செவ்வாய், 11 நவம்பர், 2014

மவுலானா எனும் மகத்தான இந்தியர்



நவீன இந்தியாவின் சிற்பிகளில் ஒருவரான மவுலானாவைப் பற்றிய நினைவுகூரல்
பிஹாரின் ராம்கர் நகரில் 1940-ல் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டுக்குத் தலைமை வகித்துப் பேசிய மவுலானா அபுல் கலாம் ஆஸாத், தனது உரையில் இப்படிக் குறிப்பிட்டார்: “நான் ஒரு முஸ்லிம். அதற்காகப் பெருமைப் படுகிறேன். 1,300 ஆண்டு பாரம்பரியமிக்க செழுமையும் புகழும் கொண்ட மார்க்கத்துக்குச் சொந்தக்காரன் நான். அதில் அணுவளவுகூடப் பங்கம் ஏற்படுவதை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். நான் ஒரு இந்தியன் என்பதிலும் அதே அளவு பெருமை கொள்கிறேன்.” ஆம், ஆஸாத் ஒரே நேரத்தில் உண்மையான முஸ்லிமாகவும், சிறந்த இந்தியனாகவும் விளங்கினார்.
பள்ளிப் பருவத்திலேயே அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்தார் ஆஸாத். 1906-ல் டாக்காவில் நடைபெற்ற முஸ்லிம் லீக் தொடக்க மாநாட்டில் கலந்துகொண்டார். எனினும் முஸ்லிம் லீக்கின் மிதவாதப் போக்கு அவரை ஈர்க்கவில்லை. எனவே, 1907-ல் புரட்சிகரக் கட்சியில் சேர்ந்தார். இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றிணைந்து ஆங்கில ஆட்சிக்கு எதிராகப் போராட வேண்டும் என்று பிரச்சாரம் செய்தார். 1913-ல் ஹிஸ்புல்லா என்ற அமைப்பைத் தொடங்கினார்.
1920-ல் மகாத்மா காந்தியைச் சந்தித்த பின்னர்தான், காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டார். ஒத்துழையாமை இயக்கத்திலும், கிலாபத் இயக்கத்திலும் முகம்மது அலி ஜவுகருடன் இணைந்து செயல்பட்டார். இவ்விரு தலைவர்களும் நாட்டு மக்களால் பெரிதும் மதிக்கப்பட்டனர். காங்கிரஸ் இயக்கம் நடத்திய அனைத்துப் போராட்டங்களிலும் ஆஸாத் பங்குகொண்டார். ஆறு முறை கைது செய்யப்பட்ட அவர், தன்னுடைய வாழ்நாளில் 10 ஆண்டுகள் 7 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்தவர்.
நீதிமன்றத்தில் கர்ஜனை
1922-ல் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தின்போது கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் மீது அலிப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. 11.01.1922 அன்று அலிப்பூர் நீதித் துறை நடுவர் முன்னிலையில் ஆஜரான அவர், ஆக்ரோஷமான வார்த்தை களில் வாக்குமூலம் அளித்தார். ஆஸாத் பேசியதிலிருந்து சில வரிகள்:
“நீங்கள் எனக்கு உச்சபட்சத் தண்டனை அளியுங்கள். அது எவ்வளவு பெரிய தண்டனையாக இருந்தாலும் நான் பதற மாட்டேன். தீர்ப்பை எழுதும்போது உங்கள் கரங்கள் நடுங்கலாம். ஆனால், உங்கள் தீர்ப்பைச் செவிமடுக்கும்போது எனது இதயம் நடுங்காது. இது உறுதி. எனக்குக் கிடைக்கவிருப்பது சிறைக்கொட்டடி எனில், உங்களுக்கு நீதித் துறையின் உயர் பதவிகளும் மரியாதைகளும் கிடைக்கும். இதே நிலை தொடர என்னை அனுமதியுங்கள்; நீங்கள் நீதிபதியாகவும் நான் குற்றவாளி யாகவும். இந்த நிலை சில காலம் தொடரும். அதன் பிறகு நாம் மற்றொரு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவோம். அங்கே இறைவனே நீதிபதியாக வீற்றிருந்து தீர்ப்பு வழங்குவான். அதுதான் இறுதித் தீர்ப்பாகும்.” அவரது வாக்குமூலத்தைக் கேட்டு நீதித் துறை நடுவர் நடுநடுங்கிப்போனதாகக் கூறப்படுவதில் ஆச்சரியம் இல்லை.
1942-ல் நடைபெற்ற ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் கலந்துகொண்டதற்காகக் கைதுசெய்யப்பட்டு, அஹமத் நகர் சிறையில் அடைக்கப்பட்டார் ஆஸாத். அவருடன் நேருவும் இருந்தார். 3 ஆண்டுகள் நீடித்த இந்தச் சிறைவாசத்தின்போது அவரது மனைவி சுலைஹா பீவியும், சகோதரி ஹனீபா பேகமும் அடுத்தடுத்த ஆண்டு களில் மரணமடைந்தார்கள். இந்த இருவரின் இறுதிச் சடங்குகளிலும் கலந்துகொள்ள ஆங்கில அரசு அவருக்கு அனுமதி வழங்கவில்லை. 1945-ல் விடுதலை பெற்ற பின்னரே இருவரின் கல்லறைகளுக்கும் சென்று மலர் தூவி ஃபாத்திஹா ஓதினார் ஆஸாத்.
எழுச்சியூட்டும் எழுத்து
