இந்துத்துவ தீவிரவாதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்துத்துவ தீவிரவாதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 14 செப்டம்பர், 2011

மாலேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 முஸ்லிம்கள் அப்பாவிகள்! என்.ஐ.ஏ

thumbnail[

மும்பை: கடந்த 2006 ஆம் ஆண்டு மாலேகான் குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்கள் என கைது செய்யப்பட்டு சிறையில் வாடிக்கொண்டிருக்கும் 9 முஸ்லிம்கள் குண்டு வெடிப்பில் தொடர்பில்லாத அப்பாவிகள் என என்.ஐ.ஏ எனப்படும் தேசிய புலனாய்வு துறை தெரிவித்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் தடை செய்யப்பட்ட இயக்கமான சிமியுடன் தொடர்புடைய இவர்கள் இந்த இரட்டை குண்டு வெடிப்பை நிகழ்த்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். இக்குண்டு வெடிப்பில் 31 பேர் கொல்லப்பட்டனர் 312 பேர் காயமடைந்துள்ளனர். ஆனால் புலனாய்வுத்துறை நீதிமன்றத்தில் இவர்களின் பிணை மனுக்கு இந்த தடவை எதிர்ப்பு தெரிவிக்காது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2009 ல் சிபிஐ 9 முஸ்லிம்களுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது 2010ல் சுவாமி அசிமானந்தா மாலேகான் குண்டு வெடிப்பு நிகழ்வு இந்துத்துவா சக்திகளின் மூலம் நிகழ்த்தப்பட்டது என இந்துத்துவாக்களுக்கு எதிராக கொடுத்த வாக்கு மூலத்தால் சிபிஐயின் விசாரணையின் போக்கை மாற்றியது. தற்போது தலைகீழ் மாற்றமாக சி.பி.ஐ என்.ஐ.ஏவுக்கு அளித்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்துத்துவா நபர்களை மட்டும் விசாரித்தால் போதுமானது என்று குறிப்பிட்டுள்ளது.

சிபிஐ செய்த இந்த தவறுகளின் விளைவாக இந்த 9 அப்பாவி முஸ்லிம்கள் கடந்த 5 வருடமாக சிறையில் வாடி வருகின்றனர் அதேசமயம் அதில் சம்மந்தப்பட்ட இந்துத்துவா கூட்டத்தின் ஒருவர் பெயர் கூட இந்த வழக்கில் சேர்க்கப்படவில்லை . இப்போது தான் முதன்முறையாக புலனாய்வுத்துறை மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் முஸ்லீம்களுக்கு எப்பங்குமில்லை என்ற அறிவித்துள்ளதோடு அவர்களை விடுவிக்கவும் நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 31 ஜனவரி, 2011

இந்துத்துவா தீவிரவாதிகளையும் தோலுரிக்குமா தினமலர்..?




லகில் வாழும் மானுடர்களில், அவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவராயினும், எந்த மொழியுடையவராயினும், எந்த மதத்தையுடையவராயினும் அவர்களில் நல்லவர்கள்- கெட்டவர்கள் என்று இரு பிரிவினர் இருப்பது போன்று, எந்த நாட்டை எடுத்துக் கொண்டாலும் அந்த நாட்டில் தீவிரவாதிகள் இல்லை என்று சொல்லிவிட முடியாது. அந்த அடிப்படையில் பாகிஸ்தானிலும் தீவிரவாதிகள் இருக்கலாம்; இருப்பார்கள். ஆனால், ''சோறு திங்கலன்னா பூச்சாண்டியிடம் புடுச்சு குடுத்துருவேன்' என்று குழந்தைகளுக்கு பயம் காட்டும் தாய்மார்களைப் போல் பாகிஸ்தானை தீவிரவாத நாடாக காட்டுவதில் ஊடகங்களுக்கு அதிலும் குறிப்பாக தினமலருக்கு என்னதான் ஆனந்தமோ தெரியவில்லை. அந்த பத்திரிக்கையில் 'டவுட் தனபாலு' என்ற பகுதியில்,


மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா: பாகிஸ்தானில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்படவுள்ளது. டில்லி வந்தடையும் வெங்காயத்தை உடனடியாக பொதுமக்களுக்கு வினியோகிக்க நடவடிக்கை எடுக்கும்படி, டில்லி முதல்வரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
டவுட் தனபாலு: என்னது...? பாகிஸ்தான்ல இருந்து வெங்காயமா...? ஊம்... அந்த நாட்டு பயங்கரவாதிகள் தோலைத் தான் உரிக்க முடியலை... அவங்க வெங்காயத் தோலையாவது உரிப்போம்...! (அப்பவும் நமக்குத் தான் கண்ணீர் வரும்.)


என்று வெளியிட்டுள்ளது தினமலர்.
இதன் மூலம் பாகிஸ்தானில் மட்டும்தான் தீவிரவாதிகள் இருப்பது போன்றும், அவர்களின் தோலை உரிக்கமுடியவில்லையே என்று ஆதங்கப்படுவது போன்றும் காட்டுகிறது தினமலர். மேலும் அவங்க வெங்காயத் தோலை உரிச்சாலும் நமக்குத் தான் கண்ணீர் வரும் என்ற மிகப்பெரிய கண்டுபிடிப்பையும் சொல்கிறது தினமலர். அவங்க வெங்காயத்த மட்டுமல்ல எவங்க வெங்காயத்த உரிச்சாலும், உரிக்கிரவனுக்குத் தான் கண்ணீர் வரும் என்பது கூட தினமலருக்கு தெரியவில்லையா?
மேலும், பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தோலை உரிப்பதற்கு முன்னால், உண்மையில் தீவிரவாதிகளின் தோலை உரிப்பதுதான் தினமலரின் நோக்கம் என்றால், முதலில் நமக்கு பக்கத்தில் இருக்கும் தீவிரவாதிகளின் தோலை உரிக்க தினமலர் தயாரா?
  • பாபர் மஸ்ஜிதை இடித்தவர்கள் தினமலரின் பார்வைக்கு தீவிரவாதிகள் இல்லையா?
  • அதற்கு முன்னால் 'ரத யாத்திரை' என்ற பெயரில் நாடெங்கும் 'ரத்த யாத்திரை' நடத்தியவர்கள் தினமலரின் பார்வைக்கு தீவிரவாதிகள் இல்லையா?
  • குஜராத்-மும்பை-கோவை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் முஸ்லிம்களின் ரத்த ஆற்றை ஓட்டியவர்கள் தினமலர் பார்வையில் தீவிரவாதிகள் இல்லையா?
  • அஜ்மீர் தர்கா- மெக்கா மஸ்ஜித்- சம்ஜாதா எக்பிரஸ்- அஹமதாபாத்- ஜெய்ப்பூர்- மாலேகான்- நந்தேட்- தென்காசி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குண்டு வெடிக்க செய்தவர்கள் தினமலரின் பார்வையில் தீவிரவாதிகள் இல்லையா?
இவர்களின் தோலை உரிக்கவேண்டும் என்று என்றாவது தினமலர் நினைத்ததுண்டா? இல்லை. காரணம் 'நம்மவா' என்பதுதானே! இவ்வாறு நாம் எழுதுவதால் பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஆதரிக்கிறோம் என்று அர்த்தமல்ல. பாகிஸ்தானாக இருந்தாலும், எவராக இருந்தாலும் தீவிரவாதம் வேரறுக்கப்பட வேண்டிய விஷயம் என்பதில் கடுகளவும் மாற்றுக்கருத்து இல்லை. அதே நேரத்தில் எல்லைதாண்டி வந்து கார்கில் போர் மற்றும் மும்பை தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத செயல்களை செய்யும் அளவுக்கு பாகிஸ்தானுக்கு வழியை திறந்து விட்டது யார்? நாட்டின் மொத்த வருமனாத்தில் 60 சதவிகிதத்திற்கு மேல் செலவு செய்து பராமரிக்கபப்டும் ராணுவம், காஷ்மீரில் காட்டும் கடுமையை, கவனத்தை, பாகிஸ்தான் எல்லையில் காட்டியிருந்தால் எல்லைதாண்டி பயங்கரவாதம் நுழையமுடியுமா என்பதையும் சிந்திக்கவேண்டும்.
எனவே தினமலர் போன்ற ஜனரஞ்சக ஊடகங்கள், குற்றங்களை செய்பவர்களை அடையாளம் காட்டும் விஷயத்தில் நாடு-மதம் கடந்த பார்வையை செலுத்தவேண்டும் என்பதே நடுநிலையாளர்களின் வேண்டுகோளாகும்.

முகவை அப்பாஸ்

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

அயோத்தியாவில் பாப்ரி மஸ்ஜிதை அனுமதிக்க முடியாது: பா.ஜ.க

புதுடெல்லி,ஆக31:பாப்ரி மஸ்ஜித் உரிமை வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் அடுத்தமாதம் தீர்ப்பு வழங்கவிருக்கவே அயோத்தியாவில் ராமர் கோவில் மட்டுமே கட்டப்படும் என்ற மிரட்டலுடன் பா.ஜ.க உள்ளிட்ட சங்க்பரிவார் அமைப்புகள் களமிறங்கியுள்ளன.

நீதிமன்றத் தீர்ப்பு தங்களுக்கு எதிராக திரும்பினால் அங்கீகரிக்க இயலாது என்று நிர்பந்தம் கொடுக்கும் தந்திரமே இது.

அயோத்திப் பிரச்சனையை நீதிமன்றத்தால் தீர்க்கமுடியாது என்ற பழைய பல்லவியை தொடர்கின்றன பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ், வி.ஹெச்.பி உள்ளிட்ட ஹிந்துத்துவா அமைப்புகள்.

62 வருட எதிர்பார்ப்பிற்கு பிறகு வெளிவரவிருக்கும் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்கமாட்டோம் என சங்க்பரிவார்களின் அறிவிப்பு அயோத்திப் பிரச்சனையின் மூலம் தேசத்தில் மீண்டும் கலகத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதை சுட்டிக்காட்டுகிறது.

அரசியல் ரீதியாக செல்வாக்கு இழந்துள்ள பா.ஜ.க மீண்டும் பாப்ரி மஸ்ஜித் அஜண்டாவை கையிலெடுத்து கரையேற முடிவெடுத்துள்ளது.

