தெலுங்கானா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தெலுங்கானா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 19 ஜூன், 2014

தெலுங்கானாவில் முஸ்லிம்களுக்கு 12% இட ஒதுக்கீடு - எம்.பி. கவிதா


 தெலுங்கானாவில் முஸ்லிம்களுக்கு 12% இட ஒதுக்கீடு  -  எம்.பி. கவிதா

முஸ்லிம்களுக்கு 12% இட ஒதுக்கீடு கொடுத்தே தீருவோம்:தெலுங்கானா எம்.பி. உறுதி!

நீதிமன்றம் குறுக்கே நிற்க விடமாட்டோம் எனவும் சூளுரை !!

ஒன்றுபட்ட ஆந்திராவில், முஸ்லிம்களுக்கு 5% இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டபோது, நீதிமன்றம் தடை விதித்தது போன்ற நிலையை தெலுங்கானாவில் அரங்கேற விடமாட்டோம் என்கிறார், TRS எம்.பி, கவிதா.

இதற்கு முன்னர், முஸ்லிம் இட ஒதுக்கீட்டை முழுமையாக ரத்து செய்த நீதிமன்றம், பின்னர் ஒட்டுமொத்த இட ஒதுக்கீட்டின் அளவு 50% அளவுக்கு மேல் இருக்கக் கூடாது என்ற விதியை காரணம் காட்டி, முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை 4 சதவிகிதமாக குறைத்தது.

தெலுங்கானா மாநிலத்தில் இதுபோன்ற அபத்தங்களை அரங்கேற விடமாட்டோம் என உறுதிப்படக் கூறியுள்ளார், தெலுங்கானாவின் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகளும் எம்.பி.யுமான கவிதா.

நிசாமாபாத் பாராளுமன்ற உறுப்பினரான கல்வகுந்தலா கவிதா (K. கவிதா) எம்பி, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துக் கொண்டிருந்தபோது:

முஸ்லிம் செய்தியாளர் ஒருவர் குறுக்கிட்டு:

ஆந்திராவில் 5% இட ஒதுக்கீட்டை வழங்கியபோதே நாங்கள் படாத பாடு பட்டோமே, நீங்கள் 12% இட ஒதுக்கீட்டை வழங்குவதாக அறிவித்துள்ளீர்களே எனக் கேள்வி எழுப்பினார்.

காங்கிரசோடு எங்களை ஒப்பிடாதீர்கள், காங்கிரஸ் அரசில், பெயரளவில் அமைச்சராக்கப்படும் முஸ்லிம்களுக்கு, சிறுபான்மை நலத்துறை, வக்ப் வாரியம் உள்ளிட்ட முக்கியத்துவம் இல்லாத துறைகள் தான் வழங்கப்பட்டு வந்தது.

நாங்களோ, முஸ்லிமுக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு கொடுத்துள்ளதோடு, வருவாய்த்துறை போன்ற அதிமுக்கியத்துவம் வாய்ந்த துறைகளையும் அவரிடம் கொடுத்துள்ளோம்.

11 அமைச்சர்களைக் கொண்ட தெலுங்கானா அமைச்சரவையில், மேலும் ஒரு முஸ்லிமுக்கு வாய்ப்பளிக்கும் திட்டமும் உள்ளது என்றார், கவிதா.

50 சதவிகிதத்துக்கு மேல் இட ஒதுக்கீடு கூடாது என்று சொல்லும் உச்சநீதிமனறம், தமிழகத்தில் உள்ள 69%, கர்நாடகத்தில் அமலில் உள்ள அதிகப்படியான சதவிகித இட ஒதுக்கீட்டை குறித்து வாய் திறக்காதது ஏன் எனக்கேள்வி எழுப்பினார்.

முஸ்லிம் இட ஒதுக்கீடு விஷயத்தில் தெலுங்கானா முதலமைச்சர் "KCR" (K Chandrashekhar Rao), மிகவும் தெளிவான பார்வையோடும் தீர்க்கமான முடிவோடும் இருக்கிறார், என்றார், அவர்.

