புதன், 9 செப்டம்பர், 2009

மதமாற்றம் : முஸ்லிம் இளைஞர்களுக்கெதிராக வாக்குமூலம் அளிக்க மாணவிகள் மறுப்பு

பத்தணம்திட்டை: கேரள மாநிலம் பத்தணம்திட்டை என்ற இடத்திலுள்ள செண்ட் ஜான்ஸ் கல்லூரியில் கடைசிவருடம் எம்.பி.ஏ பட்டமேற்படிப்பு பயிலும் மாணவிகள் இஸ்லாத்தை தழுவியதைத் தொடர்ந்து அதனுடன் தொடர்புடைய முஸ்லிம் இளைஞர்களை பொய்வழக்கில் சிக்கவைக்க திட்டமிட்ட சில அதிகாரிகளின் முயற்சி தோல்வியில் முடிந்தது.

குற்றம்சுமத்தப்பட்ட ஷஹன்ஷாவும்,சிராஜுதீனும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜரானபொழுது இருவரும் செய்த குற்றம் என்ன என்று மாணவிகளோடு நீதிபதி கேள்வியெழுப்பினார். அதற்கு மாணவிகள் எந்த பதிலும் கூறாது மெளனம் சாதித்தனர். கடந்த மாதம் 21 ஆம் தேதி நீதி மன்றத்தில் ஆஜரான இளைஞர்களுக்கு தீவிரவாதத்தொடர்பு இருப்பதாகவும் அதைப்பற்றி அரசு விசாரித்துவருவதாகவும் அரசு தரப்பு வழக்கறிஞர் முஹம்மது அன்ஸார் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

ஆனால் நேற்று மாணவிகள் மெளனம் சாதித்ததால் அரசுதரப்பு மற்றும் காவல்துறையின் வாதத்தை நீதிமன்றம் தள்ளுபடிச்செய்தது. இம்மாதம் 30 ஆம் தேதி வரை முஸ்லிம் இளைஞர்களுக்கெதிராக எந்தவொரு போலீஸ் நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார். உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிட்ட மலையாள மனோராமாவின் செயலுக்கு நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.

இஸ்லாத்தை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்ட மாணவிகளை பயமுறுத்தி முஸ்லிம் இளைஞர்களை பொய்வழக்கில் சிக்கவைக்கும் முயற்சியில் சில முக்கிய போலீஸ் அதிகாரிகளும், பாரதிய ஜனதா கட்சி தலைவர் ஒருவரும் செயல்படுவதாக ஏற்கனவே தேஜஸ் செய்தி வெளியிட்டிருந்தது. முஸ்லிம் இளைஞர்கள் மீது தீவிரவாத குற்றம் சுமத்தி கட்டாயமதமாற்றம் செய்ததாக பொய்வழக்கு போடுவதற்கு காவல்துறை முயற்சி எடுத்தது. இதற்கு உதவியாக சில பத்திரிகைகளும் பொய்க்கதைகளை கிளப்பிவிட்டன.

கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கர என்ற இடத்திலிலுள்ள கழியோத் பங்களாவில் பினோ ஜேக்கப், திருவனந்தபுரம் பேரூர்கடை என்ற இடத்திலிலுள்ள இந்திரா நிவாஸில் வசிக்கும் மிதுலா ஆகிய மாணவிகள்தான் இஸ்லாத்தை பற்றி சுயமாக படித்த பிறகு இஸ்லாத்தை மனப்பூர்வமாக தங்கள் வாழ்க்கைநெறியாக்க தயாரானார்கள்.

இதே கல்லூரியில் பயிலும் சீனியர் மாணவரான ஷாஹன்ஷாவுடனான நட்பு இஸ்லாத்தை குறித்து அதிகமறிய இவர்களுக்கு உதவியது. தொடர்ந்து தாங்கள் விரும்பியவர்களை திருமணம் செய்ய இவர்கள் முயன்றபொழுதுதான் இவர்களின் பெற்றோர்களும், உறவினர்களும் பயமுறுத்தி பலாத்காரமான முறையில் அழைத்துச்சென்றனர்.

மிதுலாவின் உறவினரான பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத்தலைவரின் தலையீடும், மாணவிகளின் உறவினரான ஐ.ஜி.ராங்கிலிலுள்ள போலீஸ் அதிகாரி மற்றும் ஸ்பெஷல் பிராஞ்ச் அதிகாரி ஆகியோரின் தலையீட்டினாலும் இச்சம்பவம் சர்ச்சையானது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

செவ்வாய், 8 செப்டம்பர், 2009

இனவெறி தாக்குதல்:லண்டனில் இந்தியர் பலி-ஸ்காட்லாந்து யார்டு விசாரணை

லண்டன்: லண்டனில் இனவெறி தாக்குதலுக்கு ஆளான இந்தியர் ஒருவர் சிகிச்சை பலனளிக்காமல் மருத்துவமனையில் பலியானார். இது தொடர்பாக ஐந்து பேரை கைது செய்து ஸ்காட்லாந்து யார்டு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொல்கத்தாவை சேர்ந்தவர் எக்ரம் உல் ஹாக். 67 வயதான இவர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இளம் வயதிலே குடியேறி சுகாதார துறையில் வேலைபார்த்து வந்தார்.

அவர் கடந்த மாதம் 31ம் தேதி லண்டன், ச்ர்ச் லேன் டூடிங் பகுதியில் இருக்கும் மசூதி ஒன்றுக்கு சென்றுவிட்ட தனது நான்கு வயது பேத்தியுடன் திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த 12 முதல் 15 வரையிலான நான்கு சிறுவர்கள் எக்ரம் உல் ஹாக்கை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த இனவெறி தாக்குதலில் பலத்த காயமடைந்த எக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையி்ல் நேற்று அவரது நிலைமை மோசமைடந்து மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அவருக்கு செயற்கை சுவாச கருவிகள் பொறுத்தப்பட்டது. என்றாலும் அவர் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு மரணமடைந்தார்.

இது குறித்து ஸ்காட்லாந்து யார்டு போலீசார் விசராணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து ஸ்காட்லாந்து யார்டு போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,

இந்த தாக்குதல் சம்பவத்தை கொலை வழக்காக மாற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறோம். பிரேத பரிசோதனை அறிக்கை விரைவில் கிடைத்துவிடும்.

இந்த வழக்கு தொடர்பாக ஐந்து இளைஞர்களை கைது செய்து விசாரித்து வருகிறோம். அவர்கள் சுட்டான் இளம்சிறார்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள் என்றார்.

இஷ்ரத் ஜெஹான் நிரபராதி - கோர்ட் தீர்ப்பு

2004 ல் குஜராத் பிரதமர் மோடியை கொலை செய்ய வந்த லஷ்கர் ஈ தோய்பா தீவிரவாதிகள் என்று காரணம் கற்பிக்கப் பட்டு கொல்லப்பட்ட 19 வயது நிரம்பிய இஷ்ரத் ஜெஹான் மற்றும் அவருடன் இருந்த மற்ற 4 பெரும் நிரபராதிகள் என்றும் அவர்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் எந்த தொடர்புமில்லை என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

SP Tamang சமர்ப்பித்த 243 பக்க அறிக்கையில் இஷ்ரத் ஜெஹான் ஒரு அப்பாவி என்றும் அவர் கொல்லப்பட்டது முஸ்லீம் என்ற காரணத்தினால் மட்டுமே என்று கூறியுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டதாவது, போலீஸார் இவர்கள் மோடியை கொல்லவந்தனர் என்று இந்த போலியான என்கவுன்டரை அரங்கேற்றியது பதக்கங்களையும் பரிசுகளையும் பெற்று மோடியின் அன்பையும் பெறுவதற்காகவே என்று கூறியுள்ளது.

இவர்களுடைய கொலையில் குற்றம் சாட்டப்பட்ட 20 போலீசார்களில், குஜராத் கூடுதல் DGP (உளவுத் துறை ) P C Pandey, போலீஸ் துணை கமிஷனர் (Gujarat ATS) G L Singhal, ஓய்வு பெற்ற போலீஸ் கமிஷனர் K R Kaushik, அஹமதாபாத் குற்றப் பிரிவின் போலீஸ் இன்ஸ்பெக்டர் Tarun Barot, மேலும் முன்னால் கூடுதல் போலீஸ் கமிஷனர் (குற்றப் பிரிவு) D G Vanazara மற்றும் முன்னால் போலீஸ் துணை கமிசனர் N K Amin ( இவர் இருவரும் சொராபுதீன் போலி என்கவுண்டர் குற்றத்திற்காக ஏற்கனவே சிறையில் உள்ளனர் ) இவர்களும் அடங்குவர்.

நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு இஷ்ரத் ஜெஹான், அவருடைய குடும்பம் மற்றும் முஸ்லீம் சமுதாயத்தின் மேல் கற்பிக்கப்பட்ட களங்கத்தை துடைப்பதாக இருக்கின்றது.

இந்த விசாரணை முடிவு இஷ்ரத்தின் குடும்பத்தார் எடுத்த இடைவிடா முயற்சியின் காரணமாக கிடைத்த பலனாகும்.

நன்றி
NDTV
-------------------------------------------------------------------------------------------------

நம்மில் பல பேர் இந்த சம்பவத்தை மறந்திருப்போம், இன்று இந்த விசாரணை முடிவு நமக்கு தெரிந்தாலும் கூட அது நமக்கு ஒரு பெரிய செய்தி அல்ல. சுனாமியையே மூன்று நாளைக்குள் மறந்துவிட்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய கூட்டம் தானே நாம். நமக்கு இதெல்லாம் ஒரு செய்தியா. இந்த படுகொலை எங்கோ நடந்தது தானே....

நாம் இவ்வாறு இருந்து விடாமல், நம்மீது சுமத்தப்பட்ட களங்கம் துடைக்கப்பட்டதையும், மோடியின் இனவெறி பிடித்த ஃபாசிச அரசாங்கம் நடத்திய படுகொலையை, இந்த உலகத்திர்க்கு எடுத்துச்சொல்வோம்.

thanks to: Wafiq

ஜின்னா விவகாரம் - பெரியாருக்கு முரண்படும் கலைஞர்



-செந்தமிழ்ச்செல்வன்

இந்திய அரசியல் தலைவர்களில் மிக மூத்தவரான கலைஞர் கருணாநிதி, ஜின்னாவைப் பற்றி புதிய சர்ச்சைக் கிளப்பியிருக்கிறார். இந்திய விடுதலைக்கு முன்னும் பின்னும் பொதுவாழ்வில் உள்ள மிகச் சொற்பமான தலைவர்களில் ஒருவரான கலைஞர் கருணாநிதி, வார்த்தை அழகுக்காக உண்மைகளை ஊமையாக்குவது வேதனைக்குரியது.

கேள்வியும் அவர் அளித்த பதிலும்
கேள்வி: ''ஜின்னாவைப் பற்றி முன்னாள் மத்திய மந்திரி ஜஸ்வந்த் சிங் எழுதிய புத்தகம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளதே?
பதில்: ''அப்போது நாட்டின் பிரிவி னைக்கு வித்திட்டார். இப்போது பாரதீய ஜனதா பிரிவினைக்கு வித்திட்டுள்ளார்''.

நாட்டுப் பிரிவினைக்கு ஜின்னா வித்திட்டார் என்பது இந்து மகாசபை, ஜன சங்கம், ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. ஆகிய மதவாத இயக்கங்கள் பரப்பிவிட்ட அவதூறு.
பெரியாரின் பெருந்தொண்டனாக தன்னைக் கூறும் முதலமைச்சர் கருணாநிதி, அதே கூற்றை எதிரொலிப்பது சரியா?

ஏற்கனவே அவதூறு கூறியவர்களில் சிலரே திருந்தி உண்மைகளைப் போட்டு உடைத்துக் கொண்டிருக்கும் போது, பழைய பொய்யை பகுத்தறிவாளர் பரப்புவது சரியா?

பெரியார் திராவிடர் கழகம் 2001ம் ஆண்டில், பொள்ளாச்சியில் நடத்திய மாநில மாநாட்டில் சிறப்புரையாற்றிய திமுகவின் வெளியீட்டுச் செயலாளர் திருச்சி செல்வேந்திரன், நாட்டுப் பிரிவி னைக்கு ஜின்னா காரணமில்லை என்பதற்கு சரஞ்சரமாகச் சான்றுகளைத் தந்தார். அதில் ஒன்று,

''கவிஞர் இக்பால், முஸ்லிம்களுக்காக ஒரு தனி தேசம் தேவை என்று கூறு கிறாரே என்று ஜின்னாவிடம் பத்திரிகையாளர்கள் கேட்க, 'ஒன்றுபட்ட இந்தியா' என்பதில் உறுதியாக இருந்த ஜின்னா, Don't you know poets are dreamers?' கவிஞர்கள் கனாக்காரர்கள் என்று உங்களுக்குத் தெரியாதா? என்று பதிலுக்கு கேட்டாராம்.

கட்சிப் பேச்சாளருக்குத் தெரிந்த செய்தி கலைஞருக்குத் தெரியவில்லையா? அல்லது தெரிந்தும் தெரியாதது போல் வார்த்தைகயாடுகிறாரா தெரியவில்லை.
'வித்திடுதல்' என்றால் முதன்முதலாக ஒரு கருத்தை விதைத்தல் என்று பொருள். நாட்டுப் பிரிவினை என்ற கருத்தை முதலில் விதைத்தவர்கள் யார்?
ஜின்னா அல்ல. அன்றைய இந்து மகாசபைத் தலைவர்கள்தான்.

1933ல் இந்து மகாசபை தலைவராக இருந்த பாய்பரமானந்தர், பிரிட்டிஷ் இந்தியாவை மத அடிப்படையில் இரு நாடுகளாகப் பிரிக்க வேண்டும் என முதன்முதலில் சொன்னவர்களில் முதன்மையானவர்.

''இப்போதுள்ள பாகிஸ்தான் பகுதியைச் சிந்துவிற்கு அப்பாற்பட்ட ஆப்கானிஸ் தான் முதலியவற்றோடு இணைந்து ஒரு மாபெரும் 'முஸல்மான் பேரரசு' உருவாக் கப்பட வேண்டும். அங்குள்ள இந்துக்கள் இங்கு வந்துவிட வேண்டும். இங்குள்ள முஸ்லிம்கள் அங்கு போய்விட வேண்டும்'' என்றார்.இந்த யோசனை 1905ம் ஆண்டி லேயே தனக்கு உதித்துவிட்டதாக பாய் பரமானந்தர் கூறினார்.

1937ம் ஆண்டு அகமதாபாத்தில் நடைபெற்ற இந்து மகாசபை மாநாட்டில் அப்போதைய இந்து மகாசபை தலைவர் சாவர்க்கர், ''இந்தியாவை ஒற்றைத் தேசமாகக் கருத முடியாது. முக்கியமாக இரண்டு தேசங்கள் இந்தியாவிற்குள் உள்ளன. ஒன்று இந்துக்களின் தேசம், மற்றது இஸ்லாமியரின் தேசம்'' என்றார்.

இப்போது சொல்லுங்கள். தேசப் பிரிவினைக்கு வித்திட்டது யார்? இரட்டை தேசக் கோட்பாட்டை (Two Nation theory) கண்டுபிடித்தது யார்?

ஜின்னா மூன்று கோரிக்கைகளை முன்வைத்தார்
1. மத்திய சட்டமன்றத்தில் முஸ்லிம் களுக்கு மூன்றில் ஒரு பங்கு பிரதி நிதித்துவம்,
2. பஞ்சாப் மற்றும் வங்கத்தில் முஸ்லிம் களுக்கு விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம்,
3. சிந்து, பலுசிஸ்தான் மற்றும் வட மேற்கு எல்லை மாகாணம் என மூன்று முஸ்லிம் பெரும்பான்மை மாகாணங் களை உருவாக்குதல்.

ஜின்னா முன்வைத்த கோரிக்கைகள் திராவிட இயக்கத்தின் விகிதாச்சார பிரதிநிதித்துவத்தின் அடிப்படையைக் கொண்டவை.எனவே, ஜின்னாவின் திட்டத்தை அறிவு ததும்பும் திட்டம் என தந்தை பெரியார் பாராட்டினார். அண்ணாவுடன் சென்று ஜின்னாவை சந்தித்தும் பேசினார். காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் பலரும் ஜின்னாவின் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டனர்.
தேஜ் பகதூர் சப்ரு போன்ற காங்கிரஸ் தலைவர்கள் காங்கிரஸ் மாநாட்டில் வெளிப் படையாகவே ஜின்னாவின் கோரிக்கைகளை ஆதரித்துப் பேசினர். (பேரா. அ. மார்க்ஸின் 'இஸ்லாமியருக்கு எதிரான கட்டுக்கதைகள்' நூலில் விரிவான விவரங்கள் உள்ளன).

