பெண்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெண்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 9 மார்ச், 2011

இந்தியாவின் ஒளிவிசும் 5 நட்சத்திர பெண்கள்!!!


லண்டன்,மார்ச்.9:உலகில் மிகவும் உத்வேகமளிக்கும் பெண்களின் பட்டியலில் 5 இந்தியர்கள் இடம் பிடித்துள்ளனர்.

'தி கார்டியன்' பத்திரிகை வெளியிட்ட பட்டியலில் பிரபல எழுத்தாளரும், மனித உரிமை ஆர்வலருமான அருந்ததிராய், மனித உரிமை ஆர்வலர் ஜெயஸ்ரீ ஸத்பூத், இக்கோ ஃபெமினிஸ்ட் வந்தனா சிவா, வைட் ரிப்பன் அலையன்ஸ் ஃபார் ஸேஃப் மதர்ஹுட் இன் இந்தியாவின் ஒருங்கிணைப்பாளர் அபராஜிதா கோகோய்,பெண் இயக்க ஊழியர் சம்பத் பல்தேவி ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

சர்வதேச மகளிர் தினமான நேற்று கார்டியன் பத்திரிகை இப்பட்டியலை வெளியிட்டது.
இந்தியா வம்சாவழியைச் சார்ந்த பலரும் இப்பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். பெப்ஸி கோவின் தலைவர் இந்திரா, இயக்குநர் மீரா நாயர் ஆகியோரும் இப்பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

இந்தியாவின் சித்தாந்த கலந்துரையாடல்களின் பிறப்பிடம் என கார்டியன் பத்திரிகை அருந்ததிராயை பாராட்டியுள்ளது. 'தி காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ்' என்ற நாவலை எழுதியவர், இரண்டாவது நாவலை எழுதுவதற்கு விருப்பங்கொள்ளாமல் இந்தியத் துணைக் கண்டத்தின் கறுப்பு பகுதிகளைக் குறித்து வெளியுலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டுவதில் முனைப்பாக உள்ளார் என கார்டியன் அருந்ததிராய் பற்றி கூறுகிறது.

சமூக ஆர்வலர்களின் பட்டியலில் சம்பத் பல்தேவி இடம்பிடித்துள்ளார். வட இந்தியாவில் 'குலாபி கேங்' என்ற அமைப்பை வழி நடத்துபவர் இவராவார். பிங்க் நிற சேலையும், மூங்கில் கம்புகளும் இவர்களின் அடையாளமாகும். வரதட்சணைக் கேட்டு துன்புறுத்தும் ஆண்களை அதே முறையில் திருப்பித் தாக்குவது என்பது 'குலாபி கேங்கின்' பாணியாகும். நிர்பந்தமாக நடத்தப்படும் திருமணங்களிலிருந்து தப்பி வரும் பெண்களுக்கு அடைக்கலம் அளிக்கும் 'ஸவுத் ஹால் ப்ளாக் சிஸ்டர்ஸ்' என்ற அமைப்பின் நிறுவன உறுப்பினரான பிரக்னா பட்டேலும் இந்த பட்டியலில் இடம்பிடிக்கிறார்.

சிந்திக்கவும்: நிச்சயமா இந்த பெண்களால் இந்தியா உலக அளவில் தலை நிமிர்ந்து நிற்கிறது. ஹிந்துவா பயங்கரவாதிகள் சிறுபான்மை மக்களுக்கு எதிராக பல கலவரங்களை நடத்தி இந்தியாவின் பெயரை உலக அளவில் தலைகுனிவுக்கு ஆளாக்கி வந்தாலும் இது போன்ற மனித உரிமை போராளிகளால் சிலரால் இந்தியாவின் மானம் காக்கப்பட்டு வந்துள்ளது. அதுபோல் இந்திய அரசு பயங்கரவாததிற்கும் எதிராக அவர்கள் தொடர்ந்து போராடி வந்துள்ளார்கள் என்பதும் இந்நேரத்தில் நினைவு கூறத்தக்கது. அந்த வகையில் இவர்களை இந்தியாவின் வீர மங்கைகளாக நம்மால் பார்க்க முடிகிறது. அது போல் நமது தொப்புள் கொடி உறவுகள் ஆனா ஈழத்து தமிழ் பெண்கள் சிங்கள இன வெறியர்களோடு போர் புரிந்து என்றும் வரலாற்றில் காவியமாக திகழ்கிறார்கள். எகிப்து புரட்சிக்கு வித்திட்டவரும் ஒரு வீர மங்கைதான். பெண்கள் இதுபோன்ற எந்த செயல்களும் செய்யாவிட்டாலும் தாய்மை என்ற ஒரு சிறந்த பண்புக்காக அவர்கள் போற்றப்பட கூடியவர்கள். இருந்தும் இதுபோல் செயல்படும் வீர மங்கைகளை போற்றுவோம்! அவர்களுக்கு எங்களது வாழ்த்துக்கள்!!

நன்றி : ஆசிரியர் புதியதென்றல்.

சனி, 9 அக்டோபர், 2010

கேரள தலைநகரில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை!!

Kerala Map
கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பி்ல்லை!!