மேடைகளில் எழுச்சியுடன் உரையாற்றும் வல்லமை பெற்றிருந்த ஆஸாத் சிறந்த எழுத்தாளரும்கூட. ‘சமந்தார்’, ‘மதீனா’, ‘முஸ்லிம் கெஜட்’, ‘ஹம்தர்த்’ ஆகிய உருது இதழ்களில் ஆங்கில அரசின் கொள்கைகளைக் கண்டித்துக் காரசாரமாக எழுதினார். பின்னர், ‘அல்ஹிலால்’ என்ற பத்திரிகையைத் தொடங்கி, அதில் கட்டுரைகள் எழுதிவந்தார். இந்த இதழைத் தொடர்ந்து நடத்தவிடாமல் ஆங்கில அரசு அவருக்குக் கடுமையான நெருக்கடிகளைக் கொடுத்தது. பத்திரிகைக்கு அதிகப் பிணைத்தொகை செலுத்துமாறு அரசு அவருக்கு ஆணையிட்டது. இதே காலகட்டத்தில் ‘அல்பலாக்’ என்ற பெயரில் மற்றொரு பத்திரிகையையும் தொடங்கினார் ஆஸாத். அவரது எழுத்தும் பேச்சும் உணர்ச்சிபூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் அமைந்திருந்தது.
பிரிவினையை ஏற்காதவர்
1940-ல் காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராக ஆஸாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். (அவரை எதிர்த்துப் போட்டியிட்டவர் எம்.என்.ராய்) 1946 இறுதி வரை அப்பதவியில் இருந்தார். இறுதி வரை பாகிஸ்தான் பிரிவினையை எதிர்த்தார். எனினும், காந்தி உள்ளிட்ட தலைவர்களால்கூடப் பிரிவினையைத் தடுக்க முடியாமல் போனபோது, செய்வதறியாது கை பிசைந்து நின்றார்.
பிரிவினைக்குப் பின்னர் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற வகுப்புக் கலவரங்களில் முஸ்லிம்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளானார்கள். நூற்றுக் கணக்கான முஸ்லிம்கள் அவரது இல்லத்திலேயே தஞ்சம் அடைந்திருந்தார்கள். அப்போது உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் பட்டேல் இந்தக் கலவரங்களை ஒடுக்க தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை என ஆஸாத் கருதினார். இதுபற்றி தனது மனக்குமுறல்களை ‘இந்திய விடுதலை வெற்றி’ என்ற நூலில் பதிவுசெய்திருக்கிறார் ஆஸாத். அந்தப் புத்தகத்தின் சமர்ப்பணத்தில் இப்படி எழுதியிருப்பார்: ‘நண்பரும் தோழருமான ஜவாஹர்லால் நேரு அவர்களுக்கு’.
பாகிஸ்தான் எதிர்ப்பு
சிறந்த இஸ்லாமிய மார்க்க அறிஞராகத் திகழ்ந்தார் ஆஸாத். ராஞ்சி சிறையில் இருந்தபோது திருக்குர்ஆனை உருது மொழியில் மொழிபெயர்த்தார். பாகிஸ்தான் தனி நாடு கோரிக்கையால் பெரிதும் ஈர்க்கப்பட்டு, ஜின்னாவின் தலைமையின் கீழ் அணி திரண்டிருந்த பெரும்பான்மையான முஸ்லிம்கள் அவரை முஸ்லிம் விரோதி எனத் தூற்றியபோதிலும் அவர் கலங்கவில்லை. தனது பாகிஸ்தான் எதிர்ப்பு நிலைப்பாட்டில் கடைசி வரை உறுதியாகவே இருந்தார்.
இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்ற ஆஸாத், கல்வி முறையில் பல அடிப்படை சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார். கிராமப்புற ஏழை மக்களுக்குக் கட்டாய இலவசக் கல்வி வழங்கிட முன்னுரிமை அளித்தார். முதியோர் கல்விக்கு வித்திட்டார்.
பல்கலைக்கழகக் கல்விக்குழு, இடைநிலைக் கல்விக் குழு, பல்கலைக்கழக மானியக்குழு, இந்திய அறிவியல் கழகம், தொழில்நுட்பக் கல்லூரிகள் ஆகியவை அவரது பதவிக் காலத்தில்தான் உருவாக்கப்பட்டன. கலை, இலக்கியம், பண்பாடு ஆகியவற்றைப் பாதுகாத்து ஊக்குவிக்கும் பொருட்டு சாகித்ய அகாடமி, சங்கீத அகாடமி, லலிதகலா அகாடமி, நாடக அகாடமி ஆகிய அமைப்புகளை உருவாக்குவதில் பெரும் பங்காற்றினார். தேசிய ஆவணக் காப்பகம் உருவாக்கப்பட்டதும் அவரது பதவிக் காலத்தில்தான்.
2.2.1958-ல் அவர் மரணமடைந்தபோது, அரசு கடனில் வாங்கிய கார் ஒன்றைத் தவிர குறிப்பிட்டுச் சொல்லும் படியான வேறு எந்தச் சொத்தும் அவரிடம் இல்லை. சொத்துக்கள் என்று அவர் எதையும் விட்டுச் செல்லவில்லை. வங்கிக் கணக்கு இல்லாமல், அசையும், அசையாச் சொத்துக்கள் எதுவும் இல்லாமல் ஆஸாத் இவ்வுலகை விட்டுப் பிரிந்தார்.
இந்து-முஸ்லிம் ஒற்றுமையை நிலைநாட்டுவதில் மிகுந்த அக்கறையும் கவனமும் செலுத்திவந்தவர் ஆஸாத். ‘அல்பலாக்’ இதழில் அவர் இப்படி எழுதினார்: “சுதந்திரம் கிடைப்பதற்குத் தாமதமானாலும் பரவாயில்லை. இந்தியத் தாய்க்கு ஒரு நிமிடம்கூட வேற்றுமையின் பாரத்தைத் தாங்கும் சக்தியில்லை.” சாதி, மத, இன மோதல்கள் இல்லாததும், அறிவில் உயர்ந்து விளங்குவதுமான ஒரு இந்தியாதான் ஆஸாதின் கனவு இந்தியா. அந்த இந்தியாவை நோக்கி நாம் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியிலும் ஆஸாதை நாம் பெருமைப்படுத்துகிறோம்.
- சேயன் இப்ராகிம், அஞ்சல்துறை உதவிக் கண்காணிப்பாளர் (ஓய்வு).
source : http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%AE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/article6584323.ece?widget-art=four-rel