தற்போது அமலில் உள்ள (OBC 25%, SC 15%, ST 6% MUSLIM 4% = Total 50%) என்பதை மாற்றியமைத்து,

முஸ்லிம்களுக்கு 12% இட ஒதுக்கீடு வழங்குவதற்கு வசதியாக, தெலுங்கானாவில், இட ஒதுக்கீட்டின் அளவை 64% அளவுக்கு உயர்த்தி சட்டம் இயற்றப்படும் என்றார் கவிதா எம்.பி.


நன்றி: https://www.facebook.com/maruppu.in 

திங்கள், 30 ஆகஸ்ட், 2010

தெலுங்கானா மாநிலம் உருவானால் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு -டி.ஆர்.எஸ்

ஹைதராபாத்,ஆக29:தெலுங்கானா மாநிலம் உருவானால் முஸ்லிம்களுக்கு 12 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியின் தலைவர் கெ.சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.

ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார்.முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்கு இடஒதுக்கீடு அவசியமாகும்.தெலுங்கானா மாநிலம் உருவாக்கவேண்டுமென்பதே டி.ஆர்.எஸ்ஸின் லட்சியம். தெலுங்கானா பகுதியில் உண்மையான மதசார்பற்றத் தன்மையை மீண்டும் கொண்டுவருவோம். என சந்திரசேகர் ராவ் தெரிவித்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

வியாழன், 31 டிசம்பர், 2009

தனி தெலுங்கானா: மறைக்கப்பட்ட உண்மைகள்!

இந்திய அரசியலை பரபரப்புக்கு உள்ளாக்கி இருக்கும் தனிமாநில கோரிக் கைகள் அடுத்தக் கட்டத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. தெலுங்கானா வில் தொடங்கிய தீப்பொறி ஒவ்வொரு மாநிலத்திலும் தனிமாநில கோரிக்கைக்கு தூபம் போடுவதாக அமைந்துள்ளது.


இந்திய அரசியலை பரபரப்புக்கு உள்ளாக்கி இருக்கும் தனிமாநில கோரிக் கைகள் அடுத்தக் கட்டத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. தெலுங்கானா வில் தொடங்கிய தீப்பொறி ஒவ்வொரு மாநிலத்திலும் தனிமாநில கோரிக்கைக்கு தூபம் போடுவதாக அமைந்துள்ளது.

ஆனால் தனிமாநில கோரிக்கைகளில் தெலுங்கானா தனி மாநில கோரிக்கை அனைத்திலும் வேறுபட்டதாகும்.

60 ஆண்டுகால போராட்ட பெருமை வாய்ந்த தெலுங்கானா பிரச்சினை பல்வேறு வாக்குறுதிகளையும் துரோகங்களையும் சந்தித்த ஒன்றாகும்.

ஒரு புறம் தனித்தெலுங்கானா போராட் டங்கள் மறுபுறம் ஒன்றுபட்ட ஆந்திராவே நீடிக்க வேண்டும் என்ற போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன.

இருப்பினும், தெலுங்கானா போராட் டத்திற்கான வரலாற்றுப் பழமை, வீரியம், அதற்கான தேவை என பல்வேறு முக்கிய காரணிகள் தெலுங்கானா தனி மாநில உருவாக்கம் தவிர்க்க முடியாத ஒன்றாக மாற்றிவிட்டதாக அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

தெலுங்கானா குறித்து சற்று அதிக மாகவே அனைத்து தரப்பிலும் அலசிவிட்டதால் தெலுங்கானா குறித்து பொதுவான தெரியாத தகவல்கள் மறைக் கப்பட்ட உண்மைகளை தெளிவுபடுத்த வேண்டியது நமது கடமையாகிறது.