நாட்டிலேயே அதிகஅளவில் படிப்பறிவு கொண்ட மாநிலமாக விளங்கும் கேரளாவுக்கு புது அவப் பெயர் கிடைத்தள்ளது. அது அந்த மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என்பதுதான்.

நாட்டிலேயே அதிக அளவில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நடப்பது திருவனந்தபுரத்தில்தானாம். குறிப்பாக பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் பெண்களுக்கு சுத்தமாக பாதுகாப்பே இல்லையாம்.

கேரள மாநில பொருளாதார ஆய்வறிக்கைதான் (2008ம் ஆண்டுக்கானது) இப்படிக் கூறுகிறது.

கேரளாவில் பெண்களுக்கு எதிரான கொடுமைகளின் அளவு 15 ஆண்டுகளில் (1992லிருந்து) 338.40 சதவீதமாக உயர்ந்து நிற்கிறதாம்.

கற்பழிப்பு, பாலியல் பலாத்காரம் ஆகியவை அங்கு கணக்கே கிடையாதாம். அந்த அளவுக்கு அதிகரித்துள்ளதாம். 1990 மற்றும் 2005ம் ஆண்டுகளில் திருவனந்தபுரத்தில் மட்டும் நான்கு மடங்கு அளவு கற்பழிப்பும், பலாத்காரமும், இன்ன பிற பெண்களுக்கு எதிரான சித்திரவதைகளும் அதிகரித்துள்ளதாம்.

தேசிய குற்றவியல் பீரோவின் ஆவணக் கணக்குப்படி கேரளாவில் 2007ம் ஆண்டு நடந்த மொத்த குற்றச் செயல்களின் எண்ணிக்கை, தேசிய சராசரியை விட அதிகமாம்.

இதுகுறித்து திட்ட ஒருங்கிணைப்பாளர் ரெஜிதா கூறுகையில், திருவனந்தபுரம் நகரில் பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பு என்பது குறித்து ஆய்வு நடத்தியபோது இந்த விவரங்கள் தெரிய வந்தன. சக்தி பெண்கள் ஆதார மையத்தைச் சேர்ந்தவர்கள் 800 பெண்களிடம் இதுதொடர்பாக ஆய்வு நடத்தினர்.

காலை மற்றும் இரவு நேரத்தில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. பெண்கள் வெளியில் செல்லும் நேரம், போகும் இடம், போகும் நோக்கம் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து ஆய்வு நடத்தப்பட்டது. அவர்கள் வெளியில் செல்லும்போதும், வீடுகளுக்குத் திரும்பும்போதும் சந்திக்கும் சவால்கள், பிரச்சினைகள், கொடுமைகள் மிகப் பெரும் கவலை அளிப்பதாக உள்ளது.

திருவனந்தபுரத்தின் பல பகுதிகளில் பகல் நேரங்களில் மட்டுமே பெண்கள் தனியாக செல்லக் கூடிய அளவுக்கு உள்ளன. இரவு நேரங்களில் அந்தப் பகுதிகளில் பெண்களுக்கு சுத்தமாக பாதுகாப்பு இல்லை. கற்புக்கும், உயிருக்கும், உடமைகளுக்கும் உத்தரவாதமே இல்லை என்ற நிலைதான் காணப்படுகிறது என்றார் ரெஜிதா.

அறிவாளிகள் நிரம்பி வழியும் மாநிலத்தின் தலைநகரில் இவ்வளவு அவலம் நிரம்பி வழிவது ஆச்சரியமாக உள்ளது. திருவனந்தபுரம், சசி தரூரின் தொகுதி என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

புதன், 4 ஆகஸ்ட், 2010

சவூதியில் 65 சதவீதம் பெண்கள் பணி புரிகிறார்கள்

ரியாத்,ஆக4:சவூதி அரேபியாவில் பெண்களில் 65 சதவீதம் பேர் பணி புரிகிறார்கள் என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. பெண்களில் 79 சதவீதம் பேர் கல்வி அறிவுப் பெற்றுள்ளனர். வேலையில்லாத பெண்களில் 78.3 சதவீதம் பேரும் பல்கலைக்கழக மாணவிகளாவர். சவூதியில் பெண்களின் சதவீதம் 45 சதவீதம் ஆகும்.

அஸட் மேனேஜ்மெண்ட் நிறுவனமான அல் மஸஹ் கேப்பிட்டல்தான் இந்த புள்ளிவிபரங்களை வெளியிட்டுள்ளது. பெரும்பாலான பெண்கள் பணிபுரிவது அரசுத் துறைகளிலாகும்.

தேசத்தின் சொத்தில் பெரும்பாலும் கையாளுவது பெண்களாகும். 1190 கோடி டாலர் பணம் சவூதியில் பெண்கள் வசமுள்ளது என ஆய்வில் தெரியவந்துள்ளது. பெரும்பாலும் வெறுமனே இருக்கும் இப்பணத்தை சரியான வழியில் பயன்படுத்தினால் பொருளாதாரத் துறையில் பெரியதொரு மாற்றத்தை ஏற்படுத்த இயலும் என அல் மஸஹ் கேப்பிட்டலின் நிறுவனர் ஷைலேஷ் தாஷ் தெரிவிக்கிறார்.

