இறை நம்பிக்கை கொண்டோர்களே உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் பயபக்தயுடையோர் ஆகலாம். திருக்குர்ஆன் 2:183)
புதன், 2 ஜூன், 2010
சிமி சட்ட விரோதமான இயக்கமா?- கருத்துக் கேட்க முடிவு
அதன் படி, ஜூன்21 மற்றும் 23 ஆகிய தேதிகளில் காலை 10.30 மணியிலிருந்து மாலை 4.15 மணி வரை Court Hall No.2, Karnataka Appellate Tribunal, 2nd Phase, 2nd Floor, MS Buildings என்ற முகவரியில் இவ்வாணையம் கூட்டங்கள் நடத்த உள்ளது.
இதில் பொது மக்கள் கலந்து கொண்டு சிமி பற்றிய தங்கள் கருத்துக்களை இவ்வாணையம் முன் எடுத்துரைக்கலாம்.
விருப்பமுள்ளவர்கள் ஆதாரத்துடன் தங்கள் கருத்துகளை மனுக்களாகவும் சமர்பிக்கலாம். இம்மனுக்கள் இவ்வாணையம் நடத்த உள்ள கூட்டங்கள் கூடும் முன் தயார் செய்யப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்படுள்ளது.
source:Times of India
இஸ்ரேலின் தாக்குதலும் இந்திய ஊடகங்களின் அமைதியும்
உலக நாடுகள் அனைத்தும் எதிர்பார்த்த வண்ணம் இந்தக் கப்பலை காஸ்ஸாவிற்கு செல்லவிடாமல் சுமார் 150 கிலோமீட்டருக்கு கடல் பகுதியில் இஸ்ரேல ஆக்கிரமிப்பு இராணுவதால் சிறை பிடிக்கப்பட்டது.
பல நாடுகள் இஸ்ரேலிடம் நிவாரணப் பொருட்களை கொண்டு வந்த கப்பலை காஸ்ஸாவிற்குள் அனுமதிக்குமாறு கூறியும் வழக்கம் போல தனது அடவடித்தனமே இஸ்ரேலின் பதிலாக இருந்தது.
கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு பின் நேற்று காலை இஸ்ரேல ராணுவம் அதிரடியாக கப்பலுக்குள் தமது ராணுவத்தை அனுப்பி கப்பலில் இருந்த பத்திரிக்கையாளர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைவரின் மீதும் மிருகத்தனமான தாக்குதலை நடத்தி கிட்டத்தட்ட இருபதிற்கும் அதிகமான மக்களை கொன்று குவித்துள்ளது.
கப்பலில் ராணுவம் செய்த அட்டூழியங்களை கப்பலில் வைக்கப்பட்ட ரகசிய கேமரா மூலம் AL JAZEERA தொலைக்காட்சி அம்பலப்படுத்தியது. ஆனால் இதை மறுத்த இஸ்ரேலிய அரசு வழக்கம் போல கப்பலில் இருந்தவர்கள் ராணுவத்தை நோக்கி தாக்குதல் நடத்தினர். எனவே தான் ராணுவம் தாக்குதல் நடத்த நேரிட்டது என ஒரு அற்பமான பொய்யை கூறி உள்ளது இந்தத் தாக்குதலில் இறந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் துருக்கியை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
இத்தாக்குதல் குறித்து உலக நாடுகள் அனைத்தும் கண்டனம் தெரிவித்துள்ளது. உலகில் உள்ள அனைத்து ஊடகங்களும் இந்த செய்தியை முதன்மை செய்தியாக வெளியிட்டன.
ஆனால் இந்திய ஊடகங்களை தவிர. குறிப்பாக தமிழ் ஊடகங்கள் மிகவும் கேவலமான முறையில் அப்படி ஒரு தாக்குதலே நடக்க வில்லை என்பது போல ஒரு செய்தியையும் வெளிவிட வில்லை. இது தான் பத்திரிக்கை சுதந்திரம்.அதே நேரத்தில் பலஸ்தீனியர்களின் தாக்குதலில் ஒரு இஸ்ரேலியர் காயம் பட்டாலும் அதை பெரிய செய்தியாக போடும் நமது ஊடகங்களின் நடுநிலை தன்மை இதுதான்.
