ஆண் விபசாரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆண் விபசாரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 28 ஜூன், 2009

நூதன மோசடி: விபச்சாரத்திற்கு ஆண்கள் தேவை! சி.பி.சி.ஐ.டி., தீவிர விசாரணை

"ஆண் விபசாரம்' தொடர்பாக, கோவை மற்றும் சென்னையில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். "பெண்களுக்கு சேவை செய்ய ஆண்கள் தேவை' என "எஸ்.எம்.எஸ்' அனுப்பி, எண்ணற்ற இளைஞர்களிடம் உறுப்பினர் கட்டணம் வசூலித்த ஆசாமிகள் மும்பையைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

டில்லி, மும்பை, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் கேளிக்கை விடுதிகளும், ஆபாச நடன "பார்'களும், நூதன விபசாரமும் போலீசாரின் கண்காணிப்பை மீறி கலாசாரச் சீரழிவை நடத்திக் கொண்டிருக்கின்றன. அந்த அழிவுக் கலாசாரம் மெல்ல, மெல்ல தமிழகத்திலும் தலைகாட்டத் துவங்கியுள்ளது. சென்னை, கோவை நகரங்களிலுள்ள சில பிரபல ஓட்டல்களில் "ஆபாச நடன பார்கள்' செயல்படுகின்றன. அரசியல், அதிகார உயர்பீட தலையீடுகள் காரணமாக, நடவடிக்கை எடுக்காமல் போலீசார் வேடிக்கை பார்க்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. தற்போது நடக்கும் கலாசாரச் சீரழிவு கூத்துகள் போதாது எனக்கூறி, ஆண்களை விபசாரத்துக்கு அனுப்பும் நூதன தொழிலையிலும் சிலர் துவக்கியுள்ளனர். "Mச்டூஞு ஞுண்ஞிணிணூtண் ண்ஞுணூதிடிஞிஞு' என்ற பெயரில் சென்னை, கோவை நகரிலுள்ள நபர்களின் மொபைல் போ னுக்கு தொடர்ச்சியாக "எஸ்.எம்.எஸ்'கள் வருகின்றன.அதில், "வசதி படைத்த பெண்கள் கணவரை பிரிந்தும், இழந்தும் தவித்து வருகின்றனர்; அவர்களுக்கு "சேவை' செய்ய நீங்கள் தயாரா? "ஆம்' என்றால் உடனடியாக இந்த மொபைல் போன் எண்களை தொடர்பு கொள்ளுங்கள்' என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

அந்த எண்களை தொடர்பு கொண்டதும், எதிர் முனையில் பேசுபவர் "நீங்கள் எந்த மாநிலம்?' ஆங்கிலத்தில் கேட்கிறார்."தமிழகம்' என்றதும், தமிழில் சரளமாக பேசும் அந்நபர், "மாதத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை, நீங்கள் "சேவை' செய்ய வேண்டியிருக்கும்; நீங்கள் வசிக்கும் நகர் எது?' என கேட்கிறார். "கோவை' என்றதும், இங்குள்ள பிரபல ஓட்டல்களின் பெயர்களை வாசிக்கும் அவர், "உங்களது மொபைல் போன் எண்களை, எங்களிடம் ஏற்கனவே உறுப்பினராக பதிவு செய்திருக்கும் சில பெண்களிடம் கொடுப்போம்; அவர்கள் உங்களை தொடர்பு கொண்டு ஓட்டலுக்கு "பிக்-அப்' செய்து அழைத்துச் செல்வர்; மாதம் 20 ஆயிரம் ரூபாய் வரை சேவைக்கு ஏற்ப நீங்கள் சம்பாதிக்கலாம்; அதற்கு முன், நீங்கள் செய்ய வேண்டியது; உறுப்பினர் சேவைக் கட்டணமாக வங்கி கணக்கில் (தனியார் வங்கி பெயர், கணக்கு எண் விவரம் தெரிவித்து) 5,000 ரூபாய் செலுத்த வேண்டும்' என்கிறார். "பணம் செலுத்திய விவரம் எமக்கு கிடைத்ததும், உங்களுக்கான "பணி' துவங்கும்' என்கிறார். இந்நபர்களின் பேச்சை உண்மையென நம்பி, கோவையைச் சேர்ந்த சிலர், தனியார் வங்கியில் பணம் செலுத்தி இழந்தனர்.

"வெளியில் தெரிந்தால் அவமானம்' எனக் கருதி, போலீசில் புகார் செய்யாமல் தவிர்த்து விட்டனர். இது பற்றிய தகவல் அறிந்ததும், போலீசார் விசாரணையில் இறங்கினர். சம்பந்தப்பட்ட "எஸ்.எம்.எஸ்' அனுப்ப பயன்படுத்தப்பட்ட மொபைல் போன் "சிம்கார்டு' உரிமையாளரின் முகவரி, வங்கிக் கணக்கு துவக்கியவரின் முகவரியை சேகரித்தபோது, மகாராஷ்டிர மாநிலம், மும்பை, தாதர் பகுதியில் மோசடி நபர்கள் செயல்படுவது அம்பலமானது. மேலும், தனியார் வங்கியில் பலரும் செலுத்திய பணம், தாதரிலுள்ள ஏ.டி.எம்., மையத்தில் எடுக்கப் பட்டதும் தெரியவந்தது. எனினும், யாரும் புகார் தராததால், நடவடிக்கை மேற்கொள்ள முடியாமல் தவிர்த்து விட்டனர்.தமிழகத்தில் இதுபோன்ற மோசடி அதிகரித்து வருவதை அறிந்த உள்துறை செயலகம், ரகசிய விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சி.பி.சி.ஐ.டி.,க்கு உத்தரவிட்டுள்ளது. மோசடி நபர்களின் மொபைல் போன் எண்கள், வங்கி கணக்குகளை சேகரித்துள்ள சி.பி.சி.ஐ.டி., போலீசார், சென்னை மற்றும் கோவையில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மும்பையில் செயல்படும் மோசடி கும்பலுடன், தமிழக நபர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.