இந்து மகாசபைத் தலைவர்களும், காங்கிரஸில் ஊடுருவியிருந்த இந்துத்துவாவாதிகளும் அன்று செய்த சதிதான் தேசப் பிரிவினை.இன்றும் இறந்து போன ஜின்னா வந்து பாஜகவை சின்னாபின்னமாக்கவில்லை. அங்குள்ள பல கோஷ்டியினர் ஜின்னாவைக் கருவியாக்கி, கதை நடத்துகிறார்கள் அவ்வளவே.டைம்ஸ் ஆஃப் இந்தியா, ஜூனியர் விகடன் போன்ற பத்திரிகைகள், நகைச்சுவைக்காக ஜின்னா பாஜகவைப் பிரித்து விட்டார் என்று எழுதின.

மாநில முதலமைச்சர், இந்தியாவின் மூத்த தலைவர், இப்படிக் கூறலாமா?

திங்கள், 7 செப்டம்பர், 2009

மோடி அரசுக்கு விருது வழங்கக்கூடாது:அமெரிக்க இந்திய முஸ்லிம் கவுன்சில் வலியுறுத்தல்


அமெரிக்காவிலிருந்து வெளிவரும் FDI(Foreing Direct Investement) என்ற‌ ப‌த்திரிகை இந்த‌ ஆண்டிற்கான‌ Asian Personality Award என்ற‌ விருதை குஜ‌ராத் மாநில‌ முத‌ல்வ‌ராக‌ இருக்கும் ந‌ரேந்திர‌ மோடிக்கு வ‌ழ‌ங்க‌ப்போவ‌தாக‌ அறிவித்த‌து.
இந்த‌ அறிவிப்பு வெளியான‌வுட‌ன் கொதித்துப்போன‌ ம‌னித‌ உரிமை அமைப்புக‌ள் FDI ப‌த்திரிகைக்கு க‌டும் க‌ண்ட‌ன‌ம் தெரிவித்த‌தோடு 2002 ஆம் ஆண்டு 20 ஆயிர‌ம் முஸ்லிம்க‌ளை ந‌ர‌ப‌லிக்கொடுத்த‌ ந‌ரேந்திர‌மோடிக்கு இந்த‌ விருதை வழங்கக்கூடாது என்று க‌டும் எதிர்ப்பை போராட்ட‌ங்க‌ளின் மூல‌ம் வெளிப்ப‌டுத்தின‌ர்.
ம‌னித‌ உரிமை ஆர்வ‌ல‌ர்க‌ளின் க‌டும் எதிர்ப்பைத்தொட‌ர்ந்து விருது அறிவிப்பில் திருத்த‌ம் செய்த‌ FDI ப‌த்திரிகை இவ்விருதை குஜராத் மாநில‌ அர‌சுக்கு வ‌ழ‌ங்குவ‌தாக‌ அறிவித்துள்ள‌து.அமெரிக்க இந்திய முஸ்லிம் கவுன்சில் FDI யின் இந்த அறிவிப்பை வரவேற்ற அதே வேளையில் குஜராத் அரசிற்கு FDI விருது வழங்க தீர்மானித்துள்ளதை திரும்பபெறவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

2002 ஆம் ஆண்டு மோடி தலைமையில் நடைபெற்ற அரச பயங்கரவாதத்தின் மூலம் நூற்றுக்கணக்கான முஸ்லிம் பெண்கள் தெருக்களில் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டார்கள். 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் இன அழித்தொழிப்பிற்கு இரையானார்கள்.சுமார் 500 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான முஸ்லிம்களது சொத்துக்கள் சூறையாடப்பட்டது. இந்திய தேசம் சுதந்திரமடைந்ததிலிருந்து இதுவரை கண்டிராத இந்த கொடூரத்திற்கு முக்கிய சூத்திரதாரி நரேந்திரமோடி என்பது அனைவருக்கும் வெட்ட வெளிச்சமான உண்மை.

கடந்த 7 வருடங்களாக இத்தகைய கொடூரங்களை நிகழ்த்தியும் சட்டத்தையும் நீதித்துறையும் ஏமாற்றிவந்த மோடி அரசின் நடவடிக்கைக்கு எதிராக கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி இந்திய உச்சநீதிமன்றம் குஜராத் இனஅழித்தொழிப்பிற்கு காரணமான 64 நபர்கள் மற்றும் மோடியிடமும் விசாரணை மேற்கொள்ள சிறப்பு புலனாய்வு பிரிவிற்கு(S.I.T) உத்தரவிட்டது. "மோடியின் கண்காணிப்பின் கீழில்தான் முஸ்லிம்களுக்கெதிரான கூட்டுப்படுகொலைகள் நிகழ்ந்தது.இவ்வளவு அக்கிரமங்கள் நிகழ்ந்தபிறகும் மோடி தொடர்ந்து குஜராத்தின் முதல்வராகத்தான் இருந்துவருகிறார். இந்நிலையில் விருதினை மோடிக்கு பதிலாக குஜராத் அரசிற்கு வழங்குவது என்பது ஹிட்லருக்கு பதிலாக நாசி இயக்கத்திற்கு விருது வழங்குவது போன்றதாகும்" என்று அமெரிக்க இந்திய முஸ்லிம் கவுன்சிலின் தலைவர் ரஷீத் அஹ்மத் கூறுகிறார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், "2002 குஜராத் இன அழித்தொழிப்பில் பாதிக்கப்பட்ட பத்தாயிரக்கணக்கான முஸ்லிம்கள் இன்னும் அகதிகள் முகாமில் அல்லலுற்று வருகின்றனர். இன அழித்தொழிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கெதிரான வழக்கில் மோடி தலைமையிலான குஜராத் அரசு தொடர்ந்து பலத்தடைகளை ஏற்படுத்தி வருகிறது என்றார்" .

2005 ஆம் ஆண்டு அமெரிக்க அரசு குஜராத்தில் மோடி தலைமையிலான பாசிச பயங்கரவாதிகள் நட்த்தைய முஸ்லிம் இன படுகொலைகளை காரணம் காட்டி நரேந்திரமோடிக்கு விசா தர மறுத்தது.சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியல்வாதிகள் மத ரீதியான பாரபட்சத்தை கைவிடாவிட்டால் மீண்டும் 2002 இனப்படுகொலை திரும்பவும் நடப்பதற்கான ஆபத்து இருப்பதாகவும் இது இந்தியாவின் மத சகிப்புதன்மையற்ற நிலையை படம்பிடித்துக்காட்டுவதாகவும் கூறியுள்ளது.

ஐ.நா சபையால் மத சுதந்திரம் மற்றும் நம்பிக்கைப்பற்றிய அறிக்கையை தொகுத்தளிக்க நியமிக்கப்பட்டுள்ள அஸ்மா ஜஹாங்கீர் கூறுகையில் 2002 குஜராத் படுகொலைகளுக்குபின் தொடர்ந்து நடைபெற்றுவரும் கடும் விளைவுகளை முஸ்லிம் சமுதாயத்தைச்சார்ந்தவர்கள் தன்னிடம் பகிர்ந்துக்கொண்டதாக தெரிவிக்கிறார். மோடி தலைமையிலான குஜராத் அரசு வெளிநாட்டு முதலீடுகளை கவருவதாக மீடியாக்களில் விளம்பரம் செய்யப்பட்டாலும் ஃப்ரண்ட்லைன் பத்திரிகையின் டியொன்னே புன்ஷா மற்றும் தி மின்டின் ஸலீல் திருப்பதி ஆகிய பத்திரிகையாளர்கள் இது சம்பந்தமாக மேற்க்கொண்ட சுதந்திரமான ஆய்வறிக்கையில் கூறியிருப்பது என்னவென்றால் குஜராத்தில் மோடி முதல்வராக பதவியேற்றபின்புதான் வெளிநாட்டு முதலீடுகள் குஜராத்திற்கு வருவதில் தொடர்ந்து சரிவை சந்தித்துவருவதாக குறிப்பிடுகின்றனர். இதனை அமெரிக்காவில் 10 கிளைகளைக்கொண்ட அமெரிக்க இந்திய முஸ்லிம் கவுன்சில் தெரிவித்துள்ளது.

மோடி அரசால் அநியாயமாக 5 வருடம் சிறைவாசம் அனுபவித்த மவ்லான நஸீருத்தினுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவு.


