தீவிரவாதம். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தீவிரவாதம். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 28 ஆகஸ்ட், 2010

அமெரிக்கா தீவிரவாதத்தின் பிறப்பிடங்களில் ஒன்று - சிஐஏ ரிப்போர்ட்டை வெளியிட்டது விக்கிலீக்ஸ்

வாஷிங்டன்,ஆக27:அமெரிக்காவிலிருந்தும் தீவிரவாதம் பரவுகிறது, தீவிரவாதத்தின் பிறப்பிடங்களில் ஒன்றாக அமெரிக்கா மாறியுள்ளதாக கூறும் சிஐஏ ரிப்போர்ட்டை அம்பலப்படுத்தி அடுத்த குண்டைப் போட்டுள்ளது விக்கிலீக்ஸ்.

3 பக்கங்களைக் கொண்ட இந்த சிஐஏ அறிக்கை 2010, பிப்ரவரி 2ம் தேதியிட்டது. இதை நேற்று வெளியிட்டுள்ளது விக்கிலீக்ஸ்.

அதில்,டேவிட் ஹெட்லி உள்ளிட்ட பல அமெரிக்கர்கள் உலகின் பல பகுதிகளுக்கும் சென்று பல்வேறு வன்முறைக் காரியங்களுக்கு உதவியுள்ளனர் அல்லது நிகழ்த்தியுள்ளனர். இவர்களில் ஹெட்லி, மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடையவராக இருக்கிறார்.

இன்னொரு அமெரிக்கரான பரூச் கோல்ட்ஸ்டீன் என்பவர் ஒரு யூத தீவிரவாதி ஆவார். இவர் 1994ம் ஆண்டு ஹெப்ரானில் 12க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்படக் காரணமாவார் என்று விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கையை வெளியிட்டுள்ள விக்கிலீக்ஸ், வெளிநாட்டுக்காரர்கள் கண்களில் தீவிரவாதத்தின் ஏற்றுதியாளராக அமெரிக்கா தெரிவதாக குறிப்பிட்டுள்ளது.

மேலும் தன் வசம் சிக்கியுள்ள மேலும் 15,000 போர் ரகசிய அறிக்கைகளை விரைவில் வெளியிடப் போவதாகவும் அது கூறியுள்ளது.

சிஐஏ அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது;
மற்றவர்கள் நினைப்பது போல அமெரிக்காவிலிருந்து தீவிரவாதம் பரவுவது சமீப காலமாக அல்ல. மாறாக இது மிக நீண்ட காலமாக நடந்து வருகிறது. மேலும் தீவிரவாதத்தின் பிறப்பிடமாக இதுவரை மத்திய கிழக்கு, கிழக்கு, ஆப்பிரிக்க, தெற்காசிய நாடுகள் மட்டுமே கருதப்பட்டு வந்தன. ஆனால் அமெரிக்காவும் இதில் ஒன்றாக திகழ்கிறது.

உள்நாட்டுப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அல் கொய்தா உள்ளிட்ட அமைப்புகளை அமெரிக்கா வேட்டையாடி வரலாம்.

ஆனால் நிஜத்தில், தங்களது தீவிரவாத காரியங்களுக்கு அமெரிக்கர்களை பல அமைப்புகள் பயன்படுத்த ஆரம்பித்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த அறிக்கை அமெரிக்காவை குற்றம் சாட்டி தயாரிக்கப்பட்டதல்ல, மாறாக மாறி வரும் சூழல்கள் குறித்த சிந்தனையை ஏற்படுத்தவே இதை தயாரித்தோம் என்று சிஐஏ கூறியுள்ளது.

இதுகுறித்து சிஐஏ செய்தித் தொடர்பாளர் மேரி ஹார்ப் கூறுகையில், இவை ஒரு சாதாரண அறிக்கைதான். இப்படிப்பட்ட சூழல் உள்ளதை என்பதை சுட்டிக் காட்டும் வகையிலான விழிப்புணர்வு அறிக்கை மட்டு்மே என்றார்.

சமீபத்தில் ஆப்கானிஸ்தான் போர் தொடர்பாக 92,000 பக்கங்களைக் கொண்ட ராணுவ ரகசிய ஆவணத்தை விக்கிலீக்ஸ் வெளியிட்டு அமெரிககாவை பெரும் பரபரப்பில் ஆழ்த்தியது என்பது நினைவிருக்கலாம்.

இதையடுத்து விக்கிலீக்ஸ் நிறுவனரான ஜூலியன் அஸ்ஸான்ஜ் மீது பாலியல் குற்றச்சாட்டு கிளப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது. அவர் தன்னை கற்பழித்ததாக அன்னா ஆர்டின் என்ற பெண் குற்றம் சாட்டினார்.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள ஜூலியன், இதன் பின்னணியில் அமெரிக்க பாதுகாப்புத்துறை உள்ளதாக குற்றம் சாட்டியதும் நினைவுகூறத்தக்கது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவரான ஜூலியன் ஸ்வீடனில் வசித்து வருகிறார். அமெரிக்கா-சிஐஏவின் போர் ரகசியங்கள் குறித்து தன்னிடம் மேலும் ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் உள்ளதாகவும் அதையும் விரைவில் வெளியிடப் போவதாகவும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 17 ஜூன், 2010

குற்றுயிரும் குலையுயிருமாக கரையொதுங்கும் கடற் பறவைகள்!

வட அமெரிக்காவின் லூஸியானா மாகாணக் கடற்கரை...

- ஷங்கர்
அலையின் நுரையை அமுக்கிவிட்டு கறுப்பாக கரையைத் தொட்டு நிற்கிறது மெக்ஸிகோ வளைகுடா. கண்ணுக்கெட்டிய தூரம் வரை கறுப்பு.. மகா கறுப்பு. உலக சுற்றுச் சூழலின் மீது அடர்த்தியாகப் படிந்துள்ள இந்த பெட்ரோலியத்தின் மிச்சம், இப்போது அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா மீதும்!

குற்றுயிரும் குலையுயிருமாக கரையொதுங்கும் கடற் பறவைகள், திமிங்கிலக் குட்டிகள், விதவிதமான மீன்கள்....பறவைகளும் மீன்களும் இந்த கறுப்பிலும் எண்ணெய் பிசுக்கிலும் மூச்சுத் திணறி செத்து கரையொதுங்கிக் கொண்டே இருக்கின்றன...

இன்று நேற்றல்ல... கடந்த 60 தினங்களாக நடக்கும் 'கொலை' இது. அலட்சிய அரசுகள், அக்கறையற்ற அதிபர்கள்... மோசடி அதிகாரிகள்... நேர்மையற்ற வர்த்தகர்கள்.. எல்லாருமாகச் சேர்ந்து செய்திருக்கும் பயங்கரவாதம் இது.

'9/11யைஐ விட படு மோசமான வர்த்தக தீவிரவாதம்' என நடுநிலையாளர்களும் அமெரிக்கர்களும் மனம் வெறுத்துக் கூறும் அளவுக்கு நிலைமை முற்றிப் போயிருக்கிறது. ஆனால், இன்னும் நடவடிக்கை தீவிர ஏதும் எடுத்தபாடில்லை...

அப்படி என்னதான் நடந்தது?:

மெக்ஸிகோ வளைகுடாவில் கடலுக்கடியில் கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனம். கடந்த ஏப்ரல் 20ம் தேதி, அதாவது இரு மாதங்களுக்கு முன் இந்த எண்ணெய் கிணற்றின் முக்கிய இரும்புக் குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக ஏராளமான கச்சா எண்ணெய் கடலில் கசிய ஆரம்பித்தது. 11 தொழிலாளர்களும் இறந்தனர். ஆனால், அதை அப்படியே வெளியில் தெரியாமல் மூடி மறைத்துவிட்டது பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனம்.