வெளிநாடுகளில் இருந்து காஸ்ஸாவிற்குள் செல்ல நினைத்த அதுவும் உணவுப்பொருட்கள் உட்பட அனைத்து அத்தியாவசிய பொருட்களும் கிடைக்காத காஸ்ஸா மக்களுக்காக வீடு கட்டுமானப் பொருட்கள் உணவுப் பொருட்கள் என மனிதாபிமான பொருட்கள் கொண்டு சென்ற இவர்களுக்கே இந்த நிலை என்றால் காஸ்ஸாவில் வாழும் மக்களை நினைக்கும் போது அவர்கள் படும் துன்பங்களை நினைத்துப் பார்க்கவே முடியாது.
இதில் இன்னொரு கொடுமை என்னவெனில் மனித உரிமையை பற்றி சிறிதும் கவலைப்படாத இஸ்ரேலிடம் நூற்றுக்கணக்கான அணு ஆயுதங்கள் இருந்தும் இதைப் பற்றி ஒரு கண்டனத்தையோ அல்லது அணு ஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று கூறாத அமெரிக்கா தனது மின் தேவைக்காக அணுவை பயன்படுத்துவதை கூட ஈரானுக்கு அனுமதி அளிக்க மறுக்கிறது.
என்றைக்கு இருந்தாலும் இஸ்ரேலிடம் அணு ஆயுதங்கள் இருப்பது உலக நாடுகளுக்கு ஆபத்து தான் என்பதற்கு இந்த கொடூர தாக்குதலும் ஒரு உதாரணம்.
உலக நாடுகள் இப்பொழுதே முன் வந்து இஸ்ரேலின் கொடூரங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்பதே அமைதியை விரும்பும் ஒவ்வொரு சராசரி மனிதனின் எதிர்பார்ப்பு.
ராஜஸ்தான் கிராமத்தில் கலவரம்: ஈத்கா உட்பட முஸ்லிம் சொத்துகள் நாசம்

இடிக்கப்பட்ட ஈத்கா
ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலோட்;டின் சொந்த மாவட்டமான ஜோத்பூரில் உள்ள பல்சார் துர்கவாடே கிராமத்தில் நடைபெற்ற கலவத்தில் ஈத்கா உள்பட பல முஸ்லிம் வழிப்பாட்டுத்தலங்கள் தாக்கப்பட்டு பல முஸ்லிம் கடைகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.
முதல்வர் கெலோடின் சாதிக்காரர்களான பந்து மாலி சாதியினர் தான் இந்த கலவரத்தில் ஈடுபட்டனர். இவர்களை அடக்குவதற்காக காவல்துறையினர் முயன்ற போது அவர்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர். இதன் விளைவாக காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் கலவரக்காரர்களில் ஒருவர் பலியானார்.
கடந்த மே 22 அன்று பல்சார் துர்கவாடே கிராமத்தில் முஸ்லிம்களுக்கும் பந்து மாலி சாதியினருக்கும் இடையே மோதல் வெடித்தது. ஜோத்பூரில் இருந்து 75 கீ.மீ. தொலைவில் உள்ள இந்த கிராமத்தில் தேசீய ஊரக வேலைவாய்ப்பு திட்;டத்தின் கீழ் சாலை அமைப்பது தொடர்பாக இரு சமூகத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த கிராமத்தின் நடுவே வற்றிய ஒரு ஆறு ஒடுகின்றது. இந்த ஆற்றின் ஒரு பகுதியில் முஸ்லிம்கள் மற்றொரு பகுதியில் பந்து மாலி சாதியினர் வாழ்ந்து வருகின்றார்கள். ஊரில் சாலை அமைக்கும் திட்டத்திற்கு முஸ்லிம்களும் இந்து சாதியினரும் தங்கள் பகுதியில் இருந்து சமமான அளவு நிலம் தருவதாக முதலில் ஒப்புக் கொண்டனர். ஆனால் இதன் பிறகு முஸ்லிம் பகுதியில் இருந்து மட்டும் நிலத்தை எடுத்துக் கொண்டு சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. முஸ்லிம்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போது முஸ்லிம்கள் மீது கல்வீச்சில் மாலி சாதியினர் ஈடுபட்டனர். இதன் பிறகு ஈத்கா உட்பட சில முஸ்லிம் வழிப்பாட்டுத் தலங்களை கலவரக்காரர்கள் அடித்து நொருக்கியதுடன் முஸ்லிம்களின் கடைகளுக்கு தீயும் வைத்தனர்.

