பி.ஜே.பி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பி.ஜே.பி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

அன்னா அசாரே; பொறக்கும்போதே கிழவனாதான் பொறந்தாரோ!

இதெல்லாம் காந்தி காலத்திலேயே பாத்துட்டோம்.. புதுசா எதவாது ட்ரை பண்ணுங்கப்பா...

வே.மதிமாறன் பதில்கள்


அன்னா அசாரே பற்றி நீங்கள் எழுதவில்லையே?

-ஸ்ரீதர், சென்னை.

காங்கிரஸ் அரசின் ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்க சொல்லி எந்த பி.ஜே.பி ஆதரவு முதலாளி பணமாகவோ, பொருளாகவோ அல்லது புகழாகவோ (விளம்பரம்) லஞ்சம் கொடுத்திருப்பான்னு யோசிச்சுகிட்டு இருந்தேன், அதானாலதான் உடனே எழுத முடியல.

டிஜிட்டல் பேனர்கள் வந்ததுக்குப் பிறகு, ஒரு குறிப்பிட்ட பகுதியில் மூனே நாளில் ஒருத்தர் பிரபலமாகி, தலைவராகவும் ஆகிவிடுவதுப்போல், வெறும் ஊடகங்கள் மூலமாக மூனே மாசத்துல பெரிய தலைவராயிட்டாரு இந்த இந்தியன் தாத்தா.

என்னமோ இந்தியாவுல ஊழல் நாலுமாசமாத்தான் நடப்பதுபோல், இவ்வளவு நாள் சும்மா இருந்துட்டு, இப்போ தீடிருன்னு ஊழலுக்கு எதிராக சோர்ந்து படுத்திருக்கிறார் இந்த தாத்தா.

ஒரு வேளை நாலு மாசத்துக்கு முன்னாலதான் பொறந்தாரோ, அப்போ பொறக்கும்போதே கிழவனாவே பொறந்துட்டாருபோல.

குறிப்பு:

சங்கரராமன் கொலை வழக்கில் இருந்து தப்பிக்க நீதிபதியிடம் பேரம் பேசிய ஜெயெந்திரன், உண்ணாவிரதத்தை முடித்து வைத்தால் பொருத்தமாக இருக்கும்

நன்றி : வே.மதிமாறன்

http://mathimaran.wordpress.com/2011/08/25/431/

.

திங்கள், 12 ஜூலை, 2010

அப்சல் குரு-காங்கிரஸ் பற்றிப் பேசிய பி.ஜே.பி. தலைவர் கத்காரி ஒரு 'மனநோயாளி' - சமாஜ்வாதி

அலஹாபாத்:பாராளுமன்றத் தாக்குதல் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள அப்சல் குருவின் தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதில் காங்கிரஸ் காலம் தாழ்த்தி வருவதாகவும், இதனால் அப்சல் குரு காங்கிரஸ் கட்சியின் மருமகனாக திகழ்வதாகவும் பி.ஜே.பி. தலைவர் நிதின் கத்காரி அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார்.

இது குறித்து விமர்சித்துள்ள சமாஜ்வாதி கட்சி எம்.பி.குமார் ராமன் சிங்க், இது போன்ற கருத்துக்கள் ஒரு மனநோயாளியிடமிருந்தே எதிர்பார்க்க முடியும் என்றார்.

இக்கருத்துக்களை துரதிஷ்டம் என்று கூறிய குமார், ஒரு தேசிய கட்சியின் தலைவரிடமிருந்து இதுபோன்ற கருத்துக்கள் ஒரு போதும் வரக்கூடாதது என்றார். இது வெறுப்பு கொண்ட பி.ஜே.பி. அரசியல் கொள்கையை பிரதிப்பலிப்பதாக கூறியுள்ள அவர், இந்திய ஜனநாயக கொள்கைக்கும் பி.ஜே.பி.யின் கொள்கைக்கும் பெரிய அளவில் வித்தியாசங்கள் உள்ளதாக தெரிவித்தார்.

அப்சல் குரு விவகாரத்தில், பி.ஜே.பி வேண்டுமென்றே சிறுபான்மையின மக்களை சீண்டிப் பார்க்கிறது என்று கூறியுள்ள குமார், இங்கு தான் சமாஜ்வாதி கட்சிக்கும் பி.ஜே.பி போன்ற கட்சிக்கும் மாற்றங்கள் இருப்பதாக தெரிவித்தார்.

