அமெரிக்கா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அமெரிக்கா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 23 ஜனவரி, 2011

அமெரிக்காவின் குண்டுவீச்சில் ஆப்கான் கிராமம் முற்றிலும் அழித்தொழிப்பு

லண்டன்,ஜன.23:காந்தஹார் மாகாணத்தில் அர்கந்தாத் நதியின் பள்ளத்தாக்கில் அந்நிய ஆக்கிரமிப்பு அமெரிக்க ராணுவத்தினர் நடத்திய குண்டுவீச்சில் ஒரு கிராமமே அழிந்து போனதாக செய்தி ஒன்று கூறுகிறது.

தாலிபான்கள் மீது தாக்குதல் நடத்துவதாகக் கூறித்தான் இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது. பிரிட்டீஷ் பத்திரிகையான டெய்லி மிரர் இச்செய்தியை வெளியிட்டுள்ளது.

இக்கிராமத்திலிருந்து போராளிகளை விரட்டியடிக்க இரண்டு முறை நடந்த முயற்சிகள் தோல்வியுற்றதைத் தொடர்ந்து அக்கிராமத்தையே முற்றிலும் அழித்தொழிக்க அந்நிய ஆக்கிரமிப்பு கூட்டுப்படையின் கமாண்டர் லெஃப்டினண்ட் கர்னல் டேவிட் ஃப்ளின் மூளையில் உதித்த கொடூர எண்ணத்தினால் அந்த கிராமத்தையே அழித்தொழிக்க உத்தரவிட்டார்.

குண்டுவீச்சிற்கு முன்பும் பிறகும் எடுத்த புகைப்படங்களை அப்பத்திரிகை வெளியிட்டுள்ளது.

டரோக் கலோசே (Tarok Kolache) என்ற ஆப்கான் கிராமம்தான் அமெரிக்க வெறி ராணுவத்தின் அழித்தொழிப்புக்கு ஆளாகியுள்ளது.

பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி பிறரை அக்கிராமத்தின் பக்கம் அனுமதிக்காததால் எத்தனை சிவிலியன்கள் கொல்லப்பட்டனர் என்பது தெரியவில்லை. 25 டன் குண்டுகளை அமெரிக்க பயங்கரவாத ராணுவம் அக்கிராமத்தின் மீது வீசியுள்ளது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

சனி, 23 அக்டோபர், 2010

அமெரிக்க - ஈராக் படையினரின் சித்திரவதைகள் - ஆயிரக்கணக்கில் வீடியோ வெளியானது!

AddThis Social Bookmark Button

ஈராக் சிறைக்கைதிகளை ஈராக் மற்றும் அமெரிக்க படைகள் துன்புறுத்தும் 391,831 புதிய ஆதாரங்களை விக்கிலீக்ஸ் இணையத்தளம் நேற்று வெளியிட்டுள்ளது.

DAT 36 என்ற படை நடவடிக்கை மூலம், 2006 ஜூலை 7ம் திகதி வடபக்தாத்தின் டார்மியா எனும் தடுப்புமுகாமில் தடுத்துவைக்கப்பட்டகைதிகள், அன்றைய இரவு பொழுதில் மணிக்கணக்கில் மிக மோசமாக துன்புறுத்தபப்ட்ட சம்பவங்கள், இவ் ஆதாரங்களில் பெரும் பங்கு வகிக்கின்றன.

கண்களை கட்டிவைத்து அடித்தல், முக உறுப்புக்களையும், ஏனைய உடல் அங்கங்களையும் மிகக்கொடூரமாக சிதைத்தல், மின்சாரம் பாய்ச்சல், வெந்நீர் பாய்ச்சல் என கட்டுக்கடங்காத சித்திரவதைக்காட்சிகள் 'the Secret Iraq Files' எனும் இவ்வெளியீட்டில் இடம்பெற்றுள்ளன.

எனினும் இப்பதிவுகளில், அமெரிக்க இராணுவத்தினர் இருப்பதை, பெண்டகன் இராணுவ தலைமையகம் முற்றுமுழுதாக மறுத்துள்ளது.
இச்சித்திரவதைகளுக்கும் தமக்கும் தொடர்புமில்லை என அறிக்கைவெளியிட்டுள்ளது.

2004 ஜனவரி 1 ம் திகதி தொடக்கம், 2010 ஜனவரி 1ம் திகதி வரை ஈராக்கில் சந்தேகத்தின் பெயரில் தடுத்துவைக்கப்பட்ட அனைத்து சிறைக்கைதிகள் அனுபவித்த சித்திரவதைகளும் குறித்த தொகுப்பில் இடம்பிடித்துள்ளன.

இவற்றில் அதிகமானவற்றில், ஈராக்கின் கடைநிலை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படுகின்றன. 15,000 படுகொலை சம்பவங்களும் இதில் அடங்குகின்றன.

இத்தொகுப்பில் ஆயிரக்கணக்கான குற்றச்செயல்கள் வீடியோ காட்சிகளாக இடம்பெற்றுள்ளன. (இதயம் பலவீனமானோர் பார்க்க வேண்டாம்)



ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

Dr ஆபியா சித்திகாவை விடுதலை செய்ய முயற்சி எடுக்கப்படும் - கிலானி!

"அமெரிக்க நீதிமன்றத்தால் 86 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட Dr ஆபியா சித்திகா அவர்களை விடுதலை செய்து அவரின் தாய்நாடான பாகிஸ்தானுக்கு கொண்டுவருவதற்கு பாகிஸ்தான் அரசு சட்டம், அரசியல், மற்றும் பேச்சுவார்த்தை என்ற எல்லா விதத்திலும் நடவடிக்கை எடுக்கும்" என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. கடந்த வெள்ளிகிழமை பிரதமர் கிலானி மற்றும் உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக் ஆகியோரின் சந்திப்பில் இந்த முடிவெடுக்கப்பட்டது.
"Dr ஆபியா சித்திகாவை விடுதலை செய்து தாய்நாட்டிற்கு கொண்டு வர எல்லாவித முயற்சிகளும் எடுக்கப்படும்" என்று கூறிய பிரதமர் கிலானி, Dr ஆபியா சித்திகா அவர்களை ஒரு போர் கைதியாக கருதி விடுதலை செய்ய அமெரிக்காவைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
பாகிஸ்தானில் பல்வேறு அரசியல் மற்றும் ஆன்மீக அமைப்புக்கள் Dr ஆபியா சித்திகா அவர்களை விடுதலை செய்யகோரியும், அமெரிக்க அரசியல் சட்டத்தை கண்டித்தும் நடத்திய நாடுதழுவிய தொடர் பிரச்சாரமே அரசின் இந்த முடிவிற்குக் காரணம்.
Dr ஆபியா சித்திகா முந்தைய அரசாங்கத்தின் ஆட்சியில் அமெரிக்காவால் கைதுசெய்து கொண்டு செல்லப்பட்டார் என்றாலும் அவரை விடுவிக்க தனது அரசு எல்லாவித முயற்சியும் எடுத்துவருகின்றது, மேலும் ஒவ்வொரு முறையும் அமெரிக்க தலைவர்கள் பாகிஸ்தான் வரும் போதும், குறிப்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலரி கிளிண்டன், ஜேம்ஸ் ஜோன்ஸ் ஆகியோரின் வருகைளின்போது ஜனாதிபதியும் பிரதமர் கிலானியும் இதனை பேசியதாகவும், தங்களின் வெளிநாட்டு பயணங்களிலும் வலியுறுத்தியதாகவும், கூறிய பிரதமர் Dr ஆபியா அவர்களுக்கு சட்டரீதியான உதவிகள் செய்வதற்காக 2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஒதுக்கியிருப்பதாக தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், "பாகிஸ்தான் அரசின் முயற்சியால் Dr ஆபியாவின் இரண்டு குழந்தைகளும் பத்திரமாக பாகிஸ்தான் கொண்டுவரப் பட்டுள்ளனர். அவரின் மற்றொரு குழந்தையைத் தேடும் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது" என்றார்.
உள்துறை அமைச்சர் தனது சமீபத்திய அமெரிக்க பயணத்தின் போது பிரதமரின் சார்பாக அமெரிக்க அதிகாரிகளை சந்தித்து Dr ஆபியாவை விடுதலை செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார். மேலும் Dr ஆபியா மீதான வழக்கின் தீர்ப்பிற்கு முன்பே அவரை தன் தாய்நாட்டிற்கு அனுப்பும்படி கோரி ஒரு கடிதமும் அமெரிக்க அரசிடம் கொடுக்கப்பட்டது என்றும் கிலானி தெரிவித்தார்.
பிரதமருடனான இந்தச் சந்திப்பிற்கு பின் உள்துறை அமைச்சர் தனது துறை அதிகாரிகளுடன் இதற்கான வெவ்வேறு வழிகளைக் கலந்தாலோசனை செய்தார். இந்த ஆலோசனை கூட்டத்தில் சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு உள்துறை, வெளியுறவுத்துறை, சட்டம் மற்றும் நீதித்துறையைச் சேர்ந்த அதிகாரிகளும் இரு திறமையான வழக்கறிஞர்களும் அடங்கிய குழு ஒன்றை அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் இவ்வழக்கை அமெரிக்க நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து நடத்திட அமெரிக்க வழக்கறிஞர்களை அமர்த்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
அரசியல் ரீதியான முயற்சிகளுக்கு அனைத்துக்கட்சி பெண்கள் குழு அமைத்து, அவர்கள் அமெரிக்கா சென்று அதன் பாதுகாப்புத்துறை, வெளியுறவுத்துறை அதிகாரிகள், அரசியல் வாதிகள், வழக்கறிஞர்கள், மற்றும் அமெரிக்க மனித உரிமை ஆர்வலர்களையும் சந்தித்து பாகிஸ்தான் மக்களின் உணர்வுகளை எடுத்துக்கூறி Dr ஆபியாவின் விடுதலையை வலியுறுத்துவார்கள் என்றும் முடிவுசெய்யப்பட்டது.
வெளியுறவு அதிகாரி ஒருவரிடம் எந்த அடிப்படையில் Dr ஆபியா விடுதலை செய்யப்பட வாய்ப்பு உள்ளதென்று கேட்கையில், "அமெரிக்க அதிபர் ஒபாமா அவர்கள் Dr ஆபியாவை மன்னித்து விடுதலை செய்யலாம் அல்லது Dr ஆபியா தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையைக் குறைந்த அளவாக பாகிஸ்தானிலே நிறைவேற்ற வேண்டுமென்ற ஒப்பந்த அடிப்படையிலும் விடுவிக்கப்படலாம்" என்று கூறினார்.
டாக்டர் ஆஃபியாவிற்கு 86 ஆண்டு கால சிறைத்தண்டனை தீர்ப்புக்கு, பாகிஸ்தான் மனித உரிமை கழகம் தனது பயம் கலந்த அதிருப்தியை தெரிவித்துள்ளது. மேலும் பாகிஸ்தான் அமெரிக்கா அரசுகளிடம் Dr ஆபியாவைத் தாய்நாட்டிற்கு திரும்ப கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தியும் உள்ளது. மேலும் இந்தத் தீர்ப்பானது பாகிஸ்தானில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு தீவிரவாதத்திற்கெதிரான பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவின் கூட்டு முயற்சியை மிக கடினமாக்கி விடுமோ என்றும் அதன் சேர்மன் மேஹ்டி ஹசன் தெரிவித்தார்.

