கெய்ரோ,அக்.11:எகிப்து நாட்டின் மிகப்பெரிய மக்கள் இயக்கம் என சிறப்பிக்கப்படும் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் அடுத்த மாதம் நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில் பங்கேற்கும்.
சுயேட்சை வேட்பாளர்களை களமிறக்கி 3 இல் ஒரு பகுதி இடங்களை கைப்பற்ற அந்த இயக்கம் திட்டமிட்டுள்ளது. எகிப்தில் முஸ்லிம் சகோதரத்துவம் தடைச் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த தேர்தலில் கடுமையான முறைகேடுகள் நடந்த பிறகும் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் 20 சதவீத இடங்களை கைப்பற்றி அரசியல் பார்வையாளர்களை ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 500க்குமேற்பட்ட பாராளுமன்ற தொகுதிகளில் 169 இடங்களில் போட்டியிட அவ்வியக்கம் திட்டமிட்டுள்ளது.
முக்கிய எதிர்கட்சி தலைவரும் முன்னால் சர்வதேச அணுசக்தி நிறுவனத்தின் தலைவருமான முஹம்மது அல் பராதி தேர்தலை புறக்கணிக்க அழைப்பு விடுத்திருந்தார். தேர்தலில் பங்கேற்பது ஹுஸ்னி முபாரக் அரசை அங்கீகரிப்பதற்கு சமம் என பராதி கூறியிருந்தார்.
ஆனால், மக்களுக்கு மாற்று அரசியலைக் குறித்து கல்வியறிவு அளிக்கவேண்டிய வாய்ப்புதான் தேர்தல் என முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் தலைவர்கள் கூறுகின்றனர். அதேவேளையில், தேர்தலில் முறைகேடுகளை நடத்த திட்டமிட்டிருக்கும் ஹுஸ்னி முபாரக் அரசின் முயற்சியைக் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும் என முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் தலைவர் முஹம்மது பதாஇ அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த தேர்தலுக்கு பிறகு முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தை ஒடுக்கும் நடவடிக்கையை அதிகரித்திருந்தது எகிப்திய அரசு.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்,
இறை நம்பிக்கை கொண்டோர்களே உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் பயபக்தயுடையோர் ஆகலாம். திருக்குர்ஆன் 2:183)
எகிப்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எகிப்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திங்கள், 11 அக்டோபர், 2010
வியாழன், 9 செப்டம்பர், 2010
எகிப்து:தேர்தலைப் புறக்கணிக்க எதிர்கட்சி வேண்டுகோள்
கெய்ரோ,செப்.9:எகிப்தில் வருகிற நவம்பர் மாதம் நடக்கவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் அரசு மோசடியில் ஈடுபடுவது தெளிவாகயிருக்கவே அத்தேர்தலை புறக்கணிக்குமாறு முக்கிய எதிர்கட்சித் தலைவரான முஹம்மது அல்பராதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தேர்தலில் பங்கெடுப்பது எகிப்தில் ஜனநாயகத்தை கொண்டுவர வேண்டும் என்ற தேசிய விருப்பத்திற்கு எதிரானதாகும். வரும் ஆண்டிலும், மாதங்களிலும் தேசத்தில் மாற்றத்தின் சூறாவளி வீசும் என முன்னாள் சர்வதேச அணுசக்தி முகமையின் தலைவராக பணியாற்றிய அல்பராதி தெரிவித்துள்ளார்.
2011 ஆம் ஆண்டில் அதிபர் தேர்தலில் அல்பராதி பங்கேற்பாரா என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை. 30 ஆண்டுகள் பதவியில் தொடர்ந்த ஹுஸ்னி முபாரக் இந்தத் தேர்தலோடு பதவி விலகுவார் என ஊகமானச் செய்திகள் கூறுகின்றன.
82 வயதான முபாரக் தனது மகன் ஜமாலை தனது வாரிசாக நியமிப்பார் என பெரும்பாலோர் கருதுகின்றனர்.
1981 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட அவசரச்சட்டத்தை மாற்றவேண்டும், தேர்தலை நீதிபதிகளின் மேற்பார்வையில் நடத்தவேண்டும் என்பது உள்ளிட்ட 7 கோரிக்கைகளை அல்பராதி முன்வைத்துள்ளார். இக்கோரிக்கைகளை முன்வைத்து அல்பராதி பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறார்.
தேசிய ஜனநாயகக்கட்சி ஆட்சிச் செய்வதில் தோல்வியடைந்துவிட்டதாக அல்பராதி குற்றஞ்சாட்டுகிறார். ஏழ்மையும், கல்வியின்மையும் அதிகரித்துவருவதாகவும், மனித உரிமைமீறல்கள் அதிகரித்து வருவதாகவும் அல்பராதி தெரிவிக்கிறார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
தேர்தலில் பங்கெடுப்பது எகிப்தில் ஜனநாயகத்தை கொண்டுவர வேண்டும் என்ற தேசிய விருப்பத்திற்கு எதிரானதாகும். வரும் ஆண்டிலும், மாதங்களிலும் தேசத்தில் மாற்றத்தின் சூறாவளி வீசும் என முன்னாள் சர்வதேச அணுசக்தி முகமையின் தலைவராக பணியாற்றிய அல்பராதி தெரிவித்துள்ளார்.
2011 ஆம் ஆண்டில் அதிபர் தேர்தலில் அல்பராதி பங்கேற்பாரா என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை. 30 ஆண்டுகள் பதவியில் தொடர்ந்த ஹுஸ்னி முபாரக் இந்தத் தேர்தலோடு பதவி விலகுவார் என ஊகமானச் செய்திகள் கூறுகின்றன.
82 வயதான முபாரக் தனது மகன் ஜமாலை தனது வாரிசாக நியமிப்பார் என பெரும்பாலோர் கருதுகின்றனர்.
1981 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட அவசரச்சட்டத்தை மாற்றவேண்டும், தேர்தலை நீதிபதிகளின் மேற்பார்வையில் நடத்தவேண்டும் என்பது உள்ளிட்ட 7 கோரிக்கைகளை அல்பராதி முன்வைத்துள்ளார். இக்கோரிக்கைகளை முன்வைத்து அல்பராதி பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறார்.
தேசிய ஜனநாயகக்கட்சி ஆட்சிச் செய்வதில் தோல்வியடைந்துவிட்டதாக அல்பராதி குற்றஞ்சாட்டுகிறார். ஏழ்மையும், கல்வியின்மையும் அதிகரித்துவருவதாகவும், மனித உரிமைமீறல்கள் அதிகரித்து வருவதாகவும் அல்பராதி தெரிவிக்கிறார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)