இறை நம்பிக்கை கொண்டோர்களே உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் பயபக்தயுடையோர் ஆகலாம். திருக்குர்ஆன் 2:183)
ஞாயிறு, 27 மே, 2012
ஞாயிறு, 20 மே, 2012
கூத்தாநல்லூர் குலுங்கியது. புதிய சரித்திரத்தை தொடங்கியது மாணவர் இந்தியா!!
மாலை 4 மணி முதலே மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கின. கல்வி வழிகாட்டி கருத்தரங்கம், மருத்துவ பரிசோதனை அரங்கம், இனப்படுகொலைக்கு எதிரான புகைப்பட கண்காட்சி, கல்வி நிறுவனங்களின் அரங்குகள், புத்தக அரங்குகள் என பன்முக தன்மையோடு மாநாடு களைகட்டியது. ஆரம்பத்தில் உள்ளூர் மக்களும், மாணவ மாணவிகளும் அரங்குகளை நிறைத்தனர். 6 மணி நெருங்கியதும் அந்த மாநாட்டு விதி மக்கள் நெருக்கடியால் திணறியது. மக்ரிப் தொழுகைக்குப்பிறகு மாவட்டத்தின் பல்வேறு ஊர்களிலிருந்து எழுச்சி மிகு முழக்கங்களோடு வாகனங்களில் அமர்ந்தபடியே மாணவர் பட்டாளம் கூத்தாநல்லூரை முற்றுகையிட்டது.
7 மணிக்கெல்லாம் மாநாட்டின் 2 ஆம் நிகழ்வு தொடங்கியது. மாநாட்டிற்கு மமக மாவட்ட தலைவர் நூர்தீன் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகிக்க மாணவர் இந்தியாவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர். சர்வத் கான் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார்.
மூத்த தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், தமுமுக-மமக தலைவர் மௌலவி J.S. ரிபாயி, மமக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி, இணை பொதுச்செயலாளர் S.S. ஹாரூன் ரஷீது, வழக்கறிகர் சரவண பாண்டியன், பேரா. J. ஹாஜா கனி, மதுக்கூர் ராவுத்தர், தர்மபுரி சாதிக், நாசிகுலம் தாஜுதீன், வழக்கறிஞர் பிரபுதாஸ் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினார்கள்.
பெண்கள் பகுதியில் 500 க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்களின் பெற்றோரோடு வருகை தந்து கல்வி குறித்த தங்கள் ஐயங்களை கேட்டறிந்ததோடு மாநாட்டு நிகழ்ச்சிகளிலும் அமர்ந்து தங்கள் பங்களிப்பை உறுதிபடுத்தினர். மேலும் மாணவர் இந்தியாவின் சார்பில் மாணவிகளுக்கென தனியாக கல்வி வழிகாட்டி கருத்தரங்குகளை இனிவரும் காலங்களில் நடத்த வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.
மாணவர்கள் மருத்துவ ஆய்வரங்கிற்கு சென்று இரத்த தானம் செய்தனர். ஒரு கட்டத்தில் இரத்தத்தை சேமிக்க வசதி இல்லை என்று கூறி டாக்டர்கள் மறுத்ததால் ஏராளமான மாணவர்கள் இரத்தம் கொடுக்காமலேயே திரும்பினர்.
கல்வி நிறுவனங்களின் அரங்குகளில் +2 மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுத்து பரபரப்பாக இருந்தனர். புத்தக அரங்குகளில் பல ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள் சில மணி நேரங்களில் விற்று தீர்ந்தன. இது அங்கு வருகை தந்திருந்த பொது அறிவு தாகத்தை வெளிப்படுத்துவதாக இருந்தது.
இரவு 11.30 அளவில் மாநாடு நிறைவு பெற்றது. சரியான மாணவர் இயக்கம் தங்களுக்கு கிடைத்த மகிழ்ச்சியில் மாணவ மாணவிகளும்,பெற்றோர்களும் உற்சாக வெள்ளத்தில் திரும்பினர்.