எரிக்கப்பட்ட கடைகள்

நிலைமை மோசமான நிலையில் அங்கு வந்த காவல்துறையினர் கலவரக்காரர்கள் மீது தடியடி நடத்தியும் கலவரம் ஒயாதநிலையில் காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தி கிராமத்தில் அமைதியை ஏற்படுத்தினர்.
இக்கிராமத்தில் அமைதியை நிலைநாட்ட அமைதி குழு ஏற்படுத்தப்பட்டது. கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடும் மாநில அரசு வழங்கியது. ஆனால் இழப்பீடு வழங்குவதில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாக முஸ்லிம்கள் இழப்பீடு தொகையை வாங்க மறுத்துள்ளனர். கலவரத்தில் உயிர் இழந்த பாலி சாதியைச் சேர்;ந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ5 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ2 லட்சம ரூ1 லட்சம், ரூ50 ஆயிரம் வழங்கப்பட்டது. ஆனால் இடிக்கப்பட்ட ஈத்காவிற்கு ரூ10 ஆயிரமும், காயமடைந்த முஸ்லிம்களுக்கு சேதமடைந்த கடைகளுக்கு ரூ 2-3 ஆயிரம் மட்டும் வழங்கப்பட்டது.
இது குறித்து நேரில் விசாரிக்கச் சென்ற முஸ்லிம் முசாவரத் குழுவினர் அசோக் கெலோட் ஆட்சியில் வகுப்புவாதிகள் ஆதிக்கம் அதிகரித்து வருவதாகவும் நீதி கிடைக்காத நிலையில் முஸ்லிம்கள் நிர்க்கதியான நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
செய்தி மற்றும் படங்கள் நன்றி: டூ சர்கிள்ஸ்
செவ்வாய், 1 ஜூன், 2010
யாழ்ப்பாணம்-300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த மஸ்ஜித்! மீண்டும் திறப்பு!
யாழ்ப்பாணம் பெரிய பள்ளி- The Jaffna Grand Mosque இன்று மீண்டும் 20வருடங்கலுக்கு பின்னர் திறந்துவைக்கப்பட்டு நிகழ்சிகள் நடைபெறுகின்றது என்று எமது யாழ் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர் இந்தப் பள்ளிவாசல் தற்பொழுது முழுமையாக புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளதுடன் சுமார் 3000 முதல் 4000 வரையிலான முஸ்லிம்கள் தொழக்கூடிய வசதியைக் கொண்டுள்ளது இன்று நண்பகல் இடம்பெற்ற ஜும்மா தொழுகையுடன் இந்த மஸ்ஜித் திறக்கப்பட்டுள்ளது .
நன்றி - lankamuslim இணையத்தளம்
ஜாமியாவுக்கு சிறுபான்மை அந்தஸ்து:சல்மானுக்கும், சிபலுக்குமிடையே வெளிப்படையான போராட்டம்
புதுடெல்லி:டெல்லியில் பிரசித்திப் பெற்ற பல்கலைக்கழகமான ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்திற்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்குவதுத் தொடர்பாக மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்துக்கும், மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபலுக்குமிடையே வெளிப்படையான போராட்டம் நடக்கிறது.ஜாமியாவுக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்க வேண்டும் என்று சல்மான் கூறுகிறார். ஆனால் கூடாது என்கிறார் கபில் சிபல்.
