இந்துமதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்துமதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 2 ஜனவரி, 2010

மதுரை ஆதீனத்திற்கு மறுப்பு

காஞ்சி சங்கராச்சாரியாரை நபிகள் நாயகம் (ஸல்), ஈஸா (அலை) ஆகியோருடன் ஒப்பிட்டு, நக்கீரன் 26.12.09 இதழில் மதுரை ஆதீனம் பேசியதற்கு, தமுமுக மாநில செயலாளர் பேரா. காஜாகனி நக்கீரனுக்கு அனுப்பியுள்ள கண்டன கடிதம். (-ஆர்.)



இளையராஜாவைத் தொட விரும்பாத ஜெயேந்திரர் (நக்கீரன் டிசலி26, 2009 இதழ் பக்லி1) என்ற தங்கள் கட்டுரையில் காஞ்சி மடத்தலைவர் ஜெயேந்திரரை, மதுரை மடத்தலைவர் ஆதீனம், நபியின் அவ தாரமாகவும், ஏசுவின் அவதாரமாகவும் சித்தரித்துப் போற்றி யுள்ளதைக் குறிப்பிட் டிருந்தீர்கள். மதுரை ஆதினம் சித்த சுவாதீனத்தோடு தான் பேசினாரா? அவரது வார்த்தைகள் இலட் சக்கணக்கான கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் சமுதாய மக்களைக் கொந்தளிக்க வைத்துள்ளன.

திருச்சியில் விசுவ ஹிந்து பரிஷத் தின் திரிசூலம் வழங்கும் விழாவில் பேசிய அசோக்சிங்கல் திரிசூலத்தின் ஒருமுனை முஸ்லிகளுக்கு, இன்னொரு முனை கிறிஸ்தவர்களுக்கு, மூன்றாவது முனை மதச்சார்பற்ற இந்துக்களுக்கு என்றார் காஞ்சிப் பெரியவாள் அதை ஆமோதிக்க ஆசிர்வதித்தார். மதவெறியை அவர் மறுக் கவில்லை, தன்மனதிலும் அது இருப்பதை மறைக்கவில்லை.

இரக்கம் உடையோர் பேறு பெற் றோர் என்று போதித்த இயேசு பிரானுடன் சங்கரராமன் கொலைப்புகழ் சங்கராச்சாரியை ஆதீனம் ஒப்பிட்டதற்கு பெயர் தான் மடத் தனம் என்பதோ. அச்சம் மடம் பெண்களின் குணங்களாம் இப்போதெல்லாம் பெண்களுக்கு மடம் என்றாலே அச்சம்-என்று என்போன்றோர் எழுதியதற்கு காரணமான ஓர் ஆசாமியை ஒழுக்கம் உயிரினும் ஒம்பப்படும் என்பதை வாழ்க்கையாக்கிய உத்தம நபிகளோடு ஒப்பிடலாமா? குலவெறி கொலை வெறி யாய் வளர்ந்திருந்த காலத்தில் புனித மக்காவில் பீடத்தில் அன்றைய தலித் இனமான கறுப்பினத்தைச் சேர்ந்த பிலால் (ரலி) அவர்களை ஏற்றி அழகு பார்த்தவர் நபிகள் நாயகம்.

காஞ்சி பீடத்தில் ஒடுக்கப்பட்டத் தமிழனால் உட்கார முடியுமா? ஜெயேந்திரரை சிறையிலடைத்த ஜெயலலிதா வைத் தவிர வேறு தலைவர்கள் அவர் எதிரில் கூட உட்கார முடியாதே...

தனக்காகப் பிறர் நிற்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவர் நரகத்தைத் தன் ஒதுங்கிடமாக ஆக்கிக்கொள்ளட்டும் என்று தன்மானக் கருத்தைப் போதித்தவர் நபிகள் நாயகம்.

அணு விஞ்ஞானியாக இருந்தாலும் இந்த மனு விஞ்ஞானி முன்னால் அமர முடியாதே.... சேரியின் தெருக்கள் அழுக் காக இருப்பதால் இச்சுவாமிகள் அங்கே வராது என்று சொன்னவர் தானே இவர் இளையராஜாவைத் தீண்ட விரும்பாதவர் யாரையெல்லாம் தீண்டியிருக்கிறார் என்பதை நக்கீரன் தானே நாட்டுக்குச் சொன்னது. அவரைப்போய் முஸ்லிம்கள் உயிரினும் மேலாய் மதிக்கும் இறைத் தூதரான இயேசு பிரான் மற்றும் நபிகள் நாயகத்தோடு ஒப்பிடுவது ஓர் ஆதீனத்திற்கு அழகா?

