கேரளா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கேரளா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 9 அக்டோபர், 2010

கேரள தலைநகரில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை!!

Kerala Map
கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பி்ல்லை!!

நாட்டிலேயே அதிகஅளவில் படிப்பறிவு கொண்ட மாநிலமாக விளங்கும் கேரளாவுக்கு புது அவப் பெயர் கிடைத்தள்ளது. அது அந்த மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என்பதுதான்.

நாட்டிலேயே அதிக அளவில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நடப்பது திருவனந்தபுரத்தில்தானாம். குறிப்பாக பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் பெண்களுக்கு சுத்தமாக பாதுகாப்பே இல்லையாம்.

கேரள மாநில பொருளாதார ஆய்வறிக்கைதான் (2008ம் ஆண்டுக்கானது) இப்படிக் கூறுகிறது.

கேரளாவில் பெண்களுக்கு எதிரான கொடுமைகளின் அளவு 15 ஆண்டுகளில் (1992லிருந்து) 338.40 சதவீதமாக உயர்ந்து நிற்கிறதாம்.

கற்பழிப்பு, பாலியல் பலாத்காரம் ஆகியவை அங்கு கணக்கே கிடையாதாம். அந்த அளவுக்கு அதிகரித்துள்ளதாம். 1990 மற்றும் 2005ம் ஆண்டுகளில் திருவனந்தபுரத்தில் மட்டும் நான்கு மடங்கு அளவு கற்பழிப்பும், பலாத்காரமும், இன்ன பிற பெண்களுக்கு எதிரான சித்திரவதைகளும் அதிகரித்துள்ளதாம்.

தேசிய குற்றவியல் பீரோவின் ஆவணக் கணக்குப்படி கேரளாவில் 2007ம் ஆண்டு நடந்த மொத்த குற்றச் செயல்களின் எண்ணிக்கை, தேசிய சராசரியை விட அதிகமாம்.

இதுகுறித்து திட்ட ஒருங்கிணைப்பாளர் ரெஜிதா கூறுகையில், திருவனந்தபுரம் நகரில் பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பு என்பது குறித்து ஆய்வு நடத்தியபோது இந்த விவரங்கள் தெரிய வந்தன. சக்தி பெண்கள் ஆதார மையத்தைச் சேர்ந்தவர்கள் 800 பெண்களிடம் இதுதொடர்பாக ஆய்வு நடத்தினர்.

காலை மற்றும் இரவு நேரத்தில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. பெண்கள் வெளியில் செல்லும் நேரம், போகும் இடம், போகும் நோக்கம் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து ஆய்வு நடத்தப்பட்டது. அவர்கள் வெளியில் செல்லும்போதும், வீடுகளுக்குத் திரும்பும்போதும் சந்திக்கும் சவால்கள், பிரச்சினைகள், கொடுமைகள் மிகப் பெரும் கவலை அளிப்பதாக உள்ளது.

திருவனந்தபுரத்தின் பல பகுதிகளில் பகல் நேரங்களில் மட்டுமே பெண்கள் தனியாக செல்லக் கூடிய அளவுக்கு உள்ளன. இரவு நேரங்களில் அந்தப் பகுதிகளில் பெண்களுக்கு சுத்தமாக பாதுகாப்பு இல்லை. கற்புக்கும், உயிருக்கும், உடமைகளுக்கும் உத்தரவாதமே இல்லை என்ற நிலைதான் காணப்படுகிறது என்றார் ரெஜிதா.

அறிவாளிகள் நிரம்பி வழியும் மாநிலத்தின் தலைநகரில் இவ்வளவு அவலம் நிரம்பி வழிவது ஆச்சரியமாக உள்ளது. திருவனந்தபுரம், சசி தரூரின் தொகுதி என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

கேரளா:கை வெட்டப்பட்ட பேராசிரியர் கல்லூரியிலிருந்து டிஸ்மிஸ்- குற்றம் செய்துள்ளார் என கல்லூரி நிர்வாகம்

திருவனந்தபுரம்,செப்.5:கேரளாவில் மத உணர்வை களங்கப்படுத்தியதாக கை வெட்டப்பட்ட பேராசிரியர் ஜோசப்பை கல்லூரி நிர்வாகம் நேற்று டிஸ்மிஸ் செய்தது.

கேரள மாநிலம் இடுக்கியை அடுத்த தொடுபுழாவில் 'நியூமேன் கல்லூரி' உள்ளது. இதில், மலையாள துறை பேராசிரியராக ஜோசப் இருந்தார்.

சில மாதங்களுக்கு முன்பு கல்லூரியில் நடந்த தேர்வில், மத உணர்வை புண்படுத்தும் வகையில் கேள்வி கேட்டு வினாத்தாள் தயாரித்திருந்தார். இதனைக் கண்டித்து மாணவர்கள் உட்பட பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தின.

இதையடுத்து, கேள்வித்தாள் தயாரித்த ஜோசப்பை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது. மேலும், 2 மாதங்களுக்கு முன்பு சர்ச்சுக்கு சென்று விட்டு குடும்பத்துடன் வீடு திரும்பிக் கொண்டிருந்த ஜோசப்பை ஒரு கும்பல் வழிமறித்து வெட்டியதில் அவருடைய ஒரு கை துண்டிக்கப்பட்டது. கேரளாவில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஒரு மாத சிகிச்சைக்கு பிறகு இப்போதுதான் மருத்துவமனையில் இருந்து ஜோசப் வீடு திரும்பியுள்ளார். இந்த நிலையில், கல்லூரி நிர்வாகம் நேற்று அவரை திடீரென டிஸ்மிஸ் செய்தது.

"கேள்வித்தாள் தயாரிப்பில் ஜோசப் குற்றம் செய்தது நிரூபிக்கப்பட்டு உள்ளது. எனவே, டிஸ்மிஸ் செய்யப்பட்டு உள்ளார்" என்று கல்லூரி நிர்வாகம் தெரிவித்தது.

திங்கள், 30 ஆகஸ்ட், 2010

மார்க்சிஸ்ட் கட்சி பார்ப்பணியத்தின் பிடியில் சிக்கியுள்ளது- வி.டி.ராஜசேகர்

கொச்சி,ஆக30:கேரள மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கட்சி பார்ப்பணியத்தின் பிடியில் சிக்கியுள்ளதாக தலித் வாய்ஸ் பத்திரிகையின் ஆசிரியர் வி.டி.ராஜசேகர் தெரிவித்துள்ளார்.

முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் ஒரு ஈழவர் (தாழ்த்தப்பட்ட சமூகம்). அதனால் அவரால் ஒன்றும் செய்யவியலாது.கட்சியின் கேரள மாநிலச் செயலாளரும் ஒரு ஈழவர்தான் என்றாலும் அவர் ஒரு தனிரகம். பார்ப்பணீயம்தான் சி.பி.எம்மை கட்டுப்படுத்துகிறது.

அதேவேளையில் ஆர்.எஸ்.எஸ்ஸைவிட ஆபத்தானவர்கள் மார்க்சிஸ்ட்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

தி ஆல் இந்தியா பேக்வார்ட் (எஸ்.சி, எஸ்.டி, ஒ.பி.சி) அண்ட் மைனாரிட்டீ கம்யூனிட்டி எம்ப்ளாயீஸ் ஃபெடரேசனின் ஆறாவது மாநாட்டில் முக்கிய விருந்தினராக கலந்துக் கொண்டு உரை நிகழ்த்தினார் அவர்.

மேலும் அவர் கூறியதாவது:"ஜாதி வழக்கமுறை வலுவாக நிலைப்பெற்றிருக்கும் மாநிலம் தான் கேரளா. கேரளாவில் மார்க்சிஸ்டுகளா? ஆட்சி செய்கின்றார்கள் என்ற சந்தேகம் நமக்கு ஏற்படலாம். ஆனால், அவர்கள்தான் ஆர்.எஸ்.எஸ்ஸைவிட ஜாதி வழக்க முறையை நிலைநாட்டுகின்றனர்.

காங்கிரசில் பெரும்பாலோரும் ஹிந்துத்துவாவாதிகள்தான். நேற்று முன்தினம் காவி பயங்கரவாதத்தைக் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உரை நிகழ்த்தியிருந்தார். ஆனால், தற்பொழுது காங்கிரஸ் தலைமை, காவி பயங்கரவாதம் என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்காக அவரிடம் கேள்வி எழுப்பியுள்ளது. ஏன் காங்கிரஸ் கட்சி இந்தியாவில் மிகக்குறைந்த சதவீதமே மக்கள் தொகையைக் கொண்ட பிராமணர்களின் விவகாரத்தில் கவலைக் கொள்கிறது?.

85 சதவீதம் மக்கள் தொகையைக் கொண்ட முஸ்லிம், கிறிஸ்தவ, தலித் பிரிவினரை ஏன் கண்டுகாணாமல் நடிக்கின்றனர்? மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் என்ன நடக்கிறது? என்பது எவருக்கும் தெரியாது.

ஏ.கே.அந்தோணி பாதுகாப்பு அமைச்சரானது சிரியன் கிறிஸ்தவர் என்ற ஒரேக்காரணத்தினால் தான். சிரியன் கிறிஸ்தவர்கள் பார்ப்பணீயர்களை விட ஆபத்தானவர்கள். கேரள மாநிலத்தில் ஆறு சதவீதம் மக்கள் தொகையைக் கொண்ட இவர்கள்தான் பெரும்பாலான கிறிஸ்தவ தேவாலயங்களையும், நிறுவனங்களையும் நடத்தி வருகின்றனர். கேரளத்தில் மீன் பிடித் தொழிலாளிகளான முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு மத்தியிலிலுள்ள நல்ல உறவை கெடுப்பதற்காகத்தான் ஆர்.எஸ்.எஸ் மாதா அமிர்தானந்தாயி என்ற மீனவப்பெண்ணை பயன்படுத்துகிறது.