சொத்து விஷயத்தில் சவூதி பெண்கள் மட்டுமல்ல, மேற்காசியாவின் மொத்த சொத்துக்களின் 22 சதவீதமும் பெண்களின் கட்டுப்பாட்டில் உள்ளது என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.இதில் மேற்காசிய உலகில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

திங்கள், 24 மே, 2010

பெண்களே! எச்சரிக்கை....

னிமேல் நீ என்னில் பாதி... புயல் - வெயில் - மழை... பாலை - சோலை இவை எல்லாம் ஒன்றாக நாம் கடப்போம்!'' என்று சினிமாக் களில் தருகிற வாக்குறுதிகள் மாதிரியே, திருநெல்வேலி அருகில் இருக்கும் தோப்புவிளை

கிராமத்து தேவால யத்தில் மேரிசுதாவுக்கு வாக்குறுதி அளித்தார் ரீகன். கல்யாணமாகி சென்னைக்கு அவரோடு வாழ வந்த கொஞ்ச நாளிலேயே, மிகமிக விபரீதமான வினோதமான ஒரு காமுகனுக்கு தான் வாழ்க்கைப்பட்டிருக்கிறோம் என்று மேரிசுதாவுக்குப் புரிந்துபோனது.

தப்பான புருஷனின் பர்ஸை அவனுக்குத் தெரியா மல் துழாவினால் என்ன கிடைக்கும்? சில சமயம் பாக்கெட்டுக்குள் கைவிட்டால் என்ன கிடைக்கும்? ரீகன் தன் வீட்டுக்குள்ளேயே வைத்திருந்த கம்ப்யூட்டரின் ஹார்டு டிஸ்க்கில் மேரிசுதா தேடிக் கண்டடைந்தது எல்லாமே அசிங்கம், அருவருப்பு, வக்கிரத்தின் உச்சம்! புகைப்படங்கள், ஆடியோ - வீடியோ பதிவுகளில் அடுத் தடுத்து பல பெண்களோடு ரீகன் இருந்த காட்சிகள் எல்லாமே 'உவ்வே' ரகம்!

தனியொரு நபர் இத்தனைப் பெண்களோடு இப்படி சல்லாபம் செய்யவும், சுற்றித்திரியவும், அவர்களோடு தான் இருந்த அந்தரங்க காட்சிகளை அடுக்கடுக்காக பதிவு செய்யவும், ஒரு கட்டத்தில் பிரச்னை முற்றிப்போனால் அவர்களை சினிமாட்டிக் வில்லனாக மிரட்டி பதிவு செய்துகொள்ளவும் எப்படித்தான் முடிந்ததோ... என்று அதிரவைக்கும் அளவுக்கு இருந்தன மேரிசுதா நம் முன் கொண்டுவந்து கொட்டிய ஆதாரங்கள்.

பட்டப்பகலில், வெட்டவெளியில், சற்று தூரத்திலேயே சாதாரணமாக மக்கள் நடமாட்டம் இருக்க... அந்தக் கடற்கரையில் அதிரவைக்கும் போஸில் ஒரு பெண்ணை எப்படித்தான் சம்மதிக்க வைத்து படமெடுத்தார்களோ என்று நினைக்கும்போதே நடுக்கம் கண்டது நமக்கு.

''எனக்கு முன்னால எத்தனைப் பேர் உன்னைத் தொட்டான்? ஒளிவு மறைவு இல்லாம ஒழுங்காகச் சொல்லிடு... நான் உன்னை விட்டுடறேன்!'' என்று ஆரம் பித்து, அந்தப் பெண்ணின் வாயாலேயே வரிசையாக சில ஆண்களின் பெயர்களை வாங்குகிறது அந்த 'மெஸ்மரிச' குரல்!

''இது என் புருஷன் ரீகன் குரலேதாங்க. நடுராத்திரியில் வீடியோவில் அசிங்கப் படத்தை ஓடவிட்டுட்டு, அதுல வர்றமாதிரி எல்லாம் என்னை கோ ஆபரேட் பண்ண சொல்லுவான் அந்தப்பாவி. மறுத்தால் கடுமையா அடி உதைதான். நான் ஒரு பக்கம் கதறி அழுதுக்கிட்டு இருக்கும்போதே, யாராச்சும் ஒரு பொண்ணுக்கு போன் போட்டு அவளோட தான் எப்படி எல்லாம் இருந் தேன்னு அவ வாயாலேயே படிப்படியா சொல்லச் சொல்லுவான். வேண்டாத பொண்ணுங்களை தன் வழியிலிருந்து விலக்குறதுக்கு கடுமையா மிரட்டுவான். அதையெல்லாம் செல்போன்ல எதுக்குத்தான் பதிவு செஞ்சி வெச்சிக்கிட்டானோ? ஆனா, இன்னிக்கு அவன்கிட்ட இருந்து விடுதலை வாங்க அதுதான் எனக்கு உதவப் போகுது!'' என்று சொல்லி கண்களை துடைத்துக்கொள்கிறார் மேரிசுதா.