மேலும், அவதாரம் என்றால் கடவுள் மனிதவடிவில் மேலிருந்து கீழே இறங்கு வது என்று பொருள் இஸ்லாம் மார்க் கத் தில் அப்படி ஒரு நம்பிக்கைக்கு இடமே இல்லை. மதுரை ஆதீனம் மற்ற மதத்தினரை வம்புக்கிழுக்காமல், தவத்திரு குன்றக் குடி அடிகளாரைப் போல் நடந்துகொள்ள முயற்சிக்கட்டும்.

திங்கள், 9 நவம்பர், 2009

முஸ்லிம் எம்எல்ஏவை அறைந்த ராஜ் தாக்கரே கட்சி எம்.எல்.ஏ (பயங்கரவாதி) க்கள்


மும்பை: மகாராஷ்டிர சட்டசபையில் இந்தியில் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட, சமாஜ்வாடிக் கட்சி எம்.எல்.ஏ. அபு ஆஸிம் ஆஸ்மியை ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிர நவ நிர்மான் கட்சி எம்.எல்.ஏ (பயங்கரவாதி) க்கள்
ஆவேசத்துடன் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மகாராஷ்டிர சட்டசபைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் மராத்தியில்தான் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ராஜ் தாக்கரே கட்சி ஏற்கனவே எச்சரித்திருந்தது.

ஆனால் தான் இந்தியில்தான் பதவியேற்பேன் என்று அபு ஆஸிம் ஆஸ்மி கூறியிருந்தார். அப்படியானால் ஆஸ்மி உ.பிக்குப் போக வேண்டும், இங்கு இருக்கக் கூடாது. இந்தியில் பதவியேற்றால் தடுத்து நிறுத்துவோம் என ராஜ் தாக்கரே கட்சி மிரட்டியிருந்தது.

இதனால் பரபரப்பு நிலவி வந்தது. இந்த நிலையில் இன்று சட்டசபையில் புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தது.

அப்போது, ஆஸ்மி பதவியேற்க வந்தபோது ஏற்கனவே அறிவித்தபடி இந்தியில் பதவிப்பிரமாணம் எடுத்தார்.

இதையடுத்து மகாராஷ்டிர நவ நிர்மான் கட்சியைச் சேர்ந்த 13 எம்.எல்.ஏக்களும் திரண்டு அவரிடம் விரைந்தனர். அவர் முன்பு இருந்த மைக்கைப் பறித்தனர்.

ஆஸ்மிக்கு எதிராக கோஷமிட்டனர். மராத்தியில் பதவியேற்குமாறு கோபத்துடன் கூறினர். அப்போது ராஜ் தாக்கரே கட்சி எம்.எல்.ஏ ராம் கதம் ஆஸ்மியை அறைந்து விட்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அரை மணி நேரத்திற்கு சபை ஒத்திவைக்கப்பட்டது.

சபையில் அமைதியை ஏற்படுத்த முதல்வர் அசோக் சவானும், மின்துறை அமைச்சர் அஜீத் பவாரும் கடுமையாக முயன்றனர்.

திங்கள், 2 நவம்பர், 2009

Filed under இந்தியா 0 comments மர்கோவா குண்டு வெடிப்பு தொடர்பாக இரண்டு இந்துத்துவ தீவிரவாதிகள் கைது

சமீபத்தில் நடந்த இந்துத்துவ தீவிரவாதத்தில் ஒன்றான மர்கோவா குண்டு வெடிப்பு தொடர்பாக மூன்று பேரை காவல் துறையினர் காவலில் வைத்துள்ளனர். இவர்கள் மகாராஷ்டிரத்தின் பரமதி மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.

இவர்களை பரமதி பகுதி காவல் துறையினர் பிடித்து கோவா போலீசாரிடம் ஒப்படைத்து உள்ளனர்.
என்றாலும் இவர்கள் மூவரும் கைது செய்யப்படவில்லை என்றும் காவலில் தான் வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் போலீஸார் தெரிவித்தனர். கடந்த தீபாவளி பண்டிகையின் முந்தின நாள் மாலை இந்துத்துவ தீவிரவாதிகள் நடத்தவிருந்த நாசவேலைகளில் அவர்களே சிக்கி மரணமடைந்தனர். சனாதன் சன்ஸ்தா என்ற அமைப்பிற்கும் இந்த குண்டு வெடிப்பிற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக காவல் துறை கூறுகின்றது. கூவா காவல் துறை சனாதன் சன்ஸ்தாவின் இரு தொண்டர்களை நேற்று மாநிலத்தில் மேலும் நாச வேலைகள் மூலம் குழப்பம் விளைவிக்க திட்டமிட்டதற்காக கைது செய்தது.

இந்த கைதுகள் குறித்து காவல் துறை கண்காணிப்பாளரிடம் கேட்டதற்கு, "நேற்று நடந்த இரு கைதுகள் தவிர வேறு எந்த கைதுகளும் நடக்கவில்லை" என்று கூறினார். மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து காவலில் எடுத்துவரப்பட்ட மூவர் பற்றி தகவல் தர மறுத்துவிட்டார்.

காவல் துறை வட்டத்திலிருந்து வந்த செய்தியின் படி, "இந்த குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்கள் பயன்படுத்திய SIM கார்டுகள் நேற்று கைது செய்யப்பட்ட இருவரின் பெயரில் வாங்கப்பட்டவை" என்று கூறுப்படுகிறது.

நன்றி,
இந்தியன் எக்ஸ்பிரஸ்.

வியாழன், 22 அக்டோபர், 2009

இந்துத்துவ தீவிரவாதம் - வெளிச்சத்திற்கு வரும் உண்மைகள்

தீவிரவாதம் என்ற சொல் முஸ்லிம்களுக்கு மட்டுமே சொந்தம் என்று இந்திய மக்கள் அனைவருமே நம்பிக் கொண்டிருந்த வேளையில் இந்துத்துவ தீவிரவாதம் என்ற உண்மையை மக்களுக்கு அறிமுகம் செய்த மாவீரர் ஹேமந்த் கர்கரேவிற்கு நன்றி.(அவரது மறைவிலும் பல மர்மங்கள் உள்ளன). கர்கரே தான் இந்த உலகத்திற்கு இந்துத்துவா தீவிரவாதத்தின் அபாயத்தினை உணர்த்தினார்.

மலேகான் குண்டு வெடிப்பில் பயன் படுத்தப்பட்ட கார் பிரக்யா சிங் என்ற பெண் சாது (அவர்கள் அப்படிச் சொல்கிறார்கள்) விற்கு சொந்தமானது என்றாலும் அவர் அது தனக்கு சொந்தமானது என்பதினை மறைக்க பல முயற்சிகளை மேற்கொண்டும் தோல்வியே மிஞ்சியது.இவரின் இந்த முயற்சியினை கர்கரே மலேகான் குண்டு வெடிப்பிற்கு பின் கூறினார்.

இதில் இன்னும் ஒரு விசேஷம் என்னவெனில், இந்த குண்டு வெடிப்பில் இந்த பெண் சாமியாருடன் இந்திய இராணுவத்தின் முன்னாள் அதிகாரி ஒருவரும் நேரடியாக சம்பந்தப்பட்டிருப்பது தான். இந்த குண்டு வெடிப்பிற்கு காரணம் அபினவ் பாரத் என்ற அமைப்பு என்று கூறப்பட்டது. ஆனால் அந்த அமைப்பின் மேல் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.. (ஆனால் ஒன்றும் செய்யாத பழி பாவங்களுக்காக பல அப்பாவி முஸ்லீம் இளைஞர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள், பல இஸ்லாமிய அமைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன.)

இது போன்ற ஹிந்துத்துவ தீவிரவாத இயக்கங்கள் மீதான நடவடிக்கைகளை மேற்கொள்ள காவல் துறையினற்கு பா.ஜ.க மட்டுமல்ல பெருவாரியான முஸ்லீம்கள் நம்பிக்கை வைத்துள்ள காங்கிரசும் குறுக்கே நிற்கிறது என்பது தான் உண்மை.

