ராஜஸ்தான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ராஜஸ்தான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 17 ஏப்ரல், 2014

1952-லிருந்து ராஜஸ்தானில் ஒரே ஒரு முஸ்லிம் எம்.பி.

சுதந்திர இந்தியாவில் முதன்முறை யாக கடந்த 1952-ல் நடந்த மக்களவை பொதுத் தேர்தலிலிருந்தே ராஜஸ் தானில் முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவம் மிகக் குறைவாக அல்லது இல்லவே இல்லாமல் இருந்து வந்திருக்கிறது.
கடந்த 15 மக்களவை பொதுத் தேர்தல்களில் 317 பேர் ராஜஸ்தானிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில் ஒரேயொரு முஸ்லிம் மட்டுமே 1984 மற்றும் 1991-ல் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
டெல்லி ஜும்மா மசூதியின் இமாம் புகாரியை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சமீபத்தில் சந்தித்து ஆதரவு கோரியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
ராஜஸ்தானில் முஸ்லிம் மக்கள் தொகை சுமார் 11.4%. ஆனால் நாடாளுமன்றத்தில் அவர்களுக்குப் பிரதிநிதித்துவமே கிடையாது. கேப்டன் அயூப் கான் என்பவர் ஜுன்ஜுனு தொகுதியிலிருந்து காங்கிரஸ் சார்பில் 1984, 1991-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் காங்கிரஸ் கட்சி மட்டுமே ஒரேயொரு முஸ்லிமை வேட்பாளராக நிறுத்தும். வேறு எந்தக் கட்சியும் முஸ்லிம்களை நிறுத்துவதில்லை. ராஜஸ்தானில் 18 மக்களவைத் தொகுதிகள் இருக் கின்றன.
1980-கள் வரை மேற்கு ராஜஸ் தானில் உள்ள மார்வார் பகுதியில் சூரு, ஜுன்ஜுனு, பரத்பூர், ஜலாவர், ஆஜ்மீர் ஆகிய தொகுதிகளில் போட்டியிட காங்கிரஸ் வாய்ப்பு தந்தது. முஸ்லிம்கள் கணிசமாக வாழும் தொகுதிகளில்கூட அவர்கள் பெரும் வாக்கு வித்தியாசத்தில் பிற கட்சி வேட்பாளர்களிடம் தோற்றனர்.
"காங்கிரஸ் கட்சி தெரியாமலோ அல்லது வேண்டுமென்றோ முஸ்லிம் வேட்பாளர்களுக்கு வெற்றி வாய்ப்பே இல்லாத தொகுதிகளில்தான் அவர் களை நிறுத்தியது" என்று அஷ்ஃபக் காயாம்கானி என்ற அரசியல் ஆய்வாளர் குற்றம்சாட்டுகிறார்.
2014 மக்களவை பொதுத் தேர்தலில் டோங்-சவாய்மாதோபூர் தொகுதியில் கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீனைக் களம் இறக்கியிருக்கிறது காங்கிரஸ்.
ஹைதராபாதைச் சேர்ந்த அசாருதீன் கடந்த முறை உத்தரப் பிரதேசத்திலிருந்து தேர்ந்தெடுக்கப் பட்டார். அவரை இப்போது டோங்-சவாய்மாதோபூர் தொகுதியில் நிறுத்துவதை ராஜஸ்தான் மாநில முஸ்லிம்களே கடுமையாக எதிர்த்தனர்.
வேறு மாநிலத்தைச் சேர்ந்தவரைக் கொண்டுவந்து நிறுத்துவானேன், ராஜஸ்தானில் தகுதி வாய்ந்த முஸ் லிம்கள் இல்லையா என்று கேட்டனர். ஆனால் காங்கிரஸ் தலைமை அதைக் காதில் போட்டுக்கொள்ளவில்லை. இப்போது அசாருதீனின் வெற்றியும் கேள்விக்குறிதான் என்கின்றனர் காங்கிரஸ் தொண்டர்கள்.
ராஜஸ்தானில் 11 தொகுதிகளில் முஸ்லிம் வாக்காளர்கள் கணிசமாக வாழ்கின்றனர். பார்மர் தொகுதியில் மட்டும் 17.2% முஸ்லிம் வாக்குகள் உள்ளன. ஆனால் எந்த அரசியல் கட்சியும் பார்மரில் முஸ்லிமை களம் இறக்குவதே இல்லை.
இந்த முறை ஜஸ்வந்த் சிங்குக்கு பாஜக வாய்ப்பு தராத தால் அவர் சுயேச்சையாகக் களமிறங்கி யிருக்கிறார். காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்த கர்னல் சோனாராம் சௌத்ரி பாஜக வேட்பாளராக நிறுத்தப் பட்டிருக்கிறார்.
ராஜஸ்தானில் மொத்தமாக 8 முஸ்லிம்களை 12 முறை மக்களவைத் தேர்தலில் களம் இறக்கியிருக்கிறது காங்கிரஸ். பாஜக இதுவரை ஒரு முறைகூட முஸ்லிம் வேட்பாளரை நிறுத்தியதில்லை. முஸ்லிம் வேட் பாளர்கள் தோல்வியடைவதே முக்கிய காரணம். முஸ்லிம்களிடையே நல்ல தலைமை உருவாகாததும் இதற்கு முக்கிய காரணம்.