''எனக்கும் ரீகனுக்கும் கல்யாணமான புதுசுலேயே படுக்கை அறையில் செல்போனை வெச்சு நாங்க ஒண்ணா இருக்கிறதை படம் பிடிக்க ஆரம்பிச்சான். நான் தடுத்தா, 'ப்ளீஸ் சுதா... உன்னோட ஞாபகம் வர்றப்ப பார்த்துக்கிறதுக்குத்தான்(?) இதெல்லாம்' அப்ப டின்னு கெஞ்சுவான். இருந்தாலும் அவன் அசந்திருக்கிற நேரம் பார்த்து அந்தப் படத்தை எல்லாம் நான் தேடித்தேடி அழிச்சிக்கிட்டே இருந்தேன். என்னோட மூணரை வயசு பையன் ரிக்காடோ என் வயித்துல இருந்த சமயம், பிரசவத்துக்காக தாய் வீடு போய் வந்தேன். திரும்பி வந்தப்பதான் பெட்ரூமில் புதுசா அந்த கம்ப்யூட்டர் இருந்தது. ராத்திரிப் பொழுது ஆனாலே அசிங்கப்படங்களை அதுல ஓடவிட்டு பார்க்கிறது, எதையெதையோ செல்போனில் இருந்து எடுத்து அதில் சேகரிக்கிறதுன்னு பாதிநேரம் அதே வேலையா இருப்பான்.

அடுத்தடுத்து அவனோட வக்கிரம் கூடிப்போய் வெவ்வேற பெண்களோட என் எதிரிலேயே கேவலமா பேச ஆரம்பிச்சப்பதான், ரீகனோட அம்மாக்கிட்ட விஷ யத்தைச் சொல்லி கதறி அழுதேன். 'ஆம்பிளைன்னா அப்படித்தான். களைச்சு வீட்டுக்கு வர்ற ஆம்பிளைக்கு வெந்நீர் போட்டுக் கொடுக்கிறதுதான் நல்ல பொம் பளைக்கு அழகு' அப்படின்னு எகத்தாளமா அவங்கப் பேசினாங்க. வீட்டுக்குள்ள சண்டை முத்துனப்ப, 'விருப் பம் இருந்தா இரு... இல்லாட்டி தற்கொலை பண்ணி செத்துப்போ' அப்படின்னு சொல்லி ரீகன் என்னை அடிக்க ஆரம்பிச்சிட்டான். அவங்க அப்பாக்கிட்ட இதையெல்லாம் எடுத்துச் சொல்லவே முடியாது. ஏன்னா யாரும் இல்லாத நேரத்துல தற்செயலா தடுக்கி விழுற மாதிரி என் மேல விழுறது... 'நீ ரொம்ப அழகா இருக்கே' அப்படின்னு வயசுக்கு தகாம இளிக்கிறது... இப்படி என் மாமனாரே தனி டார்ச்சர் கொடுத்தாரு.

சொந்தமா தொழில் தொடங்கப் போறேன்னு சொல்லி, என் நகைகளை வாங்கி அடகு வெச்சான் ரீகன். மேற்கொண்டு பணத்தை எங்க வீட்டுல கேட்டு வாங்கிட்டு வரச்சொல்லி அடிச்சான். தாங்கமுடியாம காவல் நிலையத்துல புகார் கொடுத்தேன். போலீஸ் ஸ்டேஷனுக்கே வந்து 'திருந்திடறதா' எழுதிக் கொடுத்து ஜாமீன்ல போனவன்தான் இப்ப எங்கே இருக்கான்னு தெரியலை...'' என்று ஒருமையிலேயே கணவனைப்பற்றி கொட்டி முடித்தார் மேரிசுதா.

அதற்கெல்லாம் முன்பாக வீட்டுக்கே சில பெண்களைக் கூட்டிவந்து அவர்கள் எதிரிலும் தன்னை ரீகன் அவமானப்படுத்தியதாக சொல்லும் இவர், புகுந்த வீட்டைவிட்டு புறப்படுவதற்கு முன்பு அந்த கம்ப்யூட்டரில் இருந்து 'ஹார்டு டிஸ்க்'கை எப்படியோ கழற்றிக்கொண்டு வந்ததுதான் க்ளைமாக்ஸ். குவியல் குவியலாக நாம் விவரித்த காட்சிகளை எல்லாம் அதிலிருந்து எடுத்து சி.டி. போட்டு நீட்டினார் - சங்கடத்தோடு!

தான் சேகரித்த சில மொபைல் நம்பர்களை நம்மிடம் கொடுத்தவர், ''இவங்க எல்லாம் ரீகனோட மிரட்டலுக்கு ஆளான பெண்கள். பேசிப் பாருங்க!'' என்று சொன்னார். அவர்களில் சிலரை தொடர்புகொண்டு பேசி, நேரிலும் சந்தித்தோம்.

''காலேஜில் படிக்கிறப்ப என் ஃப்ரெண்டு மூலமா ரீகன் அறிமுகம். சாக்லெட், சுடிதார்னு வாங்கிக் கொடுத்து அசத்தினான். அவன்கிட்ட ஒரு தடவை பேசிட்டா, அப்புறம் விலகவே முடியாது. ஏதேதோ சொல்லி ஈ.சி.ஆர். ரோட்டில் ஒரு ரிசார்ட்டுக்கு கூட்டிப்போனான். கடலில் குளிச்சிட்டு அறைக்குள் உடைமாற்றும் போது எல்லாத்தையும் படம் பிடிச்சிட்டான். சென்டிமென்ட்டா ஏதேதோ சொல்லி என்னை சமாதானப்படுத்தினான். அவன் பேச்சில் மயங்கி பலதடவை என்னை இழந்திருக்கிறேன். அப்பல்லாம் அவன் செல்போனில் படம் எடுக்கிற விஷயம் எனக்கு பெரிசா தெரியலை. என்னோட வேறொரு பாய் ஃப்ரெண்ட் அந்த செல்போன் காட்சிகளைப்பற்றி விவரமா சொன்னப்பத்தான் ரீகனோட விஷமம் எனக்குப் புரிய ஆரம்பிச்சது.