ஞாயிறு, 5 அக்டோபர், 2014

இந்து சகோதரர்களே எச்சரிக்கை ! எச்சரிக்கை ! !



இந்து சகோதரர்களே எச்சரிக்கை ! எச்சரிக்கை ! !
****************
முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்திற்க்காக இந்துக்களின் வீடுகளை எரித்த பா ஜ க தலைவர் கைது செய்யப்பட்டார்.
****************** 
முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்திற்க்காக இந்துக்களின் வீடுகளை பா ஜ க தலைவர் ஒருவரே எரித்திருப்பது தெரிய வந்திருக்கிறது. இதையடுத்து
அந்த பா ஜ க தலைவர் உட்பட 36 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் .
குஜராத் மாநிலம் பரோடா நகர பாரதிய ஜனதா தலைவராக இருப்பவர் மனிஷ் வாக், இவர் கடந்த சில நாட்களாக இங்கு வசிக்கும் முஸ்லிம் மக்களுடன் தகராறில் ஈடுபட்டார். இதனால் கலவரம் ஏற்ப்பட்டது இதையொட்டி சில முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு பரோடா நகரில் நவபுரா பகுதியில் உள்ள இந்து மதத்தை சேர்ந்த சிலருடைய வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது..
இது பற்றி போலீசார் விசாரணை நடத்தி மனிஷ் வாக் உள்பட பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த 36 பேரை போலீசார் கைது செய்தனர்.இந்து மக்கள் வீடு எரிக்கப்பட்ட வழக்கில் பாரதீய ஜனதா தலைவர் கைது செய்யப்பட்டது சில சந்தேகங்களை ஏற்ப்படுத்தி உள்ளது கலவரத்தை பெரித்தாக்க இவரே இந்து மக்களின் வீடுகளுக்கு தீ வைத்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிரார்கள்.
செய்தி : தீக்கதிர் (05-10-14)
ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் ,தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களை குறிவைத்து பேசி உள்ளநிலையில் இந்துக்களும்- முஸ்லிம்களும் இங்கு எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
சங்கபரிவார சதிகாரர்கள் அரசியல் அதிகாரத்தை அடைய எதையும் செய்வார்கள்.
ஜனநாயகத்தின் நான்காவது தூண்களான வெகு மக்கள் ஊடகங்கள் இதைப்பற்றியெல்லாம் பெரிதாக அலட்டி கொள்ளாது.
நமது மதச்சார்பற்ற இந்தியாவை பாதுகாக்க,
நாம் எச்சரிக்கையாக இருப்போம்!
நமது நாட்டை காப்போம் !!
ஜெய் ஹிந்த் !

புதன், 27 ஆகஸ்ட், 2014

8 அம்சங்கள் கொண்ட சமாதான ஒப்பந்தம் பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக வெற்றிகரமான ஒப்பந்தம் கையெழுத்து இடப்பட்டுள்ளது .









8 அம்சங்கள் கொண்ட சமாதான ஒப்பந்தம்
பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக
வெற்றிகரமான ஒப்பந்தம் கையெழுத்து இடப்பட்டுள்ளது ..

இதில் குறிப்பிடப்படும்நடைமுறை படுத்தும் இடைகால
ஒப்பந்தத்தத்தில் கையெழுத்து இடப்பட்டு உள்ளது

1 -காஸா மீது யூதபயங்கரவாதிகளின்முற்றுகை முழுமையாக
விளக்கப்படுவதற்க்கு ஒப்புதல்.

2-சர்வதேச நாடுகளின்மேற்ப்பார்வைகளின் கீழ் காஸா புனரமைப்பு.

3- மின்சார பிரச்சினைகளை முழுவதுமாககாஸாவின் கட்டுப்பாட்டின் கீழ்வழங்குதல் .

4- காஸாவுக்கான கடல் எல்லையில்இருந்து மீன் பிடித்தல்களை 96
இருந்து அனுமதித்தல்.

5- காஸாமீதானநிதி தடைகளை முற்று முழுதாக நீக்குதல்.

6- போர் தொடங்குவதற்க்கு முதல்எப்படி அமைதி இருந்ததோ அப்படியே அமைதியை இரு தரப்பும் தொடர்வது.

7- காஸா நிர்வாகம் தொழில் நுட்ப்பம்துறைமுகம் மற்றும் விமான நிலையம் மற்றும் நிதி. நீதி .போன்றவைகளை காஸா மக்களே சுதந்திரமாக இயக்குவது.

8- யூத பயங்கரவாதிகளால்கைது செய்யப்பட்ட பலஸ்தீன்
கைதிகள் அனைவரையும் விடுதலை செய்வது.

source-QNN
Press- Jazwan
#JournalisticviewAbusheikMuhammed

வியாழன், 14 ஆகஸ்ட், 2014

அரசே... அபலைகளின் அழுகுரல் உனக்குக் கேட்கிறதா?

