பயங்கரவாதிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பயங்கரவாதிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 11 மார்ச், 2012

14 ஆண்டுகள் சிறையில் சித்ரவதை... ஓர் அப்பாவி இளைஞரின் பரிதாபக் கதை


--மரியம் குமாரன்

நூறு குற்றவாளி தப்பித்தாலும் தவறில்லை, ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதுதான் நம்நாட்டு நீதி பரிபாலனத்தின் அடிப்படைக் கோட்பாடாகும். ஆயிரக்கணக்கான குற்றவாளிகள் தப்பிப்பது நம் நாட்டில் சாதாரண நிகழ்வு. அதேபோல ஆயிரக்கணக்கான அப்பாவிகள் கொடுமையாக தண்டிக்கப்படுவதும் இயல்பாகி விட்டது. தப்பிக்கின்ற ஆயிரக்கணக்கான குற்றவாளிகள் முஸ்லிம் அல்லாதவர்களாகவும், சிக்கிக்கொண்டு சிறைகளில் சீரழிக்கப்படுகிற ஆயிரக்கணக்கான அப்பாவிகள் முஸ்லிம்களாக இருப்பதும்தான் இதில் குறிப்பிடத்தக்கது.

டெல்லி குண்டுவெடிப்பில் 16 வயதில் கைது செய்யப்பட்டு 29 வயதில் ‘குற்றமற்றவர்’ என்று விடுதலை செய்யப்பட்டவர், 400 ரூபாய் திருட்டு வழக்கில் 8 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டவர் என ஏராள முஸ்லிம்களின் வரிசையில் முஹம்மது அமீர்கான் என்ற இளைஞரும் சேருகிறார். இந்திராணி பாசு, பிப்.11,2012 தேதியிட்ட டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டில் இவரைப் பற்றி எழுதியிருந்ததைப் படித்தபோது கண்கள் பனித்தன. ஆயிரக்கணக்கில் இதுபோன்ற அநியாயங்கள் நடக்கும் நாட்டில் இலட்சக்கணக்கான ஏன் கோடிக்கணக்கான மக்கள் மௌனம் காக்கும் கொடுமையை எண்ணும்போது, அழுகை ஆத்திரமாகியது.

1998ஆம் ஆண்டு பிப்.20ம் நாள் தலைநகர் டெல்லியில் இரவு சுமார் 10 மணியளவில், முஹம்மது அமீர்கான் என்ற 18 வயது இளைஞன், சிறுநீரகக் கல்லின் சித்ரவதை தாங்க முடியாமல், பகதூர்கரில் உள்ள யுனானி மருத்துவர் வீட்டிற்குப் போய்க் கொண்டிருக்கிறார். நடக்கப்போகிற பயங்கரங்கள் எதுவும் தெரியாமல், வலியில் துடித்தபடி வழியில் போகிறார் அந்த இளைஞர். ஒரு வெள்ளைநிற மாருதி ஜிப்சி அவர் அருகே வந்து நிற்கிறது. அதில் வந்தவர்கள் இவரை உள்ளே இழுத்துப் போடுகிறார்கள். வாகனம் சீறிக் கிளம்புகிறது. சாதாரண பெட்டிக் கடைக்காரரின் மகனை, பெரிய பணக்காரரின் மகன் என்று தவறாகக் கருதி கடத்துகிறார்களோ என்று சந்தேகம் வந்தது அமீர்கானுக்கு. கடத்திச் செல்பவர்களோ, சீருடைய அணியாத காவலர்கள். மறைவிடத்தில் உள்ள ஒரு சித்ரவதைக் கூடத்திற்கு அழைத்துச் செல்கின்றனர்.

பிறகு நடந்ததை அமீர்கான் சொல்கிறார்: ‘‘அந்த இடமே பயங்கரமாக இருந்தது. பேசினால் எதிரொலி கேட்டது. அங்கே வைத்து அவர்கள் என் ஆடைகளை முழுவதும் களைந்தார்கள். நேர்கோட்டில் என் இரு கால்களையும் அகலமாய் விரித்தார்கள். சிறுநீரக் கல்லால் சித்ரவதைப்பட்ட எனக்கு இந்தக் கூடுதல் சித்ரவதைக் கொடூரமாக இருந்தது. காலை உச்சகட்ட அகலத்திற்கு விரித்து, விலங்குகளை மாட்டி மீண்டும் சேர்க்க முடியாமல் செய்தார்கள். என் ஆணுறுப்பில் பெட்ரோலை ஊற்றினார்கள். தாறுமாறாக பிரம்பால் அடித்தார்கள். சோப்புத் தண்ணீரைக் குடிக்க வைத்தார்கள். ஆணுறுப்பில் மின்சாரம் பாய்ச்சினார்கள். மயங்கி விழுந்தேன். உடம்பின் மீது மிகக்கனமான இரும்பு உருளைகளை உருட்டி நசுக்கினார்கள். பலமணி நேரம் இந்த சித்ரவதை தொடர்ச்சியாக நடந்தது. கடைசியாக சில வெற்றுக் காகிதங்களில் கையெழுத்து வாங்கினார்கள். என்னுடைய உடைமைகளைப் பறிமுதல் செய்தார்கள். ஒருவாரம் நடந்த இந்தக் கொடுமையான சித்ரவதையில் நான் இளமையை முழுமையாக இழந்தேன்.

பிப்.20 முதல் என்னை அடைத்து வைத்துச் சித்ரவதை செய்த காவல்துறை, பிப்.27, 1998 அன்றுதான் என்னைக் கைது செய்ததாக அறிவித்தார்கள். 1996 முதல் 1997 வரை நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளுக்கு நான்தான் மூளையாக செயல்பட்டவன் என்று குற்றஞ்சாட்டி, 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.’’ 14 நீண்ட ஆண்டுகள் சிறையில் முஹம்மது அமீர்கான் வதைக்கப்பட்டார். 2012 ஜனவரி மாதம், 17 வழக்குகளிலிருந்து முஹம்மது அமீர்கான், ‘குற்றமற்றவர்’ என்று நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார். அமீர்கான் கைது செய்யப்பட்டதை மறுநாள் பத்திரிகை வாயிலாகத் தெரிந்துகொண்ட அவரது எளிய குடும்பம் அனலில் புழுவாய்த் துடித்துள்ளது. பெட்டிக் கடை வைத்து ஜீவனம் நடத்திக் கொண்டிருந்த அவரது வயதான தந்தை, தோள் கொடுக்க வேண்டிய ஒரே மகனை சட்டத்தின் சூதாட்டம் சிறையில் அடைத்து விட்டதையும், விடுதலைக்கான் வெளிச்சக்கீற்றே இல்லாததையும் அறிந்து, அதிர்ச்சியிலேயே இறந்துவிட்டார்.

பெட்டிக் கடையையும், இருந்த நகைகளையும், வீட்டின் தட்டுமுட்டுச் சாமான்களையும் விற்று, ஒரு குடும்பமும் ஜீவனம் நடத்தியது. “என்னை மீட்க விதவையான என் பாமரத் தாய் பெரும் பாடுபட்டார். நீதிமன்ற வளாகத்தில் 2007ம் ஆண்டு நான் போலீஸ் வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த போது, கொட்டும் மழையில் நனைந்து கொண்டே என் தாய் வந்ததையும், அங்கே அவர் அலைக்கழிக்கப்பட்டதையும் பார்த்தபோது, இதைப் பார்ப்பதற்கு பதிலாக இறந்துவிடலாமே என்று தோன்றியது. என்னைப் பழைய டெல்லி ரயில் நிலையம் அருகே கைது செய்ததாகவும், அப்போது பயங்கர வெடிகுண்டுகளையும், ஆயுதம் செய்யும் கருவிகளையும், பள்ளிக்கூட நன்னடத்தைச் சான்றிதழையும் வைத்திருந்ததாக கதைவசனம் எழுதி இருந்தார்கள். இதனால் என்னை எல்லோரும் பயங்கரவாதியாகவே பார்த்தனர். ஒரு பயங்கரவாதி, பள்ளிக்கூடத்தின் நன்னடத்தைச் சான்றிதழை சூட்கேசில் வைத்துக்கொண்டு சுற்றுவானா- என்று யாரும் யோசிக்கவில்லை.