'இப்போ உன் பாய் ஃப்ரெண்டுக்கு தெரிஞ்ச விஷயம் உலகம் முழுக்க தெரியப் போகுது. இன்டர்நெட்டுல போட்டு எல்லாருக்கும் மஜா கொடுக்கலாமா?' அப்படின்னு முற்றிலும் வேறொரு முகத்தோட ரீகன் பேச ஆரம்பிச்சான். தன்னோட அக்கவுன்ட்ல பணம் போடச்சொல்லி பயங்கரமா மிரட்ட ஆரம்பிச்சான்.

ரெண்டு வருஷத்துக்கு முன்னாடிதான் எனக்கு கல்யாணம் ஆச்சு. ரீகன் என்னை காதலிச்சுருக்கான் என்கிற விஷயத்தை மட்டும் அவரே கண்டுபிடிச்சிட்டார். பெருந்தன்மையோட என்னோட வாழ்க்கை நடத்திக்கிட்டு இருக்கார். ஆனா, எந்த நிமிஷமும் தன்னிடம் இருக்கிற வீடியோ, போட்டோக்களை அனுப்பி என் வாழ்க்கையை சீரழிச்சிருவானோன்னுபயமா இருக்கு'' என்று சொல்லி கதறி அழுத அந்தப் பெண்ணின் அடையாளங்கள் இங்கே மறைக்கப்படுகின்றன. மேரிசுதா கொண்டு வந்த வீடியோ காட்சிகளில் இவரோடு ரீகன் அப்பட்டமாக படுக்கை அறையில்!

இன்னொரு இளம்பெண்ணோ, ''முதலில் செல்போனில்தான் எனக்கு அறிமுகம் ஆனான். மூணு மாசம் நாகரிகமா பேசிட்டிருந்தான். ஒருநாள் திருமங்கலம் பஸ் ஸ்டாண்டுக்கு நேரில் வரச்சொல்லி பார்த்தான். அதற்கு அப்புறம் என் அழகை வர்ணிச்சு உருகி மருகினான்!'' என்றதோடு, எப்படியெல்லாம் சென்டி மென்ட்டாக ரீகன் தன்னை வளைத்தான் என்பதை படபடப்பும் பரிதவிப்புமாக வர்ணித்தார். தன் சம்மதத்தோடே அத்துமீறி, அந்தக் காட்சிகளையும் படம் பிடித்துக் கொண்ட விவரங்களையும் சொன்னார். ''இன்னும் எனக்கு கல்யாணம் ஆகலை. என் குடும்பத் துக்கும் விஷயம் தெரியாது. தெரிஞ்சா நான் உயிரோட இருக்க முடியாது!'' என்று கதற ஆரம்பித்து விட்டார்.

ரீகன் தலைமறைவான பிறகு, கடந்த சில நாட்களுக்கு முன்பு இரு குடும்பத்தாரும் உட்கார்ந்து பஞ்சாயத்து பேசியதில்... ஸ்டாம்ப் பத்திரத்தில் ரீகனின் பெற்றோர் நீளமாக ஓர் உறுதிமொழி எழுதிக் கொடுத்து இருக்கிறார்கள் மேரிசுதாவுக்கு. திருமணத்தின்போது கொண்டுவந்த பணம், நகை ஆகியவற்றை திருப்பிக் கொடுப்பதாகவும்... குழந்தை ரிக்காடோவின் எதிர் கால பாதுகாப்புக்கு தனியாக ஒரு தொகை கொடுப்பதாகவும், அதில் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

ஆனால், ''இந்த உறுதிமொழிப் பத்திரமே வீடியோ மற்றும் புகைப்படங்களை வைத்து ப்ளாக்மெயில் செய்துதான் எழுதி வாங்கப்பட்டது!'' என்று போலீஸில் ரீகனின் பெற்றோர் புகார் கொடுக்க... மேரிசுதாவையும் தேடுகிறது போலீஸ்.

ரீகனை நாம் போனில் தொடர்பு கொண்டபோது, ''ஹலோ... ஹல்லல்லோ... ஹல்லல்லல்லோ...'' என்றெல்லாம் செமத்தியாக லந்து அடித்தது எதிர்முனை. மறுமுறை தொடர்பு கொண்டால், ''நீங்கள் தொடர்புகொண்ட நபர் செம காண்டில் இருக்கிறார்!'' என்றது குரல். ஆடியோ பதிவுகளில் இருந்த அதே குரல்தான்! இன்னொரு முறை பக்கத்திலிருந்த பெண்ணிடம் போனைக் கொடுத்து விசாரிக்கச் சொன்னது. அந்தப் பெண்ணும் 'ஹலோ' சொல்லிவிட்டு கட் செய்தார்.

