சிறுபான்மையினர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறுபான்மையினர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 16 செப்டம்பர், 2011

சிறுபான்மையினர் நல நிதி பெற சிறப்புக் குழு அமைப்பு- மமக தலைவருக்கு அமைச்சர் பதில்

சிறுபான்மையினர் நல நிதி பெற சிறப்புக் குழு அமைப்பு- மமக தலைவருக்கு அமைச்சர் பதில்


"சிறுபான்மையினர் நலனுக்கான மத்திய அரசின் நிதியை பெற சிறப்புக் குழு அமைக்கப்படும்" என்று அமைச்சர் சி.வி.சண்முகம் சட்டசபையில் தெரிவித்தார்.


நிதி ஒதுக்க மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் நிகழ்த்திய உரையின் போது இந்த தகவல் வெளியானது.


இது தொடர்பான விவரம் வருமாறு:

ஜவாஹிருல்லாஹ் : சிறுபான்மை மக்களின் முன்னேற்றத்திற்கு உதவுவதற்காக மத்திய அரசு ஐந்தாண்டு திட்டத்தின் பெயரால் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. மதரசாக்களில் தரமான கல்வியைத் தரும் திட்டம், சிறுபான்மையினரின் கல்விக் கூடங்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதி திட்டம் ஆகியவற்றுக்கான நிதியைத்தான் மத்திய அரசு ஒதுக்கீடு செய்திருக்கிறது. இவற்றைப் பெறுவதற்காக தமிழகத்திலிருந்து சிறுபான்மையினர் நடத்தும் 12 நிறுவனங்கள் முறைப்படி விண்ணப்பித்திருந்தன. இவற்றை முறையாக மத்திய அரசுக்கு மாநில அரசு பரிந்துரை செய்ய வேண்டியது கடமை.


ஆனால் திமுக ஆட்சிக்காலத்தில் இத்தகைய பரிந்துரை ஏதும் செய்யாத காரணத்தால் மத்திய அரசின் இந்த நிதி தமிழகத்திற்குக் கிடைக்காமலேயே போய்விட்டது. எனவே முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான இந்த அரசு பரிந்துரை செய்வதற்கான குழுவை அமைத்து மத்திய அரசிடமிருந்து அந்த நிதியைப் பெறுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.


அமைச்சர் சி.வி.சண்முகம் :
திமுக ஆட்சிக்காலத்தில் இத்தகைய குழு ஒன்று அமைத்தார்கள். ஆனால் அந்த குழு செயல்படவேயில்லை. தற்போது புதிய குழுவை அமைப்பதற்கான கருத்துரு தயாரிக்கப்பட்டு முதல்வரின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


ஜவாஹிருல்லா :
நன்றி! தனித் தேர்வாளர்கள் 14 வயதுக்கு மேல் 8ம் வகுப்பு தேர்வை எழுத திமுக ஆட்சிக் காலத்தில் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடையை நீக்க வேண்டும். தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் மூலமான தேர்வுகளை வெளிப்படையாக நடத்த வேண்டும். தேர்வு முடிந்ததும் தேர்வு வினாத் தாட்களுக்கான சரியான விடையை பகிரங்கமாக வெளியிட வேண்டும். விடைத்தாள்களை மாணவர்கள் கட்டணம் கட்டிக் கேட்டால் வழங்குவதற்கு வகை செய்ய வேண்டும்.


உறுப்பினர்களுக்கு சட்டமன்ற அறிவிப்புகள் மின்னஞ்சல் மூலம் வருவது மகிழ்ச்சிக்குரியது. அதே போன்று உறுப்பினர்களின் உரைத் தொகுப்பையும் மின்னஞ்சல் மூலமாகவே அனுப்பி வைத்தால் அதிலேயே நாங்கள் திருத்தி அனுப்பிவிட முடியும். இவ்வாறு ஜவாஹிருல்லாஹ் பேசினார்.

வியாழன், 12 நவம்பர், 2009

முஸ்லிம் மாணவர்களை அலைக்கழிக்கும் மருத்துவ தேர்வுக்குழு!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற தாசில்தார் முஹம்மது சதக்கத்துல்லாஹ். இவரின் மகன் ஷேக் அப்துல்லா (18). இவர் +2வில் 1200க்கு 1135 மதிப்பெண் பெற்றார். இவருக்கு மருத்துவக் கல்லூரியில் கவுன்சிலிங் மூலம் சேர வாய்ப்பு வந்ததையடுத்து மருத்துவக் கவுன்சிலிங்கிற்காக 29.9.2009 அன்று சென்னை கீழ்ப்பாக்கத்திற்குச் சென்றார்.
அன்று கவுசிலிங்கில் தேர்ந்தெடுக்கப் பட்ட இவருக்கு கன்னியாகுமரி மாவட் டம் குலசேகரம் என்ற ஊரில் உள்ள மூகாம்பிகை மருத்துவக் கல்லூரியில் சேர இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால் சேர்க்கைக்கான உத்தரவை அன்று வழங் காமல், மறுநாள் வழங்குகிறோம் என்று மருத்துவக் குழுவினர் கூறியுள்ளனர். ஆனால் மறுதினம் அவர் குறிப்பிட்ட கல்லூரியில் சேரவேண்டும் என்பதால் 'இன்றே உத்தரவை கொடுங் கள் என்று மாணவர் தரப் பில் கெஞ்சிக் கேட்டும் தேர்வுக் குழுவி னர் மறுத்து விட்டு 'நாளை வாருங்கள். நாங்களே இன்று பேக்ஸ் அனுப்பி விடுகிறோம்'' என்று கூறியுள்ளனர்.

இதையடுத்து 30.9.09 அன்று மதியம் 1.45 மணியளவில் மாணவருக்கான அனுமதி ஆணையை கொடுத்துள்ளனர். உடனடியாக அந்த ஆணையை பேக்ஸில் மாணவரே கல்லூரிக்கு அனுப்பிவிட்டு, விமானத்தில் போக முடியாததால் காரில் புறப்பட்டு கன்னியாகுமரி சென்றனர். நள்ளிரவு நேரமாகி விட்டதால் அடுத்த நாள் (31.9.09) காலையில் சென்று நடந்தவற்றை கூறியுள்ளனர். ஆயினும், 30.9.09 அன்று மாலையே மாணவர் சேர்க்கை முடிந்துவிட்டதால் மாணவரை தங்கள் கல்லூரியில் சேர்க்க இயலாது என்று கல்லூரி நிர்வாகம் திட்டவட்டமாக கூறிவிட்டது. 29.9.09 அன்று மாலையே பேக்ஸ் அனுப்பி விடுவதாக சொன்ன தேர்வுக் குழுவினர், சொன்னபடி கல் லூரிக்கு பேக்ஸ் அனுப்பவில்லை. மறுநாள் மாணவர் அனுப்பி பேக்ஸும் கல்லூரி நிர்வாகத்தால் ஏற்கப்படவில்லை.

இதையடுத்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மாணவர் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மாணவருக்கு ஆதரவாக தீர்ப்பளித்த நீதிமன்றம், அவருக்கு உடனடியாக மாற்று ஏற் பாடுகளை செய்ய உத்தரவிட்டது. எனினும் இதுவரை மாணவருக்கான சீட் ஒதுக்கப்படவில்லை. மருத்துவ தேர்வுக் குழுவினர் முஸ்லிம் மாணவரின் மருத்து வக் கல்வியை நாசமாக்க, திட்டமிட்டே செயல்பட்டுள்ளனர். 29.9.09 அன்றே மாணவருக்கு அதுவும் கன்னியாகுமரி கல்லூரியில் அடுத்த நாளே சேரவேண்டிய மாணவருக்கு கடைசி தினத்தன்று ஆணை வழங்கியது உள்நோக்கம் கொண்டது. ஏற்கனவே தேர்வுக் குழு வினால் சென்னையைச் சேர்ந்த மாணவி ஒருவரும் அலைக்கழிக்கப்பட்டு கடைசி யாக செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில் இடம்பெற்றார்.

தமிழக அரசின் சிறுபான்மையினர் ஒதுக்கீட்டில் இடம்பெறுவதற்கே மாணவர்கள் இவ்வளவு கஷ்டப்பட வேண்டியுள்ளது. முஸ்லிம் மாணவர்களின் கல்வியை திட்டமிட்டே சீர்குலைக்க நினைக்கும் மருத்துவத் தேர்வுக்குழுவின் மீது நடவடிக்கை எடுத்து அம்மாணவருக்கு கன்னியாகுமரியில் இல்லாவிட்டாலும் வேறு கல்லூரியில் சேர்ந்து படிக்க அரசு நடவடிக்கை எடுத்து முஸ்லிம் மாணவரின் கனவை நனவாக்க வேண்டும். அரசு நடவடிக்கை எடுக்குமா?