ஹிந்துத்துவ தீவிரவாதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஹிந்துத்துவ தீவிரவாதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

ஹிந்து தீவிரவாதத்தை காவித் தீவிரவாதம் என அழைக்க காங்கிரஸ் விரும்பம்!

புதுடெல்லி,ஆக9:ஹிந்துத்துவ தீவிரவாதம் என்ற வார்த்தைப் பதத்தை பயன்படுத்துவதற்கு ஆர்எஸ்எஸ் மட்டும் கவலைப்படவில்லை காங்கிரஸும் ஹிந்துத்துவ தீவிரவாதம் என்பதை அடிக்கடி தொலைகாட்சிகளிலும், செய்தித்தாள்களிலும் பயன்படுத்துவதை கண்டு பெரிதும் கவலையடைந்துள்ளது.

அரசியல் விவாதங்களில் ஹிந்துத்துவ தீவிரவாதத்தை காவி பயங்கரவாதம் அல்லது சங்பரிவார் பயங்கரவாதம் என பயன்படுத்த காங்கிரஸ் விரும்புகிறது.

"ஹிந்து என்பது பெரிய வகையை குறிக்கும். ஆனால் எல்லா ஹிந்துக்களும் தீவிரவாதிகள் இல்லை. இந்த பயங்கரவாத நடவடிக்கைகள் ஹிந்து மதத்தில் தீவிரமாக உள்ள காவிக் கும்பல் அல்லது சங்பரிவார அமைப்புகளால் விரிவாக்கப்படுத்தப்பட்டு நடத்தப்படுகின்றன." என ஒரு மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறினார்.

மேலும் "இது இஸ்லாமிய தீவிரவாதம் எனக் கூறுவது போல் உள்ளது. இது ஒரு மதத்தின் மீது இகழ்ச்சியை உண்டு பண்ணுவது போல் உள்ளது. எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகள் அல்ல" என்றும் அவர் கூறினார்.

ஹிந்துத்துவ தீவிரவாதம் என்று பயன்படுத்துவதை நிறுத்தாவிட்டால் இது பெரிய பாதிப்புகளை உண்டாக்கும் என அச்சப்படுகிறது காங்கிரஸ்.

தேர்தல் காலங்களில் இது பிஜேபி மற்றும் அதன் பலதரப்பட்ட காவிக் கும்பல் மூலம் மக்களுக்கு தவறாக புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாகவும் அமைந்து விடும்.

நாட்டை பிளவுபடுத்தக் கூடிய இது போன்ற வார்த்தைகளை நாம் ஏன் பயன்படுத்த வேண்டும் என அந்தத் தலைவர் கூறினார்.

ஆர்எஸ்எஸ் கருத்துகளையுடைய எம்ஜி என்ற பாபுராவ் வைத்யா சில தினங்களுக்கு முன்பு 'ஹிந்துவ தீவிரவாதம்' என்று பயன்படுத்துவது இந்நாட்டில் உள்ள முஸ்லிம்களின் ஓட்டுகளைப் பெறுவதற்கும் இந்துமக்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது என்று ஆவேசப்பட்டார்.

ஹிந்துத்துவ தீவிரவாதம் என்ற பதம் செய்தித்தொடர்பு துறைகளில் ஒரு இடத்தை பதிவு செய்துவிட்டது. யார் இந்தப் பெயரைக் கண்டுபிடித்தது எனத்தெரியவில்லை என்றும் இதை காங்கிரஸ் செயளாலர் திக்விஜய் சிங் தான் கொண்டு வந்தார் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரும் மற்றவர்களும் கூறுகின்றனர்.

வியாழன், 5 ஆகஸ்ட், 2010

கோவா:குண்டுவெடிப்பிற்கு சதித்திட்டம் தீட்டிய முக்கிய குற்றவாளி கைது

பானாஜி,ஆக4:ஹேமந்த் கர்கரே விசாரனை செய்து வந்த ஹிந்துத்துவ தீவிரவாதம் பற்றிய வழக்குகளை ATS விசாரணை செய்து வருகிறது.

தலைமறைவாக இருந்த சனாதன் சஸ்தா என்ற ஹிந்துத்துவ தீவிரவாத அமைப்பின் உறுப்பினர் கைது செய்யப்பட்டான். மஹாராஷ்டிரா ATS அவனை கைது செய்துள்ளது. இவனோடு சேர்த்து கோவா குண்டுவெடிப்பில் தொடர்புடைய 6 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

24 வயதுடைய பிரசாந்த் ஜீவேகர் (கர் என்பது உயர்ஜாதி பிராமணர்களின் பெயருக்கு பின்னால் குறிக்கப்படுவதாகும்). இவன் குண்டுவடிப்பிற்கான சதித்திட்டம் தீட்டுதல் மற்றும் குண்டுகளை வெடிக்க வைப்பதற்கான பயிற்சியளித்தல் ஆகிய குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளான்.

ஜூலை 31-ம் தேதி மஹாராஷ்டிராவில் உள்ள புசாவல் ரயில் நிலையத்தில் இரவு 9.45 மணிக்கு ATS இவனை கைது செய்தது. மேலும் இந்தக் குண்டுவெடிப்பில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள குற்றவாளிகள் மூன்று பேரை பேரை பிடிக்க ஜீவேகரிடம் இருந்த பெறப்பட்ட தகவல்கள் உதவும் என ATS கூறியது.

ஜீவேகர் குண்டுவெடிப்பிற்கான முக்கிய சதிகாரன் என ATS தலைவர் ராகேஷ் மரியா பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறினார்.

வெடிமருந்துகளை கையாளுவது மற்றும் வெடிகுண்டுகள் செய்வது தொடர்பாக தலைமறைவாக உள்ள மூன்று குற்றவாளிகளுடன் சேர்ந்து மடேகனில் உள்ள யோகேஷ் நாய்க் என்பவனின் வீட்டிற்கு பின்புற மலைபகுதியில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு பரிசோதனைக்காக சிறிய LED ஒன்றினை வெடிக்கச் செய்து பயிற்சி செய்துள்ளனர்.

குண்டுவெடிப்பு நடைபெற்ற இரவு முதல் காவல்துறையினரிடமிருந்து தப்பிப்பதற்க்காக ஜீவேகர் தனது இருப்பிடத்தை சுப்ரான் மாலட் பகுதியில் உள்ள தனது தாய்மாமன் வீட்டிற்கு மாற்றியுள்ளான். அங்கிருந்து கொண்டே மாலட் பரோடா, ராஜ்கோட், அஹமதாபாத், உஜ்ஜயின், லக்னோ மற்றும் பீகாரில் உள்ள புபான் உள்ளிட்ட பல இடங்களுக்கு பயணம் செய்துள்ளான்.

நான்குத் துப்பாக்கித் தோட்டாக்கள் மற்றும் 7.65 mm கைத்துப்பாக்கி ஒன்றினையும் அவனிடம் இருந்து கைபற்றியதாக ATS தலைவர் மரியா கூறினார்.

ஜீவேகர் நாசிக் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டான். ஆகஸ்ட் 3-ம் தேதி ஜீவேகரை போலிஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.