அதற்குள் பல மில்லியன் காலன் கச்சா எண்ணெய் கடலுக்குள் கலந்துவிட்டது. ஒரு நாளைக்கு சராசரியாக 1.47 மில்லியன் காலன் முதல் 2.52 மில்லியன் காலன் வரையிலான (1 காலன் = 3.8 லிட்டர்) எண்ணெய் வெளியேறிக் கொண்டிருக்கிறது. ஏப்ரல் 20ம் தேதி தொடங்கி இன்று வரை எத்தனை மில்லியன் காலன் கச்சா எண்ணெய் கடலுக்குள் கலந்திருக்கும் என்பதை ஜஸ்ட் கற்பனை செய்து பாருங்கள்...

விஷயம் வெளியில் தெரிந்து பெருமளவு விமர்சனங்கள் எழுந்த பிறகே அமெரிக்க அரசு தலையிட்டது. உடனே அடுத்த 24 மணி நேரத்தில், குழாய் வெடிப்பின் மீது ஒரு தொப்பி போல அமைத்து எண்ணெய் பீச்சிடுவதை நிறுத்தப் போவதாகக் கூறியது பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனம். ஆனால், அதெல்லாம் ஒருசில நிமிடங்கள் கூட தாக்குப் பிடிக்கவில்லை. இன்னும் வேகமாக கச்சா எண்ணெய் பீய்ச்சிக் கொண்டு வெளியேறியபடி இருக்கிறது.

இந்த நிமிடம் வரை எண்ணெய் கசிவு நிறுத்தப்படவே இல்லை. இன்றைய நிலவரப்படி, கடலில் கிட்டத்தட்ட 1 கிலோ மீட்டருக்கும் அதிகமான அடர்த்தியில் (density) கச்சா எண்ணெய் கலந்து நிற்கிறது.

அமெரிக்காவின் மூன்று பெரிய மாகாணங்களின் மொத்த பரப்பளவுக்கு (area) இணையான அளவு கடலில் எண்ணெய் தேங்கி நிற்கிறது. ஆனால் இதனை அப்படியே மூடி மறைத்தன பிரிட்டிஷ், அமெரிக்க அரசுகள். ஒருநாளைக்கு 5,000 பேரல்கள்தான் கசிவதாக பிரிட்டனும், இல்லையில்லை 12,000 முதல் 20,000 லிட்டர்தான் என அமெரிக்காவும் கூறிவந்தது. ஆனால் விஞ்ஞானிகளும் சுற்றுச் சூழல் ஆர்வலர்களும் தன்னிச்சையாக நடத்திய ஆய்வின் முடிவில்தான் மேற்கண்ட உண்மை தெரியவந்தது.

இந்தக் கசிவை எப்படித்தான் அடைக்கப் போகிறார்கள்?:

அது இப்போதைக்கு சாத்தியமா என்றே தெரியவில்லை என்கிறார் டாக் ஹாமில்டன். எண்ணெய்க் கசிவின் தன்மையை ஆராய்ந்தவர்களில் இவரும் ஒருவர். "ஒரு இடத்தில் எண்ணெய்க் கசிவதாகத்தான் சொன்னார்கள். ஆனால் உண்மை அதுவல்ல... மெயின் குழாயின் மேல் பகுதியில் மட்டுமல்லாமல், பக்கவாட்டுப் பகுதிகளிலும் எண்ணெய்க் கசிந்து கொண்டிருக்கிறது. ரைஸர் எனப்படும் குழாயின் பல துளைகளிலும் கட்டுப்படுத்த முடியாத கசிவுகள் இருக்கின்றன. இதை அடைப்பது கஷ்டம்" என்கிறார் ஹாமில்டன்.