மாநாட்டு மேடைக்கு ஷஹீது கூத்தாநல்லூர் நூர்முஹம்மது அவர்களின் பெயர் சூட்டப்பட்டது. கொடிகள், தோரணங்கள், ஊரங்கு மின் விளக்குகள், திப்பு சுல்தான், வி.பி.சிங், அம்பேத்கர், மாவீரன் ஹேமந்த் கர்கரே ஆகியோரின் பெயரால் வரவேற்பு வளைவுகள் என மாணவர் இந்தியாவின் முதல் அத்தியாயம் வெற்றிகரமாக தொடங்கியுள்ளது.
இனி மாவட்டம்தோறும் மாநாடுகள், கல்லூரிகள் தோறும் அமைப்புகள் என புயல்போல புறப்பட இருக்கிறது மாணவர் இந்தியா..
சனி, 19 மே, 2012
மாணவர் இந்தியா – முதல் மாவட்ட மாநாடு
கூத்தாநல்லூர் – நகராட்சி அலுவலகம் முன்பாக 17.5.12 மாலை 4 மணியளவில், மாணவர் இந்தியா அமைப்பின் முதல் மாவட்ட மாநாடு மிகச்சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க நடத்திய வன்முறை, பற்றியெறியும் பாலஸ்தீன விடுதலை களம், ஈராக்கில் அமெரிக்காவின் அட்டூழியம், காஷ்மீர் கண்ணீர் காட்சிகள், குஜராத் கலவரம் ஆகியவற்றின் புகைப்பட கண்காட்சியும், மருத்துவ பரிசோதனை முகாம் மற்றும் மருத்துவ முகாம், கல்வி நிறுவனங்களின் அரங்கம், சட்ட ஆலோசனை அரங்கம் போன்றவைகளும் இடம் பெற்று இருந்தன.
மாவட்ட தலைவர் K.H. நூர்தீன் அவர்கள் தலைமையெற்க, நீதிபோதனை உரையினை S.P யூசுப் அவர்கள் நிகழ்த்த, நிகழ்ச்சி தொகுப்பு உரையினை டாக்டர். முஹம்மது சர்வத்கான் M.B.B.S அவர்களும், சிறப்புரையினை R. பிரபு தாஸ் – மாவட்ட வக்கீல்கள் அணி செயலாளர் அவர்கள் நிகழ்த்தினார்கள். இம்மாநாட்டில், மாநில பொறுப்பு செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா, மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் S. முஹம்மது மாலிக், செயற்குழு உறுப்பினர் A. நாச்சிக்குளம் தாஜ்தீன் மற்றும் தமுமுக மமக நகர, கிளை நிர்வாகிகளும் கலந்துக்கொண்டனர்.
பேராசிரியர் ஜெ. ஹாஜாகனி அவர்களின் உரையின் சில பகுதிகள்..
”தமுமுகவின் வளர்ச்சிப்பாதையினை மாணவர் இந்தியா நன்றாக கவனிக்க வேண்டும். மாணவர் இந்தியாவின் அமைப்பு 2000 ம் ஆண்டில் திட்டமிடப்பட்டது தான். சில தவிர்க்க முடியாத காரணத்தினால் அன்று செயல் படுத்த முடியவில்லை. ஆனால் இன்று மாணவர் இந்தியா அமைப்பு நன்றாக செயல்படும் அமைப்பாக உள்ளது.”
மமக மாநில பொது செயலாளர் M. தமீமுன் அன்சாரி உரையின் சாராம்சம்..
”இழந்த உரிமைகளை மீட்க பிறந்தது தான் தமுமுக, அதனை பின்தொடர்ந்து வந்தது மமக. 18 ஆண்டுகள் கடும் உழைப்பு, பல போராட்டங்கள், கடந்த காலத்தில் நாம் ஆற்றிய தியாகங்கள் அடுத்த தலைமுறையினருக்கு நாம் மனதில் பதிவு செய்ய வேண்டும். வரலாற்று சுவடுகளை எடுத்து பார்த்தால் மாணவர்களும், இளைஞர்களும் தான் மாற்றத்தினை ஏற்படுத்தி உள்ளார்கள்”.