இஸ்ரேலை என்.பி.டியில் கையெழுத்திட கோரும் தீர்மானத்தை முறியடித்தது அமெரிக்கா

வியன்னா,செப்.26:அணுசக்தி பரவல் தடை ஒப்பந்தத்தில் இஸ்ரேலை கையெழுத்திடக் கோரும் தீர்மானம் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் நிர்பந்தத்தின் மூலம் ஐ.நா தள்ளுபடிச் செய்தது.

அரபு நாடுகள் கொண்டுவந்த தீர்மானத்திற்கு எதிராக யூத மையம் கடுமையான பிரச்சாரம் மேற்கொண்டது. ஐந்து வாக்குகள் வித்தியாசத்தில் தீர்மானம் தோல்வியை தழுவியது.

மேற்காசியாவை அணு ஆயுதமில்லாத பிரதேசமாக மாற்றுவதற்கான முயற்சியையும், ஃபலஸ்தீன் - இஸ்ரேல் பேச்சுவார்த்தையையும் பாதிக்கும் எனக்கூறி இந்த தீர்மானத்தை எதிர்க்க இதர நாடுகளுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்தது.

தீர்மானத்திற்கு ஆதரவாக 46 வாக்குகளும், எதிராக 51 வாக்குகளும் கிடைத்தன. ரஷ்யாவும், சீனாவும் தீர்மானத்தை ஆதரித்தன.

மேற்காசியாவில் அணுஆயுதத்தை தன் வசம் கொண்ட ஒரே நாடு இஸ்ரேலாகும். அதேவேளையில் அணுஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத ஒரே நாடும் இஸ்ரேலாகும்.

இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்பட்ட அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் அரப் லீக்கின் தலைவர் அம்ரு மூஸா.

மேற்காசியாவை அணுஆயுதமில்லாத பகுதியாக மாற்றும் முயற்சியின் ஒருபகுதியாக இஸ்ரேல் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட கோருவதில் என்ன தவறு உள்ளது? என்று கேள்வி எழுப்பிய அம்ரு மூஸா, இஸ்ரேலுக்கு மட்டும் சிறப்பு அளிப்பதன் நோக்கம் புரியவில்லை என தெரிவித்துள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்,

திங்கள், 20 செப்டம்பர், 2010

போதை பொருளுக்காக போர் செய்த அமெரிக்கா

ஆப்கானிஸ்தானில் ஆட்சி செய்த தாலிபான்களை நீக்கிவிட்டு பொம்மை ஆட்சியை ஏற்படுத்தி அங்கே போதை பொருள் உற்பத்தியை அதிகபடுத்தி உலகமெங்கும் போதை பொருளை சப்ளை செய்கின்றது அமெரிக்க கூட்டுபடை.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையில் இடம் பெற்றுள்ள இங்கிலாந்து மற்றும் கனடாவைச் சேர்ந்த வீரர்கள் ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக இங்கிலாந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தி சண்டே டைம்ஸ் இதழ் வெளியிட்டுள்ள செய்தி…
ஹெல்மாண்ட் மாகாணம், கேம்ப் பாஸ்டியனில் நிலை கொண்டுள்ள இங்கிலாந்து வீரர்களும், காந்தஹார் விமான நிலையத்தில் நிலை கொண்டுள்ள கனடா நாட்டு வீரர்களும் இந்த போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது.

இந்த இரு இடங்களிலும் உள்ள விமான நிலையங்கள்தான் ஆப்கானிஸ்தானின் முக்கிய விமானப் போக்குவரத்து தலமாக உள்ளது. இந்த விமான நிலையங்களைத்தான் நேட்டோ படையினர் போக, வர பயன்படுத்தி வருகின்றனர்.


ஆப்கானிஸ்தான் போதைப் பொருளுக்குப் பெயர் போனது. குறிப்பாக அங்கு ஓபியம் விளைச்சல் கிட்டத்தட்ட விவசாயம் போலவே உள்ளது. ஆனால் (தாலிபான் ஆட்சியில்) 2001ம் ஆண்டு வாக்கில் ஓபியம் விளைச்சல் குறைவாகவே இருந்தது. இந்த ஓபியத்திலிருந்துதான் ஹெராயின் பிரித்தெடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் 2001க்குப் பிறகு அதாவது அமெரிக்கா தலைமையில் நேட்டோ படையினர் ஆப்கானிஸ்தானுக்குள் ஊடுறுவிய பின்னர் அங்கு ஓபியம் உற்பத்தி கிடுகிடுவென அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஆப்கானிஸ்தான் போதைப் பொருள் ஏஜென்ட் ஒருவர் ஈரானின் பிரஸ் டிவிக்கு அளித்துள்ள பேட்டியில், வெளிநாடுகளைச் சேர்ந்த போதைப் பொருள் முதலைகளுக்குப் பிறகு அதிக அளவில் ஓபியம், ஹெராயின் உள்ளிட்டவற்றை வாங்குவது ஆப்கானிஸ்தானில் நிலை கொண்டுள்ள வெளிநாட்டு ராணுவத்தினர்தான்.

(அமெரிக்க படை எடுப்பிற்க்கு பிறகு) உலக அளவில் உள்ள ஹெராயினில் 90 சதவீதம் ஆப்கானிஸ்தானில்தான் உற்பத்தியாகிறது.
அமெரிக்கா ஒசாமாவை தேட படை எடுத்ததா? ஹெராயின் போதை பொருளை தேட படை எடுத்ததா? என்பதை மக்கள் இப்போது தெரிந்துகொண்டுள்ளனர். தாலிபான் ஆட்சியில் போதை பொருள் உற்பத்தி குறைந்திருந்தது. ஆப்கானில் தாலிபான் ஆட்சியை நீக்கி பொம்மை ஆட்சியை உருவாக்கி உலக அளவில் போதை சப்ளை செய்துகொண்டு இருக்கின்றது அமெரிக்க கூட்டு படை. பொது விமான நிலையங்களில் இப்படி கடத்தலில் ஈடுபட்டால் மக்களுக்கு எளிதில் தெரிந்துவிடும் என்பதற்க்காக பிற நாடுகளில் தனி விமான தளங்களை அமைக்கின்றது அமெரிக்கா.

