பலஸ்தீனர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பலஸ்தீனர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 18 அக்டோபர், 2010

இஸ்ரேலுக்கான ஆயுத ஏற்றுமதிக்குத் தடைவிதிக்குமாறு பிரிட்டிஷ் தூதுவர் கோரிக்கை

பலஸ்தீனர்களுக்குச் சொந்தமான நிலத்தில் தொடர்ந்தும் சட்டவிரோத யூதக் குடியேற்றங்களை நிறுவிவரும் இஸ்ரேலுடனான அனைத்து இராணுவ ஒப்பந்தங்களையும் ரத்துச் செய்யுமாறு ஐரோப்பிய ஒன்றியத்திடம் முன்னாள் பிரித்தானியத் தூதுவர் லோர்ட் ரைட் கோரிக்கை விடுத்துள்ளார்.

சிரியா மற்றும் சவூதி அரேபியாவுக்கான பிரித்தானியத் தூதுவராகப் பணிபுரிந்த லோர்ட் ரைட் கடந்த வெள்ளிக்கிழமை (15.10.2010) வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்றில், பலஸ்தீன் நிலத்தில் தொடர்ந்தும் சட்டவிரோதமான குடியேற்றங்களை எத்தகைய தயக்கமும் இன்றி நிறுவிவரும் இஸ்ரேலின் அடாவடித்தனமான போக்கை மிக வன்மையாகக் கண்டித்துள்ளார்.

இஸ்ரேலின் இத்தகைய அத்துமீறிய செயற்பாடுகள் மிக மோசமான விளைவுகளையே தோற்றுவிக்கும் எனக் கூறியுள்ள அவர், 'இஸ்ரேல் தொடர்ந்தும் சட்டவிரோத யூதக் குடியேற்றங்கள் நிறுவுவதை வழக்கமாக்கிக் கொண்டால், அதன் இந்தப் போக்கு மத்திய கிழக்குப் பிராந்திய அமைதிக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமைவது உறுதி' என்று எச்சரித்துள்ளார்.

அவர் தமது கட்டுரையில், இஸ்ரேல் கடந்த வருடமும் சட்டவிரோதமான யூதக் குடியேற்றங்கள் பலவற்றை நிறுவியுள்ளது என்பதை ஆதாரபூர்வமாக எடுத்துக்காட்டியுள்ளார். மேற்குக் கரை, ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசல நகரங்களில் வாழும் பலஸ்தீனர்களைத் தத்தமது சொந்த இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றி, அங்கு யூத ஆக்கிரமிப்பாளர்களைக் கொண்டுவந்து நிரப்பும் நிலைப்பாட்டை இஸ்ரேல் இனியும் மாற்றிக்கொள்ளாத பட்சத்தில், இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்யப்படுவதை ஐரோப்பிய ஒன்றியம் முன்வந்து தடுத்துநிறுத்த வேண்டும் என்று லோர்ட் ரைட் கோரிக்கை விடுத்துள்ளார்.

புதன், 16 டிசம்பர், 2009

ஆக்கிரமிப்பு படையின் அத்துமீறல்


மத்திய காஸாவில் பலஸ்தீனியர் படுகொலை

கடந்த சனிக்கிழமை (12.12.2009) மத்திய காஸா பிரதேசத்தின் கிழக்கு பிரீஜில் அமைந்துள்ள அகதி முகாமருகில் வைத்து பலஸ்தீனியர் ஒருவர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என மருத்துவ வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

பலஸ்தீன் தகவல் மையத்திடம் (PIC) தகவலளிக்கையில், 48 வயதான ஸமீ அபூ கோஸா என்பவரின் வயிறு உட்பட உடலின் பல பாகங்களிலும் இயந்திரத் துப்பாக்கிச் சன்னங்கள் காணப்பட்டதாகவும் அவருடைய உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேற்படி நபர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட போதிலும், மிக மோசமாகக் காயமடைந்திருந்ததால் சற்றுநேரத்திலேயே அவருடைய உயிர் பிரிந்துவிட்டதாகவும் மருத்துவ வட்டாரங்களிலிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர் கிழக்கு பிரீஜ் பகுதியில் மனம்போன போக்கில் மேற்கொண்ட கண்மூடித்தனமான இயந்திரத் துப்பாக்கிப் பிரயோகத்தின் காரணமாகவே ஸமீ அபூ கோஸா உயிரிழந்துள்ளார்.

ஞாயிறு, 13 டிசம்பர், 2009

ஃபலஸ்தீன்:மேற்கு கரையில் பள்ளிவாசலுக்குள் அத்துமீறி நுழைந்த யூத குடியேற்றவாசிகள்


ஜெருசலம்: அக்கிரமக்காரர்களான யூத குடியிருப்புவாசிகள் மேற்குகரையில் மஸ்ஜித் ஒன்றில் அத்துமீறி நுழைந்ததுடன், நூலகத்தையும் மஸ்ஜிதின் கார்பெட்டையும் தீவைத்துக்கொழுத்தினர்.

மேற்குகரையில் யூத குடியேற்றத்தை 10 மாதங்களுக்கு நிறுத்தி வைத்த இஸ்ரேலின் நடவடிக்கை குடியேற்றக்காரர்களை கோபமூட்டியுள்ளது.
ஃபலஸ்தீனர்களின் பூமியை கைப்பற்றி வீடுகளை நிர்மாணித்த இவர்கள் ஃபலஸ்தீன மக்களுக்கெதிராக பரவலான தாக்குதலை நடத்திவருகின்றனர்.
கடந்த வெள்ளிக்கிழமை போலீசுடன் மோதிய யூதர்கள் யூசுஃப் கிராமத்தில் அத்துமீறி உள்ளே நுழைந்து தீவைத்தனர். மஸ்ஜிதின் சுவரில் ஹீப்ரு மொழியில் மிரட்டல் விடுக்கும் வார்த்தைகளை எழுதியுள்ளனர். இந்நிகழ்வைத்தொடர்ந்து அப்பிரதேசத்தில் வன்முறை வெடிக்கும் அபாயம் உள்ளதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடந்த தினம் ஃபலஸ்தீனர்களின் 3 வீடுகளையும், வீட்டையும் தீவைத்துக்கொழுத்தி நாசப்படுத்தினர்.