ஜாஹிர் நாயக்கின் சுற்றுப் பயணம்:பிரிட்டனில் சர்ச்சை
லண்டன்:மும்பையைச் சார்ந்த பிரபல முஸ்லிம் அறிஞரும் மதங்களுக்கிடையேயான கலந்துரையாடலில் வல்லுநராக விளங்கும் டாக்டர்.ஜாஹிர் நாயக் பிரிட்டனுக்கு வருகைத்தர அந்நாட்டு அரசு விசா அனுமதியளித்ததற்கு அந்நாட்டின் பத்திரிகைகளும்,சில அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து களமிறங்கியுள்ளன.ஜாஹிர் நாயக் தீவிரவாதத்தை தூண்டுவதாகவும், வெறுப்பைத் தூண்டும் உரையை நிகழ்த்துபவர் என்றும் குற்றஞ்சாட்டுகின்றன பத்திரிகைகளும்,சில அமைப்புகளும்.
லண்டனில் வெம்ப்ளி அரினா, ஷெஃபீல்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இம்முறை டாக்டர் ஜாஹிர் நாயக் உரை நிகழ்த்தவிருக்கிறார். 2006 ஆம் ஆண்டு ஜாஹிர் நாயக் பிரிட்டனுக்கு சென்றபொழுது கன்சர்வேடிவ் கட்சியின் எம்.பி டேவிட் டோஸ் உள்ளிட்டோர் அவருக்கெதிராக பிரச்சாரம் செய்தனர்.
கன்சர்வேடிவ்கள் நாட்டை ஆளும்பொழுது ஜாஹிர் நாயக்கிற்கு விசா அனுமதித்தது அநியாயம் என டெலிகிராஃப் பத்திரிகை கூறுகிறது.
இதுக்குறித்து உள்துறைச்செயலாளர் தெரசாமே கூறுகையில்,"ஜாஹிர் நாயக் மீது எவ்வித தீவிரவாத வழக்கும் பதிவுச் செய்யப்படவில்லை. அதுவரை அவருக்கு பிரிட்டன் விசா வழங்கும்" என தெரிவித்தார்.
செய்தி:மாத்யமம்
காஸாவிற்கு மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் சென்ற கப்பல்களை தாக்கி 18 பேரை கொன்று இஸ்ரேல் நாசகரம்
அமைதி கப்பலில் இஸ்ரேல் படை தாக்குதல் நடத்தி காட்சி
இஸ்ரேலினால் சுற்றி வளைக்கப்பட்டு முற்றுகையிடப்பட்டிருக்கும் பாலஸ்தீனத்தின் காஸா பகுதியின் முற்றுகையை முறியடித்து அங்கு வாழும் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை சுமந்து வந்த கப்பல்களை மனிதாபிமானமற்ற இஸ்ரேல் கடற்படை தாக்கியது. இந்த கப்பல்களில் பயணம் செய்த 19 அமைதி போராளிகள் உயிர் இழந்தனர். 12க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
பிரிட்டன், அயர்லாந்து, அல்ஜீரியா, குவைத், கிரீஸ் மற்றும் துருக்கி நாடுகளைச் சேர்ந்த ஆறு கப்பல்களைக் கொண்ட இந்த விடுதலை கப்பல் குழுமத்தில் 50 நாடுகளைச் சேர்ந்த 700 அமைதியாளர்கள் பயணித்தனர். பாலஸ்தீனத்தின் ஆதராவளர்கள், நோபிள் பரிசு பெற்றவர்கள், பல்வேறு ஐரோப்பா நாடுகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த கப்பல்களில் பயணித்தனர். காஸா மீது இஸ்ரேல் போட்டுள்ள தடையை முறியடிக்கும் நோக்கத்துடன் இந்த கப்பல் குழு பயணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சைப்பிரஸில் உள்ள துறைமுகம் ஒன்றிலிருந்து கடந்த ஞாயிறு (மே 30) புறப்பட்ட இந்த கப்பல் குழுமம் மறுநாள் பாலஸ்தீனத்தை அடைய இருந்தது.
காஸாவிற்கு உதவி பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பல்களில் ஒன்று
பன்னாட்டு கடல் எல்லையில் கொடுர தாக்குதல்
விடுதலை கப்பல் குழுமம் என்று பெயரிடப்பட்ட இந்த படகுகளை திங்கள் காலை பன்னாட்டு கடல் பகுதியில் இஸ்ரேல் கடற்படை மறித்து தாக்கியது. காஸா கரைக்கு 65 கி.மீ. தொலைவில் இந்த தாக்குதல் நடைபெற்றது.