சரி எத்தனை நாளைக்கு இந்த எண்ணெய் கசிவு இருக்கும்...? அந்த கிணற்றின் இருப்பு எவ்வளவு?.

இந்தக் கேள்விகளுக்கு பிரிட்டிஷ் பெட்ரோலியம் தந்துள்ள பதில் 'தெரியாது'. இதுதான் விஞ்ஞானிகளை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஒரு இடத்தில் எவ்வளவு இருப்பு உள்ளது என்று தெரியாமலா பல பில்லியன் டாலர்களைக் கொட்டுகிறதா அந்த நிறுவனம்? பிரிட்டிஷ் பெட்ரோலியம் அப்பட்டமாக பொய் கூறுகிறது என்கிறார்கள்.

இந்த விஷயத்தில் ஒபாமா நிர்வாகம் மிக மோசமாக நடந்து கொண்டதாகவும், இதுவரை எந்த கடுமையான நடவடிக்கையையும் பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனம் மீது எடுக்கவில்லை என்றும் விமர்சனம் எழுந்துள்ளது.

எப்படி சுத்தம் செய்யப் போகிறார்கள்?:

டிஸ்கவரர் என்டர்பிரைஸஸ் எனும் நிறுவனம் மூலம் கடலில் கசிந்துள்ள எண்ணெய்யை சுத்திகரிக்கும் பணி நடந்து வருகிறது. இதுவரை 6,30,000 காலன் எண்ணெய்தான் கடலிலிருந்து சேகரித்து, எரிக்கப்பட்டு்ள்ளது. இந்தப் பணியில், பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்தின் இரு ஒப்பந்ததாரர்கள் தங்கள் சொந்த கப்பலை ஈடுபடுத்தினாலும், இதற்கென தனி கட்டணத்தை எதிர்ப்பார்க்கிறார்களாம்.

பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனமோ இந்த சுத்திகரிப்புப் பணிக்காக 1.6 பில்லியன் டாலரை ஒதுக்கியிருப்பதாகக் கூறுகிறது.
நடந்துள்ள பெரும் சுற்றுச் சூழல் மாசுபாட்டுக்கு முன்னால் இந்தத் தொகை ஒரு தூசு!.

ஆழ்கடலில் எண்ணெய் எடுக்கும் தொழிலில் 10 நிறுவனங்கள் பல டிரில்லியன் டாலர் ஈடுபட்டுள்ளன. கடந்த ஆண்டு மட்டும் 2 ட்ரில்லியன் டாலருக்கும் அதிகமாக வருவாய் ஈட்டியுள்ளன. 180 பில்லியன் டாலர் லாபம் பார்த்துள்ளன. ஆனால் ஒரு எண்ணெய் கிணற்றின் கசிவை அடைக்க 1.6 பில்லியன் டாலர் மட்டுமே செலவிட முன்வந்துள்ளது எத்தனை பெரிய கொடுமை!.

எண்ணெய் பரவாமல் இருக்க தற்காலிக தடுப்பு அமைத்துள்ளனர் அமெரிக்க கோஸ்ட் கார்ட் மற்றும் கடற்படையினர். ஆனால் அது ஓரளவுதான் பலன் தந்தது. கசிவின் அளவு அதிகமாக உள்ளதால் தடையைத் தாண்டி கடலில் எண்ணெய் பரவிக்கொண்டே உள்ளது.

சுத்தப்படுத்துதல், மக்களுக்கான நிவாரணப் பணிகளுக்காக 17,000 ராணுவ வீரர்களை அமெரிக்கா நியமித்துள்ளது. பல தன்னார்வ நிறுவனங்களும் ஈடுபடத் தயாராகி வருகின்றன. ஆனாலும் உடனடிப் பலன் கிடைக்குமா என்பது சந்தேகம்தான்.