'காங்கிரஸை நாங்கள் எதிர்த்தாலும், இதுபோன்ற கேவலமான ஒழுக்கமற்ற தன்மையை ஒருபோதும் கையில் எடுத்தது கிடையாது' என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சித் தலைவர் அஜய் சிங்க், பி.ஜே.பி. தலைவருக்கு காலில் வர வேண்டிய 'புண்' வாயில் வந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

'அரசியல் அனுபவமில்லாத கட்காரிக்கு, எங்கு எப்பொழுது என்ன பேச வேண்டும் என்பதே தெரியாது என்றார். இது போன்ற மனிதர்கள் தேசிய கட்சியின் தலைவர்களாக ஆக்கப்பட்டுள்ளது துரதிஷ்டவசமானது.' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

திங்கள், 28 ஜூன், 2010

பி.ஜே.பி-யின் ஒருதலைபட்சக் கொள்கை: கர்நாடக லோகயுக்தா நீதிபதி ராஜினாமா

பெங்களூர்:கர்நாடகா லோகயுக்தா பதவியிலிருந்து நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தீடீர் ராஜினாமா செய்துள்ளார்.

பெருகிவரும் ஊழல்களுக்கெதிராக பி.ஜே.பி. அரசின் ஒருதலைபட்சமான கொள்கையை காரணம் காட்டி, தன் பதவி ஆயுள் இன்னும் ஓர் ஆண்டு இருக்கும் நிலையில், ஹெக்டே ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. கர்நாடகா ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜ் மாற்றும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், ஹெக்டே தன் ராஜினாமாவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். எனினும், இவ்வேண்டுகோளை ஹெக்டே நிராகரித்து விட்டதாக தெரிகிறது.

கடந்த 2006ம் ஆண்டு ஹெக்டே லோகயுக்தா தலைவராக நியமிக்கப்பட்டார். சுரங்க தொழிலில் ஈடுபட்டுள்ள இரண்டு பி.ஜே.பி. அமைச்சர்களான ரெட்டி சகோதரர்களின் ஊழல்களை நிரூபித்தும், ஆளும் பி.ஜே.பி. அரசு அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பல அமைச்சர்களின் அலுவலகத்தை ரெய்டுகள் செய்துள்ள ஹெக்டே, பி.ஜே.பி. எம்.எல்.ஏ. சம்பங்கிவிற்கு எதிராக வழக்கையும் தொடர்ந்துள்ளார். ஆனால் ஹெக்டேவின் அனுமதி இல்லாமலேயே இவர்கள் அனைவரும் வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு விடுவிக்கப்பட்டவர்களில் சிலருக்கு பதவிகளும் , பரிசுகளும் கொடுக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் விரக்தியடைந்த நீதிபதி சந்தோஷ் ஹெக்டே லோகயுக்தா பதிவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.
இதனிடையே, பி.ஜே.பி. அரசின் ஒருதலைபட்ச கொள்கைக்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. ஊழல்கள், பொய் வழக்குகள், பாலியல் குற்றச்சாட்டுக்கள், விவசாயிகளை கொல்லுதல், மதக்கலவரத்தை தூண்டுதல், மதக்கலவரத்தை தூண்டும் சமூக விரோதிகளின் மேல் நடவடிக்கை எடுக்காமை, லோகயுக்தா பதவிகளை பறித்தல் என நீண்ட ஒருதலைபட்ச பட்டியல் நிறைந்த கர்நாடக அரசை மத்திய அரசு உடனே தூக்கி எறியவேண்டும் என்றும் பி.எஃப்.ஐ. கேட்டுக் கொண்டுள்ளது.
Twocircles

செவ்வாய், 7 ஏப்ரல், 2009

நான் ஏன் பி.ஜே.பி.யை எதிர்க்கிறேன்?

சி.சரவணகார்த்திகேயன்

பி.ஜே.பி.யும் நானும்

முன்குறிப்பு :

நீங்கள் ஓர் இந்து மத வெறியராக இருந்தால் தயவு செய்து இப்பதிவை மேற்கொண்டு படிக்க வேண்டாம்; நான் விளையாட்டுக்குச் சொல்லவில்லை; நிஜமாகவே சொல்கிறேன். மீறிப்படிப்பது நம் இருவருக்குமே பயனளிக்கப் போவதில்லை என்பதால்.
Image

நான் ஏன் பி.ஜே.பி.யை எதிர்க்கிறேன்?

பி.ஜே.பி. என்றழைக்கப்படும் பாரதிய ஜனதா பார்ட்டியின் நிறம் காவி. அவர்களிடம் ஒற்றை வார்த்தையில் அக்கட்சியின் கொள்கையை சொல்லச் சொன்னால் "இந்துத்துவம்" என்று பெருமை பொங்கச் சொல்வார்கள். தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரையிலான அதன் உறுப்பினர்களில் கணிசமானோர் முன்னாள் ஆர்.எஸ்.எஸ். காரர்கள்.