இந்த தாக்குதல் இஸ்ரேலின் கடல் எல்லைக்கு அப்பால் சர்வதேச கடல் பகுதியில் நடைபெற்றதை இஸ்ரேல் ஒத்துக் கொண்டது. ஆனால் தங்கள் தற்காப்பிற்காக இந்த நடவடிக்கையில் இறங்கியதாக இஸ்ரேல் கூறிக் கொண்டது.
கப்பல் குழுமத்திற்கு தலைமை தாங்கிய மார்வி மார்மரா என்ற கப்பலில் இஸ்ரேல் இராணுவத்தினர் ஏறும் காட்சியும் மேலே ஹெலிகாப்டர் அவர்களுக்கு பாதுகாப்பாக பறக்கும் காட்சியையும் அல்ஜஸீரா தொலைக்காட்சி ஒளிபரப்பியது. மார்வி மார்மரா கப்பலில் பயணம் செய்த அல்ஜஸீராவின் செய்தியாளர் ஜமால் எல்சாயல் இந்த நடவடிக்கையின் போது செயல்திறனுள்ள ஆயுதங்களை இஸ்ரேல் படையினர் பயன்படுத்தியதாக தெரிவித்தார்.
கப்பலில் வந்தவர்கள் தங்கள் மீது ஆயுதத் தாக்குதல் நடத்தியதாகவும் இதனால் தாங்கள் தற்காப்பு நடவடிக்கையில் இறங்கும் நிர்பந்தத்திற்கு உள்ளானதாகவும் இஸ்ரேல் தரப்பு தெரிவித்தது. ஆனால் தங்களை இடைமறித்த உடனேயே இஸ்ரேல் படையினர் சுடத் தொடங்கியதாக இந்த கப்பல் குழும பயணத்தை ஏற்பாடு செய்த காஸா விடுதலை இயக்கத்தினர் தெரிவித்தனர். கப்பலில் சரணடைகிறோம் என்பதற்கு அடையாளமாக வெள்ளை கொடி ஏற்றப்பட்டதாகவும் பயணிகள் யாரும் எவ்வித தாக்குதலிலும் இறங்கவில்லை என்று கப்பலில் பயணம் செய்த அல்ஜஸீரா செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
தனது செய்தியாளருடன் ஒலித் தொடர்பு துண்டிக்கப்படுவதற்கு சற்று முன்பு வாயை மூடுங்கள் என்று ஹிப்ரூ மொழியில் குரல் எழுப்பபடுவதை கேட்டதாக அல்ஜஸீரா கூறியது.
கப்பல் குழுமத்தின் தலைக் கப்பலான மாவி மர்மராவின் தலைமை மாலுமியை முதலில் இஸ்ரேல் கடற்படை தொடர்பு கொண்டு தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளுமாறும் எங்கே செல்கிறீர்கள் என்பதை தெரிவிக்குமாறும் உத்தரவிட்டது. இதன் பிறகு இந்த கப்பல் குழுமத்தின் இரு மருங்கிலும் இரு இஸ்ரேல் போர் கப்பல்கள் சற்று தொலைவில் பயணிக்கத் தொடங்கின.
இதன் பிறகு இரவில் மோதலை தவிர்ப்பதற்காக கப்பல் குழுமம் தனது வேகத்தைக் குறைத்துக் கொண்டு தனது பாதையை மாற்றத் தொடங்கியது. அனைத்து பயணிகளுக்கும் உயிர்காக்கும் கவசத்தை அளித்து விட்டு அனைவரையும் கீழ் தளத்தில் இருக்குமாறு மாலுமிகள் கேட்டுக் கொண்டனர். இத்தனைக்கு பிறகும் இஸ்ரேல் அப்பாவி பயணிகளை கண்மூடித்தனமாக தாக்கியது.
இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதற்கு சற்று முன் கப்பலில் பயணம் செய்தவர்களில் சிலர்
ஷேக் ராயித் சாலாஹ்
சேக் ராயித் சாலா
இந்த கப்பலில் பயணம் செய்த இஸ்ரேலில் இயங்கும் இஸ்லாமிய இயக்கத் தலைவர் ஷேக் ராயித் சாலாஹ் படுகாயமடைந்து பின்னர் மருத்துவமனையில் உயிர் துறந்தார்.