தேங்க்ஸ் டு : மணற்கேணி டைம்ஸ்

ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

அமெரிக்காவில் இஸ்லாம்! கோவில், சர்ச் கட்டலாம் என்றால் மசூதி கட்டக் கூடாதா?-ஒபாமா


ஒரு இந்துக் கோவிலை, ஒரு சர்ச்சை, ஒரு யூத ஆலயத்தைக் கட்டலாம் என்றால் ஏன் ஒரு மசூதி கட்டுவதற்கு நாம் எதிர்ப்பு [^] தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து வந்த உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுர கட்டடங்கள் விமானம் கொண்டு தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்டதன் 9வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இரட்டைக்கோபுரம் இருந்த இடத்திற்கு அருகே ஒரு இஸ்லாமிய வழிபாட்டு மையம் கட்டப்படவுள்ளது. ஆனால் இதற்கு அமெரிக்கர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் அதிபர் ஒபாமா, நிச்சயம் அங்கு மசூதி கட்டப்படும் என்று கூறி வருகிறார்.

இந்த நிலையில் இரட்டைக் கோபுர தாக்குதல் [^] சம்பவ நினைவு தினத்தையொட்டி அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது ஒபாமா கூறியதாவது...

நியூயார்க் மசூதி விவகாரம் குறித்து நான் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும், அவரது மதத்தை சுதந்திரமாக பின்பற்ற அனைத்து உரிமைகளும் உள்ளது என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டுள்ளது அமெரிக்கா [^].

இந்த பூமியில் உருவாக்கப்பட்ட அனைத்து ஆண்களும், பெண்களும் சமமானவர்களே. அனைவருக்கும் சம உரிமைகள் உள்ளன. அனைவரும் அவரவர் மதத்தை சுதந்திரமாக கடைப்பிடிக்கலாம்.

ஒரு இடத்தில் உங்களால் சர்ச் கட்ட முடியும்போது, ஒரு யூத ஆலயம் கட்ட முடிகிறபோது, ஒரு இந்துக் கோவிலை கட்ட முடியும் என்கிறபோது, ஏன் ஒரு மசூதியையும் கட்ட முடியாது.

செப்டம்பர் 11 சம்பவத்தில் பலியான அனைவருக்காகவும் நான் அனுதாபப்டுகிறேன். அவர்களது குடும்பங்களைச் சேர்ந்தவர்களை நான் முன்பு சந்தித்துள்ளேன். அவர்களது இழப்பும், துயரமும் நீண்டது, அவ்வளவு சீக்கிரம் அடங்க முடியாதது என்பதை நான் உணர்கிறேன், அவர்களது சோகத்தில் நானும் பங்கேற்கிறேன். அனைத்து அமெரிக்கர்களும் இந்தசோகத்தில் பங்கேற்கின்றனர் என்றார் ஒபாமா

வியாழன், 9 செப்டம்பர், 2010

அல்குர்ஆன் பிரதியை எரிக்கும் திட்டம்: அமெரிக்க ராணுவத்தினருக்கு அச்சுறுத்தல்

காபூல்,செப்.9:அல்குர்ஆனின் பிரதியை எரிக்க திட்டமிட்டிருக்கும் அமெரிக்க சர்ச்சின் தீர்மானம் ஆப்கானில் அமெரிக்க ராணுவத்தினருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என ஆப்கானில் அமெரிக்க ராணுவ கமாண்டர் ஜெனரல் டேவிட்
பெட்ரோஸ் தெரிவித்துள்ளார்.

காபூலில் மட்டுமல்ல உலகின் அனைத்துப் பகுதிகளிலும் அமெரிக்காவிற்கு சவாலை உருவாக்கும் என பெட்ரோஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

செப்டம்பர் 11 தாக்குதல் நினைவு தினத்தில் அல்குர்ஆனின் பிரதியை எரிக்கப்போவதாக ஃப்ளோரிடாவில் டோவ் வேர்ல்டு அவ்ட்ரீச் செண்டர் தலைவன் பாஸ்டர் டெரி ஜோன்ஸ் அறிவித்திருந்தான்.

அல்குர்ஆனின் பிரதியை எரிப்பதுக் குறித்து அதிக அளவிலான பிரச்சாரத்தை இவன் இணையதளத்தில் நடத்தியிருந்தான். இதற்கெதிராக ஆஃப்கானின் தலைநகரான காபூலில் நூற்றுக்கணக்கானோர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

காபூலில் அமெரிக்க தூதரகமும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. "இது ராணுவத்தை ஆபத்தில் சிக்கவைக்கும். இஸ்லாமிய சமூகத்துடன் நெருக்கத்தை ஏற்படுத்த முயற்சி நடந்துக் கொண்டிருக்கும் வேளையில் இச்செயல் சிக்கலை ஏற்படுத்தும்." என அமெரிக்க ஊடகங்களிடம் பெட்ரோஸ் தெரிவித்துள்ளார்.

குர்ஆன் முஸ்லிம்களின் புனித வேதமாகும். அதன் பிரதியை எவரேனும் அழிப்பேன் என பிரகடனப்படுத்தினால் அது முஸ்லிம்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தும் என ஆஃப்கானில் நேட்டோ பயிற்சிப் பிரிவு தலைவர் லெஃப்டினண்ட் ஜெனரல் வில்லியம் காட்வெல் கூறியுள்ளார்.

காபூலில் எதிர்ப்புப் போராட்டம் நடத்திய 500 பேர் இஸ்லாம் நீண்டநாள் வாழட்டும்! அமெரிக்கா அழியட்டும்! உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியதுடன் ஜோன்ஸின் உருவப்படத்தை கொளுத்தினர்.

செப்டம்பர் 11 தாக்குதல் நடைபெற்ற இடத்தில் மஸ்ஜித் கட்டுவது அமெரிக்காவில் சர்சையை கிளப்பிக் கொண்டிருக்கும் சூழலில் இஸ்லாத்திற்கெதிரான புதிய முயற்சி நடந்துக்கொண்டிருக்கிறது.

பெட்ரோஸின் அறிக்கைக்கு பதிலளிக்கையில் ஜோன்ஸ் கூறியதாவது: "இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளுக்கு நாம் தெளிவான செய்தியை கொடுத்துவருகிறோம். அவர்களின் மிரட்டல்களுக்கு கீழ்படியக்கூடாது." என வால்ஸ்ட்ரீட் ஜெர்னல் என்ற பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ளான்.

ஏற்கனவே அமெரிக்க ராணுவத்தினர் குர்ஆனை அவமதித்தது ஈராக்கிலும், ஆப்கானிலும் கடும் எதிர்ப்பைக் கிளப்பியிருந்தது.

இதுத்தொடர்பாக நடைபெற்ற தாக்குதல்களில் ராணுவத்தினர் உள்பட ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

வியாழன், 2 செப்டம்பர், 2010

ஈராக்:ஏற்றுக்கொண்ட பணி முடிவடைந்துவிட்டதாக ஒபாமா

வாஷிங்டன்,செப்.2:ஈராக்கில் அமெரிக்காவின் பணி முடிவடைந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அறிவித்துள்ளார்.

ஈராக்கினை சுதந்திரம் அடையச் செய்வதற்கான பணி முடிவடைந்துவிட்டது. ஈராக்கின் எதிர்காலத்தை அங்குள்ள மக்களின் கரங்களில் அளிக்க அமெரிக்க மிகப்பெரிய விலையை கொடுக்க நேர்ந்தது.

அமெரிக்காவின் பொருளாதார கட்டமைப்பை புனர் நிர்மாணிப்பதுதான் இனி நமது பணி என ஈராக் போர் முடிவடைந்துவிட்டதாக தேச மக்களுக்கு அளித்த செய்தியில் ஒபாமா குறிப்பிட்டார்.

பேரழிவு ஆயுதங்கள் ஈராக்கில் உள்ளதாக கூறி கடந்த 2003 ஆம் ஆண்டில் ஈராக் என்ற சுதந்திரதேசத்தின் மீது அமெரிக்கா ஆக்கிரமிப்புப் போரைத் துவங்கியது. ஆனால், பல மாதங்களுக்குப் பின்னால் அத்தகைய பேரழிவு ஆயுதங்கள் ஒன்றும் ஈராக்கில் இல்லை எனக்கூறி பணி முடிவடைந்துவிட்டதாக அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ்.w.புஷ் அறிவித்தார்.

தொடர்ந்து ஈராக்கில் ஜனநாயகத்தை நிலைநாட்டப் போகிறோம் எனக்கூறி அங்கு அமெரிக்க படைகள் தொடர்ந்து இருந்து வந்தன.

2004 ஆம் ஆண்டில் அமெரிக்க ராணுவம் ஃபலூஜாவில் பயன்படுத்திய ஆயுதங்கள் தலைமுறைகளை பாதிப்பிற்குள்ளாக்குவதாகும். இரண்டாம் உலகப்போரின் பொழுது ஜப்பானின் ஹிரோஷிமாவிலும், நாகஷாகியிலும் அணுத்தாக்குதல் நடந்தபொழுது ஏற்பட்ட சூழல்தான் ஃபலூஜாவிலும் என இதுத்தொடர்பான ஆய்வு ஒன்றுத் தெரிவிக்கிறது.

4500 அமெரிக்க ராணுவத்தினர் ஈராக்கில் பலியாகியுள்ளனர். ஈராக் ராணுவத்தினருக்கு பயிற்சி அளிப்பதற்காக 50 ஆயிரம் அமெரிக்க ராணுவத்தினர் ஈராக்கில் தொடர்வர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

திங்கள், 30 ஆகஸ்ட், 2010

நியூயார்க்கில் கத்தி குத்துப்பட்ட முஸ்லிம் வாகன ஓட்டுநருக்கு ஆதரவாக பிரமுகர்கள்

வாஷிங்டன்,ஆக29:மதம் என்ன? என்பதைக் கேட்டறிந்துவிட்டு முஸ்லிம் என்பது உறுதியானவுடன் வாகன ஓட்டுநர் ஒருவரை கத்தியால் குத்திக் காயத்தை ஏற்படுத்திய சம்பவத்தில் ஓட்டுநருக்கு ஆதரவாக பிரமுகர்கள் களமிறங்கியுள்ளனர்.

பங்களாதேஷைச் சார்ந்த அஹ்மத் ஷெரீஃப் (வயது43) என்பவர்தான் கத்திக்குத்துப்பட்ட வாகன ஓட்டுநராவார்.

இச்சம்பவம் நடைபெற்றவுடனேயே மேயர் மைக்கேல் ப்ளூம்பெர்க் ஷெரீஃபையும் அவருடைய குடும்பத்தினரையு அழைத்து நலம் விசாரித்துள்ளார். எல்லா உதவியையும் வாக்களித்த மேயர், ஷெரீஃபிற்கும், குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளிப்பதாக தெரிவித்துள்ளார். இதனை ஷெரீஃப் கூறியுள்ளார்.

இத்தகைய நிகழ்வுகள் தாக்குதல்களை அதிகரிக்கவே உதவும் என வாகன ஓட்டுநர்கள் அமைப்பின் தலைவர் பைரவி தேசாய் தெரிவித்துள்ளனர். முஸ்லிம் சமுதாயத்தை அச்சுறுத்தவே இத்தாக்குதலை நடத்தியவர்கள் முயற்சிக்கிறார்கள் எனவும், இதற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்போம் எனவும் இஸ்லாமிக் கல்சுரல் செண்டர் இமாம் ஷம்ஸி அலி தெரிவித்துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமையன்று ஷெரீஃபின் காரில் ஏறிய மைக்கேல் என்ரைட் என்பவர் ஷெரீஃபிடம் முஸ்லிமா? நோன்பாளியா? எனக் கேட்டுவிட்டு கத்தியால் குத்தியுள்ளார். இவரை போலீஸ் கைதுச் செய்துள்ளது.

2001 செப்டம்பர் 11 தாக்குதலில் தகர்ந்துபோன உலகவர்த்தக மையம் அமைந்திருந்த இடத்தில் மஸ்ஜித் நிர்மாணிப்பதற்கான பணிகள் நடந்துவருகையில் அமெரிக்காவில் முஸ்லிம் விரோத மனப்பாண்மை அதிகரித்துள்ளது. ஆனால், நியூயார்க் மேயர், கவர்னர், அதிபர் ஒபாமா ஆகியோர் மஸ்ஜித் நிர்மாணத்திற்கு பரிபூரண ஆதரவை தெரிவித்துள்ளனர்.

எட்டுலட்சம் முஸ்லிம்கள் நியூயார்க்கில் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

சனி, 28 ஆகஸ்ட், 2010

அமெரிக்கா தீவிரவாதத்தின் பிறப்பிடங்களில் ஒன்று - சிஐஏ ரிப்போர்ட்டை வெளியிட்டது விக்கிலீக்ஸ்

வாஷிங்டன்,ஆக27:அமெரிக்காவிலிருந்தும் தீவிரவாதம் பரவுகிறது, தீவிரவாதத்தின் பிறப்பிடங்களில் ஒன்றாக அமெரிக்கா மாறியுள்ளதாக கூறும் சிஐஏ ரிப்போர்ட்டை அம்பலப்படுத்தி அடுத்த குண்டைப் போட்டுள்ளது விக்கிலீக்ஸ்.

3 பக்கங்களைக் கொண்ட இந்த சிஐஏ அறிக்கை 2010, பிப்ரவரி 2ம் தேதியிட்டது. இதை நேற்று வெளியிட்டுள்ளது விக்கிலீக்ஸ்.

அதில்,டேவிட் ஹெட்லி உள்ளிட்ட பல அமெரிக்கர்கள் உலகின் பல பகுதிகளுக்கும் சென்று பல்வேறு வன்முறைக் காரியங்களுக்கு உதவியுள்ளனர் அல்லது நிகழ்த்தியுள்ளனர். இவர்களில் ஹெட்லி, மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடையவராக இருக்கிறார்.

இன்னொரு அமெரிக்கரான பரூச் கோல்ட்ஸ்டீன் என்பவர் ஒரு யூத தீவிரவாதி ஆவார். இவர் 1994ம் ஆண்டு ஹெப்ரானில் 12க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்படக் காரணமாவார் என்று விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கையை வெளியிட்டுள்ள விக்கிலீக்ஸ், வெளிநாட்டுக்காரர்கள் கண்களில் தீவிரவாதத்தின் ஏற்றுதியாளராக அமெரிக்கா தெரிவதாக குறிப்பிட்டுள்ளது.

மேலும் தன் வசம் சிக்கியுள்ள மேலும் 15,000 போர் ரகசிய அறிக்கைகளை விரைவில் வெளியிடப் போவதாகவும் அது கூறியுள்ளது.

சிஐஏ அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது;
மற்றவர்கள் நினைப்பது போல அமெரிக்காவிலிருந்து தீவிரவாதம் பரவுவது சமீப காலமாக அல்ல. மாறாக இது மிக நீண்ட காலமாக நடந்து வருகிறது. மேலும் தீவிரவாதத்தின் பிறப்பிடமாக இதுவரை மத்திய கிழக்கு, கிழக்கு, ஆப்பிரிக்க, தெற்காசிய நாடுகள் மட்டுமே கருதப்பட்டு வந்தன. ஆனால் அமெரிக்காவும் இதில் ஒன்றாக திகழ்கிறது.

உள்நாட்டுப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அல் கொய்தா உள்ளிட்ட அமைப்புகளை அமெரிக்கா வேட்டையாடி வரலாம்.

ஆனால் நிஜத்தில், தங்களது தீவிரவாத காரியங்களுக்கு அமெரிக்கர்களை பல அமைப்புகள் பயன்படுத்த ஆரம்பித்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த அறிக்கை அமெரிக்காவை குற்றம் சாட்டி தயாரிக்கப்பட்டதல்ல, மாறாக மாறி வரும் சூழல்கள் குறித்த சிந்தனையை ஏற்படுத்தவே இதை தயாரித்தோம் என்று சிஐஏ கூறியுள்ளது.

இதுகுறித்து சிஐஏ செய்தித் தொடர்பாளர் மேரி ஹார்ப் கூறுகையில், இவை ஒரு சாதாரண அறிக்கைதான். இப்படிப்பட்ட சூழல் உள்ளதை என்பதை சுட்டிக் காட்டும் வகையிலான விழிப்புணர்வு அறிக்கை மட்டு்மே என்றார்.

சமீபத்தில் ஆப்கானிஸ்தான் போர் தொடர்பாக 92,000 பக்கங்களைக் கொண்ட ராணுவ ரகசிய ஆவணத்தை விக்கிலீக்ஸ் வெளியிட்டு அமெரிககாவை பெரும் பரபரப்பில் ஆழ்த்தியது என்பது நினைவிருக்கலாம்.

இதையடுத்து விக்கிலீக்ஸ் நிறுவனரான ஜூலியன் அஸ்ஸான்ஜ் மீது பாலியல் குற்றச்சாட்டு கிளப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது. அவர் தன்னை கற்பழித்ததாக அன்னா ஆர்டின் என்ற பெண் குற்றம் சாட்டினார்.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள ஜூலியன், இதன் பின்னணியில் அமெரிக்க பாதுகாப்புத்துறை உள்ளதாக குற்றம் சாட்டியதும் நினைவுகூறத்தக்கது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவரான ஜூலியன் ஸ்வீடனில் வசித்து வருகிறார். அமெரிக்கா-சிஐஏவின் போர் ரகசியங்கள் குறித்து தன்னிடம் மேலும் ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் உள்ளதாகவும் அதையும் விரைவில் வெளியிடப் போவதாகவும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 26 ஆகஸ்ட், 2010

அமெரிக்காவில் கைத்துப்பாக்கியுடன் பிடிபட்ட ஹிந்துத்துவ பயங்கரவாதி

ஹூஸ்டன்,ஆக.26:கைத்துப்பாக்கி மற்றும் ஆயூதங்களுடன் அமெரிக்க விமான நிலையத்தில் விஜய குமார் (40) என்ற ஹிந்துத்துவ பயங்கரவாதி கைது செய்யப்பட்டான்.

