விழுப்புரம் மாவட்டம் கோட்டக் குப்பத்தில் 30 ஆயிரம் மக்கள் வாழும் பகுதியாக உள்ளது. ஆனால், இங்கு குடிநீர் மிகவும் மாசடைந்து, உப்பு நீராகவும், பாக்டீரியா கிருமிகள் நிறைந்ததாகவும் உள்ளது. இந்த குடிநீர் குடித்தால் வாந்தி, பேதி, காய்ச்சல் போன்ற கடுமையான நோய்கள் ஏற்படும் ஆபத்து உள்ளதாக புதுவை பொதுப்பணித்துறையின் தண்ணீர் ஆய்வு சோதனைக் கூடத்தின் மூலம் குடிநீரை ஆய்வு செய்ததில் தெரியவந்துள்ளது.
பேரூராட்சியால் வழங்கப்படும் குடிநீர் மேல்நிலை தொட்டிக்கு எந்தவித பாதுகாப்பும் பராமரிப்பும் இல்லாத அவலநிலை உள்ளது. பூந்தோட்டமாய் இருக்க வேண்டிய குடிநீர் தொட்டி சாக்கடையாகவும், குப்பை மேடுகளாவும் மது குடிப்போரின் குளியல் தொட்டியாகவும் உள்ளது.
கோட்டக்குப்பத்தில் இயங்கிவரும் தண்ணீர் கம்பெனிகளால் மக்களின் உயிராதாரமாக கருதப்படும் நிலத்தடி நீர் நாளுக்கு நாள் உறிஞ்சப்படுவதால் கடல் நீர் கலந்து உப்பு நீராக மாறிவருகிறது.
எனவே, கோட்டக்குப்பம் பேரூராட்சியை கண்டித்தும், இங்கு இயங்கிவரும் தண்ணீர் கம்பெனிகளின் உரிமத்தை ரத்து செய்யக் கோரியும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் மற்றும் மனிதநேய கட்சி சார்பில் கண்டன 29.12.2010 ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமுமுக&வின் கோட்டக்குப்பம் நகர தலைவர் ஜெ.சம்சுதீன் தலைமையேற்க, மாநில மாணவரணி செயலாளர் எம்.ஜெய்னுல் ஆபுதீன் கண்டன உரை ஆற்றினார். மேலும், மாவட்ட மற்றும் நகர நிர்வாகிகள், உறுப்பினர்கள், கோட்டக்குப்பம் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
இறை நம்பிக்கை கொண்டோர்களே உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் பயபக்தயுடையோர் ஆகலாம். திருக்குர்ஆன் 2:183)
தமுமுக போராட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமுமுக போராட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வியாழன், 6 ஜனவரி, 2011
கோட்டக்குப்பத்தில் நல்லகுடிநீருக்காக ஆர்ப்பாட்டம்
வியாழன், 18 பிப்ரவரி, 2010
போரூரில் உடலை தோண்டிய விவகாரம் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு தமுமுக போராட்டம்

போரூரில் அமைந்துள்ளது சேக்மானிய பள்ளிவாசல். இந்த பள்ளிவாசலுக்குட்பட்ட, வக்ஃப் போர்டுக்கு சொந்தமான 500 கோடி மதிப்புள்ள சொத்து உள்ளது. இந்த சொத்து என்னுடையது தான் என்று ஒருவர் உரிமை கொண்டாடி வருகிறார். இந்த இடம் யாருக்கு சொந்தம் என்ற தீர்ப்பு நிலுவையில் உள்ள நிலையில் கடந்த 13லி2லி2010 அன்று இறந்த முஸ்லிம் பெண்மணியின் உடலை ஜமாத்தார்கள் அடக்கம் செய்தனர். இதைத் தொடர்ந்து அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது.

காவல்துறையினர் முஸ்லிம் அமைப்பினரிடம் நாங்கள், அடக்கப்பட்ட உடலை தோண்டி எடுக்க மாட்டோம் என்று உறுதி அளித்தனர். ஆனால் கொடுத்த வாக்குறுதியை மீறி கடந்த 15லி2லி2010 அன்று காலை 5 மணியளவில் திருவள்ளுவர் மாவட்ட கலெக்டர் தலைமையில் அம்பத்தூர் தாசில்தார் முன்னிலையிலும், அப்பகுதி முஸ்ம் ஜமாஅத்தார் அனுமதியின்றி அடக்கப்பட்டிருந்த பெண்மணியின் உடலை தோண்டி எடுத்து வேறு ஒரு பள்ளிவாசல் அடக்கத்தலத்தில் அடக்கம் செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரின் இந்த அத்துமீறிய செயலைக் கண்டித்தும், வரம்பு மீறி செயல்பட்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் அலுவலர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரியும், சேக் மாணியம் வக்ஃபு சொத்தை முஸ்ம்களிடம் ஒப்படைக்க கோரியும் தமிழ்நாடு முஸ்ம் முன்னேற்றக் கழகம் சார்பில் இன்று காலை 11 மணிக்கு தலைமைச் செயலக முற்றுகை போராட்டம் நடைபெற்றது.


தமிழ்நாடு முஸ்ம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் செ. ஹைதர் அ தலைமையில் பொருளாளர் ஓ.யூ. ரஹ்மத்துல்லாஹ், துணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ். ரிஃபாயி, தலைமை நிர்வாக குழு உறுப்பினர் ப. அப்துல் சமது, மாநிலச் செயலாளர்கள் ஏ.எஸ். எம். ஜுனைத், பி.எஸ். ஹமீது, துணைச் செயலாளர் பி.எல்.எம். யாசின், தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்.எஸ். ஹாரூன் ரஷீத், வட சென்னை மாவட்ட தமுமுக தலைவர் உஸ்மான், தென் சென்னை மாவட்ட தலைவர் சீனி முகம்மது, திருவள்ளூர் மாவட்டத் தலைவர் கமருதீன், காஞ்சி மாவட்ட தலைவர் மீரான் முஹைதீன் ஆகியோர் உட்பட ஏராளமான தமுமுக தொண்டர்கள் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தலைமைச் செயலகத்தை முற்றுகையிட பேரணியாக புறப்பட்டுச் சென்ற போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.


இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)