ஹிந்துத்துவ தீவிரவாதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஹிந்துத்துவ தீவிரவாதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 14 ஆகஸ்ட், 2010

ஆர்.எஸ்.எஸ் ன் உண்மை முகத்தை படம்பிடித்துக் காட்டுவது எப்படி சமூக நல்லிணக்கத்தை பாதிக்கும்?: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

ஆக,13:ஹிந்துத்துவாவின் பயங்கரவாதத்தை படம்பிடித்துக் காட்டினால் நாட்டின் சமுக நல்லினக்கம் பாதிக்கப்படுமா? என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கேரள மாநில பொதுச் செயலாளர் P.அப்துல் ஹமீத் வினவியுள்ளார்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் செயல்வீரர்கள், நமது நாட்டில் நடந்த பல குண்டுவெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ்.ன் தொடர்பை வெளிப்படுத்தும் விதமாக, போஸ்டர்களை ஒட்டும்போது காவல்துறை கைது செய்ததையடுத்து இந்த வினா எழுப்பப்பட்டுள்ளது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் ஆகஸ்ட்'09 'SAVE INDIA DAY' பிரச்சாரம் நடந்தையொட்டி இப்போஸ்டர்கள் நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டுள்ளது.

இப்பிரச்சாரத்தின் நோக்கம் ஹிந்துத்துவாதிகள் மற்றும் ஆர்.எஸ்.எஸ்.ன் தீவிரவாதம் மற்றும் உண்மை முகத்தை நாடு முழுவதும் படம் பிடித்துக் காட்டுவதே.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் செயல்வீரர்களை கைது செய்ததற்கு அப்துல்ஹமீத் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் குறிப்பிடுகையில் இந்த கைது அநீதி மற்றும் பாரபட்ச போக்கை காட்டுகிறது என்றார்.

மேலும் அவர் குறிப்பிடும்போது "ஹிந்துத்துவ இயக்கங்களுக்கு, 4 வருடங்களில், 7 மாநிலத்தில் நடந்த 10 குண்டுவெடிப்புகளில் நேரடி தொடர்பிருப்பதை வெளிப்படுத்தியது நமது நாட்டின் புலனாய்வுத்துறை, இதைத்தான் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் போஸ்ட்ர்கள் தெரிவிக்கின்றது.

இந்த சமூகவிரோதிகள் முஸ்லிம் அதிகம் வசிக்கும் இடங்களான அஜ்மீர்,மெக்கா மஸ்ஜித்,மாலேகான் போன்ற இடங்களில் குண்டுகளை வெடிக்கச்செய்து நாட்டின் அமைதியை சீர்குலைத்தனர். மேலும் இதனால் அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர், பல துன்பங்களுக்கு ஆளாயினர்.

இந்த குண்டுவெடிப்புகளை நடத்திய ஹிந்துத்துவ சக்திகளை படம் பிடித்துக் காட்டுவதற்காக நாடு முழுவதும் போஸ்டர் பிரச்சாரத்தை நடத்தியது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா.

இந்த உண்மை பிரச்சாரத்தை நடத்துவதால் சமூக நல்லிணக்கம் எப்படி பாதிக்கப்படும் என்று காவல்துறையும் இந்த அரசாங்கமும் தெரிவிக்கவேண்டும்.

மற்றவர்கள் 'இஸ்லாமிய தீவிரவாதம்' என்று தெரிவிக்கும்போது நாங்கள் 'ஹிந்து தீவிரவாதம்' என்று தெரிவிப்பதில்லை ஏனென்றால் இந்த தீவிரவாதத்திற்கும் ஹிந்து மதத்துக்கும் எந்த தொடர்புமில்லை அதற்கு பதில் நாங்கள் பயன்படுத்துவது ஹிந்துத்துவ தீவிரவாதம் அது சங்கபரிவார்களை குறிப்பதாகும்" என்றார்.

செவ்வாய், 3 ஆகஸ்ட், 2010

ஹிந்துத்துவ தீவிரவாத இயக்கங்களை கட்டுப்படுத்த வேண்டும்: யெச்சூரி

புதுடெல்லி,ஆக,3:வளர்ந்து வரும் ஹிந்துத்துவ தீவிரவாத குழுக்களைப் பற்றி எச்சரிக்கை தேவை என்றும் அதனை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்று யெச்சூரி கூறியுள்ளார்.