ஒன்று அரசு சட்டமியற்றி ராமர் கோவிலைக் கட்டவேண்டும் அல்லது அனைவரின் சம்மதத்தின் மூலம் ராமர் கோவிலைக் கட்ட முயற்சிக்க வேண்டும் என பா.ஜ.கவின் வினய் கத்தியார் கோரியுள்ளார்.

அரசுதான் தேசிய மனோநிலையை கருத்தில் கொண்டு சட்டத்தை இயற்ற வேண்டுமெனவும், கோவில் நிர்மாணம் சமாதான வழிகளின் மூலமா? அல்லது போராட்டத்தின் மூலமா என்பதை அரசுதான் தீர்மானிக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைவர் மோகன் பாகவத் நேற்று முன்தினம் மிரட்டல் விடுத்திருந்தார்.

கோயில் கட்டுவோம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றும் பொறுப்பு தங்களுக்கு இருப்பதாக பா.ஜ.கவின் தலைவர் நிதின் கட்காரியும் அறிவித்திருந்தார்.

எல்லா பா.ஜ.க, சிவசேனா எம்.பிக்கள் கையெழுத்திட்ட இதுத்தொடர்பான மனு ஒன்றை பிரதமருக்கு அளிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கோவில் கட்டுவதற்கு அரசு சட்ட இயற்றவேண்டும் எனக்கோரி வி.ஹெச்.பி தேசமுழுவதும் போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளது. காசி,மதுரா ஆகிய இடங்களிலிலுள்ள மஸ்ஜிதுகளும் ஹிந்துக்களுக்கே என வி.ஹெச்.பி கோரும். ஆனால் நீதிமன்றத் தீர்ப்பு வரும் முன்பே அறிக்கை விடுவது முட்டாள்தனமானது என காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்க்வி கூறியுள்ளார்.

இதற்கிடையே பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்படும் காட்சிகள் அடங்கிய சி.டிக்கள் அயோத்தியில் சி.டி.கடைகளிலும், அங்காடிகளிலும் இலவசமாக விநியோகிக்கப்படுவதாக தேசிய பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் இத்தகைய சி.டி க்களை தடைச்செய்ய வேண்டும் என முஸ்லிம் தலைவர்கள் உ.பி.மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

திங்கள், 2 ஆகஸ்ட், 2010

பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டதற்கு ஒருபோதும் மன்னிப்புக் கோர மாட்டேன்' - கல்யான் சிங்

லக்னோ,ஆக2:முன்னாள் உத்தரபிரதேச முதலமைச்சர் கல்யான் சிங் பிஜேபி யில் இணைவதாக செய்திகள் வந்துகொண்டிருக்கும் நிலையில், ஆட்சிக்காக பிஜேபி பல முக்கிய ஹிந்துத்துவா கொள்கைகளில் சமரசம் கொள்வதாகவும் ஆனால் பாபரி மஸ்ஜித் இடிப்பிற்கு தான் ஒரு போதும் மன்னிப்பு கோர மாட்டேன் என்பதாக கல்யான் சிங் தெரிவித்துள்ளார்.

ஜன கிராந்தி கட்சியின் முதல் தேசிய பொதுக்கூட்டத்தில் தலைமை தாங்கி பேசிய அவர்,"எப்படி பிஜேபி இனவாத கட்சி என்று கருதப்படுகிறதோ, அதேபோல் தான் காங்கிரஸ், சமாஜ்வாதி ஆகி கட்சிகளும் இனவாத கட்சிகள்" என்று கூறினார்.

ராமர் கோவில்,பொது சிவில் சட்டம்(பிரிவு 370) ஆகிய முக்கிய ஹிந்துத்துவா கொள்கைகளில் பதவிக்காக பிஜேபி சமரசம் செய்துள்ளதாக கூறியுள்ளார்.

மேலும்,"புதிதாக துவக்கப்பட்டுள்ள எங்கள் கட்சியின் பெயரை சீர்குலைப்பதற்காக சதி நடைபெறுகிறது' என்றும் அவர் விமர்சித்தார்.

முஸ்லிம்களிடம் முலாயம் சிங் மன்னிப்பு கேட்டதை கடுமையாக சாடிய அவர், இதன் மூலம் அவர் ஹிந்துக்களை புண்படுத்தி விட்டார், ஆகவே ஹிந்துக்களின் மனதை புண்படுத்தியதற்காக ஹிந்துக்களிடமும் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.

ராம பக்தர்களின் மீது தாக்குதல் நடத்தியதற்காக வரலாறு அவரை சபிக்கும் என்று உரத்துக் கூறிய கல்யான் சிங், தானோ பாபரி மஸ்ஜித் இடிப்பதற்கு பாடுபட்டதாக தெரிவித்தார்.

"எங்களுக்கு முஸ்லிம்களின் ஓட்டுக்களும் தேவைத்தான், ஆனால் அதற்கு நான் ஒரு போதும் ஹிந்துத்தவ கொள்கைகளில் சமரசம் மேற்கொள்ளமாட்டேன்." என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

போ‌லி எ‌ன்கவு‌ண்ட‌ர் வழ‌க்கை ‌நரே‌ந்‌திர மோடி திசை‌திரு‌ப்ப முய‌‌ற்‌சி: ‌சி.‌பி.ஐ புகா‌ர்

போ‌லி எ‌ன்கவு‌ண்ட‌ர் வழ‌க்கை ‌திசை‌திரு‌ப்ப முய‌ன்றதாக குஜரா‌த் முதலமை‌ச்ச‌ர் நரே‌ந்‌திர மோடி ‌மீது ‌சி.‌பி.ஐ பு‌திய புக‌ா‌ர் ஒ‌ன்றை கூ‌றி‌யிரு‌ப்பதா‌ல் பரபர‌ப்பு ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது.

உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ‌‌சி‌.பி.ஐ தா‌க்க‌ல் செ‌ய்து‌ள்ள ‌‌நிலை அ‌றி‌க்கை‌யி‌ல் இ‌க்கு‌ற்ற‌ச்சா‌ற்று தெ‌ரி‌வி‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளது.

அ‌தி‌ல், சொராபு‌தீ‌ன் எ‌ன்கவு‌ண்ட‌‌ரி‌ல் சு‌ட்டு‌க்கொ‌‌ல்ல‌ப்ப‌ட்ட வழ‌க்கை ‌விசா‌ரி‌‌க்க ‌கீதா லோகே‌‌ரி தலைமை‌யி‌ல் அ‌ப்போது ‌சிற‌ப்பு ‌விசாரணை குழு ஒ‌ன்று அமை‌க்க‌ப்‌ப‌ட்டதாக கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

தம‌க்கு ஆதரவாக செய‌ல்பட காவ‌ல்துறை உயர‌‌திகா‌ரிகளான அமே‌ஷ் சுத‌ர்சமா, எ‌ன்.கே.அ‌மீ‌ன் ஆ‌கியோரை மோடி ‌தி‌ட்ட‌மி‌ட்டே ‌விசாரணை‌ குழுவு‌க்கு இட‌ம் மா‌ற்ற‌ம் செ‌ய்ததாக ‌சி‌.பி.ஐ அ‌திகா‌ரிக‌ள் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

மே‌லு‌ம் வழ‌க்கு ‌விசாரணையை தவறான வ‌ழி‌யி‌ல் நட‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்று லோகே‌ரி‌க்கு உ‌த்தர‌வி‌ட்டதாகவு‌‌ம் இ‌ல்லையெ‌னி‌ல் அவரது கணவ‌ர் கைது செ‌ய்ய‌ப்படுவா‌ர் எ‌ன்று மோடி ‌மிர‌ட்டியதாக ‌சி‌.பி.ஐ கு‌றி‌‌ப்‌பி‌ட‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இத‌னிடைய சம‌‌ர்ப‌தி ‌சிறை‌யி‌ல் அடை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள அ‌மீ‌த் ஷா‌வி‌ன் ‌பிணை மனு அகமதாபா‌த் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் இ‌ன்று ‌விசாரணை‌க்கு வர உ‌ள்ளது.

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010

சொரபுதீனைக் கொன்ற அமித்ஷா கைது! மோடி கைது எப்போது?

அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி போலி மோதல் சாவு என்ற பெயரில் சொரபுதீன் ஷேக், அவர் மனைவி கௌசர் பீவி, அவரது நண்பர் துள்சி பிரஜாபதி ஆகியோரைக் கொன்று பின்னர் சிபிஐ&ன் கிடுக்குப்பிடியில் மாட்டிய மோடியின் வலதுகரம் என கருதப்படும் குஜராத்தின் உள்துறை அமைச்சராய் இருந்த வரான அமித்ஷாவை கைது செய்ய சிபிஐ பிடிஆணை வழங்கியும் தப்பி ஓடிய அமித்ஷா வெளிநாட்டுக்கு தப்பி ஓட முயற்சி செய்தார். விமானநிலையங்களில் கடுமையான கண்காணிப்பை தீவிரப்படுத்திய சிபிஐ&ன் பிடி இறுகுவதைக் கண்டு அஞ்சிய அமித்ஷா சரண் அடைந்தார். ஞாயிறு அன்று சமர்மதி சிறைச் சாலைக்கு 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.


சபர்மதி சிறையில் காந்தியார் இருந்த சிறை அறையில் அமித் ஷா அடைக்கப்பட்டது பெரும் கொடுமை.

சொரபுதீன், கௌசர் பீவி கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட 15 காவல் துறை அதிகாரிகளும் சபர்மதி சிறையில்தான் அடைக்கப்பட்டுள் ளனர். ஆனால் அவர்களோடு அமித் ஷா சந்திக்க முடியாதபடி உத்தரவிடப்பட்டுள்ளது.