கடியப்பட்டினத்தில் நுழைந்தபோதே சாவு வரவேற்றது. ‘அது' சாவு. மக்களின் முகத்தில் துக்கத்தைத் தாண்டி ஆக்கிரமித்திருக்கிறது பயம். துக்கத்துக்காகக் கூடியிருப் பவர்கள் குனிந்து கிசுகிசுக்கிறார்கள். ‘அது' பற்றியது இந்தப் பேச்சு. வாயைத் திறந்து ‘அது' பெயரைச் சொன்னாலே 'அது' வீட்டுக்கு வந்துவிடுமோ என்று அஞ்சுகிறார்கள். ‘அது'வோ ஈவிரக்கம் இல்லாமல் மக்களை வேட்டையாடுகிறது.
தமிழகத்திலேயே கதிரியக்கத்தை அதிக அளவில் எதிர்கொள்ளும் ஊர்களின் வரிசையில் முதல் வரிசையில் இருக்கிறது கடியப்பட்டினம். ஒவ்வொரு வாரமும் யாரோ ஒருவர் புதிதாக வெளியூர் ஆஸ்பத்திரிக்குப் போக வேண்டிய சூழல் உருவாகிறது. ஒவ்வொரு மாதமும் யாரோ ஒருவருக்குப் புதிதாக ‘அது' கண்டறியப்படுகிறது. வெகு சீக்கிரம் ஒரு நாள் ‘அது' கொன்றுபோடுகிறது.
அபலைகளின் கதறல்
“ஐயா, பொறுப்புள்ள பிள்ளையா. பதிமூணு வயசுல இப்பிடி ஒரு பிள்ளையை நீங்க பார்க்க முடியாது. தாய் - தந்தை மேல அப்பிடி ஒரு பிரியம், மதிப்பு. கடலுக்குப் போயி நூறு, எரநூறுக்கு உயிரைக் கொடுத்து, அப்பன் பொழைக்கிறாம்னு சொல்லி, நல்லாப் படிச்சுக் குடும்பப் பொறுப்பை ஏத்துக்கிடுவேன்னு சொல்லிக்கிட்டிருந்த பிள்ளை. ஒரு நா கைய வலிக்குண்ணாம். கடுக்குண்ணாம். ஆஸ்பத்திரி போனோம். மருந்து மாத்திரை கொடுத்தாங்க. வலி கட்டுபடல்ல. பரிசோதனை பண்ணணும்னாங்க. கடைசில அதுன்னாட்டாங்க. எலும்புல வந்துடுச்சு.
ஐயா, ஒரு பாவம் அறியாத பிள்ளைய்யா. பச்ச பிள்ளைக்கு என்ன தெரியும்? ஐயோ, ஒரு கெட்ட பழக்கம், அது இதுன்னு இருந்து செத்தாக்கூட, தப்புன்னு சொல்லி ஆத்திக்கலாமே... ஏ, ஐயா, புருனோ... உன்னையே பொறுப்பே இல்லாம பறி கொடுத்துட்டேனேய்யா...”
- மாரிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு வெளிப்படும் அந்த அழுகுரல் இதயத்தைச் சுக்கு நூறாக்குகிறது.
ஒன்று, இரண்டல்ல; அங்கொன்றும் இங்கொன்றும் அல்ல; இதோ எதிர்த்த வீட்டில் ரத்தப் புற்று, அதோ பக்கத்து வீட்டில் எலும்புப் புற்று, இங்கே பின் வீட்டில் கருப்பைப் புற்று என்று கூப்பிட்டுச் சொல்கிறார்கள்.
யாருக்கும் தெரியவில்லை!
கடியப்பட்டினம் பங்குத்தந்தை செல்வராஜ், வரிசை யாகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட, உயிரிழந்தவர் கள் தொடர்பான கோப்புகளை விரித்துக் காட்டுகிறார்.
“ஒவ்வொரு வருஷமும் 20 பேர் புத்துநோயால மரிச்சுப்போறாங்க. இந்தச் சின்ன ஊர்ல இதோ, ரெண்டு மாசத்துல நாலு பேர் அடுத்தடுத்து, புத்துநோயால பாதிக்கப்பட்டிருக்காங்க. கொடுமை என்னன்னா, காட்டுறதுக்கு ஆஸ்பத்திரிகூட இங்கே ஏதும் கிடையாது. ஒண்ணு திருவனந்தபுரம் ஓடணும், இல்ல, சென்னைக்கு ஓடணும். சரியான மருத்துவ வசதி, பரிசோதனை வசதி இல்லாததால, முத்துன நெலையிலதான் நோய் பாதிப்பே தெரியவருது. ஒவ்வொரு நாளும் மக்கள் வந்து கதறுறாங்க. என்ன செய்யுறதுன்னே தெரியலை” என்கிறார்.
கடற்கரை முழுவதும் பாதிப்பு
இங்கே குமரி மாவட்டத்தில் தொடங்கி அங்கே திருவள்ளூர் மாவட்டம் வரை புற்றுநோய் கோரத் தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது. கடற்கரை ஊர்களில் நுழையும்போதெல்லாம், மக்களைச் சந்திக்கச் செல்லும்போதெல்லாம் அவர்கள் சொல்லும் செய்திகள் குலைநடுங்க வைக்கின்றன. அரசுக்கோ ஊடகங்களுக்கோ இதன் தீவிரம் தெரியவில்லை. நம் கடற்கரை மக்கள் வாழ்க்கையை எந்த அளவுக்குப் புற்றுநோய் குலைத்துப்போட்டிருக்கிறது என்பதற்குச் சரியான உதாரணம் காயல்பட்டினம்.
ஒரு உயிர் ஒரு உலகம்
காயல்பட்டினம் பேருந்து நிலையத்தில் இறங்கியதுமே எதிர்ப்படுகிறார்கள் புற்றுநோயாளிகள். சுப்பிரமணியன் பேருந்து நிலைய வளாகத்தில் வல்கனைசிங் தொழில் செய்கிறார். மனைவியும் புற்றுநோயாளி, மகனும் புற்றுநோயாளி. “டயருக்கு பஞ்சர் ஒட்டிப் பொழப்பு நடத்துறவங்க. பொஞ்சாதிக்கு நுரையீரல்ல புத்து. புள்ளைக்கு ரத்தத்துல புத்து. ஒரே நேரத்துல ஒருத்தரை சென்னையிலேயும் இன்னொருத்தரை மதுரையிலேயும் வெச்சுக்கிட்டுப் போராடுனேன் பாருங்க. எவ்வளவோ செலவு செஞ்சி பாத்தாச்சு. பொஞ்சாதி போய்ட்டாங்க. பிள்ளையைக் காப்பாத்தணும், அதுக்காகத்தான் ஓடிக்கிட்டு இருக்கேன்” என்று சொல்லும் தந்தையையே பார்த்துக்கொண்டிருக்கிறான் ஐயன்ராஜ். மருத்துவச் செலவை எதிர்கொள்ள படிப்பை நிறுத்திவிட்டு, அப்பாவோடு கடையில் உதவிக்கு உட்கார்ந்திருக்கிறான். “அப்பா ஒண்டியா எவ்ளோண்ணே கஷ்டப்படுவாங்க, பாவம் இல்லேண்ணே, என்னால பெருசா ஒண்ணும் முடியாது. ஆனா, பக்கத்துலேயே உட்கார்ந்துருக்கும்போது அப்பாவுக்கு ஒரு ஆறுதலா இருக்கு” என்கிறான், கண்ணில் ததும்பும் நீரை அடக்கிக்கொண்டு.
புற்றுக்கு எதிராகத் திரளும் ஊர்
இஸ்லாமியர்கள் பெரும்பான்மையினராக வாழும் பாரம்பரியமான ஊர் காயல்பட்டினம். சமீப காலத்தில் மட்டும் 60 பேர் இறந்திருக்கிறார்கள்; அவர்களில் 20 பேர் புற்றுநோயாளிகள் என்கிறார்கள் ஊர்க்காரர்கள். அரசு கண்டுகொள்ளாத நிலையில், புற்றுக்கு எதிராக இப்போது ஊரே திரள ஆரம்பித்திருக்கிறது. ‘காயல்பட்டினம் புற்றுநோய் காரணி கண்டறியும் குழு’ என்று ஒரு குழுவை அமைத்து அறிவியல்ரீதியிலான ஆய்வுகளில் களம் இறங்கியிருக்கிறார்கள்.
“ஒண்ணுபட்ட சமூக அமைப்பு உள்ள ஊர் காயல் பட்டினம். பொண்ணு கொடுக்க, எடுக்க எல்லாமே பெரும்பாலும் இங்கைக்குள்ளேதான் நடக்கும். அதனால, இந்த நோயால பாதிக்கப்பட்டாகூட மக்கள் வெளியே சொல்லத் தயங்குனாங்க. பலர் இதை வெளியே சொல்ல விரும்புறதில்லை. ஆனா, இப்படியே போனா இந்தத் தலைமுறையையே பறி கொடுக்க வேண்டியதாம்னு சொல்லிக் களத்துல எறங்கிட்டோம்.
ஒவ்வொரு வீட்டுலேயும் எத்தனை பேர் புத்துநோயால் பாதிக்கப்பட்டிருக்காங்கன்னு 40 தன்னார்வலர்களை வெச்சுக் கணக்கெடுத்தோம். விஞ்ஞான ரீதியா என்ன காரணமா இருக்கும்னு நிலத்தடித் தண்ணீர்ல ஆரம்பிச்சு மளிகைக் கடை சாமான்கள் வரைக்கும் ஆய்வு நிறுவனங்களுக்கு மாதிரியை அனுப்பிச்சு ஆய்வுசெஞ்சோம். புத்துநோய் மருத்துவர் சாந்தாவைக் கூட்டிட்டு வந்து இந்த அறிக்கைங்க, பாதிப்பு எல்லாத்தையும் கொடுத்து ஆலோசனை கேட்டோம். தொடர்ந்து அரசாங்கத்துக் கதவைத் தட்டிக்கிட்டேதாம் இருக்கோம். ஆனா, செவிசாய்க்க ஆள் இல்லை” என்கிறார் உள்ளூரில் மருத்துவ உதவிக்காக இயங்கும் ஷிஃபா கூட்ட மைப்பின் செயலாளரான தர்வேஷ் முஹம்மத்.
கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் 125 பேருக்கும் மேற்பட்டவர்களுக்குப் புற்றுநோய் கண்டறியப் பட்டுள்ளதாகக் கூறுகிறார் மருத்துவ அறிக்கைகளோடு.
ஊருக்குள் நோயாளிகளுடன் உரையாடும்போது, நோய் வேதனையைக் காட்டிலும் அரசின் புறக்கணிப்பு தரும் விரக்தி அவர்களைத் துளைத்தெடுப்பதை உணர முடிகிறது. நான்கு குழந்தைகளின் தாயான ஜீனத் தன் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்துப் பேசும்போது துக்கம் வெடிக்கிறது. தந்தை முஹம்மது ஹசன் சிறுநீர்ப்பை புற்றுநோய்த் தாக்குதலுக்கு ஆளான பிறகு, தாய் ஆப்பம் விற்கப்போவதாகச் சொல்லும் 12 வயது சஹர் பானு குடும்பத்தைப் பற்றிப் பேசும்போது மலங்க மலங்க விழிக்கிறாள். “அப்பாவுக்கு நல்லாயிடுமாண்ணே?” என்று அவள் கேட்கும் கேள்வி துரத்திக்கொண்டே வருகிறது.
தொடர்ந்து கடற்கரையோர ஊர்களில் நோயாளி களைச் சந்திக்கும்போதெல்லாம் எழும் கேள்வி ஒன்று தான்: இவ்வளவு நடக்கிறது, அரசாங்கம் என்ன செய்கிறது?
(அலைகள் தழுவும்...)
- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