சமீபத்தில் கோவாவில் நடந்த குண்டு வெடிப்பில் பயன்படுத்தப்பட்ட ஸ்கூட்டர் ஒரு இந்துத்துவ தீவிரவாதிக்கு சொந்தமானது. (அந்த தீவிரவாதிகளும் இந்த தாக்குதலில் இறந்து போனது நாமும் நம் நாட்டு மக்களும் செய்த புண்ணியம்). இந்த தீவிரவாதிகள் சனாதன் சன்ஸ்தா என்ற ஒரு அமைப்பை சேர்ந்தவர்கள் என்று தெரிந்தும் இன்னமும் அந்த அமைப்பின் மேல் எந்த விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. (அவர்கள் தங்களை பாதுகாத்து உத்தம வேஷம் போட போதுமான அவகாசத்தை அரசாங்கமே வழங்குகிறது. )

இந்த சனாதன் சன்ஸ்தா அமைப்பினரின் கை ரேகைகள் மகாராஷ்டிரத்தின் மிராஜ் மற்றும் சங்கலி பகுதிகளில் நடந்த மதக்கலவரங்களில் இருப்பதாக காவல் துறை கூறுகின்றது.

இந்த இந்துத்துவா தீவிரவாத அமைப்பின் மேல் இவ்வளவு குற்றங்களும் தேச துரோக கறைகளும் இருந்தாலும் மாநில அரசாங்கம் அந்த அமைப்பின் மீது நடவடிக்கை எடுக்க மறுத்து வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்துகின்றது.

இது பற்றி சன்ஸ்தா கூறுகையில், "நாங்கள் கல்வி அறிவு படைத்தவர்கள், நாங்கள் கடந்த 10 - 15 வருடங்களாக எங்கள் மதத்திற்காக பாடுபட்டு வருகிறோம்" என்று கூறுகின்றனர்.(அவர்கள் குண்டு வைத்தும், மதக்கலவரங்களை தூண்டியும் தான் பாடுபடுகிறார்கள் போலும்.)

காவல்துறையோ, "இது போன்ற அமைப்புகள் தங்களது ஆதிக்கத்தை கோவாவிலிருந்து மலேகான் வரை பரப்பி வருகின்றன என்றும் இவர்களை நீங்கள் எப்படி அழைத்தாலும் இவர்கள் தேசத்திற்கு ஒரு மாபெரும் அச்சுறுத்தல் தான்" என்று கூறுகின்றனர்.

நன்றி,
NDTV.

புதன், 21 அக்டோபர், 2009

பாட்னா மத்ரஸாவில் பயங்கர குண்டு வெடிப்பு இந்துத் தீவிரவாதிகளின் சதியா?

பாட்னா ஹரியனாவில் அமைந்துள்ள மத்ரஸா இஸாத்துல் உலூம் ஹிந்த். இங்கு 65 மாணவர்கள்,6 ஆசிரியர்கள் என 10 அறைகள் உள்ளன.

நேற்று 20-10-2009,இரவு 9 மணியளவில் பயங்கர குண்டு வெடிப்பு நிகழ்ந்த்தது.
இதில் மத்ரஸவின் பின் பகுதி,ஹாஸ்டல் ரூம் , மத்ரஸாவின் அலுவலகம் உட்பட பல பகுதிகள் இடிந்தன. இந்த சம்பவம் இஷா (இரவுத் தொழுகை) தொழுகைக்கு சற்று பின் நடந்த்ததால் உயிர் சேதம்,படுகாயம் ஏதுவும் இல்லை.

மத்ரஸா ஆசிரியர் மவுலானா நவ்சாத் அஹ்மத் அளித்த பேட்டியில் மத்ரஸாவை சுற்றி 2 கி.மீ. வரை நில நடுக்கம் போல் அதிர்ந்த்ததாகவும்,அந்த இடம் சுற்றி புகை மூட்டம் ஏற்பட்டதாகவும் தெறிவித்தார். இதனை இந்துத் தீவிரவாதிகள் செய்த சதியாக இருக்கலாம் என சந்தேககிக்கப்படுகிறது.

திங்கள், 28 செப்டம்பர், 2009

உன்னைப்போல் ஒருவன் - விடுபட்டவை

ஒருவழியாக யாரோ ஒரு புண்ணியவான் தயவில் உன்னைப் போல் ஒருவன் இணையத்திலிருந்து தரவிறக்கி பார்த்தாகிவிட்டது. தொழில்நுட்பம், இசை என்கிற பல கோணங்களில் இந்த திரைப்படம் தமிழ் திரையுலகில் சந்தேகமேயில்லாமல் ஒரு மைல்கல். ஆனால் அற்புதமான ஒரு மேஜையமைத்து, அதில் உயர்தரமான ஒரு பட்டுத்துணியை விரித்து, அதன் மேல் கலைவேலைப்பாடு மிகுந்த தங்கத் தட்டில் வைத்து நரகலை வைத்து பரிமாறியது போல இத்தனை சிறப்பான ஒரு படத்தின் மூலம் இந்துத்துவா என்கிற விஷத்தை பரிமாறியிருக்கிறார் கமல்.

