செவ்வாய், 21 பிப்ரவரி, 2012

கூத்தாநல்லூரில் மின்வாரிய அதிகாரிகளுடன் அமைதி கூட்டம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக நாளை 13.02.2012 நடைபெறவிருந்த கண்டன ஆர்ப்பாட்டம் மேற்படி அமைதி கூட்டத்தில் எடுக்கப்பட்ட கீழ்கண்ட தீர்மானத்தின் அடிப்படையில் ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

தீர்மானம்;

1. மின் இடை நிறுத்தம் செய்வது தமிழக அரசின் Go -அடிப்படையில் மக்களுக்கு அறிவிக்கப்பட்டு மின் நிறுத்தம் செய்யவேண்டும்.

2. பள்ளி மாணவ-மாணவிகளின் தேர்வை கருத்தில் கொண்டு மின் நிறுத்தும் நேரத்தை சீர்படுத்தவேண்டும்.

இதுபோன்ற பல கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டு 5-நாட்கள் கால அவகாசத்திற்குள் கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் ஜனநாயக முறையில் எங்களது போராட்டம் தொடரும்....

இக்கூட்டத்தில் முஸ்லிம் லீக் - காங்கிரஸ் – C.P.M – D.M.K - தமிழக கட்டிட தொழிளாலர் சங்கம் மற்றும் பொதுமக்கள் சமுகநல ஆர்வலர்களும் கலந்துகடகொண்டனர்.

கருத்துகள் இல்லை: