டெல்லி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
டெல்லி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 9 ஜூலை, 2012

முஸ்லிம்களுக்கு வாடைக்குக் கூட வீடுகள் இல்லை – தலைநகர் டெல்லியில் அவலம்!


டெல்லி, july 9: இந்தியாவின் தலைநகரமாம் டெல்லியில் வீடு வாடகைக்கு கிடைப்பதே குதிரைக் கொம்பாக இருக்கும் வேளையில் முஸ்லிம்களுக்கு வாடகைக்கு வீடுகள் கிடைப்பதில்லை என்று ஹிந்து நாளிதழ் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
டெல்லியில் உள்ள வீட்டு உரிமையாளர்கள் மற்றும் தரகர்கள் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக வீடு தர மறுக்கின்ற அவலம் தொடர்கிறது என்று ஹிந்து பத்திரிக்கை ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதுபோன்ற அவலங்கள் படித்தவர்கள் அதிகம் வசிக்கக் கூடிய நியூ பிரண்ட்ஸ் காலனி, வசந்த் கன்ஜ், ஜன்க்புரா மற்றும் ரோகினி ஆகிய பகுதிகளில் நடந்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நியூ பிரண்ட்ஸ் காலனியிலுள்ள குடியிருப்புகளின் ஏஜென்ட் ஒருவரோ இங்கு “இந்தியர்களுக்கு மட்டுமே இடமுண்டு முஸ்லிம்களுக்கு அல்ல” என்று கூறியுள்ளார். இதே காலனியில் இன்னொரு முஸ்லிம் நபருக்கும் இதேப்போன்று அனுபவம் ஏற்பட்டுள்ளது. அவர் முஸ்லிம் என்பதால் அவரிடம் வீடு வாடகைக்கு எடுக்க அனைத்து வசதிகள் இருந்தும் வீட்டின் உரிமையாளர்கள் வீடு தர மறுத்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹிந்து நிருபர்கள் புதுமணத் தம்பதிகள் போன்று வேடமிட்டு ரோஹினியின் செக்டார் 8-ல் வீடு வாடகைக்கு கேட்டனர். ஆனால் அதன் உரிமையாளர்களோ இங்கு ஹிந்துக்கள் வசிப்பதால் முஸ்லிம்களுக்கு தர முடியாது என்றதுடன். இந்தப் பகுதியில் எங்கும் முஸ்லிம்களுக்கு வீடு கிடைக்காது என்று கூறியுள்ளனர்.
அதுவும் தனியாக வாழும் பெண்கள் என்றால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும். ஹிந்து நாளிதழின் நிரூபர் கணவன் இல்லாத பெண்ணாக வீடு கேட்டபோது கணவன் இல்லாதவள் என்று முதலில் கரிசனம் காட்டிய தரகர்கள் பின்னர் முஸ்லிம் என்றவுடன் வீட்டு உரிமையாளர்களிடம் கேட்டு சொல்கிறேன் என்று மழுப்பியுள்ளனர்.
இதனை உற்று கவனிக்கும் போது மத ரீதியாக பிளவுகளை ஏற்படுத்த அதிகாரமற்ற குழு ஒன்று டெல்லியில் இயங்கி வருவதை அறியமுடிகிறது. மேலும் முஸ்லிம்களுக்கு கஷ்மீரிகள் மற்றும் ஆஃப்கானிஸ்தானின் அகதிகள் தங்கும் இடத்தின் அருகில் வீடுகளை கட்டுவது டெல்லியில் வழக்கமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைகழகத்தின் பேராசிரியரான ரிஸ்வான், கைசர் சகட் மற்றும் முனிர்கா ஆகிய பகுதிகளில் வீடு கிடைப்பதில் தமது பெயர் பெரிய இடைஞ்சலாக இருந்ததாக குறிப்பிடுகிறார்.
இதுபோன்ற செயல்கள் குறித்து வழக்கறிஞர் அசோக் அகர்வால் கூறுகையில்; இதுபோன்ற செயல்கள் சட்டப்படி தவறு என்றாலும் சமூகத்தில் இதுபோன்ற செயல்களை அடையாளம் காணுவது கடினம் என்று கூறினார். மேலும் அரசு இதனை சரி செய்வது இயலாத காரியம் என்றும் கூறினார்.
மேலும் வீட்டு விவகாரங்களில் மலாய், சைனீஸ் மற்றும் இந்திய மக்களிடையே பொது ஒதுக்கீடை அமுல்படுத்தியிருக்கும் சிங்கப்பூர் போன்ற நாடுகளை உதாரணமாகக் கொண்டு இதுபோன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு தரப்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
மேலும் தலித்துகளே இது போன்ற பிரச்சனைகளுக்கு ஆளானார்கள். ஆனால் அவர்களின் பெயரின் மூலம் உடனடியாக அவர்களின் ஜாதி தெரியவராது என்பதால் அவர்களுக்கு பிரச்சனைகள் குறைவு என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சனி, 15 ஜனவரி, 2011

மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்தில் நடந்த ஜும்ஆ தொழுகை

புதுடெல்லி,ஜன.15:டெல்லியில் காங்கிரஸ் அரசின் கரசேவையினால் இடிக்கப்பட்ட மஸ்ஜிதில் போலீசாரின் எச்சரிக்கையையும் மீறி ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற ஜும்ஆ தொழுகை நடந்தது.

டெல்லி இமாம் அஹ்மத் புகாரி ஜும்ஆ தொழுகைக்கு தலைமை தாங்கினார்.

டெல்லி நிஸாமுத்தினூக்கு அருகிலுள்ள ஜங்புராவில் பழமையான நூர் மஸ்ஜித் கடந்த புதன்கிழமை டெல்லி வளர்ச்சி ஆணைய அதிகாரிகளால் அநியாயமாக இடித்துத் தள்ளபட்டது.

மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்தில் ஜும்ஆ தொழுகை நடத்தப்படும் என முன்னரே டெல்லி இமாம் அஹ்மத் புகாரி அறிவித்திருந்தார். மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்தில் தொழுகைக்கு அனுமதிப்பதாகவும், மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த இடத்த டி.டி.ஏவிடமிருந்து வாங்கி மீண்டும் மஸ்ஜிதை புனர் நிர்மாணிக்க வக்ஃப் போர்டிடம் ஒப்படைக்கப்படும் எனவும் டெல்லி முதல்வர் ஷீலா தீட்ஷித் டெல்லி இமாமை சந்தித்து உறுதியளித்திருந்தார்.

மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், மத்திய நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெய்பால்ரெட்டி ஆகியோருடன் ஆலோசனை நடத்தியபிறகு ஷீலா தீட்ஷித் இந்த உறுதியை அளித்தார்.

டெல்லியில் நேற்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததால் நிஸாமுத்தீன் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் கடைகள் மூடிக்கிடந்தன. போலீஸ் ஸ்டேசனுக்கு முன்னாலும் மக்கள் ஜும்ஆ தொழுகையை நடத்தினர். தொடர்ந்து ஊர்வலமாக மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்திற்கு சென்றனர். வழியில் போலீஸ் தடுத்தபொழுதிலும் அதனை மீறிய மக்கள் மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்தில் கூடினர். ஆனால், போலீசார் மஸ்ஜித் இடிக்கபட்ட இடத்திற்கு மக்களை அனுமதிக்கவில்லை. தொடர்ந்து டெல்லி இமாம் அவ்விடத்திற்கு வருகைதந்தார்.

மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்தில் தொழுகை நடத்தப் போவதாகவும், போலீசார் தடுக்கக்கூடாது எனவும் டெல்லி இமாம் கூறினார். தொடர்ந்து, போலீசார் தடைக் கட்டைகளை அப்புறப்படுத்தினர். இடிக்கப்பட்ட மஸ்ஜிதின் சிதிலங்கள் மீது ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற ஜும்ஆ தொழுகை நடந்தேறியது.

தொழுவதற்குத் தேவையான தொழுகை விரிப்புகளை அருகிலுள்ள வீடுகளிலிருந்து பெண்கள் கொண்டுவந்துக் கொடுத்தனர். அதேவேளையில் பெரும் மக்கள் திரள் போலீஸ் ஸ்டேசன் முன்னால் கூடியிருந்தது. காங்கிரஸின் ரகசிய திட்டம்தான் மஸ்ஜித் இடிக்கப்பட்ட நிகழ்வு என டெல்லி இமாம் குற்றஞ்சாட்டினார்.