உன்னைப் போல் ஒருவன் படத்தை இந்துத்துவா குப்பை என்று பலரும் விமரித்திருந்தாலும் அவர்களால் கவனிக்கப்படாத பல முக்கிய sub text கள் என் அவதானிப்பிற்கு கிடைத்தன. திரைப்படத்தில் இந்துத்துவா விஷத்தை கலப்பதற்காகவே திட்டமிட்டு உருவாக்கப்பட்ட பாத்திரம்தான் கரம்சந்த் லாலா என்கிற எண்ணம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. படம் பார்க்கும் முன்புவரை (நான் படித்த விமரிசனங்களில் இருந்து) சந்தானபாரதியின் பாத்திரத்திற்கும் இந்துத்துவா தீவிரவாததிற்கும் தொடர்பு இருக்கும் என்றுதான் எண்ணியிருந்தேன். ஆனால் படத்தை பார்த்த பிறகு கரம்சந்த் லாலா என்கிற கதாபாத்திரம் மற்ற மூன்று தீவிரவாதிகளுக்கும் ஆயுதம் கடத்தி உதவி செய்த ஒரு ஆயுத வியாபாரி. அதாவது தீவிரவாதிகள் என்றால் முஸ்லிம்கள்தானா என்கிற கேள்வி எழுந்தால் அதுதான் ஒரு கரம்சந்த் லாலா என்கிற இந்து கதாபாத்திரத்தை தீவிரவாதிகளுக்கு உதவி செய்வதாக காட்டியிருந்தோமே என்று சப்பைக் கட்டுவதற்காகதான் சந்தானபாரதி. அதுபோக “ஒன்னு போனா என்ன? அதான் மிச்சம் இரண்டு இருக்கே” என்று சொந்த வாழ்வின் சோகத்தை பகடி செய்தாலும் ஆத்திரப்படாத அளவிற்கு தீவிரவாதியும் கரம்சந்த்லாலாவும் நண்பர்கள். சந்தானபாரதியின் கதாபாத்திரமே பார்ப்பனீய கருத்தாக்கத்தை படத்தில் புகுத்த திணிக்கப்பட்டதாகவே தோன்றுகிறது.

இன்னுமொரு உள்குத்தை எத்தனை பேர் கவனித்தார்கள் என்று தெரியவில்லை. சந்தானபாரதியின் குற்ற வரலாற்றை விளக்கும்போது Community and Currency - Agnostic என்று ஒரு வசனம் வரும். நானறிந்தவரை Agnostic என்கிற ஆங்கில சொல்லுக்கு கடவுள் நம்பிக்கையில்லாதவன் என்று அர்த்தம். அதாவது கரம்சந்த் லாலா ஒரு உண்மையான சனாதானவாதி இல்லை. இதில் யாரை ஏமாற்ற நெற்றியில் திலகம் என்று தெரியவில்லை. இது யாருக்கு வைக்கப்பட்ட ஆப்பு என்றும் புரியவில்லை.

மேலும் அப்துல்லா, இனாயத்துல்லா என்ற பெயர்களைக் கொண்டவர்கள் மட்டும்தான் தீவிரவாதிகள். பிரக்யா சிங் தாகூர், ஸ்ரீகாந்த் புரோகித் என்று பெயர் வைத்தவர்கள் குண்டு வைத்தாலும் அவர்கள் தேசபக்தர்கள். மும்பையிலும், டெல்லியிலும் குண்டுவைத்தவர்கள் மட்டும்தான் தீவிரவாதிகள். மாலேகானில் குண்டுவைத்தவர்கள், நான்டேட்- கான்பூர்- தென்காசி ஆகிய இடங்களில் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டவர்கள் எல்லாம் மகாத்மாக்கள். இதையும் மீறி கரம்சந்த் லாலா என்ற பெயர்களை உடையவர்கள்களுக்கு தீவிரவாதி பட்டம் கொடுக்க வேண்டுமென்றால் அவர்கள் அப்துல்லாவிற்கும், இனாயத்துல்லாவிற்கும் உதவியிருக்க வேண்டும். மற்றபடி ஸ்ரீகாந்த் புரோகித் என்கிற பெயர்களை உடையவர்கள் எல்லாம் தீவிரவாத பட்டியலிலே இடம்பெற முடியாது. இராமகோபாலன், அர்ஜூன் சம்பத் போன்றவர்களை எல்லாம் மிஞ்சிவிட்டார் கமல்.

