ஹிந்துத்துவா பயங்கரவாதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஹிந்துத்துவா பயங்கரவாதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 16 பிப்ரவரி, 2011

குஜராத் + மனித உரிமை + மோடி !!! ஒரு பார்வை!!

கோத்ரா,பிப்.15: 2002-ல் குஜராத்தில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நடத்திய கலவரத்தின் போது பஞ்சமகால் மாவட்டத்தில் 28 முஸ்லிம்களை கொன்று புதைத்து விட்டார்கள். இந்த புதைக்கப்பட்ட சடலங்களை தோண்டி எடுத்து அதன் மூலம் குஜராத் கலவரத்தின் போது முஸ்லிம்கள் ஆயிர கணக்கில் கொல்லப்பட்டு இதுபோல் புதைக்கபட்டார்கள் என்ற உண்மையை பிரபல மனிதவுரிமை ஆர்வலர் தீஸ்தா செடல்வாட் வெளி கொண்டுவந்தார். இதன் காரணமாக பயங்கரவாதி மோடியின் அரசு இவர் மீது பொய் வழக்கு தொடர்ந்தது. இதனால் இந்த வழக்கில் போலீஸ் தன்னை கைது செய்யக்கூடும் என்று கருதிய தீஸ்தா, முன் ஜாமீன் கோரி குஜராத் கலவர வழக்கை விசாரிக்கும் விரைவு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு செவ்வாய்க்கிழமை முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. குஜராத் முதல்வர் பயங்கரவாதி மோடி குஜராத் இனப்படுகொலை விசாரணைகளை தொடரவிடாமல் தொடர்ந்து இடையூறு செய்து வருகிறார்.இந்த விசாரணைகளை வேறு மாநிலங்களுக்கு மாற்றவேண்டும் என்று மனித வுரிமை அமைப்புகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன. ஹிட்லர் போன்ற உலகம் அறிந்த பயங்கரவாதிகள் பட்டியலில் மோடியின் பெயரும் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிட தக்கது. குஜராத் விசயத்தில் நீதி கிடைக்க NCHRO - போன்ற மனித வுரிமை அமைப்புகள் தொடர்ந்து போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

புதன், 15 செப்டம்பர், 2010

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு; கலவரம் உண்டாக்க ஹிந்து தீவிரவாத இயக்கங்கள் சதி.

அயோத்தியில் பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பை வரும் 24ம் தேதிக்குப் பதில் வேறு தேதியில் அறிவிக்க வேண்டும் என்று அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்தத் தீர்ப்பு வெளியானால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் சூழல் உள்ளது. டெல்லியில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் இந்தத் தீர்ப்பை இப்போது வெளியிடுவது சரியல்ல. அதை காலதாமதமாக அறிவிக்க வேண்டும் என்று அந்த மனுக்களில் கூறப்பட்டுள்ளது.

அயோத்தியில் ஹிந்து தீவிரவாதிகளால் பாபர் மசூதி இடிக்கப்பட்டு,அதை தொடர்ந்து ஹிந்து தீவிரவாதிகள் ஏற்படுத்திய மதக் கலவரத்தில் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பலியானதையடுத்து அப்போது பிரதமராக இருந்த ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத இயக்கத்தின் மறைமுக உறுப்பினர் நரசிம்ம ராவ், மசூதிக்கு உரிய இடத்தில் 67 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அவசரச் சட்டம் பிறப்பித்தார்.

இந்த நிலம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் 3 நீதிபதிகள் கொண்ட லக்னெள நீதிமன்ற பெஞ்ச் விசாரித்து வருகிறது. கடந்த 16 ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்று வந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து வரும் 24ம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த தீர்ப்பை ஏற்று கொள்ள மாட்டோம் என்று ஹிந்து தீவிரவாத இயக்கங்கள் அறிவித்துள்ளன. இதனால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந் நிலையில் தீர்ப்பு வெளியானவுடன் நாடு முழுவதும் பதற்றம் ஏற்படும் என்பதால் தேசம் முழுவதுமே தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தீர்ப்பை அறிவிக்கவுள்ள 3 நீதிபதிகளுக்கும் சிறப்பு பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. அவர்களது கார்களுக்கு முன்னும், பின்னும் துப்பாக்கி ஏந்திய போலீசாரின் வாகனம் செல்கின்றன.
நீதிபதிகளின் வீடுகளுக்கும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.தீர்ப்பு வழங்கப்படும் தினத்தன்று அலகாபாத் நீதிமன்றம் பாதுகாப்புப் படை வீரர்களின் முற்றுகையில் இருக்கும்.

அலகாபாத்தில் ஹிந்து தீவிரவாதிகள் ஊடுருவி நாச வேலை செய்து விடக்கூடாது என்பதற்காக கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே தீர்ப்பு தினத்தன்று உத்தரப் பிரதேசத்தில் எங்கெங்கு போராட்டம் வெடிக்க வாய்ப்புள்ளது என்று உளவுத்துறை ஒரு எச்சரிக்கை தகவலை வெளியிட்டுள்ளது. அந்த தகவல்களின் அடிப்படையில் முன்னெச்சரிக்கையாக கைது நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

மீரட் நகரில் அதிகபட்ச கலவரம் உண்டாகலாம் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அயோத்தி வழக்கு தீர்ப்பு வெளியாக இன்னும் 9 நாட்களே இருப்பதால் நாளை முதல் கைது செய்யப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று தெரிகிறது.
பல்லாயிரக்கணக்கானவர்கள் கைதாகும் பட்சத்தில் சிறைகளில் இட பற்றாக்குறை ஏற்படும் என்பதால் உத்தரபிரதேசம் முழுவதும் போலீசார் தற்காலிக சிறைகளை உருவாக்கி வருகின்றனர். இந் நிலையில் தீர்ப்பை ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது.

ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

காவி பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவது எப்படி?

இறுதியில் மத்திய உள்துறை அமைச்சரும் ஒரு விஷயத்தை ஒப்புக்கொண்டுள்ளார். தேசத்தில் கடந்த காலங்களில் நடைபெற்ற ஏராளமான குண்டுவெடிப்புகள் தேசத்தில் ஹிந்துத்துவா பயங்கரவாதம் அதிகரித்து வருவதற்கான உறுதியான உதாரணம் இதற்கெதிராக மத்திய-மாநில அரசுகள் தீவிர எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும் என்றும் ப.சிதம்பரம் டெல்லியில் 3 நாட்கள் நடைபெறும் போலீஸ்-உளவுத்துறை உயர் அதிகாரிகள் மாநாட்டில் உரைநிகழ்த்தினார்.

இவ்வுரையில் 'காவிப்பயங்கரவாதம்' என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தினார். ஹிந்துத்துவா அரசியல் கட்டவிழ்த்துவிடும் பயங்கரவாதத்தைக் குறித்த முழுமையான புரிந்துணர்வோடுதான் இவ்வுரையை ப.சிதம்பரம் நிகழ்த்தினார் என்றால், பயங்கரவாதிகளை எதிர்கொள்வதற்கான அதிகாரப்பூர்வ நடவடிக்கைகளில் இதனை பிரதிபலிக்கவேண்டும். அவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் பொழுது தேசம் புதியதொரு திசையை பயணிக்கிறது என்ற நம்பிக்கை நமக்கு ஏற்படும்.

ஆனால் அவ்வாறு நிகழ்கிறதா? என்றால் நமது பொதுவாழ்க்கையில் ஹிந்துத்துவா சக்திகள் பெற்றுள்ள செல்வாக்கை கவனத்தில் கொண்டால் எதிர்மறையான பதில்தான் கிடைக்கும்.

'பயங்கரவாதம்' என்ற வார்த்தை நமது நாட்டில் முஸ்லிம்களும், ஆதிவாசிகளும் நடத்தும் போராட்டத்திற்கு மட்டுமே சூட்டப்படுவதாகும். இஸ்லாமியத் தீவிரவாதமும், மாவோயிஷ தீவிரவாதமும் தான் நமது தீவிரவாத வேட்டையின் முக்கிய இலக்குகளாக மாறிவிட்டன.

சமீபக்காலத்தில் முஸ்லிம் தீவிரவாதிகள் என்று அழைக்கப்படுவோரின் மீது இட்டுக்கட்டி சுமத்தப்பட்ட ஏராளமான குண்டுவெடிப்புகளின் உண்மையான குற்றவாளிகள் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள்தான் என்ற உண்மை வெளியான பிறகும் அவர்கள் மீது எவ்வித பயன்தரத்தக்க நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. அதுமட்டுமல்ல, காவி பயங்கரவாதிகள் முஸ்லிம்கள் மற்றும் மாவோயிஸ்டுகளுக்கெதிராக தீவிர எதிர்ப்பு பிரச்சாரத்தில் ஆவேசத்துடன் ஈடுபட்டு வருகின்றார்கள்.

பா.ஜ.கவின் தலைவர் அத்வானிக்கூட இத்தகைய பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார். ஒருபுறம் காவிபயங்கரவாதம் தேசத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அதேவேளையில், மறுபுறம் தீவிரவாத எதிர்ப்புப்பிரச்சாரத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளராகவும் செயல்பட்டு வருகின்றனர்.

இந்த முகமூடியைத்தான் திறந்துக்காட்ட வேண்டியுள்ளது. காவி பயங்கரவாதத்தைக் குறித்த உள்துறை அமைச்சரின் கருத்து உள்ளார்ந்த நேர்மையுடனிருக்குமெனில் மத்திய அரசு துணிந்து ஒரு போராட்டத்திற்கு தயாராகவேண்டும். அது ஏற்படுமா? என்பதுதான் சந்தேகமாக உள்ளது.

காவி பயங்கரவாதம் சாதாரணமானது அல்ல.தேசத்தின் அதிகாரப்பூர்வ புலனாய்வு ஏஜன்சிகளிலும், ஹிந்துத்துவா சக்திகளுக்கு வலுமையாக காலூன்ற முடிந்துள்ள சூழலில், குறிப்பாக போலீஸ், ஐ.பி, என்.ஐ.ஏ, எஸ்.ஐ.டி உள்ளிட்ட கட்டமைப்புகளில் ஹிந்துத்துவா சக்திகளின் ஆதிக்கத்தின் விளைவாக பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

இடதுசாரி அரசியல் கூட மிதமான ஹிந்துத்துவா பாணியை கையாளும் வேளையில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு தங்களுடைய அஜண்டாக்களை செயல்படுத்த எளிதாகிறது. ஆகவே உள்துறை அமைச்சர், ஒரு மாநாட்டில் சும்மா பெயரளவில் 'காவி பயங்கரவாதம்' என்று கூறினால் மட்டும் போதாது, தான் கூறியவற்றில் உண்மை உண்டு என்பதை நிரூபிக்க அவர் உள்துறை அமைச்சகத்தின் செயல்பாடுகளை புனர் நிர்மாணிக்கவேண்டும்.

விமர்சகன்