சொரபுதீனை போலி எண்கவுண்டர் செய்து கருணையற்ற கொலை காரராக இருந்த அமித் ஷா விவகாரத்தில் காங்கிரஸுக்கு உள்நோக்கம் கற்பித்த பாஜக அரசியல் அரங்கில் தனிமைப் படுத்தப் பட்டு நிற்கிறது. அப்பாவி ஒருவன் முதலமைச்சரையே கொலை செய்ய வந்ததாக அபாண்டமாகக் கூறி 46 ஏகே. 47 ரக துப்பாக்கிகளை கைப்பற்றியதாகவும் ஒரு லட்சம் வெடிகுண்டுகளை சொரபுத்தீனி டம் இருந்து கைப்பற்றியதாக வளமாக கதை பரப்பியதன் விளைவாக இந்தியா முழுவதும் நிகழ்ந்த பதினேழு ஆயிரம் எண்கவுண்டர்களில் பெரும்பாலானவை போலி எண்கவுண்டர்கள் என்ற உண்மை வெளிவந்த போது அந்த செய்தியில் கவனம் செலுத் தாதவர்களைக் கூட அக்கறைக் கொள்ள வைத்தது என்பது குறிப் பிடத்தக்கது.

அமித் ஷா மட்டும் பிடிபட் டிருக்கிறார். இவரை இயக்கிய மோடி மீது எப்போது சட்டம் பாயும்? என்ற கேள்வி இந்திய திருநாட்டில் உள்ள 120 கோடி மக்களின் உள்ளங்களிலும் எழத் தொடங்கியுள்ளது.

மோடியைக் காப்பாற்றுவதற் காக அமித் ஷா பலிகடாவாக்கப்பட் டுள்ளார் என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மனிஷ் திவாரி கூறியிருக்கிறார்.

அமித் ஷா மீதான கொலைக் குற்றச்சாட்டு பரவலாக பேசப்ப டுகிறது. அவர் மீது எந்த வகையான நடவடிக்கை எடுக்கப்படும் அதில் கண்டிப்பு காட்டப்பட்டு நடவடிக் கை எடுக்கப்படுமா? என்ற கேள்வி நாட்டு மக்களின் மனதில் எழுகிறது. ஏனெனில் மாலேகான், அஜ்மீர், ஹைதராபாத் மக்கா மஸ்ஜித், சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் மீதான நடவடிக்கை, பாபரி மஸ்ஜித் இடிப்புக்குத் துணை போன, லிபரான் ஆணையத்தால் குற்றம் சாட்டப்பட்ட 68 குற்றவாளிகள் மீதான நடவடிக்கைகளை என்னவாயிற்று? என்ற கேள் விகள் தொடர்ந்து எழுந்த நிலையில் இப்போது அமித் ஷா பிடிபட்டிருக்கிறான். அமித் ஷாவை இயக்கியவரும், 3000 பேரின் படுகொலைக்கு காரணமா னவருமான நரேந்திர மோடியும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டால் மட்டுமே இந்நாட்டில் நீதியின் ஆட்சி நிலைத்திருப்பதாக பொருள். என்ன செய்யப் போகிறது? நமது நீதித் துறை.

சதித்திட்டத்திற்கான அலைப்பேசி உரையாடல்களின் ஆதராங்கள்:

சொராபுதீன் படுகொலை சதித்திட்டம் தொடர்பாக முக்கியமான அலைப்பேசி உரையாடல்களின் விபரங்கள்

2006 டிசம்பர் 24-ஆம் தேதியிலிருந்து 30&ஆம் தேதிவரை உள்ள அலைப்பேசி உரையாடலின் விபரம்:]

ராஜ்குமார் பாண்டியன் 9427306077
வன்சரா 9427306294
தினேஷ் 9414159353
உள்துறைஅமைச்சர் 9824010090
விபுல் 9427305065


சனி, 13 பிப்ரவரி, 2010

ஸ்ரீராமசேனா தீவிரவாதிகள் கத்தியால் குத்தி பள்ளி இம்மாம் மற்றும் ஒருவர் பலத்த காயம்.


பெங்களூரில் வைத்து ஸ்ரீராமசேனா தலைவன் பிரமோத் முத்தலிக்கின் முகத்தில் இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் கறுப்பு சாயம் பூசியதைத் தொடர்ந்து மங்களூரில் வன்முறையில் ஈடுபட்டனர் ஸ்ரீராமா சேனா குண்டர்கள்.பண்டுவால் என்ற இடத்தில் சென்றுக்கொண்டிருந்த பஸ்ஸை தடுத்து நிறுத்தி அதில் பயணம் செய்த குத்ரோளி நடுவள்ளி என்ற இடத்திலிலுள்ள மஸ்ஜிதில் இமாமாக பணியாற்றும் உஸ்மான் ஃபைஸி(வயது 32), அவரது சகோதரர் முஹம்மது அஷ்ரஃப் ஃபைஸி(வயது 29) ஆகியோரை குத்திகாயப்படுத்தினர்.
காயமடைந்த இருவரும் மங்களூர் ஹைலேண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மஞ்சேஷ்வரம்,தலப்பாடி ஆகிய இடங்களில் போலீஸ் கடும் பாதுகாப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் சில இடங்களில் தீவைப்பும், வாகனங்களுக்கும் அலுவலகங்களுக்கும் நேராக கல்வீச்சும் நடைபெற்றது. இதற்கிடையே கருப்புச்சாயம் முத்தலிக்கின் முகத்தில் வீசியதைக் கண்டித்து மங்களூரில் ஸ்ரீராம சேனா அழைப்புவிடுத்த முழு அடைப்பினால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்பு ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சியின் அலுவலகங்களுக்கு எதிராகவும் கடைகளுக்கு எதிராகவும் கல்வீச்சு நடைபெற்றது.

காதலர் தினத்தையொட்டி ஒரு தனியார் சேனல் ஏற்பாடுச் செய்த விவாதத்தில் பிரமோத் முத்தலிக் கலந்துக் கொண்டிருக்கும் பொழுதுதான் இளைஞர் காங்கிரசார் முத்தலிக்கின் முகத்தில் கறுப்புச்சாயத்தை பூசினர். கடந்த ஆண்டு மங்களூரில் பொதுவிடுதிக்கு காதலர் தினத்துக்காக வந்த ஏராளமான பெண்களை ஸ்ரீராம சேனாவினர் தாக்கினர். இதைத் தொடர்ந்து முத்தலிக்கை போலீஸ் கைதுச்செய்திருந்தது.மேலும் மங்களூரில் 14 சர்ச்சுகள் தாக்கப்பட்டதின் பின்னணியிலும் பிரமோத் முத்தலிக் உள்ளார். இதனால் மங்களூரில் நுழைவதற்கு போலீஸ் பிரமோத் முத்தலிக்கிற்கு தடைவிதித்திருந்தது.

கடந்த ஆண்டு பிரமோத் முத்தலிக் கூறும்பொழுது, "காதலர் தினத்தை கொண்டாடும் காதலர்களை பிடித்து திருமணம் முடித்துக் கொடுப்போம்" என்றார். இதனால் கோபம் கொண்ட இளைஞர் காங்கிரசார் முத்தலிக்கின் முகத்தில் கறுப்புச்சாயம் பூசியுள்ளனர்.

செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்

முஸ்லிம் வழக்கறிஞர் ஷாஹித் அஸ்மி சுட்டு கொலை: கொன்றது ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகளா?


புதுடெல்லி:மாலேகான் மற்றும் மும்பை ரெயில் குண்டுவெடிப்புகளில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் வாடிவரும் ஏறத்தாழ 50 முஸ்லிம் இளைஞர்களுக்காக வாதாடிய எதிர்தரப்பு வழக்கறிஞர் ஷாஹித் ஆஸ்மி 11/02/2010 ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கபடுகிறது.

இச்சம்பவம் மும்பை குர்லா கிழக்கு பகுதியில் டாக்ஸிமேன் காலனியின் அருகில் அமைந்துள்ள அவருடைய சேம்பரில் வைத்து நடந்தது. 5 அடையாளம் தெரியாத நபர்கள் கிளையண்டுகள் என்றுக் கூறிக்கொண்டு அவருடைய சேம்பரில் நுழைந்து 5 ரவுண்டுகள் சுட்டதில் நிலைகுலைந்த ஆஸ்மியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபொழுது இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

32 வயதாகும் ஷாஹித் ஆஸ்மி மஹாராஷ்ட்ரா மாநிலம் ஜம்மியத்துல் உலமா சார்பாக மாலேகான் மற்றும் மும்பை ரெயில் குண்டுவெடிப்புகளில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் வாடும் கிட்டதட்ட 50 முஸ்லிம் இளைஞர்களுக்காக வாதாடிவரும் வழக்கறிஞராவார்.

ஆஸ்மியின் நெருங்கிய நண்பரான முஸ்லிம் அரசியல் கவுன்சிலின் தலைவர் டாக்டர் தஸ்லீம் ரஹ்மானி தெரிவிக்கையில், "ஆஸ்மி 16 வயதாக இருக்கும்பொழுது தடா ச்சட்டத்தில் கைதுச் செய்யப்பட்டு சிறைச் சென்றவர். பின்னர் அவர் குற்றமற்றவர் எனக்கூறி விடுதலைச் செய்யப்பட்டார். அவர் நெஞ்சுறுதியும், அறிவுத்திறனும், திறமையும், தாழ்மையும் கொண்டவர். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக குறைந்த கட்டணத்திலேயே வழக்குகளில் வாதாடுவார். இவரது கொலைக்குப்பின்னால் எவர்கள் நூற்றுக்கணக்கான அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை சதிச்செய்து தீவிரவாத வழக்குகளில் சம்பந்தப்படுத்தினார்களோ அவர்களாகத்தான் இருப்பார்கள்" என்றார்.

மலேகானைச் சார்ந்த உம்மித் டாட் காம் என்ற இணையதள இதழ் தெரிவிக்கையில், "ஷாஹித் ஆஸ்மி கடந்த 7/11 மற்றும் இதர தீவிரவாத வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்களின் வழக்குகளை கையாண்டபொழுதுதான் வெளியில் தெரியவந்தார். மஹாராஷ்ட்ரா மாநில அரசுக் கொண்டுவந்த MCOCA தீவிரவாத தடைச்சட்டத்திற்கு எதிரான ஜம்மியத்துல் உலமா சார்பாக ஆஸ்மி தாக்கல் செய்த மனு ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பிற்காக கிடப்பில் உள்ளது." என்று கூறுகிறது.

வியாழன், 4 பிப்ரவரி, 2010

முஸ்லிம்களை வேரறுக்கத் துடிக்கும் இந்துத்துவ தீவிரவாதம்!