ஒரு ஹிந்தி பத்திரிகை, நான் பாகிஸ்தான்காரன் என்றும், இந்தியாவை சீர்குலைக்க அனுப்பப்பட்டவன் என்றும் எழுதிவிட்டது. எனவே எனக்குச் சரியான வழக்குரைஞர் கூட கிடைக்கவில்லை. எனது வழக்கை ஏற்று நடத்தவே எல்லோரும் அஞ்சினார்கள். இந்நிலையில், எனது நிலையை அறிந்து இரக்கப்பட்டு, மனிதஉரிமை ஆர்வலரும் வழக்குரைஞருமான என்.டி.பஞ்சோலி, எனது வழக்கை எடுத்து நடத்தினார். அவரது சட்டப் போராட்டம் அப்பாவியான என்னை 17 வழக்குகளிலிருந்து விடுவித்துள்ளது. மீதி இரு வழக்குகளிலிருந்தும் விரைவில் விடுதலைக் கிடைத்துவிடும் என்று நம்புகிறேன்.

எனது விதவைத் தாய் நடத்திய சட்டப் போராட்டத்தில் மனரீதியாக அவர்பட்ட சித்ரவதைகள் கொஞ்சமல்ல. மன உளைச்சலாலே அவர் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார். மூளையிலும் அவருக்கு பாதிப்பு ஏற்பட்டுவிட்டது. நான் செய்த குற்றம் என்ன? முஸ்லிமாகப் பிறந்ததுதான் என் குற்றமா?’’ என்கிறார் முஹம்மது அமீர்கான். தீர்ப்புரையில் நீதிபதி, காவல்துறையைக் கடுமையாகக் கண்டித்திருந்தனர். மிக பயங்கரமான குற்றச்சாட்டுகளை முஹம்மது அமீர்கான் மீது சுமத்திய காவல்துறை, எதையும் நிரூபிக்கவில்லை. 18 வயதில் சிறையில் அடைக்கப்பட்ட அமீர் 32 வயதில் விடுதலை செய்யப்படுகிறார். வாழ்வின் பொன்னான தருணங்களை யாரால் திருப்பித்தர முடியும். எனவே அமீர்கானுக்கு அரசு நஷ்டஈடு தரவேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. ஓர் அப்பாவி இளைஞன் மீது அபாண்டம் சுமத்தி, சிறையில் அடைத்து, சித்ரவதை செய்து, அவன் குடும்பத்தை சீரழித்ததுதான் அந்தக் காவல்துறை சட்டம்ஒழுங்கைக் காக்கும் லட்சணம்.

டிசம்பர் 1996 முதல் அக்டோபர் 1997 வரை நடந்த குண்டுவெடிப்புகள் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் அமீர்கான் என்ற அப்பாவியைப் பலிகொடுத்து விட்டார்கள். அதேசமயம், அந்தக் குற்றங்களைச் செய்த உண்மைக் குற்றவாளிகளையும் காவல்துறை தப்பவைத்துவிட்டது.

இப்போது சிந்தித்துப் பாருங்கள். உண்மையான பயங்கரவாதிகள் யார்? என்று. மீண்டும் சிந்தித்துப் பாருங்கள். அநீதிகளுக்கு எதிராக மௌனம் காப்பது சரிதானா-? என்று.

சனி, 25 செப்டம்பர், 2010

டெல்லி ஜூம்மா மசூதி தாக்குதல் தொடர்பான இ-மெயில் நார்வே நாட்டு 'சர்வர்' மூலம் அனுப்பப்பட்டுள்ளது: ப.சிதம்பரம்

புதுடெல்லி,செப்.25:டெல்லி ஜும்மா மசூதி அருகே பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை அடுத்து அனுப்பப்பட்ட மிரட்டல் இ-மெயில் நார்வே நாட்டு சர்வர் மூலம் வந்துள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சிக்கு வெள்ளிக்கிழமை பேட்டியளித்த அவர் இது குறித்து மேலும் கூறியுள்ளது:

இந்திய முஜாகிதீன் என்ற அமைப்பின் பெயரில் அனுப்பப்பட்ட மிரட்டல் இ-மெயில் ஜிபிஎஸ் வசதியுள்ள செல்போனிலிருந்து அனுப்பப்பட்டுள்ளது. இந்த மெயில் நார்வே நாட்டு சர்வர் மூலம் வந்துள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.

தாக்குதல் நடந்து சில மணி நேரத்துக்குப் பின் வந்த இந்த இ-மெயிலுக்கும் தாக்குதல் சம்பவத்துக்கும் நேரடித் தொடர்பு இல்லை என்றே தெரிகிறது என்று சிதம்பரம் கூறியுள்ளார்.

திங்கள், 20 செப்டம்பர், 2010

மத்தியபிரதேசில் 10 ஆயிரம் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் தேர்வு: அதிர்ச்சித் தகவல்

புதுடெல்லி,செப்.19:பாப்ரி மஸ்ஜித் நிலம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு வெளிவரவிருக்கும் சூழலில் இந்தியாவில் அமைதியை விரும்பும் ஒவ்வொரு குடிமகனும் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்காகவும் பிரார்த்திக் கொண்டிருக்கும் வேளையில் ராஜேஷ் பிட்கார் என்பவர் இந்தியாவை ஹிந்து தேசமாக மாற்ற 10 ஆயிரம் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளை தேர்வுச் செய்துவருகிறார் என்ற அதிர்ச்சித்தகவல் கிடைத்துள்ளது.

இந்த பயங்கரவாதிகளின் தேர்வுக்குப் பெயர் ஹிந்து யோத்யா பாரதி அபியான் என்று பெயராம்.

இதில் அதிர்ச்சித்தரும் தகவல் என்னவெனில், இந்த பயங்கரவாதிகளின் நேர்முக தேர்வு நான்கு சுவற்றிற்குள் ரகசியமாக நடைபெறவில்லை என்பதுதான்.
ஆம்!, வெட்ட வெளிச்சமாக இந்த தேர்வு நடந்துவருகிறது. இந்த ஹிந்து யோத்யா பாரதி அபியானுக்கு தலைமை வகிக்கும் ராஜேஷ் பிட்கார் என்பவரும், அதன் வழிகாட்டிகளில் ஒருவரான தாமோதர் சிங் ஜி ஜாதவ் என்பவரும் வெளிப்படையாகவே பொதுமக்களுக்கு பயங்கரவாத நேர்முகதேர்வுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

இவர்களை பயங்கரவாத நேர்முகத்தேர்வுக்கு அழைப்பு விடுக்கும் சுவரொட்டிகள் மத்தியபிரதேச மாநிலம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளன.

இதனை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக டெல்லியைச் சார்ந்த சுதந்திர பத்திரிகையாளரான விஜய் பிரதாப் ஒரு தகவலை தெரிவிக்கிறார். கடந்த 16-ஆம் தேதி பயங்கரவாத தேர்வை நடத்தும் ராஜேஷ் பிட்கார் விஜய் பிரதாபை அழைத்துள்ளார். இவருடனான கலந்துரையாடலின் பொழுது, பயங்கரவாதிகளின் தேர்வை ஒப்புக்கொண்ட ராஜேஷ் பிட்கார் தங்களின் நோக்கம் ஹிந்துராஷ்ட்ரம் உருவாக்குவதுதான் என்பதையும் தெரிவித்துள்ளார்.

"இந்த இயக்கம் இளைஞர்களின் இயக்கம். இது தீவிர சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டு ஹிந்து ராஷ்ட்ரத்தை உருவாக்கும் நோக்கத்துடன் செயல்படும்." என்று கூறியுள்ளார் ராஜேஷ் பிட்கார்.

தங்களது இயக்கத்தின் பணிகளைக் குறித்து ராஜேஷ் பிட்கார் கூறுகையில், "நாங்கள் 10 ஆயிரம் பேரைக் கொண்ட தீவிரவாத இயக்கத்தை உருவாக்குகிறோம். நாங்கள் இதர இயக்கங்களைப் போன்று அல்ல." என்கிறார்.

பாப்ரி மஸ்ஜித் நிலம் தொடர்பான வழக்கின் தீர்ப்புக் குறித்து கூறுகையில், "இது தேசத்தின் பெருமை சார்ந்த ஒன்று. எங்கள் இயக்கம் இவ்விஷயத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பணியை ஆற்றும்" என்கிறார்.

தற்பொழுது நமது கேள்வி என்னவெனில் மத்திய-மாநில அரசுகள் இத்தகைய பகிரங்கமாக செயல்படும் பயங்கரவாதிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மெளனம் சாதிப்பது ஏன்?
செய்தி:twocirlces.நெட் , மணற்கேணி டைம்ஸ்

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010

குண்டுவெடிப்பு சூத்திரதாரி சுனில் ஜோஷியை கொன்றது ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகளே - சுனில் ஜோஷி குடும்பத்தினர்

டெல்லி.ஆக,1:அஜ்மீர் மற்றும் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்புகளின் முக்கிய சூத்திரதாரியான ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத அமைப்பின் மூத்த பிரசாரக் சுனில் ஜோஷி, ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகளாலேயே கொல்லப்பட்டதாக ஜோஷியின் மாமா மதன் மோகன் மோடி தெரிவித்துள்ளார்.

