இந்து பயங்கரவாதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்து பயங்கரவாதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 11 டிசம்பர், 2010

மாலேகான் குண்டு வெடிப்பு: 'உயிருக்கு ஆபத்து இருப்பதாக அஞ்சினார் ஹேமந்த் கர்கரே'-திக்விஜய் சிங்!

டெல்லி: மாலேகான் குண்டு வெடிப்பில் வழக்கில் பெண் சாமியார் பிரக்யா உள்பட முக்கிய குற்றவாளிகளை கைது செய்ததில் இருந்தே தனது உயிருக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வந்து கொண்டிருப்பதாகவும், தான் எப்போதும் உயிர் பயத்துடனேயே வாழ வேண்டிய நிலையி்ல் இருப்பதாகவும் மும்பை தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரி ஹேமந்த் கர்கரே தன்னிடம் தெரிவித்ததாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் கூறியுள்ளார்.

கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் கொல்லப்படுவதற்கு, இரண்டு மணி நேரத்துக்கு முன், தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கர்கரே இவ்வாறு கூறியதாக திக்விஜய் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநில தீவிரவாதத் தடுப்புப் பிரிவின் தலைவராக இருந்த கர்கரே மாலேகாவ்ன் நகரில் நடந்த குண்டுவெடிப்பை விசாரித்து அதில் தொடர்புடைய பெண் சாமியார் பிரக்யா சிங் தாக்கூர், ராணுவ அதிகாரி லெப்டினென்ட் கர்னல் பிரசாத் உள்ளிட்ட 11 பேரை கைது செய்தார்.

இந்த வழக்குக்குத் தேவையான பல முக்கிய ஆதாரங்களை கர்கரே தலைமையிலான குழு மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் தேடி சேகரித்து வழக்கை உறுதிப்படுத்தியது. ஆனால், வழக்கு மிக முக்கிய கட்டத்தை எட்டிய நிலையில் மும்பையில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலில் கர்கரே சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவரது மறைவுக்குப் பின் இந்த வழக்கில் தொய்வு ஏற்படத் தொடங்கியது. தற்போது கைது செய்யப்பட்ட அத்தனை பேரும் சாதாரண குற்றவாளிகள் நிலைக்கு மாறி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் மாலேகாவ்ன் குண்டு வெடிப்பில் வழக்கில் முக்கிய குற்றவாளிகளை கைது செய்ததில் இருந்தே தனது உயிருக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வந்து கொண்டிருப்பதாகவும், தான் எப்போதும் உயிர் பயத்துடனேயே வாழ வேண்டிய நிலையி்ல் இருப்பதாகவும் கர்கரே தன்னிடம் தெரிவித்ததாக திக்விஜய் சிங் இப்போது தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி இரவு 7 மணிக்கு கர்கரே என்னை எனது மொபைல் போனில் தொடர்பு கொண்டு கவலையுடன் பேசினார். அப்போது பேசிய கர்கரே, மாலேகாவ்ன் குண்டு வெடிப்பில் வழக்கில் முக்கிய குற்றவாளிகளை கைது செய்ததில் இருந்தே எனக்கும் எனது குடும்பத்தினரின் உயிருக்கும் தொடர்ந்து மிரட்டல்கள் வந்து கொண்டுள்ளன. நானும் என் குடும்பத்தினரும் எப்போதும் உயிர் பயத்துடனேயே வாழ வேண்டிய நிலையி்ல் உள்ளோம். மலேகாவ்ன் வழக்கு தொடர்பான விசாரணைகளை எதிர்க்கும் தரப்பினரிடமிருந்து எனக்கு மிரட்டல் வருகிறது என்றார்.

மேலும் இந்த வழக்கில் அவரது விசாரணை குறித்தும் நேர்மை குறித்தும் பாஜக தலைவர்கள் கேள்வி எழுப்பியதால் கர்கரே மிகவும மணம் புண்பட்டுப் போயிருந்தார். இதை அவரது குரலை வைத்தே என்னால் உணர முடிந்தது.

அவ்வாறு பேசிய அடுத்த இரண்டு மணி நேரத்திலேயே மும்பை தாக்குதலில் கர்கரே கொல்லப்பட்டுவிட்டார்.

இவ்வாறு திக்விஜய் சிங் கூறியுள்ளார்.

மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துகின்றனர் என்ற தகவல் வந்தவுடன் இரவு வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த கர்கரே, அப்படியே அதை விட்டுவிட்டு ஸ்பாட்டுக்கு ஓடினார். காமா மருத்துவமனைப் பகுதியில் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த தீவிரவாதிகளை எதிர்கொள்ள உள்ளே புகுந்த அவரது நெஞ்சில் தீவிரவாதிகளின் குண்டுகள் பாயந்தன. அதில் அந்த இடத்திலேயே அவர் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊழல்களை திசை திருப்ப காங். முயற்சி-பாஜக கண்டனம்:

திக்விஜய் சி்ங்கின் கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அவரது பேச்சு துரதிஷ்டவசமானது என்று பாஜக கூறியுள்ளது.

ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த் உள்பட பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள காங்கிரஸ் கூட்டணி அரசு அதை திசை திருப்பும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதி தான் திக்விஜய் சிங்கின் இந்தப் பேச்சு என்று பாஜக செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.

அந்துலேவைத் தொடர்ந்து திக்விஜய்:

மும்பை தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் மகாராஷ்டிர தீவிரவாதத் தடுப்புப் பிரிவுத் தலைவர் ஹேமந்த் கர்கரே கொல்லப்பட்ட விதம் பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாகவும் அவர் உண்மையிலேயே தீவிரவாதிகளால்தான் கொல்லப்பட்டாரா அல்லது அவரது மரணத்துக்கு வேறு ஏதும் காரணமா என்று எனக்குத் தெரியவில்லை என்றும், இந்த விஷயத்தில் உண்மை மறைக்கப்படுவதாக நான் உணர்கிறேன் என்றும் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக இருந்த ஏ.ஆர்.அந்துலே சந்தேகம் எழுப்பியதும், அதற்க பாஜக உள்பட பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததும் நினைவுகூறத்தக்கது.

அந்துலேவின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அவர் பதவி விலக நேர்ந்ததும் குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 3 ஆகஸ்ட், 2010

ஹிந்துத்துவ தீவிரவாதம்' என்ற சொல்லை தவிர்க்க வேண்டுமாம்! - பயங்கரவாத ஆர்எஸ்எஸ்

மும்பை,ஆக2:'ஹிந்துத்துவ பயங்கரவாதம்' என்ற சொல் பயன்படுத்தப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் பயங்கரவாத அமைப்பின் மூத்த தலைவர் எம்.ஜி.வைத்யா கூறியுள்ளார்.

மராத்தி மொழி பத்திரிகை ஒன்றில் வைத்யா எழுதியுள்ள கட்டுரையில் இதனை வலியுறுத்தியுள்ளார்.

'ஹிந்துத்துவ பயங்கரவாதம்' என்ற சொல்லைப் பயன்படுத்தி இந்து மதத்தின் மீது கறையை ஏற்படுத்தியுள்ளனர்.இந்தக் கறையைப் போக்க இந்து மதத் தலைவர்கள் முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

'ஹிந்து பயங்கரவாதம்' என்ற சொல்லை உருவாக்கி பிரசாரம் செய்து வருகின்றனர். இந்தச் சொல்லை உருவாக்கியது யார் என்று சரியாக சொல்ல முடியாது.

எனினும் இந்தச் சொல்லை உருவாக்கிய பெருமை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரையை சாரும் என்று ஒரு தரப்பினரும், காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவரான திக்விஜய் சிங்கையே சாரும் என்று மற்றொரு தரப்பினரும் கூறுகின்றனர்.

இந்து மதத்தை இழிவாகப் பேசி முஸ்லிம்களை திருப்திப்படுத்தி வாக்குகளை பெறும் நோக்கில்தான் இப்படியொரு வார்த்தையை உருவாக்கி தொடர்ந்து பிரசாரமும் செய்து வருகின்றனர்.

பயங்கரவாதத்துக்கும் மதத்துக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று முன்பு யார் பிரசாரம் செய்து வந்தார்களோ அவர்களே தற்போது பயங்கரவாதத்துக்கும் மதத்துக்கும் தொடர்பிருக்கிறது என்பதை நியாயப்படுத்தி பிரசாரத்தை தொடங்கியுள்ளனர்.

பயங்கரவாதத்துக்கு இஸ்லாம் மதத்துடன் மட்டும் தொடர்பில்லை, பிற மதங்களுடனும் தொடர்புண்டு என்ற ரீதியிலும் பிரசாரம் செய்து வருகின்றனர்.

வாக்கு வங்கியை மனதில் வைத்து இதுபோன்ற செயலில் ஈடுபடுவோரை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. இவர்களால் இந்து மதத்தின் மீது படிந்துள்ள கறையை போக்க ஹிந்து மதத் தலைவர்கள் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று அந்தக் கட்டுரையில் எம்.ஜி.வைத்யா கூறியுள்ளார்.

திங்கள், 2 ஆகஸ்ட், 2010

பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டதற்கு ஒருபோதும் மன்னிப்புக் கோர மாட்டேன்' - கல்யான் சிங்

லக்னோ,ஆக2:முன்னாள் உத்தரபிரதேச முதலமைச்சர் கல்யான் சிங் பிஜேபி யில் இணைவதாக செய்திகள் வந்துகொண்டிருக்கும் நிலையில், ஆட்சிக்காக பிஜேபி பல முக்கிய ஹிந்துத்துவா கொள்கைகளில் சமரசம் கொள்வதாகவும் ஆனால் பாபரி மஸ்ஜித் இடிப்பிற்கு தான் ஒரு போதும் மன்னிப்பு கோர மாட்டேன் என்பதாக கல்யான் சிங் தெரிவித்துள்ளார்.

ஜன கிராந்தி கட்சியின் முதல் தேசிய பொதுக்கூட்டத்தில் தலைமை தாங்கி பேசிய அவர்,"எப்படி பிஜேபி இனவாத கட்சி என்று கருதப்படுகிறதோ, அதேபோல் தான் காங்கிரஸ், சமாஜ்வாதி ஆகி கட்சிகளும் இனவாத கட்சிகள்" என்று கூறினார்.

ராமர் கோவில்,பொது சிவில் சட்டம்(பிரிவு 370) ஆகிய முக்கிய ஹிந்துத்துவா கொள்கைகளில் பதவிக்காக பிஜேபி சமரசம் செய்துள்ளதாக கூறியுள்ளார்.

மேலும்,"புதிதாக துவக்கப்பட்டுள்ள எங்கள் கட்சியின் பெயரை சீர்குலைப்பதற்காக சதி நடைபெறுகிறது' என்றும் அவர் விமர்சித்தார்.

முஸ்லிம்களிடம் முலாயம் சிங் மன்னிப்பு கேட்டதை கடுமையாக சாடிய அவர், இதன் மூலம் அவர் ஹிந்துக்களை புண்படுத்தி விட்டார், ஆகவே ஹிந்துக்களின் மனதை புண்படுத்தியதற்காக ஹிந்துக்களிடமும் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.

ராம பக்தர்களின் மீது தாக்குதல் நடத்தியதற்காக வரலாறு அவரை சபிக்கும் என்று உரத்துக் கூறிய கல்யான் சிங், தானோ பாபரி மஸ்ஜித் இடிப்பதற்கு பாடுபட்டதாக தெரிவித்தார்.

"எங்களுக்கு முஸ்லிம்களின் ஓட்டுக்களும் தேவைத்தான், ஆனால் அதற்கு நான் ஒரு போதும் ஹிந்துத்தவ கொள்கைகளில் சமரசம் மேற்கொள்ளமாட்டேன்." என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010

சொரபுதீனைக் கொன்ற அமித்ஷா கைது! மோடி கைது எப்போது?

அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி போலி மோதல் சாவு என்ற பெயரில் சொரபுதீன் ஷேக், அவர் மனைவி கௌசர் பீவி, அவரது நண்பர் துள்சி பிரஜாபதி ஆகியோரைக் கொன்று பின்னர் சிபிஐ&ன் கிடுக்குப்பிடியில் மாட்டிய மோடியின் வலதுகரம் என கருதப்படும் குஜராத்தின் உள்துறை அமைச்சராய் இருந்த வரான அமித்ஷாவை கைது செய்ய சிபிஐ பிடிஆணை வழங்கியும் தப்பி ஓடிய அமித்ஷா வெளிநாட்டுக்கு தப்பி ஓட முயற்சி செய்தார். விமானநிலையங்களில் கடுமையான கண்காணிப்பை தீவிரப்படுத்திய சிபிஐ&ன் பிடி இறுகுவதைக் கண்டு அஞ்சிய அமித்ஷா சரண் அடைந்தார். ஞாயிறு அன்று சமர்மதி சிறைச் சாலைக்கு 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.


சபர்மதி சிறையில் காந்தியார் இருந்த சிறை அறையில் அமித் ஷா அடைக்கப்பட்டது பெரும் கொடுமை.

சொரபுதீன், கௌசர் பீவி கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட 15 காவல் துறை அதிகாரிகளும் சபர்மதி சிறையில்தான் அடைக்கப்பட்டுள் ளனர். ஆனால் அவர்களோடு அமித் ஷா சந்திக்க முடியாதபடி உத்தரவிடப்பட்டுள்ளது.

சொரபுதீனை போலி எண்கவுண்டர் செய்து கருணையற்ற கொலை காரராக இருந்த அமித் ஷா விவகாரத்தில் காங்கிரஸுக்கு உள்நோக்கம் கற்பித்த பாஜக அரசியல் அரங்கில் தனிமைப் படுத்தப் பட்டு நிற்கிறது. அப்பாவி ஒருவன் முதலமைச்சரையே கொலை செய்ய வந்ததாக அபாண்டமாகக் கூறி 46 ஏகே. 47 ரக துப்பாக்கிகளை கைப்பற்றியதாகவும் ஒரு லட்சம் வெடிகுண்டுகளை சொரபுத்தீனி டம் இருந்து கைப்பற்றியதாக வளமாக கதை பரப்பியதன் விளைவாக இந்தியா முழுவதும் நிகழ்ந்த பதினேழு ஆயிரம் எண்கவுண்டர்களில் பெரும்பாலானவை போலி எண்கவுண்டர்கள் என்ற உண்மை வெளிவந்த போது அந்த செய்தியில் கவனம் செலுத் தாதவர்களைக் கூட அக்கறைக் கொள்ள வைத்தது என்பது குறிப் பிடத்தக்கது.

அமித் ஷா மட்டும் பிடிபட் டிருக்கிறார். இவரை இயக்கிய மோடி மீது எப்போது சட்டம் பாயும்? என்ற கேள்வி இந்திய திருநாட்டில் உள்ள 120 கோடி மக்களின் உள்ளங்களிலும் எழத் தொடங்கியுள்ளது.

மோடியைக் காப்பாற்றுவதற் காக அமித் ஷா பலிகடாவாக்கப்பட் டுள்ளார் என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மனிஷ் திவாரி கூறியிருக்கிறார்.

அமித் ஷா மீதான கொலைக் குற்றச்சாட்டு பரவலாக பேசப்ப டுகிறது. அவர் மீது எந்த வகையான நடவடிக்கை எடுக்கப்படும் அதில் கண்டிப்பு காட்டப்பட்டு நடவடிக் கை எடுக்கப்படுமா? என்ற கேள்வி நாட்டு மக்களின் மனதில் எழுகிறது. ஏனெனில் மாலேகான், அஜ்மீர், ஹைதராபாத் மக்கா மஸ்ஜித், சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் மீதான நடவடிக்கை, பாபரி மஸ்ஜித் இடிப்புக்குத் துணை போன, லிபரான் ஆணையத்தால் குற்றம் சாட்டப்பட்ட 68 குற்றவாளிகள் மீதான நடவடிக்கைகளை என்னவாயிற்று? என்ற கேள் விகள் தொடர்ந்து எழுந்த நிலையில் இப்போது அமித் ஷா பிடிபட்டிருக்கிறான். அமித் ஷாவை இயக்கியவரும், 3000 பேரின் படுகொலைக்கு காரணமா னவருமான நரேந்திர மோடியும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டால் மட்டுமே இந்நாட்டில் நீதியின் ஆட்சி நிலைத்திருப்பதாக பொருள். என்ன செய்யப் போகிறது? நமது நீதித் துறை.

சதித்திட்டத்திற்கான அலைப்பேசி உரையாடல்களின் ஆதராங்கள்:

சொராபுதீன் படுகொலை சதித்திட்டம் தொடர்பாக முக்கியமான அலைப்பேசி உரையாடல்களின் விபரங்கள்

2006 டிசம்பர் 24-ஆம் தேதியிலிருந்து 30&ஆம் தேதிவரை உள்ள அலைப்பேசி உரையாடலின் விபரம்:]

ராஜ்குமார் பாண்டியன் 9427306077
வன்சரா 9427306294
தினேஷ் 9414159353
உள்துறைஅமைச்சர் 9824010090
விபுல் 9427305065


குண்டுவெடிப்பு சூத்திரதாரி சுனில் ஜோஷியை கொன்றது ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகளே - சுனில் ஜோஷி குடும்பத்தினர்

டெல்லி.ஆக,1:அஜ்மீர் மற்றும் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்புகளின் முக்கிய சூத்திரதாரியான ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத அமைப்பின் மூத்த பிரசாரக் சுனில் ஜோஷி, ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகளாலேயே கொல்லப்பட்டதாக ஜோஷியின் மாமா மதன் மோகன் மோடி தெரிவித்துள்ளார்.

பிஜேபி ஆளும் மத்திய பிரதேச அரசிடமிருந்து போலீசாருக்கு இவ்வழக்கை விசாரிப்பதற்கு தடை விதிகப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மத்தியபிரதேச போலீசார் ஒரு சரியான விசாரணையை மேற்கொண்டிருந்தால் இந்நேரம் குற்றவாளிகளை பிடித்திருக்க இயலும், ஆனால் அரசு தரப்பிலிருந்து இவ்விவகாரத்தில் போலீசாருக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டுவருவதாக மதன் தெரிவித்தார்.

அதேப்போல், போலீசாரும் இதை விசாரிப்பதிலிருந்து தங்களை தவிர்த்து கொண்டுள்ளதாக கூறியுள்ள அவர், சம்பவ தினத்தன்று ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததையடுத்து ஜோஷி அவசர அவசரமாக வீட்டைவிட்டு வெளியேறினார். கொலைக்கு பிறகு அவருடன் எப்போதும் இருக்கும் அவரின் ஆர்.எஸ்.எஸ். நண்பர்களும் தலைமறைவாகிவிட்டனர்.

சுனிலின் இரண்டு சிம்கார்டுகளையும் ட்ரேஸ் செய்ய முடியவில்லை என்று கூறிய மதன், ஜோஷி எங்கு சுடப்பட்டான், எதற்காக சுடப்பட்டான் என்பது கூட தங்களுக்குத் தெரியாது என்றார்.

தொலைபேசி அழைப்பு வந்தபொழுது (29,டிசம்பர்'07) சுனில் ஜோஷி தன் தாய் வீட்டில் இருந்துள்ளான். அவ்வழைப்பின் போது மர்ம நபர்களுடன் சுனில் வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளான்.

தன் வாகனம் செயல்படாததை தொடர்ந்து, 2 கி.மீ. உள்ள தன் வீட்டிற்கு நடந்தே சென்றுள்ளான் சுனில். அவன் செல்லும் பாதையை அறிந்திருந்த மர்ம நபர்கள், ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் சுனில் சென்று கொண்டிருக்கும் போது அவனை சுட்டுக் கொன்றுள்ளனர்.

முதல் கட்ட விசாரணையின் படி, அம்மர்ம நபர்கள் ஒரு மாருதி காரிலும், ஒரு இரு சக்கர வாகனத்திலும் வந்துள்ளதாக தெரிவந்துள்ளது.

சுனில் தன் வீட்டிலிருந்து 1 கி.மீ. தொலைவில் சென்று கொண்டிருக்கும் போது, அவனை சுட்டுக்கொன்றுள்ள மர்ம நபர்கள், அவனின் 3 சிம்கார்டுகளில் இரண்டை பறித்தும் சென்றுள்ளனர்.

கொலை நடந்த சில நிமிடங்களிலேயே சுனிலுடன் தங்கியிருந்த நான்கு ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகளும் தலைமறைவாகி விட்டனர்.அவர்கள் பெயர்கள் உட்பட எதுவும் இதுவரை தெரியவரவில்லை.

ஆம்,போலீசாரும் இவ்வற்றை கண்டுபிடிப்பதற்கு அக்கறையும் காட்டவில்லை. இக்கொலையில் துப்பு துலங்குவதிலிருந்து மத்திய பிரதேச போலீசார் முற்றிலுமாக தோல்வி அடைந்துள்ளதாக தேவாஸ் நகர மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இவ்வழக்கு மூடப்பட்டுவிட்டது என்ற பதிலைத் தவிர போலீசாரிடம் வேறு பதிலில்லை. "நீதிமன்றம் இவ்வழக்கு மூடப்படவில்லை என்று கருதினால் கூட எங்களைப் பொறுத்த வரையில், இவ்வழக்கு முடிந்துவிட்டது." என்று இன்ஸ்பெக்டர் ஜெனரல் பாவன் ஜாய் தெரிவிக்கின்றார்.

Headlines today

செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

குஜராத் முஸ்லிம்களை சிறைப்படுத்த ஒரு சட்டம்!








பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நிறைவேற்றியே தீருவது என வரிந்து கட்டி முட்டி மோதுகிறது மோடி அரசு. ஆனால் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்கிற பெயரில் சிறுபான்மையின மக்களை குறி வைக்கும் மோடி அரசின் உள்நோக்கத்தை புரிந்து கொண்ட மத்திய அரசு, அதற்கு கடிவாளம் போட முயற்சிக்கிறது. ஆயினும் தொடர்ந்து சண்டித்தனம் செய்து வருகிறது குஜராத்தின் மோடி அரசு.

2009 ஜூலை மாதம் 28ந் தேதி பயங்கரவாத தடுப்புச் சட்ட மசோதாவை குஜராத் சட்டமன்றத்தில் நிறைவேற்றிய மோடி அரசு அதனை மத்திய அரசின் பார்வைக்கு அனுப்பி வைத்தது. அதன் மூலம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற அது முயற்சித்தது.
இந்தச் சட்டத்தின் எல்லா அம்சங்களையும் அலசி ஆராய்ந்த மத்திய உள்துறை அமைச்சகம், குஜராத் அரசின் சட்ட மசோதவில் ஆட்சேபனை இருக்கிறது. அதனால் இந்தச் சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க வேண்டாம் என குடியரசு தலைவருக்கு பரிந்துரை செய்தது.

இன்னொரு புறம், இந்தச் சட்ட மசோதாவில் கூறப்பட்டுள்ள ஆட்சேபகரமான சட்டப் பிரிவுகளை குஜராத் அரசுக்கு சுட்டிக்காட்டி அந்த சட்டப்பிரிவுகளை நீக்கி புதிய மசோதா தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தியது.

அது என்ன ஆட்சேபகரமான இரண்டு பிரிவுகள்?
முதலாவது, போலிஸ் அதிகாரியின் முன்னிலையில் அளிக்கப்படும் வாக்கு மூலத்தை அப்படியே நீதிமன்றம் ஏற்றுக் கொள்வது என்பது.
அடுத்தது, குற்றஞ்சாட்டப்பட்டவர் தரப்பில் ஜாமீன் கோரி மனு செய்யும் பட்சத்தில், அரசு வழக்கறிஞர் ஜாமீன் வழங்கக் கூடாது என ஆட்சேபித்தால் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்பது!