இந்த எண்ணெய்க் கசிவால் லூசியானா மற்றும் மெக்ஸிகன் வளைகுடா கரையோரங்களில் வசிக்கும் மக்கள் நிலை குலைந்து போயுள்ளனர். இந்த மக்களின் அடிப்படைத் தொழிலே மீன்பிடிப்பதுதான். இனி பல மாதங்களுக்கு அந்தத் தொழிலைத் தொடவே முடியாது. பல நூறு கிலோமீட்டர் தூரத்துக்கு எண்ணெய் படலம் அடர்த்தியாகக் காணப்படுவதால், இங்கெல்லாம் மீன்கள் சரளமாக வரவே பல ஆண்டுகள் மாதங்கள் பிடிக்குமாம்.

இயற்கை வளங்கள், அந்தப் பகுதி கடற்கரைகள் என சகலமும் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிப்பின் அளவைக் கூட இன்னும் முழுமையாகக் கணிக்க முடியவில்லை. ஆனால் அது எந்த அளவாக இருந்தாலும் முழுமையாக பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனம் ஈடு செய்ய வேண்டும் என இப்போது அறிவித்துள்ளார் ஒபாமா.

பாதிக்கப்பட்ட பகுதியை முழுவதுமாகப் பார்த்தபின் அவர் கூறியது இது: "பெரும் புயல், இயற்கைப் பேரிடர் காலங்களில் கூட அமெரிக்கா இப்படியொரு மோசமான பாதிப்புக்கு உள்ளானதில்லை. இது நிச்சயம் மிகப் பெரிய சவால்தான். ஆனால், கடலில் கலந்துள்ள 90 சதவிகித எண்ணெயை சுத்தப்படுத்திவிடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. இதற்குக் காரணமான நிறுவனத்தை சும்மா விட முடியாது. முழுமையான நஷ்ட ஈடு தந்தாக வேண்டும்" என்றார்.

இனி ஆயில் நிறுவனங்களுடன் அமெரிக்கா பங்குதாரராக இருக்காது.. கண்காணிப்பாளராக இருந்து இனியொரு விபத்து நடக்காமல் பார்த்துக் கொள்ளும் என்றும் அவர் முழங்கியுள்ளார்.

ஆனால் அவரது இந்த வார்த்தைகள் பாதிக்கப்பட்ட பகுதி மக்களை சமாதானப்படுத்தியதாகத் தெரியவில்லை. 60 நாட்கள் வரை அமைதியாக வேடிக்கப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, இன்று அவர் கூறியிருப்பது வெற்று வார்த்தைகளே என்று எதிர்க்குரல் எழுப்பியுள்ளனர் மக்கள்.

இந் நிலையில் ஆர்டிக் கடல் பகுதியில் புதிய மெகா சைஸ் எண்ணெய் கிணறுகளைத் தோண்ட ஷெல் கார்ப்பரேஷனுக்கு இரு தினங்களுக்கு முன் அனுமதி தரப்பட்டுள்ளதையும், இந்த ஷெல் நிறுவனத்திடமும் எண்ணெய்க் கசிவைத் தடுக்கும் மாற்றுத் திட்டம் இல்லை என்பதையும் என்னவென்று சொல்வது...!


சனி, 28 மார்ச், 2009

குஜராத்; காவி காரிருளை கிழித்துக்கொண்டு ஒரு நீதியின் ஒளிக்கீற்று!