இஸ்லாமிய தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பற்றிய வசனங்களில் மட்டும் மும்பை, டெல்லி, கோவை என இடங்களின் பெயரைக் குறிப்பிட்டு சொல்லத் தெரிந்தவர்களுக்கு, முஸ்லிம் பெண்ணை கருவறுத்த கதையில் மட்டும் North India என்று பொத்தாம் பொதுவாக சொல்லுவது ஏனோ?. குஜராத் என்கிற் சொல் கெட்டவார்த்தையா என்ன சென்சாரில் வெட்டி விடுவார்கள் என பயப்பட? இங்கு குஜராத் என்கிற சொல்லை மட்டுறுத்த தெரிந்த கமலுக்கு “ குஜராத்ல மோதிப்பார், மோதிப் பார்த்தா தெரியும்” என்கிற வசனத்தில் மட்டும் குஜராத் என்கிற சொல்லை பயன்படுத்த முடிகிறது. இவையெல்லாம் யாரை திருப்தி படுத்த என்று தெரியவில்லை.

கரப்பான்பூச்சிகள் வீட்டுக்குள் வந்தால் அடித்துக் கொல்லச் சொன்னவர்கள், விஷப் பாம்புகள் வீட்டிற்குள் வந்தால் என்ன செய்வது என்று சொல்லவில்லையே? சிலருக்கு அது விஷப் பாம்பு சிலருக்கு அது நாகராஜன். இதில் கமல் இரண்டாம் வகைப் போல இருக்கிறது, அதனால்தான் பாம்புகளை கண்டுக்காமலே விட்டுவிட்டார்.

என்னதான் மிகச்சிறந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்தி எடுக்கப்பட்டிருந்தாலும் அந்நியன், எவனோ ஒருவன் போல உன்னைப் போல் ஒருவனும் ஒரு இந்துத்துவா குப்பைதான்.

thanks to :

வியாழன், 3 செப்டம்பர், 2009

ஊட்டியில் முஸ்லிம்கள் மீது காட்டுமிராண்டி தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் பேராசிரியர் எம் ஹெச் ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் அறிக்கை:

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இன்று வினாயகர் ஊரவலம் நடத்தியவர்கள் காந்தல் சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல் முதல் தொடங்கி ரகளையில் ஈடுபட்டு வந்துள்ளார்கள். ஊட்டி லோவர் பஜார் பள்ளிவாசல் அருகில் வரும் போது சிலைகளை பள்ளிவாசல் முன்பு வைத்து விட்டு ஊர்வலத்தில் வந்தவர்கள் ரகளை யில் ஈடுபட்டுள்ளார்கள். அப்போது காவல்துறையினர் அவர்களை லேசான தடியடி நடத்தி கலைத்துள்ளார்கள். சிதறி ஒடிய ஊர்வலத்தினர் அருகில் உள்ள மார்கெட் பகுதி மீது கல்லெறிந்து விட்டுச் சென்றுள்ளார்கள். இவ்வாறு ரகளையில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத ஊட்டி காவல்துறையினர் மார்க்கெட் பகுதிக்குள் புகுந்து அங்கிருந் தவர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர். ஒரு 70 வயது முதியவரும் தாக்கப்படுவதை கண்டு அந்த இடத்திற்கு வந்த தமுமுக மாவட்டத் தலைவர் அப்துல் ஸமது காவல் துணை கண்காணிப்பாளரிடம் அப்பாவிகளை தாக்கும் உங்கள் நடவடிக்கை நியாயமா என்று கேட்டுக் கொண்டிருந்த நிலையில் அவரும் காவல்துறையினரால் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டுள்ளார். அவர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். இதே போல் அங்கு வந்த மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஷேக்கும் பலமாக தாக்கப் பட்டு நினைவிழந்த நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 15க்கும் மேற்பட்ட அப்பாவி முஸ்லிம்கள் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வினாயகர் ஊர்வலத்தில் சென்றவர்கள் ரகளையில் ஈடுபட அதற்கு எவ்வகையிலும் தொடர் பில்லாதவர்கள் மீது காரணமின்றி ஊட்டி காவல்துறையினர் அராஜகத்தை கட்ட விழ்த்து விட்டுள்ளனர். இந்த அராஜகத் திற்கு காரணமாக இருந்த காவல்துறை அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை உடனடி யாக எடுக்கவும், காயமடைந்த மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கு மாறு தமிழக அரசை கோருகிறோம்.