இந்த இரு அமசங்களைத்தான் குஜராத் சட்ட மசோதாவிலிருந்து நீக்கம் செய்ய வேண்டும் என மத்திய அரசு கடந்த ஆண்டு வலியுறுத்தியிருந்தது. எந்தச் சட்டப்பிரிவுகளுக்காக ஒட்டு மொத்த பயங்கரவாத தடுப்புச் சட்ட மசோதா உருவாக்கப்பட்டதோ அந்த சட்டப் பிரிவுகளை மத்திய அரசு நீக்கச் சொல்கிறதே என அதிர்ச்சியடைந்த குஜராத் அரசு, அந்த இரண்டு பிரிவுகளையும் நீக்காமலே குடியரசு தலைவரின் ஒப்புதலைப் பெற்று விடத் துடியாகத் துடித்தது.

இதற்காக மத்திய அரசின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற பொருந்தாக் காரணத்தைக் கூறி மீண்டும் இந்த சட்ட மசோதாவை குடியரசுத் தலைவரின் பார்வைக்கு அனுப்பி வைத்தது குஜராத் அரசு. மஹாரஷ்டிராவில் தற்போது உள்ள அமைப்பு சார்ந்த குற்ற எதிர்ப்புச் சட்டத்தைப் போன்று தான் குஜராத் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமும் அதனால் இச்சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வியாக்கியானமும் செய்தது தான் அந்தப் பொருந்தாக் காரணம்!

ஆனால் சளைக்காத மத்திய உள்துறை அமைச்சகமோ, நரேந்திர மோடி தலைமையிலான குஜராத் அரசு, மத்திய அரசின் அறிவுறுத்தலை ஏற்க மறுத்து சட்ட மசோதாவை பழைய வடிவிலேயே அனுப்பியுள்ளது. இதனால் இச்சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க வேண்டாம் என குடியரசுத் தலைவரை மீண்டும் கேட்டுக் கொண்டுள்ளது.

தடா,பொடா போன்ற பயங்கரவாத தடுப்புச் சட்டங்கள் மனித உரிமை மீறலாக இருப்பதாகவும், இதனால் பயங்கரவாதம் ஒழியவில்லை என்பதையும் அனுபவப்பூர்வமாக உணர்ந்த மத்திய மாநில அரசுகள் அத்தகைய கறுப்புச் சட்டங்களை காலாவதியாக்கி விட்டன.
ஆனால் நரேந்திர மோடி அரசோ, கறுப்புச் சட்டத்தை கொண்டு வந்து சிறுபான்மை மக்களை மீண்டும் கருவறுக்கத் துடிக்கிறது. இந்தச் சட்டம் இல்லாத நிலையிலேயே குஜராத் முஸ்லிம்கள், அடுத்து என்ன நடக்குமோ என அச்சத்துடனே வாழ்ந்து வருகிறார்கள். 2002 குஜராத் முஸ்லிம் இனப் படுகொலையின் போது மோடி அரசின் காவல் துறையும், சட்டத் துறையைச் சேர்ந்த வழக்கறிஞர்களும், நீதிபதிகள் சிலரும் கூட முஸ்லிம்களுக்கு எதிராக எவ்வாறெல்லாம் பயன்படுத்தப்பட்டனர் என்பதை டெஹல்கா வார இதழ் வாக்கு மூலங்களாக வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், போலிஸ் அதிகாரி முன்பு தரப்படும் வாக்குமூலத்தை அப்படியே ஏற்க வேண்டும், அரசு வழக்கறிஞர் ஆட்சேபித்தால் ஜாமீன் வழங்கக் கூடாது என்பது போன்ற சட்டப் பிரிவுகளை இந்தச் சட்ட மசோதாவில் சேர்த்தே ஆக வேண்டும் என அடம்பிடிக்கும் மோடி அரசின் உள்நோக்கம் எதைக் காட்டுகிறது என்பது எல்லோருக்கும் விளங்கும்.

குஜராத் அரசின் பயங்கரவாத தடுப்பு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது என்று குடியரசுத் தலைவருக்கு மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கடிதம் எழுதியிருப்பதை தேச அமைதியை விரும்புவர்கள், சமூக அக்கறையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் வரவேற்கின்றனர்.சமயம் கிடைக்கும் போதெல்லாம் ப.சிதம்பரத்தின் மீது குற்றம் சாட்டுவதையே வழக்கமாகக் கொண்டிருக்கின்றன பிஜேபி உள்ளிட்ட இந்துத்துவா கட்சிகள்.
லிபரஹான் கமிஷன் அறிக்கை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே அறிக்கையில் சில பகுதிகள் பத்திரிகைகளில் கசிந்துவிட்ட விஷயத்தை தூக்கிப் பிடித்துக் கொண்டு மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பதவி விலக வேண்டும் என பிஜேபியினர் எம்பிக் குதித்தார்கள்.இவற்றையெல்லாம் குஜராத் அரசின் பயங்கரவாத தடுப்புச் சட்ட மசோதாவோடு முடிச்சுப் போட்டுப் பார்த்தால் பிஜேபியின் சூட்சுமம் புரிகிறது.

ப.சிதம்பரத்திற்கு பதிலாக வேறொருவர் மத்திய அமைச்சராக நியமிக்கப்படும் பட்சத்தில் இந்த சட்ட மசோதாவிற்கான ஒப்புதலை குஜராத் அரசு நிச்சயம் நிறைவேற்றிக் கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் காங்கிரஸ் கட்சியில் ஆர்.எஸ்.எஸ். சிந்தனை கொண்ட தலைவர்கள் மிகைத்தே இருக்கிறார்கள்.

இதை நாம் சொல்லவில்லை, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பொதுச் செயலாளர் மோகன் பகவத் சொல்கிறார்.

மூலம்: மக்கள் ரிப்போர்ட்

சனி, 13 பிப்ரவரி, 2010

ஸ்ரீராமசேனா தீவிரவாதிகள் கத்தியால் குத்தி பள்ளி இம்மாம் மற்றும் ஒருவர் பலத்த காயம்.


பெங்களூரில் வைத்து ஸ்ரீராமசேனா தலைவன் பிரமோத் முத்தலிக்கின் முகத்தில் இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் கறுப்பு சாயம் பூசியதைத் தொடர்ந்து மங்களூரில் வன்முறையில் ஈடுபட்டனர் ஸ்ரீராமா சேனா குண்டர்கள்.பண்டுவால் என்ற இடத்தில் சென்றுக்கொண்டிருந்த பஸ்ஸை தடுத்து நிறுத்தி அதில் பயணம் செய்த குத்ரோளி நடுவள்ளி என்ற இடத்திலிலுள்ள மஸ்ஜிதில் இமாமாக பணியாற்றும் உஸ்மான் ஃபைஸி(வயது 32), அவரது சகோதரர் முஹம்மது அஷ்ரஃப் ஃபைஸி(வயது 29) ஆகியோரை குத்திகாயப்படுத்தினர்.
காயமடைந்த இருவரும் மங்களூர் ஹைலேண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மஞ்சேஷ்வரம்,தலப்பாடி ஆகிய இடங்களில் போலீஸ் கடும் பாதுகாப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் சில இடங்களில் தீவைப்பும், வாகனங்களுக்கும் அலுவலகங்களுக்கும் நேராக கல்வீச்சும் நடைபெற்றது. இதற்கிடையே கருப்புச்சாயம் முத்தலிக்கின் முகத்தில் வீசியதைக் கண்டித்து மங்களூரில் ஸ்ரீராம சேனா அழைப்புவிடுத்த முழு அடைப்பினால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்பு ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சியின் அலுவலகங்களுக்கு எதிராகவும் கடைகளுக்கு எதிராகவும் கல்வீச்சு நடைபெற்றது.

காதலர் தினத்தையொட்டி ஒரு தனியார் சேனல் ஏற்பாடுச் செய்த விவாதத்தில் பிரமோத் முத்தலிக் கலந்துக் கொண்டிருக்கும் பொழுதுதான் இளைஞர் காங்கிரசார் முத்தலிக்கின் முகத்தில் கறுப்புச்சாயத்தை பூசினர். கடந்த ஆண்டு மங்களூரில் பொதுவிடுதிக்கு காதலர் தினத்துக்காக வந்த ஏராளமான பெண்களை ஸ்ரீராம சேனாவினர் தாக்கினர். இதைத் தொடர்ந்து முத்தலிக்கை போலீஸ் கைதுச்செய்திருந்தது.மேலும் மங்களூரில் 14 சர்ச்சுகள் தாக்கப்பட்டதின் பின்னணியிலும் பிரமோத் முத்தலிக் உள்ளார். இதனால் மங்களூரில் நுழைவதற்கு போலீஸ் பிரமோத் முத்தலிக்கிற்கு தடைவிதித்திருந்தது.

கடந்த ஆண்டு பிரமோத் முத்தலிக் கூறும்பொழுது, "காதலர் தினத்தை கொண்டாடும் காதலர்களை பிடித்து திருமணம் முடித்துக் கொடுப்போம்" என்றார். இதனால் கோபம் கொண்ட இளைஞர் காங்கிரசார் முத்தலிக்கின் முகத்தில் கறுப்புச்சாயம் பூசியுள்ளனர்.

செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்

முஸ்லிம் வழக்கறிஞர் ஷாஹித் அஸ்மி சுட்டு கொலை: கொன்றது ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகளா?


புதுடெல்லி:மாலேகான் மற்றும் மும்பை ரெயில் குண்டுவெடிப்புகளில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் வாடிவரும் ஏறத்தாழ 50 முஸ்லிம் இளைஞர்களுக்காக வாதாடிய எதிர்தரப்பு வழக்கறிஞர் ஷாஹித் ஆஸ்மி 11/02/2010 ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கபடுகிறது.

இச்சம்பவம் மும்பை குர்லா கிழக்கு பகுதியில் டாக்ஸிமேன் காலனியின் அருகில் அமைந்துள்ள அவருடைய சேம்பரில் வைத்து நடந்தது. 5 அடையாளம் தெரியாத நபர்கள் கிளையண்டுகள் என்றுக் கூறிக்கொண்டு அவருடைய சேம்பரில் நுழைந்து 5 ரவுண்டுகள் சுட்டதில் நிலைகுலைந்த ஆஸ்மியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபொழுது இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

32 வயதாகும் ஷாஹித் ஆஸ்மி மஹாராஷ்ட்ரா மாநிலம் ஜம்மியத்துல் உலமா சார்பாக மாலேகான் மற்றும் மும்பை ரெயில் குண்டுவெடிப்புகளில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் வாடும் கிட்டதட்ட 50 முஸ்லிம் இளைஞர்களுக்காக வாதாடிவரும் வழக்கறிஞராவார்.

ஆஸ்மியின் நெருங்கிய நண்பரான முஸ்லிம் அரசியல் கவுன்சிலின் தலைவர் டாக்டர் தஸ்லீம் ரஹ்மானி தெரிவிக்கையில், "ஆஸ்மி 16 வயதாக இருக்கும்பொழுது தடா ச்சட்டத்தில் கைதுச் செய்யப்பட்டு சிறைச் சென்றவர். பின்னர் அவர் குற்றமற்றவர் எனக்கூறி விடுதலைச் செய்யப்பட்டார். அவர் நெஞ்சுறுதியும், அறிவுத்திறனும், திறமையும், தாழ்மையும் கொண்டவர். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக குறைந்த கட்டணத்திலேயே வழக்குகளில் வாதாடுவார். இவரது கொலைக்குப்பின்னால் எவர்கள் நூற்றுக்கணக்கான அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை சதிச்செய்து தீவிரவாத வழக்குகளில் சம்பந்தப்படுத்தினார்களோ அவர்களாகத்தான் இருப்பார்கள்" என்றார்.