தமுமுக மமக மாநில தலைவர் J.S. ரிபாயி அவர்களின் உரையின் சாராம்சம்..
”செல்போன் கலாச்சாரம் நம் சமுதாயத்தை சீரழித்து விட்டது. நம் சமுதாயத்தில் செல்போனால் வேலி தாண்டிய வெள்ளாடாக பல இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் மாறி விட்டார்கள்.”
தமுமுகவின் மூத்த தலைவரும், இராமநாதபுரம் சட்ட மன்ற உறுப்பினருமாகிய M.H ஜவாஹிருல்லா M.B.A. M.Phil., Ph.D., அவர்களின் உரையிலிருந்து சில பகுதிகள்..
”இருண்ட காலத்தில் இருந்த சமூகத்தில் அனைத்து துறைகளிலும் தனித்தன்மையினை உருவாக்கியவர் நபி (ஸல்) அவர்கள் என்றால் மிகையாகாது. இஸ்லாம் வரலாற்றில் இளம் வயதில் தன்னுயிரினை தந்தவர் அன்னை சுமைய்யா. ஹிஜ்ரத் பயணம் மேற்கொண்டதில் பலர் இளைஞர்கள் என்பதும் வரலாற்று குறிப்பு தான். இளைய சமுதாயம் நினைத்தால் பலவற்றை சாதிக்கலாம்.
மதுவினால் பல இளைஞர்கள் சீரழிந்து போய் கொண்டு இருக்கிறார்கள். ஓராண்டு கால சாதனையை சிறப்பிக்கும் அதிமுக அரசு வளமான தமிழகமாக மாறுவதற்கு பூரண மதுவிலக்கு அவசியம் என்பதினை பற்றி சட்டமன்றத்தில் 16.5.12 அன்று பேசி இருக்கிறேன்.
இம்மாநாட்டில் முத்துப்பேட்டையை தனித்தாலுக்காகவும், கூத்தாநல்லூரை தனித்தாலுக்காக மாற்றவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 3000 த்துக்கும் மேற்பட்ட கலந்துக்கொண்ட இம்மாநாடு இரவு 11.30 மணிக்கு முடிவடைந்தது.
செவ்வாய், 15 மே, 2012
கூத்தாநல்லூரில் மாணவர் இந்தியா மாநாடு
மனிதநேய மக்கள் கட்சியின் சார்பு அமைப்பான மாணவர் இந்தியாவின் சார்பில் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் முதல் மாவட்ட மாநாடு மே 17 அன்று நடைபெற உள்ளது. ம.ம.க. மாவட்ட தலைவர் நூர்தீன் தலைமையில் மாவட்ட நிர்வாகிகளும், மாணவர் இந்தியாவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சர்வத் கான் தலைமையில் மாணவர் படையும் மாவட்டமெங்கும் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது.
இந்த மாநாட்டையொட்டி மதியம் 4 மணி முதல் கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் புகழ்பெற்ற கல்வியாளர்கள், கல்வி குறித்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க உள்ளார்கள். மற்றொரு அரங்கில் இனப்படுகொலைக்கு எதிரான புகைப்பட கண்காட்சி நடைபெற உள்ளது. மேலும் சட்ட ஆலோசனை அரங்கம், மருத்துவ பரிசோதனை ஆய்வு அரங்கம், புத்தக கடைகளின் கண்காட்சி ஆகியவற்றுடன் பல்வேறு கல்வி நிறுவனங்களின் அரங்குகளும் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிகழ்ச்சி மதியம் 4 மணி முதல் mmklive.com மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
கோடை விடுமுறையில் இருக்கும் மாணவர்கள் அணி, அணியாக திரண்டு வரும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாநாட்டுப் பணிகள் குறித்து மமக பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி, தமுமுக மாநிலச் செயலாளர் ஜெ. ஹாஜாகனி, மமக மாநில அமைப்புச் செயலாளர் ராவுத்தர்ஷா ஆகியோர் மாவட்ட நிர்வாகிகளுடன் அவ்வப்போது கலந்தாலோசித்து வருகின்றனர். தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலமெங்கும் மாணவர் இந்தியாவை கட்டியமைக்கும் பணிகளில் ஒரு பகுதியாக இம்மாணவர் மாநாடு முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதன், 25 ஏப்ரல், 2012
கூத்தாநல்லூர் ஜமாஅத், தமுமுக, மமக மற்றும் இயக்க சகோதர்களுக்கும் அவசர வேண்டுகோள்......
பொதுவாக வெளிநாட்டில் வசிப்பவர்களை அதிகாரிகள் வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்து விடுகின்றனர். குடும்ப அட்டைக்கு (ரேஷன் கார்டு) பதிவு செய்வதற்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கும் வேறுபாடு உள்ளது. முன்னது உணவுப் பொருள் விநியோகத்திற்காக கணக்கிடப்படுகிறது. அதில் வெளிநாட்டில் வசிப்பவர்களை சேர்க்காவிட்டால் பெரிய பாதிப்பு ஒன்றும் இல்லை. பின்னது அரசு நலத்திட்டங்கள் இடஒதுக்கீடு வேலைவாய்ப்பு ஆகியவற்றை தீர்மானிப்பதில் முக்கிய காரணியாக இருக்கிறது.
கணக்கெடுப்பு தொடர்பான விவரங்கள் எழுத்துப்பூர்வமாக இல்லாமல் நேரடியாக கம்ப்ïட்டரில் பதிவு செய்யப்படுகின்றன..எனவே இக்கணக்கெடுப்பில் கூத்தாநல்லூரியில் பிறந்த அணைவரையும் பதிவு செய்ய வேண்டியது அவசியம்.
இந்த விஷயத்தில் அசிரத்தையாக இருந்து விடக்கூடாது.
- வழிகாட்டி பதிவுகளை அணைத்து பள்ளிவாசல்களில் பதிவது.
- கூத்தாநல்லூர்யின் சமுதாய அரசியல் இயக்கங்கள் மற்றும் சங்கங்கள் இவ்விஷயத்தை வீடுகளில் வலியுறுத்துதல்
- பதிவு செய்ய வரும் அதிகாரிகளுடன் தெருவாரியாக தன்னார்வலர்களை உடன் அனுப்புதல்
- கவுன்சிலர்கள் உடனிருப்பதும் அவசியம்.
மிகச்சிரமமான பணியான இந்த கணக்கெடுப்பு அடிக்கடியோ ஆண்டுதோறுமோ ஐந்தாண்டுகளிளோ எடுக்கப்படுவதில்லை. எப்போதாவது அத்தி பூத்தாற்போல் எடுக்கப்படுகிறது. எப்படியும் அடுத்த பத்தாண்டுகளுக்கு இந்த கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே அரசு திட்டங்களும் ஒதுக்கீடுகளும் இருக்கும். நாளேடுகளில் இதர சாதி சங்கங்களின் அறிக்கைகளை படித்து பார்த்தால் இதன் முக்கியத்துவம் விளங்கும்.
செவ்வாய், 21 பிப்ரவரி, 2012
கூத்தாநல்லூரில் மின்வாரிய அதிகாரிகளுடன் அமைதி கூட்டம்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக நாளை 13.02.2012 நடைபெறவிருந்த கண்டன ஆர்ப்பாட்டம் மேற்படி அமைதி கூட்டத்தில் எடுக்கப்பட்ட கீழ்கண்ட தீர்மானத்தின் அடிப்படையில் ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
தீர்மானம்;
1. மின் இடை நிறுத்தம் செய்வது தமிழக அரசின் Go -அடிப்படையில் மக்களுக்கு அறிவிக்கப்பட்டு மின் நிறுத்தம் செய்யவேண்டும்.