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2009

இந்துக்களே விழிமின்,எழுமின், கல்கி வந்துவிட்டார். வாருங்கள் அவரைப் பின்பற்றுவோம்!!மோட்சம் பெறுவோம்!!!

ஹிந்துக்களின் வேதாகமத்தில் சொல்லப்படும், கடைசி அவதாரமான கல்கி, இறைதூதர் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மதாவார்.

இதை நான் சொல்லவில்லை, சமீபத்தில் ஹிந்தி மொழியில் வெளிவந்த புத்தகத்தின் சாராம்சமாகும். இந்த நூல் வெளியானபின், இந்தியாவே ஒரு கலங்கு கலங்கி விட்டது என்றால் மிகையல்ல. இதை ஒரு இஸ்லாமியர் எழுதியிருந்தால், அவர் இந்நேரம் சிறையிலடைக்கப்பட்டிருப்பதோடு, அந்த புத்தகத்தையும் தடை செய்திருப்பார்கள்.

ஆனால், கல்கி அவதாரத்தைப் பற்றிய இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு, “பிரபஞ்ச இறைத்தூதின் வழிகாட்டி” என்னும் இந்த புத்தகம், வங்காளத்தில் இருந்து வெளிவந்ததாகும். இது அலஹாபாத் பல்கலைக்கழகத்தில் ஒரு முக்கிய அத்தாட்சியாக இருக்கிறது. இதை எழுதியது, தலைசிறந்த ஆய்வாளரான பண்டிட் வைத் ப்ரகாஷ் என்னும், ஒரு பிராமண சமஸ்கிருத பண்டிட்டாவார்.

பண்டிட் வைத் ப்ரகாஷ, பன்னெடுங்கால கடின ஆராய்ச்சி மற்றும் அயரா உழைப்பில் உருவான இப்புத்தகத்தை, இதே போல ஆய்வு செய்யும் எட்டு கல்விமான்களிடம் சமர்ப்பித்து இருக்கிறார். அவர்களும், முழுக்க இப்புத்தகத்தை படித்துணர்ந்து, பலமான ஆதாரங்களினால், இப்புத்தகத்தின் தகவல், முழுக்க முழுக்க உண்மை தான் என்று சான்றளித்துள்ளனர்.

இந்தியாவின் தலைச்சிறந்த வேதங்கள், குறிப்பிடும் தூதரும் வழிகாட்டியுமான கல்கி அவதாரம், மக்காவில் பிறந்த முஹம்மது என்னும் மாமனிதரே ஆவார். ஆதனால், ஹிந்துக்கள், இனியும் கல்கி அவதாரத்துக்காக காத்திராமல், ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்பு, இவ்வுலகில் உதித்து, இறைத்தூதை எத்தி வைத்து, வாழ்வின் இறுதிவரை இறைபணியாற்றிய இறைவனின் கடைசி தூதரை ஏற்று இஸ்லாத்தைத் தழுவ வேண்டும். இவரது ஆராய்ச்சியின் இறையாண்மையை நிரூபிக்க, பண்டிட், தம் வேதத்திலிருந்து தக்க சான்றுகளை முன்வைக்கிறார்.

1.வேதங்கள், கல்கி அவதாரம் தான், பகவானின் இறுதித் தூதர் என்கிறது. இது, கடைசி தூதர், முஹம்மதுடைய விஷயத்தில் மட்டுமே சரியாக இருக்க முடியும்.

2.ஹிந்து வேதங்களின் முன்னறிவிப்பின் படி, கல்கி நீரினால் சூழப்பட்ட ஒரு இடத்தில் தான் அவதாரம் எடுப்பார். அது தான் ‘ஜஸீரத்துல் அரப்’ என்று சொல்லக் கூடிய கடலால் சூழப்பட்ட அரேபிய தீபகற்பமாகும்.

3.ஹிந்து புனித நூல்களில், கல்கி அவதாரத்தின் தந்தையை, விஷ்னு பகத் என்றும் தாயை சொமானிப் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சமஸ்கிருதத்தில் விஷ்னு என்றால், இறைவன், அதாவது அல்லாஹ் என்று பொருள். அதோடு, பகத் என்றால் அடிமை என்று அர்த்தம்.

