ஒபாமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஒபாமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

அமெரிக்காவில் இஸ்லாம்! கோவில், சர்ச் கட்டலாம் என்றால் மசூதி கட்டக் கூடாதா?-ஒபாமா


ஒரு இந்துக் கோவிலை, ஒரு சர்ச்சை, ஒரு யூத ஆலயத்தைக் கட்டலாம் என்றால் ஏன் ஒரு மசூதி கட்டுவதற்கு நாம் எதிர்ப்பு [^] தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து வந்த உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுர கட்டடங்கள் விமானம் கொண்டு தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்டதன் 9வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இரட்டைக்கோபுரம் இருந்த இடத்திற்கு அருகே ஒரு இஸ்லாமிய வழிபாட்டு மையம் கட்டப்படவுள்ளது. ஆனால் இதற்கு அமெரிக்கர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் அதிபர் ஒபாமா, நிச்சயம் அங்கு மசூதி கட்டப்படும் என்று கூறி வருகிறார்.

இந்த நிலையில் இரட்டைக் கோபுர தாக்குதல் [^] சம்பவ நினைவு தினத்தையொட்டி அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது ஒபாமா கூறியதாவது...

நியூயார்க் மசூதி விவகாரம் குறித்து நான் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும், அவரது மதத்தை சுதந்திரமாக பின்பற்ற அனைத்து உரிமைகளும் உள்ளது என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டுள்ளது அமெரிக்கா [^].

இந்த பூமியில் உருவாக்கப்பட்ட அனைத்து ஆண்களும், பெண்களும் சமமானவர்களே. அனைவருக்கும் சம உரிமைகள் உள்ளன. அனைவரும் அவரவர் மதத்தை சுதந்திரமாக கடைப்பிடிக்கலாம்.

ஒரு இடத்தில் உங்களால் சர்ச் கட்ட முடியும்போது, ஒரு யூத ஆலயம் கட்ட முடிகிறபோது, ஒரு இந்துக் கோவிலை கட்ட முடியும் என்கிறபோது, ஏன் ஒரு மசூதியையும் கட்ட முடியாது.

செப்டம்பர் 11 சம்பவத்தில் பலியான அனைவருக்காகவும் நான் அனுதாபப்டுகிறேன். அவர்களது குடும்பங்களைச் சேர்ந்தவர்களை நான் முன்பு சந்தித்துள்ளேன். அவர்களது இழப்பும், துயரமும் நீண்டது, அவ்வளவு சீக்கிரம் அடங்க முடியாதது என்பதை நான் உணர்கிறேன், அவர்களது சோகத்தில் நானும் பங்கேற்கிறேன். அனைத்து அமெரிக்கர்களும் இந்தசோகத்தில் பங்கேற்கின்றனர் என்றார் ஒபாமா

சனி, 21 ஆகஸ்ட், 2010

அமெரிக்கர்களில் ஐந்தில் ஒருவர் ஒபாமாவை முஸ்லிம் என நம்புகின்றனர்

வாஷிங்டன்,ஆக20:அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவை முஸ்லிம் எனக்கருதும் அமெரிக்கர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு மார்ச்சில் 11 சதவீதம் பேர் ஒபாமாவை முஸ்லிம் என நம்பினர்.ஆனால், இந்த எண்ணிக்கை தற்பொழுது 18 சதவீதமாக அதிகரித்துள்ளது என இவ்வாய்வை மேற்கொண்ட ஃப்யூ ரிசர்ச் சர்வே கூறுகிறது.

குடியரசுக் கட்சிக்காரர்களில் மூன்றில் ஒருவருக்கே ஒபாமா கிறிஸ்தவர் என்பது தெரியும். ஆய்வில் பங்கேற்ற 43 சதவீதம் பேர் ஒபாமா எந்த மதத்தைச் சார்ந்தவர் என்பது தெரியாது.

ஒபாமாவின் தந்தை முஸ்லிமாக இருந்தார் என்பதன் மறைவில் அவருடைய எதிரிகள் நடத்தும் பிரச்சாரம்தான் இந்த தவறான புரிதலுக்கு காரணம் எனக் கருதப்படுகிறது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

சனி, 3 அக்டோபர், 2009

ஊருக்கு உபதேசம் செய்யும் ஒபாமா!