thanks to :http://tamil.thehindu.com/india/1952%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/article5921347.ece?homepage=true

புதன், 2 ஜூன், 2010

ராஜஸ்தான் கிராமத்தில் கலவரம்: ஈத்கா உட்பட முஸ்லிம் சொத்துகள் நாசம்

E-mail Print PDF
idgah  damaged in jodhpur

‍இடிக்கப்பட்ட ஈத்கா



ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலோட்;டின் சொந்த மாவட்டமான ஜோத்பூரில் உள்ள பல்சார் துர்கவாடே கிராமத்தில் நடைபெற்ற கலவத்தில் ஈத்கா உள்பட பல முஸ்லிம் வழிப்பாட்டுத்தலங்கள் தாக்கப்பட்டு பல முஸ்லிம் கடைகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.
முதல்வர் கெலோடின் சாதிக்காரர்களான பந்து மாலி சாதியினர் தான் இந்த கலவரத்தில் ஈடுபட்டனர். இவர்களை அடக்குவதற்காக காவல்துறையினர் முயன்ற போது அவர்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர். இதன் விளைவாக காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் கலவரக்காரர்களில் ஒருவர் பலியானார்.
கடந்த மே 22 அன்று பல்சார் துர்கவாடே கிராமத்தில் முஸ்லிம்களுக்கும் பந்து மாலி சாதியினருக்கும் இடையே மோதல் வெடித்தது. ஜோத்பூரில் இருந்து 75 கீ.மீ. தொலைவில் உள்ள இந்த கிராமத்தில் தேசீய ஊரக வேலைவாய்ப்பு திட்;டத்தின் கீழ் சாலை அமைப்பது தொடர்பாக இரு சமூகத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த கிராமத்தின் நடுவே வற்றிய ஒரு ஆறு ஒடுகின்றது. இந்த ஆற்றின் ஒரு பகுதியில் முஸ்லிம்கள் மற்றொரு பகுதியில் பந்து மாலி சாதியினர் வாழ்ந்து வருகின்றார்கள். ஊரில் சாலை அமைக்கும் திட்டத்திற்கு முஸ்லிம்களும் இந்து சாதியினரும் தங்கள் பகுதியில் இருந்து சமமான அளவு நிலம் தருவதாக முதலில் ஒப்புக் கொண்டனர். ஆனால் இதன் பிறகு முஸ்லிம் பகுதியில் இருந்து மட்டும் நிலத்தை எடுத்துக் கொண்டு சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. முஸ்லிம்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போது முஸ்லிம்கள் மீது கல்வீச்சில் மாலி சாதியினர் ஈடுபட்டனர். இதன் பிறகு ஈத்கா உட்பட சில முஸ்லிம் வழிப்பாட்டுத் தலங்களை கலவரக்காரர்கள் அடித்து நொருக்கியதுடன் முஸ்லிம்களின் கடைகளுக்கு தீயும் வைத்தனர்.
gutted shops in jodhpur

எரிக்கப்பட்ட கடைகள்


நிலைமை மோசமான நிலையில் அங்கு வந்த காவல்துறையினர் கலவரக்காரர்கள் மீது தடியடி நடத்தியும் கலவரம் ஒயாதநிலையில் காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தி கிராமத்தில் அமைதியை ஏற்படுத்தினர்.
இக்கிராமத்தில் அமைதியை நிலைநாட்ட அமைதி குழு ஏற்படுத்தப்பட்டது. கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடும் மாநில அரசு வழங்கியது. ஆனால் இழப்பீடு வழங்குவதில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாக முஸ்லிம்கள் இழப்பீடு தொகையை வாங்க மறுத்துள்ளனர். கலவரத்தில் உயிர் இழந்த பாலி சாதியைச் சேர்;ந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ5 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ2 லட்சம ரூ1 லட்சம், ரூ50 ஆயிரம் வழங்கப்பட்டது. ஆனால் இடிக்கப்பட்ட ஈத்காவிற்கு ரூ10 ஆயிரமும், காயமடைந்த முஸ்லிம்களுக்கு சேதமடைந்த கடைகளுக்கு ரூ 2-3 ஆயிரம் மட்டும் வழங்கப்பட்டது.
இது குறித்து நேரில் விசாரிக்கச் சென்ற முஸ்லிம் முசாவரத் குழுவினர் அசோக் கெலோட் ஆட்சியில் வகுப்புவாதிகள் ஆதிக்கம் அதிகரித்து வருவதாகவும் நீதி கிடைக்காத நிலையில் முஸ்லிம்கள் நிர்க்கதியான நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

செய்தி மற்றும் படங்கள் நன்றி: டூ சர்கிள்ஸ்

வியாழன், 27 மே, 2010

ஊனமுற்ற முஸ்லிம் இளைஞரை போலி என்கவுண்டரில் சுட்டுக்கொன்ற உ.பி.போலீஸ்- சத்தியபிரமாணம் தாக்கல் செய்ய உ.பி. அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடெல்லி:ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூர் மாவட்டத்தைச் சார்ந்தவர் முஹம்மது சலீம். இவருக்கு கடந்த 2009 நவம்பர் 24 ஆம் தேதி ஜெய்ப்பூரில் நடந்த சாலைவிபத்தில் உடலின் வலது பகுதி முற்றிலுமாக செயலிழந்தது.