இஸ்லாமிய அடிப்படைவாதம் குறித்து உரையாற்ற விஜய குமாருக்கு அமெரிக்காவில் இருந்து செயல்படும் பாசிச பயங்கரவாத ஹிந்து அமைப்புகள் அழைத்ததின் பெயரில் இவன் அங்கு சென்றதாக சொல்லிருகிறான். அவன் கைகளில் ஜிஹாத் பற்றியும் முஸ்லிம்கள் பற்றி அவதூறு பரப்பும் நோட்டீஸ்கள் வைத்திருந்திருக்கிறான். இவன் ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத இயக்கத்தின் முழுநேர உழியன் என்பதும், இவன் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் முழு ஆயூத பயிற்சி எடுத்தவன் என்பதும், இவன் அமெரிக்காவில் இருந்து செயல்படும் ஹிந்து பயங்கரவாத அமைபினருக்கு பயிற்சி கொடுக்க போனதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பின்னர் இவனை அங்குள்ள ஹிந்து பயங்கரவாத அமைப்பினர் ஜாமீனில் எடுத்துள்ளனர். 5000 அமெரிக்க டாலருக்கான உறுதி பத்திரத்தை அளித்த பின்னர் விஜய குமாருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது. விசாரணை அன்று விஜய குமார் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். இதனால் அவன் ஹூஸ்டன் நகரைவிட்டு செல்லக்கூடாது என்றும் நீதிபதி ஆணை பிறப்பித்தார்.

ஆயுதம் வைத்திருந்ததாக விஜய குமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மும்பையை சேர்ந்த ஆவணப் படத் தயாரிப்பாளர் என்று பொய் சொல்லி போலியான ஆவணங்கள் தயாரித்து அமெரிக்கா வந்துள்ளான். மும்பையில் இவனைப் பற்றி விசாரித்ததில் இதுபோல் ஒரு ஆவணப்படம் தயாரிப்பாளர் இல்லை என்று உறுதி செய்யப்பட்டது.

இவன் அமெரிக்காவில் வாழும் ஹிந்துகள் அனைவரையும் ஹிந்து பயங்கரவாத இயக்கங்களின் உறுப்பினர்களாக மாற்ற மூளைசலவை செய்ய ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத இயக்கத்தால் அனுப்பப்பட்டதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

திங்கள், 16 ஆகஸ்ட், 2010

அமெரிக்காவில் ஊடகங்கள் மீதான் நம்பிக்கையில் பெரும் வீழ்ச்சி

வாஷிங்டன்,ஆக16:நான்கில் மூன்று அமெரிக்கர்களுக்கு அந்நாட்டின் செய்தி ஊடகங்கள் மீது நம்பிக்கையில்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

பிரபல அமெரிக்க தனியார் நிறுவனமான கால்லப் 16 துறைகளில் மக்களுக்கான நம்பிக்கை ஆராய்வதற்காக நடத்திய சர்வேயில்தான் இது தெரியவந்துள்ளது.

1020 பேர் பங்கேற்ற இந்த சர்வேயில், 75 சதவீத அமெரிக்கர்களும், அமெரிக்க பத்திரிகைகள் மீதும், தொலைக்காட்சி சானல்கள் மீது நம்பிக்கையின்மையை தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் அமெரிக்காவில் ஊடகங்கள் மீதான நம்பிக்கை மக்களிடம் பெருமளவில் குறைந்துவருவதாக இவ்வாய்வு சுட்டிக்காட்டுகிறது. 16 துறைகளில் ராணுவம் தான் நம்பிக்கையில் முன்னிலையில் உள்ளது. மிகவும் பின்தங்கிய நிலையில் அமெரிக்க காங்கிரஸ் உள்ளது.

18 வயதிற்கும் 29 வயதிற்கும் இடைப்பட்டவர்களிடம் 49 சதவீதம் பேருக்கு பத்திரிகைகள் மீது நம்பிக்கை உள்ளது. ஆனால் 30 வயதிற்கும், 49 வயதிற்குமிடையேயுள்ள நபர்களிடம் 19 சதவீதம் மட்டுமே பத்திரிகைகள் மீது நம்பிக்கை உள்ளது. இந்த வாய்வு செய்தி ஊடகங்கள் அமெரிக்காவில் லாபகரமாக செயல்படுவதற்கு பெரும் சவால்கள் உள்ளன என்பதை சுட்டிக்காட்டுகிறது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

சனி, 14 ஆகஸ்ட், 2010

ஈரான் அணு உலைகள் மீது 100 விமானங்களை அனுப்பி குண்டு வீச இஸ்ரேல் திட்டம்: அமெரிக்க பத்திரிகை தகவல்

ஆக,13:அமெரிக்காவின் தடை மற்றும் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் ஈரான் தன் சொந்த தேவைக்காக அணுசக்தி தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது.

மேலும் ஈரான் அணுசக்தி மூலம் குண்டு தயாரித்தால் அதை இஸ்ரேலுக்கு எதிராக பயன்படுத்தலாம் என்று இஸ்ரேல் பயப்படுகிறது. எனவே ஈரான் அணு குண்டு தயாரிப்பதை தடுத்து நிறுத்துங்கள் என்று இஸ்ரேல் அமெரிக்காவிடம் கூறியது. இதைத்தடுக்க அமெரிக்கா எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்தன.

எனவே ஈரான் அணு உலைகள் மீது இஸ்ரேல் நேரடியாக தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக அமெரிக்க பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டு உள்ளது.

முன்பு இதே போல ஈராக் அணுகுண்டு தயாரிக்க முயற்சித்தபோது இஸ்ரேல் விமானங்களை அனுப்பி ஈராக் அணு உலையை தகர்த்தது.

அதே போல இப்போது ஈரான் அணு உலைகளை அளிக்க இஸ்ரேல் தயாராகி இருப்பதாக அந்த பத்திரிகை கூறியுள்ளது. இதற்காக உயர்ரக 100 போர் விமானங்களை தயாராக வைத்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த விமானங்களை சவுதிஅரேபியா அல்லது துருக்கி எல்லை வழியாக அனுப்பி ஈரான் அணு உலைகளை தாக்க திட்டமிட்டுள்ளனர்.

ஈரானில் நதான்ஸ், குவாம், எஸ்பகான், புஷேர் ஆகிய இடங்களில் அணுஉலை அமைக்கப்பட்டு வருகிறது. இவை அனைத்தையும் ஒரே நேரத்தில் தாக்கி அழிக்கும் வகையில் விரிவான திட்டங்களை உருவாக்கி உள்ளனர். என்றும் அச்செய்தி கூறுகின்றது.

வியாழன், 12 ஆகஸ்ட், 2010

இந்திய வம்சாவழியைச் சார்ந்தவர் மீது அமெரிக்க ராணுவ ரகசியத்தை சீனாவுக்கு விற்றதாக குற்றச்சாட்டு

வாஷிங்டன்,ஆக11:சீனாவுக்கு அமெரிக்க ராணுவ ரகசியங்களை விற்றதாகக் குற்றஞ்சாட்டி இந்திய வம்சாவழியைச் சார்ந்த என்ஜீனியர் மீது ஹவாய் நீதிமன்றம் குற்றத்தை சுமத்தியுள்ளது.

பி-2 குண்டுவீச்சின் ஃப்ரொப்பல்சன் உருவாக்குவதற்கு உதவிய நொஷிர் கொவாடியாவின் மீது சுமத்தப்பட்ட குற்றங்களில் சதித்திட்டம், கள்ளப்பணம் மாற்றியது உள்ளிட்டவைகளும் அடங்கும். இவ்வழக்கில் கொவாடியாவுக்கு ஆயுள்தண்டனை கிடைக்கலாம்.

இன்ஃப்ரா ரெட் ரேடார்களையும், அமெரிக்காவின் காலநிலை கிரகண ஏவுகணைகளையும், ஏமாற்றும் திறன்கொண்ட க்ரூஸ் ஏவுகணைகளை உருவாக்க கொவாடியா சீனாவிற்கு உதவியுள்ளார் என அரசுதரப்பு வழக்கறிஞர்கள் கூறுகிறார்கள்.