2. பள்ளி மாணவ-மாணவிகளின் தேர்வை கருத்தில் கொண்டு மின் நிறுத்தும் நேரத்தை சீர்படுத்தவேண்டும்.
இதுபோன்ற பல கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டு 5-நாட்கள் கால அவகாசத்திற்குள் கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் ஜனநாயக முறையில் எங்களது போராட்டம் தொடரும்....
இக்கூட்டத்தில் முஸ்லிம் லீக் - காங்கிரஸ் – C.P.M – D.M.K - தமிழக கட்டிட தொழிளாலர் சங்கம் மற்றும் பொதுமக்கள் சமுகநல ஆர்வலர்களும் கலந்துகடகொண்டனர்.

சனி, 11 பிப்ரவரி, 2012
சனி, 28 ஜனவரி, 2012
புதன், 25 ஜனவரி, 2012
செவ்வாய், 20 டிசம்பர், 2011
காரை எடுத்துச் செல்வது தொடர்பாக ஆணையருக்கு பளார் விட்ட கூத்தாநல்லூர் நகராட்சி தலைவர்

நீடாமங்கலம் : ஆணையரை அதிமுக நகராட்சி தலைவர் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகராட்சி தலைவர் அதிமுகவை சேர்ந்த ஜெயராஜ். இவர் கடந்த முறை கவுன்சிலராக இருந்தவர். கடந்த 14ம் தேதி நகராட்சிக்கு சொந்தமான காரை தலைவர் எடுத்துச் செல்ல தயாரானார். அப்போது அங்கு வந்த ஆணையர் நாராயணன், கலெக்டர் அலுவலகத்தில் சிறுசேமிப்பு தொடர்பான கூட்டம் இருப்பதால் அங்கு செல்ல கார் தேவை என்று தலைவர் ஜெயராஜிடம் கூறினார். அதற்கு ஜெயராஜ், வாடகை காரை எடுத்துக் கொள்ளுமாறு கூறினார். இதனால், 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பின் அன்று மாலை ஆணையரை தனது அறைக்கு அழைத்து சென்றார் தலைவர் ஜெயராஜ். சிறிதுநேரத்தில், தலைவர் அறையிலிருந்து, ஆணையர் நாராயணன் கன்னத்தை பிடித்துக் கொண்டு அலறியபடி வெளியே ஓடி வந்தார். அலுவலகத்தில் இருந்த ஊழியர்களிடம், தலைவர் தன்னை அறைந்துவிட்டதாக கூறினார். இதைக்கேட்டு ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்த துணைத்தலைவர் முகமது அசரப் மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் அங்கு சென்று 2 பேரையும் சமாதானப்படுத்தினர்.
இது குறித்து, நகராட்சி ஆணையர் நாராயணன் நேற்று கூறுகையில், “காரை நான்தான் எடுத்துச் செல்வேன் என்று கூறியதால் என் கன்னத்தில் அறைந்து, கீழே தள்ளினார். இது குறித்து, உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளேன்“ என்றார். கண்டித்தேன் அடிக்கவில்லை: நகராட்சி தலைவர் ஜெயராஜ் கூறுகையில், “நகராட்சி ஆணையர் மீது பாலியல் குற்றச்சாட்டு உள்ளது. அது தொடர்பாக ஏராளமான புகார்களும் வருகிறது. இதனால் நான் அவரை எனது அறைக்கு அழைத்து கண்டித்தேன். அதை மறைக்க, நான் அடித்துவிட்டதாக அவர் கூறுகிறார். இதில் உண்மை இல்லை“ என்றார்.
நன்றி : http://www.dinakaran.com/News_detail_2011.asp?Nid=11290