பின்னர் டெல்லி இமாம் தலைமையில் ஜங்புராவுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் பேரணியாக புறப்பட்டபொழுது போலீசார் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து நடந்த மோதலில் ஒரு டி.டி.ஏ வாகனத்திற்கு சேதம் ஏற்பட்டது. மஸ்ஜித் இடிக்கப்பட்ட சம்பவம் துயரமானது என சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ் தெரிவித்தார். மஸ்ஜித் புனர் நிர்மாணிக்க முஸ்லிம்களுடன் போராடுவேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

சனி, 4 ஜூலை, 2009

முஸ்லிம் அடையாளங்களை அழிக்கும் முயற்சி! டெல்லியில் அடுத்தடுத்து திடுக் சம்பவங்கள்!!


-அபூசாலிஹ்




இந்தியத் திருநாட்டின் தலை நகரான டெல்லி வரலாற்றுச் சிறப்புக்கும், பண்பாட்டுச் செழுமைக்கும் பேர்போன நகரமாகும். இந்தியாவில் வேறெந்த நகரத்திற்கும் இல்லாத பெருமை இம் மாநகருக்கு உண்டு.

1100 ஆண்டுகளுக்கு மேலாக முஸ்லிம்கள் இந்த அழகிய நகரில் இருந்துதான் இந்தியாவை ஆட்சி செய்தனர். அலாவுதீன் கில்ஜி, அக்பர், ஷேர்ஷாஹ் உள்ளிட்ட பேரரசர்கள் தங்களது நிர்வாகத் திறமையினாலும், பால்பனிலிருந்து அவ்ரங்கசீப்வரை பல மாமன்னர் கள் தங்களது கூர்மையான செயல்பாட்டி னால் சட்டம் ஒழுங்கை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர்.

முதல் இந்திய சுதந்திரப் போர் என்பதே முகலாய மாமன்னர் பகதூர்ஷா ஜாஃபர் உள்ளிட்ட ஏராளமான மாவீரர் கள் சிந்திய ரத்தக் குளத்தில்தான் வளர்ந் தது என்பதில் யாருக்கும் இருவேறு கருத்து இருக்க முடியாது.
டெல்லியில் ஏராளமான கலையம்சம் பொருந்திய வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடங்கள், அரண்மனைகள், மாட மாளிகைகள், பழமைவாய்ந்த பள்ளி வாசல்கள் என ஏராளமானவை உண்டு. டெல்லிக்கு மட்டுமே உரித்தான இச் சிறப்பினை கண்டுகளிக்க ஏராளமானோர் டெல்லி மாநகரில் வந்து இறங்கிய வண்ணமும், டெல்லி மாநகரமும் நிரம்பிய வண்ணமுமாக இருப்பதை அன்றாடம் காணலாம். இச்சிறப்புகளைக் குறிப்பெடுத்து ஆய்வு செய்யும் வரலாற்று அறிஞர்கள், தொல்லியல்துறை மாணவர் கள், கட்டிடக் கலை ஆய்வாளர்கள் என ஏராளமானோர் டெல்லிக்கு வந்தவண் ணம் உள்ளனர்.

டெல்லி ஜும்மா மஸ்ஜித், செங் கோட்டை, குதூப் மினார், ஃபதேபூர் சிக்ரி உள்ளிட்டவைகளை யாராலும் மறக்க முடியாதவை. ஏராளமான பள்ளிவாசல் கள் இங்கு உண்டு. இருப்பினும் பள்ளிவாசல்களில் தொழுகைக்கு அனுமதி மறுப்பது தொல்லியல்துறையின் அன்றாடக் கடமையாக ஆகிவிட்டது.

மாமன்னர் ஷாஜஹான் கட்டிய புகழ்மிக்க செங்கோட்டையின் நிலை இன்று எவ்வாறு இருக்கிறது என்பதைப் பார்த்தால் காண்பவர் கண்களில் ரத்தம் வரும். செங்கோட்டையின் தரைதளம் பெயர்ந்த நிலையில், அதுவாக உடைந்து வீணாகட்டும் என மெத்தனமாகவே தொல்லியில் துறையினர் இருப்பதாகப்படு கிறது அதுவாகவே உடைந்து விழுமா? அல்லது விழ விட்டுவிடுவோமா? என வெகுண்டெழும் சில பார்வையாளர்கள் தங்களால் ஆன கைங்கரியத்தை செய்துவிட்டே திரும்புகின்றனர்.

