இறை நம்பிக்கை கொண்டோர்களே உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் பயபக்தயுடையோர் ஆகலாம். திருக்குர்ஆன் 2:183)
வியாழன், 17 ஏப்ரல், 2014
1952-லிருந்து ராஜஸ்தானில் ஒரே ஒரு முஸ்லிம் எம்.பி.
புதன், 2 ஜூன், 2010
ராஜஸ்தான் கிராமத்தில் கலவரம்: ஈத்கா உட்பட முஸ்லிம் சொத்துகள் நாசம்
இடிக்கப்பட்ட ஈத்கா
ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலோட்;டின் சொந்த மாவட்டமான ஜோத்பூரில் உள்ள பல்சார் துர்கவாடே கிராமத்தில் நடைபெற்ற கலவத்தில் ஈத்கா உள்பட பல முஸ்லிம் வழிப்பாட்டுத்தலங்கள் தாக்கப்பட்டு பல முஸ்லிம் கடைகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.
முதல்வர் கெலோடின் சாதிக்காரர்களான பந்து மாலி சாதியினர் தான் இந்த கலவரத்தில் ஈடுபட்டனர். இவர்களை அடக்குவதற்காக காவல்துறையினர் முயன்ற போது அவர்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர். இதன் விளைவாக காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் கலவரக்காரர்களில் ஒருவர் பலியானார்.
கடந்த மே 22 அன்று பல்சார் துர்கவாடே கிராமத்தில் முஸ்லிம்களுக்கும் பந்து மாலி சாதியினருக்கும் இடையே மோதல் வெடித்தது. ஜோத்பூரில் இருந்து 75 கீ.மீ. தொலைவில் உள்ள இந்த கிராமத்தில் தேசீய ஊரக வேலைவாய்ப்பு திட்;டத்தின் கீழ் சாலை அமைப்பது தொடர்பாக இரு சமூகத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த கிராமத்தின் நடுவே வற்றிய ஒரு ஆறு ஒடுகின்றது. இந்த ஆற்றின் ஒரு பகுதியில் முஸ்லிம்கள் மற்றொரு பகுதியில் பந்து மாலி சாதியினர் வாழ்ந்து வருகின்றார்கள். ஊரில் சாலை அமைக்கும் திட்டத்திற்கு முஸ்லிம்களும் இந்து சாதியினரும் தங்கள் பகுதியில் இருந்து சமமான அளவு நிலம் தருவதாக முதலில் ஒப்புக் கொண்டனர். ஆனால் இதன் பிறகு முஸ்லிம் பகுதியில் இருந்து மட்டும் நிலத்தை எடுத்துக் கொண்டு சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. முஸ்லிம்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போது முஸ்லிம்கள் மீது கல்வீச்சில் மாலி சாதியினர் ஈடுபட்டனர். இதன் பிறகு ஈத்கா உட்பட சில முஸ்லிம் வழிப்பாட்டுத் தலங்களை கலவரக்காரர்கள் அடித்து நொருக்கியதுடன் முஸ்லிம்களின் கடைகளுக்கு தீயும் வைத்தனர்.
எரிக்கப்பட்ட கடைகள்
நிலைமை மோசமான நிலையில் அங்கு வந்த காவல்துறையினர் கலவரக்காரர்கள் மீது தடியடி நடத்தியும் கலவரம் ஒயாதநிலையில் காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தி கிராமத்தில் அமைதியை ஏற்படுத்தினர்.
இக்கிராமத்தில் அமைதியை நிலைநாட்ட அமைதி குழு ஏற்படுத்தப்பட்டது. கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடும் மாநில அரசு வழங்கியது. ஆனால் இழப்பீடு வழங்குவதில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாக முஸ்லிம்கள் இழப்பீடு தொகையை வாங்க மறுத்துள்ளனர். கலவரத்தில் உயிர் இழந்த பாலி சாதியைச் சேர்;ந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ5 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ2 லட்சம ரூ1 லட்சம், ரூ50 ஆயிரம் வழங்கப்பட்டது. ஆனால் இடிக்கப்பட்ட ஈத்காவிற்கு ரூ10 ஆயிரமும், காயமடைந்த முஸ்லிம்களுக்கு சேதமடைந்த கடைகளுக்கு ரூ 2-3 ஆயிரம் மட்டும் வழங்கப்பட்டது.