ரீகனின் தந்தை ஜேம்ஸை நாம் தொடர்பு கொண் டோம். ''ஜாமீன் எடுத்து எங்கள் மகனை கூட்டிவந்தோம். அப்புறம் எங்கே போனான், என்ன ஆனான் என்று தெரியாது. உங்கள் காதுக்கு வந்ததை விசாரித்து எழுதிக்கொள்ளுங்கள்!'' என்றார் அவர். ஆபாச ஆதாரங்கள்பற்றி கேட்டதற்கு, ''நான் அதில் எதையும் பார்க்கவில்லை. ஆனால், அப்படி இருப்பதாகச் சொல்லி மிரட்டித்தான் பத்திரத்தில் கையெழுத்து வாங்கினார்கள்!'' என்று மட்டும் சொல்லி லைனை கட் செய்தார் ஜேம்ஸ்.

இது மேரிசுதா என்ற ஒரே ஒரு பெண்ணின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயம் மட்டும் அல்ல. அடுத்து என்னாகுமோ என்ற அச்சத்தில் ஆழ்ந்திருக் கிறார்கள், அவசரப்பட்டு ரீகனிடம் தங்களை இழந்து விட்ட இன்னும் பல பெண்கள்.

'பாதிக்கப்பட்ட பெண்கள் தாங்களே முன்வந்து புகார் செய்தபின்னரே ரீகன் மீது நடவடிக்கை எடுக்க முடியும்' என்று காவல்துறையினர் காரணம் காட்டிவிடாமல், விரைந்து செயல்பட்டு கணவன் - மனைவி இருவரிடமும் தீவிரமாக விசாரணை நடத்தியே தீரவேண்டும்.

- த.கதிரவன்
நன்றி: ஜூவி

சனி, 23 ஜனவரி, 2010

மத வெறியர்கள்- போலி முற்போக்குவாதிகள் - ஹிஜாப்




சமீப காலமாகவே இஸ்லாத்தையும் அதன் கோட்பாடுகளையும் எந்த வகையிலாவது களங்கப்படுத்திட வேண்டும் என வெறி பிடித்த சில கூட்டங்கள் இணைய தளத்தில் காழ்ப்புணர்ச்சியுடன் அலைந்து கொண்டிருப்பதை பல இணையதளங்களையும் பார்வையிடுவோர் மிக எளிதில் உணரலாம். இப்படி இஸ்லாத்தை விமர்சிக்க கிளம்பிய பல அறிவுஜீவிகள் (தங்களைத் தாங்களே அவ்வாறு தான் நினைத்துக் கொள்கின்றனர்) ஆக்கப்பூர்வமான விமர்சனத்தை முன்வைத்தால் அவர்களுக்கு பதில் சொல்லிவிடலாம். ஆனால் வெறுமனே தங்கள் மனதினில் ஊடுருவியிருக்கும் இஸ்லாமிய எதிர்ப்பு என்ற ஒற்றைத் தனத்தை மட்டுமே அடிப்படையாக வைத்து கருத்துகளை முன்வைக்கின்றனர். எந்த கருத்தை முன்வைக்கின்றனரோ அதில் இஸ்லாமிய நிலைப்பாடு என்ன என்பதைக் கூட அறியாத பல அறிவிலிகள் தான் இத்தகைய அறிவுஜீவி வேடம் தரித்து இணையத்தில் உலாவிக் கொண்டிருக்கின்றனர்.

இத்தகைய அறிவிலிகளை இரண்டு வகையினராக மிக எளிதில் பிரித்து விடலாம். முதல் கூட்டம் மதக் காழ்ப்புணர்ச்சியுடன் திரிந்து கொண்டிருப்பவர்களை அடிப்படையாக வைத்து உருவானது. தாங்கள் பின்பற்றும் மதத்தினில் இருக்கும் பல பிற்போக்குத்தனங்களை மறைக்க வேண்டியோ அல்லது அதை நியாயப்படுத்த வேண்டியோ இஸ்லாத்தின் மீது அவதூறு சேற்றை அள்ளி இறைக்கின்ற வகையினர் இவர்கள். இரண்டாவது கூட்டம் மதங்களை புறக்கணித்து ஏதோ ஒரு மனித மூளையினில் உருவான சித்தாந்தத்தை வாழ்வின் வெற்றிக்கான உத்தியாக நினைத்துக் கொள்பவர்கள். இவர்கள் தங்களுடைய சித்தாந்தம் தான் சிறந்தது என நிரூபிக்க வேண்டி மற்ற மதங்களை போலவே இஸ்லாத்திலும் பிற்போக்குத்தனம் இருக்கின்றது என்ற ரீதியில் பொய்ப்பரப்புரைகளை முன்னெடுத்துச் செல்கின்றனர்.