ஹைதராபாத் சமஸ்தானத்தை ஆண்டு வந்த நிஜாம் மன்னர்களுக்கு குடைச் சல் கொடுத்தே தீரவேண்டும் என்ற வெறியால் 50லிகளில் தெலுங்கானா போராட் டத்திற்கு காங்கிரஸ் ஆதரவு கொடுத்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

அதற்கு தெளிவாக ஆதாரமாக இரண்டு நிகழ்வுகளைக் குறிப்பிடுகி றார்கள். தெலுங்கானா போராட்டங்களில் தொடக்க காலங்களில் முக்கிய பங்கு வகித்த சென்னா ரெட்டி, நரசிம்மராவ் உள்ளிட்டவர்களுக்கு ஒன்றுபட்ட ஆந்திராவின் முதல் அமைச்சர் பதவிகளை வழங்கியது காங்கிரஸ்.

பதவி மட்டுமே தங்களது லட்சியம் என்பதை நிரூபிப்பதை போல முதலமைச்சர் பதவிகளைப் பெற்ற பின்பு கண்மூடி அந்தர் தியானமானார்கள்.

தெலுங்கானா என்ற மாநிலம் உருவாக வேண்டும் என்ற உந்துதல் எவருக்கும் அவ்வளவு உணர்வு பூர்வமாக எழ வில்லை என்பது முழுக்க முழுக்க உண்மை.
ஆனால் போராட்டத் தளபதிகள் போலி­ பேர்வழிகளாக இருக்கலாம். ஆனால் பொது மக்கள் அன்றி­ருந்து இன்று வரை உணர்வு பூர்வமாக போராட் டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தெலுங்கானா போராட்டத்திற்கு அப் பகுதி மக்களுக்கு கிடைத்திருக்கும் பேராதரவை சந்திரசேகரராவ் அறுவடை செய்ய காத்திருக்கிறார். சந்திரசேகரராவ் இடத்தில் யார் இருந்தாலும் தற்போது அவருக்கு கிடைத்து வரும் பிரபலம் கிடைத்தே தீரும்.

இந்நிலையில் தனித் தெலுங் கானா கோரிக்கைக்கு பல்வேறு அரசியல் மட்டத்திலி­ருந்தும் ஆதரவு அலை எழுந்த வண்ணம் உள்ளது.

தெலுங்கானா தனி மாநில உருவாக்கம் குறித்து நாடாளு மன்றத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும் என தெலுங்கானா முஸ்லி­ம் ஃபோராடம் கேட்டுக் கொண்டுள்ளது.

ஒன்றுபட்ட ஆந்திராவில் வக்ஃபு நிலங்கள் அரசினாலும் தனியார் பணமுதலைகளாலும் அபகரிக் கப்பட்டன. 1748லி­லிருந்து 1948 வரை ஆட்சி மொழியாக இருந்த உருது மொழி ஒன்றுபட்ட ஆந்திர உருவெடுத்த பிறகு ஆட்சி மொழித்தகுதியை பறி கொடுத்தது.

1948 செப்டம்பர் 17 ஆம் தேதி நிகழ்த் தப்பட்ட காவல் துறை நடவடிக்கைகளில் முஸ்­லிம்கள் தங்கள் தனித்துவ அடையாளத்தையும் மொழி அந்தஸ்தையும் இழந்தனர்.

1969லில் சார்மினாரி­ருந்து ராஜ்பவன் வரை தெலுங்கானா ஆதரவு நடந்த போது அதில் பெரும்பான்மையோர் முஸ்­லிம்களாக இருந்தனர்.

தனித் தெலுங்கானாவுக்கு ராயல் சீமா மற்றும் கடலோர ஆந்திர சிறுபான்மை மக்களும் ஆதரவு தெரிவித்திருந்தனர். ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்கு தனித் தெலுங்கானா மட்டுமே தீர்வு என சமூக நல அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன.

ஆந்திரா மற்றும் ஓரிசா மாநில ஜமாயத்தே இஸ்லாமி ஹிந்த் தின் தலைமை அமைப்புகள் தனித் தெலுங்கானாவை வர வேற்று தீர்மானம் நிறை வேற்றியுள்ளனர்.

தெலுங்கானா உருவாக்கத்திற்கு ஆந்திரா சட்டமன்றத்தின் பங்கு ஒன்றும் பெரிதாக இல்லை. தனித் தெலுங்கா னாவை வரவேற்று தீர்மானம் போடலாம் அவ்வளவு தான்.