குஜராத் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீவைத்ததாக குற்றஞ்சுமத்தி 5 வருடமாக கொடூரமான முறையில் மோடி அரசால் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஹைதராபாத்தைச்சார்ந்த மவ்லான நஸீருதீனுக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் மோடி அரசின் இத்தகைய அநீதத்தை கண்டித்துள்ளது உச்சநீதிமன்றம்.கடந்த 7 மாதங்களாக உச்சநீதிமன்றத்தில் மவ்லானாவின் ஜாமீன் மனு நிலுவையிலிருந்தது.3 முறை நீதிமன்றம் மோடி அரசை பதிலளிக்குமாறு கேட்டுக்கொண்டபிறகும் இதுவரை எந்தவொரு பதிலையும் அளிக்கவில்லை.

(செப்.5) உச்சநீதிமன்றத்தில் மவ்லானாவின் ஜாமீன் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.உச்சநீதிமன்றத்தின் எண்.9 இல் நடைபெற்ற விசாரணையை நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு மற்றும் அசோக் குமார் கங்கூலி ஆகியோர் கொண்ட பெஞ்ச் மேற்க்கொண்டது.

மவ்லானாவிற்காக வாதாடிய வழக்கறிஞர் காமினி ஜெய்ஸ்வால் வாதாடுகையில்,”குஜராத் அரசு தொடர்ந்து இவ்வழக்கில் தாக்கல்செய்யப்பட்டுள்ள ஜாமீன் மனுவிற்கு மறுத்துவருகிறது,இது ஜாமீன் வழங்குவதற்கு பெருந்தடையாக இருக்கிறது.குஜராத் அரசின் இந்நடவடிக்கை ஒரு இந்தியபிரஜைக்கான உரிமையை மறுப்பதாகும். மேலும் குஜராத் அரசால் மவ்லானா சபர்மதி எக்ஸ்பிரஸ் எரிப்பிற்கு சதி திட்டம் தீட்டினார் என்பதற்கு எந்தவொரு ஆதாரத்தையும் சமர்ப்பிக்க இயலவில்லை. 2006 ஆம் ஆண்டே இவ்வழக்கை விரைந்து முடிப்பதற்கு உச்சநீதிமன்றம் குஜராத் அரசிற்கு வழிகாட்டுதல் வழங்கியும் அதனை நிறைவேற்ற குஜராத் அரசால் நிறைவேற்ற இயலவில்லை.மேலும் அடிக்கடி அரசு தரப்பு வழக்கறிஞர் மாற்றப்படுவதால் இவ்வழக்கு விரைவில் முடியும் என்ற நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது.” என்று கூறிய ஜெய்ஸ்வால் மவ்லானாவிற்கு உடனடியாக ஜாமீன் வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

மவ்லானாவிற்கு ஜாமீன் வழங்குவது வழக்கு விசாரணையை பாதிக்கும் என்று கூறி டுமையாக எதிர்ப்புதெரிவித்தார் குஜராத் அரசு தரப்பு வழக்கறிஞர்.ஆனால் இவ்விஷயத்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக எடுத்துக்கொண்ட நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு குஜராத் அரசு தரப்பு வழக்கறிஞரிடம்,”ஏற்கனவே 6 வருடங்கள் விசாரணை இல்லாமலே கழிந்துவிட்டது.அவருடைய வயதை கணக்கில் எடுத்துக்கொண்டு பார்த்தால் நீங்கள் அவருடைய வாழ்நாள் முழுவதையும் எடுத்துக்கொண்டுதான் வெளியே விடுவிப்பீர்கள் போலுள்ளது”.என்று கூறினார். தீவிரவாதத்தின் பெயரால் நிர்கதியாக்கப்பட்ட குடும்பம்

மவ்லானா நஸீருதீன் 2004 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கைதுச்செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.சுப்ரீம் கோர்ட் மவ்லானாவிற்கு ஜாமீன் வழங்கியதற்கு “இது பிற கைதிகளுக்கும் ஜாமீன் மனு சமர்ப்பிக்க முன்னுதாரணம் ஆகிவிடும்”என்று குஜராத் அரசு வழக்கறிஞர் கூறியதற்கு நீதிபதிகள்,”நீதிமன்றம் மூடப்பட்டால் என்ன ஆகும்” என்று கேள்வியை விடுத்தார்கள்.