குஜராத்தில் பயங்கரவாதி நரேந்திரமோடியின் முழு ஆதரவுடன் நடத்தப்பட்ட முஸ்லீம் இனப்படுகொலையில், சுமார் 3000.முஸ்லிம்கள் கரிக்கட்டையானார்கள். முஸ்லீம் சகோதரிகளின் கற்புகள் சூறையாடப்பட்டது. முஸ்லிம்களுக்கு சொந்தமான பலகோடி ரூபாய் சொத்துக்கள் சூறையாடப்பட்டது. இந்த வழக்கில் ஆரம்பத்தில் மோடியின் மிரட்டலால், குற்றவாளிகள் தப்பித்தாலும் நாளடைவில் மனிதநேயமிக்கவர்களின் முயற்சியால் குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்படுவது, அனைத்தையும் இழந்து சொந்த நாட்டில் அகதிகளாக வாழும் குஜராத் முஸ்லிம்களுக்கும், எம் சொந்தங்களின் நிலையை எண்ணி உள்ளத்தில் புழுங்கும் எம்போன்ற முஸ்லிம்களுக்கும் சட்டத்தின்மீதும், நீதியின் மீதும் சற்றே நம்பிக்கை பிறந்துள்ளது. கடந்த 2002 .ல் காவி பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட முஸ்லீம் இனப்படுகொலையில்,பயங்கரவாதிகளை ஊக்குவித்ததாக குஜராத் பெண் அமைச்சர் மாயாபென் மற்றும் வி.ஹெஜ்.பி தலைவர் ஜெய்தீப் பட்டேல் ஆகியோர்மீது வழக்கு பதியப்பட்டது. இந்நிலையில் அமைச்சர் மாயாபென் தலைமறைவானதோடு, தான் கைது ஆகாமல் தப்பிக்க முன்ஜாமீனும் பெற்று இருந்தார். இதற்கிடையில் அவரது முன்ஜாமீனை ரத்து செய்த ஐகோர்ட்டு நீதிபதி வகேலா அவர்கள், 'மத ரீதியான வன்முறை செயலகள் தீவிரவாத செயல்களுக்கு சமம்;இந்தியா ஒரு ஜனநாயக நாடு, எனவே இது போன்ற சம்பாவங்களை ஊக்குவிக்கக்கூடாது என்றும் கூறினார். தனது ஜாமீன் ரத்தானதையடுத்து, தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்த மாயாபென் மற்றும் ஜெய்தீப் படேல் ஆகியோர் சிறப்பு புலனாய்வு போலிஸ் அதிகாரிகள் முன் சரணடைந்ததையடுத்து, அவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களை போன்ற பயங்கரவாத செயல்களுக்கு ஊக்குவிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின்முன் நிறுத்தப்பட்டு கடுமையாக தண்டிக்கப்படவேண்டும். அதிலும் குறிப்பாக 'மோடியின் ஆசியோடுதான் இந்த முஸ்லீம் இனப்படுகொலையை நிகழ்த்தினோம்' என்று தெஹல்கா பேட்டியில் ஒரு பயங்கரவாதி கூறியிருந்தான். எனவே, தெஹல்கா பேட்டியின் அடிப்படையில் மோடியையும் விசாரணைக்கு உட்படுத்தி நீதியை நிலைநாட்டினால்தான் பயங்கரவாதம் நாட்டிலிருந்து துடைத்தெறியப்படும். எம்மக்கள் கருகிவிட்டாலும், நீதி கருகாமல் காக்கப்படும் என்றே முஸ்லிம்கள் நம்புகிறோம்.

திங்கள், 9 மார்ச், 2009

சிண்டுமுடியும் தினமலர்!

பதினொரு முட்டாள்கள் விளையாட பதினோராயிரம் முட்டாள்கள் வேடிக்கை பார்க்கிறார்கள்' என்று ஒரு அறிஞர் ஒரு காலத்தில் வர்ணித்த கிரிக்கெட் இன்று உலகின் பெரும்பாலோரை தன்வயப்படுத்தியுள்ளதை யாரும் மறுக்கமுடியாது. கிரிக்கெட் மட்டுமல்ல எந்த விளையாட்டாக இருந்தாலும் அதில் மதமும், அரசியலும் கலக்கக்கூடாது என்பதுதான் முஸ்லிம்களின் நிலையாகும். சில ஆண்டுகளுக்கு முன் மும்பையில் பாகிஸ்தான் அணி விளையாட அனுமதிக்க மாட்டோம் என்று சிவசேனா கொக்கரித்தும், மைதானத்தை சேதப்படுத்தியதும் நினைவிருக்கலாம். அப்போதெல்லாம் வாய்திறக்காத தினமலர், லாகூரில் இலங்கை அணி தாக்கப்பட்டதும் வாய்திறந்துள்ளது.