நன்றி  : http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%87-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%BE/article6315574.ece 

புதன், 13 ஆகஸ்ட், 2014

நான் இஸ்லாம் மதத்தை தழுவியதற்கு என் அம்மாவே காரணம் -யுவன் சங்கர் ராஜா




நான் இஸ்லாம் மதத்தை தழுவியதற்கு என் அம்மாவே காரணம் என்று இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இஸ்லாம் மதத்தை தழுவினார் என்பது தமிழ் திரையுலகினர் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. ஆனால், அது தொடர்பாக யுவன் விளக்கம் எதுவுமே கொடுக்கவில்லை.
யுவன், ஜெய் இருவருமே இஸ்லாம் மதத்தை தழுவி, ரம்ஜான் அன்று மசூதிக்கு சென்று தொழுகை நடத்திய படங்கள் இணையத்தில் வெளியானது.
இந்நிலையில் ஏன் இஸ்லாம் மதத்தை தழுவினார் என்ற கேள்விக்கு முதன் முறையாக பதிலளித்திருக்கிறார் யுவன். இது குறித்து யுவன் கூறியிருப்பது:
"எனது தந்தை தீவிரமான இந்து. ஒரு கண்ணாடி உடைந்தாலும் ஜோசியரைக் கூப்பிடும் அளவுக்கு மூட நம்பிக்கை உடையவர். எனது பெற்றோர் பல சம்பிரதாயங்களை பின்பற்றி வந்தனர். ஆனால் எனது சிறுவயது முதலே இவற்றையேலாம் தாண்டி ஒரு அமானுஷ்யமான சக்தி உலகை கட்டுப்படுத்துகிறது என்ற எண்ணம் எனக்குள் இருந்தது.
எனது மதமாற்றத்திற்கு முக்கியக் காரணமாக இருந்தது எனது அம்மாவின் மறைவு தான். வேலையின் காரணமாக மும்பைக்கு சென்றிருந்தேன். சென்னைக்கு வந்தபோது, அம்மா கடுமையாக இரும்பிக் கொண்டிருந்தைக் கண்டேன். நானும் எனது சகோதரியும் அவரை மருத்துவமனைக்கு அவசரமாக அழைத்துச் சென்றோம். நான் கார் ஓட்டிச் சென்றேன். நாங்கள் மருத்துவமனையை அடைந்தோம். அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு, அவர் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். ஆனால், அடுத்த நொடி அவரது கை விழுந்தது, அவர் காலமானார். நான் அழுது கொண்டிருந்த அதே நேரத்தில், அந்த சில நொடிகளில் அம்மாவின் ஆன்மா என்னவாகியிருக்கும் என்று யோசிக்க ஆரம்பித்தேன், ஏனென்றால் அவர் சில விநாடிகளுக்கு முன் தான் உயிரோடு இருந்தார்.
எனக்கான விடையைத் தேடிக் கொண்டிருக்கும்போது அல்லாவிடமிருந்து நேரடியாக அழைப்பு வந்தது என்றுதான் சொல்ல வேண்டும். அது ஒரு ஆன்மிக அனுபவம். எனது நண்பர் ஒருவர் அப்போது தான் மெக்காவிலிருந்து வந்திருந்தார். "நீ தற்போது மிகவுள் தளர்ந்துள்ளாய். இதிலிருந்து நீ மீண்டு வரவேண்டும்" எனக் கூறி ஒரு முசல்லாவை (பிரார்த்தனை செய்யும்போது பயன்படுத்தப்படும் பாய்) எனக்குத் தந்தார். "இந்தப் பாய் மெக்காவில் நான் அமர்ந்து பிரார்த்தனை செய்தது. இது மெக்காவை தொட்டு வந்த பாய். உன் மனது பாரமாக இருக்கும்போது இதில் உட்கார்ந்து பார்" என்றார். நான் அந்த பாயை எனது அறையின் ஒரு மூலையில் வைத்துவிட்டு மறந்துவிட்டேன்.
சில மாதங்கள் கழித்து எனது உறவினர் ஒருவருடன் அம்மாவைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த்போது மிகவும் பாரமாக உணர ஆரம்பித்தேன். எனது அறையில் நுழைந்தேன், எதேச்சையாக அப்போது அந்தப் பாயைப் பார்த்தேன். எப்படி இவ்வளவு நாள் இதை மறந்துபோனோம் என நினைத்தேன்.
முதல் முறையாக அதில் அமர்ந்தவுடனேயே நான் அழ ஆரம்பித்தேன். ’எனது பாவங்களை மன்னியுங்கள் அல்லா’ என்று வேண்டினேன். இது 2012-ஆம் ஆண்டு நடந்தது. குரானை படிக்க ஆரம்பித்தேன். அது என்னை சீக்கிரத்தில் ஆட்கொண்டது. இஸ்லாமை பின்பற்றி, தொழுகை செய்வதைக் கற்றுக் கொண்டேன். ஜனவரி 2014-ல் மதமாறுவதைப் பற்றி உறுதியாக முடிவு செய்தேன்.
படங்களில் யுவன் ஷங்கர் ராஜா என்ற பெயரையே பயன்படுத்துவதால் இதுவரை அதிகாரப்பூர்வமாக எனது பாஸ்போர்ட் மற்றும் இதர கோப்புகளில் நான் எனது பெயரை மாற்றவில்லை. ஆனால் சில காலம் கழித்து அதைச் செய்வேன். இதைப் பற்றி எனது அப்பாவிற்குதான் நான் கடைசியாக தெரிவித்தேன். "நான் குரானை படிக்க ஆரம்பித்துள்ளேன். அது எனக்கு மன அமைதியைத் தருகிறது" என்றேன். அவர், "யுவன், நீ இஸ்லாமியனாக மாறுவதில் எனக்கு உடன்பாடில்லை" என்றார். ஆனால் எனது சகோதரரும் அவர் மனைவியும் எனக்கு ஆதரவளித்துள்ளனர்.
இது விசித்திரமாக இருக்கலாம். ஆனால் என் அம்மாவே என் கையைப் பிடித்துக் கொண்டு, "யுவன், நீ தனியாக இருக்கிறாய்.. இஸ்லாம் என்ற மரத்தின் கீழ் நீ நிற்க வேண்டும் என நான் விரும்புகிறேன்" என அவர் சொல்வதாக எனக்குப் பல முறை தோன்றியுள்ளது." என்று கூறியுள்ளார்.

மோடி மவுன சாமியாராகி விட்டார்!


 மோடி மவுன சாமியாராகி விட்டார்!

மோடி பதவியேற்று 60 நாட்கள் ஆகிவிட்டதாம். சரி இந்த 60 நாட்களில் அவர் என்னதான் செய்து விட்டார்? முக்கியமாக இந்த 60 நாட்களில் மோடி அரசியலில் ஊடகத்தின் பங்கை கட்டாயம் எழுத வேண்டும். காரணம் மோடி அரசின் குறைகளை ஒரு விழுக்காடு கூட மக்களுக்குக் கூறவில்லை. ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்று எனப்படும் ஊடகம் அரசின் தவறான கொள்கைமுடிவை எதிர்க்காமல் நாட்டில் ஒன்றுமே இல்லை என்பதுபோல கண்மூடி இருக்கிறது. தமிழகத்தில் இருந்தே பார்க்கலாம், தேர்தலுக்கு முன்பு மீனவர், ஈழத்தமிழர் போன்ற சிக்கல்களை மோடியின் கூட் டணிக் கட்சிகள் தான் அதிகம் பேசினர். மோடியின் எந்த பேச்சிலும் இலங்கை அல்லது மீனவர் பிரச்சனைகளை ஆழமாக பேசவில்லை; அப்போதே தெரிந்துவிட்டது மோடி மனதில் இலங்கை பற்றிய பார்வை என்ன என்பது. ஆனால் பாமக, மதிமுக, தேமுதிக இதர கூட்டணிக் கட்சிகளும் தமிழக பாஜகவும் மேடைக்கு மேடை முழங்கின.
ஈழம்
1. மீனவர்களை சிங்களக் கடற்படை கைது செய்வது தொடர்கிறது.
2. இலங்கை அரசுடன் உள்ளார்ந்த நட்புறவை மேற்கொள்வது.
3. ஈழத்தில் உள்ள மக்கள் தற்போது அமைதியாக வாழ்கிறார்கள் என்றெல்லாம் பேசுவது.
4. இலங்கையில் உள்ள ஆன்மீக மற்றும் புராதன சின்னங்களைப் பாதுகாக்க 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு
5. ஆந்திராவில் இலங்கை அரசுக்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் ஒதுக்கீடு, தொழில் தொடங்கவாம்!
6. மூன்று முறை இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல். பெரீஸ் இந்தியா வந்துள்ளார். ஈழத்தமிழர்கள் பற்றி எந்த ஒரு பேச்சும் பேசவில்லை.
7. அகதிகளை திருப்ப அனுப்பும் திட்டத்திற்கு ஆதரவு.
8. அய்நாவின் அகதிகள் மறுவாழ்வு திட்டத்திற்கு ஆதரவளிக்கவில்லை.
9. ராஜபக்சேவிற்கு ஆதரவாக அய்நா குழுவிற்கு விசாவழங்க மறுப்பு
10. இலங்கையில் நடக்கவிருக்கும் இராணுவக் கருத்தரங்கில் பங்கேற்க விருப்பது.
தமிழகம்
11. ரெயில்வே பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு
12. பொது பட்ஜெட்டில் தமிழகம் புறக் கணிப்பு.
13. இந்தித் திணிப்பு
14. சமஸ்கிருத வாரம் கட்டாயம் என்று கொண்டு வந்தது
15. நாடாளுமன்றத்தில் தமிழக உறுப் பினர்கள் கோரிக்கை புறக்கணிக்கப்படுவது
16. நதிநீர் தொடர்பான சிக்கல்களில் அமைதிகாண்பது
16. தமிழக அணைகளையும் நதிகளை யும் கேரளாவிற்கு சொந்தமானது என அறிக்கையில் குறிப்பிடுவது.
17. தமிழக மீனவர் பிரச்சினைகள் குறித்த தொடர் கடிதங்களுக்கு இதுவரை தீர்விற்கான பதில் அளிக்காதது.
18. முக்கிய வளர்ச்சிப்பணிகளுக்கான குழுவில் தமிழ் நாட்டிற்கான பிரதிநிதித் துவம் கொடுக்காதது.
19. முக்கிய தொழில் வளர்ச்சித் திட் டத்தில் தமிழகத்திற்கு பங்கு அளிக்காதது,
20. எழுவர் விடுதலை (ராஜீவ் கொலை வழக்கு) தொடர்பான வழக்கில் தமிழக மக்களின் உணர்வுகளைப் புறக்கணித்தது.
விலைவாசி
21. பணவீக்கம் தொடர்ந்து வீழ்ச்சியில் உள்ளது. 22. டாலர் 50-லிருந்து 60 ரூபாயைக் கடந்துவிட்டது.
23. ஏற்றுமதிக்கான எந்த ஒரு ஆக்க பூர்வமான செயல்திட்டமும் இல்லாமல் தேர்தல் பிரச்சார மேடைப் பேச்சு போன்றே அறிக்கை விடுவது.
24. இறக்குமதியைத் தாராளமாக்கி உள்நாட்டுத் தயாரிப்புகளுக்கு போட்டியை ஏற்படுத்துவது.
25. பதுக்கல்காரர்கள் தங்களின் நட வடிக்கையை மிகத்தீவிரமாக்கிவிட்டார்கள், இதுபற்றி வெறும் அறிக்கையோடு நின்று விட்டு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது.
25. தக்காளி விலை மும்பை ரூ85 சென்னை ரூ60, டில்லி ரூ90 கொல்கத்தா ரூ85 குஜராத்தைச் சேர்ந்த சூரத் நகரில் ரூ.100 இனி தொடர்ந்து திருவிழாக்காலம் வருவதால் விலைவாசி குறைவிற்கான எந்த ஒரு அறிகுறியும் தெரியவில்லை.
26. முக்கிய உணவுப்பொருள் விநியோகம் தனியார் வசம் ஒப்படைப்பு,
27. உணவுத் தானியங்களின் விலை தொடர்ந்து 17 விழுக்காடு உயர்ந்து வரு கிறது.
28. மருந்துப் பொருள்கள் தயாரிப்பு தனியார் வசம் ஒப்படைப்பு; விளைவு அத்தியாவசிய மருந்துகள் எழைகளுக்குக் கிடைக்காதது.
29. 88 விழுக்காடு மக்கள் பயன்படுத்தும் எரிவாயு உருளையின்விலை தொடர்ந்து மாதத்திற்கொருமுறை ஏற்றப்படும் என்று அறிவித்தது.
30. பெட்ரோல் டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை ஏற்றம்
வளர்ச்சிப் பாதை
31. போன ஆட்சியில் இருந்த திட்டங் கள் இன்றும் அப்படியே இயக்கப்படாமல் இருப்பது,
32. கட்டுமானப்பணிக்கான அனைத்து உபயோகப் பொருள்களும் விலை உயர்ந்து விட்டதால் முக்கிய நகரங்களில் விரிவாக்கப்பணி செயலிழந்துவிட்டது.