இந்நிலையில் கடந்த மே மாதம் 15 ஆம் தேதி தனது சகோதரர்கள் அலீம் மற்றும் சமாயிதீன் ஆகியோர் பைக்கில் சலீமை அழைத்துக் கொண்டு உ.பி.மாநிலம் மதுராவில் உள்ள ஹரிபன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தனர்.

இந்நிலையில் வழியில் வைத்து இவர்களை மறித்த உ.பி.போலீஸ் அவர்களிடம் ட்ரைவிங் லைசன்ஸ் கேட்டுள்ளது. அப்பொழுது அலீமும் சமாய்தீனும் லைசன்ஸை ராஜஸ்தானிலிலுள்ள வீட்டில் விட்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அதற்கு போலீசார் சலீமை வலுக்கட்டாயமாக பிடித்து வைத்துக்கொண்டு லைசன்ஸை கொண்டு வந்துவிட்டு சலீமை மீட்டுச் செல்லுங்கள் எனக்கூறியுள்ளனர்.

இதனால் லைசன்ஸை எடுக்க மீண்டும் இவர்கள் ராஜஸ்தான் சென்றுள்ளனர். ஆனால் மறுநாள் காலை பத்திரிகையில் வந்த செய்தியைப் பார்த்ததும் ஃபர்ஹான் பகுதி போலீசாரால் சலீம் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட தகவல் அறிந்து பதறிப்போயுள்ளார்.

சலீம் காரைத் திருட முயன்றதாகவும், அவருடன் வேறு சில குற்றவாளிகள் இருந்ததாகவும், துப்பாக்கிச் சண்டையில் அவர் கொல்லப்பட்டார் என்றும் செய்திகள் கூறுகின்றன.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தின் பாரத்பூர் மாவட்டத்தைச் சார்ந்த பஞ்சாயத்து பிரதான்கள் 20 பேர் சலீமின் உடலைக் கேட்டபொழுது கொடுக்க மறுத்துள்ளனர்.

போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டிலும் மோசடிச் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் சலீமின் தந்தை மனுத்தாக்கல் செய்ததையடுத்து சுப்ரீம் கோர்ட் சலீமின் உடலை ஒப்படைக்கவும் இந்த போலி என்கவுண்டர் தொடர்பாக சத்தியபிரமாணம் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

செய்தி:Zee நியூஸ்



புதன், 27 ஜனவரி, 2010

சோசியல் டெமோக்ரேடிக் பார்டிக்கு முதல் வெற்றி

ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற கிராம பஞ்சாயத்து தேர்தலில் சவாய் மடாய்பூர் மாவட்டத்திலிலுள்ள சன் பஞ்சாயத்தில் சர்பான்ச் பதவிக்கு(நம்மவூர் கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு சமம்) போட்டியிட்ட சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் வேட்பாளர் முஹம்மது ஹனீஃப் வெற்றிப் பெற்றுள்ளார்.

1960 ஆம் ஆண்டு இக்ராமுத்தீன் காழிக்கு பிறகு வெற்றிப் பெற்றுள்ள ஒரே முஸ்லிம் வேட்பாளர் முஹம்மது ஹனீஃப் ஆவார். 1960 க்கு பிறகு இத்தொகுதியில் இதுவரை மீனா, குஜ்ஜார் இனத்தைச்சார்ந்த வேட்பாளர்களே வெற்றிப் பெற்று வந்தனர்.

இத்தொகுதியில் பதிவான மொத்த வாக்குகளில் முஹம்மது ஹனீஃபுக்கு 2448 வாக்குகள் கிடைத்தன. பா.ஜ.க வைச்சார்ந்த கம்லேஷ் 1224 வாக்குகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.

இத்தொகுதியில் 1700 முஸ்லிம் வாக்குகள் தான் பதிவாகியுள்ளன. அவ்வாறெனில் ஹனீஃப்க்கு கிடைத்த அதிகமான வாக்குகள் இதர மதத்தைச் சார்ந்த மக்களிடமிருந்து கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதிலிருந்து சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா கட்சி ராஜஸ்தானில் மாற்று மத மக்களிடமும் செல்வாக்கு பெற்று வருவதையே இந்த தேர்தல் முடிவு சுட்டிக்காட்டுகிறது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்