பிஜேபி ஆளும் மத்திய பிரதேச அரசிடமிருந்து போலீசாருக்கு இவ்வழக்கை விசாரிப்பதற்கு தடை விதிகப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மத்தியபிரதேச போலீசார் ஒரு சரியான விசாரணையை மேற்கொண்டிருந்தால் இந்நேரம் குற்றவாளிகளை பிடித்திருக்க இயலும், ஆனால் அரசு தரப்பிலிருந்து இவ்விவகாரத்தில் போலீசாருக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டுவருவதாக மதன் தெரிவித்தார்.

அதேப்போல், போலீசாரும் இதை விசாரிப்பதிலிருந்து தங்களை தவிர்த்து கொண்டுள்ளதாக கூறியுள்ள அவர், சம்பவ தினத்தன்று ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததையடுத்து ஜோஷி அவசர அவசரமாக வீட்டைவிட்டு வெளியேறினார். கொலைக்கு பிறகு அவருடன் எப்போதும் இருக்கும் அவரின் ஆர்.எஸ்.எஸ். நண்பர்களும் தலைமறைவாகிவிட்டனர்.

சுனிலின் இரண்டு சிம்கார்டுகளையும் ட்ரேஸ் செய்ய முடியவில்லை என்று கூறிய மதன், ஜோஷி எங்கு சுடப்பட்டான், எதற்காக சுடப்பட்டான் என்பது கூட தங்களுக்குத் தெரியாது என்றார்.

தொலைபேசி அழைப்பு வந்தபொழுது (29,டிசம்பர்'07) சுனில் ஜோஷி தன் தாய் வீட்டில் இருந்துள்ளான். அவ்வழைப்பின் போது மர்ம நபர்களுடன் சுனில் வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளான்.

தன் வாகனம் செயல்படாததை தொடர்ந்து, 2 கி.மீ. உள்ள தன் வீட்டிற்கு நடந்தே சென்றுள்ளான் சுனில். அவன் செல்லும் பாதையை அறிந்திருந்த மர்ம நபர்கள், ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் சுனில் சென்று கொண்டிருக்கும் போது அவனை சுட்டுக் கொன்றுள்ளனர்.

முதல் கட்ட விசாரணையின் படி, அம்மர்ம நபர்கள் ஒரு மாருதி காரிலும், ஒரு இரு சக்கர வாகனத்திலும் வந்துள்ளதாக தெரிவந்துள்ளது.

சுனில் தன் வீட்டிலிருந்து 1 கி.மீ. தொலைவில் சென்று கொண்டிருக்கும் போது, அவனை சுட்டுக்கொன்றுள்ள மர்ம நபர்கள், அவனின் 3 சிம்கார்டுகளில் இரண்டை பறித்தும் சென்றுள்ளனர்.

கொலை நடந்த சில நிமிடங்களிலேயே சுனிலுடன் தங்கியிருந்த நான்கு ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகளும் தலைமறைவாகி விட்டனர்.அவர்கள் பெயர்கள் உட்பட எதுவும் இதுவரை தெரியவரவில்லை.

ஆம்,போலீசாரும் இவ்வற்றை கண்டுபிடிப்பதற்கு அக்கறையும் காட்டவில்லை. இக்கொலையில் துப்பு துலங்குவதிலிருந்து மத்திய பிரதேச போலீசார் முற்றிலுமாக தோல்வி அடைந்துள்ளதாக தேவாஸ் நகர மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இவ்வழக்கு மூடப்பட்டுவிட்டது என்ற பதிலைத் தவிர போலீசாரிடம் வேறு பதிலில்லை. "நீதிமன்றம் இவ்வழக்கு மூடப்படவில்லை என்று கருதினால் கூட எங்களைப் பொறுத்த வரையில், இவ்வழக்கு முடிந்துவிட்டது." என்று இன்ஸ்பெக்டர் ஜெனரல் பாவன் ஜாய் தெரிவிக்கின்றார்.