கம்யூனிஸ்ட் கட்சியான மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சீதா ராம் யெச்சூரி "இவர்களுக்கு எதிராக அரசு மற்றும் பாதுகாப்புத் துறைகள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று ஹிந்துத்துவ தீவிரவாத குழுக்கள் பற்றி சவ்தார் காஸ்மி நினைவு அமைப்பு ஏற்ப்பாடு செய்திருந்த கருத்தரங்கில் கூறினார்.

"ஹிந்துத்துவ தீவிரவாதக் குழுக்களுடன் ஆர்.எஸ்.எஸ்க்கு உண்டான குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவர் பேசுகையில் அவற்றிற்கு எதிராக நடவடிக்கை எடுப்பது அவசியம்" என்று அவர் வலியுறுத்தினார்.

"தீவிரவாதத்தை நாம் அணுகும் முறையைக் கை விட வேண்டும். ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத செயல்களில் ஈடுபட்டுள்ளது. எந்தத் தீவிர செயலானும் அது இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு எதிரானது" என்றும் அவர் கூறினார்.

"இந்தியாவிற்கு எதிரான இத்தகைய மத உணர்ச்சி துவேச தீவிரவாத சக்திகளுக்கு எதிராக நாம் ஒரு கருத்தாய்வு கொண்ட அரசியல் செயல் முறைகளை அணுக வேண்டும்.

மேலும் தீவிரவாதம் என்பது எந்த ஒரு மதத்தின் அடிப்படைக் கொள்கைகளோடும் கூடியது அல்ல. ஒரு சில அரசியல் ஆதாயங்களுக்காக மதத்தினை பயன்படுத்துகின்றனர்." என்றும் அவர் கூறினார்.

புதன், 7 ஜூலை, 2010

ஏ.டி.எஸ். முந்திக் கொண்டதால் சி.பி.ஐ. க்கு பின்னடைவு!

ஹைதராபாத்:மக்கா மஸ்ஜித் மற்றும் அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பின் முக்கிய ஹிந்துத்துவ தீவிரவாதிகளான தேவேந்திர குப்தா மற்றும் லோகேஷ் ஷர்மா ஆகியோரை அவசரப்பட்டு கைது செய்யாமல் அவர்களின் அசைவுகளை வைத்து மற்ற பிரதான தீவிரவாதிகளான ராமச்சந்திர கல்சங்கரா மன்றும் சந்தீப் டாங்கே ஆகியோரை உன்னிப்பாக சி.பி.ஐ., கவனித்து வந்த நிலையில், ராஜஸ்தான் ஏ.டி.எஸ். முந்திக்கொண்டு குப்தா மற்றும் சர்மாவை கைது செய்தது, சி.பி.ஐ. திட்டங்களை பின்னுக்கு தள்ளியுள்ளது.

இதனால் தலைமறைவாக உள்ள மற்ற தீவிரவாதிகளை பிடிக்க முடியாமல் இன்று வரை சி.பி.ஐ மற்றும் ஏ.டி.எஸ். திணறி வருகிறது. இவர்கள் ஜூன் 2009 லிருந்தே சி.பி.ஐ. மற்றும் ஏ.டி.எஸ். கண்காணிப்பில் இருந்தவர்கள்.

இன்னும் சிறிது நேரம் பொறுத்திருந்தால் தீவிரவாதத் தாக்குதல் பின்னணிகள் உட்பட பல புதிர்கள் வெளிவந்திருக்கும்.

ராஜஸ்தானில் புதிதாக பதிவியேற்ற காங்கிரஸ் அரசின் நெருக்கடியில் இவர்கள் கைது செய்யப்பட்டார்களா? அல்லது ஏ.டி.எஸ். ராஜஸ்தான் மாநிலத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட நிலையில், வழக்கின் முன்னேற்றத்தை நிரூபிப்பதற்கு ஒரு ஆர்வக் கோளாறில் கைது செய்யப்பட்டார்களா? என்பது தெரியவில்லை.

இவர்களின் அவசரக் கைது அனைவரையும் இருட்டில் துலாவவிட்டுள்ளது. குறிப்பாக, ராம்ஜி கல்சங்கரா. இவன் ஆறுக்கும் மேற்பட்ட குண்டுவெடிப்புகளில் தேடப்படுபவன். இவன் சிக்கினால், அனைத்து பின்னணிகளும் வெளிச்சத்திற்கு வரும்!
TOI