மஸ்ஜிதுக்குள் அத்துமீறு நுழைந்த யூதர்களின் செயலை ஃபலஸ்தீன் பிரதமர் ஸலாம் ஃபய்யாதும், அதாரிட்டி அதிபர் மஹ்மூத் அப்பாஸும் கண்டித்துள்ளனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

வியாழன், 19 நவம்பர், 2009

இஸ்ரேல் குடியிருப்புகள்: ஐநா கண்டனம்!


இஸ்ரேல் ஜெருஸலத்தின் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களில் தொடர்ந்து தனது குடியிருப்புகளை நிர்மாணித்து வருகிறது. இந்த செயலை அமெரிக்கா கண்டித்திருந்த போதும், இஸ்ரேல் அதனைக் குறித்துக் கண்டுகொள்ளாமல் தனது குடியேற்றத்தைத் தொடர்ந்து வரும் நிலையில் மத்தியகிழக்கின் அமைதிக்கு இஸ்ரேல் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களில் குடியிருப்புகளை நிறுத்துவது அவசியம் என ஐநா பொதுச் செயலாளர் பான்கிமூன் வற்புறுத்தியுள்ளார்.

அதேவேளையில் வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் இஸ்ரேல் தனது ஜெருசலக் குடியிருப்புகளை முன்னெடுத்துச் செல்வது குறித்து அமெரிக்கா அதிருப்தி அடைந்துள்ளதாகவும் இஸ்ரேல் மத்திய கிழக்கு அமைதிக்கு ஒத்துழைப்பு வழங்க இக்குடியிருப்புகளை நிறுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஐநா கண்டனம் குறித்தோ, அமெரிக்க அரசின் வேண்டுகோள் குறித்தோ தாம் கவலைப்படப் போவதில்லை என இஸ்ரேலியப் பிரதமரின் செய்தித் தொடர்பாளர் மார்க் ரெகெவ் அறிவித்துள்ளார். ஜெருசலக் குடியிருப்புகள் முன்னர் அறிவித்தபடி எவ்விதத் தடங்கலும் இன்றித் தொடரும் எனவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.
source:inneram

செவ்வாய், 30 ஜூன், 2009

பலஸ்தீன் சிறுவர்கள் மீது நடத்தப்படும் சித்திரவதைகளுக்கு மனித உரிமை ஆணையங்கள் கடும் கண்டனம்

மேற்குக்கரையில் 14 வயது நிரம்பிய இரு சிறுவர்களைத் தாக்கி, அவர்களின் கண்களை குருடாக்கியதாக இஸ் ரேலிய சிப்பாய்கள் இருவர் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
மேற்குக்கரை வீடொன்றை சுற்றிவளைத்த போது இச்சிறுவர்கள் கைதுசெய்யப்பட்டதாக வும் அவர்கள் குறிப்பிட் டுள்ளனர். ்இங்கு 10 மணி நேரம் நின்று கொண்டு எதை யும் செய்யாமல் இருப்பது சோர்வைத் தரு கிறது. எனவே நீங்கள் பலஸ்தீனர்களை அடித்துத் தாக்குங்கள் என இஸ்ரேலிய இராணுவத் தளபதி ஒருவர் கூறியுள்ளதை சர்வதேச மனித உரிமை நிறுவனம் வன்மை யாகக் கண்டித்துள்ளது.

சென்ற மாதம் 14 வயது நிரம்பிய சிறுவர் கள் உட்பட 150 பலஸ்தீனர்கள் இவ்வாறு தாக்கப்பட்டு ஊனமாக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேலியப் படையினர் இவர்களை துஷ் பிரயோகம் செய்து தாக்கி, சித்திரவதை செய்தது நிரூபிக்கப் ப்பட்டுள்ளது.

பலஸ்தீனர்களைச் சித்திரவதை செய்வதே மத்திய கிழக்கிலுள்ள ஒரே ஒரு ஜனநாயக நாடு எனக் கருதப்படும் இஸ்ரேலியப் படை வீரர்களின் செயல்பாடாக மாறியுள்ளமை கண்டிக்கத்தக்கது என சர்வதேச மன்னிப்புச் சபை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. கழிவறைக்கு தங்களை அழைத்துச் செல்லுங்கள் எனக் கூறிய கைதிகள் பலர் அடித்துத் துன்புறுத்தப்பட்டுள்ளனர். சில கைதிகள் கண்கள் கட்டப்பட்டு கழி வறைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். இத னால் காயமடைந்து அவ்விடத்திலேயே நீண்ட நேரம் கிடந்துள்ளனர். பதின் வயதினரே இவ்வாறு அடித்துத் துன் புறுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படு கிறது. இவ்வாறு இஸ்ரேலியப் படைகள் சிலர் அடித்துத் துன்புறுத்தும்போது ஏனையவர்கள் பார்த்து கேளிக்கையாக சிரிக்கும் காட்சி தனது நெஞ்சை உறுத்திய தாக இஹாப் சம்ஷலாவி என்ற பல் கலைக்கழக மாணவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

Thanks:Meelparvai.net