ஆர்ப்பாட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆர்ப்பாட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 17 ஜூலை, 2010

காஷ்மீரில் நடைபெற்றுவரும் மனித உரிமை மீறல்களைக் கண்டித்து தமுமுக ஆர்ப்பாட்டம் (video)

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக இன்று சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே காஷ்மீரில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்களைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



புதன், 30 ஜூன், 2010

பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தைக் கண்டித்து சென்னையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்ட புகைப்படங்கள்

மனிதநேய மக்கள் கட்சி சென்னை மாவட்டம் சார்பில் பெட்ரோல், டீசல் விலைஏற்றத்தைக் கண்டித்து இன்று சென்னiயில் நடைடிபற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தின் புகைப்படங்கள்.

வியாழன், 21 ஜனவரி, 2010

வேலூர் கோட்டை மசூதியை மீட்க தடையை மீறி ஆர்ப்பாட்டம்: திருமாவளவன் உள்பட 682 பேர் கைது




காவல் துறையின் தடையை மீறி புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்பட 682 பேர் கைது செய்யப்பட்டனர்.விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மசூதி மீட்பு போராட்டம் நடைபெற்றது. இதற்கு கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தலைமை வகித்தார்.ஆர்ப்பாட்டத்தில் திருமாளவன் பேசியது:

இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் தொப்புள்கொடி உறவு உள்ளது. கட்டுப்பாட்டை கடைபிடிப்பவர்கள் இஸ்லாமியர்கள். அவர்கள் வேலூர் கோட்டைக்குள் இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள மசூதியில் தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும். வழிபாடு உரிமை ஜனநாயக உரிமை. அதனால் வேலூர் கோட்டையில் உள்ள மசூதி முஸ்லிம்கள் தொழுகைக்காக திறக்கப்பட வேண்டும். அது வரை விடுதலை சிறுத்தைகள் கட்சி போராடும் என்றார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 80 பெண்கள் உள்பட 682 பேரை போலீஸôர் கைது செய்தனர். கைதான திருமாவளவன் உள்ளிட்ட 682 பேரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

செவ்வாய், 7 ஜூலை, 2009

ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவுப் போக்கு: மத்திய அரசுக் கண்டித்து தமுமுக மாபெரும் ஆர்ப்பாட்டம்




ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவு அளிக்கும் விதமாகவும், ஓரினச் சேர்க்கைக்கு தண்டனை வழங்கும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377லிஐ நீக்க முயலும் மத்திய அரசின் செயலைக் கண்டித்து தமுமுகவின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று 06,07,2009 மாலை 5 மணியளவில் சென்னை மெமோரியல் ஹால் அருகில் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமுமுக பொருளாளர் ஓ.யூ. ரஹ்மத்துல்லாஹ் தலைமை தாங்கினார். மனிதநேய மக்கள் கட்சி அமைப்புச் செயலாளர் ஜைனுல் ஆப்தீன், மாநில வர்த்தகர் அணிச் செயலாளர் யாசின். மாநில தொண்டரணிச் செயலாளர் முகம்மது ரஃபி, மாநில மாணவரணிச் செயலாளர் ஜைனுல் ஆப்தீன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். வட சென்னை மற்றும் தென் சென்னை மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.



ஆர்ப்பாட்டத்தில், ''ஓரினச் சேர்க்கை செயலுக்கு வக்காலத்து வாங்கும் அவசியம் என்ன வந்தது? மேற்குலகை தனது புதிய வழிகாட்டியாக கொண்டு விளங்கும் ஐக்கிய முற் போக்கு கூட்டணி அரசுக்கு அநாகரீக பாதையில் செல்லும் அவசியம் என்ன? கோவாவிலும், சென்னை மகாபலிபுரத்திலும் மேற்கு நாடுகளைச் சேர்ந்த வக்கிர பேர்வழிகள் சுற்றுலாப் பயணிகள் என்ற போர்வையில் இங்கு வந்து தங்களது பாலியல் முறைகேடுகளுக்கு வடிகால் தேடும் போக்கு'' ஆகியன பற்றி கேள்விகள் எழுப்பப்பட்டன.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.