மலேகானைச் சார்ந்த உம்மித் டாட் காம் என்ற இணையதள இதழ் தெரிவிக்கையில், "ஷாஹித் ஆஸ்மி கடந்த 7/11 மற்றும் இதர தீவிரவாத வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்களின் வழக்குகளை கையாண்டபொழுதுதான் வெளியில் தெரியவந்தார். மஹாராஷ்ட்ரா மாநில அரசுக் கொண்டுவந்த MCOCA தீவிரவாத தடைச்சட்டத்திற்கு எதிரான ஜம்மியத்துல் உலமா சார்பாக ஆஸ்மி தாக்கல் செய்த மனு ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பிற்காக கிடப்பில் உள்ளது." என்று கூறுகிறது.

புதன், 10 பிப்ரவரி, 2010

பா.ஜ.க முன்னாள் எம்.எல்.ஏ வின் தாக்குதலில் காயமடைந்த வழக்கறிஞர் மரணம்

புதுடெல்லி:பா.ஜ.க வின் முன்னாள் எம்.எல்.ஏ வான விநோத் சர்மா கடந்த ஜனவரி 24 ஆம் தேதி போலீஸார் முன்னிலையில் வைத்து கம்பால் தலையில் அடித்ததில் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த பாட்லா ஹவுஸ் வழக்கில் எதிர் தரப்பு வழக்கறிஞராக பணியாற்றிவந்த ஆர்.கே.நஸீம் டெல்லி ஜானக்புரி மாதா சண்ணன் தேவி மருத்துவமனையில் வைத்து மரணமடைந்தார்.

சொத்துத் தகராறுத் தொடர்பாக உறவினரான ஆர்.கே.நஸீமை விநோத் சர்மா தாக்கியதாக கூறப்படுகிறது.கடந்த 29 ஆம் தேதி காவல்துறை சர்மாவை கைதுச்செய்தது. பாட்லா ஹவுஸ் வழக்கு மட்டுமல்லாமல் ஜெசிக்கா லால் கொலை வழக்கு, பிரியதர்ஷினிமட்டு கொலைவழக்கு ஆகியவற்றிலும் எதிர் தரப்பு வழக்கறிஞராக பணியாற்றியவர் நஸீம் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

புதன், 27 ஜனவரி, 2010

திருப்பூர் மாவட்ட த மு மு க மாவட்ட தலைவர் மீது போலீஸ் தாக்குதல்.

திருப்பூர்- ஜனவரி26 போலீஸ் ஸ்டேஷனில் தமுமுக மாவட்ட தலைவர் தாக்கப்பட்டதாக கூறி, திருப்பூர் தெற்கு போலீஸ் ஸ்டேஷனை தமுமுகவினர் நேற்று இரவு முற்றுகையிட்டு மறியல் செய்தனர். விடிய விடிய பதற்றம் நிலவியது.
திருப்பூர், கோம்பைத் தோட்டத்தைச் சேர்ந்தவர் முஹம்மது யூசுப்(வயது 42) . தமுமுக மாவட்ட தலைவரான இவர் மீது திருப்பூர் தெற்கு போலீஸ் ஸ்டேஷனில் புகார் பதிவு செய்யப்பட்டது. விசாரணைக்காக முஹம்மது யூசுப் நேற்று திருப்பூர் தெற்கு போலீஸ் ஸ்டேஷன் வரவழைக்கப்பட்டார்.
எந்த ஒரு விசாரணையும் இல்லாமல் இவரை ஏ.டி.எஸ்.பி முருகசாமி மற்றும் பெண் எஸ்.ஜ மல்லிகா ஆகியோர் இவரை கண்முடிதானமாக தாக்கினர்.அப்போது இவர் நான் தமுமுக மாவட்ட தலைவர் என்று கூறியுள்ளார். அதற்கு நீ எவனா இருந்தால் எனக்கு என்ன என்று முருகசாமி கூறியுள்ளார். பிறகு இவரை நிர்வாணப்படுத்தி தாக்க முயற்ச்சித்திருக்கிறர்கள் அதனால் இவர் கதறிகியிருக்கிறார். இவரை மீண்டும் மீண்டும் தாக்கியிருக்கிறார்கள். அப்போது யூசுப் "நான் இப்போது தான் தலையில் ஆபரேஷன் செய்து உள்ளேன். நான் என்ன தவறு செய்தேன் சொல்லுங்கள்". என்று கேட்டுள்ளார். ஆனாலும் இவரை விட்டு விடவில்லை.
பிறகு மாவட்ட தமுமுக, மாவட்ட மனித நேய மக்கள் கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் கிடைக்க உடனே காவல் நிலையம் முன்பு முற்றுகையிட்டனர்.
பிறகு உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிந்தவுடன். டி.எஸ்.பி. ராஜா தலைமையில் ஏராளமான போலீஸ் அங்கு குவிக்கப்பட்டனர்.போலீசாரை கண்டித்து தாராபுரம் ரோட்டில் தமுமுகவினர் சாலை மறியலும் ஈடுபட்டனர். டி.ஐ.ஜி. பாலநாகதேவி, எஸ்.பி.அருண் ஆகியோர் முற்றுகையிட்டவர்களுடன் பேச்சுவார்தை நடத்தினர்.

தமுமுக மாநில நிர்வாகிகளுடன் உயர் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.
பிறகு யூசுப் கோவை மருத்துவ கல்லுரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். முற்றுகை, சாலைமறியலால், விடிய, விடிய பதற்றம் நீடித்தது. இச்சம்பவத்தை தொடர்ந்து கோவை, திருப்பூரில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
செய்தி:kovaimediavoice

வியாழன், 31 டிசம்பர், 2009

கோத்ரா:முஸ்லிம் பெண்களை கொடூர சித்திரவதைக்குள்ளாக்கிய போலீஸ்

அஹ்மதாபாத்:குஜராத் மாநிலத்திலிலுள்ள கோத்ராவில் முஸ்லிம் பெண்களை காவல்துறை கொடூர சித்திரவதைக்குள்ளாக்கியதாக சிட்டிசன் ஃபார் ஜஸ்டிஸ் அண்ட் பீஸ் என்ற அமைப்பு வெளிப்படுத்தியுள்ளது.
இது சம்பந்தமாக விசாரித்து அறிக்கையை சமர்ப்பிக்க கோத்ரா முதல் வகுப்பு ஜூடிசியல் மாஜிஸ்ட்ரேட் மூத்த போலீஸ் அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார்.
போலீஸ் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்ட பெண்களை இவ்வமைப்பின் செயலாளர் தீஸ்டா செடல்வாட் நேற்று பத்திரிகையாளர்களுக்கு முன்னால் ஆஜர்படுத்தினார். சச்சரவில் ஈடுபட்டார்கள், காவல்துறையினர் மீது கல்லெறிந்தார்கள் என்று குற்றஞ்சாட்டி கைதுச்செய்த பெண்களை வீட்டில் வைத்தும் காவல்நிலையத்தில் வைத்தும் சித்திரவதைக்கு ஆளாக்கியுள்ளனர். மேலும் அவர்களை கற்பழித்துவிடுவதாக பயமுறுத்தியுள்ளனர். பின்னர் இவர்களை ஜாமீனில் வெளியே விட்டுள்ளனர்.
டிசம்பர் 9 ஆம் தேதி இரவில் பசு திருடியதாக குற்றஞ்சாட்டப்பட்ட செய்யத் ஹுசைன் பதாமினை தேடி கோத்ரா பி டிவிசன் காவல்நிலைய போலீசார் கெனி ப்ளாட்டில் வந்துள்ளனர் . 14மாதங்களாக தலைமறைவாகவிருந்த பதாமையும் மற்றும் சிலரையும் கெனி ப்ளாட்டிலிருந்து கைதுச்செய்தாலும் பின்னர் அவர்கள் போலீசின் பிடியிலிருந்து தப்பிச்சென்றுள்ளனர். அதே நாளில் இரவு 1.05 மணியளவில் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவிலிலுள்ள ஹாதிலா ப்ளாட்டில் பதாமும் அவருடைய கூட்டாளிகளும் ஒளிந்திருக்கிறார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அங்கு தேடிச்சென்றுள்ளனர். ஆனால் அவர்கள் அங்கு இல்லாததால் மூன்று வீடுகளிலிருந்து பணத்தையும், தங்க நகைகளையும் எடுத்துச்சென்றுள்ளனர். மேலும் அவ்வீடுகளிலிருந்து பெண்களை மட்டும் பிடித்த போலீஸ் அவர்களை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சித்திரவதைக்கு ஆளாக்கியதாக தெரிவிக்கிறார் தீஸ்டா செடல்வாட்.
தாயின் மடியிலிருந்த 19 நாளே ஆன குழந்தையைக்கூட கீழே தூக்கியெறிய அவர்கள் தயங்கவில்லை என அவர் கூறுகிறார். பின்னர் சச்சரவு, போலீஸ் மீது கல்லெறிந்தார்கள் என்று குற்றஞ்சாட்டி 8 பெண்களை கைதுச்செய்துள்ளனர். அதிகாலை 4 மணியளவில் கோத்ரா சப்-ஜெயிலுக்கு கொண்டுச் சென்றுள்ளனர். செல்லும் வழியில் போலீஸ் வேனில் வைத்தும் அவர்களை உடல் ரீதியாக சித்திரவதைக்கு ஆளாக்கியுள்ளனர். அடுத்த நாள் நீதிமன்றத்தில் இந்தப்பெண்களை ஆஜராக்கியபொழுது கோத்ரா ஜுடிசியல் நீதிமன்ற நீதிபதி எம்.மலேவாலா அப்பெண்களை மருத்துவமனையில் அனுமதிக்கவும், இச்சம்பவத்தைக்குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார். ஆனால் மாலைவேளை வரை அப்பெண்களை மருத்துவமனையில் அனுமதிக்காததுடன் அவர்களுக்கு சிகிட்சை அளிக்க ஆண் டாக்டர்கள்தான் வரவேண்டும் என்று நிர்பந்தித்துள்ளனர் என தீஸ்டா செடல்வாட் குற்றஞ்சாட்டுகிறார். இதனால் சிகிட்சை பெற தயங்கிய பெண்களுக்கு எவ்வித தொந்தரவும் சித்திரவதையும் செய்யப்படவில்லை என்ற மருத்துவ அறிக்கையை தயார் செய்ய எளிதானது. இச்சம்பவத்தை குறித்து நேரில் சென்று விசாரிக்க தேசிய பெண்கள் கமிசன் கோத்ரா செல்ல அவர்கள் கோரினர். ஒரு சப்-இன்ஸ்பெக்டர் 3 கான்ஸ்டபிள்களின் பெயர்களை அப்பெண்கள் தங்களது குற்றச்சாட்டில் குறிப்பிட்டுள்ளனர்.
அதேவேளையில், இச்சம்பவத்தை காவல்துறை மறுத்துள்ளது. குற்றவாளிகளை கைதுச்செய்வதை தடுக்க பெண்கள் முயன்றதாக குற்றஞ்சாட்டுகிறார் பஞ்சிமஹல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ஜி.எம்.முதாலியா. கோத்ரா முஸ்லிம் சமூக தலைவர் முஹம்மது ஹனீஃப் கூறுகையில் கோத்ரா நகரில் வசிக்கும் சிறுபான்மை மக்கள் காவல்துறையின் கொடுங்கோன்மைக்கு இலக்காகிறார்கள். ஆண்கள் அவரகளது அன்றாட வாழ்க்கைக்கு தேவையானவற்றை சம்பாதிக்க இயலாத நிலை உள்ளது. நகரின் வெளிப்பகுதியில் வசிக்கும் பல குடும்பங்கள் போலீஸின் தொந்தரவிற்கு பயந்துபோய் உள்ளனர். இது சம்பந்தமாக பல முறை அதிகாரிகளிடம் புகார் செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

ஞாயிறு, 27 டிசம்பர், 2009

இல. கணேசனின் அறியாமையும் வஞ்சகமும்

தமிழ்நாடு முஸ்­லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

பாரதீய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் இல. கணேசன் பாபரி மஸ்ஜித் குறித்து இன்று வெளியிட்டுள்ள அவதூறு அறிக்கையை தமிழ்நாடு முஸ்­லிம் முன்னேற்றக் கழகம் வன்மையாக கண்டிக்கின்றது. பாபரி மஸ்ஜித் என்பது பாபர் இந்தியாவை வெற்றிக் கொண்டதின் நினைவாக ராமர் கோயிலை இடித்து விட்டு கட்டப்பட்டது என்று தனது அறிக்கையில் பச்சை பொய்யை அவிழ்த்துள்ளார் இல. கணேசன். பாபர் 1526ல் இந்தியாவிற்கு படையெடுத்து வந்த போது டெல்­யில் ஆட்சி செய்துக் கொண்டிருந்தது இப்றாகிம் லோடியாகும்.

பாபர் மற்றும் இப்றாகிம் லோடி தலைமையிலான படைகளும் பானிபட் யுத்தத்தில் மோதிக் கொண்ட போது இரு படைகளிலும் ஹிந்துக்களும் போர்வீரர்களாக போரிட்டார்கள். இந்த போரில் வெற்றி பெற்று டெல்­யில் தனது ஆட்சியை நிறுவினார் பாபர். பாபரி மஸ்ஜிதிற்கான அடிக்கல்லை நாட்டி அதனை 1523ல் கட்ட ஆரம்பித்தவர் இப்றாகீம் லோடி தான். அந்த பள்ளிவாசல் லோடி மஸ்ஜித் என்றும் கோட்டை மஸ்ஜித் என்றும் தான் முதல் அழைக்கப்பட்டது. முகலாய அரசு அயோத்தி பகுதியில் பரவிய போது, அப்பகுதிக்கு ஆளுநராக நியமிக்கப்பட்ட மீர் பாகி இந்த பள்ளிவாசலை முழுமைப் படுத்தி அதற்கு தனது அரசரின் பெயரைச் சூட்டினார். அயோத்தியில் ஸ்ரீராமருக்கு கட்டப்பட்டிருந்த ஆலயத்தை இடித்து விட்டு தான் பாபரி மஸ்ஜித் கட்டப்பட்டது என்பதற்கான எவ்வித ஆதாரமும் இல்லை என்று ஆர்.எஸ். சர்மா, சுசில் ஸ்ரீவத்ஸவா, ஷேர் சிங் போன்ற அப்பழுக்கற்ற வரலாற்று ஆசிரியர்கள் ஆதாரத்துடன் விளக்கியுள்ளார்கள். இது மட்டுமல்ல ராமயணத்தை ஹிந்துஸ்தானியில் மொழிபெயர்த்த துளசிதாசர் பாபரி மஸ்ஜித் கட்டப்பட்ட காலத்தில் அயோத்தியில் வாழ்ந்தவர். ஸ்ரீராமசந்திர மனாஸ் என்ற தனது காப்பியத்தியில் ஸ்ரீராமருக்கு கட்டப்பட்ட ஆலயத்தை இடித்து விட்டு பாபர் ஆட்சியின் போது பள்ளிவாசல் கட்டப்பட்டது என்று எந்த ஒரு குறிப்பையும் அவர் தரவில்லை. பாபரி பள்ளிவாசல் வளாகத்தில் பள்ளிவாசல் ஒரு பக்கம் இருக்க அதன் ஒரு மூலையில் திண்ணை ஒன்றை எழுப்பி அங்கு ஸ்ரீராமர் சிலை வைக்கப்பட்டு வழிபாடு 1870களில் ஆங்கிலேயேர்களின் சதியினால் ஏற்பட்டது. அயோத்தி பகுதியில் 1857ல் நடைபெற்ற முதல் விடுதலைப் போரில் ஹிந்துக்களும் முஸ்­ம்களும் ஒன்றிணைந்து போரிட்டத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வெள்ளைக்காரர்கள் தங்கள் பிரித்தாளும் தந்திரத்தை நடைமுறைப்படுத்தவே இந்த சதிச் செயலைச் செய்தார்கள். இந்த உண்மை வரலாற்றை மறைத்து இல. கணேசன் பாபரி மஸ்ஜிதை கொச்சையாக விமர்சித்திருப்பது அவரது அறியாமையையும், வஞ்சகத்தையும் தான் வெளிப்படுத்துகின்றது. இந்தியா என்ற மாபெரும் மதசார்பற்ற நாட்டின் மதசார்பின்மைக்கு ஒர் எடுத்துக் காட்டாக பாபரி மஸ்ஜித் விளங்கியது. பன்முக பண்புள்ள இந்தியாவை சிதைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் உச்சநீதிமன்றத்தின் உத்தரவையும் உதாசீனப்படுத்தி டிசம்பர் 6, 1992ல் பாபரி மஸ்ஜிதை இடித்த பயங்கரவாதச் செய­ல் ஈடுபட்டு தேசத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தியவர்கள் தான் இல. கணேசனின் கூட்டத்தினர். முஸ்­ம்கள் தேசபற்றில் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. நமது நாட்டின் உயிர் மூச்சாக விளங்கும் மதசார்பின்மை மற்றும் பன்முகத் தன்மைகளை கா­ல் போட்டு மிதித்த இல. கணேசன் போன்றோர் லிபரான் ஆணையத்தின் அறிக்கையை படித்து திருந்தட்டும்.

இஸ்லாத்தை தழுவிய இளைஞரை கடத்திச் சென்று சித்திரவதைச் செய்த ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள்

வண்டிப்பெரியார்: பெங்களூரிலிருந்து விடுமுறையின்போது சொந்த ஊருக்கு வந்த இளைஞரை இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட காரணத்தால் ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் கடத்திச்சென்று தங்களது அலுவலகத்தில் அடைத்துவைத்து சித்திரவதைச் செய்துள்ளனர்.

மாவேலிக்கரை என்ற ஊரைச்சார்ந்த கிருஷ்ணன் உண்ணித்தான்-விஜயகுமாரி தம்பதிகளின் மகனும் பெங்களூரிலிலுள்ள கல்லூரியொன்றில் 3-வது ஆண்டு நர்ஸிங் படிப்பை பயிலும் 24 வயதான அனீஷி (தற்போதைய பெயர் முன்னா முஹம்மது) கல்லூரி விடுமுறையில் வீட்டிற்கு வந்துள்ளார். இவர் மூன்றாண்டுகளுக்கு முன்பு இஸ்லாத்தை மனப்பூர்வமாக ஒப்புக்கொண்டு அதனை தனது வாழ்க்கை நெறியாகக்கொண்டவர்.

இந்நிலையில் வீட்டிற்கு வந்த முன்னா முஹம்மதை அவருடைய பெற்றோரின் உதவியுடன் ஆர்.எஸ்.எஸ் பாசிஸ இயக்கத்தைச்சார்ந்த 6 குண்டர்கள் நள்ளிரவில் முன்னாவை மயக்க மருந்து கொடுத்து மயங்கச்செய்து கடத்திச்சென்றுள்ளனர். பின்னர் அவரை வண்டிப்பெரியார் என்ற இடத்திலிலுள்ள தங்களது அலுவலகத்தில் கட்டிவைத்து சித்திரவதைச் செய்துள்ளனர். 17 தினங்களுக்கு பிறகு கடந்த வெள்ளிக்கிழமை அங்கிருந்து தப்பித்த முன்னா முஹம்மது அரசு பேருந்து ஒன்றில் ஏறி மிளாமலா என்ற இடத்திலிலுள்ள ஜும்ஆ மஸ்ஜிதில் சென்று அபயம் தேடியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து ஜமாஅத் நிர்வாகிகள் காவல்துறையினரை அழைத்து சம்பவத்தை தெரிவித்துள்ளனர். முன்னாவின் பெற்றோர்கள் கூறுகையில் முன்னாவிற்கு மனநிலை சரியில்லாததால் சிகிட்சைக்காக அனுப்பியதாக தெரிவித்தனர். ஆனால் முன்னா முஹம்மது காவல்துறை மற்றும் பத்திரிகையாளர்களோடு கூறுகையில், "எனது உயிருக்கு ஆபத்து உள்ளதால் எனது பெற்றோர்களுடன் என்னை அனுப்பி விடாதீர்கள். எவருடைய நிர்பந்தமுமில்லாமல் தான் சுயமாக இஸ்லாத்தை விரும்பி ஏற்றுக்கொண்டேன்." என்றார் அவர்.

இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் வழக்கை பதிவுச்செய்து விசாரனையை மேற்க்கொண்டு வருகின்றனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

வியாழன், 24 டிசம்பர், 2009

கண்டமால் கலவரம்: 10 பேருக்கு தண்டனை

ல்பானி:ஒரிஸாவில் கண்டமால் மாவட்டத்தில் கிறிஸ்தவ மக்களுக்கெதிராக சங்க்பரிவார பாசிஸ்டுகள் நடத்திய கலவரத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் 10 பேருக்கு அதிவேக நீதிமன்றம் 3 முதல் 5 வருடம் வரையிலான கடும் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

பேடிநாஜு கிராமத்தில் சிறுபான்மையினரின் வீடுகளை தீக்கிரையாக்கிய 5 பேருக்கு 5 வருட கடும் சிறைத் தண்டனையை அதிவேக நீதிமன்றம் அளித்தது. கீர்த்திகுடா கிராமத்தில் சிறுபான்மையினரின் வீடுகளை தீக்கிரையாக்கிய மேலும் 5 பேருக்கு 3 வருட கடும் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

கடந்த வருடம் சுவாமி லக்‌ஷ்மானந்த சரஸ்வதி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து சங்க்பரிவார பாசிஸ்டுகளால் கலவரம் ஏற்பட்டது. இந்நிகழ்வில் 38 பேர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான வீடுகள் தாக்குதலுக்கு ஆளாகின. செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

புதன், 9 டிசம்பர், 2009

நரசிம்மராவ் ஆசியோடு பாபர் மசூதியை இடித்தோம்: வேதாந்தி சாமியார் சொல்கிறார்.


பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட லிபரான் கமிஷன் 17 ஆண்டுகளுக்கு பிறகு தனது அறிக்கையை தாக்கல் செய்தது. அதில், வாஜ்பாய், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட 60 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

இதில் முன்னாள் பாரதீய ஜனதா எம்.பி.யும், ராம ஜென்மபூமி கமிட்டி உறுப்பினருமான ராம்விலாஸ் வேதாந்தி சாமியாரும் ஒருவர்.லிபரான் கமிஷன் அறிக்கையில் முன்கூட்டியே திட்டமிட்டு பாபர் மசூதியை இடித்தார்கள் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இதை பாரதீய ஜனதா தலைவர்கள் மறுத்து வருகின்றனர்.

ஆனால் வேதாந்தி சாமியார் மட்டும் திட்டமிட்டுதான் இடித்தோம் என்று ஒப்புதல் அளித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந்தேதி நடக்கும் கரசேவையின்போது பாபர் மசூதியை இடித்து தள்ளவேண்டும் என்று முன்கூட்டியே முடிவு செய்து இருந்தோம். அப்போது பிரதமராக இருந்த நரசிம்மராவை 1992 நவம்பர் மாதம் 20-ந்தேதி நான் சந்தித்தேன்.

அப்போது அவர் கரசேவையின்போது என்ன செய்யப்போகிறீர்கள்? என்று என்னிடம் கேட்டார். அதற்கு நான் 6-ந்தேதி பாபர் மசூதியை இடித்து தள்ளுவோம் என்று கூறினேன்.

இடிக்க போகிறோம் என்று அவரிடம் சொல்லி விட்டுத்தான் இடித்தோம். எனவே அவருடைய ஆசீர்வாதத்தோடுதான் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.

6-ந்தேதி கரசேவகர்கள் பாபர் மசூதி பகுதிக்குள் நுழைந்து மசூதியில் “டூம்” மீது ஏறினார்கள். அப்போது சங்பரிவாரை சேர்ந்த சில தலைவர்கள் அவர்களை இறங்கி வரும்படி கேட்டனர். ஆனால் நான் அவர்களை மேலும் முன்னேறி செல்லுங்கள். இடித்து தள்ளுங்கள் என்று கூறினேன். அதன்படி இடிக்கப்பட்டது.

பாபர் மசூதியை இடித்து அதை தரைமட்டமாக்கி சமப்படுத்தும் வரை அதாவது 7-ந்தேதி இரவு வரை அங்கேதான் நான் இருந்தேன். மசூதியை இடிப்பதை முழுவதும் நான் மேற்பார்வையிட்டேன்.

இதை சொல்வதற்காக நான் கவலைப்படவில்லை. முடிந்தால் என்னை தூக்கில் போடுங்கள்.
இவ்வாறு வேதாந்தி சாமியார் கூறினார்

வியாழன், 3 டிசம்பர், 2009

ஹிந்து பயங்கரவாதத்தை சகித்துக்கொள்ள முடியாது- ப.சிதம்பரம்


புதுடெல்லி:ஜிஹாது தீவிரவாதிகளை(?)ப்போல் ஹிந்து தீவிரவாதிகளும் இந்தியாவில் தாக்குதல் நடத்துவதாக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ராஜ்யசபையில் தெரிவித்தார்.
கடந்த ஒருவருடத்தில் இத்தகைய 12 தாக்குதல்களை பாதுகாப்பு படையினர் முறியடித்ததாகவும் அவர் தெரிவித்தார். உள்நாட்டு பாதுகாப்பு குறித்து ராஜ்ய சபையில் நடைபெற்ற விவாதத்திற்கு பதிலளிக்கையில்தான் உள்துறை அமைச்சர் இதனை தெரிவித்தார். முஸ்லிம்-ஹிந்து பயங்கரவாதம் ஒரேபோன்று தவறானது இரண்டையும் இந்த தேசம் சகித்துக்கொள்ளாது. என்றும் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

"ஜிஹாது தீவிரவாதமாக" இருந்தாலும் "இந்து தீவிரவாதமாக" இருந்தாலும் அரசு அவற்றை ஒரு போதும் அனுமதிக்காது என்று சிதம்பரம் கூறியதை அடுத்து பிரச்சனை தொடங்கியது.
இந்து தீவிரவாதம் என்று கூறிய சிதம்பரம் இஸ்லாமிய தீவிரவாதம் என்று கூறவில்லை. இஸ்லாமிய தீவிரவாதம் என்ற வார்த்தையை சிதம்பரம் வேண்டுமென்றே தவிர்த்துவிட்டார் என்று பாஜக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

உள்நாட்டுப் பாதுகாப்பு குறித்த விவாதத்தில் பதில் அளித்துப் பேசிக் கொண்டிருந்த சிதம்பரம், பாஜகவின் குறுக்கீட்டால் கோபமடைந்தார். பாரதீய ஜனதா கட்சியை சமாதானப்படுத்துவதற்காக நான் என்னுடைய வாதத்தை மாற்றிக் கொள்ள மாட்டேன். என்னுடைய வாதமெல்லாம், மத அமைப்புகள் - இந்து மத அமைப்பாக இருந்தாலும் அல்லது இஸ்லாமிய மத அமைப்பாக இருந்தாலும் தீவிரவாதத்தைத் தூண்டிவிடுகின்றன என்பதுதான் என்று சிதம்பரம் கூறினார்.

நான் ஒட்டுமொத்த முஸ்லிம்களையோ, இந்துக்களையோ அல்லது மற்ற மதத்தினரையோ குற்றம் சாட்டவில்லை. ஆனால் மதப் பழமைவாதிகள் தீவிரவாதத்தைத் தூண்டிவிடுகின்றனர் என்று சிதம்பரம் கூறினார்.
பின்னர் கோபத்திலிருந்து மீண்ட சிதம்பரம், தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். இது மிகவும் முக்கியமான விசயம் என்றும் சிதம்பரம் கூறினார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

செவ்வாய், 10 நவம்பர், 2009

ராஜ் போன்றவர்களால் நாடு பிளவுபடும்- லாலு

டெல்லி: இந்த நாடு இன்னொரு முறை பிளவுபட்டால் அதற்கு ராஜ் தாக்கரே போன்ற சக்திகள் தான் காரணமாக இருப்பார்கள் என்று ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் காட்டமாகக் கூறினார்.

இந்தியில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டதற்காக மகாராஷ்டிர சட்டசபையில் சமாஜ்வாடி கட்சியின் எம்எல்ஏ அபு ஆஸ்மி ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா எம்எல்ஏக்களால் தாக்கப்பட்டது குறித்து லாலு கூறுகையில்,

ராஜ் தாக்கரேவின் எம்எல்ஏக்கள் நாட்டின் தேசிய மொழிக்கும் அரசியல் சட்டத்துக்கும் விரோதமாக செயல்பட்டிருக்கிறார்கள். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க இதற்கு மேல் எந்த காரணமும் வேண்டாம். அந்த நடவடிக்கை உடனே எடுக்கப்பட வேண்டும்.

இல்லாவிட்டால், இந்த நாடு இன்னொரு முறை பிளவுபட்டால் அதற்கு ராஜ் தாக்கரே போன்ற சக்திகள் தான் காரணமாக இருப்பார்கள் என்றார்.

தேச துரோகிகள்-பாஸ்வான்:

லோக் ஜன் சக்தி தலைவரான ராம்விலாஸ் பாஸ்வான் கூறுகையில், ராஜ் தாக்கரே கட்சியினர் தேச துரோகிகள். இது இந்திக்கு மாத்திரமல்ல, இந்த நாட்டின் ஒற்றுமை உணர்வுக்கு நேர்ந்துள்ள அவமானம் என்றார்.

பெருமை தேடி தந்த அபு-முலாயம் பாராட்டு:

இந் நிலையில் சமாஜ்வாடிக் கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவர் கூறுகையில்,

ராஜ் தாக்கரே ஆட்களின் மிரட்டலையும் மீறி இந்தியில் பதவிப் பிரமாணம் எடுத்த என் கட்சியின் எம்எல்ஏவான அபு ஆஸ்மியை முதலில் பாட்டுகிறேன். அவரது தைரியம் மெச்சக்கதக்கது.

தனது செயல் மூலம் நாட்டுக்கும் தேசிய மொழிக்கும் அவர் பெருமை தேடித் தந்துவிட்டார். சில கொள்கைகளை உயர்த்திப் பிடிக்கும்போது தாக்குதல்கள் நடக்கத்தான் செய்யும். அதைக் கண்டு அஞ்சுபவர்கள் அல்ல நாங்கள் என்றார்.

'வேடிக்கை பார்க்கும் காங்-பவார் கட்சி':

சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலாளர் அமர் சி்ங் கூறுகையில், அபு ஆஸ்மிக்கு ராஜின் ஆட்கள் ஒரு வாரமாக மிரட்டல் விடுத்து வந்த நிலையில் சட்டசபையில் போதிய காவலர்களை ஏன் நிறுத்தவில்லை?. தாக்குதல் நடக்கட்டும் என்று தானே.. ராஜ் மனம் கோணாமல் நடந்து கொள்வதற்குத் தானே.

சட்டசபையில் நடந்த இந்தத் தாக்குதலுக்கு காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் அரசு தான் காரணம். ராஜை விட அவர்கள் மீது தான் நான் அதிக குற்றம் சாட்டுவேன் என்றார்.

4 ஆண்டு சஸ்பெண்ட்:

இந் நிலையில் அபு ஆஸ்மியை தாக்கிய மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா எம்எல்ஏக்கள் சிஷிர் ஷிண்டே, ரமேஷ் வஞ்சலா, ராம் காதம், வசந்த் கீதே ஆகிய 4 பேரும் 4 ஆண்டுகளுக்கு சட்டசபை நடவடிக்கைகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடையை விலக்கக் கோரி நீதிமன்றத்தை நாடப் போவதாக அந்தக் கட்சி அறிவித்துள்ளது.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிஷிர் ஷிண்டே இன்னும் எம்எல்ஏவாகக் கூட பதவியேற்கவில்லை. பதவி ஏற்கும் முன்பு அவரை சஸ்பெண்ட் செய்தது செல்லாது என்று ராஜ் தாக்கரேவின் ஆட்கள் 'லா பாயிண்ட்' பேசி வருகின்றனர்.

ஆஸ்மியை கெரோ செய்த சிவசேனா:

இந் நிலையில் இன்று பால் தாக்கரேவின் சிவசேனா கட்சியினர் சட்டதபைக்கு வந்த அபு ஆஸ்மியை கெரோ செய்தனர்.

பால் தாக்கரேவுக்கு வயதாகிவிட்டாலும் சின்னப் பையன் மாதிரி பேசுவதாக அபு ஆஸ்மி கூறியதற்கு கண்டனம் தெரிவித்த சிவ சேனா எம்எல்ஏக்கள், ஒழுங்காகப் பேசினால் தான் இனி மகாராஷ்டிரத்துக்குள் நீ நடமாட முடியும் என எச்சரித்தனர்.

முன்னதாக தனது சாம்னா இதழில் பால் தாக்கரே எழுதியுள்ள கடிதத்தில், அபு ஆஸ்மி சிவசேனா கட்சியினரிடம் சிக்கினால் 'தந்தூரி' ஆகிவிடுவார் என்று கூறியிருந்தார்.

திங்கள், 9 நவம்பர், 2009

முஸ்லிம் எம்எல்ஏவை அறைந்த ராஜ் தாக்கரே கட்சி எம்.எல்.ஏ (பயங்கரவாதி) க்கள்


மும்பை: மகாராஷ்டிர சட்டசபையில் இந்தியில் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட, சமாஜ்வாடிக் கட்சி எம்.எல்.ஏ. அபு ஆஸிம் ஆஸ்மியை ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிர நவ நிர்மான் கட்சி எம்.எல்.ஏ (பயங்கரவாதி) க்கள்
ஆவேசத்துடன் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மகாராஷ்டிர சட்டசபைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் மராத்தியில்தான் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ராஜ் தாக்கரே கட்சி ஏற்கனவே எச்சரித்திருந்தது.

ஆனால் தான் இந்தியில்தான் பதவியேற்பேன் என்று அபு ஆஸிம் ஆஸ்மி கூறியிருந்தார். அப்படியானால் ஆஸ்மி உ.பிக்குப் போக வேண்டும், இங்கு இருக்கக் கூடாது. இந்தியில் பதவியேற்றால் தடுத்து நிறுத்துவோம் என ராஜ் தாக்கரே கட்சி மிரட்டியிருந்தது.

இதனால் பரபரப்பு நிலவி வந்தது. இந்த நிலையில் இன்று சட்டசபையில் புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தது.

அப்போது, ஆஸ்மி பதவியேற்க வந்தபோது ஏற்கனவே அறிவித்தபடி இந்தியில் பதவிப்பிரமாணம் எடுத்தார்.

இதையடுத்து மகாராஷ்டிர நவ நிர்மான் கட்சியைச் சேர்ந்த 13 எம்.எல்.ஏக்களும் திரண்டு அவரிடம் விரைந்தனர். அவர் முன்பு இருந்த மைக்கைப் பறித்தனர்.

ஆஸ்மிக்கு எதிராக கோஷமிட்டனர். மராத்தியில் பதவியேற்குமாறு கோபத்துடன் கூறினர். அப்போது ராஜ் தாக்கரே கட்சி எம்.எல்.ஏ ராம் கதம் ஆஸ்மியை அறைந்து விட்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அரை மணி நேரத்திற்கு சபை ஒத்திவைக்கப்பட்டது.

சபையில் அமைதியை ஏற்படுத்த முதல்வர் அசோக் சவானும், மின்துறை அமைச்சர் அஜீத் பவாரும் கடுமையாக முயன்றனர்.

சனி, 24 அக்டோபர், 2009

வளர்ந்து வரும் இஸ்ரேலிய-ஹிந்துத்துவ பயங்கரவாதம்!

சென்ற 17.10.09 ஆம் தேதி தீபாவளிக்கு முந்தைய நாள் ஒரே பரபரப்பு!

என்னவென்று நினைக்கிறீர்கள்?

"தீபாவளி கொண்டாட்டத்தினைச் சீர் குலைக்க முஸ்லிம் தீவிரவாதிகள் முயற்சி" என்று பத்திரிக்கைகளிலும்-மின் ஊடகங்களிலும் வெளியான செய்தியைத் தொடர்ந்து எழுந்த பரபரப்புதான் அது.

அத்தோடு அமெரிக்க உளவு நிறுவனமும் தன் பங்கிற்கு வழக்கம் போல் எச்சரிக்கை செய்தது. ஆனால் நடந்தது என்ன?


கோவா மாநிலம் பண்டா நகரில் தீபாவளி இரவு அன்று ஸ்கூட்டரில் சென்ற இருவர், அவர்களின் வண்டியில் வைத்திருந்த குண்டு வெடித்து மரணம் அடைந்தனர். கோவா மாநில காவல் துறையினர் தீவிர விசாரணை செய்து இறந்தவர்கள் இந்துக்களான மல்கோண்டா பட்டேல் மற்றும் யோகேஷ் நாயக் என்று அடையாளம் கண்டனர். விஷயம் அத்தோடு முற்றுப் பெறவில்லை. வழக்கத்திற்கு மாறாக இம்முறை அந்தக் குண்டுவெடிப்பைக் குறித்து நமது நடுவு(!)நிலை ஊடகங்களின், "முஸ்லிம் தீவிரவாதிகள்" என்ற கூக்குரல் வெளிவரும் முன்னரே, வேகமாகச் செயல்பட்ட காவல்துறையினர், ஸ்கூட்டரில் இறந்த இருவரும் எடுத்துச் சென்ற குண்டு, எதிர்பாராத விதமாக முன்னரே வெடித்துச் சிதறியதையும் குண்டு கொண்டு சென்றவர்கள் யாவர்? என்ற விசாரணையில், அவர்கள் இந்துத் தீவிரவாத அமைப்பான சனாதன் சான்ஸ்தாவினைச் சார்ந்தவர்கள் என்பதையும் கோவா காவல்துறையினர் கண்டு பிடித்து விட்டனர்.

இந்த சனாதன் சான்ஸ்தா அமைப்பு எது? என்பது வாசகர்களுக்கு மறந்திருக்காது!

மகாராஷ்டிரா மாநிலத்தில் சில மாதங்களுக்கு முன்பு மாலேகான் நகரில் பைக் குண்டு வெடித்து பலர் மாண்ட சம்பவத்தில் கைது செய்யப் பட்ட பெண் சாமியார் பிரக்யா சிங் மற்றும் அந்தக் குண்டு வெடிப்பின் மாஸ்டர் மைண்ட் ஆகச் செயல்பட்ட இராணுவ அதிகாரி கர்னல் புரோகித் ஆகியோர் கைது செய்யப் பட்டது வாசகர்களுக்கு நினைவிருக்கும். அவ்விருவரும் தீவிரமாகச் செயல்பட்ட "அபினவ் பாரத்" இயக்கத்துடன் தொடர்புடைய இயக்கம்தான் சனாதன் சான்ஸ்தா என்ற தீவிரவாத அமைப்பு. அபினவ் பாரதின் முக்கிய பணி, ஆங்காங்கே நாச வேலைகளைச் செய்து விட்டு, அதனை முஸ்லிம்கள் செய்ததாகத் திசை திருப்பி விடுவதாகும் அந்த இயக்கதோடு தொடர்புடைய மற்றொரு மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இயக்கத்தின் தொண்டர்கள் இருவர் எடுத்துச் சென்ற குண்டு வெடித்ததிலிருந்து, இவர்களே பயங்கர வாத-நாசவேலைகளைச் செய்து விட்டு காவல் துறையினரை ஏவி, முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரித்து கைது செய்யத் தூண்டும் நடவடிக்கையாகவும் அதன் மூலம் இரு சமூகத்தினரிடையே கலவரம் ஏற்பட வழிவகை செய்யும் அடித்தள முயற்சியாகவும் இது இருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது.

இதே நாளில் மற்றொரு சம்பவமும் நடந்ததை இவ்விடத்தில் ஒப்பு நோக்குவது பொருத்தமாக இருக்கும். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 20 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான தேசிய மட்டைப் பந்துப் போட்டி ஒன்று 17.10.09ஆம் தேதி அன்று ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அதில் கலந்து கொள்ள காஷ்மீர் மாநில கிரிக்கெட் குழுவினர் வருகை தந்தனர். அவர்கள் தங்கியிருந்த அறையில் கர்நாடக காவல் துறையினர் எவ்விதக் காரணமும் இன்றி திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அதில் விளையாட்டு வீரர் ரசூல் என்பவருடைய பையில் சோதனையிட்டபோது, காவலரின் கையிலிருந்த கருவியிலிருந்து ஒலி எழுந்துள்ளது. ரசூலின் பையைத் துருவி-துருவிச் சோதனையிட்டும் ஒன்றும் கிடைக்கவில்லை. இருந்த போதும் ரசூலையும் அவருடன் தங்கியிருந்த மற்றொரு வீரரையும் கர்நாடக காவல்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளனர்.

கர்நாடகக் காவல்துறையின் இத்தகைய செயலுக்குக் காஷ்மீர் கிரிக்கெட் வாரியத்தலைவர் ஃபாரூக் அப்துல்லா கண்டனம் தெரிவித்ததுடன் போட்டியிலிருந்து விலகுவதாகவும் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து மேலும் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்த பின்பு பெங்களூரு போலிஸ் கமிஷனர் சங்கர் பிடாரி, "சில தரப்பினரிடம் வந்த தகவலினை வைத்துத் தவறாக நடவடிக்கை எடுத்து விட்டதாக" அறிவிக்கிறார். அவரின் இந்த அறிவிப்பு வரும் வரை, "காஷ்மீரிலிருந்து வந்த முஸ்லிம் விளையாட்டு வீரர் கைது, தீவிரவாதியா? வெடிகுண்டா?" என்பது போன்றெல்லாம் பக்கங்களை நிறைத்த சில பத்திரிகைகள், "அந்த விளையாட்டு வீரர் அப்பாவி, தவறு நடந்து விட்டது" எனக் காவல்துறை கமிஷனர் அறிவித்த செய்தியினைக் கண்டு கொள்ளவே இல்லை. இவ்விடத்தில், கர்நாடக மாநிலத்தில் பெண் தீவிரவாதி பிரக்யாசிங்கிற்காகக் குரல் கொடுத்த பாஜக ஆட்சி செய்கின்றது என்பதையும் இதே மாநிலத்தில் தான் ராம் சேனா என்ற தீவிர இந்துக்கள் அமைப்பும் மிகச் சுதந்திரமாக செயல்படுகிறது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

அநியாயப் பழி சுமத்தி ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட டாக்டர் ஹனீஃபிடம், நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்டதோடு மட்டுமல்லாது அவருக்கு உண்டான நஷ்டஈட்டுடன் அவர் திரும்பி ஆஸ்திரேலியா வந்து தொழில் செய்யலாம் என்றும் ஆஸ்திரேலியா அரசு அறிவித்தது. ஆனால் கர்நாடகக் காவல் துறையோ காஷ்மீர் வீரர் ரசூலின் பைச் சோதனையில் ஒன்றுமில்லை என்று அறிவித்து விட்டு, "அந்த வீரர் ரசாயன பரிசோதனை முடியும் வரையில் அறையை விட்டு வெளியேறக் கூடாது" என்றும் அறிவித்துள்ளது.

இந்துத்துவாவிலே பி.எப்.ஜி என்ற குழு இருப்பதாகவும் அது பெரும்பாலும் இளைஞர்களையும் மாணவர்களையும் கொண்ட அமைப்பாகவும் அவர்கள் வேலையே பெண்களைக் கவரக்கூடிய செல்போன் தொடர்பினை முஸ்லிம் பெண்களிடம் ஏற்படுத்தி அவர்களின் கற்பிற்குக் களங்கத்தினை ஏற்படுத்தி விட்டுத் தப்பித்துக் கொள்வதாகவும் சொல்லப் படுகிறது. இது தொடர்பான சில ஆர்.எஸ்.எஸ்ஸின் உள் சுற்றறிக்கைகளைச் சில முஸ்லிம் அமைப்புகள் கைப்பற்றி வெளியாக்கியுள்ளன.

***

"ஃபாலஸ்தீனின் காஸா பகுதியில் பெண்கள்-குழந்தைகள் எனப் பாராது கிட்டத்தட்ட 1300 முஸ்லிம்களைக் கொன்று இனப் படுகொலையில் இஸ்ரேல் அரசு ஈடுபட்டது" என ஐ.நாவிற்கான கமிட்டி குற்றம் சாட்டியதோடு சரி. ஆனால் நடவடிக்கை எடுக்க முடியுமா? முடியாது! ஏனென்றால் அமெரிக்கா தன் வீட்டோ அதிகாரத்தைப் பயன் படுத்தி அதனைத் தடுத்து விடும். அப்படிப் பட்ட இஸ்ரேலின் ஏஜண்டுகள் இந்தியாவில் பல துறைகளிலும் தங்கள் ஆதிக்கத்தினை பதித்துள்ளார்கள் என்றால் மிகையாகாது. உதாரணத்திற்கு ஒரு சம்பவத்தைக் குறிப்பிடலாம்:

சமீபத்தில் சென்னையில் நடந்த சட்டத்திற்கான கருத்தரங்கு ஒன்றில் இஸ்ரேல் நாட்டு பேராசிரியர் ஒருவர், "இந்தியாவிற்கு சிவில் சட்டம் அவசியம்" என்று பேசியிருக்கிறார். மத்திய அரசோ சிவில் சட்டம் கொண்டு வருவதா? வேண்டாமா? என்ற விஷயம் விவாதத்திற்குட்டது என்று சொல்லும் போது, அந்நிய நாட்டைச் சேர்ந்த இவர் பி.ஜே.பியின் ஊது குழலாக மாறி, பொது சிவில் சட்டம் இந்தியாவுக்கு வேண்டும் என்கிறார். அது மட்டுமா? புஷ் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்தபோது முக்கிய விண்வெளி ஆராய்ச்சி நிபுணராக இருந்த ஸ்டுவார்ட் என்பவர் இஸ்ரேல் உளவாளியாக இருந்திருக்கிறார். அவர் இந்திய வான்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவிற்கு 2008ஆம் ஆண்டு இரண்டு தடவை வந்து சென்றுள்ளார். அவர் முக்கியமான சிலத் தகவல்களை, சில டாலர்களுக்காகப் பரிமாற்றம் செய்யும் போது, அமெரிக்க உளவுத்துறையான எஃப்.பி.ஐயிடம் கடந்த அக்டோபர் 20 ஆம் தேதி கையும் களவுமாக மாட்டியுள்ளார்.