Who Killed Karkare’ நூல் வெளியிடப்பட்டது


இந்தியாவை இந்துராஷ்டிரமாக உருவாக்கவேண்டும் என்று நினைப்பது இந்துக்கள்கூட அல்ல. இந்து மதப் போர்வையில் மதங்கொண்டு திரியும் மூன்று சதவிகிதப் பார்ப்பனர்களே!

பார்ப்பனர்கள் வெளிப்படையாக நாங்கள் தான் அரசாளத் தகுந்தவர்கள் என்று மார்தட்டினால், மார்பும் இருக்காது, மண்டையும் இருக்காது.
அதற்காக அவர்கள் திசை திருப்பும் யுக்திதான் முஸ்லிம்கள் எதிர்ப்பு முஸ்லிம் தீவிரவாதம் என்ற பூச்சாண்டி!

தீவிரவாதிகள் என்றால் முஸ்லிம்கள் என்று முத்திரை குத்த இந்த நாட்டில் பார்ப்பனர்கள் இருக்கிறார்கள். அதனைப் பெருக்கிட, பதாகை பிடித்துக் காட்ட பார்ப்பன ஊடகங்கள் இருக்கின்றன.
இந்தியாவில் புலனாய்வுத் துறை இருக்கிறது. நிருவாக வர்க்கம் இருக்கிறது.
இவற்றை எல்லாம் வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் ஒரு நூல்தான் who Killed Karkare?.

நூலின் ஆசிரியர் மகாராட்டிர மாநிலத்தின் முன்னாள் அய்.ஜி. காவல்துறை அதிகாரி எஸ்.எம். முஷ்ரிஃப் அய்.பி.எஸ்.
ஓய்வு பெற இன்னும் பல ஆண்டுகள் இருந்தும், இதற்குமேல் பெரும் பதவிகளுக்குச் செல்லும் வாய்ப்பு இருந்தும், அவற்றையெல்லாம் உதறித் தள்ளிவிட்டு தானாகவே முன்வந்து விருப்ப ஓய்வு (VRS) கொடுத்துவிட்டு, பார்ப்பனப் பாசிசக் கும்பலால் திட்டமிட்ட வகையில் பலியாக்கப்படும் உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் வீர சாகச பணியில் ஈடுபட்டு இருக்கிறார்.


மாலேகான் குண்டுவெடிப்பின் பின்னணியில் இருந்த ஒரு சதிகார கும்பலின் சிண்டைப் பிடித்து இழுத்து வந்து முச்சந்தியில் நிறுத்தியவர் கர்கரே என்னும் காவல்துறை அதிகாரியாவார்.


மகாராட்டிர மாநிலத்தைச் சேர்ந்த மாலேகான் என்னும் இடத்தில் சிமி அலுவலகத்தின்முன் குண்டுவெடிப்பு 29.9.2008 அன்று நிகழ்ந்தது. 5 பேர் பலி; 90 பேர் படுகாயம்.மோட்டர் பைக்கில் டைமர் கருவி பொருத்-தப்பட்டு வெடிகுண்டு வெடிக்கச் செய்யப்பட்டது. அந்த மோட்டர் காருக்கு உரிமையானவர் ஒரு பெண் சந்நியாசி. அவர் பெயர் சாத்வி பிரக்யா தாக்கூர். மாணவர் பருவந்தொட்டு பல்வேறு இந்துத்துவா அமைப்பில் இருந்தவர்.
குஜராத் மாநில முதலமைச்சர் நரேந்திர மோடிக்கு நெருக்கமானவர். பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத்சிங்கின் ஆதரவும் உண்டு.


இந்தக் குண்டுவெடிப்பில் முதல் குற்றவாளி இராணுவத்தில் புலனாய்வுத் துறையில் பணியாற்றிய சிறீகாந்த் புரோகித் என்பவர்; மகாராட்டிர மாநிலம் நாசிக் என்னும் இடத்தில் இராணுவக் கல்லூரி ஒன்றை நடத்தி வருபவர்.
வெடிகுண்டுகளைத் தயாரிப்பது எப்படி? கையாளுவது எவ்வாறு? என்பன போன்ற பயிற்சிகளை இந்துத்துவாவாதிகளுக்கு அளிக்கும் இராணுவ அதிகாரி இவர்.


இவர்கள் பயன்படுத்திய வெடிகுண்டு தயாரிப்புக்கான வெடிமருந்தோ இராணுவத்தைத் தவிர வேறு எங்கும் கிடைக்க முடியாதது. மேலும் பல இராணுவத்-தினர் இந்த வெடிகுண்டு குற்றத்தில் தொடர்புடையவர்கள்.
பாரதீய ஜனதா மத்தியில் ஆட்சியில் இருந்தபோது இராணுவத்தை இந்து மயமாக்கும் ஒரு திட்டம் அமல்படுத்தப்பட்டது.
விமானப்படைத் தளபதியாக இருந்து விடுபட்ட விஷ்ணுபகவத் இந்த உண்மையைப் பட்டாங்கமாய்ப் போட்டு உடைத்தார்; ஊடகங்களிலும் வெளிவந்தது.


நாசிக் இராணுவத்தில் பயிற்சி பெற்ற இந்துத்துவாவாதிகள் இந்திய இராணுவத் துறையில் ஆயிரக்கணக்கானோர் ஊடுருவியுள்ளனர் என்பது அதிர்ச்சியூட்டக் கூடிய, அதிரும் தகவலாகும்.


இந்தியாவை இந்து மயமாக்கு!, இந்திய இராணு-வத்தையும் இந்து மயமாக்கு! என்பது இந்துத்துவாவாதிகளின் ஏற்றப் பாட்டாகும்.
அவர்கள் அதிகாரத்தில் இருந்த நேரத்தில், அத-னைத் திட்டமிட்டுச் செய்துவிட்டனர். இராணுவத்-திலிருந்து ஓய்வு பெற்ற 96 உயர்மட்ட அதிகாரிகள் பி.ஜே.பி.யில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.பி.ஜே.பி.யின் செயற்குழுக் கூட்டத்திற்கு இராணுவ அதிகாரிகள் அழைக்கப்பட்டனர் என்பதையும் இந்த நேரத்தில் நினைவூட்டிக் கொள்ளவேண்டும்.
மாலேகான் குண்டுவெடிப்புக் குற்றவாளிகள் 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டனர்.


மாலேகானில் மட்டுமல்ல; பரிதாபாத், போபால், ஜெய்ப்பூர், இந்தூர், நாசிக் முதலிய இடங்களில் அரங்கேற்றப்பட்ட குண்டுவெடிப்புகளிலும் இதே கும்பலுக்குத் தொடர்பு உண்டு என்பதெல்லாம் கண்டுபிடிக்கப்பட்டது.
இராணுவ அதிகாரி புரோகித் தயாரித்து வைத்திருந்த திட்டமோ வெகு பயங்கரமானது. இசுரேலில் தஞ்சம் அடைந்து அங்கிருந்து இந்தியாவில் ஒரு போட்டி அரசை, இந்துத்துவா அரசை நடத்திடவெல்லாம் திட்டமிட்டு இருந்தனர். வரைபடம், அரசமைப்புச் சட்டம், கொடி முதலியவை முதற்கொண்டு வடிவமைக்கப்பட்டிருந்தன.


மடிக் கணினி (லேப்டாப்)யில் இருந்த பதிவுகள் அவர்களைக் காட்டிக் கொடுத்தன.இவற்றையெல்லாம் கண்டுபிடித்தவர், விரிவாகக் குற்றப்பத்திரிகை தயாரிக்கக் காரணமாக இருந்தவர்தான் கார்கரே என்னும் காவல்துறை அதிகாரி.


4000 பக்கங்களைக் கொண்ட தகவல் அறிக்கை-யாக அது உருவாக்கப்பட்டு இருந்தது.அவை வெளியில் வந்தால் ஆரிய ஆர்.எஸ்.எஸ். கும்பலின் பூர்வோத்திரமான அத்தனை அங்க மச்ச அடையாளங்கள் எல்லாம் பளிச் பளிச்சென்று மக்கள் மத்தியிலே அம்பலமாகியிருக்கும்.
இப்படிப்பட்ட ஓர் அதிகாரியை ஆரியம் விட்டு வைக்குமா? இதற்குமுன் விட்டு வைத்ததுதான் உண்டா?


ராமராஜ்ஜியத்தை உருவாக்குவேன் என்று சொன்னவரை மகாத்மாவாக்கியவர்களும் அவர்களே. நான் சொல்லும் ராமன் வேறு; இராமாயண இராமன் வேறு என்று காந்தியார் சொல்ல ஆரம்பித்ததும், அவரை துர் ஆத்மாவாகக் கருதி மார்பில் குண்டு பாய்ச்சி ரத்தம் குடித்த கும்பலாயிற்றே!


திட்டமிட்டார்கள், தீர்த்துக் கட்டிவிட்டார்கள் காவல்துறை அதிகாரி கர்கரேயை.
அதைப்பற்றிய நூல்தான் மகாராட்டிர மாநில முன்னாள் காவல்துறை அய்.ஜி. எஸ்.எம்.முஷ்ரிஃப் அவர்களால் எழுதப்பட்ட ‘‘Who Killed Karkare?’’ என்ற நூலாகும். 2009 இல் முதல் பதிப்பாக வெளி-வந்து, 2010 இல் மூன்றாவது பதிப்பாகவும் வெளிவந்துவிட்டது.


அந்த நூலைப் பற்றிய அறிமுக விழாதான் திராவிடர் கழகத்தின் சார்பிலும், பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பிலும் நேற்று (2.2.2010) மாலை சென்னை பெரியார் திடலில் நடைபெற்றதாகும்.


336 பக்கங்களைக் கொண்ட இந்நூலின் விலை ரூபாய் 300. நேற்றைய விழாவில் ரூபாய் 250_க்கு அளிக்கப்பட்டது.


திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் வெளியிட, திராவிடர் கழகப் பொருளாளர் வழக்கறிஞர் கோ. சாமிதுரை முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து பச்சையப்பன் கல்லூரி மேனாள் முதல்வர் முனைவர் பேராசிரியர் பி.ஆர். அரங்கசாமி, தணிக்கையாளர் ஆர். இராமச்சந்திரன், அப்துல் காதர், பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வா. நேரு, பொதுச்செயலாளர் வடசேரி இளங்கோவன், புதுச்சேரி மு.ந. நடராசன் முதலியோர் பெற்றுக்கொண்டனர்.
பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் வீ. குமரேசன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.