33. பல்வேறு திட்டப்பணிகளுக்கான நிர்வாகிகளை நியமிக்காதது.
34. மாநிலங்களின் வளர்ச்சிக்கான நிதிஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டுவது.
35. வளர்ச்சிப் பணிக்கான திட்டத்திற் கும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீட்டில் காண் பிக்கப்பட்ட தொகைக்கும் தொடர்பின்மை.
36. கங்கை சுத்திகரிப்பிற்கு பல ஆயிரம் கோடி ஆனால் நாட்டின் மற்ற அனைத்து நதிகளின் பராமரிப்பிற்கு சில நூறுகோடிக்கு ஒதுக்கீடு செய்தது. ஆனால் விவசாயத் திற்கு குறைந்த நிதி ஒதுக்கீடு.
37. நலிந்துவரும் தொழில்களுக்கு (கைத்தறி, குடிசைத்தொழில்) மானியம் மற்றும் பயிற்சிக்கான எந்த ஒரு திட்டமும் முன்வைக்காமை
38. முக்கியத்துறைகளில் தனியார் முழுமையாக உட்புக ஒப்புதல்.
39. அரசு கனரக தொழிற்சாலைகளின் பெரும்பான்மையான பங்குகள் தனியார் வசம்
40. அந்நிய நேரடிமுதலீடு முழுமையாக் கப்பட்டது.
பாதுகாப்புத் துறை
41. பாகிஸ்தான் 4 முறை போர்நிறுத்ததை மீறியதாக கூறப்படுவதற்கு இதுவரை அரசுத்தரப்பில் பதிலில்லை.
42. பாகிஸ்தான் ராணுவம் எல்லைப் பகுதியில் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 11 இராணுவவீரர்கள் மற்றும் 5 பொது மக்கள் உயிரிழப்பு.
43. சீனா தனது புதிய வரைபடத்தில் இந்தியாவின் அருணாச்சல் பிரதேசத்தைச் சேர்த்தது.
44. இலங்கையில் சீனாவின் விமான பழுதுபார்க்கும் தளம் அமைப்பதைக் கண்டு கொள்ளாமை.
45 கச்சத்தீவு இலங்கையின் சொத்து என நீதிமன்றத்தில் கூறியது.
46. ராணுவத்திலும் தனியார் முதலீடு,
47. கப்பற்படையில் தொடந்து நடக்கும் விபத்துகள் குறித்து இதுவரை எந்த ஒரு உறுதியான நடவடிக்கையும் எடுக்காதது,
48. சீனா அத்துமீறி இந்தியப்பகுதிகளில் தனது நிலைகளை அமைத்தது குறித்து இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமை,
49. எல்லையில் கண்காணிப்பை நவீனப்படுத்தும் திட்டத்திற்கு முக்கியத் துவம் கொடுக்காதது,
50. அதி முக்கியத்துறையான பாதுகாப்பு போன்ற முக்கிய அமைச்சகத்திற்கு தனி அமைச்சர் நியமிக்காமை.
தடுமாற்றம்
51. இந்திய காப்பீட்டுத்துறையில் அந்நிய முதலீட்டிற்கு அனுமதிகொடுத்தது,
52. ரெயில்வே பட்ஜெட்டில் பயண சீட் டின் விலை ஏற்றிவிட்டு, கிலோமீட்டருக்கு இவ்வளவு என்று நிர்ணயம் செய்து மக்களைக் குழப்பியது,
53. தங்க நாற்கர சாலைப் பணிகள் வடமாநிலங்களில் இன்றும் பாதியிலேயே இருக்கும் போது வைரநாற்கரச்சாலை என அவசரகதியில் அறிவித்தது. 54. விலையேற்றம் மற்றும் மக்கள் விரோத கொள்கைத் திட்டங்களை அறி வித்துவிட்டு, முந்தைய அரசின் மீது பழி போடுவது,
55. மதரீதியாக மொழிச்சிக்கலை உருவாக்கி கல்வித்திட்டத்தில் குழப்பத்தை விளைவிப்பது.
56, இந்தித் திணிப்பிற்கு முதல் முறை யாக நாடு முழுவதிலும் முக்கியத் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தது; உப்பு சப்பில்லாத காரணத்தை சொல்லி விளக்குவது,
57. வர்த்தகம் தொடர்பான எந்த ஒரு முன்னேற்பாடான ஆக்கபூர்வ நடவடிக் கைகளை இதுவரை மேற்கொள்ளாதது, 58. மத ரீதியாக ஒருபக்க சார்பு நிலையை மேற்கொண்டு வருவது
59. விளையாட்டுத்துறை முற்றிலும் புறக்கணிப்பு
60. மரபணுமாற்றம் குறித்த விவகாரத்தில் நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளின் வாழ்வாதாரத்தைச் சிதைக்கும் நட வடிக்கை எடுத்தது. மோடி அரசு கடந்த 60 நாட்களாக எந்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பையும் நடத்த வில்லை. அதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்போனால் பத்திரிகை யாளர்கள் எழுப்பும் கேள்விக்கு பதில் அளிக்க மோடியும் அவரது அமைச்சரவை சகாக் களும் பதில் கூறும் நிலையில் இல்லை. குஜராத் மாடல் என்று கூறி ஆட்சிக்கு வந்தார்கள். குஜராத் மாடல் என்பது இதுதான் போலும்! தேர்தலுக்கு முன் மோடிக்காக முழக்கம் போட்டவர்கள், மோடிக்காக நன்னடத்தை சான்று பத்திரங்களை அடித்துக் கொடுத்த வர்கள் எங்கே? எங்கே? மக்கள் முகத்தில் விழிக்க முடியாமல் பதுங்கியுள்ளவர் களைத் தேடிக் கண்டுபிடியுங்கள்! கண்டு பிடியுங்கள்! கண்டுபிடியுங்கள்!!

நன்றி:  கலி. பூங்குன்றன்
கலி. பூங்குன்றன்

ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

ஹிந்துத்துவ வெறியர்களின் மதவெறி

ஒரு முஸ்லிம் கசாப்புகடைகாறரை மாட்டின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கவைத்த ராஜஸ்தான் ஹிந்துத்துவ வெறியர்கள்.