உலகப் புகழ்பெற்ற டெல்லியின் ஜும்மா பள்ளிவாசல் ஏறக்குறைய ஒன்றரை லட்சம் பேர் ஒரே நேரத்தில் தொழுகை எனும் வணக்க வழிபாடு செய்யலாம். நம்நாட்டின் பெருமைக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக டெல்லி ஜும்மா மஸ்ஜித் விளங்குகிறது.

டெல்லி ஜும்மா மஸ்ஜிதின் இன்றைய நிலையோ சொல்லும் தரமன்று. உலகளவில் மோசமான முறையில் பராமரிக்கப்படாமல் இருக்கும் ஒரு கட்டிடம் உண்டு என்றால் அதில் டெல்லி ஜும்மா மஸ்ஜித் முதலிடம் பெறும்.

ஜும்மா மஸ்ஜிதுக்கு வெகு அருகில் ஒரு பிரம்மாண்ட கோயில் ஒன்று கட்டப்பட்டு பல ஆண்டுகளாகி விட்டது. அந்த பிரம்மாண்ட கோயில் இமயமலை என்றால், டெல்லி ஜும்மா மஸ்ஜித் பரங்கிமலை போல சிறுத்து காணப்படு கிறது. உலகப் புகழ்பெற்ற ஒரு வழிபாட் டுத் தலத்திற்கு அருகில் மற்றொரு பிரிவினரின் வழிபாட்டுத்தலம் கட்டப்படு வது குறித்தும், அந்த பழமைவாய்ந்த கட்டிடத்திற்கு ஏற்படப் போகும் ஆபத்து குறித்தும் எவரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

ஒரு மரக்கிளையை வெட்டினால் கூட ஆயிரத்தெட்டு கேள்வி கேட்கும் நீதிபதிகளும், கிழவி தும்மினால் கூட பொதுநல வழக்கு போடும் புண்ணிய வான்களும் எங்கே சென்று விட்டார்கள்?

இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல் கடந்த வாரம் டெல்லியின் 400 ஆண்டுகால பழமைவாய்ந்த திபியா வாலி பள்ளிவாசலின் சில பகுதிகள் தகர்த்தெறியப்பட்டன.

''400 ஆண்டுகால பழமைவாய்ந்த பள்ளிவாசல்'' - இந்த வாசகங்களை எங்கோ கேட்டதைப் போல் இருக்கிறதா? ஆம் 400 ஆண்டுகால பாபரி பள்ளிவாசலை காங்கிரஸின் துணையோடு பாஜகவினர் இடித்தார்களல்லவா? அதைப் போன்று டெல்லியை அழகுபடுத்தப் போகிறோம் என்ற பெயரில் திபியாவாலி பள்ளிவாசலைத் தகர்த்து தரைமட்டமாக்கும் நோக்கத்தோடு அரசு இயந்திரங்கள் நெருங்கி வந்தன.

டெல்லி பெருநகர வளர்ச்சிக்குழும அதிகாரிகள் அதிநவீன இயந்திரங்கள் பொருத்தப்பட்ட கனரக வாகனங்களுடன் பள்ளிவாசலை மண்மேடாக்கும் நோக்கத்தோடு வந்தனர். இந்த அரும் பணியை செய்யவந்த திருப்பணி(!) தொண்டர்களுக்கு பலத்த போலீஸ் பந்தோபஸ்து வேறு. பள்ளிவாசலை மீட்க ஏராளமான முஸ்லிம்கள் குவிந்தனர். அக்கிரமத்தைத் தடுக்க முன்னணி முஸ்லிம் பிரமுகர்களும் திரண்டனர்.

பள்ளிவாசல் கட்டிடத்திற்கு சிறு கீறல் கூட விழக்கூடாது என டெல்லி பெருநகர வளர்ச்சிக்குழும அதிகாரிகளிடம் சிறுபான்மை சமூக பிரமுகர்கள் கேட்டுக் கொண்டும் பலனில்லை. கீறல் கூட ஏற்படக் கூடாது என்று கூறியவர்களை சீறலுடன் பார்த்த அதிகாரிகள், தங்கள் பணியை(?)த் தொடர்ந்தனர். மக்களின் போராட்டத்திற்கும் செவிசாய்க்காத அதிகார வர்க்கம் பள்ளிவாசலுக்கு உட்பட்ட பகுதிகளை நொறுக்கினர்.