இவ்வழக்கில் ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றத்தின் உத்தரவை வரவேற்ற ஹைதரபாத்தை தலைமையிடமாக்க்கொண்ட சிவில் லிபர்டீஸ் கண்காணிப்புகுழுவின் பொதுச்செயலாளர் லத்தீஃப் முஹம்மதுகான் twocircles என்ற இணையதள இதழுக்கு பேட்டியளிக்கையில்,”இத்தீர்ப்பு மவ்லானாவின் குடும்பத்திற்கு நிம்மதியைதரும். குஜராத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதியான நம்பிக்கையைத்தருவது உச்சநீதிமன்றம்தான்.மேலும் முஸ்லிம்களுக்கு குஜராத் நீதிமன்றங்களில் நீதிகிடைக்காது”என்று கூறினார்.

மவ்லானாவின் மகன்கள் 3 பேர் பல்வேறு வழக்குகளில் சம்பந்தபடுத்தப்பட்டு வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். முன்பொருமுறை மவ்லானாவின் மனைவியை பேட்டிக்கண்டபொழுது உள்ளூர் காவல்துறையினர் உன்னுடைய மகன்கள் வளரும்போது வழக்கில் சிக்கவைப்போம் என்று மிரட்டியதாக கூறியதை நினைவுக்கூர்ந்தார் லத்தீஃப்.

செய்தி:Twocircles.net

ஞாயிறு, 6 செப்டம்பர், 2009

காவிகள் - கறுப்புப் பணம் - கத்திக் குத்து.

ஜெய்ப்பூர்: 03-09-2009

விஷ்வ ஹிந்து பரிசத்தின் தலைவர்களுள் ஒருவரான தாமோதர் மோடியின் வீட்டில் 10 கோடி ரூபாய் கறுப்புப் பணம் கண்டெடுப்பு. கட்டு கட்டாக இரும்புப் பெட்டியில் அடுக்கி வைக்கப் பட்டுருந்தன. தாமோதர் மோடியின் வீட்டில் வேலை செய்தவர் அதே வீட்டில் கத்தியால் குத்தப் பட்டிருக்கிறார்.

சுஷில் என்பவர் விஷ்வ ஹிந்து பரிசத்தின் தலைவர்களுள் ஒருவரான தாமோதர் மோடி என்பவரது வீட்டில் 15 வருடங்களாக பணிபுரிந்து வருகிறார். அவர் தாமோதர் மோடியின் வங்கி லாக்கரின் சாவியை தொலைத்ததாக கூறப்படுகிறது. மோடியின் குடும்பத்தார் சுஷிலிடம் அந்த சாவியை கண்டுபிடித்து தருமாறு கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், அன்று இரவே , சுஷில் அந்த பகுதியைச் சேர்ந்த மோடியின் வீட்டில் வேலை செய்த மோடியின் அடியாட்களால் குத்தப் பட்டிருக்கிறார்.


கடந்த மாதம் நடந்த வருமான வரிச் சோதனையில், மோடியின் வீட்டிலிருந்து 10 கோடி ரூபாய் கறுப்புப் பணமும், அவரது வங்கி லாக்கரில் 13 கோடி ரூபாயும் வருமான வரித்துறை அதிகாரிகளால் கண்டெடுக்கப் பட்டது.

பல இடங்களில் குத்துக் காயம் பட்ட சுஷிலின் உடல் நிலை மருத்துவமனையில் தேறி வருகிறது. அவர் கூறியதாவது, "மோடியின் பேத்தி என்னை தொலைந்து போன லாக்கர் சாவியை தேட சொன்னார். அவர் என்னை மற்ற வேலையாட்களுடன் சேர்ந்து அவர்கள் தங்கும் இடத்தில் பூய் தேடச்சொன்னார். நான் அங்கு சென்று பார்க்கும் போது நான் தாக்கப் பட்டேன்," என்று அவர் கூறினார்.

இந்த சம்பவத்தை போலீஸார், சுஷில் தாமோதரின் கறுப்புப் பணம் பற்றிய தகவல் தெரிந்ததால் தாக்கப் பட்டாரா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். இதிலாவது உண்மை வெளி வருமா, இல்லை வழக்கம் போல் உண்மை மூடி மறைக்கப் படுமா? பொறுத்திருந்து பார்ப்போம். . .

நன்றி
NDTV