ஞாயிறு, 10 ஏப்ரல், 2011

ஹசாரேவுக்கு ஆதரவாக உறுதிமொழி ஏற்பு

ஊழலுக்கு எதிராக போரடி வரும் அண்ணா ஹசாரேவை ஆதரித்து மனிதநேய மக்கள் கட்சியின் சேப்பாக்கம்&திருவல்லிக்கேணி தொகுதி வேட்பாளர் எம்.தமிமுன் அன்சாரி உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை நடத்தினார்.
இன்று (09.04.2011) மெரீனா கடற்கரை, ஓளவையார் சிலை அருகே காலை 8.30 மணியளவில் குழந்தைகள், பெரியவர்கள் உட்பட பலருக்கு மத்தியில் வேட்பாளர் உறுதிமொழியை வாசிக்க மற்றவர்கள் அதை திரும்ப வாசித்தனர்.
உறுதிமொழிவாசகம் பின்வறுமாறு:

ஊழக்கு எதிராக போராடிவரும், காந்தியவாதி அண்ணா ஹசாரேயை நாட்டுப்பற்றுள்ள இந்தியர்களாகிய நாங்கள் முழு மனதோடு ஆதரிக்கிறேம்.

வாக்களர்களுக்கு பணம் கொடுக்கும் அநீதி ஒழிய; ஜனநாயகம் காக்க; ஊழலை ஒழிக்க அண்ணா ஹசாரேயின் பின்னால் அணிவகுப்போம்.

இவ்வாறு உறுதிமொழி எடுக்கப்பட்டது