கடந்தசில ஆண்டுகளுக்கு முன்பு இவ்வாறே அராஜக வெறிகொண்டு வந்த அதிகாரிகள் ஆட்டத்தை வி.பி.சிங்கின் சுட்டு விரல் அடக்கியது. தற்போதும் கூட பள்ளிவாசலுக்கும் அதனைச் சார்ந்த பகுதிக்கும் எவ்வித சேதாரமும் ஏற்படுத்தக்கூடாது என்ற நீதிமன்றத்தின் உத்தரவும் புறந்தள்ளப் பட்டது. டெல்லி வக்ஃப் வாரியத் தலைவர் சவுத்ரி மதீன் அஹ்மத், திபியாவாலி பள்ளிவாசலின் இமாம் மவ்லவி தாஹிர் காசிமி, உயர்மட்டக் குழு தலைவர் முஹம்மது தல்ஹா உள்ளிட்டோர் போராட்டக் களம் கண்டனர்.

400 ஆண்டுகால பழமைவாய்ந்த திபியாவாலி பள்ளிவாசலின் பகுதிகள் தகர்க்கப்பட்டதற்கு இந்தியா முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

டெல்லியை ஆளும் ஷீலா தீட்சித் தலைமையிலான காங்கிரஸ் அரசு தனது தவறுகளைக் களைந்து அனைத்தையும் சரிசெய்ய வேண்டும்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பலநூறு ஆண்டுகால பெருமை வாய்ந்த மஸ்ஜித் ஒன்றை இந்திய ரயில்வேத்துறை தரைமட்டமாக்கியது. இதுபோன்ற நிலைகள் தொடர்ந்தால் வெடிக்கும் மக்கள் போராட்டங்களை டெல்லி பிரதேச அரசும், மத்திய அரசும் சந்திக்க வேண்டிய நிலை வரலாம்.

எரிகிற நெருப்பில் பெட்ரோல் ஊற்றும் கதையாக தற்போது டெல்லி மாநகரின் அழகுக்கு அழகு சேர்க்கும், வரலாற்றுச் சிறப்புமிக்க 12ஆம் நூற்றாண்டின் குதூப் மினாருக்கும் ஆபத்து நேர்ந்துள்ளது.

2008ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் குதூப் மினாரின் ஆபத்து அடிகோ­டப்பட்டது. டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் மூன்றாவது ஓடுதளம் அமைக்கப்பட்டது. நாலரை கிலோ மீட்டர் தூரமுடைய அந்த ரன்வேயில் கனரக வாகனங்கள் தரையிறங்கவும், வின் னேறவும் எளிதாக செயல்படக் கூடிய வகையில் அமைக்கப்பட்டது. ஏர் பஸ் ஆ380, மற்றும் ஆசபஆசஞய ஆங 222 உள்ளிட்ட பெரிய்ய வானூர்திகள் இந்த மூன்றா வது ரன்வேயிலிருந்து செயல்படத் துவங்கின. ஒரு மணி நேரத்தில் 65லிருந்து 70 விமானங்கள் இங்கிருந்து பறக்கவும், இறக்கவும் அனுமதிக்கப் படுவதால் குதூப் மினார் கட்டிடத்தில் பலத்த அதிர்வுகள் ஏற்படுவதாக அபாய எச்சரிக்கை செய்கின்றனர் சமூக ஆர்வர்களும் தொல்லியல் அறிஞர்களும். 72 1/2 மீட்டர் உயரம் கொண்ட குதூப் மினார் அருகே விமானங்கள் தாழ்வாகப் பறப்பது கட்டிடத்தின் ஆயுளோடு விளையாடும் செயல்தான் என இந்தியத் தொல்லியல் துறையின் இணை இயக்குநர் பி.ஆர்.மணி கவலை தெரிவிக்கிறார்.

சுற்றுச்சூழலுக்கும் பாரம்பரிய கட்டிடக் கலைக்கும் சிறிய ஊறு நேர்ந்தால்கூட பாய்ந்து பிறாண்டும் புண்ணியவான்கள் குதூப் மினார் விவகாரத்தில் வாய்திறக்கவில்லையே என்ற வினா அனைவரின் உள்ளங்களிலும் எழுகிறது.