ஏவுகணையை உருவாக்குவதற்கு இடையே கொவாடியா சீனாவுக்கு 2003 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளில் சீனாவுக்கு சென்றுள்ளார். ரகசியங்களை சீனாவுக்கு அளித்ததால் கொவாடியாவுக்கு 110000 அமெரிக்க டாலர் கிடைத்துள்ளது. இதனை மாவு தீவில் ஆடம்பர வீடு ஒன்று வாங்குவதற்கு பயன்படுத்தியுள்ளார் எனவும் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

சீனாவுக்கு ஏவுகணை உருவாக்க மாதிரி செய்துக் கொடுத்தது உண்மை என்றாலும், அது ரகசிய தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது அல்ல என எதிர்தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

நான்கு ஆண்டுகளாக சிறையிலிருக்கும் கொவாடியாவுக்கு தீர்ப்பு வருகிற நவம்பரில் அளிக்கப்படும். தேசிய பாதுகாப்பு தகவல்களை வெளிநாட்டிற்கு அளித்ததான குற்றச்சாட்டில் கொவாடியா குற்றவாளி அல்ல என்பதை நீதிமன்றம் கண்டறிந்துள்ளது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

ஃபிடல் காஸ்ட்ரோவின் எச்சரிக்கை

ஆக,10:நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கடுமையான நோய்களுடன் போராடுவதற்கு கியூபா அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ பொது வாழ்க்கையிலிருந்து விலகியபொழுது மீண்டும் அவர் திரும்பிவருது கடினம் என்றே பலரும் கருதியிருந்தனர். அரை நூற்றாண்டிற்கு முன்பு அமெரிக்காவின் மூக்கிற்கு கீழே ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்திற்கு துணிச்சல் மிக்க படையை உருவாக்கிய காஸ்ட்ரோ பின்னர் ஒருபோதும் தனது முடிவில் எவ்வித சமரசத்திற்கும் இடம் கொடுக்கவில்லை.

அதனால்தான், பலகாலமாக அமெரிக்க ஆட்சியாளர்களுக்கும், சி.ஐ.ஏவுக்கும் கண்ணில் விரல்விட்டு ஆட்டிக்கொண்டிருந்தார் இந்த தீரமிக்க புரட்சியாளர்.

உலக சமூகத்தை அதிர்ச்சியடையச் செய்யும் வகையில் காஸ்ட்ரோ மீண்டும் பொதுவாழ்க்கைக்கு திரும்பியுள்ளார். வயது அவருடைய புரட்சியின் வீரியத்தை சற்றும் குறைத்திடவில்லை.

நேற்று முன் தினம் கியூபா பாராளுமன்றத்தில் அவர் நடத்திய உரையினை உலக முழுவதுமுள்ள ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளிகள் ஆவேசத்துடன் கேட்டனர். இன்றைய சிக்கல்கள் மிகுந்த உலக சூழலில் காஸ்ட்ரோவின் வார்த்தைகளுக்கு மிக்க மதிப்புள்ளது.

ஈரானுக்கெதிராக அமெரிக்க நடத்திவரும் பொருளாதார தடைகளும், ராணுவ முன்னேற்பாடுகளும் ஈரானை தோல்வி அடையச்செய்யாது, மாறாக அமெரிக்காவின் வீழ்ச்சிக்கு இது வழிவகுக்கும் என காஸ்ட்ரோ எச்சரிக்கை விடுத்தார்.

அமைதியான முறையில் அத்தியாவசிய தேவைகளுக்காக அணுசக்தியை மேம்படுத்த ஈரான் நடத்திவரும் முயற்சிகளுக்கு தடைப்போடுவது என்ற பெயரில் உலகில் மீண்டும் ஒரு அணு ஆயுத போருக்கு வழிவகுக்கத்தான் அமெரிக்காவும்,இஸ்ரேலும் சேர்ந்து முயல்வதாக காஸ்ட்ரோ சுட்டிக்காட்டினார்.

அத்தகையதொரு போர் ஈரானோடு மட்டும் ஒதுங்கிவிடாது. மாறாக, அப்போர் மேற்காசியாவிலும், பின்னர் ஐரோப்பாவிலும் பரவும். அதன் விளைவுகள் கடுமையாக இருக்கும்.

தற்போதைய உலக கட்டமைப்பு முற்றிலும் வீழ்ச்சியை சந்திக்கும் வகையிலான சூழலுக்கு இத்தகைய பைத்தியக்காரத்தனமான கொள்கைகள் தள்ளும் என உலகத்திற்கு காஸ்ட்ரோ எச்சரிக்கை விடுத்தார்.

காஸ்ட்ரோவின் எச்சரிக்கை அமெரிக்கா அதிபர் ஒபாமாவை குறிவைத்து விடுக்கபட்டதாகும். உலகை அழிவுக்குக் கொண்டுசெல்லும் முயற்சிகளிலிருந்து விடுபடவேண்டும் என காஸ்ட்ரோ ஒபாமாவை வலியுறுத்தினார்.

அமெரிக்காவின் கடந்த கால நிலைப்பாடுகளும், ஈராக்கிலும், ஆஃப்கானிலும் இன்னும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் இன்றுவரை நடத்திவரும் ஆக்கிரமிப்பு போர்களின் வரலாற்றை உற்றுநோக்கினால் அந்த நாடு ஒருபோதும் நேரான வழியில் செல்லமுடியாது என்பதை உறுதிச்செய்ய இயலும்.

ஆனால் ஏகாதிபத்தியம் சுயமாக தோண்டிய குழியிலிருந்து எளிதாக கரையேற முடியாது. இந்த அனுபவங்களை முன்னிறுத்தி, உலகில் மீண்டும் ஒரு அணு ஆயுத போர் நடக்க வழி வகுக்காதீர்கள் என்ற காஸ்ட்ரோவின் எச்சரிக்கை முற்றிலும் வரவேற்கத்தக்க ஒன்றாகும். அதுதான் தற்காலத்தில் அமைதியை விரும்புவோரின் குரலாகும்.

விமர்சகன்

செவ்வாய், 27 ஜூலை, 2010

ஆப்கானிஸ்தான்: அமெரிக்கா இராணுவ இரககியங்கள் கசிவு வெளிப்படுத்தும் உண்மைகள்!

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா மேற்கொண்டு வரும் போர் நடவடிக்கைகள் குறித்த இராணுவ இரகசியங்கள் கடந்த திங்கள் கிழமையன்று பெரும் அளவில் வெளியிடப்பட்டது.

அமெரிக்க இராணுவ வரலாற்றில் வெளியான கசிவுகளிலேயே மிகப்பெரிய இராணுவ இரகசியக் கசிவாகக் கருதப்படும் இந்த இரகசியங்களை விக்கிலீக்ஸ் என்ற அமைப்பு தன்னுடைய இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.

பிரபல அமெரிக்க நாளிதழான நியூயார்க் டைம்ஸ், பிரிட்டன் நாளிதழான கார்டியன் மற்றும் ஜெர்மனிய வார இதழான டெர் ஸ்பீஜெல் ஆகியவை தங்களுடைய இணையதளத்திலும் இவற்றை வெளியிட்டுள்ளன.

கடந்த 6 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா சந்தித்து வரும் அடுக்கடுக்கான தோல்விகளை இந்த இரகசிய ஆவணங்கள் தெளிவாக எடுத்துரைக்கின்றன.

320 பிரிட்டனர் வீரர்களையும் ஆயிரத்துக்கும் அதிமான அமெரிக்க வீரர்களையும் பலி வாங்கியுள்ள ஆப்கானிஸ்தான் மீதான போர் குறித்த சுமார் 90 ஆயிரம் நிகழ்வுகளுக்கான பதிவுகள், ஆய்வறிக்கைகள் இந்த இரகசியத் தகவல்களில் அடங்கியுள்ளன.

திங்களன்று கசிந்த இரகசியங்கள் வெளிப்படுத்தும் விவரங்கள் வருமாறு:

தாலிபான் தலைவர்களை எவ்வித விசாரணையும் இன்றி கைது செய்யவோ அல்லது கொலை செய்யவோ அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள சிறப்பு கருப்புப் படை எவ்வாறு இயங்கும் விதம்.

தாலிபான்கள் வசம் உள்ள தரையில் இருந்து வான் நோக்கிச் செல்லும் ஏவுகணையை அமெரிக்கா எதிர்கொள்ளும் விதம்.

தாலிபான் நிலைகள் மீது மிகவும் ஆபத்தான ரீப்பர் என்ற ஆயுதங்களை அமெரிக்காவும் கூட்டுப் படையினரும் அதிக அளவில் பயன்படுத்தும் விவரம்.

அமெரிக்க நடத்திய வான் தாக்குதல்களில் உயிரிழந்த பொதுமக்கள். இத்தகைய சுமார் 144 நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. சிலவேளைகளில் இச்செயலுக்கு ஆப்கானிஸ்தான் அரசு தன்னுடைய கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

இதுவரை ஊடகங்களில் வெளிவராத படையினரின் துப்பாக்கிச் சூடுகள், தற்கொலைத் தாக்குதல்கள்.

