ஹிஸ்புல்லாஹ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஹிஸ்புல்லாஹ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 17 அக்டோபர், 2010

இஸ்ரேலின் இறுதி காலம் நெருங்கி விட்டது : அஹ்மது நிஜாத் ஆவேசம்

லெபனான் : இஸ்ரேலின் இறுதி காலம் நெருங்கி விட்டது என்றும் இஸ்ரேலியர்கள் தாங்கள் பூர்விக நாட்டிற்கே திரும்ப போகும் நேரம் வந்து விட்டது என்றும் இஸ்ரேலிலிருந்து 2 மைல் தொலைவில் உள்ள பின்ட் ஜிபில் எனுமிடத்தில் நடைபெற்ற ஹிஸ்புல்லாவின் பேரணியில் இஸ்ரேலின் கடும் எதிரியான ஈரான் அதிபர் அஹ்மது நிஜாத் கூறினார்.

2006-ல் இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் நடைபெற்ற போரில் இஸ்ரேலின் குண்டு வீச்சில் ஏராளமான மக்கள் பின்ட் ஜிபிலில் கொல்லப்பட்டார்கள். அவர்களின் மறைவை நினைவு கூறும் வகையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அஹ்மது நிஜாத் மக்களின் பலத்த கரகோஷங்களுக்கிடையே "பின்ட் ஜிபில் உயிரோடு உள்ளது. மலை போன்ற உறுதியுள்ள உங்களின் வீரத்தை பாராட்டுகிறேன். என்றும் உங்களுக்கு ஈரான் துணை நிற்கும்" என்று கூறினார்.

இஸ்ரேலுக்கு மிக அருகில் நடந்த ஹிஸ்புல்லா பேரணியில் அஹ்மது நிஜாத் கலந்து கொண்டது இஸ்ரேலுக்கு விடுக்கும் எச்சரிக்கையாகவே அரசியல் வல்லுநர்களால் பார்க்கப்படுகிறது. அஹ்மது நிஜாத்தின் அதிகாரபூர்வ லெபனான் வருகையை அமெரிக்கா, இஸ்ரேல் இரண்டும் கண்டித்ததுடன் இப்பயணத்தின் மூலம் லெபனானும் தீமைகளின் அச்சு நாடுகளில் இணைந்து விட்டதாக கூறினர்.

பின்னர் லெபனான் பல்கலைகழகத்தில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய அஹ்மது நிஜாத் ஈரானின் அணு ஆயுத திட்டத்தை ஆதரித்து பேசினார். மத்திய கிழக்கு நாடுகளில் எவ்வித அறிவியல் வளர்ச்சியும் பெற்று விட கூடாது என்பதில் அமெரிக்கா கவனமாக இருப்பதாக கூறிய அவர் தாம் விஞ்ஞானத்தை பரப்ப நினைப்பதாகவும் அமெரிக்காவோ அதை தடுத்து இருட்டில் ஆழ்த்த நினைப்பதாகவும் கூறினார்.

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

லெபனானில் உயிர் தியாகிகளுக்கு தீம் பார்க்கை உருவாக்கிய ஹிஸ்புல்லாஹ்

பெய்ரூட்,ஆக31:தெற்கு லெபனானில் இஸ்ரேலின் எல்லையோடு இணைந்த மிலீத்தாவில் போராளி இயக்கமான ஹிஸ்புல்லாஹ் உயிர்தியாகிகளை நினைவுக்கூறும் தீம் பார்க்கை திறந்துள்ளது. 'பூமி சுவனத்தோடு பேசுகிறது' என்பது இரண்டுகோடி டாலர் செலவில் உருவாகியிருக்கும் தீம் பார்க்கிற்கு அழைப்புவிடுக்கும் போர்டில் எழுதப்பட்டுள்ள வாசகங்களாகும்.

இஸ்லாமிய தற்காப்பு போருக்கு குடும்பங்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது பார்க்கின் நிர்மாணம்.ஹிஸ்புல்லாஹ்வின் செயல்பாடுகளைக் குறித்தும், இஸ்ரேலுக்கெதிரான தற்காப்புப் போரைக் குறித்தும் ஆர்வத்தைத் தூண்டும் காட்சிகள் பார்க்கில் இடம்பிடித்துள்ளன.

