வியாழன், 7 ஏப்ரல், 2011

ராமேஸ்வரம் மீனவர்கள் மாயம் நடவடிக்கை கோரி பிரதமருக்கு மனிதநேய மக்கள் கட்சி அவசர தந்தி

ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த விக்டர், அந்தோணி, ஜான்பால், மாரிமுத்து ஆகிய நான்கு மீனவர்களும் கடந்த 2ம் தேதி, மீன்பிடிப்பதற்காக ஒரு படகில் கடலுக்குச் சென்றுள்ளனர். ஐந்து நாட்கள் ஆகியும் அவர்கள் இதுவரை கரை திரும்பவில்லை. இதையடுத்து காணாமல் போன அவர்களை கடலோர படையினர் தேடி வருகின்றனர்.
காணாமல் போன மேற்கண்ட நான்கு மீனவர்களும் இலங்கை கடற்படையினரால் கடத்தப்பட்டிருக்கலாம் என்று அப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர்.

இந்நிலையில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி தலைவரும், இராமநாதபுரம் ம.ம.க. வேட்பாளருமான பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் இன்று காலை அவசர தந்தி அனுப்பியுள்ளார். காணாமல் போயுள்ள மேற்கண்ட நான்கு மீனவர்களையும் உடனடியாக கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு அதில் அவர் வலியுறுத்தி உள்ளார்.