இவர்களுடைய மதங்களும் சித்தாந்தங்களும் இவர்கள் கண்ணெதிரிலேயே பரிதாபகரமான தோல்வியை தழுவி நிற்பதை காண சகிக்காமல், அத்தகைய தோல்விக்கு காரணமாய் இருக்கின்ற இஸ்லாத்தையும் அதன் கோட்பாடுகளையும் கறைப்படுத்தி விட வேண்டும் என இவர்களின் ஆழ்மனதில் படிந்து விட்ட இஸ்லாமிய காழ்ப்புணர்ச்சியே அவ்வப்போது இணையத்தில் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. சந்தர்ப்பம் கிடைக்காதா என ஏங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு சகோதரி சுமஜ்லாவின் பதிவுகள் வரப்பிரசாதமாக அமைந்து விட்டன. என்னைப் பொறுத்தவரை சுமஜ்லா மிகவும் தைரியமான ஒரு மங்கை. அவர் மேல் வைக்கப்படும் அனைத்துக் கருத்துக்களுக்கும் அவர் தனி ஆளாக நின்றே பதில் கொடுக்கும் திறமை வாய்ந்தவர். என்னுடைய இந்த கட்டுரை தன்னுடைய பேசுபொருளாக முன்வைப்பது "ஹிஜாப்" என்ற பெண்களின் உடையைப் பற்றியது. ஹிஜாப் என்பது பெண்கள் தங்களுடைய முழுமுகம் மற்றும் முன்கைகள் இரண்டை தவிர மற்றதை மறைத்துக் கொள்ளும் வகையில் உடையனிதலாகும். வெறுமனே கருப்பு அங்கி மட்டும் ஹிஜாபல்ல. முகம் மற்றும் முன்கைகளை தவிர மற்ற பகுதிகளை மறைக்கும் வண்ணம் உடல் அங்கங்கள் வெளியே தெரியாத வண்ணம் இறுக்கமாக இல்லாமல் எந்த உடை அணிந்தாலும் அவை ஹிஜாப் என்றே அழைக்கப்படும். இந்த ஹிஜாபை தான் ஆணடிமைத்தனம் என்றும் பிற்போக்குத்தனம் என்றும் மதவெறியர்களும் போலி முற்போக்குவாதிகளும் காட்டுக் கூச்சல் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இஸ்லாம் என்பது மதமன்று. பல மதங்கள், சித்தாந்தங்கள் போன்று ஒரு சிலவற்றை சொல்லிவிட்டு பலவற்றை சொல்ல தெரியாத, அப்படியே சொல்லியிருந்தாலும் இன்றைய வாழ்வியலுக்கு ஒத்துவராத கோட்பாடுகளை கொண்டவையுமல்ல. மாறாக வாழ்வியலின் அனைத்து நடைமுறைகளையும் தன்னகத்தே கொண்டுள்ள வாழ்வியலுக்கான வழிகாட்டியாக விளங்கும் மார்க்கமாகும். ஒரு பெண் சமூகத்தில் மதிக்கப்பட வேண்டுமேயானால் அவளுடைய கண்ணியம் காக்கப்பட வேண்டும். இந்த அடிப்படையில் ஹிஜாப் என்னும் உடையின் மூலம் பெண்களை கண்ணியப்படுத்தி சமூகத்தில் வாழ செய்கின்றது இஸ்லாம். இல்லை நான் அரைகுறை ஆடை தான் அணிவேன் என ஒரு பெண் சொன்னால் தாரளாமாக அவற்றை அணிந்து கொள்ளலாம். ஏனெனில் இஸ்லாத்தில் எவ்வித நிர்பந்தமுமில்லை. "மார்க்கத்தில் நிர்பந்தம் என்பது இல்லை ...(குர்ஆன் 2:256 )".

தம்முடைய கண்ணியத்தையும் அடுத்தவர்களின் காமக் கண் கொடூர பார்வையையும் தவிர்க்க வேண்டும் என்று விரும்பும் எந்த பெண்ணாக இருப்பினும் அவர் ஹிஜாபை தெரிவு செய்து கொள்ளலாம். அதற்கு இஸ்லாமியராக தான் இருக்க வேண்டுமென்பதில்லை. இந்த உடை அணிவதினால் பெண்களுக்கு கண்ணியம் ஏற்படுகின்றது என்பதை ஹிஜாபை எதிர்க்கும் மத வெறியர்களும் போலி முற்போக்குவாதிகளும் மறுப்பார்களா? இந்தியாவின் உயர்ந்த பீடத்தினில் இருக்கின்ற இன்றைய குடியரசுத்தலைவர் அவர்களே மிக அழகாக பெரும்பாலான நேரங்களில் ஹிஜாபை பேனுபவராகவே இருக்கின்றார். இஸ்லாம் பெண்களின் உடை விடயத்தினில் ஒரு அளவை மிகத் தெளிவாக சொல்லிவிட்டது. இதற்கு மாற்றுக் கருத்து சொல்லுபவர்கள் பெண்களின் உடை விடயத்தினில் எந்த ஒரு கருத்தையும் தெளிவாக சொல்லவில்லை. உடையணிதல் தனிப்பட்ட பெண்களின் உரிமையை சார்ந்த விடயம் என்று வாதிடும் இவர்கள் திரைப்படத்தினில் நடிகைகளின் அரைகுறை ஆடைகளை ஆபாசம் அருவெறுப்பு என்றும் எழுதுகின்றனர் என்பதுதான் நகைச்சுவையின் உச்சம். அப்படி அரைகுறை ஆடை அணிவது அந்த நடிகையின் தனிப்பட்ட உரிமை என்ற வாதத்தை அப்பொழுது வசதியாக மறந்து விடுகின்றனர். ஏன் இந்த இரட்டை நிலை மதவெறி மற்றும் போலி முற்போக்காளர்களே?