வரலாற்றுச் சிறப்புமிக்க குதூப் மினாருக்கு ஆபத்து ஏற்படும் என தெரிந்தே இந்திய விமானத்துறை டெல்லி விமான நிலையத்தின் மூன்ற வது ஓடுபாதையைத் தேர்ந்தெடுத்துள் ளதா? என டெல்லி மக்கள் ஆவேசமாகக் கேட்கிறார்கள். முஸ்லிம்களின் அடையாளங்களை அழிக்கும் முயற்சி சத்தமில்லாமல் தொடருகிறது.

செவ்வாய், 23 ஜூன், 2009

தாழ்வாக பறக்கும் விமானங்களால் குதுப் மினாருக்கு ஆபத்து


டெல்லி: இந்தியாவின் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றான குதுப் மினாருக்கு டெல்லி விமான நிலையத்தில் இருந்து தாழ்வாக பறந்து செல்லும் விமானங்களால் ஆபத்து ஏற்படலாம் என தொல்பொருள் ஆராய்ச்சித்துறை தெரிவித்துள்ளது.

பல நூற்றாண்டுகளை கடந்து டெல்லியி்ன் பெருமையை பறைசாற்றும் விதமாக கம்பீரமாக நிற்கும் குதுப்மினாரின் வரலாறு கிபி 12ம் நூற்றாண்டை சேர்ந்தது. குப்துதீன் அய்பெக் என்ற முகலாய மன்னரால் கிபி 1173ல் இதுகட்டப்பட்டது.

முழுவதும் செங்கற்களால் ஆன இந்த கட்டிடம் சுமார் 72.5 மீட்டர் உயரம் கொண்டது. டெல்லியின் முக்கிய சுற்றுலா பகுதிகளில் ஒன்றாக திகழ்கிறது.

இந்த ஆண்டு துவக்கத்தில் பழம்பெருமை வாய்ந்த குதுப் மினார் கட்டிடம் நீர் கசிவு காரணமாக தென்மேற்காக சுமார் 25 அங்குலம் சாய்த்திருப்பது நகண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சுறுசுறுப்பாக செயல்பட்ட தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அப்பகுதி முழுவதையும் சிமெண்ட்டால் பூசி, 10 அடி வரைக்கும் தண்ணீர் புகாத வண்ணம் பார்த்து கொண்டனர்.

காலத்தை வென்று நிற்கும் இந்த கட்டிடத்துக்கு தற்போது டெல்லி விமானங்கள் மூலம் புதிய சோதனை ஏற்பட்டுள்ளது. இது குறித்து தொல்பொருள் ஆராய்ச்சி துறையின் இணை பொது இயக்குனர் பி.ஆர். மணி கூறுகையில்,

இப்பகுதியில் தாழ்வாக பறக்கும் விமானங்கள் ஏற்படுத்தும் அதிர்வுகளால் இந்த கட்டிடம் இடிந்து விழுந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்திய விமான நிலைய ஆணையத்திடம் விமானங்கள் செல்லும் பாதையை மாற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளோம்.

கடந்த ஆண்டு செப்டம்பரில் விமான நிலையத்தில் புதிய ஓடுதளம் ஒன்று அமைக்கப்படும் வரை எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்தது என்றார் அவர்.

இது குறித்து விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில்,

சுமார் 4.4 கிமீ., தூரம் கொண்ட இந்த ஓடுதளம் நாட்டின் மிகப்பெரிய ஓடுதளமாகும். இதில் தான் ஏர்பஸ் ஏ 380, ஆன்டனப் அன் 225 உள்ளிட்ட சொகுசு விமானங்கள் பறக்கின்றன. இது துவக்கப்பட்ட பின் டெல்லி விமான நிலையம் ஒரு மணி நேரத்துக்குள் சுமார் 65 முதல் 70 விமானங்களை இயக்கும் திறன் பெற்றுள்ளது.

இதன் பின்னர் அனைத்து விமானங்களும் சுமார் 2.5 கிமீ., தூரம் கூடுதலாக குதுப் மினாரை விட்டு விலகி செல்கின்றன என்றார்.

இந்நிலையில் இந்திய விமான நிலைய ஆணையத்தின் விமான போக்குவரத்துக்கான நிர்வாக இயக்குனர் சோமசுந்தரம் கூறுகையில், இது குறித்து எனக்கு எந்த தகவலும் இல்லை. அப்படி எதுவும் பாதிப்பு ஏற்படும் என்றால் தேவையான ஆய்வு செய்து நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்றார்.