2008ஆம் ஆண்டு பிரெஞ்சுப் படையினர் முழுவதும் குழந்தைகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்த பேருந்தை தாக்கியது.

பேருந்து ஒன்றின் மீது அமெரிக்கப் படையினர் இயந்திரத் துப்பாக்கி மூலம் சுட்டு 15 பேரைக் கொலை செய்தது.

2007ஆம் ஆண்டு போலந்து நாட்டுப் படையினர் கிராமம் ஒன்றில் நடைபெற்ற திருமண வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்தி, கர்ப்பினிப் பெண் உள்ளிட்டோரை கொலை செய்ததும் அதற்கு கிராமத்தினர் பதில் அடி கொடுத்ததும் என இதுபோன்று ஏராளமான தகவல்களையும் ஒவ்வொரு நிகழ்வும் நடைபெற்ற இடங்களையும் ரகசியத் தகவல்கள் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.

அமெரிக்க இராணுவ இரகசியங்கள் வெளியிடப்பட்டதற்கு அமெரிக்கா கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது. "இராணுவ இரகசியங்களை வெளியிட்டமைக்கு நாங்கள் கடுமையான கண்டத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு வெளியிட்டமை ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க மற்றும் கூட்டுப் படையினரின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். இந்த ஆவணங்கள் குறித்த தகவல்களைக் கேட்க விக்கிலீக்ஸ் அமைப்பு அமெரிக்க அரசைத் தொடர்பு கொள்ளவில்லை. இந்த தகவல்கள் அமெரிக்கர் மற்றும் அமெரிக்க ஆதரவு நாடுகள் மற்றும் அமெரிக்காவுக்கு ஆதரவளிக்கும் ஆப்கானிஸ்தான் மக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் இருக்கக் கூடும் என்றும் வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறினார்.

சனி, 24 ஜூலை, 2010

உலகப் பொருளாதார வளர்ச்சிக்கான இயந்திரம் அல்ல அமெரிக்கா'- பராக் ஒபாமா

ஜுலை.24:'உலகப் பொருளாதார வளர்ச்சிக்கான இயந்திரம் அல்ல அமெரிக்கா' என்று கூறியுள்ள அந்நாட்டு அதிபர் பராக் ஒபாமா, அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்து வளரும் பொருளாதாரத்திற்கு ஒரு மாற்றத்தை உலக நாடுகள் கண்டுபிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

அமெரிக்கா வந்துள்ள பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் உடன் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசியபோது ஒபாமா இவ்வாறு கூறியுள்ளார்.

"அமெரிக்கா வாங்கும், பயன்படுத்தும், இறக்குமதி செய்யும் என்ற அடிப்படையிலான பொருளாதார மாதிரியை நீங்கள் சார்ந்திருக்க முடியாது என்று கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் முதன் முறையாக நான் கலந்து கொண்டபோதே இதை திட்டவட்டமாகத் தெரிவித்தேன்.

பங்குகள் மீது கடன் பெற்றுச் செல்கிறோம்,கடன் அட்டைகளைப் பயன்படுத்துகிறோம், உலகெங்கிலும் சென்று பொருட்களை வாங்குகிறோம். இந்த நிலை மாற வேண்டும்,அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்து வளர்ச்சி காணும் பொருளாதாரத்திற்கு மாற்றமாக வேறொரு பொருளாதார மாதிரியை உலகின் மற்ற நாடுகள் உருவாக்க வேண்டும்.

உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை உந்தித் தள்ளும் இயந்திரமாக அமெரிக்க இருக்க முடியாது" என்று ஒபாமா கூறியுள்ளார்.

வியாழன், 8 ஜூலை, 2010

இந்தியர்களை இழிவுபடுத்தும் விதமாக கட்டுரை வெளியிட்ட டைம் பத்திரிகை மன்னிப்பு கேட்டது

அமெரிக்காவிலிருக்கும் இந்தியர்களை இழிவுபடுத்தும் விதமாக அமெரிக்காவின் பிரபலமான டைம் பத்திரிகை வெளியிட்ட கட்டுரைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து அப்பத்திரிகை அவர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது. அண்மையில் டைம் பத்திரிகையில் நகைச்சுவை கட்டுரை எழுதி வரும் ஜோயல் ஸ்டீன் ஜூலை 5ம் தேதியன்று அமெரிக்க இந்தியர்களை மூடர்கள் என்று அர்த்தம் தொனிக்கும் வகையில் கடுமையாக தாக்கி எழுதியிருந்தார்.

'மை ஓன் பிரைவேட் இந்தியா' என்ற தலைப்பில் அவர் எழுதியிருந்த அந்த கட்டுரையில், "அனைத்து இந்தியர்களும் அறிவுஜீவிகள் என்று நாங்கள் நம்பினோம் ஆனால் இந்திய டாக்டர்கள், என்ஜினியர்களை தொடர்ந்து இங்கே வந்த மற்றையவர்கள் வந்த போது தான் அவர்கள் புத்தி குறைந்தவர்கள் என்று பின்னர் தெரியவந்தது" என்று கூறியிருந்தார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது இதனை அடுத்து இதற்கு தாங்கள் மன்னிப்பு கேட்பதாகவும் யாரையும் புண்படுத்தும் நோக்கமில்லை எனவும் டைம் தெரிவித்தது.

காண்ட்ராக் வழங்க யுஎஸ் நிறுவனத்திடம் லஞ்சம் வாங்கிய பிஎச்இஎல், என்டிபிசி

BHEL Logo
வாஷிங்டன்: பல்வேறு இந்திய அரசுத்துறை நிறுவனங்களுக்கு ஏராளமான லஞ்சம் தந்து காண்ட்ராக்ட்கள் பெற்றதாக ஒரு அமெரிக்க நிறுவனம் அந் நாட்டு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கலிபோர்னியாவைச் சேர்ந்த சிசிஐ என்ற மின் நிலைய வால்வுகள் தயாரிக்கும் நிறுவனம் 36 நாடுகளில் காண்ட்ராக்ட் பெற பல மில்லியன் டாலர்கள் லஞ்சம் தந்ததாக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இதையடுத்து தான் லஞ்சம் தந்ததை இந்த நிறுவனம் ஒப்புக் கொண்டு, யார் யாருக்கு எவ்வளவு தரப்பட்டது என்ற விவரத்தை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இதில் இந்தியாவைச் சேர்ந்த அரசுத்துறை நிறுவனங்களான பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (BHEL), தேசிய அனல் மின் வாரியம் (NTPC), மகாராஷ்டிரா மாநில மின்துறை, ஹரியானா மாநில மின்வாரியம், பிலாய் எலெக்ட்ரிக் ஆகிய நிறுவனங்களும் அடக்கம்.

தனது சாதனங்களை விற்க காண்ட்ராக்ட் பெற இந்த நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுக்கு 2004ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை ஏராளமான லஞ்சம் தந்ததாக சிசிஐ தெரிவித்துள்ளது.

பணம் வாங்கிய அதிகாரிகளின் பெயர் பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை. அதுவும் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

இதில் என்டிபிசியின் நிலக்கரி மின் நிலைய அதிகாரிகளுக்கு தரப்பட்ட லஞ்சம் மட்டும் 1,63,449 டாலர்கள் ஆகும்.

இந்திய பொதுத்துறை நிறுவனங்களில் லஞ்சம் தலைவிரித்தாடுவது புதிய விஷயமல்ல. ஆனால், அதை அமெரிக்க நிறுவனம் பட்டியல் போட்டு நீதிமன்றத்திடம் விளக்கம் தந்துள்ளது தான் புதிய விஷயம்.

இந்தியாவின் பாதுகாப்புத்துறைக்குச் சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களிலும் பெருமளவில் லஞ்ச-லாவண்யம் நடந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இவர்கள் தயாரிக்கும் விமானங்கல், ஆயுதங்களை நம்பித்தான் தான் நமது பாதுகாப்பு வீரர்கள் உள்ளனர்.

செவ்வாய், 29 ஜூன், 2010

அமெரிக்காவும் பாலியல் பலாத்காரமும்



பெண்களின் மீது பாலியல் பலாத்காரம் செய்வதில் உலகிலேயே முதலிடம் வகிக்கும் அமெரிக்காவில், இராணுவத்தில் பணிபுரியும் பெண் சிப்பாய்கள் மீதும் பாலியல் பலாத்காரம் அதிகரித்து வருவதாக அதிர்ச்சியளிக்கும் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.

உலகில் பாலியல் பலாத்காரங்கள் மிகவும் அதிகமாக நடைபெறும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்காதான் முதல் இடத்தைத் தொடர்ந்து கைப்பற்றி வருகின்றது.