வேர்கள் பதிப்பக உரிமையாளர் எம். குலாம் முகம்மது அவர்கள் தன் உரையில் பார்ப்பனியத்தின் பயங்கரத் தன்மையை எடுத்துக் கூறினார்.
பார்ப்பனர்களால் இந்தியாவுக்கே பேராபத்து சூழ்ந்துவிட்டது.
இவர்களிடமிருந்து இந்தியாவை மீட்கவேண்டும்.
பெரியார் தமிழ்நாட்டிலிருந்து மகாராட்டிரத்திற்குச் சென்றுள்ளார். இந்நூலில் பெரியார்பற்றி நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய தலைமுறையினருக்குப் பெரியார் பற்றி சரியாகத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், வரப்போகும் தலைமுறையில் நடக்க இருக்கும் புரட்சிக்கு பெரியார்தான் கட்டியம் கூறுவார் என்று அவர் சொன்னபோது கலகலப்பான கைதட்டல்.


பார்ப்பனர்களின் கைக்குள் இருக்கும் உளவுத் துறையை விமர்சிப்பது என்பது சாதாரணமானதல்ல. முஷ்ரிஃப் அவர்கள் மிகவும் விரிவாகவே உளவுத் துறையை விமர்சித்திருக்கிறார்.


குடியரசுத் துணைத் தலைவர் அமீத் அன்சாரி அவர்கள் கூட அண்மையில் ஒரு கருத்தைக் கூறியுள்ளார்." உளவுத் துறை என்பது யார் ஒருவருக்காவது பதில் சொல்லக் கடமைப்பட்டதாக (Accountability) இருக்கவேண்டும் " என்று கூறியிருப்பது இந்நூலுக்குக் கிடைத்த வெற்றியாகும் என்றும் குறிப்பிட்டார்.
இந்த நூலுக்குப் பிறகுதான் பாதுகாப்புத் துறை ஆலோசகராக இருந்த பாலக்காட்டுப் பார்ப்பனரான எம்.கே. நாராயணனும் அந்தப் பொறுப்பிலிருந்து எடுக்கப்பட்டுள்ளார்.


திராவிட இயக்கப் பாரம்பரியம் உள்ள பெரியார் அவர்களுக்குப் பிறகு அந்தப் புரட்சியைத் தொடர்ந்து நடத்திச் செல்லும் வீரமணியார் தலைமை வகித்து நடத்தும் இந்த நிகழ்ச்சி புதிய தொடக்கத்தின் வீச்சு என்று குறிப்பிட்டார் குலாம் முகம்மது அவர்கள்.


வி.டி. ராஜஷேகர் ஷெட்டி
தலித் வாய்ஸ் ஆசிரியரும், சமூகநீதித் தளத்தில் தடம் பதித்து வருபவருமான பெங்களூரு வி.டி. ராஜஷேகர் அவர்கள் தம் உரையில் சுருக்கமாகக் குறிப்பிட்டதாவது:
இந்நாட்டில் பார்ப்பனர்களின் முதல் பலி முசுலிம்களே; ஆனால், இந்த உண்மையை எந்த அளவுக்கு முஸ்லிம்கள் உணர்ந்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை என்று தமது ஆதங்கத்தைத் தெரியப்படுத்தினார்.


இந்தியா முழுமையும் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை முஸ்லிம்கள் சிறையில் இருந்து வருகின்றனர். அவர்கள் விடுவிக்கப்படவேண்டும். முஸ்லிம்கள் முஷ்ரிஃப் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கவேண்டும்.
தந்தை பெரியார் அவர்கள் காங்கிரசில் இருந்த-போதே 1925 ஆம் ஆண்டில் சேலத்தில் பேசிய பொதுக்கூட்டம் ஒன்றில் தொலைநோக்கோடு ஒரு கருத்தைக் கூறியுள்ளார். வெள்ளைக்காரர்கள் இந்தியாவில் இருக்கும் போதே பார்ப்பனர்கள் ஆதிக்கத்திற்கு ஒரு முடிவை ஏற்படுத்தவேண்டும். இல்லாவிட்டால், இந்நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்கள் பார்ப்பனர்களின் வல்லாண்மைக் கொடுமையின்கீழ் துன்பப்பட நேரிடும் என்று எச்சரித்தார்.


அதுதான் இன்றுவரை நடந்துகொண்டிருக்கிறது.
முஷ்ரிப் அவர்களால் எழுதப்பட்ட இந்த நூல் அறிவுப்பூர்வமான வெடிகுண்டாகும். இந்த நூல் வெளிவந்த பின் இந்தியாவின் ரா, அய்.பி. போன்ற அமைப்புகள் நடுங்கிக் கொண்டிருக்கின்றன என்று குறிப்பிட்டார்.
தமிழர் தலைவர் கி.வீரமணி

நூலினை அறிமுகப்படுத்திய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் பெரும் அளவு ஆங்கிலத்தில் உரையாற்றினார். இடையிடையே தமிழிலும் விளக்கினார்.


இங்குள்ள முசுலிம்கள் கைபர் கணவாய் வழியாக இந்த நாட்டிற்கு வந்தவர்கள் அல்லர். இங்குள்ளவர்கள் இங்கே பிறந்தவர்கள்தாம். அவர்களை அந்நியர்கள் என்று கூறக் கூடியவர்கள் தான் உண்மையிலே அந்நியர்கள்.
முஸ்லிம் தீவிரவாதி என்ற ஒரு சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். தீவிரவாதிகளில் என்ன முஸ்லிம் தீவிரவாதிகள் இந்து தீவிரவாதிகள்? முஸ்லிம் தீவிரவாதி என்று சொல்பவர்கள் இந்து தீவிரவாதி என்று சொல்கிறார்களா?


இங்கு இந்து ராஷ்டிரத்தை உருவாக்க வேண்டும் என்று ஒரு கூட்டம் துடிக்கிறது. விசுவ ஹிந்து பரிஷத்தின் தலைவராக இருந்தவர் கரண் சிங். ஏன் அவர் அந்த அமைப்பிலிருந்து விலகினார்? அதற்கான காரணத்தை வெளிப்படையாகக் கூறியிருக்கிறாரே.


அவர்கள் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்குப் பதிலாக மனுதர்மத்தைக் கொண்டு வர விரும்புகிறார்கள் என்று சொல்லித்தானே கரண்சிங் அந்த அமைப்பிலிருந்து வெளியேறினார் என்ற ஓர் அரிய தகவலை மன்றத்தில் தெரிவித்தார் ஆசிரியர்.


கர்கரேயை அவர்கள் கொல்லவில்லை, உண்மையை, நீதியைக் கொன்று இருக்கிறார்கள். அந்த உண்மைகளையும், மறைக்கப்பட்ட நீதிகளையும் வெளியில் கொண்டு வரும் முயற்சியில் நூலாசிரியர் வெற்றி பெற்றுள்ளார்.
நம் எதிரிகள் நாணயமானவர்கள் அல்லர். என் உயிருக்கே மூன்று முறை குறி வைத்தனர். நீங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று குறிப்-பிட்டார். (உரை முதல் பக்கம் காண்க).


எஸ்.எம்.முஷ்ரிஃப்:

நூலாசிரியர் எஸ்.எம்.முஷ்ரிஃப் அவர்கள் ஏற்-புரையாகக் கூறியதாவது.
நான் இந்த அளவு பெரிய கூட்டத்தில் கலந்து கொண்டதில்லை. இந்தப் பிரச்சினைக்காக இவ்வளவு பெரிய கூட்டம் இங்கே கூடியிருக்கிறது என்றால், அதற்குக் காரணமான பெரியார் ராமசாமி அவர்களை நினைத்துப் பார்க்கிறேன் (கைதட்டல்).


இதனை இவ்வளவு சிறப்பாக ஏற்பாடு செய்த வீரமணி அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.


மும்பையில் தீவிரவாதிகளால் தாக்குதல் தொடுக்கப்பட்டது. முன்கூட்டியே அய்.பி.க்குத் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் அதை மாநில அரசுக்கு அய்.பி. தெரிவிக்காதது ஏன்?


மராட்டியத்தில் குண்டு வெடிப்பை நடத்தியவர்-கள் இந்துப் பயங்கரவாதிகள். அவர்களின் சதித் திட்-டம் அவர்களிடம் இருந்த லேப்டாப் மூலம் கண்டு-பிடிக்கப்பட்டது. அவற்றையெல்லாம் வெளியில் கொண்டு வந்த காவல்துறை அதிகாரி தான் கார்க்கரே.


அவரைத்தான் திட்டமிட்ட வகையில் படு கொலை செய்துள்ளார்கள். வேறு வகையில் இதனைச் செய்திருந்தால் அது வெளிச்சத்துக்கு வந்துவிடும். இது போன்ற சந்தர்ப்பத்தில் கொலை செய்வது அவர்களுக்கு வசதியாகப் போய்விட்டது.


அபிநவ் பாரத் என்பதும் ஆர்.எஸ்.எஸ்.தான். பார்ப்பனர்கள் அதிக ஆதிக்கம் கொண்ட அமைப்பு இது. இஸ்ரேல் நாடுவரை தொடர்பு வைத்துக் கொண்டிருந்தனர்.


நாக்பூர், புனே போன்ற இடங்களில் 53 இடங்களில் கூட்டங்கள் நடத்தியிருக்கின்றனர்.காமா மருத்துவமனைக்கு இராணுவத்தினரை அனுப்புமாறு கர்க்கரே கேட்டுக் கொண்டும், அதனைச் செயல்படுத்தத் தவறியுள்ளனர். இந்த நிலையில் கர்க்கரே அங்கே சென்றபோது சுட்டுக் கொன்றுள்ளனர்.


இதன் பின்னணியில் உள்ள உண்மைகள் வெளியில் கொண்டு வரப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த நூலை எழுதினேன். இந்த நூலை வெளியிட்டபோது பார்ப்பனர் ஊடகங்கள் இருட்டடிப்பு செய்துவிட்டனர். புனே மிரர் என்னும் ஓர்ஏடு மட்டும் விமர்சித்திருந்தது.