1992ல் நடந்த‌ பாபர் மசூதி இடிப்புச் சம்பவத்தில் முதன்மைக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட லால் கிருஷ்ண‌ அத்வானி அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர். எல்லாவற்றுக்கும் மேலாக, பி.ஜே.பி.யின் 2009 பாரளுமன்றத் தேர்தல் அறிக்கை மறைமுகமாக‌ அயோத்தியில் பிரச்சனைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டித் தருவதாகச் சொல்கிறது. இவையெல்லாம் சில உதாரணங்கள்.

"மக்களின் பாவங்களினால் சாமி குத்தம் ஆகி விட்டது, அதனால் தான் சரியான‌ மழை இல்லை" என்று சொல்லி கடவுளை சாந்தப்படுத்த மாநிலத்தின் ஆண்டு பட்ஜெட்டில் - அதாவது பொது மக்களின் வரிப்பணத்தில் - ரூபாய் 130 கோடி கோயில்களுக்கும் மடங்களுக்கும் ஒதுக்கியவர் பி.ஜே.பி. கட்சியைச் சேர்ந்த கர்நாடக முதல்வர் எடியூரப்பா.

ஒரு மாநிலத்தில் ஆட்சியைக் கொடுத்ததற்கே, நியூட்டனின் மூன்றாம் விதியை துணைக்கு அழைத்துக் கொண்டு முஸ்லிம்களைக் கொன்று குவித்தவர் நரேந்திர மோடி. அவர் திறமையான ஆட்சியைக் கொடுத்திருக்கலாம். ஆனால் ஒரு நல்ல தலைவனுக்குத் தேவை நிர்வாகத்திறன் மட்டுமல்ல; பாரபட்சமற்ற நீதி வழங்கும் மனசாட்சியும் கூட. அதில் தான் பிரச்சனை.
Image

கடந்த மாதம், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை இந்தியாவில் நட‌த்துவது பற்றி சர்ச்சை எழுந்த போது, நரேந்திர மோடி மட்டும் போட்டிகளை எந்தப் பிரச்சனையுமின்றி பாதுகாப்புடன் நடத்தித் தர‌ குஜராத் மாநிலம் தயாராக இருப்பதாக அறிவித்தார். இது கூட முஸ்லிம்களுக்கு எதிரான பி.ஜே.பி.யின் அறைகூவலாகவே எனக்குப் படுகிறது.

"If anyone raises a finger towards Hindus or if someone thinks that Hindus are weak and leaderless, if someone thinks that these leaders lick our boots for votes, if anyone raises a finger towards Hindus, then I swear on the Gita that I will cut that hand" என்று பொதுக்கூட்ட‌ மேடையில் முழங்குகிறார் பி.ஜே.பி. கட்சியின் இளம் உறுப்பினரான வருண் காந்தி. என்ன திமிர் பாருங்கள்?

Imageஇதற்காக பேச்சுக்காக சிறையிலிருக்கும் வருண் காந்தியை தேர்தலில் வேட்பாளராக நிறுத்த‌க்கூடாது என்று தேர்தல் ஆணையம் சொல்வது துரதிர்ஷ்டவசமாது என்று புலம்புகிறார் கட்சியின் தலைவரான வெங்கையா நாயுடு. இது கட்சியின் தலைவரே அப்பேச்சை வெளிப்படையாக நியாயப்படுத்துவதாக இருக்கிறது.

ஆயிரம் ஆண்டுகளாக இம்மண்னில் குடிமக்களாக‌ வாழ்ந்து வரும் ஒரு மதத்தினரைப் பற்றி இப்படிப் பேசுவதற்கு என்ன நியாயம் இருக்கிறது? இதற்கும் இலங்கையில் சிங்களர்கள் தமிழர்களை கொன்று குவிப்ப‌தற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? அவர்கள் இன்று அங்கே செய்கிறார்கள்; இவர்கள் நாளை இங்கே செய்வார்கள். அவ்வளவு தான்.

பதினைந்து கோடி இந்திய முஸ்லிம்களின் ரத்தம் ஆறாய் ஓடுவதைக் காணும் மனவலிமை உண்டா உங்களுக்கு? யோசித்துக் கொள்ளுங்கள்.

பின்குறிப்பு :

நீங்கள் ஓர் இந்து மத வெறியராக இருந்தும் நான் சொன்னதைக் கேட்காமல் இது வரை வந்து விட்டீர்கள் என்றால், நீங்கள் மனிதனென்ற ஞாபகம் எங்கோ ஓரமாய் உங்களிடம் மிச்சமிருக்கிறது என அர்த்தம். இந்தத் தேர்தலிலாவது அதைத் தேடிக் கண்டுபிடியுங்கள்.

சி.சரவணகார்த்திகேயன், பெங்களூர்