'வழி' என்று பெயரிடப்பட்டுள்ள பகுதியின் வழியாக பயணிக்கும் பொழுது ஒரு போர்க்களத்திற்கு சென்ற அனுபவம் ஏற்படும். சுவரில் அழகான வர்ணங்களில் தீட்டப்பட்டுள்ள போர்க்களக் காட்சிகள். அத்துடன் போர்க்களத்தில் மருத்துவமனையும், ராக்கெட் லாஞ்சிங் மையமும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இஸ்ரேலுடனான போரின் பொழுது ரகசிய பங்க்கராக செயல்பட்ட குகையை கடந்து சென்றால் ஏழாயிரம் போராளிகள் பயன்படுத்திய இடங்களின் விவரங்களைக் காணலாம்.

'கர்த்தம்' என்று பெயரிடப்பட்டுள்ள இடத்தில் ஒரு தனியான குழி ஒன்றில் இஸ்ரேல் ராணுவத்திடமிருந்து கைப்பற்றிய இயந்திரத் துப்பாக்கிகளும், ராக்கெட்டுகளும், டேங்குகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஒருமுறை நம்முடைய வீடுகளை தகர்க்க பயன்பட்டவை இவை. தற்பொழுது நமது காலடியில் வந்துள்ளது என வழிகாட்டியொருவர் பார்க்கை காணவரும் பார்வையாளர்களிடம் விளக்குகிறார்.

அங்கு காணப்படும் ஹெல்மெட்டுகளெல்லாம் கொல்லப்பட்ட இஸ்ரேலிய ராணுவத்தினருடையது.

"இந்த சாதனைகளை காணும்பொழுது மகனை இழந்த சோகத்தை நான் மறக்கிறேன்" எனக் கூறுகிறார் 13 பிள்ளைகளின் தந்தையும், விவசாயியுமான அஹ்மத் ஸலீம். ஸலீமின் அனைத்து பிள்ளைகளும் ஹிஸ்புல்லாஹ்வின் உறுப்பினர்களாவர். 1992 ஆம் ஆண்டு இஸ்ரேலுடன் நடந்த மோதலில் அவர்களில் ஒருவர் கொல்லப்பட்டார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

ஞாயிறு, 22 நவம்பர், 2009

ஹிஸ்புல்லாஹ் பொதுச்செயலளாரக ஹஸன் நஸ்ரல்லாஹ் மீண்டும் தேர்வு



6-வது முறையாக ஹிஸ்புல்லாஹ் போராளி இயக்கத்தின் பொது செயலாளராக செய்யத் ஹஸன் நஸ்ரல்லாஹ் தேர்வு செய்யப்பட்டார் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற ஹிஸ்புல்லாஹ் இயக்கத்தின் மாநாட்டைத்தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ள இம்முடிவில் மேலும் புதிய அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. பல்வேறு இயக்கரீதியான திருத்தங்கள் சமீபத்திய வருடங்களில் இயக்கம் கடந்து வந்த பாதைகளில் சந்தித்த பிரச்சனைகளின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

ஷேஹ் நாஸிம் கஸ்ஸாம் என்பவர் மீண்டும் துணை பொதுச்செயலாளராக தேர்வுச் செய்யப்பட்டுள்ளார். ஆனால் இந்த அறிக்கை எப்பொழுது ஹிஸ்புல்லாஹ் இயக்கத்தின் உயர்மட்டக்குழுவினரால் நஸ்ருல்லாஹ் பொதுச்செயலாளராக தேர்வுச்செய்யப்பட்டார் என்பதை தெரிவிக்கவில்லை. ஹிஸ்புல்லாஹ்வின் தலைமைக்கான தேர்தல்கள் 3 வருடத்திற்கு ஒருமுறை நடத்தப்படும். கடந்த 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்கு பின் 2 ஆண்டுகள் தாமதாகவே இத்தேர்தல் நடைபெற்றுள்ளது. காரணம் லெபனானின் உள்நாட்டு பிரச்சனைகள் மற்றும் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற ஹிஸ்புல்லாஹ்விற்கும் இஸ்ரேலுக்குமிடையே நடைபெற்ற போர் ஆகியனவாகும். வருகிற தினங்களில் ஹிஸ்புல்லாஹ் பொதுச்செயலாளர் நஸ்ரல்லாஹ்வின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் இயக்கத்தின் புதிய அரசியல் அறிக்கையை வெளியிடுவார் என்றும் கருதப்படுகிறது.நஸ்ரல்லாஹ் ஹிஸ்புல்லாஹ்வின் முந்தைய தலைவர் அப்பாஸ் மொஸ்ஸாவி இஸ்ரேலிய ஹெலிகாப்டர் தாக்குதலில் கொல்லப்பட்டதைத்தொடர்ந்து கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் ஹிஸ்புல்லாஹ்வின் தலைமை பதவியை வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


செய்தி: நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்