எனக்குக் கொஞ்சம் சோர்வுகூட இருந்தது. ஆனால் இந்தப் பெரியார் மண்ணுக்கு நான் வந்த பிறகு அந்தக் சோர்வு எல்லாம் ஓடோடிவிட்டது. எனக்குப் புதுத்தெம்பே ஏற்பட்டு விட்டது!


பார்ப்பனர் அல்லாதார் விழிப்புணர்வு பெற வேண்டும்.
பார்ப்பனர் அல்லாதாரின் எழுச்சியிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள இசுலாமியர்களை பயங்கரவாதிகள் என்று காட்ட முயற்சிக்கின்றனர். இந்தச் சூழ்ச்சிகளை முறியடிக்க வேண்டும்
என்று கூறினார்.
தென்சென்னை பகுத்தறிவாளர் கழக செயலாளர் சி.செங்குட்டுவன் நன்றி கூறினார்.


இரவு 9.30 மணிக்கு விழா நிறைவுற்றது. மன்றம் நிரம்பி வழியும் அளவிற்குப் பலதரப்பட்ட மக்களும் கூடியிருந்தனர்.


தொகுப்பு: மின்சாரம்

Thanks to Viduthalai.

புதன், 27 ஜனவரி, 2010

திருப்பூர் மாவட்ட த மு மு க மாவட்ட தலைவர் மீது போலீஸ் தாக்குதல்.

திருப்பூர்- ஜனவரி26 போலீஸ் ஸ்டேஷனில் தமுமுக மாவட்ட தலைவர் தாக்கப்பட்டதாக கூறி, திருப்பூர் தெற்கு போலீஸ் ஸ்டேஷனை தமுமுகவினர் நேற்று இரவு முற்றுகையிட்டு மறியல் செய்தனர். விடிய விடிய பதற்றம் நிலவியது.
திருப்பூர், கோம்பைத் தோட்டத்தைச் சேர்ந்தவர் முஹம்மது யூசுப்(வயது 42) . தமுமுக மாவட்ட தலைவரான இவர் மீது திருப்பூர் தெற்கு போலீஸ் ஸ்டேஷனில் புகார் பதிவு செய்யப்பட்டது. விசாரணைக்காக முஹம்மது யூசுப் நேற்று திருப்பூர் தெற்கு போலீஸ் ஸ்டேஷன் வரவழைக்கப்பட்டார்.
எந்த ஒரு விசாரணையும் இல்லாமல் இவரை ஏ.டி.எஸ்.பி முருகசாமி மற்றும் பெண் எஸ்.ஜ மல்லிகா ஆகியோர் இவரை கண்முடிதானமாக தாக்கினர்.அப்போது இவர் நான் தமுமுக மாவட்ட தலைவர் என்று கூறியுள்ளார். அதற்கு நீ எவனா இருந்தால் எனக்கு என்ன என்று முருகசாமி கூறியுள்ளார். பிறகு இவரை நிர்வாணப்படுத்தி தாக்க முயற்ச்சித்திருக்கிறர்கள் அதனால் இவர் கதறிகியிருக்கிறார். இவரை மீண்டும் மீண்டும் தாக்கியிருக்கிறார்கள். அப்போது யூசுப் "நான் இப்போது தான் தலையில் ஆபரேஷன் செய்து உள்ளேன். நான் என்ன தவறு செய்தேன் சொல்லுங்கள்". என்று கேட்டுள்ளார். ஆனாலும் இவரை விட்டு விடவில்லை.
பிறகு மாவட்ட தமுமுக, மாவட்ட மனித நேய மக்கள் கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் கிடைக்க உடனே காவல் நிலையம் முன்பு முற்றுகையிட்டனர்.
பிறகு உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிந்தவுடன். டி.எஸ்.பி. ராஜா தலைமையில் ஏராளமான போலீஸ் அங்கு குவிக்கப்பட்டனர்.போலீசாரை கண்டித்து தாராபுரம் ரோட்டில் தமுமுகவினர் சாலை மறியலும் ஈடுபட்டனர். டி.ஐ.ஜி. பாலநாகதேவி, எஸ்.பி.அருண் ஆகியோர் முற்றுகையிட்டவர்களுடன் பேச்சுவார்தை நடத்தினர்.

தமுமுக மாநில நிர்வாகிகளுடன் உயர் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.
பிறகு யூசுப் கோவை மருத்துவ கல்லுரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். முற்றுகை, சாலைமறியலால், விடிய, விடிய பதற்றம் நீடித்தது. இச்சம்பவத்தை தொடர்ந்து கோவை, திருப்பூரில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
செய்தி:kovaimediavoice

வியாழன், 21 ஜனவரி, 2010

நாவை அடக்குவாரா கமல்!

சரத்குமார் தயாரிப்பில் வெளிவர இருக்கும் ஜக்குபாய் படத்தின் காட்சிகள் இணையதளத்தில் வெளியானதாக சொல்லி சரத்குமார் மற்றும் நடிகலிநடிகையர்கள் செய்த அமளிதுமளி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சரத்குமார் தயாரிப்பில் வெளிவர இருக்கும் ஜக்குபாய் படத்தின் காட்சிகள் இணையதளத்தில் வெளியானதாக சொல்லி சரத்குமார் மற்றும் நடிகலிநடிகையர்கள் செய்த அமளிதுமளி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரிலீஸ் ஆவதற்கு முன்பே படம் வெளியானதாகவும் இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றும் நடிக பட்டாளம் கண்டனக் கூட்டம் நடத்தியது. அதில் பலரும் பல தத்துவ முத்துக்களை உதிர்த்தனர். ரஜினிகாந்த் பேசும் போது நமக்குள் இருக்கும் நபர்களை முதலில் கண்காணிக்க வேண்டும் என்றார். பலரும் பேசியதில் கமல் பேசியது தான் நமக்கு நெருடலை ஏற்படுத்துவதாக இருந்தது.

சிடி தயாரிக்கும் பணமெல்லாம் மும்பை குண்டு வெடிப்பு போன்ற தீவிரவாத செயல்களுக்கு பயன்படுவதாகவும், தீவிரவாதிகள் இதற்கு பின்புலமாக இருப்பதாகவும் குறிப்பிட்டார். தனது படத்தின் சி.டி. கூட பûமா பஜாரில் விற்கப்பட்டது என்றார். சிடி வியாபாரத்தில் பெரும்பாலும் ஈடுபடுவது பெரும்பாலும் மார்க்கப் பற்றற்ற முஸ்லிம்கள் தான். எனவே அவர் தீவிரவாதி என்று குறிப்பிட்டது யாரை என்று எல்லாருக்கும் நன்றாகவே புரிந்தது.

நடிகர்களின் கோரிக்கையை ஏற்ற முதல்வர் , தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற கொலைகளில் தொடர்புடைய குற்றவாளிகளை இன்னும் கைது செய்யாமல் தலையை பியத்துக் கொண்டிருக்கும் ஸ்காட்லாந்து காவல் துறைக்கு இணையான தமிழக காவல்துறைக்கு ஆணையிட்டு கள்ளத்தனமாக படத்தை இணைய தளத்தில் வெளியிட்ட இரண்டு நபர்களை உடனடியாக கைது செய்தார்.

கமலின் துரதிர்ஷ்டம், கைதான இரண்டும் பேரும் முஸ்லிம்கள் அல்ல, உடனடியாக இனிமேல் திருட்டு விசிடி விற்கும் நபர்கள் அதே போல் வாங்கும் நபர்கள் அனைவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர் திரையுலக பிரமுகர்கள்.

திருட்டு விசிடி வாங்குபவர்களும் குண்டர் சட்டத்தில் கைது என்ற கோமாளித்தனமான கோரிக்கையை தமிழக அரசு கூடிய விரைவில் பரிசிலித்து சட்டமாக்கும் என்று தெரிகிறது. ஏனெனில் பொது மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை விட முதல்வருக்கு நடிக, நடிகைகளின் கோரிக்கைதான் முக்கியம்.

எனவே முதல்வர் குண்டர் சட்டத்தை கொண்டு வரலாம். ஆனால் அப்படி ஒரு சட்டம் வந்தால் டிக்கெட் எடுக்க வசதி இல்லாமல் திருட்டு விசிடியில் குடும்பத்தோடு படம் பார்க்கும் பாமர தமிழன் போன்று, Slum dog Millionire’ போன்ற அயல் மொழி படங்களை திருட்டு விசிடியில் பார்க்கும் சினிமாகாரர்களும் ஆங்கிலப்படங்ளை பார்த்து காப்பி அடிக்க சி.டி. வாங்கும் இயக்குனர்களும் (?), கதாசிரியர்களும் (?) அல்லவா சிக்குவார்கள்.

எது எப்படியோ, முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் உன்னைப்போல் ஒருவன் படம் எடுத்து முஸ்லிம் சமுதாயத்தின் கவனக் குறைவால் தப்பித்த கமல், இப்போது முஸ்லிம் சமூகத்தை திரும்ப ஒரு முறை சீண்டியிருக்கிறார். தொடர்ந்து இது போன்ற வேலைகளில் கமல் ஈடுபடுவாரானால் முஸ்லிம் சமுதாயம் அதை வேடிக்கை பார்க்காது என்று கமலுக்கு எச்சரிக்கை விடுக்கிறோம்.

நீலாங்கரை இரட்டை கொலை தொடர்பாக கருத்துக்களை தெரிவித்த விஜயகாந்துக்கு நோட்டீஸ் அனுப்பிய காவல்துறை, திருட்டு சி.டி.க்காரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் உள்ள தொடர்பை நன்கு (?) அறிந்த கமலுக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பினால் பல உண்மைகள் (?) வெளிவரும், செய்வார்களா?

