம்களை விடுதலை செய்யக்கோரி....ஒற்றை கோரிக்கை பொதுக்கூட்டம் மற்றும் 10 வகுப்பு 12 ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு கல்வி விருது வழங்கப்பட்டது.
அதைபோல் 6 முதல் கல்லூரி வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு கல்வி கட்டணமாக ரூ 2,00,000 (இரண்டு லட்சம்) வழங்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட செயலாளர் இப்ராஹிம்ஷா, மாவட்ட செயலாளர் (ம.ம.க) பைஸ் அஹமது, மாவட்ட பொருளாளர் இம்தியாஸ், கிளை தலைவர் முஹம்மது பாபு, கிளை செயலாளர் அப்துல் நாசர் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். மாவட்ட மாணவரணிச்செயலளர் காஜா மொய்தீன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.
கூட்டத்தில் மாநில மூத்த தலைவர் ஹைதர் அலி அவர்களும்,மாநில பொதுச்செயலாளர் அப்துல் சமது அவர்களும்,மாவட்ட தலைவர் முஹம்மது ரபீக் அவர்களும் சிறப்புரை ஆற்றினார்கள். நிகழ்ச்சியின் இறுதியாக கிளை மாணவரணிச்செயலாளர் மன்சூர் பாபர் அவர்கள் நன்றி கூறினார்.

















கருத்துகள் இல்லை: