
இஸ்லாமாபாத்:அமெரிக்க ராணுவவீரனையும், எஃப்.பி.ஐ ஏஜண்டையும் கொலைச் செய்ய முயற்சித்ததாக குற்றஞ்சாட்டி கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் நாட்டைச் சார்ந்த நியூரோ சயிண்டிஸ்ட் டாக்டர் ஆஃபியா சித்தீகியை குற்றவாளி என தீர்ப்புக்கூறிய அமெரிக்க நீதிமன்றத்தின் நடவடிக்கைக்கெதிராக பாகிஸ்தானில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
தலைநகர் உள்ளிட்ட பல நகரங்களிலும் ஆஃபியாவிற்கு ஆதரவாகவும், அமெரிக்காவை கண்டித்தும் ஆயிரக்கணக்கானோர் கலந்துக்கொண்ட பேரணிகள் நடைபெற்றன.
2008 ஆம் ஆண்டு கஸ்னி மாகாணத்தில் விசாரணை நடந்துக் கொண்டிருக்கும் பொழுது வாரண்ட் ஆபீஸரின் துப்பாக்கியை பறித்து எஃப்.பி.ஐ ஏஜண்டையும், அமெரிக்க ராணுவ வீரனையும் கொலை செய்ய முயன்றார் எனக்கூறித்தான் டாக்டர் ஆஃபியா சித்தீக்கிக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டது.
ஆனால் அச்சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால் ஆஃபியாவிற்குதான் குண்டு காயம் பட்டது. ’லேடி காயிதா’ என அமெரிக்க ஊடகங்கள் டாக்டர் ஆஃபியா சித்தீக்கியை வர்ணித்திருந்தன. இந்தத் தீர்ப்பு தங்களுக்கு துணிவையே ஏற்படுத்துவதாக டாக்டர் ஆஃபியா சித்தீக்கியின் சகோதரி பவுஸியா சித்தீக்கி பேரணியில் உரை நிகழ்த்தியபோது குறிப்பிட்டார்.
டாக்டர் ஆஃபியா சித்தீகியை குற்றவாளி என தீர்ப்புக்கூறிய அமெரிக்க நீதிமன்றத்தின் நடவடிக்கைக்கு பாகிஸ்தான் அரசு அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஆஃபியாவின் குடும்பத்துடன் சேர்ந்து விடுதலை செய்வதற்கான முயற்சிகளை மேற்க்கொள்வதாக வெளியுறவுத்துறை அதிகாரி அப்துல்பாசித் தெரிவித்தார்.
பாகிஸ்தானில் அமெரிக்க எதிர்ப்பு பற்றி எரிவதற்கு டாக்டர் ஆஃபியாவின் சம்பவம் காரணமானதாக பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.
இறை நம்பிக்கை கொண்டோர்களே உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் பயபக்தயுடையோர் ஆகலாம். திருக்குர்ஆன் 2:183)
டாக்டர் ஆஃபியா சித்தீகி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
டாக்டர் ஆஃபியா சித்தீகி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சனி, 6 பிப்ரவரி, 2010
ஆஃபியா சித்தீகி குற்றவாளி என அமெரிக்க நீதிமன்றம் அறிவிப்பு.
வியாழன், 21 ஜனவரி, 2010
எனது குழந்தைகள் சித்தரவதைச் செய்யப்பட்டார்கள், என் மீது போடப்பட்ட வழக்கு போலியானது:டாக்டர் ஆஃபியா சித்தீகி ஆவேசம்
கடந்த 2003 ஆம் ஆண்டு தனது 3 குழந்தைகளுடன் கடத்திச் செல்லப்பட்ட மருத்துவரான டாக்டர் ஆஃபியா சித்திக்கியை 2008 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் கஜ்னி மாகாணத்தில் கண்டுபிடித்ததாக கூறி அவருக்கு அல்காயிதாவுக்கும் தொடர்பு இருப்பதாகவும், அமெரிக்க ராணுவத்தினரைக் கொலைச் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு அமெரிக்காவிலிலுள்ள சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.
இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டால் அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும்.இந்நிலையில் அவர் விசாரணைக்காக நியூயார்க் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டார். இந்நிலையில் டாக்டர் ஆஃபியா சித்தீகி நீதிபதியை நோக்கி கூறியதாவது, "எனக்கு பேசுவதற்கு வாய்ப்பே அளிக்கப்படுவதில்லை. சிறிதளவு என்னை பேசவிடுங்கள்.எனது குழந்தைகளை அவர்கள் சித்தரவதைக்குள்ளாக்கினார்கள். என் மீது போடப்பட்ட வழக்கு போலியானது.நான் எந்த குண்டுவெடிப்பிற்கும் திட்டமிடவில்லை. நீங்கள் என் மீது பொய்யை சுமத்துகிறீர்கள்." இவ்வாறு ஆஃபியா ஆவேசமாக கூறினார்.
பாகிஸ்தான் கராச்சியிலிருந்து கடத்தப்பட்ட மருத்துவரான ஆஃபியாவையும், குழந்தைகளையும் அமெரிக்க ராணுவம் பக்ராம் சிறையில் 5 ஆண்டுகளாக சித்தரவதைக்குள்ளாக்கியது என்று ஏற்கனவே மனித உரிமை ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர். அவர் சிறைக்கைதி எண் 650 என்று அழைக்கப்பட்டார் என்றும் கூறப்பட்டது.
source:presstv
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)