இது குறித்து நேரில் விசாரிக்கச் சென்ற முஸ்லிம் முசாவரத் குழுவினர் அசோக் கெலோட் ஆட்சியில் வகுப்புவாதிகள் ஆதிக்கம் அதிகரித்து வருவதாகவும் நீதி கிடைக்காத நிலையில் முஸ்லிம்கள் நிர்க்கதியான நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
செய்தி மற்றும் படங்கள் நன்றி: டூ சர்கிள்ஸ்
வியாழன், 27 மே, 2010
ஊனமுற்ற முஸ்லிம் இளைஞரை போலி என்கவுண்டரில் சுட்டுக்கொன்ற உ.பி.போலீஸ்- சத்தியபிரமாணம் தாக்கல் செய்ய உ.பி. அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
புதுடெல்லி:ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூர் மாவட்டத்தைச் சார்ந்தவர் முஹம்மது சலீம். இவருக்கு கடந்த 2009 நவம்பர் 24 ஆம் தேதி ஜெய்ப்பூரில் நடந்த சாலைவிபத்தில் உடலின் வலது பகுதி முற்றிலுமாக செயலிழந்தது.இந்நிலையில் கடந்த மே மாதம் 15 ஆம் தேதி தனது சகோதரர்கள் அலீம் மற்றும் சமாயிதீன் ஆகியோர் பைக்கில் சலீமை அழைத்துக் கொண்டு உ.பி.மாநிலம் மதுராவில் உள்ள ஹரிபன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தனர்.
இந்நிலையில் வழியில் வைத்து இவர்களை மறித்த உ.பி.போலீஸ் அவர்களிடம் ட்ரைவிங் லைசன்ஸ் கேட்டுள்ளது. அப்பொழுது அலீமும் சமாய்தீனும் லைசன்ஸை ராஜஸ்தானிலிலுள்ள வீட்டில் விட்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அதற்கு போலீசார் சலீமை வலுக்கட்டாயமாக பிடித்து வைத்துக்கொண்டு லைசன்ஸை கொண்டு வந்துவிட்டு சலீமை மீட்டுச் செல்லுங்கள் எனக்கூறியுள்ளனர்.
இதனால் லைசன்ஸை எடுக்க மீண்டும் இவர்கள் ராஜஸ்தான் சென்றுள்ளனர். ஆனால் மறுநாள் காலை பத்திரிகையில் வந்த செய்தியைப் பார்த்ததும் ஃபர்ஹான் பகுதி போலீசாரால் சலீம் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட தகவல் அறிந்து பதறிப்போயுள்ளார்.
சலீம் காரைத் திருட முயன்றதாகவும், அவருடன் வேறு சில குற்றவாளிகள் இருந்ததாகவும், துப்பாக்கிச் சண்டையில் அவர் கொல்லப்பட்டார் என்றும் செய்திகள் கூறுகின்றன.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தின் பாரத்பூர் மாவட்டத்தைச் சார்ந்த பஞ்சாயத்து பிரதான்கள் 20 பேர் சலீமின் உடலைக் கேட்டபொழுது கொடுக்க மறுத்துள்ளனர்.
போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டிலும் மோசடிச் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் சலீமின் தந்தை மனுத்தாக்கல் செய்ததையடுத்து சுப்ரீம் கோர்ட் சலீமின் உடலை ஒப்படைக்கவும் இந்த போலி என்கவுண்டர் தொடர்பாக சத்தியபிரமாணம் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.
செய்தி:Zee நியூஸ்
புதன், 27 ஜனவரி, 2010
சோசியல் டெமோக்ரேடிக் பார்டிக்கு முதல் வெற்றி
1960 ஆம் ஆண்டு இக்ராமுத்தீன் காழிக்கு பிறகு வெற்றிப் பெற்றுள்ள ஒரே முஸ்லிம் வேட்பாளர் முஹம்மது ஹனீஃப் ஆவார். 1960 க்கு பிறகு இத்தொகுதியில் இதுவரை மீனா, குஜ்ஜார் இனத்தைச்சார்ந்த வேட்பாளர்களே வெற்றிப் பெற்று வந்தனர்.
இத்தொகுதியில் பதிவான மொத்த வாக்குகளில் முஹம்மது ஹனீஃபுக்கு 2448 வாக்குகள் கிடைத்தன. பா.ஜ.க வைச்சார்ந்த கம்லேஷ் 1224 வாக்குகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
இத்தொகுதியில் 1700 முஸ்லிம் வாக்குகள் தான் பதிவாகியுள்ளன. அவ்வாறெனில் ஹனீஃப்க்கு கிடைத்த அதிகமான வாக்குகள் இதர மதத்தைச் சார்ந்த மக்களிடமிருந்து கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதிலிருந்து சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா கட்சி ராஜஸ்தானில் மாற்று மத மக்களிடமும் செல்வாக்கு பெற்று வருவதையே இந்த தேர்தல் முடிவு சுட்டிக்காட்டுகிறது.