ஜாதீய வழக்கமுறை என்பது ஒரு விஷமாகும். ஜாதீய வழக்க முறையைக் குறித்து பேசுவதைவிட சிறந்தது ஹிந்துயிஷத்தைக் குறித்து பேசுவதாகும்.

ஆர்.எஸ்.எஸ்ஸின் புதிய உருவாக்கமான அபினவ் பாரத்தான் காவி பயங்கரவாதத்தின் அடிப்படை. அவர்கள் இந்த தேசத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்களை கொன்றுள்ளனர். ஆனால் ஆட்சியாளர்களுக்கும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அச்சமாக உள்ளது.

அபினவ் பாரத்தும், யூதர்களும் உறவினர்களாவர். அபினவ் பாரத்தின் வளர்ச்சியின் பின்னணியில் யூத லாபியாகும். அபினவ் பாரத்தின் தலைவர் ஸ்ரீகாந்த் புரோகித் இஸ்ரேலுக்கு சென்றுள்ளது உறுதிச் செய்யப்பட்டுள்ளது. உலகத்தின் பல்வேறு நாடுகளிலும் யூதர்களின் இத்தகைய அசுத்தமான உறவைக் காணலாம். அமெரிக்காவையும், பிரிட்டனையும் கட்டுப்படுத்துவது யூதர்கள்தான்.

வெறும் 15 சதவீதம் மக்கள் தொகையைக் கொண்ட மேல்ஜாதியினர் எவ்வாறு அரசை கட்டுப்படுத்துகின்றனர்? அவர்கள் தலித் உள்ளிட்ட மக்களை பிரிக்கின்றனர். எல்லாவித பொருளாதார ஆதாரங்களும், வங்கிகளும் கைவசப்படுத்தியுள்ளனர்.

முஸ்லிம்கள் உள்ளிட்ட 85 சதவீத மக்களின் பகுஜன் சமாஜ் உருவாக வேண்டியுள்ளது. அவ்வாறு உருவானால்தான், பிற்படுத்தப்பட்டோருக்கு இங்கு அதிகாரவர்க்கமாக இயலும்." இவ்வாறு வி.டி.ராஜசேகர் உரை நிகழ்த்தினார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010

V.S.அச்சுதானந்தனுக்கு RSS-ன் அதிகாரப்பூர்வ ஏடு புகழாரம்

கேரள மாநிலத்தை 20 ஆண்டுகளில் முஸ்லிம் நாடாக மாற்ற முயற்சி நடப்பதாக சர்ச்சைக்குரிய அறிக்கையை வெளியிட்ட அம்மாநில முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தனுக்கு ஆர்.எஸ்.எஸ்ஸின் அதிகாரப்பூர்வ ஏடான 'ஆர்கனைசர்' புகழாரம் சூட்டியுள்ளது.

அச்சுதானந்தனின் அறிக்கை, கேரள மாநிலத்தில் நிலவி வரும் சூழ்நிலையின் உண்மையான நிலையாகும் என ஆர்.எஸ்.எஸ்ஸின் அறிவுஜீவிகளில் ஒருவரான சியாம் கோஸ்லே எழுதியுள்ளார்.

இந்த மாதம் 8 ஆம் தேதி வெளியான ஆர்கனைசரின் அட்டைப் படத்தில் அச்சுதானந்தனின் படம் வெளியிடப்பட்டிருந்தது.

பணத்தின் மூலமாகவும், காதலின் மூலமாகவும் முஸ்லிம் இளைஞர்கள் மாற்று மதத்தைச் சார்ந்தவர்களை மதம் மாற்றி இந்த லட்சியத்திற்காக பயன்படுத்துவதாக வி.எஸ்.அச்சுதானந்தன் கூறியதை வழிமொழிந்துள்ளார் கோஸ்லே.

காங்கிரஸும், முஸ்லிம் லீக்கும் அச்சுதானந்தனை விமர்சித்தபோதிலும், தனது நிலைப்பாட்டை சட்டசபையில் எடுத்துக்கூறிய அச்சுதானந்தனை ஆர்கனைசர் பாராட்டுகிறது.

சி.பி.எம்மில் அச்சுதானந்தனின் முக்கிய எதிரியான பிரணாய்ராஜ் விஜயனிடமிருந்து இவ்விஷயத்தில் அச்சுதானந்தனுக்கு கிடைத்த ஆதரவு, சி.பி.எம் இந்த அபாயத்தை கண்டறிந்துள்ளது என்பதன் அடையாளமாகும் என 'செய்தி விமர்சனம்' என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

'தாலிபான் மாடல'’ நீதிமன்றங்கள் செயல்படுவதாக கூறும் வி.எஸ்ஸின் அறிக்கையை மிகுந்த முக்கியத்துவத்துடன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது ஆர்கனைசர்.

அச்சுதானந்தனை விமர்சித்த காங்கிரஸை ஆர்.எஸ்.எஸ்ஸின் அதிகாரப்பூர்வஏடு கடுமையாக விமர்சித்துள்ளது. இவ்விஷயத்தில் மாநில அரசின் செயல்பாடுகளுக்கு தடைப்போடவே காங்கிரஸின் நிலைப்பாடு உதவும் என கோஸ்லே தனது கருத்தைத் தெரிவிக்கிறார்.

இதே இதழில் வெளியாகியுள்ள கேரளாவைச் சார்ந்த கட்டுரையாளர் ஒருவர் தனது கட்டுரையில் வி.எஸ்.அச்சுதானந்தனை புகழ்ந்து தள்ளியுள்ளார்.

கேரள உயர்நீதிமன்றம் நிராகரித்த ‘லவ்ஜிஹாதை’ வி.எஸ்.அச்சுதானந்தன் அறிக்கையில் வெளியிட்டது இந்த கட்டுரையில் எடுத்தெழுதப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு கேரளாவில் உருவாக்கப்பட்ட ‘மதசார்பற்றக் கொள்கையின் முகமுடி’யை கிழித்தெறிய வி.எஸ்.அச்சுதானந்தனின் அறிக்கையால் முடிந்தது என்பது ஆர்கணைசர் கட்டுரையாளரின் கண்டுபிடிப்பாகும்.

பாப்புலர் ஃப்ரண்ட் 25 ஆயிரம் தற்கொலைப்படை ஸ்க்வாடுகள் தயார்நிலையில் வைத்து சிவில் போருக்கு தயாராகிவருவது உள்ளிட்ட ஏராளமான பொய்களும் வி.எஸ்.அச்சுதானந்தனை புகழ்த்தும் இரு கட்டுரைகளிலும் காணப்படுகின்றன.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010

கேரள அரசு மாஃபியா கும்பலின் பிடியில் உள்ளது'- உயர்நீதிமன்றம் விமர்சனம்

திருவனந்தபுரம்,ஆக,1:மாஃபியா கும்பலின் பிடியில் கேரள மாநில அரசு உள்ளது என, உயர்நீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது.

கேரள மாநில உயர்நீதிமன்றத்தில், மலையாற்றூர் பகுதியில் கல் குவாரி தொடர்பான வழக்கு வெள்ளிகிழமை விசாரணைக்கு வந்தது. நீதிபதி சிரிஜகன் முன்னிலையில் நடந்து வந்த விசாரணையின் போது நீதிபதி கூறியதாவது: அரசியல்வாதிகளும், மாபியா கும்பலும் தான் அரசை பயன்படுத்தி லாபம் அடைந்து வருகின்றனர்.

அரசை யாராவது பின்னால் இருந்து இயக்குகின்றனரா என்பது குறித்து விளக்க வேண்டும்.சாதாரண பொது மக்களுக்கும், நீதிபதிகளுக்கும் மட்டும்தான் தற்போது சட் டத்தை பயன்படுத்தி வரு கின்றனர்.

மாநில காவல்துறையினரால் சட்டப்படி செயல்பட முடியாவிடில், ராணுவத்தை வரவழைக்க உயார்நீதிமன்றம் உத்தரவிட முடியும். பணம் இருந்தால், எந்த நீதிமன்ற உத்தரவையும் தாண்டி செயல்பட முடியும் என்ற நிலைதான் தற்போது இருந்து வருகிறது. இவ்வாறு நீதிபதி கூறினார்.

உயர்நீதிமன்ற நீதிபதியின் கடும் விமர்சனம், மாநிலத்தை ஆளும் கூட்டணி அரசுக்கும்,நீதித்துறைக்கும் இடையே இருந்து வரும் பிணக்கை வெளிப்படுத்தியுள்ளது.

பேராசிரியர் மீதான தாக்குதல் தொடர்பாக ஜமாஅத்-எ-இஸ்லாமி நிர்வாகி வீட்டிலும் ரெய்டு– கேரளாவில் தொடரும் முஸ்லிம் விரோதப் போக்கு

கொச்சி,ஆக,1:இறைத்தூதர் முஹம்மது நபி அவர்களை கொச்சைப்படுத்திய பேராசிரியர் தாக்குதல் விவகாரத்தில், கேரள ஆழுவா நகரில் உள்ள ஜமாஅத்-எ-இஸ்லாமி நிர்வாகி டாக்டர் ரனிஃப் என்பவரின் வீட்டை கேரள போலீசார் நேற்று ரெய்டு செய்தனர்.

சோதனையின் போது ஜமாஅத்-எ-இஸ்லாமியின் நிறுவனர் மௌலான அபுல் ஹசன் மௌதூதி எழுதிய பல புத்தகங்களும், இஸ்லாமிய சி.டி.க்களையும் போலீசார் கைப்பற்றினர்.

புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களின் பெயரில் போலீசார் எப்.ஐ.ஆர்.களை பதிவுசெய்து,பின்னர் ஆழுவா நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

சமீபத்தில் பாப்புலர் ஃபிரண்டை குறிவைத்து கம்யூனிஸ்ட் அரசும் கேரள போலீசாரும் பல சட்டவிரோத போக்குகளில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து தற்போது ஜமாஅத்-எ-இஸ்லாமி நிர்வாகிகளும் குறிவைக்கப்படுவது, கம்யூனிஸ்ட்களின் பிரித்தாளும் யுக்தியை காட்டுவது மட்டுமல்லாமல் விரைவில் நடைபெறும் தேர்தலை கணக்கில் வைத்து, உயர் ஜாதி ஹிந்துக்களின் ஓட்டுகளை பெறுவதற்கான நடவடிக்கை என்பது இதன் மூலம் நிரூபணமாகிறது.

புதன், 28 ஜூலை, 2010

கேரள முதலமைச்சரின் அறிக்கை ஒருதலைபட்சமானது: எதிர்க்கட்சித் தலைவர் உம்மன் சாண்டி

கோட்டயம்,ஜுலை27:கேரளாவில் சமீபத்தில் நடந்த சம்பவம் குறித்து முதலமைச்சர் அச்சுதானந்தன் பேசும்போது, 20 ௦ஆண்டுகளுக்குள் கேரளாவை முஸ்லிம் நாடாக மாற்ற முயற்சி நடைபெற்று வருகிறது என்று தெரிவித்திருந்தார்.

இவ்வாறான அர்த்தமற்ற பேச்சுக்கு மாநிலம் மட்டுமின்றி நாடுமுழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்தன.

இதுகுறித்து கேரள மாநில எதிர்க்கட்சித் தலைவர் உம்மன்சாண்டி கூறும்போது; "குற்றம் செய்தவர் யார் என்றே தெரியாத நிலையில், முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக இப்படி பொறுப்பற்ற கருத்துக்களை,மாநிலத்தின் உயர்ந்த பொறுப்பில் இருக்கும் ஒருவர் கூறுவது தகுதியானதல்ல.

மேலும் ஒட்டு மொத்த நாடும் ஒரே அணியாக இணைந்து தீவிரவாதத்தை எதிர்க்கும் நேரத்தில் முதலமைச்சரின் அறிக்கை,மாநிலத்தின் கலாச்சார இணக்கத்தை தகர்க்கும் விதத்தில் அமைந்திருக்கிறது." என்றார்.

செவ்வாய், 27 ஜூலை, 2010

கேரள முதலமைச்சர் பதவி விலகவேண்டும், மன்னிப்பு கேட்கவேண்டும்:கேரள முஸ்லிம் ஜமாத் கவுன்சில்

ஆழப்புழா:கேரள முதலமைச்சர் அச்சுதானந்தன் இருதினங்களுக்கு முன் கேரளாவை 20 ஆண்டுகளில் முஸ்லிம் நாடாக மாற்ற முயற்சி இதற்காக மதமாற்ற முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என்று தெரிவித்திருந்தார்.
அரசின் உயர்மட்ட பதவியில் இருக்கும் அச்சுதானந்தன் இவ்வாறு கூறியிருப்பதற்கு பல்வேறு தரப்புகளிலிருந்ந்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.

இதுகுறித்து கேரள முஸ்லிம் ஜமாத் கவுன்சிலின் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் பூகுஞ்சு, "முஸ்லிம் சமூகத்தின் மீது தவறான கருத்துக்களை கூறி,மாநிலத்தின் மத மற்றும் கலாச்சார இணக்கத்தை தகர்க்க கேரள முதலமைச்சர் முயற்சிக்கிறார்." என்றார்.

மேலும் தனது பொறுப்பற்ற கருத்துக்களுக்காக முதலமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்றும் கூறினார்.

மாநிலத்தின் கலாச்சார இணக்கத்தை தகர்க்கும் விதத்தில் கருத்து சொன்னதற்காக இ.பி.கோ 153(A) பிரிவின் கீழ் அவர்மேல் வழக்கு பதிவு செய்யவேண்டும் என்றும் கூறினார்.

திங்கள், 12 ஜூலை, 2010

பேராசிரியர் ஜோசப் கைதுண்டிப்பு வழக்கில் PFI -தமிழ் மாநில தலைவரின் கோரிக்கை

கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் மூவாற்றுப்புழா நியுமேன் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் ஜோசப், முஸ்லிம்கள் தங்கள் உயிரினும் மேலாக போற்றும் நபிகள் நாயகம்[ஸல்] அவர்களை அவமதித்து தூற்றும் விதமாக [மேற்கத்திய பாணியில்] தேர்வு வினாத்தாளை தயாரித்தார். இவரின் இந்த விஷயம் கேரளா மட்டுமின்றி ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் புண்படுத்தியதோடு முஸ்லிம்களின் மனதில் ஆறாத ரணத்தையும் ஏற்படுத்தியது. வேற்றுமையில் ஒற்றுமை என்பதை பறை சாற்றும் விதமாக இந்தியாவில் சகோதர பாசத்துடன் இருந்துவரும் முஸ்லிம், இந்து, கிருஸ்தவர்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தும் மேற்கத்திய பாணியிலான முஸ்லிம் பெண்கள் பர்தா அணிய தடை, முஸ்லிம் விரோத புத்தகங்கள் போன்ற செயல்கள் இப்போது இந்தியாவில் குறிப்பாக கேரளத்தில் அதிகரித்து வருகின்றன.

இது போன்ற விரும்பத்தகாத செயல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் எனவும், சமூகங்களுக்கு மத்தியில் பிளவு ஏற்படுத்தும் வகையில் செய்யப்படும் இச்செயல்கள் மிகுந்த கவலையளிக்கக் கூடியதாகவும் 'பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நீண்ட காலமாக கூறி வருகிறது. ஆனால் அரசோ இவ்விஷயங்களில் மெத்தனப் போக்கையே கடைபிடித்து வருகின்றது. இதனிடையே மேற்குறிப்பிட்ட வினாத்தாள் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட பேராசிரியர் சிலரால் தாக்கப்பட்டார். இத்தாக்குதலுக்கு கடும் கண்டனங்கள் தெரிவித்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இது போன்ற செயல்பாடுகள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நிலைபாட்டிற்கு எதிரானது என தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ததுடன், இச்செயலில் ஈடுபட்டவர்களை நீதியின் முன் நிறுத்த அனைத்து விதத்திலும் ஒத்துழைக்கும் என்றனர். ஆனால் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீது களங்கத்தை ஏற்படுத்திடும் நோக்கோடு செயல்பட்டு வரும் சில காவல்துறை அதிகாரிகள் திட்டமிட்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீது அவதூறுகளையும் கட்டுக்கதைகளையும் புனைந்து வருகின்றனர். அவர்களின் கட்டுகதைகளையே ஊடகங்களும் பிரதிபலிக்கின்றன. சம்பந்தப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நிர்வாகிகளை தொடர்பு கொள்ளாமலும், அவர்களின் கருத்துக்களை கேட்காமலும், தங்களின் கற்பனை குதிரைகளை காவல்துறையின் கட்டுக்கதைகளோடு சேர்த்து ஓடவிட்டு வருகின்றனர்.

அல்கொய்தா தொடர்பு, தாலிபான்கள் தொடர்பு, அமெரிக்க பெண்கள் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு சூடேற்றப்பட்ட இரும்பின் மீது இடுதல் போன்ற சிடிக்கள் இருந்தாக கோயபல்சை மிஞ்சும் காமெடிகளை செய்திகளாக்கி வருகின்றனர் சில தமிழ்ப்பத்திரிகைகள். தமிழகத்திற்கு இது ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே இது போன்ற கட்டுக்கதைகளைப் பரப்பி இன்று செல்லாக் காசாகி நிற்கின்றனர் தமிழக காவல்துறையினர். தமிழகத்தின் நெல்லிக் குப்பத்தில் 22-10-2004 அன்று நடந்த சிறு கைகலப்பை சர்வதேச பிரச்சனையாக்கி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா [அப்பொழுது 'MNP'] தொடர்புபடுத்தி தன் ஹீரோயிசத்தை காண்பிக்க முயற்சித்தார் நெல்லிக்குப்பத்தின் அப்போதைய எஸ்.பி. பிரேம்குமாரால் [பின்னர் வேறொரு வழக்கில் அரசால் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார்] அப்போதும் அல்கொய்தா தொடர்பு சிடிக்கள் சிக்கின, அரபி எழுத்துக்கள் பதிக்கப்பட்ட செல்போன்கள் பறிமுதல் என ஒரு காமெடி நாடகம் அரங்கேற்றப்பட்டது. ஊடகங்களும் அதற்கு துணை நின்றன.

மீண்டும் 22-06-07 அன்று கோவை நுண்ணறிவு பிரிவு ஆணையர் 'ரத்னசபாபதி' பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை [அப்பொழுது 'MNP'] தொடர்புபடுத்தி கோவையில் வெடிகுண்டு புரளியை கிளப்பி விட்டார். அங்கும் சிடிக்கள், பள்ளிக்குழந்தைகள் படிப்பதற்காக வைத்திருக்கும் இந்திய வரைபடம் [India Map] கிரைண்டருடைய கண்டென்ஸர் [Grinder Condenser] சுவிட்ச், வயர் என கடை விரித்து லண்டன் குண்டு வெடிப்போடு முடிச்சு போடும் காமெடி நாடகம் அரங்கேற்றப்பட்டது. பின்னர் அரசு நியமித்த விசாரணை கமிஷன், இவை அனைத்தும் ஒரு நாடகமென தீர்ப்பளித்தது.

இந்த நாடகம் மற்றும் விசாரணை அறிக்கை இப்பொழுது புத்தகமாகவும் வெளிவந்துள்ளது. அதே பாணியிலான செயல்கள் கர்நாடகத்திலும், கேரளத்திலும் நடந்து வருவது தொடர்கதையாகி விட்டது. ஊடகங்களோ உண்மை என்ன என்பதை கண்டறியாமல் காவல்துறை மற்றும் உளவுத்துறையின் கதைகளையே பரப்பி தங்களுக்கு தாங்களே களங்கம் ஏற்படுத்தி வருவது வேதனை அளிக்கின்றது. கேரளாவில் பேராசிரியர் தாக்கப்பட்ட உடன் தன் கண்டனத்தை பதிவு செய்த பாப்புலர் ஃப்ரண்ட், குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும், போலிஸார் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உறுப்பினர்களுக்கு எதிரான அராஜக போக்கை கைவிட்டு அப்பாவிகளை கைது செய்து துன்புறுத்துவதைவிட்டு நீதியை நிலைநிறுத்த வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கைகளை வைத்து வருகின்றனர். பத்திரிகைகளும் நீதியுடன் நடந்து கொள்ள வேண்டுமென பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கேரள மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜூலை 9 அன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேரளத்தின் கோழிக்கோட்டில் நடத்திய பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது கேரளாவில் இதற்கு முன்பு மாராடு படுகொலைகளிலும், கோழிக்கோடு பேருந்து நிலைய குண்டு வெடிப்பு வழக்குகளிலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா [அப்பொழுது 'NDF'] பின்னணி என ஊடகங்கள் எழுதின. பின்னாளில் அந்த சம்பவங்களுக்கும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிற்கும் தொடர்பில்லை என நிரூபிக்கப்பட்டது. அதே போன்று இந்த சம்பவத்தையும் பத்திரிகைகள் கையாண்டு வருவதாகவும், காவல் துறையில் உள்ள முஸ்லிம் சமூக விரோத சக்திகளே இதற்கு காரணம், அவர்களையும், போலியான செய்திகளை பரப்பி வருபவர்களையும் சட்டரீதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா எதிர்கொள்ளும். மேலும் குறுகிய எண்ணத்துடன் செயல்பட்ட சம்பந்தப்பட்ட பேராசிரியரின் செயலை ஜனநாயக முறையில் கண்டித்தவர்களை கைது செய்து அவர்களின் வீடுகளில் புகுந்து சிடிக்கள் மற்றும் குர்ஆன்கள் போன்றவற்றை எடுத்துக்கொண்டு இரகசிய ஆவணங்களை கைப்பற்றி இருப்பதாக கூறுவது அபாண்டமானது மேலும், இதில் கிஞ்சிற்றும் உண்மையில்லை.

ஊடகங்கள் இந்த விஷயத்தில் நீதியுடனும் நடுநிலை தவறாமலும் நடந்து கொள்ள வேண்டும், என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கேரள மாநில பொதுச்செயாளர் அப்துல் ஹமீது தெரிவித்துள்ளார்;. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயலக குழுவும் நடந்த சம்பவத்திற்கு கண்டனத்தை பதிவு செய்ததுடன் காவல் துறை மற்றும் ஊடகங்களும் நீதியுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது. நிலைமை இவ்வாறு இருக்க தமிழக பத்திரிகைகளும் தங்களின் பழைய கால அனுபவங்களை மறந்து மீண்டும் காவல்துறை மற்றும் உளவுத்துறையின் கட்டுக்கதைகளை பரப்புவதை நிறுத்தி நடுநிலையுடன் செயல்பட்டு நீதியை நிலைநிறுத்த வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழ்மாநில தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சனி, 10 ஜூலை, 2010

பெங்களுர் குண்டுவெடிப்பு வழக்கு: மதானியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

பெங்களுர்:பெங்களுர் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் முன் ஜாமீன் கோரிய கேரள மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானியின் மனுவை பெங்களுர் விரைவு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.

2008 ஜூலை 25-ம் தேதி நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நசீர் உள்ளிட்டோர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மதானி உள்பட 6 பேர் மீது பெங்களூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இதை அடுத்து அவரை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே முன்ஜாமீன் வழங்குமாறு விரைவு நீதிமன்றத்தில் மதானி தாக்கல் செய்த மனு வெள்ளிக்கிழமை நீதிபதி ஸ்ரீகாந்த் வடவடகி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மதானி தரப்பு வழக்கறிஞர் உஸ்மான் மற்றும் அரசு வழக்கறிஞர் ருத்ரசாமி ஆகியோர் வாதாடினார்கள். இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கை மேலோட்டமாகப் பார்க்கும்போது முன்ஜாமீன் வழங்க அவசியம் இல்லை எனக்கூறி மதானியின் மனுவை டிஸ்மிஸ் செய்தார்

வியாழன், 7 ஜனவரி, 2010

இஸ்லாமிய வங்கியை நிறுவுவதற்கான 'KSIDC'ன் முயற்ச்சிக்கு கேரள உயர் நீதி மன்றம் இடைக்காலத் தடை

கேரளாவிலிலுள்ள அரசு நிறுவனமான கேரள மாநில தொழில் முன்னேற்றக்கழகம்(KSIDC-Kerala Stae Industrial Development Corporation) சார்பாக துவக்கவிருந்த இஸ்லாமிய வங்கியின் தொடர் நடவடிக்கைகளுக்கு கேரள உயர்நீதிமன்றத்தின் டிவிசன் பெஞ்ச் தடைவிதித்துள்ளது.
பாசிச கூடாரத்தில் தஞ்சம் புகுந்துள்ள தமிழகத்தைச் சார்ந்த சுப்ரமணிய சுவாமி தாக்கல் செய்த மனுவில்தான் இந்தத்தடையை விதித்துள்ளது உயர் நீதிமன்ற பெஞ்ச்.

இதுத்தொடர்பாக KSIDC க்கும் மத்திய வங்கிக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது உயர்நீதி மன்றம். சுப்ரமணி சுவாமி தனது மனுவில், "இஸ்லாமிய வங்கி இந்திய நாட்டின் மதசார்பின்மைக் கொள்கைக்கும், வங்கியல் சட்டத்திற்கும் எதிரானது" எனக்குறிப்பிட்டிருந்தார். ஏற்கனவே இதுத்தொடர்பாக கேரள சட்டமன்றத்தில் இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வியொன்றிற்கு பதிலளித்த கேரள நிதித்துறை அமைச்சர் தாமஸ் ஐசக் கூறுகையில்,"அரசு ரூ.1000 கோடியை இதன் பங்கு முதலாக நிர்ணயித்துள்ளது" என்றார்.
அரசும் இதுத்தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்தபின்னரே இத்திட்டத்திற்கு பச்சக்கொடிக்காட்டியது. இவ்வங்கி முதலீடு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு வட்டியை வழங்காது. இது இஸ்லாமிய ஷரீஅத்தின் அடிப்படையில் செயல்படக்கூடியது. வங்கியில் முதலீடு செய்யப்படும் பணத்தை லாபம் தரும் தொழில்களில் முதலீடு செய்யும் அதில் கிடைக்கும் லாபத்தை பங்குதாரர்களுக்கு பிரித்துக்கொடுக்கும்.
கேரளாவில் மக்கள் தொகையில் இரண்டாவது இடத்திலிருக்கின்றனர் முஸ்லிம்கள். 3.2 கோடி மக்கள் தொகையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 24 சதவீதமாகும். 2007 ஆம் ஆண்டு வரை அரசுப்பெற்ற வரவினத்தில் முஸ்லிம்களின் பங்கு 12,158 கோடி ரூபாயாகும்.
இஸ்லாமிய வங்கிக்குத்தடை தொடர்பான உயர்நீதிமன்றத் தீர்ப்பு வெளியானவுடன் அதன் இயக்குநர் IANS செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளிக்கையில், "தற்பொழுதுதான் இந்நிறுவனம் துவக்கப்பட்டுள்ளது இந்நிலையில் இவ்வழக்கு சவாலானது நாங்கள் இதனை சந்திப்போம்" எனத்தெரிவித்தார்.
source:twocircles.net

புதன், 23 டிசம்பர், 2009

கைது சூழ்ச்சி: சூஃபியா மதானிக்கு ஆபத்து!

கேரள மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மார்க்க அறிஞர் அப்துல் நாசர் மதானியின் மனைவி சூஃபியா மதானியின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்ற காவ­லில் வைக்குமாறு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


மதானி 9 ஆண்டுகளாக தமிழகச்சிறையில் விசாரணை கைதியாக தவித்து வந்தார். அவர் மீதான குற்றச் சாட்டுக்கு எவ்வித ஆதாரமும் இல்லாத நிலையில் மதானி விடுவிக்கப்பட்டார். மதானி உள்ளிட்ட நிரபராதிகளின் விடுதலைக்காக தமிழகத்தின் பல்வேறு சமூகநல அமைப்புகள் அறப் போராட்டக்களம் கண்டன.

தமிழ்நாடு முஸ்­லிம் முன்னேற்றக் கழகம் மதானி உள்ளிட்ட சிறைவாசி களுக்காக நாடுதழுவிய அளவில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தியது.

எண்ணற்ற போராட்டங்கள், ஏமாற்றங்கள், வேதனைகள், விவாதங்களுக்குப் பிறகு மதானி விடுவிக்கப்பட்டார்.

சிறை மீண்ட மதானி கேரள மாநிலத்தின் முழுநேர அரசியல் வாதியாக மாறிப்போனார். மதானியின் ஆதரவாளர்கள் வட்டம் கேரளா முழுவதும் பரவி இருந்தாலும் அமைப்பு ரீதியான வலிமை போதுமானதாக இல்லை. இருப்பினும் கேரள இடதுசாரிக் கூட்டணிக்கு மதானியின் ஆதரவு பெரும் வலிமை சேர்த்தது.

கேரளாவில் காலகாலமாக கால்பதித்து கிளைப்பரப்பிய மதவாதிகளுக்கு மதானியின் எதிர்கால வளர்ச்சி பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என கணித்த மதவாத சக்திகள் மறைமுகமாக அழுத்தங்களைக் கொடுத்து, மதானி தீவிர வாத பின்னணிக் கொண்டவர் என தமிழ்நாட்டிலேயே தோற்றுப் போன ஒரு பல்லவியை கேரளாவில் பாட ஆரம்பித்தன.

சங்பரிவார் சக்திகள் தங்களது சொந்தபேனரில் முகத்தைக் காட்டாமல் பல்வேறு சமூக அமைப்புகளின் முகமூடியில் மதானியை எதிர்த்து புளுகுப்பிரச்சாரம் மேற்கொண்டன.

முஸ்லி­ம்களின் தனித்தன்மை கொண்ட அரசியல் அடையாளத்தை உள் மனதில் விரும்பாத காங்கிரஸும் மதானியை எதிர்த்து பரப்புரை செய்தது. எத்தகைய பொய்ப் பிரச்சாரங்களையும் நெஞ்சுரத்துடன் எதிர்கொள்ள வேண்டிய இடதுசாரி அரசோ துணிச்ச­லின்றி மதவாத சக்திகளின் பிரச்சாரத்துக்கு தலையாட்டும் அளவுக்கு கீழிறிங்கியது.

மதானியை இனியும் பொய் குற்றம் சாட்டி அரசியல் நடத்தினால் அது எடு படாது என்பதை உணர்ந்த அனைத்து ஆதிக்க சக்திகளும் பழைய வழக்கினை தூசிதட்டி எடுத்தன.

மதானியின் மனைவியார் சூஃபியா மதானியை பஸ்எரிப்பு வழக்கில் தொடர்புடையவராகக் கூறி அவரைச் சுற்றி விசாரணை வளையங்கள் வட்டமிட்டு வருகின்றன.

முன்பு மதானியை விடுதலை செய் யக் கோரி போராட்டம் நடைபெற்ற போது தமிழகத்திலி­ருந்து சென்ற அரசு போக்குவரத்துக் கழக பேருந்து கேரளாவில் தீக்கிரையாக்கப்பட்டதாகவும் அதற்கும் சூஃபியாவுக்கும் தொடர்பு இருப்பதாகவும் கூறி அவர் வழக்கில் சிக்க வைக்கப்பட்டிருக்கிறார்.

சூஃபியா மதானி தனது கணவரின் விடுதலைக்காக தொடர் சட்டயுத்தம் நடத்திய வீரப்பெண்மணி. செய்யாத குற்றத்திற்காக தனது கணவர் சிறைத்தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த போது தளராத மன உறுதியுடன் குடும்பத்தைக் கட்டிக் காத்த பெண்மணி இன்னும் 33 வயது நிறைவடையாதலிஇரண்டு ஆண் குழந்தைகளுக்கு தாயான அந் தப்பெண்மணி இதுவரை அனுபவித்த துன்பங்களும் தொல்லைகளும் போதாதா? என கேரள பெண்கள் சமூகம் கோபக்குரல் எழுப்பிவருகிறது.

தெலுங்கானா பிரச்சினையால் ஆந்திராவே சட்ட ஒழுங்குப் பிரச்சினையால் தள்ளாடுகிறது. சேதம் அடையாத அரசு சொத்துக்களே இல்லை. சிறிய கதவடைப்பு மறியல் போன்றவற்றில் கூட அரசு சொத்துக்கள் சேதமடைவது சர்வ சாதாரணமாக நடைபெறும் ஒன்று. என்னவோ இந்தியா விடுதலையடைந் ததி­லிருந்து ஒரு பஸ் எரிப்புமே நடக்க வில்லையா? மதானி மனைவிதான் முதன் முறையாக பஸ்ஸை எரிக்க கிளம்பினாரா?

அல்லது இதுவரை பஸ் எரிப்பு குற்றம் சாட்டப்பட்ட இயக்கங்களின் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்களா?

அல்லது பஸ் எரிப்பு குற்றம் சாட்டப்பட்ட கட்சிகளின் தலைவர்களின் மனைவிகள் யார் மீதாவது விசாரணை மேற்கொள்ளப்பட்டதா? இவையெல்லாம் விடைதெரியாத கேள்விகள்.

ஓர் அப்பாவி முஸ்­லிம்பெண்மணி திட்டமிட்டு பழிவாங்கப்படுவதாகவே இந்தியா முழுவதும் உள்ள நடுநிலை யாளர்கள் நினைக்கிறார்கள்.

கற்பனை கூட செய்ய முடியாத பயங் கரவாத குற்றச்சாட்டுகளில் அந்த இளம் முஸ்லி­ம் பெண்ணை சிக்க வைப்பதற்கு முயற்சி நடப்பதாக தகவல்கள் தெரி விக்கின்றன.

ஒருவர் முஸ்லி­ம் என்பதாலேயே எத்தனை பயங்கரமான குற்றச் சாட்டுக்களையும் கூறலாம் என பல ஊடகங்களும் சில அரசியல் சக்திகளும் நினைக்கின்றன. அந்த அவதூறு சேற் றி­ருந்து வெகுகாலத்திற்குப்பிறகு அந்த அப்பாவி முஸ்லி­ம் மீண்டு வரும் போது தங்களது எதிர்காலமே சிதைந்து சின்னா பின்னமாகிவிட்டதை உணர்கிறார்கள்.

ஆனால் அந்த இழப்புகளுக் குக்காரணமான ஊடகங்கள்அந்த குறிப்பிட்ட அரசியல் சக்திகள் அடுத்து யாரை அவதூறுக்கு உள்ளாக்கி அழிக்கலாம் என இறங்கி விடுகின்றன.

இந்த கருங்கா­லிகளுக்கு என்ன தண்டனை? அந்த அப்பாவிகளுக்கு என்ன நிவாரணம்? பொய் குற்றம் சாட்டி வந்த அதிகாரிகளுக்கு என்ன தண்டனை? இது போன்ற இழிசெயல்கள் இனிமேலும் நடைபெறாமல் தடுப்பதற்கு என்ன சட்ட பாதுகாப்பு? என பல்வேறு கேள்விகள் கொதித்துக் குமுறும் அனைத்து நெஞ்சங்களிலும் எழுகிறது.

சூஃபியா ஒரு தனி மனுஷியல்ல என்பதை புரியவைக்கப் போவது யார்?

கேரளாவின் முன்னணி முஸ்லி­ம் அமைப்பாக இன்று மத்திய அரசில் அங்கம்வகிக்கும் முஸ்லி­ம் லீக்கும், கேரளாவை ஆளும் இடது சாரிகளும் மத்தியில் ஆளும் காங்கிரஸும் நாளை மக்கள் மன்றத்தில் இதற்கு கண்டிப்பாக பதில் சொல்ல வேண்டும்.

ஞாயிறு, 22 நவம்பர், 2009

பாசிச ஹிந்து தீவிரவாதிகள் கேரளா கோழிக்கோடு மாவட்டத்தில் கலவரம் பள்ளிவாசல் மீது கல்வீச்சு.


கோழிக்கோடு: லவ் ஜிஹாத் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து தர்பியத்துல் இஸ்லாம் சபை என்ற நிறுவனத்தை நோக்கி ஹிந்து ஐக்கியவேதி மற்றும் விசுவ ஹிந்த் பரிசத் ஆகிய தீவிரவாத சங்க்பரிவார பாசிஸ்டுகள் நடத்தவிருந்த பேரணிக்கு மாவட்ட கலெக்டர் தடை விதித்ததைத்தொடர்ந்து கோழிக்கோடு பாளையம் ரோட்டில் நடுவே பொதுக்கூட்டம் நடத்தியது சங்க்பரிவாரம். பின்னர் கூட்டம் முடிந்து பிரிந்து செல்லும்போது தீவிரவாதிகள் அருகிலிலுள்ள பட்டாளம் பள்ளிவாசலில் கல்வீச்சில் ஈடுபட்டனர். கல்வீச்சில் இரண்டு மாடிக்கொண்ட பள்ளிவாசலின் கண்ணாடிகளும் மின்சார விளக்குகளும் உடைந்தன. நடுரோட்டில் நடைபெற்ற கூட்டத்தில் முஸ்லிம் சமுதாயத்திற்கெதிராக மிகவும் மோசமான வார்த்தைகளை உபயோகித்து கூட்டத்தில் கலந்துக்கொண்டவர்கள் உரையாற்றினர். காவல்துறை கண்ணீர்குண்டுகள், கிரேனேட்டுகள், ஆயுதம்தாங்கிய போலீசார் என கடுமையான பாதுகாப்பையும் மீறி பள்ளிவாசல் மீது கல்லெறியப்பட்டது. போலீசார் இதனை கண்டு பேசாமல் இருந்துள்ளனர். மேலும் கூட்ட்த்தில் உரையாற்றியவர்கள் மிக மோசமான வார்த்தைகளால் முஸ்லிம் சமூகத்தை திட்டி தீர்த்தையும் போலிசார் கண்டு கொள்ளவில்லை . பள்ளிவாசல் மீது கல்லெறிந்தவர்கள் மீது சாதாரண பிரிவிலிலுள்ள வழக்குகளே பதிவுச்செய்யப்பட்டன.
செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்

திங்கள், 18 மே, 2009

கேரளாவில் போலீஸ் பயங்கரவாதம்.பீமாப்பள்ளியில் 4 முஸ்லிம்கள் சுட்டுக்கொலை.37 பேர் மருத்துவமனையில்.3 பேர் நிலை கவலைக்கிடம்.





முன்னறிவிப்பில்லாமல் கேரளா போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பீமாப்பள்ளியைச்சார்ந்த அஹ்மத் ஸலீம்(50), பாதுஷா(35),செய்தலவி(24) மற்றும் அப்துல் ஹக்கீம்(27) ஆகியோர் சம்பவ இடத்தில் குண்டு பாய்ந்து மெளத்தானார்கள்.துப்பாக்கிச்சூட்டில் கடுமையாக காயமடைந்த 37 பேர் திருவனந்தபுரம் மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் அவசரசிகிட்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.காயமடைந்தவர்களில் தலையில் காயமடைந்த ஷபீக்(21), ஷஜீர்(22) மற்றும் அலி(34) ஆகியோரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.சிறியத்துறை என்ற பகுதியைச்சார்ந்த ஷிபு என்ற ரவுடி சனிக்கிழமை மாலையில் அடாவடியாக பீமாப்பள்ளியில் பணம் வசூலித்ததுதான் பிரச்சனைக்கு காரணம்.ஒருக்கடையில் டீ குடித்துவிட்டு பணம் கொடுக்காதாதால் அவ்வூரைச்சார்ந்தவர்கள் கஞ்சா வியாபாரியான ஷிபுவை அடித்ததால் பீமாப்பள்ளியை சார்ந்தவர்களின் மீன்பிடி படகுகளையும் வலைகளையும் தீயிட்டுக்கொளுத்தியதைத்தொடர்ந்து பீமாப்பள்ளியைச்சார்ந்த இளைஞர்கள் சிலர் சிறியத்துறைச்சென்று அங்குள்ளவர்கள் மீது கல்லெறி நடத்தினர். இதைத்தொடர்ந்து அங்கு காவலில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டனர்.கடற்கரையிலிருந்த மீன்பிடி தொழிலாளிகள் பலர் இதில் காயமடைந்தனர்.மரணித்தவர்களின் நெஞ்சிலும் கழுத்திலும்தான் குண்டு பாய்ந்திருந்தது.எந்தவொரு முன்னறிவிப்போ கலவரம் ஏற்ப்பட்டால் பேணவேண்டிய முன் நடவடிக்கைகளோ செய்யாமல் திடீரென துப்பாக்கியால் காவல்துறையினர் சுட்டதாக சம்பவத்தை நேரடியாக பார்த்தவர்கள் கூறுகிறார்கள்.சம்பம் நடந்த பகுதியில் போலீஸ் எந்தவொரு தடைவுத்தரவோ அல்லது கட்டுபாடுகளோ விதித்திருக்கவில்லை.துப்பாக்கிச்சூட்டிற்கு பின்னர்தான் காவல்துறை தடைவுத்தரவு பிறப்பித்திருக்கிறது.ரவுடி ஷிபுவின் கும்பல் நடத்தும் அராஜகத்தை தடுத்து நிறுத்துமாறு மாவட்ட ஆட்சியரை பீமாப்பள்ளி ஜமாஅத் தலைவர் என்.வி.அஸீசும் வார்டு கவுன்சிலர் பீமாப்பள்ளி ரஷீதும் வேண்டியுள்ளனர் ஆனால் கலெக்டர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பின்னர் அந்த பகுதியில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இருவரும் தெரிவித்தனர்.

30 ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். மேலும் கயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்காததால் காயமடைந்தவர்களின் நிலை மோசமடைந்துள்ளது.இரண்டு நபர்களின் முதுகுபகுதியில் குண்டு பாய்ந்துள்ளது இது அவர்கள் திரும்பி ஒடும்பொழுது சுட்டதை காண்பிக்கிறது.வெடியேற்று விழுந்தவர்களை காவல்துறையினர் துப்பாக்கியின் தலைப்பகுதியைக்கொண்டு தாக்கியதாக சம்பவத்தை பார்த்தவர்கள் கூறுகிறார்கள்.குண்டடிப்பட்டவர்களை போலீஸ் ஊர்வாசிகளிடகுருந்து முதலில் மறைத்து வைத்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் கூறுகிறார்கள்.போலீஸின் இந்த பயங்கரவாதத்தால் மீன் பிடித்தொழில் முடித்து வந்த அப்பாவிகள் பலியாகியுள்ளனர்.ஆனால் கலவரத்தில் ஈடுபட்ட ஷிபுவையோ அல்லது அவனைச்சார்ந்த ரவுடிக்கும்பலையோ காவல்துறை இதுவரை கைதுச்செய்யவில்லை.மேலும் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்க்கமுயன்ற ஜமாஅத் நிறுவாகிகளை போலீஸ் காவல்நிலையத்தில் தடுத்துவைத்துள்ளனர்.காவல்துறையின் இந்த பயங்கரவாத நடவடிக்கியால் முஸ்லிம்-கிறிஸ்தவ கலவரம் மூழும் சூழல் ஏற்ப்பட்டுள்ளதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.அப்பாவிகளை படுக்கொலைச்செய்த காவல்துறைக்கெதிராக உடனடியாக கொலைக்குற்ற வழக்கு பதிவுச்செய்யவேண்டுமென்று திருவனந்தபுரம் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட இடது சாரி ஆளும் கட்சி வேட்பாளர் பி. ராமச்சந்திரன் நாயர் கோரிக்கைவிடுத்துள்ளார்.



செய்தி:தேஜஸ் 18 மே.09

வியாழன், 9 ஏப்ரல், 2009

மாத்யமம்: ஒரு முஸ்லிம் ஊடகத்தின் வெற்றிப் பயணம்!

கேரள முஸ்லிம்கள், மாநில மக்கள் தொகையில் ஏறத்தாழ கால்வாசி பேர், இந்தியாவிலேயே அதிக சதவீதத்தில் கல்வியறிவுபெற்றவர்கள். சமுதாயத்தின் அதிகக் கல்வியறிவு சதவிகிதத்தின் விளைவாக முஸ்லிம்களின் சொந்த மலையாள நாளிதழை தந்துள்ளது.

இன்றைய தேதியில், பல்வேறு கேரள முஸ்லிம் அமைப்புகளால் நூற்றுக்கணக்கான சிற்றிதழ்கள், தனிப்பிரதிகள் மற்றும் செய்திதாள்கள் வெளியிடப்படுகின்றன. இவை மதத்தைப் பற்றி மட்டும் சார்ந்தில்லாமல் (பல வட இந்திய முஸ்லிம் பதிப்புகள் மதத்தை மட்டும் சார்ந்துள்ளன) சமூகம் மற்றும் அரசியலையும் அலசுகின்றன. இந்தப் பத்திரிக்கைகள் கேரள முஸ்லிம்கள் மத்தியில் அரசியல் மற்றும் சமூக விழிப்புணர்வு ஏற்படவும் அவற்றின் மீதான முஸ்லிம்களின் பார்வையைப் பெறுவதிலும் மாநில அதிகாரத்தில் உள்ளவர்கள் மற்றும் முஸ்லிமல்லாத சக மலையாளிகளுடைய கவனத்தைப் பெறுவதிலும் பல்வேறு சமுதாயத்திற்கிடையில் நெருங்கிய தொடர்புகள் ஏற்படுத்துவதிலும் இன்றியமையாத பங்கு வகித்துள்ளன.

ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் கேரளப் பகுதியின் அதிக உறுப்பினர்களைக் கொண்ட, 'ஐடியல் பப்ளிகேஷன் டிரஸ்'டால் 1987ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட 'மாத்யமம்' தினசரி கேரளாவின் வெற்றிகரமான முஸ்லிம்களின் சொந்த நாளேடு என்ற மதிப்போடு திகழ்கிறது. மாநிலத்தில் அதிக விற்பனையாகும் பத்திரிகைகளில் மூன்றாவது இடம் வகிக்கிறது. இதன் தலைமைப் பதிப்பாளர் அப்துல் ரஹ்மான், "இது குறிப்பாக முஸ்லிம்களுக்காகவோ அல்லது இஸ்லாத்திற்காவோ மட்டுமான நாளிதழ் இல்லை" என வலியுறுத்தி கூறுகிறார். மாத்யமம் அனைத்துத் தரப்பு மலையாள வாசகர்களுடனும் இணைந்துள்ளது; முஸ்லிம்களுக்காக மட்டுமில்லாமல் தலித்கள், ஆதிவாசிகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மை சமுதாயத்தினர் மற்றும் விளிம்பு நிலை மக்களின் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் தருவதுடன் பொதுவான விஷயங்களையும் கையில் எடுக்கிறது.

“நாங்கள் மாத்யமத்தை ஒடுக்கப்பட்டவர்களின் குரலாகப் பார்க்கிறோம்” என்று அவர் குறிப்பிடுகிறார்.

அவர் மாத்யமத்தைப் பற்றி குறிப்பிடும் பொழுது, "லாபமீட்டுவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட வணிக ரீதியிலான பத்திரிக்கைளில் இருந்து வேறுபட்டு ஒழுக்கத்தையும் நீதியையும் வலியுறுத்தும் ஒரு மதிப்புமிக்க பத்திரிக்கை மாத்யமம்" என்கிறார்.

தற்பொழுது மாத்யமம் பல்வேறு பதிப்புகளாக கொச்சி, திருவனந்தபுரம், கண்ணூர், மலப்புரம், கோட்டயம், கோழிக்கோடு என கேரளாவிலிருந்து ஆறு நகரங்களில் இருந்தும் பெங்களூரு மற்றும் மங்களூர் என கர்நாடகாவிலிருந்து இரண்டு நகரங்களிலிருந்தும் வெளிவருகிறது.

தனி வளைகுடாப் பதிப்புகளாக‌, அரபு நாடுகளில் வாழும் மலையாளிகள் ஐந்து லட்சம் பேருக்குத் தனியாக செய்திகளைக் கொண்டு சேர்க்கிறது. துபை, பஹ்ரைன், குவைத், தோஹா, தம்மாம், ரியாத் மற்றும் ஜித்தா எனப் பல பகுதிகளில் வெளியாகி இந்த மண்டலத்தில் மிக அதிகமாக விற்பனையாகும் மலையாள‌ பத்திரிகையாக மாத்யமம் விளங்குகிறது. கூடுதலாக மாத்யமம் வாராந்திர பத்திரிகை 25000 பிரதிகள் வரை விற்பனையாகிறது.

தற்பொழுது மொத்த மாத்யமம் குழுமம் 500 முழுநேரப் பத்திரிகையாளர்களையும் சேர்த்து மொத்தம் 1200 பணியாளார்களைத் தன்னிடம் கொண்டுள்ளது.

போதிய விளம்பர வருவாய் இல்லாமல் போராடுவது மாத்யமம் சந்திக்கும் மிகப்பெரிய சவாலாகும். அப்துல் ரஹ்மான் விவரிக்கையில், "செய்தித்தாள்கள் என்பன விளம்பரங்களில் இருந்து வரும் வருவாயிலிருந்தே உயிர் வாழ்கின்றன. ஆனால் நாங்கள் மிகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட விளம்பரங்களை மட்டும் பதிப்பது என்பதை மிக முக்கியக் கொள்கையாகத் துவக்கத்திலேயே முடிவு செய்து விட்டோம். அரைகுறை ஆடையைணிந்த பெண்களின் படங்கள் அடங்கிய விளம்பரங்கள், வங்கி விளம்பரங்கள், மதுபானம், தவறான முறையற்ற முதலீடுகள் மற்றும் திரைப்படங்களுக்கான விளம்பரங்களை வெளியிடுவதில்லை என முடிவெடுத்தோம். நாங்கள் அதிக இழப்புகளை சந்திக்க இதுதான் காரணமாக அமைந்தது; இப்பொழுது கூட இவற்றை நாங்கள் சமாளித்தே செல்கிறோம்".

"செய்தித்தாள்களில் இருந்து வரும் லாபத்தில் ஒரு பகுதி மாத்யமம் உடல் நலச் செயல்திட்டத்திற்காக (Health care programme) பயன் படுத்தப்படுகிறது. இது எங்களிடம் கூட்டாக உள்ள‌ மருத்துவமனைகளில் சாதி, மதம் வித்தியாசமில்லாமல் அனைவருக்கும் மருத்துவ வசதிகளை இலவசமாக அளித்துவருகிறது. இத்திட்டத்தின் கீழ் கடந்த ஆறு ஆண்டுகளில் 3 கோடி ரூபாய் செலவில் 3000 நோயாளிகள் பலன் பெற்றுள்ளனர்".

திறமையான பத்திரிகையாளர்கள் அதிகம் இல்லாதது முஸ்லிம்கள் நடத்தும் பத்திரிகைகள் சந்திக்கும் மிக முக்கியமான பிரச்சனை என அப்துல் ரஹ்மான் விவரிக்கிறார். இதைக் கவனத்தில் எடுத்துக் கொண்டுதான் கடந்த வருடம் 'மாத்யமம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஜர்னலிஸ்ட்' துவக்கப்பட்டது. தற்பொழுது பத்திரிகையின் கோழிக்கோடு அலுவலத்தில் இயங்கும் இந்தப் பயிற்சி மையம் ஜர்னலிஸத்தில் ஓராண்டு டிப்ளமோப் பயிற்சியை வழங்குகிறது. தற்சமயம் இந்து, முஸ்லிம்களில் ஆண்க‌ள் மற்றும் பெண்க‌ள் என‌ 14 மாணவர்களைக் கொண்டுள்ளது. கேரளாவில் முஸ்லிம்களால் நடத்தப்படும் ஒரே பத்திரிக்கையாளர் கல்வி நிறுவனம் இது. இந்த டிப்ளமோவில் மாத்யமமே களப்பயிற்சியை வழங்குறது. தேர்வு பெற்ற மாணவர்களுக்குச் செய்தித்தாள்களில் பணிபுரிய வாய்ப்பும் அளிப்பதாக அப்துல் ரஹ்மான் தெரிவிக்கிறார்.

* மாத்யமத்தின் வெற்றி, இந்தியாவில் உள்ள மற்ற முஸ்லிம்கள் நடத்தும் பத்திரிகைகளுக்கு என்ன பாடத்தைத் தெரிவிக்கிறது? நாட்டின் பிற பகுதிகளில் முஸ்லிம்கள் நடத்தும் மற்ற பத்திரிகைகளில் இருந்து வேறுபட்டு மாத்யமத்தால் எப்படி வெற்றி நடை போட முடிகிறது?

“முஸ்லிம் பத்திரிகைகள் வெறுமனே முஸ்லிம்களுக்கு மட்டுமில்லாமல் அனைவரின் வரவேற்பையும் பெறும் வகையில் வெளிப்படையான அணுகுமுறையுடன் செயல்பட வேண்டும்” என‌ அப்துல் ரஹ்மான் வலியுறுத்துகிறார்.

“ஒரு முஸ்லிம் தினசரி செய்தித்தாள் மதச்சார்பற்றதாக இருக்க வேண்டும், முஸ்லிம்களுக்கான மதச் செய்திகளை வெளியிடுவதோடு மட்டும் இருக்ககூடாது”.

அவர் கூறுகையில், “நம்முடைய பார்வைகளையும் பிரச்சனைகளையும் மிகப்பெரிய சமுதாயத்தின் மீது வழங்க இது ஒன்றே வழி. இல்லையென்றால் மற்றவர்கள் நம்முடைய விசயத்தை கவனமுடன் எடுத்துக் கொள்ள மாட்டார்கள் இதனால் நம்மால் முஸ்லிம் என்ற‌ சமுதாய வட்டத்தைத் தாண்டி எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது”

இது போன்ற எங்களது அணுகுமுறையால்தான் எங்களது பெரும்பாலான வாசகர்கள் முஸ்லிமல்லாதவர்களாக இருக்கிறார்கள்.

நாங்கள் மதம் பற்றிய கட்டுரைகளைத் தொடர்ந்து பதிந்து ஒரு எல்லையில் குறுகுவதில்லை. மற்ற செய்தித்தாள்களைப் போல செய்திகளையும் செய்தியைப் பற்றிய விமர்சனங்களையுமே தருகிறோம். மத விழாக்களில் நாங்கள் சிறப்புப் பதிப்புகளை வெளியிடுகிறோம். இது முஸ்லிம் பண்டிகைகளில் மட்டுமல்ல, மலையாள ஹிந்துப் பண்டிகளைகளான ஓணம், விஷு மற்றும் கிறிஸ்தவ பண்டிகைகளுக்கும் வெளியிடுகிறோம்”.

அப்துல் ரஹ்மான் தொடர்ந்து கூறும்பொழுது அதே நேரத்தில் இவையெல்லாம் முஸ்லிம் நாளிதழ்கள் முஸ்லிம்களை புறக்கணிக்க வேண்டும் என்று அர்த்தமாகாது. மாத்யமத்தில் நாங்கள் என்ன செய்கிறோம் என்றால் செய்திகளைச் செய்திகளாக தருகிறோம். அனைத்துச் செய்திகளுக்கும் முக்கியத்துவம் தருகிறோம். வெறும் முஸ்லிம்களின் முன்னேற்றம் பற்றிய செய்திகளை மட்டும் வழங்கி கொண்டிருப்பதில்லை.

ஆனால் செய்திகளைப் பற்றிய எங்கள‌து பார்வைகளையும் எங்களுடைய தலையங்கப் பகுதியில் முன்னிலைப் படுத்துகிறோம். மேலும் பல வல்லுனர்களையும் பங்கு பெறச் செய்கிறோம். மக்கள் எங்களைப் பற்றிய விமர்சனங்களை முன்வைக்கவும் நாங்கள் அனுமதிக்கிறோம். முஸ்லிம் பத்திரிகைகள் இதைக் கண்டிப்பாக செய்ய வேண்டும். இது ஒரேயொரு குறுகிய பாதையில் செல்வதிலிருந்து தடுக்கும்.