Headlines today

வியாழன், 22 ஜூலை, 2010

துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியை கொலை செய்ய திட்டமிட்ட ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள்

புதுடெல்லி:சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பி.ஜே.பி. பயங்கரவாதிகள் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதாக புலனாய்வு செய்து ஆதாரங்களுடன் ஹெட்லைன்ஸ் டுடே என்ற செய்தி சேனல் செய்தி வெளியிட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த ஆர்.எஸ்.எஸ். குண்டர்கள் அச்செய்தி நிருவனத்தின் அலுவலகத்தை அடித்து நொறுக்கினர். இது ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத தலைவர்களின் நேரடி உத்தரவின் பேரில் நடந்த தாக்குதலாகும்.

'ஹெட்லைன்ஸ் டுடே' வெளியிட்ட ரகசிய வீடியோக் காட்சியில் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியை கொலை செய்ய பி.ஜே.பி தலைவர் பி.எல்.ஷர்மா திட்டமிட்டிருப்பது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டிருப்பதாக கூறி காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் விரிவான விசாரணை நடத்த வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளார்.

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெயந்தி நடராஜனும் இக்கோரிக்கையை ஆதரித்ததோடு இது இப்போதே கிள்ளியெறியப்படாவிட்டால் இவர்கள் தங்கள் செல்வாக்கின் மூலம் ஒட்டு மொத்த சமூகத்தையும் அரசியல் அமைப்பையும் அரசியல் சாசனத்தையும் சிதைத்து விடுவார்கள் என்றார்.

மேலும் மும்பை கலவரத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட ஹேமந்த் கர்கரே முதலில் இத்தொடர்புகளை கண்டுபிடித்த போது அவரின் தேசப்பற்றை கேள்விகுறியாக்கியது ஆர்.எஸ்.எஸ். என்பதையும் நினைவுபடுத்தினார்.

ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கம் பல தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டமைக்காக இந்திய அரசால் மூன்று முறை தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
inneram

சனி, 17 ஜூலை, 2010

மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பில் ஆர்.எஸ்.எஸ்.ன் தலைவருடனான தொடர்பை வெளியிட்ட தொலைக்காட்சி அலுவலகங்கள் மீது தாக்குதல்

டெல்லி:ஹெட்லைன்ஸ் டுடே மற்றும் ஆஜ் தக் தொலைகாட்சி அலுவலகம் மீது டெல்லியில் சுமார் 300க்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பில் ஆர்.எஸ்.எஸ். தலைவருக்கு இருக்கும் தொடர்பை ரகசிய காமிரா மூலம் படம் பிடித்து, ஆஜ் தக் மற்றும் என்.டி டிவி அலைவரிசைகள் வெளியிட்டிருந்தது.

இதனால் ஆவேசம் கொண்ட ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் இத்தொலைகாட்சி அலுவலகங்கள் மீது தாக்குதல் தொடுத்தனர்.

டெல்லியில் ஆர்.எஸ்.எஸ். தலைமையகம் அருகே அமைந்துள்ள ஹெட்லைன்ஸ் டுடே தொலைகாட்சி அலுவலகம் மீது தாக்குதல் தொடுப்பதற்காக எஸ்.எம்.எஸ் மூலம் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இச்செய்தி கிடைத்த உடனேயே தொலைகாட்சி அலுவலகத்தினர் காவல்துறைக்குத் தகவல் கொடுத்து பாதுகாப்பு கோரியிருந்தனர்.

இருப்பினும் எஸ்.எம்.எஸ் கிடைத்து ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தில் ஒன்று கூடிய ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள், பக்கத்திலுள்ள தொலைகாட்சி அலுவலகம் மீது தாக்குதல் தொடுக்க ஆரம்பித்த போது அங்கு வெறும் 5 காவலர்களே பாதுகாப்புக்கு இருந்தனர்.

சுமார் 300க்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள், தொலைகாட்சி அலுவலகத்தை அடித்துத் தகர்த்தனர்.

நேரடியாக ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்திலிருந்தே இத்தாக்குதலுக்குத் தொண்டர்கள் திரட்டப்பட்டு, குண்டுவெடிப்புகளின் பின்னணியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதப் பின்னணியை வெளியிட்ட தொலைகாட்சி அலுவலகம் மீது தொடுக்கப்பட்ட இந்தத் தாக்குதல், பத்திரிக்கை சுதந்திரத்திற்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். நடத்திய அத்துமீறல் என பத்திரிக்கை உலகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.