ஆனால் இந்திய அரசியல் சாசன சட்டம் பிரிவு 3லின் படி நாடாளுமன்றத் தில் சட்டதிருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என சட்ட வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதில் யாரும் எதிர்பாராத விதமாக ஹைதராபாத் நகரின் செல்வாக்கு மிகுந்த கட்சியாக மஜ்லீஸில் இத்திஹாதுல் முஸ்லிமீன் எதிர்ப்பு தெரிவிக்கிறது. 1960லிகளில் தனித் தெலுங்கானா போராட்டம் தீவிர மடைந்தபோது இதே கட்சி நடுநிலைமை வகித்தது.

தனித் தெலுங்கானாவை எதிர்க்கும் இந்தக் கட்சி ஒரு வேளை மாநிலம் பிரிக்கப்பட்டால் ஹைதராபாத் செகந்தராபாத் பகுதிகள் யூனியன் பிரதேசமாக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

ஒருவேளை ஹைதராபாத் தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டால் ஹைதராபாத் பகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் அங்குள்ள ஏழு சட்டமன்ற உறுப்பினர்களையும் பெற்றிருக்கும் அசதுத்தீன் உவைஸியின் மஜ்லீஸில் இத்திஹாதுல் முஸ்­மீன் கட்சியே முதல்வரிசை கட்சியாக இருக்கும் என நம்பப்படுகிறது.

ஆனால் தெலுங்கானாவுக்கு ஹைத ராபாத்தின் மற்றொரு முக்கிய கட்சியான அகில இந்திய மஜ்லீஸை தமீரே மில்லத் ஆதரவு தெரிவித்துள்ளது. ஆந்திராவை விட தெலுங்கானாவில் முஸ்­லிம்களின் மக்கள் தொகை அதிகம் என புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன.

மொழிவாரி மாநிலமாக ஆந்திரா அமைக்கப்படுவதற்கு முன்பு மிக அதிக அளவு முஸ்லி­ம்கள் தெலுங்கானாவில் இருந்தனர். ஆனால் மிக அதிக அளவில் பிற சமூக குடியேற்றங்கள் அமைக்கப்பட்டதால் முஸ்­லிம்களின் மக் கள் தொகை குறைந்தது.

இருப்பினும் தற்போது ஒன்றுபட்ட ஆந்திராவை விட தெலுங்கானா பகுதிகளில் முஸ்­லிம்கள் கணிசமாக வாழ் கின்றனர். ஆந்திராவில் 9.10 சதவீதமாக இருக்கும் முஸ்­லிம்கள் தெலுங்கானாவில் 13 சதவீதமாக உள்ளனர். புள்ளிவிவரம் 13 சதவீதமாக இருப்பினும் உண்மையில் அதைவிட அதிகமாக இருக்கும் என்றே கருதப்படுகிறது.

தெலுங்கானாவின் 10 மாவட்டகளில் மஹபூப் நகர் மாவட்டத்தில் 8 சதவீத முஸ்லிம்களும், ரங்கா ரெட்டி மாவட் டத்தில் 11.43 சதவீதமும், ஹைதராபாத்தில் 42 சதவீதமும், மேடக் மாவட்டத்தில் 11 சதவீதமும், நிஜாமாபாத் மாவட்டத்தில் 15 சதவீத முஸ்லி­ம்களும், அடிலாபாத் மாவட்டத்தில் 10 சதவீத முஸ்­லிம்களும், கரீம் நகர் மாவட்டத்தில் 6 சதவீதமும், வாரங்கல் மாவட்டத்தில் 5.45 சதவீதமும், கம்மம் மாவட்டத்தில் 5.29 சதவீதமும், நலகொண்டா மாவட்டத்தில் 5.25 சதவீதமும் முஸ்லிம்கள் உள்ளனர்.

சிறிய மாநில தெலுங்கானாவில் சிறிய கட்சிகள் ஆட்சி அமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று கருதப்படுகிறது.

--அபூசா­லிஹ்