நாட்டிற்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக மாறி வரும் ஹிந்துத்துவாவும் உலகிற்கே மிகப் பெரிய அச்சுறுத்தலாக விளங்கி வரும் இஸ்ரேலிய சியோனிஸமும் உள்கட்டமைப்பில் ஒரே அடிப்படைகளைக் கொண்டுள்ளதும் அவை உள்ளுக்குள் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்பதும் அவ்வபோது வெளியாகும் தகவல்கள் மூலம் உறுதிப் படுத்தப் பட்டுள்ளன. "மாலேகோன் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்ட கர்னல் புரோஹித், இஸ்ரேலைத் தலைமையாகக் கொண்டு ஒரு ஹிந்துத்துவ அரசை ஏற்படுத்துவது என்றும் அது இஸ்ரேலிலிருந்து இந்தியாவைக் கட்டுப்படுத்தும் வகையில் காய்களை நகர்த்தியதாகவும் அதற்கான முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன என்றும் விரைவிலேயே அந்த ஆவணங்களுடன் மாலேகோன் குண்டு வெடிப்பு குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப் போவதாகவும்" மகாராஷ்டிரத் தீவிரவாதத் தடுப்புப்படை அதிகாரி ஹேமந்த் கார்கரே சுட்டுக்கொல்லப்படுவதற்கு முந்தைய தினம் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் மிக மிக அதிர்ச்சியளிக்கும் வகையில் அதற்கு அடுத்த நாள் மும்பையில் பயங்கரவாதத் தாக்குதல் மூலம் அவர் அநியாயமாகச் சுட்டுக் கொல்லப்பட்டார். கார்கரே விசாரித்து வந்த மாலேகோன் குண்டுவெடிப்புத் தாக்குதலை விசாரிக்க, கார்கரேயால் விசாரணை செய்யப் பட்டவரும் மாலேகோன் குண்டு வெடிப்பின் முக்கிய குற்றவாளியான கர்னல் புரோஹித்தின் நெருங்கிய நண்பருமான ஹிந்துத்துவவாதி என வெளிப்படையாகவே அறியப்படும் ரகுவன்ஷி மீண்டும் நியமிக்கப்பட்டார்.

ரகுவன்ஷி தலைமையேற்றவுடன், அதற்குச் சில தினங்களுக்கு முன்னர் கார்கரே கூறிய "ஹிந்துத்துவ-இஸ்ரேல் கூட்டணியை" நிராகரித்து விட்டு, "கர்னல் புரோஹித் அவ்வாறான திட்டம் போட்டதற்கான எந்த ஒரு ஆதாரமும் கிடைக்கப்பெறவில்லை எனவும் அந்தக் குண்டுவெடிப்புக்குச் சர்வதேச பின்னணி ஏதும் இல்லை" எனவும் அறிவித்தார். அடுத்தச் சில தினங்களில் அவர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த குற்றப்பத்திரிகையில் முன்னர் கார்கரே கூறிய இஸ்ரேல் தொடர்பு குற்றச்சாட்டுகள் அடையாளமின்றி அப்புறப்படுத்தப்பட்டிருந்தன. நீதிமன்றமும் அந்தக் குற்றப்பத்திரிக்கையின் அடிப்படையில் நல்லப்பிள்ளையாக, அதுவரை "தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்த மாலேகோன் குண்டுவெடிப்பு குற்றவாளிகள் அனைவரையும் தேசிய பாதுகாப்புச் சட்டத்திலிருந்து விடுவித்ததோடு, சாதாரண வழக்குகளுக்கான நீதிமன்றத்திற்கு அவர்களின் வழக்கையும் 'மாற்றி' உத்தரவிட்டது.

மேற்கண்ட நிகழ்வுகள் அனைத்தையும் ஒன்றோடு ஒன்று கலந்து சிந்திக்கும் எவருக்கும் இந்தியாவில் முஸ்லிம்கள் நிலை எவ்வாறு அபாய நிலையில் உள்ளது என்பதும் நாட்டில் இந்துத்துவா-இஸ்ரேல் கூட்டணி தீவிரவாதம் மறைமுகமாகக் கட்டமைக்கப்பட்டு மிக நேர்த்தியாக வளர்ந்து வருவதையும் அறிந்துக் கொள்ள இயலும்.

இந்நிலையில் முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன? அவர்கள் எடுக்க வேண்டிய முன்னேற்பாடுகள் யாவை? தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அவர்கள் என்னென்ன செய்ய வேண்டும்?

உடனடியாக மிகத் தீவிரத்துடன் ஆலோசித்து முடிவெடுக்க வேண்டிய விஷயமாகும் இது. இப்பொறுப்பைச் சமுதாய அமைப்புகளிடமும் ஜமாஅத்துகளிடமும் தற்போதைக்கு விட்டு விட்டு, மிக அடிப்படையாக முஸ்லிம்கள் கவனமாக இருக்க வேண்டிய சில விஷயங்களை இங்குப் பட்டியலிடுவோம்:

  • ஜூம்மா தொழும் போது மக்காவிலுள்ள கஅபாவில் பாதுகாப்புக்காகக் காவலர்கள் இருப்பது போல இங்கும் இளைஞர்களைப் பாதுகாப்பில் ஈடுபடுத்த வேண்டும்.

  • பெரிய தப்லீக் ஜமாத்துக்கள் நடக்கும் போது டோர் பிரேம் - ஹேண்ட் மேட் மெட்டல் டிடக்ட்டர்கள் பயன்படுத்தி, சோதனைக்குப் பின் அனுமதிக்க வேண்டும்.

  • பள்ளிவாசல்களில் இரவில் அடையாளம் தெரியாதவர்களைத் தங்க அனுமதிக்கக் கூடாது.

  • திருமணம் போன்ற மக்கள் கூடும் சமூதாய நிகழ்ச்சிகளில் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

  • பெரிய தொழில் நிறுவனங்களில் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • கைப்பேசி, இணையம் பயன்படுத்தும் முஸ்லிம் பெண்களை அவர்களின் பெற்றோர்/பாதுகாவலர் கவனமாகக் கண்காணிப்பதோடு, அப்பெண்களுக்கும் அநாமதேய அழைப்புகள் வரின் அதனை முறையாகப் பெற்றோர்/பாதுகாவலரிடம் தெரியப்படுத்த பயிற்றுவிக்க வேண்டும்.

  • பி.ஜே.பி ஆட்சி செய்யும் மாநிலங்களில் பயணம் செல்லும் போது அந்நியரின் சதிக்கு ஆளாகிவிடாமல் கவனமாக இருக்க வேண்டும். குஜராத்தில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் இஸ்ரத், சொராபுதீன் போன்றவர்களைத் தீவிரவாதிகள் என்று போலி முத்திரைக் குத்தி அநியாயமாகப் படுகொலை செய்த பாஜக பயங்கரவாத நிகழ்வுகள் நடக்க வழிவகுக்கக்கூடாது.

  • ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் எங்காவது நடந்தால் முஸ்லிம் பெண்கள், வியாபாரத் தலங்கள், மதரஸாக்கள், பள்ளிவாசல்கள் ஆகியவைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முக்கியமாக அதிகமான முஸ்லிம் இளைஞர்கள் வெளிநாடுகளில் வேலைபார்க்கும் ஊர்களிலும் முஸ்லிம்கள் குறைந்த எண்ணிக்கையில் வாழும் ஊர்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய ஜமாஅத்துகள், அமைப்புகள் கவனம் செலுத்த வேண்டும்.

  • முஸ்லிம்கள் நடத்தும் கல்வி நிலையங்களில் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியம்.

அரசு இயந்திரங்களின் முழு ஒத்துழைப்புடன் நாட்டில் ஆக்டோபஸ் போன்று பரவி வரும் ஹிந்துத்துவ-இஸ்ரேலிய பயங்கரவாதத்திலிருந்து பாதுகாப்புப் பெற இத்தகைய நடவடிக்கைகள் மிகப் பெரிய பலனை ஏற்படுத்தி விடாது என்பது தெரிந்ததே. இருப்பினும் ஆரம்ப நடவடிக்கைகளாக இவற்றை உடனடியாக கவனிப்பதோடு, முஸ்லிம் சமுதாயம் ஒன்றிணைந்து நாட்டில் வளர்ந்து வரும் ஹிந்துத்துவ-இஸ்ரேலிய கூட்டு பயங்கரவாதத்தை வேரடி மண்ணோடு சாய்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.

இதுவே இப்போதைய உடனடித் தேவையாகும்.

- முஹம்மது அலி. ஐ.பி.எஸ்

[குறிப்பு : கட்டுரை மிகச்சில மாற்றங்களுடன் சுட்டிகள் இணைக்கப் பட்டுள்ளன - சத்தியமார்க்கம்.காம்]

தேங்க்ஸ் டு : சத்தியமார்க்கம்.காம்

புதன், 21 அக்டோபர், 2009

மார்கோவா குண்டு வெடிப்பு: வெளிநாட்டுத் தொடர்புகள் குறித்து விசாரணை! , சனாதன் சான்ஸ்தாவை தடைசெய்ய கோவா பரிசீலனை!

கோவா மாநிலம் மார்கோவாவில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் தொடர்புடைய சனாதன் சான்ஸ்தா என்ற வலதுசாரி இந்து அமைப்பின் வெளிநாட்டுத் தொடர்புகள் குறித்து கோவா காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
ராம்நாதி என்ற இடத்தில் உள்ள ஆசிரமத்திற்கு வெளிநாட்டிலிருந்து சிலர் அடிக்கடி வந்து போயிருக்கின்றனர். இதனை காவல்துறையிடம் உறுதி செய்து கெண்டேன். வெளிநாடுகளிலிருந்து வருவோர் காவல்நிலையத்தில் தாக்கல் செய்ய வேண்டிய "சி"ஃபார்மைக்கூடத் தாக்கல் செய்யவில்லை என்று கோவா மாநில உள்துறை அமைச்சர் ரவி நாயக் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார். இந்த இடத்திற்கு அதிகமான வெளிநாட்டவர்கள் வந்து சென்றிருக்கின்றனர். இங்கு அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பது குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார். இங்கு வந்து சென்ற வெளிநாட்டவர் குறித்து அறிய காவல்துறையினர் முயன்றனர். ஆனால் ஆசிரமத்தில் இதுபற்றிய பதிவுகள் எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார்.
குண்டு வெடிப்பை நிகழ்த்தியது சனாதன் சான்ஸ்தா என்ற அமைப்புதான் என்ற குற்றச்சாட்டை அந்த அமைப்பு மறுத்துள்ளது. ஆனால் குண்டு வெடிப்புடன் தொடர்புடைய அந்த அமைப்பைச் சார்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். மேலும் சிலர் இது தொடர்பாக காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் இனிமேல்தான் முறைப்படி கைது செய்யப்பட வேண்டும். குண்டு வெடிப்பைத் தொடர்ந்து இந்த ஆசிரமத்தின் வெளிநாட்டுத் தொடர்புகள் குறித்து அறிவது மிகவும் முக்கியம் என்றும் ரவி நாயக் கூறியுள்ளார். ஞாயிற்றுக் கிழமை அன்று இந்த ஆசிரமத்தில் மூன்று பிரெஞ்சுக்காரர்கள் தங்கியிருந்தார்கள் என்று கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த போது அவர் கூறினார்.
இந்த அமைப்பை தடை செய்வது குறித்து பரிசீலனை செய்து வருகிறோம். ஆனால் இதுகுறித்து அரசு ரீதியான முடிவு எடுக்கப்படவில்லை என்று கோவா மாநில அரசு தலைமை வழக்கறிஞர் சுபோத் கான்டக் திங்கள் கிழமையன்று கூறினார்.இந்த அமைப்பை மத்திய அரசுதான் தடை செய்ய வேண்டுமா அல்லது கோவா மாநிலத்தில் மட்டும் தடை செய்யலாமா என்பது குறித்து மாநில சட்ட அமைச்சகம் ஆய்ந்து வருவதாக அவர் கூறினார்.
தீபாவளி அன்று மார்கோவாவில் நடைபெற்ற இருவரைப் பலிவாங்கிய குண்டு வெடிப்பைத் தொடர்ந்து சனாதன் சான்ஸ்தா அமைப்பு மாநிலக் காவல்துறையால் தீவிரமாகக் கன்காணிக்கப்பட்டு வருகிறது.
source:inneram