ஈராக் எல்லையில் அமெரிக்க உளவுத் துறையினர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஈராக் எல்லையில் வைத்து கைது செய்யப்பட்ட மூன்று அமெரிக்க குடிமகன்களின் நோக்கம் உளவு வேலைப்பார்ப்பதுதான் என்று ஈரான் அதிகாரிகள் கூறினர்.
இதனையடுத்து கைது செய்யப்பட்டுள்ள இவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பது உறுதியாகியுள்ளது. ஷைன் போவர், ஸாரா சுர்த், ஜோஷ் பட்டல் ஆகியோர் ஈரான் போலீசிடம் சிக்கினர். கலிஃபோர்னியா பல்கலைகழகத்தில் பட்டம் பெற்று விட்டுத்தான் இம்மூவரும் ஈரான் வந்துள்ளனர். உளவு பார்ப்பதற்காகத்தான் இவர்கள் ஈரான் வந்துள்ளதாக ஈரானின் அரசு தரப்பு வழக்கறிஞர் அப்பாஸ் ஜஃபரி தவுலத்தாபாதி கூறினார். விசாரணை தொடர்வதாகவும் அவர் தெரிவித்தார் .