வியாழன், 25 ஜூன், 2009

நக்கீரன் மற்றும் திலகவதி I.P.S-ன் முஸ்லிம் விரோதப் போக்கை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்ட விபரம்

நக்கீரன் மற்றும் திலகவதி I.P.S-ன் முஸ்லிம் விரோதப் போக்கை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்ட விபரம்

சென்னையில் நடந்த கொலை வழக்கு தொடர்பாக நக்கீரன் இதழுக்கு பேட்டியளித்த காவல்துறை உயர் அதிகாரி திலகவதி ஐ.பி.எஸ். அவர்கள் ''இஸ்லாமியர்களுக்கு கொலை செய்வது ஒன்றும் புதிதல்ல'' என்று பேட்டியளித்துள்ளார். தனியொரு நபரின் செயலுக்கு முஸ்லிம்கள் அனைவரையும் இழித்துரைப்பது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்.


முஸ்லிம் மத துவேசத்தை உருவாக்கத் துணிந்த காவல்துறை உயர் அதிகாரி திலகவதி ஐ.பி,எஸ்.ஐக் கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் இன்று (24.06.2009) மாலை 4.00 மணியளவில் சென்னை மெமோரியல் ஹால் எதிரே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமுமுக பொருளாளர் ஓ.யூ. ரஹ்மத்துல்லாஹ் தலைமை தாங்கினார். துணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ். ரிஃபாய், தமுமுக மாநில மாணவரணிச் செயலாளர் ஜெயினுலாப்தீன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். மனிதநேய மக்கள் கட்சியின் பொருளாளர் எஸ்.எஸ். ஹாருன் ரசீது, தமுமுக மாநிலச் செயலாளர் காஞ்சி ஜுனைது, வட சென்னை மற்றும் தென் சென்னை மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


ஆர்ப்பாட்டத்தில், ''காவல்துறையில் உயர் அதிகாரியாகவும், ஓர் எழுத்தாளராகவும் இருப்பவர் இவ்வாறு பொறுப்பற்று பேசலாமா? அமைதி மார்க்கமான இஸ்லாத்தை வன்முறை மார்க்கமாக சித்தரிப்பது மெத்தப்படித்த அதிகாரிக்கு அழகா?'' என்று கேள்விகள் எழுப்பப்பட்டன. இத்தகைய பொறுப்பற்ற சமூக கருத்துக்கு திலகவதி ஐ.பி.எஸ் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் முஸ்லிம்களை வம்புக்கு இழுத்த நக்கீரன் பத்திரிக்கையும் வெளியிட்ட செய்தியை வாபஸ் பெற வேண்டும் என்றும் இல்லாவிட்டால் போராட்டங்கள் தீவிரப் படுத்தப்பட்டு சட்டரீதியான நடவடிக்கையும் முடுக்கப் படும் என அறிவிக்கப் பட்டது.


இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

வியாழன், 2 ஏப்ரல், 2009

மனித நேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தென்காசி, ஏப். 1: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசியில் மனித நேய மக்கள் கட்சியினர் புதன்கிழமை ஒற்றைக் காலில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி நகராட்சிக்கு உள்பட்ட 9-வது வார்டு பகுதியில் மவுண்ட்ரோடு சாலையை புதுப்பிக்கும் பணிகளை உடனடியாக தொடங்கக் கோரியும், இப் பகுதியில் தெருவிளக்குகள் நீண்ட நாள்களாக எரியாததைக் கண்டித்தும், புதுப்பிக்கப்பட்ட, சுகாதார வளாகத்தைத் திறக்க வலியுறுத்திம் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நகராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு நகர்மன்ற உறுப்பினரும் கட்சியின் ஒன்றியச் செயலருமான முகம்மது மைதீன் தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்ட துணைத் தலைவர் தங்கப்பா, கட்சியின் மாவட்ட துணைச் செயலர் சலீம், நகரச் செயலர் சலீம், பொருளாளர் சுலைமான் சேட், துணைச் செயலர்கள் சாகுல், திவான்ஒலி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் முடிவில் நகராட்சி அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தனர்.

நன்றி: தினமணி