இஸ்ரேல் நடத்திய இந்த காட்டுமிராண்டி தாக்குதல்களுக்கு உலகம் முழுவதும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கப்பலில் பயணித்து உயிர் இழந்தவர்களுக்காக மூன்று நாள் அரசு முறை துக்கம் அனுஷ்திக்கப்படும் என்று பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் அறிவித்துள்ளார்.
துருக்கி, ஸ்பெயின், கிரீஸ், டென்மார்க் மற்றும் சுவிடன் ஆகிய நாட்டு அரசுகள் தங்கள் நாட்டில் உள்ள இஸ்ரேலின் தூதரை அழைத்து தங்கள் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளன.
இஸ்தான்பலில் ஆயிரக்கணக்கானோர் பங்குக் கொண்ட பிரமாண்டமான ஆர்ப்பாட்டம்
துருக்கியில் இஸ்தான்புலில் உள்ள இஸ்ரேலின் தூதரகத்தை ஆயிரக்கணக்கான மக்கள் முற்றுகையிட்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். கப்பல் குழுமத்தை வழிமறித்து மன்னிக்க முடியாத குற்றத்தை இஸ்ரேல் புரிந்துள்ளது. இதன் விளைவை அது அனுபவிக்கும் என்று துருக்கியின் வெளிவிவகாரத் துறை ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

லண்டனில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்
லண்டன் மாநகரிலும் பெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இஸ்ரேலின் தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது என்று ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹானியா வர்ணித்துள்ளார்.
முற்றுகையிடப்பட்டு நிர்க்கதியான நிலையில் வாழும் காஸா மக்களுக்கு மனிதாபிமான ரீதியான உதவிகளை ஏந்தி வந்த கப்பல் குழுமத்தை தாக்கிய இஸ்ரேலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் ஒரு அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.
தாக்குதல்கள் குறித்த வீடியோ காட்சிகள்
விடுதலை கப்பல் புறப்படும் காட்சி காண இங்கே சொடுக்கவும்
http://www.youtube.com/watch?v=o6pcS0BUMiw&feature=related
விடுதலைக் கப்பல் குழும பயணக் காட்சிகளை காண இங்கே சொடுக்கவும்
http://www.youtube.com/watch?v=o-7wLDmMqd0&feature=related
பாலஸ்தீனின் மஆன் செய்தி நிறுவனம் கப்பல் தாக்கப்பட்ட தொடக்க காட்சிகள் குறித்து வெளியிட்டுள்ள 9 நிமிட வீடியோ காட்சிகளை காண இங்கே சொடுக்கவும்
http://www.youtube.com/watch?v=MB-Mk4bFz-U&feature=player_embedded#!
அல்ஜஸீரா செய்தியை காண இங்கே சொடுக்கவும்
http://www.youtube.com/watch?v=xFEBbDkyrqQ&feature=player_embedded
தாங்கள் தாக்கப்பட்டதினால் கப்பல் பயணிகளை தாக்கியதாக கூறியுள்ள இஸ்ரேல் இராணுவம் பின்வரும் வீடியோவை வெளியிட்டது
http://www.youtube.com/watch?v=XAMFnu8ZBwk&feature=player_embedded
இந்த வீடியோவில் காயமடைந்த இரண்டு இஸ்ரேல் வீரர்கள் காட்டப்படுகிறார்கள். ஆனால் அவர்களது நிலை எப்படி உள்ளது என்பது படத்தில் தெளிவாக இல்லை. மேலும் கப்பலில் இருந்த ஆயுதங்கள் இருந்ததாக இஸ்ரேல் கூறியது. ஆனால் இப்படத்தில் கல்லாங்கோல், ஒரு மெல்லிய இரும்பு தடி, ஒரு பிளாஸ்டிக் பையில் கோலிகள் ஆகியவை தான் 'ஆயுதங்களாக' காட்சி அளிக்கின்றன. துப்பாக்கிகளையோ அல்லது கத்திகளையோ கூட கப்பலில் இருந்ததாக இஸ்ரேலினால் காட்ட இயலவில்லை.ଯ சுவனத்தின் செல்வன்