இந்திய சுதந்திரத்திற்கு பாடுபட்ட தியாகிகளில் ஒருவரான காந்தி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கருத்துக்கூறியுள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா,

  • காந்தியின் கொள்கைகளை பின்பற்றி வாழ நாம் உறுதி கொள்ளவேண்டும்
  • அனைவரையும் மதித்து போற்றவேண்டும்.
  • காந்தி போதித்த அஹிம்சை முறை இன்று உலகம் முழுவதும் பலரால் பின்பற்றப்படுகிறது.
  • பொறுமை-அகிம்சையை போதித்த அவரை இந்நாளில் நினைவு கூர்வோம்.

என்று கூறியுள்ளார்.

ஒபாமா அவர்கள் உலக மக்களுக்கு சொன்ன செய்தியை தான் கடைபிடிக்க முன்வருவாரா? காந்தி போதித்த அகிம்சையை சிலாகித்து பேசும் ஒபாமா, ஆப்கானிலும், இராக்கிலும் நேரடியாகவும்-லெபனானிலும், பாலஸ்தீனிலும் கள்ளக்குழந்தை இஸ்ரேல் மூலமாகவும் 'ஹிம்சை'யை கையாள்வது ஏன்? காந்தி போதித்த அஹிம்சை உலக அளவில் பலராலும் பின்பற்றப்படுகிறது என்று சொன்ன ஒபாமா, காந்தியின் அகிம்சையை அமெரிக்காவும் பின்பற்றும் என்று சொல்ல தயங்கியது ஏன்? அப்படி சொன்னால் ஆக்கிரமிப்பு போர் செய்யமுடியாது. ஆயுத வியாபாரமும் செய்யமுடியாது. அரபகங்களை அடக்கியாள முடியாது என்பதாலா?

காந்தியின்வழியில் அனைவரையும் மதிக்கவேண்டும் என்று கூறும் ஒபாமா, தான் மட்டும் ஆயுதங்களை குவித்துக்கொள்ளலாம், அடுத்த நாடு அதுவும் ஒரு முஸ்லீம் நாடு தனது நாட்டின் பாதுகாப்பு கருதி ஒரு தீக்குச்சியை தயாரித்தால் கூட அதை கழுகுப்பார்வை பார்ப்பது ஏன்? அப்போது மட்டும் அடுத்தவரின் மதிப்பு-உரிமை பறிக்கப்படுவது தெரியவில்லையா?

ஆக, காந்தியின் அகிம்சையை ஒபாமா மதிப்பவராக இருந்தால் தனது ஆக்கிரமிப்பு படைகளை முஸ்லீம் நாடுகளில் இருந்து வெளியேற்றிவிட்டு பின்பு அகிம்சையை பற்றி பேசட்டும். அங்கே தீவிரவாதிகளை ஒழிக்கிறேன் என்ற பெயரில் பாலை நிலம் அப்பாவிகளின் ரத்தத்தால் சிவப்பாக காட்சியளிக்க இன்றும் கோடிகணக்கான டாலர்களை ஒதுக்கும் ஒபாமா, மறுபுறம் அஹிம்சை பேசுவது வியப்பானது. சரி! ஒபாமா 'பீல்'பண்ணாதீங்க! இந்தியாவில் என்ன வாழுது..? அக்டோபர் 2 அன்று மட்டும் மதுக்கடைகளை மூட்டி விட்டு அன்று காந்தியின் சிலைக்கு மாலை போட்டுவிட்டு காந்தியின் கொள்கைகளை பின்பற்றுவோம் என்று வீர உரையாற்றிவிட்டு, அதே காந்தி பிறந்த குஜராத் மண்ணை காவியாக மாற்றிய கயவர்களை பத்திரமாக சுதந்திர காற்றை சுவாசிக்கச்செய்து வரும், எங்க அரசியல்வாதிகள் உங்களுக்கு பக்க பலமாக இருப்பார்கள். எனவே எதைப்பத்தியும் கவலைப்படாதீங்க! ஈராக்கிலும்-ஆப்கானிலும் கேட்கும் மரண ஓலத்திற்கு நடுவிலும் நீங்கள் சொல்லுங்க 'காந்தியின் அகிம்சையை பின்பற்றுவோம்' என்று!