லாகூரில் இலங்கை அணி தாக்கப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கதே! எந்த முஸ்லிமும், எந்த முஸ்லீம் அமைப்புகளும் இதை ஆதரிக்கவில்லை. அவ்வளவு ஏன் பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாராப் இதை வன்மையாக கண்டித்துள்ளார்.

லாகூரில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள்மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் ஒட்டுமொத்த பாகிஸ்தானுக்கே வெட்கக்கேடான விஷயம். இது மிகவும் கண்டிக்கத்தக்கது என்று முஷாரப் கூறியுள்ளார். இந்த செய்தியை வெளியிட்டுவிட்டு தனது'டவுட் தனபாலு' பகுதியில் தினமலர் பின்வருமாறு எழுதுகிறது;

டவுட் தனபாலு; ஓவரா துடிக்கிறதா பார்த்தா, 'ஏண்டா இந்திய வீரர்கள் வந்தபோதெல்லாம் சொம்மா இருந்துட்டு, இலங்கை வீரர்களை போய் அடிச்சீங்க'ன்னு கேக்குற மாதிரில்ல இருக்கு!

இப்படி எழுதி எதோ இந்திய வீரர்களை தாக்குவது முஷாரப் மற்றும் பாகிஸ்தானியர்களின் திட்டம்போல தினமலர் விஷம் கக்கியுள்ளது. இதுவரை எத்துணையோ மேட்ச்கள் இந்தியா அணி பாகிஸ்தானில் விளையாடியுள்ளது. அப்போதெல்லாம் அவர்கள்மீது சிறு துரும்பு பட்டிருக்குமா? மேலும், இலங்கை அணியினர் மீதான தாக்குதலை தடுக்கும் முயற்சியில் நான்கு காவலர்கள் கொல்லப்பட்டார்களே! அது ஏன் தினமலருக்கு தெரியவில்லை? தீவிரவாதிகளிடமிருந்து இலங்கை அணியினரை பத்திரமாக காப்பாற்றிய டிரைவரும் ஒரு முஸ்லிம்தான் என்பதும் தினமலரின் கழுகு கண்களுக்கு தெரியாதது ஏன்? உயிர் தப்பிய இலங்கை வீரர்கள் தங்களை காப்பாற்றிய டிரைவரை தங்கள் நாடுதிரும்பிய பின்னும் நன்றியோடு நினைவுகூர்ந்து பேட்டியளித்தது தினமலருக்கு ஏன் தெரியவில்லை? இலங்கை அணியினர் மீதான தாக்குதலுக்கும், பாகிஸ்தான் அரசுக்கும் சம்மந்தம் இல்லாததால்தான்,' பாகிஸ்தான் அரசு கேட்டுக்கொண்டால் எங்கள் வீரர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்புவோம்' என்று இலங்கை அமைச்சர் சொன்னது தினமலருக்கு ஏன் தெரியவில்லை?

எங்கோ ஒரு முஸ்லீம் தீவிரவாதத்தில் ஈடுபட்டால் ஒட்டுமொத்த முஸ்லீம் சமுதாயத்தையே குற்றப்பரம்பரையாக சித்தரிப்பதும், ஒருநாட்டிலுள்ளதீவிரவாதிகள் தாக்குதலுக்காக, ஒரு நாட்டையே தீவிரவாத நாடாக சித்தரிப்பதும் தினமலர் வகையறாக்களுக்கு கைவந்த கலைபோலும். இனியாவது தினமலர் நடுநிலை பேணி பத்திரிகை தர்மத்தை பேணட்டும்.