தற்போது வெளி வரும் அறிக்கைகள் இராணுவ பெண் சிப்பாய்கள் மீதான பாலியல் பலாத்காரத்திலும் அமெரிக்காவை எவரும் முந்தி விட முடியாது என்று கூறுகின்றது. அமெரிக்க இராணுவ பெண் சிப்பாய்கள் மீதான பாலியல் பலாத்காரங்கள் அதிகரித்து வருவதாக அமெரிக்காவிலிருந்தே வெளியாகியுள்ள ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன.

கடந்த வருடங்களில் 2009 மட்டும் 37000 பெண் சிப்பாய்கள் பாலியல் பலாத்காரங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அந்த அறிக்கை கூறுகின்றது. எனினும் இந்த எண்ணிக்கை மிகவும் சிறியது என்றும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அதிகமான பெண் சிப்பாய்கள் அது பற்றி முறைப்பாடு செய்வது இல்லை என்றும் மீறி முறைப்பாடு செய்தால் அவர்கள் பழிவாங்கப் படுவதாகவும் அதே ஆய்வறிக்கைக் கூறுகிறது.

அமெரிக்க இராணுவத்திலுள்ள பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் பலாத்காரத்தில் 25 சதவீதம் ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் உள்ள அமெரிக்க இராணுவத்தில் நடை பெறுவதாகவும் பெண்டகன் அறிக்கை ஒன்று கூறுகின்றது.

அமெரிக்கா முழுவதும் பாலியல் தொடர்பான குற்றங்களைப் புரிந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை விடவும் கூடுதல் என்று சமீபத்திய மற்றொரு ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. பாலியல் தொடர்பான குற்றங்கள் அங்கு அதிகரித்து வருவதையே இது காட்டுகிறது.

இதற்காக அமெரிக்காவில் பாலியல் குற்றவாளிகள் என்று அடையாளம் காணப்பட்டவர்களின் முகவரி உள்ளிட்டவை அடங்கிய சேவையை தனியார் நிறுவனம் ஒன்று வழங்குகிறது. "இதன்மூலம், ஒருவர் தாம் வாழும் பகுதிக்கு அருகில் பாலியல் குற்றங்களைப் புரிவோர் என்று கருதப்படுவோர் யாரேனும் இருக்கிறார்களா என்பதை உறுதி செய்து கொள்ள முடியும்" என்று அந்நிறுவனம் விளம்பரப்படுத்தி வருகின்றது என்பது குறிபிடதக்கது.

முன்னேற்றமடைந்த நாடு எனவும் பெண்களின் சுதந்திரத்திற்கு முன்னுதாரணமான நாடு எனவும் நாகரீகத்தின் உச்சியில் உள்ள நாடு எனவும் மக்களால் தவறாக கருதப்படும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தான் முன்னணியில் இருக்கும் போலிருக்கிறது!

ஒரு புள்ளிவிபரம்

லூயிஸ் ஹாரிஸ் என்ற அமைப்பு அண்மையில் 782 தொழிலாளர்களிடம் தொலைபேசி உரையாடல் மூலமாக ஒரு புள்ளிவிபரத்தைத் தயாரித்தது.

அதில், பணியில் இருக்கும் 37 சதவீதப் பெண்கள் தாங்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படுவதாகக் குற்றம் சாட்டினார்கள்.

7 சதவீதப் பெண்கள் தங்களது தொழிலகங்களில் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படுவதாகவும்,

62 சதவீத பலாத்காரங்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்றும்

இதில் 100 சதவீதப் பெண்கள் தங்களை பலாத்காரம் செய்வது ஆண்களே என்றும் 59 சதவீத ஆண்கள் தங்களை பாலியல் பலாத்காரம் செய்வது பெண்களே என்றும்,

41 சதவீத ஆண்கள் தங்களை பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்குவோர் வெளியில் உள்ள ஆண்கள் என்றும் குற்றம்சாட்டுகின்றனர்

பெண்களில் பலாத்காரத்திற்கு உள்ளாவோர் :

43 சதவீதப் பெண்களை அவர்களது முதன்மை அதிகாரிகளே பலாத்காரம் செய்கின்றனர்

27 சதவீதப் பெண்களை அவர்களது சீனியர் அதிகாரிகளே பலாத்காரம் செய்கின்றனர்

19 சதவீதப் பெண்களை அவர்களது தரத்தில் உள்ளவர்களாலும்

அருந்தினால் 8 சதவீதப் பெண்களை அவர்களை விட தரத்தில் கீழ் நிலையில் உள்ளவர்களாலும் பலாத்காரம் செய்யப்படுகின்றனர்.

கல்விக் கூடங்களில் :

அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பயிலும் பெண்களின் குழுமத்தினால் 8-11 வயதுடைய 1632 மாணவர்களிடம் எடுக்கப்பட்டதொரு புள்ளிவிபரத்தில் :

85 சதவீத மாணவிகள் பாலியல் பலாத்காரத்திற்குள்ளாக்கப்படுகின்றனர்

76 சதவீத மாணவர்கள் பாலியல் பலாத்காரத்திற்குள்ளாக்கப்படுகின்றனர்

31 சதவீத மாணவிகள் அடிக்கடியும்

18 சதவீத மாணவர்கள் அடிக்கடியும்

13 சதவீத மாணவிகள் முத்தத்தை விட.., அதற்கும் மேலாக பாலியல் வல்லுறவுக்கு வற்புறுத்தப்படுவதாகவும்

அதேபோல் 9 சதவீத மாணவர்கள் முத்தத்தை விட.., அதற்கும் மேலாக பாலியல் வல்லுறவுக்கு வற்புறுத்தப்படுவதாகவும்,

25 சதவீத மாணவிகளை அவர்களது பள்ளிக்கூடத்தில் பணிபுரிபவர்களாலும்,

10 சதவீத மாணவர்களை அவர்களது பள்ளிக்கூடத்தில் பணிபுரிபவர்களாலும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுகின்றனர் என்று அந்த ஆய்வு கூறுகின்றதஅமெரிக்காவில் உள்ள American Psychological Association என்ற அமைப்பு பெண் பட்டதாரிகளிடம் எடுத்ததொரு ஆய்வில்

12.7 சதவீத பெண்கள் பாலியல் பலாத்காரத்தில் உட்படுத்தப்பட்டவர்களாகவும்

21 சதவீதப் பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்குப் பயந்து வகுப்புக்களை தவிர்க்கக் கூடியவர்களாகவும்

11 சதவீதப் பெண்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை புகார்களாகத் தெரித்தவர்களாகவும்

3 சதவீதப் பெண்கள் பாலியல் பலாத்காரத்தின் காரணமாக பள்ளிப்படிப்பை விட்டு விட்டவர்களாகவும் இருந்தனர்.

அமெரிக்காவில் உள்ள Minnesota high school students (reported by Susan Strauss, Sexual Harassment and Teens) அறிக்கை இவ்வாறு கூறுகின்றது :

பள்ளிக்கூடங்களில் பாலியல் பலாத்காரங்கள் இடம் பெறுகின்றன என்பதை 80 சதவீதமானவர்கள் அறிந்தே வைத்திருக்கின்றனர்

இதில் 75 சதவீதம் மாணவர்களுக்கு இடையே நடைபெறுகின்றன என்பதையும்

50 சதவீதமானவைகள் அவர்களது பள்ளிக்கூட ஆசிரியர் மற்றும் நிர்வாகத்தினரால் நடைபெறுகின்றன.

பெண்கள் முன்னேற்றம் என்ற பெயரில், ஆண்களின் போகப்பொருளாக பெண்களை மாற்றும் கலாச்சாரம் இன்று அதிகரித்து வருகிறது. இப்போதெல்லாம் நடு ரோட்டில் தண்ணியடித்தாலும், ஒழுக்க் சீர்கேடான விஷயங்களை செய்தாலும் தவரில்லை என்று கருதப்படுகிறது. ஆனால், தவறுகளைப் பற்றி அரிவுறுத்த யாரேனும் முற்ப்பட்டால் அவர்கள் இன்னல்களுக்கு ஆளாவது சகஜமாகிவிட்டது.

இது போன்ற பாலியல் பலாத்காரம் புரியும் கேவலாமான ராணுவத்தை உலகின் ஒளி விளக்கை போலவும், அதை எதிர்க்கும் யுவான் ரிட்லீ போன்ற பத்திரிக்கையாளர்கள் தாக்கப் படுவதும் சாதாரணமாகிவிட்டது.

ராணுவத்தில் பணிபுரியும் பெண்களுக்கே இந்த நிலமை என்றால், ராணுவத்தால் கைது செய்யப்படும் பெண்கள்? சொல்ல முடியாத அவலங்கள். அந்த பட்டியல் இன்னும் நீளும். அவர்களை இறைவன் பாதுகாக்கவேண்டும்.