முஸ்லிம்கள் நடத்தும் பத்திரிகைகளுக்கு அப்துல் ரஹ்மான் வழங்கும் மற்றொரு அறிவுரை “முஸ்லிம் அல்லாத எழுத்தாளர்களின் பார்வைகளையும் இடம்பெற அவர்களை அழைக்க வேண்டும். அதிக எண்ணிக்கையிலான முஸ்லிமல்லாத எழுத்தாளர்களும் சமூக ஆர்வலர்களும் மாத்யமத்திற்காக எழுதுகிறார்கள். ஆரோக்கியமான பணிபுரியும் சூழ்நிலையை உருவாக்க முஸ்லிமல்லாத பத்திரிகையாளர்களை பணியமர்த்த வேண்டும், மேலும் அவர்களை முஸ்லிம்கள் சம்பந்தமான நிகழ்வுகளில் கவனத்தை செலுத்த நிர்பந்திக்கக் கூடாது. மாத்யமத்தில் 40% பத்திரிக்கையாளர்கள் ஹிந்துக்கள், கிறிஸ்தவர்கள், மார்க்சிஸ்டுகள் மற்றும் நாத்திகர்கள். எங்களின் ஊழியர்களுக்கு அவர்களுடைய சொந்த அரசியலில் ஆர்வம் உண்டு. சிலர் முஸ்லிம் லீகுக்கும் சிலர் காங்கிரஸ் மற்றும் சிலர் கம்யூனிசத்திற்கும் ஆதரவளிப்பவர்கள். ஆனால் அவர்கள் ஒரு தொழில்முறையோடு பணிபுரியும்போது இது ஒரு விஷயமே இல்லை” என்கிறார்.

மாத்யமத்தின் எதிர்காலத் திட்டங்களைப் பற்றி அப்துல் ரஹ்மான் கூறும்பொழுது, டெல்லி, மும்பை, கல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு மற்றும் சென்னையிலிருந்து தொடர்ச்சியாக வெளிவரும் ஒரு ஆங்கில நாளிதழ், ஒரு சாதாரண தொலைகாட்சி அலைவரிசை (மாத்யமத்தை போலவே கொள்கையுடைய), அதனுடன் கேரளாவிலிருந்து மேலும் சில பகுதிகளிலிருந்து புதிய பதிப்புகள் வெளியிடுதல் என்று மேலும் தங்கள் எல்லையை விரிவாக்க ஆவலுடன் தெரிவிக்கிறார்..

நிச்சயமாக நாவலைப் போல பத்திரிகைகளை வெளியிடும் மற்ற முஸ்லிம் ஊடகங்கள் மாத்யமத்திலிருந்து அதிகம் கற்றுக் கொள்ள வேண்டும்.

நன்றி: புதிய பாதை.

சனி, 4 ஏப்ரல், 2009

கேரளாவை உலுக்கியெடுக்கும் மதானி ஜுரம்


கேரள மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் அப்துல் நாசர் மதானி மீண்டும் பரபரப்பாக செய்திகளை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருக்கிறார்.


கேரள காங்கிரஸ் கட்சி, முஸ்லிம் லீக்கை மலைபோல் நம்பிக் கொண்டிருக் கிறது. ஆனால் முஸ்லிம் லீக் முன்பைப் போல் செல்வாக்குடன் இல்லை. பனாத் வாலா போன்ற பாரம்பரியம் மிக்க தேசியத் தலைவர் இல்லாததால் கிட்டத் தட்ட காலி பெருங்காய டப்பா என்று சொல்லும் நிலையிலேயே முஸ்லிம் லீக்கின் நிலை இருக்கிறது.


காங்கிரஸின் நிலை இவ்வாறிருக்க, முஸ்லிம் லீக்கின் முக்கியக் கோட்டையான பொன்னானியைக் கைப்பற்ற இடதுசாரிகள் முனைப்புடன் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக மார்க்சிஸ்டுகளின் ஆர்வம் காங்கிரஸ்லிமுஸ்லிம் லீக் கூட்டணியினரை ஏகக் கடுப்பில் ஆழ்த்தியிருக்கிறது. பொன்னானி தொகுதியில் முன்னாள் கல்லூரி முதல்வரான ஹுசைன் ரண்டதானி என்னும் சுயேச்சை வேட்பாளரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், கேரள மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மவ்லவி அப்துல் நாசர் மதானியும் ஆதரிக்கிறார்கள். நிலைமை தலைகீழ் ஆகும் போல் தெரிந்தது.


பொன்னானி தொகுதியில் முஸ்லிம் லீக் தோற்கும். காங்கிரஸ் கூட்டணி பலவீனம் அடையும். இவை அனைத்தை யும் விட மதானி அரசியல் சக்தி மிகுந்தவராக மாறிவிடுவார் என அஞ்சிய சங்பரிவார் கூடாரமும் தங்கள் பங்குக்கு மதானி மீது அவதூறுக் கணைகளையும் அள்ளி வீசின.


பாஜகவின் மூத்த தலைவர் வெங்கையா நாயுடு மதானிக்கு தீவிரவாத தொடர்பு இருப்பதாகக் கூறினார்.


முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் மீது அவதூறு சுமத்துவது பாஜகவின் சித்தாந்த முடிவாக இருக்கிறது. அதனால் பாஜக குறித்து யாரும் வியப்படைய மாட்டார்கள்.


ஆனால் காங்கிரசும் அவ்வாறே மதானி மீது அவதூறு சேற்றை அள்ளி வீசியது. இதைவிட வேதனையான விஷயம் என்னவெனில், முஸ்லிம் லீக்கும் கூட மதானி மீது தீவிரவாத அவதூற்றுச் சேற்றை அள்ளி வீசியது. இது கேரள மக்கள் மனதில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.


இதனிடையே தன் மீது பரப்பப்பட்ட அவதூறுகளுக்கு மதானி சுடச்சுட பதில் அளித்துள்ளார்.


பொன்னானி தொகுதியில் மட்டுமல்ல, இடதுசாரிகள் போட்டியிடும் அனைத்து தொகுதிகளுக்கும் மதானி தனது மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆதரவை தெரிவித் திருக்கிறார். வடகரா தொகுதியில் போட்டி யிடும் இடதுசாரி கூட்டணி கூட்டணி வேட்பாளர் சதி தேவியின் வேட்பு மனு தாக்கலின் போது மதானி செய்தியாளர் களுக்கு பேட்டியளித்தார்.


நவ்ஷாத் என்பவரையும், மணி என்ற யூசுப் என்பவரையும் மதானியோடு தொடர்புபடுத்தி பேசப்பட்ட அவதூறுக்கு மதானி பதில் அளித்தபோது, நவ்ஷாத் என்பவரை தீவிரவாதி போல் சித்தரித்தனர்.


இதே நவ்ஷாத் மத்திய அமைச்சர் வயலார் ரவியுடனும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பொதுச் செயலாளர் குஞ்சாலிக் குட்டியுடனும் சேர்ந்து இருப் பதைப் போன்று புகைப்பட ஆதாரத்தை வெளியிட்டார்.


இவர்களோடு இருக்கும் போது ஒன்றும் சொல்லாதவர்கள் தன்னுடனும் இடதுசாரிகளுடனும் சேர்ந்தாற் போன்ற ஒரு புகைப்படத்தை வைத்துக் கொண்டு எங்களை மட்டும் தீவிரவாத முத்திரைக் குத்துவதா? என ஆவேமாக பதிலடி கொடுத்தார்.


மணி என்ற யூசுப் என்பவரையும் தன்னோடு தொடர்புபடுத்தி அவதூறு சுமத்தப்பட்டது. மணி என்ற யூசுப் கோவை சிறையில் மதானி இருந்தபோது அவரோடு கோவை சிறையில் இருந் தவர். தூத்துக்குடியைச் சேர்ந்த பாண்டியன் என்பவரின் மகனான மணி, இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக சிறைவாசக் காலத்தில் ஏற்றுக் கொண்டவர். இவர் மிகவும் ஏழையாக இருந்ததாலும், கொச்சியில் உள்ள தனது வீட்டில் தங்கிக் கொள்ளுமாறு மதானி கூறியிருக்கிறார். அங்கு தங்கிய மணி என்ற யூசுப் சிறிது காலத்தில் வெளியேறினார் என்றும் கூறிய மதானி தன் மனைவி மீது கூறப்படும் குற்றச்சாட்டையும் மறுத்தார். தமிழக அரசு போக்குவரத்துக் கழக பேருந்தை மதானி ஆதரவாளர்கள் தீ வைத்ததாகவும், அது மதானியின் மனைவி சூஃபியாவின் கட்டளைப் படியே நடந்ததாகவும் குற்றம்சாட்டி அவதூறு சுமத்தப்பட்டது. ஆனால் பேருந்து எரிப்பு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட மஜீத் என்பவரும் அவரது சகோதரரும் செய்தியாளர்கள் கூட்டத் தைக் கூட்டி உண்மையை உடைத் துள்ளனர். காவல்துறை அதிகாரிகள் தங்க ளைக் கடுமையாகத் தாக்கியதால் மதானி மனைவியை பேருந்து எரிப்பு வழக்கில் குற்றம்சாட்டியதாக அவர்கள் தெரிவித் துள்ளனர்.


இவை எல்லாவற்றையும் வைத்து விளாசிய மதானி, உள்துறை அமைச் சரிடம் நேரடியாக கோரிக்கை விடுத்தார். ''இறைவனின் மீது ஆணையாக... தனக்கு எந்தவித தீவிரவாதத் தொடர்பும் கிடை யாது. தன்னை சிறையில் வைத்தால்தான் நாட்டில் அமைதியான தேர்தல் நடத்த வேண்டுமெனில், தான் சிறை செல்லத் தயார்'' என்றும் மதானி கூறினார்.