ஆக, விஷ்னு பகத் என்பது, அல்லாஹ்வின் அடிமை அதாவது அரபியில், அப்துல்லாஹ் என்னும் பதத்தைத் தருகிறது. சொமானிப் என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு, சாந்தமான அமைதி என்று பொருள். அரபியில் ஆமினா என்ற வார்த்தைக்கும் இதே அர்த்தம் தான். ஆக, இறுதித் தூதர் முஹம்மதின் பெற்றோர் அப்துல்லாஹ் மற்றும் ஆமினா என்பது, உறுதிப்படுகிறது.

4.அதோடு, கல்கி அவதாரம், ஆலிவ் மற்றும் பேரித்தங்கனிகளை உண்டு வாழ்வார் என்றும், வார்த்தை தவறாத நேர்மையாளராக இருப்பார் என்றும் ஹிந்துக்களின் புத்தகங்களில் உள்ளது. ஆக, இது முஹம்மதின் விஷயத்தில் உண்மையாகிறது என்பதாக பண்டிட் ப்ரகாஷ் எழுதுகிறார்.

5.கல்கி அவதாரம் உயர்ந்த மதிப்பு மிக்க குலத்தில் பிறப்பார் என்று வேதங்கள் சொல்கின்றன. இதுவும், மிக உயரிய, மதிப்புமிக்க குறைஷி குலத்தில் பிறந்ததால், முஹம்மதுடைய விஷயத்தில் சரியாகிறது.

6.கல்கி அவதாரத்துக்கு, ஒரு குகையில் இறைவனின் ஏவலர் மூலமாக ஞானம் கிடைக்கும் என்பதாக வந்துள்ளது. ஆக, மக்காவிலேயே, அல்லாஹ்வின் தூதர் ஜிப்ரீல் மூலமாக ஹீரா குகையில் ஞானம் பெற்றது முஹம்மது ஒருவர் தான்.

7.மேலும், கல்கி அவதாரத்துக்கு காற்றின் வேகத்தில் பறக்கும் குதிரை வழங்கப்படுமென்றும், அதன் மூலம் அவர், இவ்வுலகத்தையும், ஏழு வானத்தையும் சுற்றி வருவார் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ‘மிஃராஜ்’ இரவில், ‘புராக்’ வாகனத்தில் தூதர் முஹம்மது பயணமானது, இதைத்தானே சொல்கிறது?

8.அதோடு, கல்கி அவதாரத்துக்கு இறைவனின் உதவி பெருமளவில் இருக்கும் எனவும், இறைவனால் வலுவூட்டப்படுவார் எனவும் புத்தகங்களில் வந்துள்ளது. முஹம்மதுக்கு, பத்ரு போர்க்களத்தில், இறைவனின் உதவி நேரடியாக தன் ஏவலர்கள் மூலம் இறங்கியது நம் எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான்.

9.மேலும் சில விஷயங்கள் வேதங்களில் குறிப்பிடப்படுகின்றன. அதாவது, கல்கி அவதாரம், குதிரையேற்றத்திலும், அம்பெய்துவதிலும், வாள் பயிற்சியிலும் சிறந்து விளங்குவார். இந்த இடத்தில், பண்டிட் வைத் ப்ரகாஷ் என்ன சொல்கிறார் என்பது, அதி முக்கியமான, கவனத்தில் கொள்ளத் தக்க விஷயமாகும். அதாவது, குதிரை, வாள் மற்றும் ஈட்டிகளின் காலம் வெகு நாட்களுக்கு முன்பே போய் விட்டது, தற்போது, நவீன ஆயுதங்களான, துப்பாக்கிகள், பீரங்கிகள், ஏவுகணைகள் என போர்முறை முற்றிலும் மாறி விட்டது. அதனால், வாளுடனும் வில்லுடனும் போராடக்கூடிய கல்கி இனிமேல் அவதாரமெடுப்பார் என்று இனியும் நம்பிக்கொண்டிருப்பது அர்த்தமற்றது. உண்மையில், வேதங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் கல்கி அவதாரம் என்பது, புனித குர்ஆன் வழங்கப்பட்ட தூதர் முஹம்மதேயன்றி வேறில்லை என்பது மிகத் தெளிவாக தெரிகிறது.

பேராசிரியர் பண்டிட் வைத் ப்ரகாஷ் எழுதியதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தது மீர் அப்துல் மஜீத்.

இதை தமிழில் மொழி பெயர்த்த சகோதரி சுமஜ்லா அவர்களுக்கு நன்றி!!


--------------------------------------------------------
ஆங்கிலத்தில் படிக்க http://comparativestudy.blogspot.com