வியாழன், 31 டிசம்பர், 2009

கோத்ரா:முஸ்லிம் பெண்களை கொடூர சித்திரவதைக்குள்ளாக்கிய போலீஸ்

அஹ்மதாபாத்:குஜராத் மாநிலத்திலிலுள்ள கோத்ராவில் முஸ்லிம் பெண்களை காவல்துறை கொடூர சித்திரவதைக்குள்ளாக்கியதாக சிட்டிசன் ஃபார் ஜஸ்டிஸ் அண்ட் பீஸ் என்ற அமைப்பு வெளிப்படுத்தியுள்ளது.
இது சம்பந்தமாக விசாரித்து அறிக்கையை சமர்ப்பிக்க கோத்ரா முதல் வகுப்பு ஜூடிசியல் மாஜிஸ்ட்ரேட் மூத்த போலீஸ் அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார்.
போலீஸ் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்ட பெண்களை இவ்வமைப்பின் செயலாளர் தீஸ்டா செடல்வாட் நேற்று பத்திரிகையாளர்களுக்கு முன்னால் ஆஜர்படுத்தினார். சச்சரவில் ஈடுபட்டார்கள், காவல்துறையினர் மீது கல்லெறிந்தார்கள் என்று குற்றஞ்சாட்டி கைதுச்செய்த பெண்களை வீட்டில் வைத்தும் காவல்நிலையத்தில் வைத்தும் சித்திரவதைக்கு ஆளாக்கியுள்ளனர். மேலும் அவர்களை கற்பழித்துவிடுவதாக பயமுறுத்தியுள்ளனர். பின்னர் இவர்களை ஜாமீனில் வெளியே விட்டுள்ளனர்.
டிசம்பர் 9 ஆம் தேதி இரவில் பசு திருடியதாக குற்றஞ்சாட்டப்பட்ட செய்யத் ஹுசைன் பதாமினை தேடி கோத்ரா பி டிவிசன் காவல்நிலைய போலீசார் கெனி ப்ளாட்டில் வந்துள்ளனர் . 14மாதங்களாக தலைமறைவாகவிருந்த பதாமையும் மற்றும் சிலரையும் கெனி ப்ளாட்டிலிருந்து கைதுச்செய்தாலும் பின்னர் அவர்கள் போலீசின் பிடியிலிருந்து தப்பிச்சென்றுள்ளனர். அதே நாளில் இரவு 1.05 மணியளவில் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவிலிலுள்ள ஹாதிலா ப்ளாட்டில் பதாமும் அவருடைய கூட்டாளிகளும் ஒளிந்திருக்கிறார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அங்கு தேடிச்சென்றுள்ளனர். ஆனால் அவர்கள் அங்கு இல்லாததால் மூன்று வீடுகளிலிருந்து பணத்தையும், தங்க நகைகளையும் எடுத்துச்சென்றுள்ளனர். மேலும் அவ்வீடுகளிலிருந்து பெண்களை மட்டும் பிடித்த போலீஸ் அவர்களை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சித்திரவதைக்கு ஆளாக்கியதாக தெரிவிக்கிறார் தீஸ்டா செடல்வாட்.
தாயின் மடியிலிருந்த 19 நாளே ஆன குழந்தையைக்கூட கீழே தூக்கியெறிய அவர்கள் தயங்கவில்லை என அவர் கூறுகிறார். பின்னர் சச்சரவு, போலீஸ் மீது கல்லெறிந்தார்கள் என்று குற்றஞ்சாட்டி 8 பெண்களை கைதுச்செய்துள்ளனர். அதிகாலை 4 மணியளவில் கோத்ரா சப்-ஜெயிலுக்கு கொண்டுச் சென்றுள்ளனர். செல்லும் வழியில் போலீஸ் வேனில் வைத்தும் அவர்களை உடல் ரீதியாக சித்திரவதைக்கு ஆளாக்கியுள்ளனர். அடுத்த நாள் நீதிமன்றத்தில் இந்தப்பெண்களை ஆஜராக்கியபொழுது கோத்ரா ஜுடிசியல் நீதிமன்ற நீதிபதி எம்.மலேவாலா அப்பெண்களை மருத்துவமனையில் அனுமதிக்கவும், இச்சம்பவத்தைக்குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார். ஆனால் மாலைவேளை வரை அப்பெண்களை மருத்துவமனையில் அனுமதிக்காததுடன் அவர்களுக்கு சிகிட்சை அளிக்க ஆண் டாக்டர்கள்தான் வரவேண்டும் என்று நிர்பந்தித்துள்ளனர் என தீஸ்டா செடல்வாட் குற்றஞ்சாட்டுகிறார். இதனால் சிகிட்சை பெற தயங்கிய பெண்களுக்கு எவ்வித தொந்தரவும் சித்திரவதையும் செய்யப்படவில்லை என்ற மருத்துவ அறிக்கையை தயார் செய்ய எளிதானது. இச்சம்பவத்தை குறித்து நேரில் சென்று விசாரிக்க தேசிய பெண்கள் கமிசன் கோத்ரா செல்ல அவர்கள் கோரினர். ஒரு சப்-இன்ஸ்பெக்டர் 3 கான்ஸ்டபிள்களின் பெயர்களை அப்பெண்கள் தங்களது குற்றச்சாட்டில் குறிப்பிட்டுள்ளனர்.
அதேவேளையில், இச்சம்பவத்தை காவல்துறை மறுத்துள்ளது. குற்றவாளிகளை கைதுச்செய்வதை தடுக்க பெண்கள் முயன்றதாக குற்றஞ்சாட்டுகிறார் பஞ்சிமஹல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ஜி.எம்.முதாலியா. கோத்ரா முஸ்லிம் சமூக தலைவர் முஹம்மது ஹனீஃப் கூறுகையில் கோத்ரா நகரில் வசிக்கும் சிறுபான்மை மக்கள் காவல்துறையின் கொடுங்கோன்மைக்கு இலக்காகிறார்கள். ஆண்கள் அவரகளது அன்றாட வாழ்க்கைக்கு தேவையானவற்றை சம்பாதிக்க இயலாத நிலை உள்ளது. நகரின் வெளிப்பகுதியில் வசிக்கும் பல குடும்பங்கள் போலீஸின் தொந்தரவிற்கு பயந்துபோய் உள்ளனர். இது சம்பந்தமாக பல முறை அதிகாரிகளிடம் புகார் செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

புதன், 23 டிசம்பர், 2009

பக்தர்களைத் தாக்கிய ராஜ் தாக்கரே குண்டர்கள்!



மும்பையில் உள்ள சித்திவிநாயக் கோவிலுக்கு வெளியே படுத்துத் தூங்கிய அப்பாவி பக்தர்களை தாக்கி காட்டுமிராண்டிகள் போல நடந்துள்ளனர் மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா கட்சியினர்.

நேற்று இரவு இந்த அக்கிரமம் நடந்துள்ளது. இந்தத் தாக்குதலுக்கு நாங்கள்தான் காரணம் என்றும் பெருமையாக அவர்கள் ஒப்புக் கொள்ள வேறு செய்துள்ளனர்.

ராஜ் தாக்கரேவை யார் பளார் என கன்னத்தில் அறைகிறாரோ அவருக்கு ரூ. 1 கோடி கொடுக்கப்படும் என சமீபத்தில் அகில பாரத பிராமணர் மகா சங்க தலைவர் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பால் ராஜ் தாக்கரே கட்சியினர் கடும் கோபமடைந்தனர்.

அதன் விளைவே நேற்று இரவு நடந்த சித்திவிநாயகர் கோவில் தாக்குதல் என்று கூறப்படுகிறது.

கோவிலுக்கு அருகே தூங்கிக் கொண்டிருந்த பக்தர்களை மரக் கட்டைகளால் ராஜ் தாக்கரே கட்சியினர் காட்டுத்தனமாக தாக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோவும் வெளியாகியுள்ளது.

இருப்பினும் இதுகுறித்து போலீஸார் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை. தாக்குதல் நடத்தியவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

வியாழன், 3 டிசம்பர், 2009

ஹிந்து பயங்கரவாதத்தை சகித்துக்கொள்ள முடியாது- ப.சிதம்பரம்


புதுடெல்லி:ஜிஹாது தீவிரவாதிகளை(?)ப்போல் ஹிந்து தீவிரவாதிகளும் இந்தியாவில் தாக்குதல் நடத்துவதாக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ராஜ்யசபையில் தெரிவித்தார்.
கடந்த ஒருவருடத்தில் இத்தகைய 12 தாக்குதல்களை பாதுகாப்பு படையினர் முறியடித்ததாகவும் அவர் தெரிவித்தார். உள்நாட்டு பாதுகாப்பு குறித்து ராஜ்ய சபையில் நடைபெற்ற விவாதத்திற்கு பதிலளிக்கையில்தான் உள்துறை அமைச்சர் இதனை தெரிவித்தார். முஸ்லிம்-ஹிந்து பயங்கரவாதம் ஒரேபோன்று தவறானது இரண்டையும் இந்த தேசம் சகித்துக்கொள்ளாது. என்றும் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

"ஜிஹாது தீவிரவாதமாக" இருந்தாலும் "இந்து தீவிரவாதமாக" இருந்தாலும் அரசு அவற்றை ஒரு போதும் அனுமதிக்காது என்று சிதம்பரம் கூறியதை அடுத்து பிரச்சனை தொடங்கியது.
இந்து தீவிரவாதம் என்று கூறிய சிதம்பரம் இஸ்லாமிய தீவிரவாதம் என்று கூறவில்லை. இஸ்லாமிய தீவிரவாதம் என்ற வார்த்தையை சிதம்பரம் வேண்டுமென்றே தவிர்த்துவிட்டார் என்று பாஜக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

உள்நாட்டுப் பாதுகாப்பு குறித்த விவாதத்தில் பதில் அளித்துப் பேசிக் கொண்டிருந்த சிதம்பரம், பாஜகவின் குறுக்கீட்டால் கோபமடைந்தார். பாரதீய ஜனதா கட்சியை சமாதானப்படுத்துவதற்காக நான் என்னுடைய வாதத்தை மாற்றிக் கொள்ள மாட்டேன். என்னுடைய வாதமெல்லாம், மத அமைப்புகள் - இந்து மத அமைப்பாக இருந்தாலும் அல்லது இஸ்லாமிய மத அமைப்பாக இருந்தாலும் தீவிரவாதத்தைத் தூண்டிவிடுகின்றன என்பதுதான் என்று சிதம்பரம் கூறினார்.