வாரம் ஒரு வாலிபனுடன் வலம் வருவது கூட பெண்கள் சுதந்திரத்தின் அங்கமாகவே நினைக்கின்ற சில பெண்கள் இன்று உருவாகி விட்டனர். பெண் சுதந்திரம் என்ற அடிப்படையில் இவர்களை ஏற்றுக் கொண்டு இந்த மாதிரி பெண்களை திருமணம் செய்ய ஹிஜாபை எதிர்க்கும் மதவெறியர்களும் போலி முற்போக்குவாதிகளும் தயாரா? தவறுகள் சர்வசாதரணமாக சமூகத்தில் உலா வரும் போது அவை தவறு என்ற எண்ணமே மறைக்கப்பட்டு விடும். இதற்கு சரியான உதாரணம் புகைப்பிடித்தலை சொல்லலாம். இதே மாதிரி தான் அரைகுறை ஆபாச உடை விடயத்தையும் கொண்டு வர சிலர் முயற்சிக்கின்றனர். இவர்களுக்கு தடையாக இருப்பது ஹிஜாபே ஆகும். எனவே தான் இதற்கு எதிராக இவ்வளவு ஆக்ரோஷமாக கிளர்த்தெழுகின்றனர். இதில் போலி முற்போக்குவாதிகள் மத வெறியர்கள் என்ற வித்தியாசமெல்லாமில்லை.

அன்பின் சகோதரி சுமஜ்லா நீங்கள் கண்ணியம் வேண்டுமென எதிர்பார்க்கின்றீர்கள். ஆகவே ஹிஜாபை பேணுகின்றீர்கள். ஆனால் வாரம் ஒரு வாலிபனுடன் வலம் வந்த அல்லது வலம் வருவதை ஆதரிக்கின்ற அல்லது தங்கள் வீட்டு பெண்களை இத்தகைய கேடு கேட்ட நிலையினில் தள்ளப் போகின்றவர்கள் "கலகல" என ஏதாவது ஒன்றை கவிதை வரியினில் எழுதியதால் மனம் தளர வேண்டாம். நடிகைகள் தங்களுடைய அரைகுறை உடையினை ஆபாசம் என்று என்றைக்குமே ஏற்றுக் கொள்வதில்லை. அதைப் போன்றே இவர்களும் என விட்டுத் தள்ளுங்கள். ஹிஜாபின் கண்ணியத்தை உங்களைப் போன்ற பெண்கள் சொல்லுவதுதான் அதற்கு இன்னும் கண்ணியத்தைக் கொடுக்கின்றது. எழுத்தாளர் சகுந்தலா நரசிம்ஹன் கூட சமீபத்தில் ஹிஜாபின் கண்ணியத்தைப் பற்றி தன்னுடைய அனுபவத்தை மிகத் தெளிவாக எழுதியிருந்தார். மறைந்த மாபெரும் எழுத்தாளர் கமலா சுரையா கூட ஹிஜாபினால் தனக்கு எவ்வளவு தூரம் பாதுகாப்பு கிடைத்தது என்பதை பல தருணங்களில் நினைவு கூர்ந்திருக்கின்றார்.

ஹிஜாபை பேணுகின்ற சுமஜ்லா போன்ற பெண்களை மதவெறிப் பிடித்தவர்கள் என பொய்ப்பரப்புரை செய்ய உண்மையில் மதவெறி பிடித்து போய் திரிகின்றவர்களும், பிற்போக்குத்தனத்திலும் ஆணடிமைத்தனத்திலும் ஊறியவர்கள் இஸ்லாமியப் பெண்கள் என நிலைநாட்ட போலி முற்போக்கு கும்பல்களும் (ம.க.இ.க உட்பட) முயலுகின்றன. அதன் வெளிப்பாடு தான் கவிதை கட்டுரை பின்னூட்டமென சமீப காலத்தில் இவர்கள் எடுக்கும் அவதாரங்கள். இறுதியாக, நான் சமீபத்தில் படித்த ஒரு கவிதையை இங்கே நினைவு கூறுவது பொருத்தமாக இருக்கும் என எண்ணுகின்றேன். அந்த கவிதை எழுதியவருக்கு என்னுடைய நன்றிகள்.

பொன்னையும் பொருளையும்
பெட்டியில் பத்திரமாய்
பூட்டி வைத்து பாதுகாக்கும்
தன் எஜமானனிடம்
வேலியோரத்தில் சுதந்திரமாய்
விட்டெறியப்பட்ட
விளக்குமாறு ஒன்று
வீறுகொண்டு தன் கடுங்குரலில் அகவியதாம்,
"என்னைப்போல் அவற்றுக்கும் கொடு-விடுதலை"-என..!

பெட்டிக்குள்ளே
உள்ள'நற்குடிகளுக்கு'
தெரியாதா
'எது கண்ணியமான பாதுகாப்பு'-என்று..!

பாவம்...பரிதாபப்படுவோம்...
'விளக்குமார்கள் என்றாவதொருநாள்
விளங்குவார்கள் உண்மையை'
என நம்பிவைப்போம்
இப்போதைக்கு...!


பி.ஏ.ஷேக் தாவூத்