நான் ஒட்டுமொத்த முஸ்லிம்களையோ, இந்துக்களையோ அல்லது மற்ற மதத்தினரையோ குற்றம் சாட்டவில்லை. ஆனால் மதப் பழமைவாதிகள் தீவிரவாதத்தைத் தூண்டிவிடுகின்றனர் என்று சிதம்பரம் கூறினார்.
பின்னர் கோபத்திலிருந்து மீண்ட சிதம்பரம், தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். இது மிகவும் முக்கியமான விசயம் என்றும் சிதம்பரம் கூறினார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

திங்கள், 2 நவம்பர், 2009

Filed under இந்தியா 0 comments மர்கோவா குண்டு வெடிப்பு தொடர்பாக இரண்டு இந்துத்துவ தீவிரவாதிகள் கைது

சமீபத்தில் நடந்த இந்துத்துவ தீவிரவாதத்தில் ஒன்றான மர்கோவா குண்டு வெடிப்பு தொடர்பாக மூன்று பேரை காவல் துறையினர் காவலில் வைத்துள்ளனர். இவர்கள் மகாராஷ்டிரத்தின் பரமதி மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.

இவர்களை பரமதி பகுதி காவல் துறையினர் பிடித்து கோவா போலீசாரிடம் ஒப்படைத்து உள்ளனர்.
என்றாலும் இவர்கள் மூவரும் கைது செய்யப்படவில்லை என்றும் காவலில் தான் வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் போலீஸார் தெரிவித்தனர். கடந்த தீபாவளி பண்டிகையின் முந்தின நாள் மாலை இந்துத்துவ தீவிரவாதிகள் நடத்தவிருந்த நாசவேலைகளில் அவர்களே சிக்கி மரணமடைந்தனர். சனாதன் சன்ஸ்தா என்ற அமைப்பிற்கும் இந்த குண்டு வெடிப்பிற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக காவல் துறை கூறுகின்றது. கூவா காவல் துறை சனாதன் சன்ஸ்தாவின் இரு தொண்டர்களை நேற்று மாநிலத்தில் மேலும் நாச வேலைகள் மூலம் குழப்பம் விளைவிக்க திட்டமிட்டதற்காக கைது செய்தது.

இந்த கைதுகள் குறித்து காவல் துறை கண்காணிப்பாளரிடம் கேட்டதற்கு, "நேற்று நடந்த இரு கைதுகள் தவிர வேறு எந்த கைதுகளும் நடக்கவில்லை" என்று கூறினார். மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து காவலில் எடுத்துவரப்பட்ட மூவர் பற்றி தகவல் தர மறுத்துவிட்டார்.

காவல் துறை வட்டத்திலிருந்து வந்த செய்தியின் படி, "இந்த குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்கள் பயன்படுத்திய SIM கார்டுகள் நேற்று கைது செய்யப்பட்ட இருவரின் பெயரில் வாங்கப்பட்டவை" என்று கூறுப்படுகிறது.

நன்றி,
இந்தியன் எக்ஸ்பிரஸ்.

சனி, 31 அக்டோபர், 2009

தங்களுக்குள் அடித்துக் கொள்ளும் BJP

வடக்கில் பா.ஜ.க தங்களுக்குள் அடித்துக்கொள்வது போதாதென்று தெற்கேயும் அடித்துக்கொள்ள ஆரம்பித்திருக்கின்றது.

தற்பொழுது கர்நாடகாவின் முதல்வர் எடியூரப்பாவிற்கும் கர்நாடக கேபினெட் அமைச்சர்களான செல்வ செழிப்புமிக்க பெல்லாரி மாவட்டத்தின் ரெட்டி சகோதரர்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள சண்டையை தீர்த்து வைக்க பா.ஜ.க வின் மூத்த தலைவர்களுள் ஒருவரான அருண் ஜெட்லீ கர்நாடகா விரைந்துள்ளார்.

பா.ஜ.க வில் ஏற்பட்டு வரும் உட்கட்சி பூசல் புற்று நோய் போல் நாளுக்கு நாள் பரவி வருகின்றது. இந்த உட்கட்சி பூசலால் அந்த கட்சி ஒவ்வொரு மாநில தேர்தல்களிலும் படுதோல்வி அடைந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இழப்பு மேலும் அதிகரிக்காமல் இருக்க பா.ஜ.க மத்தியிலிருந்து அருண் ஜெட்லியை கர்நாடகாவிற்கு அனுப்பிவைத்துள்ளது.

கர்நாடகாவில், எடியூரப்பாவிற்கும் ரெட்டி சகோதரர்களுக்கும் ஏற்கனவே பல கருத்து வேறுபாடுகள் இருந்து வந்திருக்கின்றன. இந்த முறை இவர்களுக்கிடையே கிளம்பியிருக்கும் பிரச்சனை கர்நாடக அரசு புதிதாக விதித்துள்ள வெல்ல நிவாரண பொருட்களை ஏற்றிச்செல்லும் சரக்கு வண்டிகளுக்கான வரியால் ஏற்பட்டுள்ளது. இந்த வரி இரும்புச் சுரங்கத்தில் செல்வாக்கு மிகுந்து திகழும் தங்களை நேரடியாக பாதிப்பதாக அவர்கள் கருதுகின்றனர்.

இந்த பிரச்சினையை அடுத்து ரெட்டிக்கு நெருக்கமான கலெக்டரும் காவல் துறை ஆணையரும் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கர்நாடக முதல்வரிடம் இது பற்றி கேட்டதற்கு, அவர் இதனை மறுத்துள்ளார். அருண் ஜேட்லியின் வரவு பா.ஜ.க விற்கு எதிராக கிளப்பப்பட்டு வரும் புரளிகளைப் பற்றி விசாரணை செய்வதற்காக என்று அவர் கூறினார்.

நன்றி,
NDTV.

வியாழன், 22 அக்டோபர், 2009

இந்துத்துவ தீவிரவாதம் - வெளிச்சத்திற்கு வரும் உண்மைகள்

தீவிரவாதம் என்ற சொல் முஸ்லிம்களுக்கு மட்டுமே சொந்தம் என்று இந்திய மக்கள் அனைவருமே நம்பிக் கொண்டிருந்த வேளையில் இந்துத்துவ தீவிரவாதம் என்ற உண்மையை மக்களுக்கு அறிமுகம் செய்த மாவீரர் ஹேமந்த் கர்கரேவிற்கு நன்றி.(அவரது மறைவிலும் பல மர்மங்கள் உள்ளன). கர்கரே தான் இந்த உலகத்திற்கு இந்துத்துவா தீவிரவாதத்தின் அபாயத்தினை உணர்த்தினார்.

மலேகான் குண்டு வெடிப்பில் பயன் படுத்தப்பட்ட கார் பிரக்யா சிங் என்ற பெண் சாது (அவர்கள் அப்படிச் சொல்கிறார்கள்) விற்கு சொந்தமானது என்றாலும் அவர் அது தனக்கு சொந்தமானது என்பதினை மறைக்க பல முயற்சிகளை மேற்கொண்டும் தோல்வியே மிஞ்சியது.இவரின் இந்த முயற்சியினை கர்கரே மலேகான் குண்டு வெடிப்பிற்கு பின் கூறினார்.

இதில் இன்னும் ஒரு விசேஷம் என்னவெனில், இந்த குண்டு வெடிப்பில் இந்த பெண் சாமியாருடன் இந்திய இராணுவத்தின் முன்னாள் அதிகாரி ஒருவரும் நேரடியாக சம்பந்தப்பட்டிருப்பது தான். இந்த குண்டு வெடிப்பிற்கு காரணம் அபினவ் பாரத் என்ற அமைப்பு என்று கூறப்பட்டது. ஆனால் அந்த அமைப்பின் மேல் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.. (ஆனால் ஒன்றும் செய்யாத பழி பாவங்களுக்காக பல அப்பாவி முஸ்லீம் இளைஞர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள், பல இஸ்லாமிய அமைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன.)

இது போன்ற ஹிந்துத்துவ தீவிரவாத இயக்கங்கள் மீதான நடவடிக்கைகளை மேற்கொள்ள காவல் துறையினற்கு பா.ஜ.க மட்டுமல்ல பெருவாரியான முஸ்லீம்கள் நம்பிக்கை வைத்துள்ள காங்கிரசும் குறுக்கே நிற்கிறது என்பது தான் உண்மை.

சமீபத்தில் கோவாவில் நடந்த குண்டு வெடிப்பில் பயன்படுத்தப்பட்ட ஸ்கூட்டர் ஒரு இந்துத்துவ தீவிரவாதிக்கு சொந்தமானது. (அந்த தீவிரவாதிகளும் இந்த தாக்குதலில் இறந்து போனது நாமும் நம் நாட்டு மக்களும் செய்த புண்ணியம்). இந்த தீவிரவாதிகள் சனாதன் சன்ஸ்தா என்ற ஒரு அமைப்பை சேர்ந்தவர்கள் என்று தெரிந்தும் இன்னமும் அந்த அமைப்பின் மேல் எந்த விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. (அவர்கள் தங்களை பாதுகாத்து உத்தம வேஷம் போட போதுமான அவகாசத்தை அரசாங்கமே வழங்குகிறது. )

இந்த சனாதன் சன்ஸ்தா அமைப்பினரின் கை ரேகைகள் மகாராஷ்டிரத்தின் மிராஜ் மற்றும் சங்கலி பகுதிகளில் நடந்த மதக்கலவரங்களில் இருப்பதாக காவல் துறை கூறுகின்றது.

இந்த இந்துத்துவா தீவிரவாத அமைப்பின் மேல் இவ்வளவு குற்றங்களும் தேச துரோக கறைகளும் இருந்தாலும் மாநில அரசாங்கம் அந்த அமைப்பின் மீது நடவடிக்கை எடுக்க மறுத்து வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்துகின்றது.

இது பற்றி சன்ஸ்தா கூறுகையில், "நாங்கள் கல்வி அறிவு படைத்தவர்கள், நாங்கள் கடந்த 10 - 15 வருடங்களாக எங்கள் மதத்திற்காக பாடுபட்டு வருகிறோம்" என்று கூறுகின்றனர்.(அவர்கள் குண்டு வைத்தும், மதக்கலவரங்களை தூண்டியும் தான் பாடுபடுகிறார்கள் போலும்.)

காவல்துறையோ, "இது போன்ற அமைப்புகள் தங்களது ஆதிக்கத்தை கோவாவிலிருந்து மலேகான் வரை பரப்பி வருகின்றன என்றும் இவர்களை நீங்கள் எப்படி அழைத்தாலும் இவர்கள் தேசத்திற்கு ஒரு மாபெரும் அச்சுறுத்தல் தான்" என்று கூறுகின்றனர்.

நன்றி,
NDTV.